search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poster"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், இதற்கு ஊர் பொதுமக்கள் நியாயம் வழங்கவேண்டும்.
    • வாலிபர்களை காதல் வலையில் வீழ்த்துவது போல பழகி பணம் பறித்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் உள்ள கொங்கபட்டியை சேர்ந்தவர் குருவைய்யா. பூ வியாபாரி. இவரது மகன் ரோஷன்(27). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் உள்ள கோவில் பாளையம் கிராமத்தை சேர்ந்த அந்தோணி மகள் உஷா(31) என்பவருடன் பேஸ்புக்கில் பழகி வந்தார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் உஷாவுடன் பேசுவதை ரோஷன் நிறுத்திவிட்டார். ஆனால் அதன்பிறகும் ரோஷனின் செல்போனுக்கு தொடர்ந்து உஷா போன் செய்து வரவே அவரது நம்பரை பிளாக் செய்துவிட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த உஷா பேஸ்புக்கில் இருந்த ரோஷனின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து அதனை தன்னுடன் சேர்ந்து இருப்பது போல போஸ்டர் தயாரித்தார். தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், இதற்கு ஊர் பொதுமக்கள் நியாயம் வழங்கவேண்டும் என நிலக்கோட்டை பூ மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டினார்.

    மேலும் குருவைய்யா பூ மார்க்கெட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது உஷா மற்றும் கொங்கபட்டியை சேர்ந்த சவுந்திரராஜன்(55), சிவஞானம்(45), திருப்பூர் கூத்தம்பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி கிருஷ்ணவேணி(40) ஆகிய 4 பேரும் வழிமறித்து ரூ.5லட்சம் பணம் கொடுக்காவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

    இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் குருவைய்யா புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரசாத் ஆகியோர் வழக்குபதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய உஷா என்ற கமலேஸ்வரி(31), சிவஞானம்(45), கிருஷ்ணவேணி(40) ஆகிய 3 பேரையும் கைது செய்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் நல்லகண்ணன் உத்தரவிட்டார்.

    போலீசார் விசாரணையில் உஷா என்ற கமலேஸ்வரி இதேபோல் பல்வேறு வாலிபர்களை காதல் வலையில் வீழ்த்துவது போல பழகி பணம் பறித்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வித்தியாசமான போஸ்டரை செங்கல்பட்டு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒட்டி இருந்தனர்.
    • சமூக வலைதளங்களிலும் இந்த போஸ்டர்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றன.

    செங்கல்பட்டு:

    நடிகர் விஜய் நடித்த லியோ படம் இன்று வெளியாவதை தொடர்ந்து நேற்று மாலையில் இருந்தே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு நகரங்களில் லியோ படத்தை வரவேற்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அந்த போஸ்டர்களில் இடம் பெற்றிருந்த வாசகங் கள் நடிகர் விஜய்யை வித விதமாக புகழும் வகையில் அமைந்திருந்தன. பெரும்பாலான ஊர்களில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை பிரதிபலிக்கும் வகையில் போஸ்டர் வாசகங்கள் இருந்தன.

    செங்கல்பட்டு நகரில் மற்றும் மறைமலைநகர் பகுதிகளில் வித்தியாசமான போஸ்டரை செங்கல்பட்டு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒட்டி இருந்தனர். அந்த போஸ்டரில் ஜோசப் விஜய் என்னும் நான் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

    மேலும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை. பரவாயில்லை. சிறப்பு விருந்தினராக உங்களை அழைப்போம். எங்கள் தளபதியின் பதவி ஏற்பு விழாவுக்கு என்று வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இதேபோன்று தான் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் லியோ பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

    தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒட்டி இருந்த போஸ்டர் வாசகங்கள் வைரலாக பரவின. சமூக வலைதளங்களிலும் இந்த போஸ்டர்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றன.

    இதன் காரணமாக நடிகர் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பீகாரில் பாலம் இடிந்து விழுந்ததை குற்றம் சாட்டியும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
    • போலீசார் உடனடியாக அந்த போஸ்டர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    பெங்களூரு:

    அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் ஈடுபட்டார்.

    இதை தொடர்ந்து அவரது மாநிலமான பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் கடந்த மாதம் 23-ந் தேதி நடந்தது. எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதன் 2-வது நாள் ஆலோசனை இன்று நடைபெற உள்ளது.

    இந்நிலையில் எதிர்க் கட்சிகள் கூட்டம் நடைபெறும் பெங்களூருவில் நிதிஷ்குமாரை குறி வைத்து போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. நிலையற்ற பிரதமர் வேட்பாளர் என்று அவரை விமர்சனம் செய்து சுவ ரொட்டிகள் காணப்பட்டது. மேலும் பீகாரில் பாலம் இடிந்து விழுந்ததை குற்றம் சாட்டியும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

    ஒரு போஸ்டரில் பீகார் முதல்-மந்திாி நிதிஷ்குமாரை வரவேற்கிறோம். சுல்தான் கஞ்ச் பாலம் நிதிஷ்குமாரின் பரிசு. பாலம் தொடர்ந்து இடிந்து வருகிறது. பீகாரில் உள்ள பாலங்கள் அவரது ஆட்சியை தாங்க முடியாத நிலையில் எதிர்க் கட்சிகளை அவர் வழி நடத்துவார் என்று நம்புங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மற்றொரு போஸ்டரில் நிலையற்ற பிரதமர் போட்டியாளர். நிதிஷ்குமாருக்கு பெங்களூருவில் சிவப்பு கம்பளம் விரிக்கிறது. சுல்தான் கஞ்ச் பாலம் இடிந்த முதல் தேதி ஏப்ரல் 2022. சுல்தான் கஞ்ச் பாலம் இடிந்த 2-வது தேதி ஜூன் 2023 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    எதிர்க் கட்சிகள் கூட்டம் நடைபெறும் பகுதி அருகே இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் நிதிஷ்குமாரை குற்றம் சாட்டும் இந்த சுவரொட்டி கள் முக்கிய போக்குவரத்து சந்திப்பில் காணப்பட்டது.

    போலீசார் உடனடியாக அந்த போஸ்டர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். போஸ்டர்களை ஒட்டியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றத்தை எதிர்த்து பொதுமக்கள் போஸ்டர் ஒட்டினர்.
    • இவர் சட்டவிரோத மது விற்பனையை தடுத்தவர் ஆவார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பட்டுராஜா. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருப்புல்லாணி போலீஸ் நிலைய சப்-இன்ஸ் பெக்ட ராக பொறுப்பேற்றார்.

    பொதுமக்களின் புகார்களை உடனுக்குடன் விசாரித்து துரித நடவ டிக்கை எடுத்து வந்துள்ளார். மேலும் பள்ளி குழந்தை களுக்கு கல்வி சம்பந்தமான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தினார். திருப்புல்லாணி வட்டாரத் தில் சட்ட விரோத மது விற்பனையையும் தடை செய்தார். 4 மாதத்தில் சிறப்பாக பணியாற்றியதை பொது மக்கள் அவ்வப் போது பாராட்டி வந்துள்ளனர். இந்தநிலையில், திருப்புல்லாணி சப்-இன்ஸ்பெக்டர் பட்டுராஜா திடீரென பணியிட மாற்றம் செய்யப்படுவதாக மக்களுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து ஜனநாயக முறைப்படி எதிர்ப்பை தெரிவித்து நகர் முழுவதும் சுவ ரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இந்த பணியிட மாற்றதை மறுபரிசீலனை செய்து திருப்புல்லாணி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பட்டுராஜாவின் பணி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்புல்லாணி சுற்று வட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுத்தமாகவும் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அகற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • அனைத்து போஸ்டர்களையும் அகற்றினர்.

    கடலூர்:

    தமிழகத்தில் சாலைகளில் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் , கடலூர் மாநகரம் அனைவரும் பாராட்டக்கூடிய வகையில் சுத்தமாகவும் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அகற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.

    இந்நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் கவுன்சிலர்கள், ஊழியர்கள் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தடுப்புக்கட்டையில் ஒட்டப்பட்டு இருந்த அனைத்து போஸ்டர்களையும் அகற்றினார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாநகராட்சி தற்போது ஒவ்வொரு மண்டலத்திற்கும் குப்பைக்கு தலா ரூ.2 லட்சம், போஸ்டர் ஒட்டுவதற்கு தலா ரூ.20 ஆயிரம், கட்டிட கழிவுக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளது.
    • போஸ்டர் ஒட்டியது தொடர்பாக ஆயிரம் பேருக்கு மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியை சிங்கார சென்னையாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பது, சாலை ஓரங்களில் போஸ்டர் ஒட்ட தடை, கட்டிட கழிவுகளை கொட்டுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. எனினும் அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி இது நீடிப்பதால் சென்னை நகரின் அழகு சீர்கெட்டு வருகிறது.

    இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் அந்தந்த மண்டலங்களில் தனிக்குழு அமைக்கப்பட்டு குப்பை, கட்டிட கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோர், போஸ்டர் ஒட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அபராதம், வழக்கு, எச்சரிக்கை என அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு நட வடிக்கைகள் எடுத்தாலும் பொதுமக்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாமல் உள்ளது.

    இதைத் தொடர்ந்து மாநகராட்சி தற்போது ஒவ்வொரு மண்டலத்திற்கும் குப்பைக்கு தலா ரூ.2 லட்சம், போஸ்டர் ஒட்டுவதற்கு தலா ரூ.20 ஆயிரம், கட்டிட கழிவுக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளது.

    இவற்றின் மூலம் மாதம் ரூ.63 லட்சம் வசூலிக்க முடிவு செய்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    கடந்த மே 12-ந்தேதி முதல் ஜூன் 6-ந்தேதி வரை குப்பைகொட்டியோரிடம் ரூ.13 லட்சத்து 69 ஆயிரம், கட்டிட கழிவு கொட்டியோரிடம் இருந்து ரூ.9 லட்சத்து 47 ஆயிரத்து 165, போஸ்டர் ஒட்டியவர்கள் மீது 674 வழக்கு மற்றும் ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, "சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும் பொது இடங்களில் குப்பை, கட்டிட கழிவுகள் கொட்டுவது, போஸ்டர் ஒட்டுவது, பேனர் வைப்பது தொடர்ந்து நீடிக்கிறது. மாதத்திற்கு ரூ.25 லட்சத்துக்கு மேல் அபராதம் விதிக்கப்படுகிறது. போஸ்டர் ஒட்டியது தொடர்பாக ஆயிரம் பேருக்கு மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    ஆனாலும் பொதுமக்களிடம் பெரிய அளில் மாற்றம் இல்லை. எனவே பள்ளி, கல்லூரி அளவிலும், பொதுமக்களிடமும் குப்பைகளை கையாள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 3 நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்
    • சீக்கியர்கள் சிலர், ‘கோ பேக் ராகுல்’ என எழுதப்பட்ட போஸ்டர்களை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பினர்.

    நியூயார்க்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், சான்பிரான் சிஸ்கோ, வாஷிங்டன், நியூயார்க் ஆகிய 3 நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோ, வாஷிங்டனில் நிகழ்ச்சிகளை அவர் முடித்துவிட்டார்.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் கலந்து கொண்டார். அப்போது அவரை வரவேற்பதற்காக ஏராளமானோர் திரண்டிருந்தனர். அந்த சமயத்தில் ராகுலுக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியது. சாலையோரத்தில் வரிசையாக நின்ற சீக்கியர்கள் சிலர், 'கோ பேக் ராகுல்' என எழுதப்பட்ட போஸ்டர்களை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள், பஞ்சாப்பை தனி நாடாக அறிவிக்கக் கோரி வரும் காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள் என்பதும், 1984-ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராகுலை கண்டித்து போராட்டம் நடத்தியதும் தெரியவந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்ட்ம தீவிரம் அடைந்து வருகிறது.
    • காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு உள்ளது.

    டெல்லியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என்று காங்கிரஸ் போஸ்டர் வெளியிட்டு உள்ளது.

    பா.ஜனதா எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பிரிக்பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்ட்ம தீவிரம் அடைந்து வருகிறது.

    இந்த விஷயத்தில் மத்திய பெண்கள் நல மேம்பாட்டுத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டிக்கும் விதமாகவே காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என போஸ்டர் வெளியிட்டு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் 2 பிரிவாக பிரிந்தனர். ஒரு சில இடங்களில் 2 பிரிவினருக்கும் இடையே அடிக்கடி மோதல் உருவாகி வருகிறது.
    • உளுந்தூர்பேட்டை ஒன்றிய இணைச் செயலாளர் எம்.பரமசிவம் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    அ.தி.மு.க.வினர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் கூடிய பொதுக்குழுவில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.   அது முதல் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் 2 பிரிவாக பிரிந்தனர். ஒரு சில இடங்களில் 2 பிரிவினருக்கும் இடையே அடிக்கடி மோதல் உருவாகி வருகிறது.  மேலும், பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்க கோரி ஓ.பி.எஸ். சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.  இந்நிலையில் உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க.வின் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் க.வேங்கையன், உளுந்தூர்பேட்டை ஒன்றிய இணைச் செயலாளர் எம்.பரமசிவம் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.  இதில் வெளியேறு! வெளியேறு! தலைமை பதவிக்கு தகுதியில்லாத நயவஞ்சகன் நம்பிக்கை துரோகி எடப்பாடியே அ.இ.அ.தி.மு.க.வை விட்டு வெளியேறு, உனக்கு துதிபாடும் மூளை இல்லாத முட்டாள்களுடன் வெளியேறு என்று அச்சிடப்பட்டுள்ளது.    மேலும், மறைந்த ஜெயலலிதா, முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோரின் புகைப்படங்கள் உள்ளன. அதேபோல கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் க.வேங்கையன், உளுந்தூர்பேட்டை ஒன்றிய இணைச் செயலாளர் எம்.பரமசிவம் ஆகியோரின் புகைப்படங்களும் உள்ளது.

    இந்த போஸ்டர் உளுந்தூர்பேட்டை நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் துரை தலைமையிலான கட்சியினர் புகார் மனு அளித்தனர். இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திண்டுக்கல் நகரில் பரபரப்பு வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
    • பிரபாகரன் மக்கள் முன் தோன்றி தமிழ் ஈழத்திற்கான தீர்வுகளை அறிவிப்பார் என வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

    திண்டுக்கல்:

    விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிேராடு இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். அவர் விரைவில் பொது வெளியில் தோன்றுவார் எனவும் பரபரப்பான செய்தியை வெளியிட்டார்.

    ஆனால் இலங்கை அரசு இதனை திட்டவட்டமாக மறுத்தது. 9 ஆண்டுகளுக்கு முன்பே பிரபாகரன் சுட்டு கொலை செய்யப்பட்ட தாகவும், இதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக வும் தெரிவித்தனர். இந்நிலையில் திண்டுக்கல் நகரில் தமிழர்தேசிய முன்னணி சார்பில் பரபரப்பு வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    விடுதலை போராட்ட களத்தில் இருக்கும் வரையில் இந்தியாவிற்கு எதிரான நாடுகள் எதையும் இலங்கையில் கால் பதிக்கவிடவில்லை என்பதை இந்தியா சிந்திக்க வேண்டும். சர்வதேச அரசியல் சூழலையும் இலங்கை அரசியல் சூழலையும் கருத்தில் கொண்டு தமிழ்ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் மக்கள் முன் தோன்றி தமிழ் ஈழத்திற்கான தீர்வுகளை அறிவிப்பார். எனவே உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேராதரவு தரவேண்டும். பழ.நெடுமாறன் வழிகாட்டுதலின்படி அவருக்கு துணை நிற்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

    கடந்த சில தினங்களாக பரபரப்பை கூட்டி பின் மெல்ல நகர்ந்த இப்பிரச்சினை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி யுள்ளது.