search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school holiday"

    • மழையால் பல இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்தது.
    • கேரட், பூண்டு, பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

    கடந்த 10 நாட்களுக்கு மேலாக நீலகிரியில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. ஊட்டி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர், குந்தா, குன்னூர் என மாவட்டம் முழுவதும் மழை கொட்டுகிறது.

    மழையால் பல இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்தது. மண்சரிவுகளும் ஏற்பட்டு வந்தன. கடந்த சில நாட்களாக மழை சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.

    நேற்று ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்தமழை பெய்தது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தன.

    பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு ஊட்டி அருகே உள்ள கேத்தி பகுதியில் போலீஸ் நிலையம் அருகே நின்றிருந்த மரம் முறிந்து போலீஸ் நிலையத்தின் மீது விழுந்தது.

    இதில் போலீஸ் நிலையம் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக காவல் நிலையத்தில் இருந்த காவலர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றினர்.

    சாலையிலும் இந்த மரம் விழுந்ததால் அப்பகுதியில் உள்ள கிராம பகுதிகளுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி பிங்கர் போஸ்ட், குளிசோலை பகுதிகளிலும் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. அதனை தீயணைப்புத்துறையினர் உடனுக்குடன் அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர்.

    ஊட்டியில் இருந்து இத்தலார் செல்லும் சாலை முள்ளிகொரையில் மரம் ஒன்று விழுந்தது. இதனால் இந்த வழித்தடத்திலும் போக்குவரத்து தடைபட்டது. மரம் வெட்டி அகற்றப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.

    குன்னூர்-ஊட்டி சாலையில் எம்.ஜி. காலனி பகுதியில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மரம் விழுந்ததில், கார் சுக்குநூறாகிறயது.

    கோடேரி, பெங்கால் மட்டம், கைகாட்டி , குன்னக்கம்பை, அதிகரட்டி, குந்தா பகுதிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் சாலைகளில் 7 இடங்களில் மின்கம்பம் மீதும் சாலைகளிலும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது.

    ஊட்டி அருகே முத்தோரை பாலடா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களிலும் தற்போது மழைநீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் கேரட், பூண்டு, பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் காற்றின் காரணமாக காலநிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை, காற்றுடன், குளிரும் சேர்ந்து கொண்டுள்ளது.

    மாவட்டம் முழுவதுமே கடும் குளிரும் நிலவுகிறது. குறிப்பாக ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் குளிரின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

    குளிரில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கம்பளி ஆடைகள், சுவர்ட்டர் அணிந்து கொண்டே வெளியில் வருகின்றனர். இன்று அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது.

    மழையுடன் குளிரும் சேர்ந்து வாட்டி வதைப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் வேலைக்கு செல்வோர், கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    தொடர் மழை மற்றும் குளிரால், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் அதிக காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஊட்டி, குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 20 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் பெய்துள்ள மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    சேரங்கோடு-98, பந்தலூர்-70, கூடலூர்-61, அப்பர் கூடலூர்-60, தேவாலா-57, கிளைன்மார்கன்-44, ஓவேலி-42, செருமுள்ளி-38, பாடந்தொரை-36.

    • நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுக்கா பகுதிகளில் சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
    • பொன்னானி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுக்கா பகுதிகளில் சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வெள்ளக் காடாக மாறிய கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள மக்களை தற்காலிக முகாமில் அரசு தங்க வைத்துள்ளது.

    பொன்னானி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நில சரிவும் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மழை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் பல இடங்களில் நீர் தேக்கம் அப்படியே இருப்பதனால். நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடலூர் மற்றும் பந்தலூரில் கடந்த 4 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து இருந்த நிலையில் இன்றும் பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை அறிவித்துள்ளார்.

    • காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
    • விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவு.

    தமிழகத்தில் நாளை தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தொடர் கனமழை எதிரொலி மற்றும் நாளை கனமழை எச்சரிக்கை காரணமாக காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.

    • தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது.
    • தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மிச்சாங் புயல் எதிரொலியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    அதன்படி, தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால் சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

    குறிப்பாக, சென்னை எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், எழும்பூர் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், அஸ்தினாபுரம், சிட்லபாக்கம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
    • சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    சென்னையை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், திருவள்ளூர் மாட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளனர்.

    • இன்று இரவு 10 மணி வரை மழை தொடரும் என அறிவிப்பு.
    • தொடர்ந்து கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    சென்னையில் இன்று இரவு 10 மணி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    • சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களுக்கு கனமழை வாய்ப்பு
    • திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை மற்றும் காலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தொடர்ந்து மழை நீடித்து வருகிறது.

     குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களுக்கு கனமழை வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • இரவில் இருந்து மழை இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.
    • மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்த போதிலும், இன்று காலை மழை இல்லை.

    தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. பல மாவட்டங்களில் மேக மூட்டம் காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் சென்னை, கோவை, நாமக்கல், ராமநாதபுரம், மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 4 பேரை தெருநாய்கள் கடித்தன.
    • தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூத்தாலி ஊராட்சி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் செல்பவர்களை அது துரத்தி சென்று கடித்தபடி இருந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 4 பேரை தெருநாய்கள் கடித்தன. இதனால் சாலைகளில் சிறுவர்-சிறுமிகள், மாணவ-மாணவிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் தெருநாய்கள் தொல்லை தொடர்ந்த படி இருந்ததால் கூத்தாலி பகுதியில் 6 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    கடந்த மாதம் கண்ணூரில் 9 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறியது. அதேபோல் வீட்டின் முன் விளையாடிய ஒரு குழந்தையை தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து இழுத்துச் சென்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • திங்கள்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2.9 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
    • துரதிர்ஷ்டவசமாக நகரில் உள்ள வடிகால் அமைப்பு இதுபோன்ற தீவிர மழையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை.

    டெல்லியில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலை எங்கும் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

    தொடர் கனமழையால் பொது மக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    மேலும், கனமழை எதிரொலியால் நேற்று டெல்லியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், டெல்லியில் இன்று கன முதல் மிதமான மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இன்று 5ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே அறிவுறுத்தலை தனியார் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

    6ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள வகுப்புகளுக்கு வழக்கம் போல் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேசிய தலைநகரில் சனிக்கிழமை 153 மிமீ மழையும், திங்கள்கிழமை காலை 8.30 மணி வரை 107 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. திங்கள்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2.9 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

    இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மழையின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, 40 ஆண்டுகளில் டெல்லியில் இவ்வளவு கடுமையான மழை பெய்தது இதுவே முதல்முறை என்று கூறினார். கடந்த 1982-ம் ஆண்டு 24 மணி நேரத்தில் 169 மி.மீ., மழை பெய்துள்ளது. எனவே, இது வரலாறு காணாத மழை மற்றும் துரதிர்ஷ்டவசமாக நகரில் உள்ள வடிகால் அமைப்பு இதுபோன்ற தீவிர மழையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை.

    நகரின் பல்வேறு பகுதிகளில் 680 பிடபுள்யுடி வடிகால் பம்புகள், 326 தற்காலிக பம்புகள் மற்றும் 100 நடமாடும் பம்புகளுடன் வேலை செய்து வருகின்றனர்.

    பொதுப்பணித்துறை அல்லது டெல்லி மாநகராட்சிக்கு சொந்தமான சாலையில் உள்ள பள்ளங்களை நிரப்பவும் அரசு முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காற்றழுத்த தாழ்வு மண்டலம் மட்டக்களப்பு - திரிகோணமலை இடையே கரையை கடந்தது
    • நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று மழை பெய்தது.

    திருவாரூர்:

    வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழையும், குமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 3-ம் தேதி (நாளை) விடுமுறை அளித்து மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உத்தரவிட்டுள்ளார்.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் மட்டக்களப்பு - திரிகோணமலை இடையே கரையை கடந்ததாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்தது.

    • சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    • ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்துக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதேபோல், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று 3 மணிக்கு மேல் பள்ளிகள் இயங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில், கனமழை எதிரொலியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்துக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ×