என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "nellai"
- பாளை சீனிவாசன் நகர் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி அனைவரும் அந்த கழிவு நீரின் வழியாகத்தான் சென்று வரும் நிலை உள்ளது.
- கழிவுநீர் ஓடை சரியான முறையில் இல்லாததால் அங்கு மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகமாக காணப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி 38-வது வார்டு பொதுமக்கள் நலச்சங்கம் சார்பில் ராமலட்சுமி, சின்னத்துரை, ஜெபமணி, நடராஜன், கந்தசாமி, நாராயணன், தங்கம், கோலப்பன், சுந்தரி, மகாராஜன் ஆகியோர் மாநகராட்சி மண்டல அதிகாரிகளிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பாளை சீனிவாசன் நகர் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கி தெருக்களில் பள்ளி குழந்தைகள், முதியோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அந்த கழிவு நீரின் வழியாகத்தான் சென்று வரும் நிலை உள்ளது. சீனிவாசன் நகர் பகுதியில் நாங்குநேரி சர்வீஸ் ரோட்டில் அமைந்திருக்கும் ஆதித்தனார் 1-வது தெருவில் கழிவுநீர் ஓடை சரியான முறையில் இல்லாததால் அங்கு மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை நோய்வாய்ப்படும் நிலை உள்ளது.
எனவே மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதியை பார்வையிட்டு தாழ்வாக இருக்கும் கழிவு நீர் ஓடையை உயர்த்தி அமைத்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனிவாச நகர் தனியார் மஹால் முதல் கோகுலம் நகர் அடுத்ததாக அமைந்துள்ள குளம் வரை ஓடையை நீட்டிப்பு செய்து சரியான முறையில் கழிவுநீர் ஓடை அமைத்து தரவேண்டும். இவ்வாறு அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
- மேகா என்பவருடன் டேனியலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
- மணி என்பவர் ஆட்டோவில் டேனியல் உள்பட 7 பேர் வீரமாணிக்கபுரத்திற்கு வந்துள்ளனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மேலப்பாளையம் குறிச்சி வீரமாணிக்கபுரம் பகுதியை சேர்ந்தவர் லாசர். இவரது மகன் டேனியல் (வயது 28), மகள் ஜெயா (19).
புதுமணத்தம்பதி
அதே பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் முனியசாமி (22). இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ஆகும். டேனியல், முனியசாமி உள்ளிட்டோர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி ஆக்ரா பகுதியை சேர்ந்த மேகா (27) என்பவருடன் டேனியலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் வைத்து திருமணம் நடந்துள்ளது.
இதையடுத்து டெல்லியில் இருந்து அவர்கள் சென்னைக்கு ரெயிலில் வந்துள்ளனர். பின்னர் நேற்று சென்னையில் இருந்து ரெயிலில் புறப்பட்டு இன்று அதிகாலை நெல்லைக்கு வந்தனர். அதன் பின்னர் தச்சநல்லூரை அடுத்த சேந்திமங்கலம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் மணி( 28) என்பவர் ஆட்டோவில் டேனியல், அவரது மனைவி மேகா, தங்கை ஜெயா, முனியசாமி உள்பட 7 பேர் வீரமாணிக்கபுரத்திற்கு வந்துள்ளனர்.
மாடு மீது ஆட்டோ மோதல்
அப்போது பாளையங் கால்வாயை அடுத்த தனியார் விடுதி அருகே சாலையில் நடுவில் படுத்திருந்த மாடு மீது ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முனியசாமி, டேனியல், ஜெயா, மேகா, மணிஷ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முனியசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாடகை வாகனங்கள் முன்பு போன்று காலாண்டுக்கு ஒரு முறை வரி செலுத்த முடியாது.
- வாடகை வாகன உரிமையாளர்களுக்கு புதிய வரி இன்னும் சுமையை அதிகரிக்கச் செய்யும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இதில் வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் நல சங்கத்தின் மாநில தலைவரான நெல்லை ரெட்டியார்பட்டியை சேர்ந்த சந்தோசம் என்பவர் தலைமையில் வாடகை வாகன டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்தின் காரணமாக வாடகை கார்கள், வேன்களின் ஆயுள் கால வரி, சாலை வரி மிக அதிகமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வாகன உரிமை யாளர்கள், டிரைவர்கள் பாதிக்கப்படு வதோடு பொதுமக்களையும் அது பாதிக்கக் கூடியதாக உள்ளது.
குறிப்பாக வாடகை வாகனங்களுக்கு இனி அதன் இன்வாய்ஸ் அடிப்படையில் மட்டுமே ஆயுள் கால வரி வசூலிக்கப்பட வேண்டும் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் வாடகை வாகனங்கள் முன்பு போன்று காலாண்டுக்கு ஒரு முறை வரி செலுத்த முடியாது. ஆயுள் கால வரி மட்டுமே செலுத்த வேண்டும். இதனால் உரிமையாளர்கள் கடன்கள் பெற்று வாகனத்தை வாங்கி ஓட்டி வரும் நிலையில் இந்த புதிய வரி அவர்களுக்கு இன்னும் சுமையை அதிகரிக்கச் செய்யும்.
மேலும் பழைய வாகனத்திற்கான புதிய ஆயுட்கால வரி வாகனத்தை தொடக்கத்தில் வாங்கிய அதே தொகைக்கு கணக்கிட்டு வரி செலுத்த வேண்டும் என்று புதிய திருத்த சட்டம் கூறுவதால் எங்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படும்.
எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வாடகை வாகனங்க ளுக்கான புதிய வரி உயர்வை ரத்து செய்து வாடகை வாகன உரிமை யாளர்கள், டிரை வர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
- ஜெயபெருமாளுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
- மனமுடைந்த ஜெயபெருமாள் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள முனைஞ்சிபட்டியை அடுத்த காரியாண்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபெருமாள் (வயது 50). விவசாயி.
இவருக்கு குருவம் மாள்(45) என்ற மனைவியும், சுடலை மணி (18) என்ற மகனும், முத்தரசி (16) என்ற மகளும் உள்ளனர். ஜெயபெருமாளுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்துள்ளார்.
மேலும் அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை சரியாக பரா மரிக்காமலும் இருந்துள்ளார். இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.
இதில் மனமுடைந்த ஜெயபெருமாள் நேற்று மாலை தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
இதனிடையே இரவு வெகு நேரமாகியும் தந்தையை காணாததால் அவரது மகன் சுடலைமணி தோட்டத்திற்கு தேடிச்சென்றுள்ளார். அப்போது அருகில் விஷப்பாட்டிலுடன் ஜெயபெருமாள் மயங்கி கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அங்கு வந்த உறவினர்கள் அவரை மீட்டு முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியி லேயே ஜெய பெருமாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குப்புராணி கோவை மண்டல தலைமை மின் பொறியாளராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
- புதிய நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளராக டேவிட் ஜெபசிங் இன்று பொறுப்பேற்று கொண்டார்.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை மண்டலத்திற்கு உட்பட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளராக பணியாற்றி வந்த குப்புராணி கோவை மண்டல தலைமை மின் பொறியாளராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் புதிய நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளராக டேவிட் ஜெபசிங் இன்று பொறுப்பேற்று கொண்டார். அவரிடம் மாறுதலாகி செல்லும் தலைமை மின் பொறியாளர் குப்புராணி பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட மேற்பார்வை மின் பொறியாளர்கள், மின் பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- கெட்வெல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
- கனமழையின் காரணமாக சந்தைகளுக்கு வரும் பூக்களின் வரத்து குறைந்துள்ளது.
நெல்லை:
கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் முகூர்த்த நாட்கள் காரணமாக நெல்லையில் இன்று பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
விறுவிறுப்பான விற்பனை
நெல்லை மாவட்டத்தின் பிரதான மொத்த மலர் சந்தையான நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள கெட் வெல் பூ மார்க் கெட்டில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பூக்களின் விற்பனை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சந்தைகளுக்கு வரும் பூக்களின் வரத்து மிகவும் குறைந்துள்ளது.
விலை உயர்வு
குறிப்பாக மல்லிகை மற்றும் பிச்சி பூக்கள் நெல்லை மாவட்டம் மானூர், அழகிய பாண்டிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந் தும், தென்காசி மாவட்டம் மாறாந்தை பகுதிகளில் இருந்தும் நெல்லை பூ மார்க்கெட்டுக்கு விற்ப னைக்கு வருவது வழக்கம்.
தற்போது மழையின் காரணமாக பூக்களின் விளைச்சல் குறைந்து வரத்து குறைவாக இருந்தது. பண்டிகை மற்றும் முகூர்த்த தினங்களின் காரணமாக பூக்களின் தேவை அதிகரிப்பு இருந்து வருவதால் பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
மல்லிகை பூ
அதன்படி நெல்லை சந்திப்பு மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.1,500-க்கு இன்று விற்பனையானது.
பிச்சிப்பூ ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்ப னை செய்யப்பட்டது. இதே போல் கேந்தி பூ ரூ.100-க்கும், பன்னீர் ரோஸ் ரூ.150-க்கும் விற்பனையானது.
- இன்று மாலை சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
- பரணி தீபத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு சொக்கப்பனை தீபம் என்ற ழைக்கப்படும் ருத்ர தீபம் ஏற்றப்பட உள்ளது.
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை யொட்டி இன்று மாலை சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
சொக்கப்பனை தீபம்
நேற்று மகா மண்டபத்தில் நந்தி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பரணி தீபத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு நெல்லையப்பர் மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இந்நிலையில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி இன்று காலையில் மூலவர் மற்றும் உற்சவர்கள், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இன்று மாலையில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி டவுன் ஆர்ச்சுக்கு அடுத்தப்படியாக பாரதியார் தெரு திரும்பும் சாலையில் உள்ள சொக்கப்பனை முக்கு பகுதியில் சொக்கப்பனை தீபம் ஏற்றும் வைபம் நடக்க உள்ளது.
மாற்றுப்பாதை
இதற்காக டவுன் சொக்கப்பனை முக்கு பகுதியில் பனை மரங்கள் மற்றும் பனை ஓலைகள் கொண்டு சொக்கப்பனை அமைக்கப்பட்டு வருகிறது. இன்று மாலையில் பரணி தீபத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு சொக்கப்பனை தீபம் என்ற ழைக்கப்படும் ருத்ர தீபம் ஏற்றப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வா கத்தினர் செய்து வருகின்ற னர். இதனை காண ஏரா ளமான பக்தர்கள் வருவார்கள். இதனையொட்டி அந்த வழியாக செல்லும் வாகனங்களை மாற்றுபாதையில் இயக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடு களை போக்குவரத்து போலீ சார் செய்து வருகின்றனர்.
- சாமி காவல்துறையில் 99-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்து கடந்த 10 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.
- ஜான்சி முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அவரது மகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
நெல்லை:
பாளை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜக்கம்மாதாய் என்ற ஜான்சி (வயது 38). இவரது கணவர் சாமி காவல்துறையில் 99-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்து கடந்த 10 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் ஜான்சி தனது 17 வயது மகனுடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று மாலை அங்குள்ள பத்திரப்பதிவு அலுவலகம் அருகே மொபட்டில் ஜான்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் நகையைப் பறித்து சென்று விட்டதாக ஐகிரவுண்டு போலீசில் அவர் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஜான்சி முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அவரது மகனை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் தாய்-மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இந்த தகராறில் ஏற்பட்ட கைகலப்பில் ஜான்சியின் கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும், அந்த ஆத்திரத்தில் மகனை சிக்க வைக்க போலீசில் பொய் புகார் அளித்ததாகவும் ஜான்சி போலீசில் தெரிவித்தார்.இதையடுத்து அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு போலீ சார் 2 பேரையும் எச்சரித்து அனுப்பினர்.
- மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- பாளை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் சுற்றித்திரிந்த 15 மாடுகள் பிடிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின் படி மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
துணை கமிஷனர் தாணு மூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின் படி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் காளிமுத்து மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில், பாளை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித்திரிந்த 15 மாடுகள் மற்றும் 5 கன்றுக்குட்டிகள் பிடிக்கப்பட்டு அங்குள்ள மாநகராட்சி அலுவலக பூங்காவில் அடைக்கபட்டது.
- பல்வேறு அளவுகளில் அவல், பொரிகளை பாக்கெட்டுகளில் அடைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர்.
- அளவை பொறுத்து பனை ஓலைகள் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.
நெல்லை:
திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை வீடுகளில் பொதுமக்கள் பூஜை செய்து வழிபடுவார்கள்.
களை கட்டிய பஜார்கள்
இதையொட்டி பொருட்கள் வாங்குவதற்காக பொது மக்கள் கடைகளுக்கு செல்வ தால் நெல்லையில் மார்கெட்டுகள் மற்றும் முக்கிய பஜார்களில் பொருட்கள் விற்பனைகளை கட்டி உள்ளது.
கார்த்திகை தீப வழிபாட்டுக்குரிய அவல், பொரி கடலை, இலை, பூ, பழம், அகல் விளக்குகள், கொழுக்கட்டை தயாரிக்க பயன்படுத்தும் பனை ஓலை, சிறுவர்கள் கொளுத்தி மகிழும் சூந்து குச்சி போன்றவைகளை வாங்குவதற்காக இன்று டவுன் ரதவீதிகள், பாளை மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியதை காண முடிந்தது.
அவல், பொரி- பனை ஓலை
பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்காக கூட்டத்தில் காத்து நிற்பதை தடுக்கும் விதமாக அவல், பொரி உள்ளிட்டவைகளை பல்வேறு அளவுகளில் பாக்கெட்டுகளில் அடைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர்.
பாளை தெற்கு பஜார், மகாராஜா நகர், மேலப் பாளையம் உழவர் சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாட தேவையான பூஜை பொருட்கள் உள ளிட்டவை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
பாளை மார்க்கெட், மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளிலும் பனை ஓலை விற்பனை மும்முரமாக நடைபெற்றது. அவை பெரியது, சிறியது என அளவை பொறுத்து ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.
அகல் விளக்குகள்
இதேபோல் முக்கிய இடம் பிடிக்கும் அகல் விளக்குகளின் விற்பனையும் சூடு பிடித்தது. டவுன் ரதவீதிகளில் உள்ள தற்காலிக தள்ளுவண்டி கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிவன் விளக்கு, அகல் விளக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையானது.
மேலும் புதுவரவான மயில் விளக்கு, யானை விளக்கு, லட்சுமி விளக்கு ஆகியவை ரூ.250-க்கும், தாமரை பூ விளக்கு ரூ.100-க்கும், பாவை விளக்கு ரூ.80-க்கும், அணையா விளக்கு ரூ.70-க்கும், துளசி மாடம் ரூ. 30-க்கும் விற்பனையானது. சுமார் 250 வகையான விளக்குகள் விற்பனைக்கு வந்திருந்தன.
மண் விளக்குகளில் வாடிக்கையாளர்கள் விரும்பும் நிறங்களில் அவர்கள் விரும்பும் டிசைன்களை உடனுக்குடன் தயார் செய்தும் சில கடைகளில் வழங்கினர். அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.