search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kodaikanal rain"

    கொடைக்கானல் பகுதியில் கடும் பனிமூட்டத்துடன் மிதமான சாரல் மழை பொழிந்து வருகிறது. இதனால் கொடைக்கானல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட கஜா புயல் தாக்கத்தால் சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தும் மின்கம்பங்கள் சாய்ந்தும், விவசாயநிலங்கள் முற்றிலும் அழிந்தும் , கொடைக்கானல் நகர் மற்றும் மேல்மலை கீழ்மலை கிராமங்கள் முழுவதும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி மீளாத நிலையில் இன்று கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டத்துடன் கூடிய மிதமான சாரல் மழை பொழிந்து வருகிறது. இதனால் கொடைக்கானல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கடும் பனிமூட்டம் நிலவியதால் சாலைகளில் சென்ற இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை முகப்பு விளக்குகளை எரிய விட்டு தவழ்ந்து சென்றன. மேலும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகளும் அறைக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

    கடும் பனி மூட்டத்துடன் சாரல் மழையும் பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும்,சிறு வியாபாரிகளின் வணிகமும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது.

    கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது மாறுபட்ட சீதோசனம் நிலவி வருகிறது. காலை நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்தும் மாலையில் இதமான குளிர் காற்றும் வீசி வருகிறது.

    மேலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த மழையின் காரணமாக சுற்றுலா பயணிகள் அறைகளிலேயே முடங்கினர்.

    3 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் பூமி குளிர்ந்தது. வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயரத் தொடங்கி உள்ளது. பழனி நகருக்கு குடிநீர் ஆதாரமான பிரதான ஏரி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    இதேபோல் நகராட்சி நீர்தேக்கம், மனோரஞ்சிதம் சோலை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது. விவசாயிகளும் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகளை நடவு செய்துள்ளனர்.

    தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக அவை செழித்து வளரத் தொடங்கி உள்ளது. ஆப்சீசன் தொடங்க உள்ள நிலையில் சாரல் மழை பெய்து இதமான சீதோசனம் நிலவி வருவது வியாபாரிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

    அடுத்த வாரம் காலாண்டு தொடங்க உள்ளது. எனவே அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கின்றனர். அவர்களை மகிழ்விக்கும் வண்ணம் பிரையண்ட் பூங்கா மற்றும் கொடைக்கானல் நகர் பகுதிகளில் உள்ள பூங்காக்களில் புதிய மலர் செடிகள் நடப்பட்டு தற்போது பூத்து குலுங்குகின்றன.

    சுற்றுலா பயணிகளை வரவேற்க்கும் வண்ணம் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக இறங்கி உள்ளனர்.

    கொடைக்கானலில் பெய்து வரும் சாரல் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டு முழுவதும் இதமான சீசன் நிலவி வருகிறது. எனவேதான் இந்தியா மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    இவர்கள் கொடைக்கானலில் உள்ள கோக்கர்ஸ் வாக், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை ரசித்து தங்களது கேமராக்களில் படம் பிடித்து வருகிறார்கள். அதோடு ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்கின்றனர்.

    தென் மேற்கு பருவமழை ஓரளவு கைகொடுத்தது. எனவே இந்த தண்ணீரை வைத்து விவசாயிகள் உருளை, கேரட், பீன்ஸ் ஆகிய பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். அதன் பின்னர் மழை ஓய்ந்து விட்டது.

    இன்று கொடைக்கானல் பகுதியில் மேகமூட்டம் காணப்பட்டது. காலையிலேயே கரு மேகம் சூழ்ந்ததால் கொடைக்கானல் நகரம் இருளாக காட்சியளித்தது. அதன் பின்னர் லேசானது முதல் மிதமான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் உள்ள இடங்களை ரசித்து பார்த்தனர். இந்த சாரல் மழை பட்டர் பீன்ஸ், கேரட் ஆகியவற்றுக்கு உகந்தது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    கொடைக்கானலில் சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.

    திண்டுக்கல்:

    கேரளா மற்றும் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது ஆப் சீசன் தொடங்க உள்ள நிலையில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. கன மழை மற்றும் போக்குவரத்து துண்டிப்பு உள்ளிட்ட காரணங்களால் கொடைக்கானலுக்கு வர பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரமாகவே சாரல் மழை தொடர்ந்து வருகிறது. மேலும் பலத்த காற்று வீசுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்துள்ளது. இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான பசுமை பள்ளத்தாக்கு, குணாகுகை, தூண்பாறை, பைன் பாரஸ்ட், பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    குறைந்த அளவே வந்திருந்த சுற்றுலா பயணிகளும் அறைகளிலேயே முடங்கி உள்ளனர். வழக்கத்தை விட குளிர் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்த்து வருகின்றனர்.

    இயல்பு நிலை திரும்பிய பிறகே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இதனால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    கொடைக்கானலில் 4 மணி நேரம் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பெருமாள்மலை:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    கடந்த வருடம் கடுமையான வறட்சி நிலவியதால் பொதுமக்கள் மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. லாரிகள் மூலம் தண்ணீர் விலைக்கு வாங்கி வரப்பட்டதால் ஓட்டல் மற்றும் லாட்ஜ்களில் கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்பட்டது.

    பொதுமக்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு கோடை மழை கைகொடுத்ததால் கொடைக்கானல் மலைப்பகுதியில் மீண்டும் பசுமை ஏற்பட்டுள்ளது.

    மேலும் நகராட்சி நீர்தேக்கம் மற்றும் மனோரஞ்சிதம் அணை ஆகியவற்றின் நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது.

    விவசாயிகள் உருளைகிழங்கு, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், சவ்சவ் உள்ளிடட காய்கறிகளை பயிரிட்டுள்ளனர். தற்போது பெய்துள்ள மழையால் அவை செழித்து வளர தொடங்கி உள்ளது. நேற்று 4 மணி நேரம் பலத்த மழை பெய்தது. சாரலாக தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. இதனால் கொடைக்கானலில் குளிர்ச்சி அதிகமாக காணப்பட்டது.

    கோடை காலம் முடிந்த போதும் பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது பெய்த மழை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகளும் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது.

    கீழ்மலை பகுதிகளான பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, தாண்டிக்குடி ஆகிய பகுதிகளில் சாரல் மழையாக தொடங்கி 3 மணி நேரம் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பெருமாள்மலை:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த வருடம் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதனால் லாரிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கும் சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக லாட்ஜ் மற்றும் ஓட்டல்களில் கட்டணமும் உயர்த்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.

    இந்த வருடம் கோடை மழை கைகொடுத்ததால் வெள்ளிநீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் புதுஅருவிகள் உருவானது காண்பவரை வெகுவாக ஈர்த்தது.

    கடந்த 2 நாட்களாகவே நகர்பகுதியில் சாரல்மழை பெய்தது. நேற்று பிற்பகலில் கருமேகங்கள் சூழ்ந்து சாரலாக ஆரம்பித்து கனமழை பெய்தது. இதனால் நகராட்சி நீர்தேக்கம், மனோரஞ்சிதம் உள்ளிட்ட இடங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது நகர்பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு ஓரளவு தீர்வு காணப்பட்டுள்ளது.

    இந்த மழை தொடர்ந்து பெய்துவரும் பட்சத்தில் விவசாயத்தை நம்பியுள்ள மக்களுக்கு ஏதுவாக இருக்கும். இந்த மழையை நம்பி விவசாயிகள் கேரட், பீன்ஸ், உருளைகிழங்கு, முட்டைகோஸ், சவ்சவ் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் காய்கறிகள் செழித்து வளரதொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×