search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmers happy"

    • பரமத்தி வேலூர் பல்வேறு பகுதிகளில் நேற்று பகல் சுமார் 11.30 மணிஅளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
    • அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பரமத்தி, நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், கபிலர்மலை, ஒத்தக்கடை, நல்லூர் , கந்தம்பாளையம், பொத்தனூர், பாண்ட மங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், சோழ சிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பகல் சுமார் 11.30 மணிஅளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    இரவு முழுவதும்

    அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. பகலில் விட்டு விட்டு பெய்த நிலையில் இரவு முழுவதும் பலத்த மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் , நடந்து சென்ற பொதுமக்கள் நனைந்து கொண்டு சென்றனர்.

    அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள், பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் கனமழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

    விவசாயிகள் மகிழ்ச்சி

    தொடர் மழையின் காரணமாக தார் சாலையின் ஓரத்தில் நெடுகிலும் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • திருச்செந்தூர்,பரமன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மிதமான மழை பெய்தது.
    • செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு சாலையில் மழைநீர் தேங்கியதால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    திருச்செந்தூர்:

    வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ள நிலையில் திருச்செந்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான, ஆலந்தலை, கல்லாமொழி, காயாமொழி, தளவாய்புரம், குமாரபுரம், இராணிமகாராஜபுரம், அடைக்கலாபுரம், நடு நாலுமூலைகிணறு, கீழநாலுமூலைகிணறு, பரமன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மிதமான மழை பெய்தது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்செந்தூரில் பெய்த மழையால் பகத்சிங் பஸ் நிலையத்தில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்து வருகிறது. மேலும் டி.பி ரோட்டில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி, செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு சாலையில் மழைநீர் தேங்கியதால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் மழை நீர் சாலையில் தேங்கி உள்ளது. அவற்றை உடனடியாக நகராட்சி நிர்வாகம் சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதியம்புத்தூர் பகுதிகளில் 4 நாட்களாக மாலை வேளையில் மழை பெய்து வந்தது.
    • நேற்று முன்தினம் பெய்த கனமழையால் புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய அரசு கட்டிடங்கள் உள்ள வளாகத்தில் மழைநீர் தேங்கியது.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் பகுதிகளில் 4 நாட்களாக மாலை வேளையில் மழை பெய்து வந்தது.

    விவசாயிகள் மகிழ்ச்சி

    நேற்று முன்தினம் கனமழை பெய்தது. எனவே உளுந்து, பாசிப்பயறு கம்பு, பருத்தி, சோளம் பயிரிட்டுள்ள மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதியம்புத்தூர் மலர் குளத்திற்கு மழை நீர் வரும் தெற்கு காட்டில் கன மழை பெய்ததால் மலர் குளத்திற்கு மழை நீர் வர ஆரம்பித்துள்ளது. மலர் குளத்திற்கு அதிகமான மழை நீர் வரும் மேற்கு பகுதியில் உள்ள குனவன் குளம், செவல்குளம், புதுப்பச்சேரி குளம் உள்ளிட்ட 7 குளங்கள் இன்னும் நிரம்பவில்லை.

    மழைநீர் தேங்கியது

    அந்தக் குளங்கள் நிரம்பி னால் தான் மலர் குளம் நிரம்ப வாய்ப்பு உண்டு. நேற்று முன்தினம் பெய்த கன மழையால் புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பஞ்சாயத்து அலுவலகம், கால்நடை மருத்துவமனை, சித்த மருந்தகம் ஆகிய அரசு கட்டிடங்கள் உள்ள வளாகத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள் அவதி யடைந்தனர். நேற்று மழை நீர் வடிய ஆரம்பித்தவுடன் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • மழையால் இந்த ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு விநாடிக்கு 200 கன அடி நீர் வந்தது.
    • 120 கன அடி நீரினை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. கல்வராயன்மலை பகுதியில் உள்ள பொட்டியம், கல்படை, மாயம்பாடி ஆகிய ஆறுகளின் வழியாக வரும் மழை நீர் இந்த அணையில் தேக்கி வைக்கப்படும். கடந்த சில வாரங்களாக வெப்பசலனம் காரணமாக பெய்து வரும் மழையால் இந்த ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு விநாடிக்கு 200 கன அடி நீர் வந்தது. இதனால் அணையின் முழுக் கொள்ளலவான 46 அடியில் 44 அடி நிரம்பியது. சம்பா போகத்திற்கு நெல் நடவு செய்ய உள்ள விவசாயிகளுக்காகவும், அணையின் பாதுகாப்பு கருதியும், அணை நீரை திறந்து விட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கோமுகி அணையில் இருந்து புதிய மற்றும் பழைய பாசன வாய்க்கால்கள் மூலம் விநாடிக்கு 120 கன அடி நீரினை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

    பழைய பாசன வாய்க்காலில் விநாடிக்கு 55 கன அடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் பரிக்கம், மண்மலை, கரடிசித்தூர், சாவடிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். புதிய பாசன வாய்க்காலில் விநாடிக்கு 65 கன அடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கனந்தல், கச்சிராயபாளையம், அம்மாப்பேட்டை, செம்படாங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விநாடிக்கு 100 கன அடிநீர் மழைநீர் கோமுகி அணைக்கு வந்து கொண்டிருப்பதால் நடப்பு சம்பா போகத்திற்கு தேவையான பாசன நீர் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைநதுள்ளனர். இந்த நீர் திறப்பு விழாவில் சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் ஷ்ரவண்குமார் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள், தி.மு.க. பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    • கனமழை காரணமாக வறண்டு கிடந்த அணை ப்பட்டி வைகை ஆற்றுப்படுகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அதிக அளவில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.
    • இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்ப ட்டது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை, தோப்பு ப்பட்டி, கோடாங்கிநாயக்கன் பட்டி, என்.ஊத்துப்பட்டி, குளத்துப்பட்டி, சீத்தாபுரம், கோட்டூர், முசுவனூத்து, அணைப்பட்டி, விளாம்பட்டி பகுதியில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் பூ மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக கோடைகாலத்தை மிஞ்சி வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொது மக்கள் சிரமமடைந்தனர். இந்த நிலையில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்ப ட்டது. ஆங்காங்கே மரங்க ளும் சாய்ந்தது. இருந்த போதும் தொடர்மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தற்போது உழவு பணியில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால் தண்ணீர் தேங்கி சாலையில் ஓடியது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்ட னர். எனவே ஆக்கிர மிப்புகளை முறையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கனமழை காரணமாக வறண்டு கிடந்த அணை ப்பட்டி வைகை ஆற்றுப்படுகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அதிக அளவில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.

    திண்டுக்கல் 34, கொடை க்கானல் ரோஸ்காடன் 36.5, பழனி 5, சத்திரப்பட்டி, 57.6, நிலக்கோட்டை 104.6, வேடசந்தூர் 19.5, புகையிலை நிலையம் 19.5, காமாட்சிபுரம் 4.7 மி.மீ. என மொத்தம் மாவட்டம் முழுவதும் 326.6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • ஒட்டன்சத்திரம் காந்திமார்க்கெட் மற்றும் காமராஜர் மார்க்கெட்டுக்கு சராசரியாக 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பெட்டிகள் தக்காளி வருகிறது.
    • ஒரு பெட்டி தக்காளி ரூ.200 முதல் ரூ.350 வரை விற்பனையா வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைசுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் தக்காளி அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. அங்கிருந்து ஒட்டன்சத்திரம் காந்திமார்க்கெட்டுக்கு வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    பின்னர் அவை வியாபாரிகளால் வாங்கப்பட்டு தமிழகத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக தக்காளிக்கு நிலையான விலை கிடைக்காமல் இருந்தது. இதனால் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அறுவடை செய்யாமலும், குப்பையில் கொட்டியும் வந்தனர்.

    தற்போது தக்காளிக்கு போதிய விலை கிடைத்து வருகிறது. குறிப்பாக வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை போதுமான அளவு கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். ஒட்டன்சத்திரம் காந்திமார்க்கெட் மற்றும் காமராஜர் மார்க்கெட்டுக்கு சராசரியாக 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பெட்டிகள் தக்காளி வருகிறது.

    இவை மதுரை, சிவகாசி உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் அனுப்பிைவக்கப்படுகிறது. ஒரு பெட்டி தக்காளி ரூ.200 முதல் ரூ.350 வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகம், திருமண விஷேசங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளால் தக்காளிக்கு நல்ல விலை கிடைப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    • விரகனூர் அணையில் இருந்து கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    • விவசாயம் பாதிப்படைந்து நெற்பயிர்கள் கருகி பொருளாதார கஷ்டம் ஏற்பட்ட நிலையிலும், தற்போது தண்ணீர் திறக்கப்படுவது வரவேற்க த்தக்கது என்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் வானம் பார்த்த பகுதி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் போதிய பருவ மழை இல்லாததால் நெல், மிளகாய், பருத்தி, எள் பயிர்கள் கருகி விவசாயிகள் வேதனையடைந்தனர்.

    அபிராமம் பகுதிக்கு நீராதாரமாக விளங்கும் கிருதுமால் நதி மற்றும் கால்வாய்கள் தூர்வாரப் படாமல் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் பல முறை வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்தும் அபிராமம் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. கிருதுமால் நதியை தூர்வாரியும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் பலமுறை மனு அளித்தும் அரசின் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இது குறித்து விவசாயி முனியாண்டி கூறுகையில், உடையநாதபுரம், நந்தி சேரி, காடனேரி, நீர் தாண்ட அச்சங்குளம், போத்தநதி, பாப்பனம் மற்றும் அபிராமம் சுற்று வட்டார பகுதிகளில் பருவ மழை இல்லாததால் நெல், மிளகாய், பருத்தி, எள் பயிர்கள் கருகி விவசாயம் பாதிப்படைந்துள்ளது.

    தற்போது மதுரை விரகனூர் அணையில் இருந்து கிருதுமால் நதியில் திறந்து விடப்படும் நீரால் அபிராமம் கண்மாய் தண்ணீர் நிரம்புவதால் குடிநீர் தேவைக்காகவும் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்றார்.

    முல்லைபெரியாறு-வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் ராமநா தபுரம் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் கூறுகையில், அபிராமம் மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது. இங்கு விவசாயம் பாதிப்படைந்து நெற்பயிர்கள் கருகி பொருளாதார கஷ்டம் ஏற்பட்ட நிலையிலும், கிருது மால் நதிமூலம் தற்போது தண்ணீர் திறக்கப்படுவது வரவேற்க த்தக்கது.

    எங்கள் கோரிக்கையை ஏற்று நவம்பர் மாதம் கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்திருந்தால் நெற்பயிர்கள் கருகி இருக்காது. தற்போது தண்ணீர் திறப்பதால் குடிநீர் தேவைக்கும், நிலத்தடி நீரும் உயரும். கிருதுமால் நதிமூலம் தண்ணீர் கொண்டுவர பல கட்ட போராட்டங்கள், விளக்க கூட்டங்கள் நடத்தி ஒத்துழைப்பு தந்த விவசாயிகள், பொதுமக்கள், அருணாசலம் உள்ளிட்ட சமூக சேவகர்கள் மற்றும் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், நீர்வள ஆதார அமைப்பிற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

    • சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    • இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    சிவகங்கை

    மானாமதுரை அருகே உள்ள அன்னியனேந்தல் என்ற இடத்தில் மானாமதுரை பிரதான கண்மாய்க்கு ரீச் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் மூலம் மானாமதுரை, கால்பிரவு, கிருங்காங்கோட்டை, கீழமேல்குடி, நாட்டர் கால்வாய் மூலம் 16 கிராமங்கள் பயன்பெறுவதற்காக வைகை தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

    கடந்த 15-ந் தேதி பொதுப்பணித் துறை அதிகாரிகள் ரீச் கால்வாய் அடைப்பை ஜே.சி.பி. மூலம் அகற்றும்போது மிளகனூர் கிராமத்தினர் பணிகளை நிறுத்த கூறியதால் அதிகாரிகளும் நிறுத்தினர். பின்னர் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கு பிறகு நேற்று காலை மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் மானாமதுரை கண்மாய்க்கு செல்லும் ரீச் கால்வாய் அடைப்பை நீக்குவதற்கு வந்தனர். மிளகனூர் கிராமத்தினர் அடைப்பை உடைக்கக்கூடாது என்று மீண்டும் கூறியதால் அதிகாரிகள் இதுகுறித்து மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் சமாதானம் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

    கோட்டாட்சியர் சுகிதா, தாசில்தார் சாந்தி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மோகன் குமார், செந்தில் குமார், பூமிநாதன், மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதலில் மிளகனூர் கிராமத்தினரிடம் அதிகாரிகள் பேசினர். பின்னர் மானாமதுரை, கீழமேல்குடி, கால்பிரிவு, கிருங்காக்கோட்டை உட்பட கிராமத்தின் விவசாயிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் முடிவில் அடுத்த மாதம் டிசம்பர் 5-ந் தேதி மேற்கண்ட கிராமங்களுக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதிகாரிகளின் நடவடிக்கைகளால் பல ஆண்டுகள் தண்ணீர் இல்லாமால் இருந்த விவசாய நிலங்கள் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சின்னசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்பபோது பலத்தமழை பெய்தது.
    • சின்னசேலம் பகுதியில் அதிகமாக சோளம், நெல், மஞ்சள், குச்சி கிழங்கு, ஆகியவை அதிகளவில் பயிரிடுவது வழக்கம்.

    கள்ளக்குறிச்சி:

    காளசமுத்திரம் , தத்தா திரிபுரம், குரால், பாக்கம்பாடி, நயினார்பாளையம், ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்த மழையின் காரணத்தினால் விவசாயிகள் வயல்களில் உழவு பணி மும்முரமாக செய்து வருகின்றனர்.மானாவாரி நிலங்களில், தானிய பயிர்கள் மற்றும் இறவை பாசன நிலங்களில், சின்னவெங்காயம், பீட்ரூட், தக்காளி, கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

    சின்னசேலம் பகுதியில் அதிகமாக சோளம், நெல், மஞ்சள், குச்சி கிழங்கு, ஆகியவை அதிகளவில் பயிரிடுவது வழக்கம். அதேபோல் இம்முறையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். சுற்றுவட்டாரத்தில் பெய்துள்ள மழை காரணமாக வயல்களில் உழவு, விதைப்பு பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றன.

    • கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.
    • காட்டுமன்னார்கோவில் பகுதியில் தற்போது நெல் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் நிலத்தை தயார் செய்து வருகிறார்கள்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று இரவு முதல் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் மழை பெய்தது. கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் வட்டார பகுதிகளான மாமங்கலம், வானமாதேவி, மா.கொளக்குடி, லால்பேட்டை, மோவூர், ஆயங்குடி, எடையார், கிருஷ்ணாபுரம், சிட்டமல்லி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் மழைநீர் ஆறாக ஓடியது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியதால் அங்கு வசிப்பவர்கள் அவதி பட்டனர். காட்டுமன்னார்கோவில் பகுதியில் தற்போது நெல் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் நிலத்தை தயார் செய்து வருகிறார்கள். அதோடு நேரடி நெல் விதைப் பிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது பெய்துள்ள மழை நேரடி நெல் விதைப்புக்கு உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    • தேனி மாவட்டத்தில் நீண்டநாட்களுக்கு பிறகு பரவலாக பெய்த கனமழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
    • மேலும் பருவமழை நீடிக்கும் பட்சத்தில் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    கூடலூர் :

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும். அதனைதொடர்ந்து தேனி மாவட்டத்தில் பருவமழை பெய்யும். ஆனால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி 10 நாட்களுக்கு மேலாகியும் தேனி மாவட்டத்தில் குறிப்பிட்ட அளவு மழை பெய்யவில்லை. அவ்வப்போது ஒருசில இடங்களில் மட்டும் மழை பெய்துவிட்டு நின்றுவிடும்.

    இந்நிலையில் நேற்று தேனி, கூடலூர், ஆண்டிபட்டி, பெரியகுளம், அரண்மனைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல்விவசாயம் தொடங்கி உள்ள நிலையில் தற்போது பெய்துள்ள மழை விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்பிக்கை அடைந்துள்ளனர்.

    மேலும் பருவமழை நீடிக்கும் பட்சத்தில் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.80 அடியாக உள்ளது. அணையில் இருந்து 511 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4884 மி.கனஅடியாக உள்ளது.

    வைகை அணை நீர்மட்டம் 57.30 அடி, திறப்பு 869 கனஅடி, இருப்பு 3106 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 43.60 அடி, வரத்து 94 கனஅடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 82 அடி, வரத்து 8 கனஅடி, திறப்பு 3 கனஅடி.

    பெரியாறு 2.8, தேக்கடி 3, கூடலூர் 3, உத்தமபாளையம் 2.1, வைகை அணை 10, சோத்துப்பாறை 4, பெரியகுளம் 52, ஆண்டிப்பட்டி 29.6, அரண்மனைப்புதூர், வீரபாண்டி, மஞ்சளாறு மற்றும் போடியில் தலா 1 மி.மீ மழையளவு பதிவுவாகி உள்ளது.

    • ராஜகனி என்று அழைக்கக்கூடிய எலுமிச்சையை ஜூலை முதல் டிசம்பர் வரையில் ஏக்கருக்கு 160 செடிகள் வரை நடவு செய்யலாம்.
    • எலுமிச்சைக்கு நிலையான விலை கிடைக்கிறது.

    உடுமலை

    உடுமலை சுற்றுப்புற பகுதியில் ஒரு சில பகுதியில் எலுமிச்சை சாகுபடியும் நடைபெற்று வருகிறது.ஆனால் பருவம் தவறிய மழை மற்றும் பருவநிலை மாற்றத்தால் எலுமிச்சை விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    ராஜகனி என்று அழைக்கக்கூடிய எலுமிச்சையை ஜூலை முதல் டிசம்பர் வரையில் ஏக்கருக்கு 160 செடிகள் வரை நடவு செய்யலாம். செடிவகை சமதளபரப்பிலும் கொடிவகை மலைப்பிரதேசங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது.நடவு செய்த நாளில் இருந்து 3- ம் வருடம் அறுவடைக்கு தயாராகி விடும். அன்றாட உணவில் எலுமிச்சம் பழத்தின் பயன்பாடு உள்ளதால் அவற்றுக்கான தேவையும் ஆண்டு முழுவதும் இருந்து வருகிறது. வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களை தன்னகத்தே கொண்ட எலுமிச்சை பித்தம், தலைவலி, மலச்சிக்கல், தொண்டைவலியை போக்குவதுடன் கிருமிகளை அழித்து அஜீரணப்பிரச்சனையை தீர்க்கும் வல்லமை பெற்றது.அதுமட்டுமின்றி வயிற்று உபாதைகள், நெஞ்சு எரிச்சல், வாயுவை அகற்றி பசியை உண்டாக்கும் சிறந்த கிருமி நாசினியாகவும் திகழ்கிறது.

    மேலும் கோடை காலத்தில் எலுமிச்சைசாறுடன் உப்பு, நாட்டு சர்க்கரை சேர்த்து தயாரிக்கும் பானகமானது உடலில் ஏற்படும் நீர் இழப்பை குறைக்கிறது.இதனால் பொதுமக்களும் எலுமிச்சையை விரும்பி உணவில் பயன்படுத்தி வருவதால் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றோம். எலுமிச்சைக்கு நிலையான விலை கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×