search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Incessant Rains"

    • பருவமழை தொடங்கிய நிலையில் கொடைக்கான லில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
    • இதனால் இங்குள்ள சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடை ந்தனர்.

    கொடைக்கானல்:

    எழில் கொஞ்சும் அழகும், தலையை முட்டும் மேகக்கூ ட்டங்களும், இதமான தட்ப, வெப்பநிலையும் நிலவுவ தால் கொடை க்கானலை சுற்றிப்பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகி ன்றனர்.

    தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. பருவமழை தொடங்கிய நிலையில் கொடைக்கான லில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இதனால் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்க ர்ஸ்வாக், மன்னவனூர், சூழல் சுற்றுலா மையம், பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடை ந்தனர். நகரின் மையப்பகுதி யில் அமைந்துள்ள ஏரி ச்சாலை முழுவதும் போக்கு வரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    படகு சவாரியும் பல மணிநேரம் நிறுத்தப்பட்டது. கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் செய்து வரும் சிறுகடை வியாபாரிகள், ஓட்டல்கள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • ஆப்பக்கூடல் ஏரிக்கு செல்லும் நீர்வழி பாதையின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலம் மழை நீர் வெள்ளத்தால் சேதம் அடைந்து ஒரு பகுதி கீழே இறங்கி தரை தட்டி நிற்கும் நிலையில் உள்ளது.
    • இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த வேம்பத்தி ஊராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட நல்லா மூப்பனூர் பிரிவு பகுதியில் இருந்து தினமும் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் பலர் வாகனங்களில் சென்று வருகிறார்கள்.

    எட்டிக்குட்டையா பாளையம், பொதிய மூப்ப னூர், சேத்தனாம்பாளையம், பருவாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாகவும் ஆப்பக்கூடல் ஏரிக்கு செல்ல க்கூடிய நீர்வழிப் பாதையாகவும் உள்ளது. இந்த பகுதியில் மேல்மட்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதி சுற்று பகுதியில் கன மழை பெய்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பியது.

    இதனால் ஆப்பக்கூடல் ஏரிக்கு செல்லும் நீர்வழி பாதையின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலம் மழை நீர் வெள்ளத்தால் சேதம் அடைந்து ஒரு பகுதி கீழே இறங்கி தரை தட்டி நிற்கும் நிலையில் உள்ளது.

    இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் கீழே விழுந்து எழுந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    மேலும் காலை மற்றும் மாலை நேரத்தில் இந்த வழியாக ஒரு வாகனம் சென்றால் மற்றொரு வாகனம் செல்ல முடியாத நிலையும் நிலவி வருகிறது இதனால் பெரும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

    எனவே இந்த சேதமடைந்த மேல்மட்ட பாலத்தை உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பண்ருட்டி கெடிலம் ஆறு,கண்டரக் கோட்டை தென்பெண்ணை ஆறுஆகிய இடங்களில்நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறு ஏரி குளம் ஆகிய இடங்களில்நீர் நிரம்பி உள்ளது. பண்ருட்டி கெடிலம் ஆறு,கண்டரக் கோட்டை தென்பெண்ணை ஆறுஆகிய இடங்களில்நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் ஆறு, குளம்,ஏரிகளில் குளிக்க கூடாது என்று தடை விதித்துள்ளனர் கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்று பகுதியில் குளிப்பதற்காக வந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார், பயிற்சிசப்.இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார்தீவிர ரோந்து பணியில்ஈடுபட்டு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

    • தொடர் மழையால் நேற்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
    • நெற்பயிர், கரும்பு, வாழை, ஊடுபயிர் ஆகியவை தண்ணீரால் சூழ்ந்துள்ளது.

    கடலூர்:

    வடகிழக்கு பருவமழை தற்போது தமிழகம் முழுவதும் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக கடலூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் நேற்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்று இரவும் விடிய விடிய மழை பெய்தது. கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பரங்கி பேட்டை, கீரப்பாளை யம், குமராட்சி ஆகிய பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இது தவிர கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதியில் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர், கரும்பு, வாழை, ஊடுபயிர் ஆகியவை தண்ணீரால் சூழ்ந்துள்ளது.

    கனமழைக்கு கடலூர் மாவட்டத்தில் 200 வீடுகள் சேதமாகி உள்ளது. 8 கால்நடைகள் இறந்துள்ளது. 7 இடங்களில் மின்கம்பம் சாய்ந்துள்ளது. ஒரு இடத்தில் மரம் முரிந்துள்ளது. தொடர் மழை காரண மாக கடலூர் மாநகராட்சி பகுதியில் 2000 ஆயிரம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்து ள்ளது. இந்த பகுதியில் உள்ள தண்ணீரை ராட்சத குழாய் மூலம் பம்பிங்செய்து மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றி வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் ஒன்றிய வாரியாக தோட்ட க்கலை, பொதுப்ப ணித்து றை, வருவாய்துறை அதி காரிகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    • திருப்புவனம் அருகே தொடர் மழையால் பாலம் அடித்துச்செல்லப்பட்டது.
    • போக்குவரத்து பாதிக்கப்பட்டு 5 கிராமங்கள் துண்டிக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், பிரமனூர் ஊராட்சியைச் சோ்ந்த வயல்சோி-காிசல்குளம் சாலையில் பாலம் அமைந்துள்ளது. தொடா் மழையின் காரணமாக இந்த பாலம் அடித்து செல்லப்பட்டது.

    இந்த பாலம் 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, காிசல்குளம் உள்பட 5 கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. இந்த சாலை ஊராட்சி ஒன்றிய சாலையாகும்.

    பாலம் சேதமடைந்து உள்ளது தொடா்பாக, கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், புளியங்குளம் முதல்வாடி தரைப்பாலம் நீரில் மூழ்கி பாலத்திற்கு 2 அடி தண்ணீர் செல்வதைத் தொடா்ந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குழந்தைகள். பொதுமக்கள் பாலத்தை கடக்க இயலாத நிலை உள்ளதால், உடனடியாக இந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டு, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வருவாய்த்துறை, ஊராட்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலா்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, சிவகங்கை கோட்டாட்சியா் சுகிதா, ஊரக வளா்ச்சித்துறை செயற்பொறியாளா் வெண்ணிலா, நீர்வளத்துறை செயற்பொறியாளா் (சருகனியாறு வடிநிலைக் கோட்டம்) பாரதிதாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த வண்ணம் உள்ளது.
    • மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

    கடலூர், அக்.20-

    மத்திய கிழக்கு வங்கக்க டல் மற்றும் வடக்கு அந்த மான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த சுழற்சி பகுதியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. மேலும் வருகிற 22- ந் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவும், மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து சென்று புயலாக மாறி உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த வண்ணம் உள்ளது. இந்த மழை இரவு நேரங்களில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வானமாதேவி, வடக்குத்து, லால்பேட்டை, எஸ் ஆர். சி, குடிதாங்கி, கீழ் செருவாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவ லாக மழை பெய்தது. நேற்று இரவு கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் மழை பெய்து வந்தது. இன்று காலை முதலே லேசான மழை பெய்து வருகிறது.

    தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் 3 நாட்களில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை எதிர்பார்த்திருக்கும் சாலையோர பட்டாசு வியாபாரிகள், பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான சிறு சிறு கடை வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் வருகிற 26-ந் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி யதை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. இது மட்டும் இன்றி விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிக்காத வகை யில் விவசாயிகளும் வேளாண்மை துறை அதிகாரிகளும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.
    • காட்டுமன்னார்கோவில் பகுதியில் தற்போது நெல் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் நிலத்தை தயார் செய்து வருகிறார்கள்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று இரவு முதல் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் மழை பெய்தது. கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் வட்டார பகுதிகளான மாமங்கலம், வானமாதேவி, மா.கொளக்குடி, லால்பேட்டை, மோவூர், ஆயங்குடி, எடையார், கிருஷ்ணாபுரம், சிட்டமல்லி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் மழைநீர் ஆறாக ஓடியது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியதால் அங்கு வசிப்பவர்கள் அவதி பட்டனர். காட்டுமன்னார்கோவில் பகுதியில் தற்போது நெல் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் நிலத்தை தயார் செய்து வருகிறார்கள். அதோடு நேரடி நெல் விதைப் பிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது பெய்துள்ள மழை நேரடி நெல் விதைப்புக்கு உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    • மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அழகன் குப்பம் முதல் பெரியமுதலியார் சாவடி வரை இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது.
    • தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் பெரும்பாலான மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    கடலூர்:

    தமிழர் முழுவதும் 4 நாட்கள் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.அதன்படி மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அழகன் குப்பம் முதல் பெரியமுதலியார் சாவடி வரை இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. மேலும் ஆலத்தூர், கீழ்குத்துபட்டு, கந்தாடு உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையினால் மரக்காணத்தில் உள்ள உப்பளப் பகுதியில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு வேலை இன்று நடைபெறவில்லை.

    இதனால் இந்த உப்பு உற்பத்தியில் வேலை பார்க்கும் கூலி தொழிலா ளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மரக்காணம் மீனவ பகுதிகளில் தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் பெரும்பாலான மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை ஒரு சில மீனவர்கள் மட்டும் சென்றனர். இதனை அடுத்து அந்த பகுதியில் கடலோர காவல் படையினர் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • மதுரையில் தொடர்ந்து பெய்த மழையால் வசந்தம் நகர் பஸ் நிறுத்த தரைத்தளம் சேதமடைந்துள்ளது.
    • பல மணி நேரத்துக்கு பின்னர் மழைநீர் வடிந்தது.

    மதுரையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.நேற்று இரவும் மதுரையில் பலத்த மழை பெய்தது.இதனால் வசந்தம் நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. அப்போது பஸ்களில் வந்து இறங்கிய பயணிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். பல மணி நேரத்துக்கு பின்னர் மழைநீர் வடிந்தது.

    இந்த நிலையில் வசந்தம் நகர் பஸ் நிறுத்தம் தரைதளத்தை மழைநீர் சேதமாக்கி விட்டதால் அங்கு பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அதனை உடனடியாக சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழக பகுதிகளின் மேல் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • விவசாயி பணிகள் பாதிப்படைந்து வருவதோடு, விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    கடலூர்:

    தமிழக பகுதிகளின் மேல் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்திக உள்ளனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றன. இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் திருப்பாதிரிப்புலியூர் முதுநகர் செம்மண்டலம், காராமணிக் குப்பம், திருவந்திபுரம், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், நடுவீரப்பட்டு, தொழுதூர், வேப்பூர், கீழச்செருவாய், லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் ,காட்டுமன்னார்கோயில் அண்ணாமலைநகர், பண்ருட்டி, சிதம்பரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்து வந்தது. இதன் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்தது காண முடிந்தது.

    மேலும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயி பணிகள் பாதிப்படைந்து வருவதோடு, விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.கடலூர் மாவட்டத்தில் மழை அளவு பின்வருமாறு தொழுதூர் - 34.0, வேப்பூர் - 27.0, கீழச்செருவாய் - 25.0, லால்பேட்டை - 18.0, காட்டுமயிலூர் - 15.0,பரங்கிப்பேட்டை - 14.4, புவனகிரி - 13.0, ஸ்ரீமுஷ்ணம் - 11.2, காட்டுமன்னார்கோயில் - 11.0, அண்ணாமலைநகர் - 10.0, பண்ருட்டி - 8.5, சிதம்பரம் - 7.4, கடலூர் - 5.8, கலெக்டர் அலுவலகம் - 5.4, கொத்தவாச்சேரி - 5.0, மீ-மாத்தூர் - 5.0, எஸ்ஆர்சி குடிதாங்கி - 3.75, வானமாதேவி - 3.0,ஆக மொத்தம் 222.45 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது .

    • கடலூரில் தொடர் மழை சேறும் சகதியுமாக தற்காலிக உழவர் சந்தை மாறியுள்ளது.
    • விவசாயிகள் தங்கள் பொருட்கள் சரியான முறையில் விற்பனை செய்ய முடியாமல் கடும் அவதி அடைந்து வந்தனர்

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உழவர் சந்தை இயங்கி வந்தது‌. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பழவகைகள் காய்கறி வகைகள் போன்றவற்றை வாங்கி சென்று வந்தனர். தற்போது உழவர் சந்தை நவீனமயப்படுத்துதல் காரணமாக தற்காலிகமாக கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உழவர் சந்தை மாற்றப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் உழவர் சந்தை மாற்றப்பட்ட சில நாட்கள் பிறகு அவர்களுக்கு உரிய முறையில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு பொருட்கள் விற்பனை செய்யும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளித்து வருகின்றது. இந்த நிலையில் தற்காலிகமாக மாற்ற பட்டு உள்ள உழவர் சந்தை முழுவதும் சேறும் சகதிகமாக மாறியது. இதன் காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பொருட்கள் வைத்து விற்பனை செய்ய முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தனர்‌.

    மேலும் தினந்தோறும் உழவர் சந்தைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நேரில் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகள் பழ வகைகள் வாழைத்தார்கள் போன்றவற்றை வாங்கி செல்வது வழக்கம். ஆனால் தொடர் மழை காரணமாக சேறும் சகதிகமாக காட்சியளித்த தற்காலிக உழவர் சந்தையில் பொதுமக்கள் குறைந்த அளவில் வந்து பொருட்கள் வாங்கி சென்றதையும், அதில் சரியான முறையில் பொருட்கள் வாங்க முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்கள் பொருட்கள் சரியான முறையில் விற்பனை செய்ய முடியாமல் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பொருட்களும் சரியான முறையில் பராமரிக்க முடியாமல் காய்கறிகள், பழ வகைகள் சரியாக விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். ஆகையால் வேளாண்மை துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக உரிய முறையில் தற்காலிக உழவர் சந்தையில் வியாபாரிகள் விவசாயிகள் உரிய முறையில் பொருட்கள் விற்பனை செய்வதற்கு ஏதுவாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொண்டு அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி நிதியுதவியை கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார். #KeralaFloods #KeralaFloodRelief #RaghavaLawrence
    தொடர் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

    கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி மதிப்புள்ள செக்கை கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று நேரில் வழங்கினார்.



    நடிகர் விஜய் ரூ.70 லட்சமும், நடிகர் விக்ரம் ரூ.35 லட்சமும், விஜய் சேதுபதி ரூ.30 லட்சமும் நிதியுதவி வழங்கியுள்ளனர். 

    நடிகர்கள் கமல், ரஜினி, சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, பிரபு, நடிகைகள் ரோஹினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பலரும் நிதியுதவி வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief #RaghavaLawrence

    ×