என் மலர்
நீங்கள் தேடியது "school holiday"
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் மட்டக்களப்பு - திரிகோணமலை இடையே கரையை கடந்தது
- நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று மழை பெய்தது.
திருவாரூர்:
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழையும், குமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 3-ம் தேதி (நாளை) விடுமுறை அளித்து மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உத்தரவிட்டுள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் மட்டக்களப்பு - திரிகோணமலை இடையே கரையை கடந்ததாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்தது.
- சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
- ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்துக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதேபோல், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று 3 மணிக்கு மேல் பள்ளிகள் இயங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், கனமழை எதிரொலியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்துக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
- வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று 3 மணிக்கு மேல் பள்ளிகள் இயங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதேபோல், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று 3 மணிக்கு மேல் பள்ளிகள் இயங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- மணிக்கு 14 கிலோ மீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல் கரையை நோக்க நகர்ந்து வருகிறது
- புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல், இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று மாலை நிலவரப்படி சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கு திசையில் 170 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலைக்கொண்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து தென் கிழக்கே 135 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. புயலின் வேகம் 13 கிலோ மீட்டரிலிருந்து 14 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. புயல் கரையை நெருங்கி வருவதால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
- சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- கனமழை எதிரொலியால் தஞ்சையிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று தொடர் மழை பெய்தது.
மழைப்பொழிவு நவம்பர் 4-ம் தேதி வரை நீடிக்கும் என்றும், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, கனமழை எச்சரிக்கையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை எதிரொலியாக தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
- கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் நாளை 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் அடங்கும்.
சென்னை:
வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று தொடர் மழை பெய்தது.
இதற்கிடையே, மழைப்பொழிவு நவம்பர் 4-ம் தேதி வரை நீடிக்கும் என்றும், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
- சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தசரா பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுகிறது
- அரசின் விடுமுறை நீட்டிப்பு அறிவிப்பானது, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது.
சென்னை:
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த மாதம் (செப்டம்பர்) 30ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறைகளுடன் சேர்த்து அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு 6ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், கடந்த கோடை விடுமுறை நாட்களின்போது, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் எண்ணும் எழுத்துப் பயிற்சித் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டதால் அதற்கு ஈடுசெய்யும் பணி விடுப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று, தமிழகத்தில் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் காலாண்டு விடுமுறை முடிந்து வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்க வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பானது, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது. அதேசமயம், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தசரா பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுவதால், பள்ளிகள் நாளை திறக்கப்படுமா அல்லது தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, 10ஆம் தேதி திறக்கப்படுமா அல்லது 13ஆம் தேதி திறக்கப்படுமா என்ற குழப்பம் நீடித்தது.
இதுபற்றி மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் கருப்பசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள 9ம் தேதி வரை விடுமுறை என்பது, மெட்ரிக் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தி உள்ளார். எனவே, சிபிஎஸ்இ பள்ளிகள் நாளை செயல்படும்.
- தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. தமிழகத்தை நோக்கி வந்த இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டது..
கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது. கஜா புயலின் கடைசி பகுதியும் நாகை - வேதாரண்யம் இடையே காலை கரையைக் கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில், கஜா புயல் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கஜா புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கபட்டு உள்ளன.
மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள காரைக்காலுக்கு மீட்பு பணிகளுக்காக கடற்படையை சேர்ந்த 2 கப்பல்கள் விரைந்துள்ளன. தர்ஷாக், கார்னிகோபார், கொராதிவ் ஆகிய கப்பல்கள் சென்னையில் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் சேதமடைந்த 29,500 மின்கம்பங்கள், 205 மின்மாற்றிகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Gaja #GajaCyclone