என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா மழை"

    • வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
    • அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நாளை 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்களிலேயே தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் கேரள மாநிலத்தில் அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நாளை 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பாலக்காடு, இடுக்கி, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
    • நிலைசரிவு ஏற்பட்டுள்ள சாலையை சீர் செய்யும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன.

    கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

    கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மூணாரில் இருந்து தேனிக்கு செல்லும் சாலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    நிலைசரிவு ஏற்பட்டுள்ள சாலையை சீர் செய்யும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன. விரைவில் இப்பகுதியில் போக்குவரத்து சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    கேரளாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் பல பகுதிகள் இருளில் மூழ்கின.

    இந்நிலையில் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இடுக்கி மற்றும் எர்ணாகும் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டயம், காஞ்சிரப்பள்ளி மற்றும் மீனாச்சில் ஆகிய 3 தாலுக்காக்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோட்டம் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

    பத்தனம்திட்டாவில் மணிமாலா மற்றும் பம்பா, காசர்கோட்டில் மொக்ரல் மற்றும் கொல்லத்தில் பள்ளிக்கல் உள்ளிட்ட பல ஆறுகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடற்கரைகளுக்கு அப்பால் ஜூலை 27-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    • பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவான வெப்பமண்டல புயல் விபா காரணமாக கேரள மாநிலம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    பலவீனமடைந்துள்ள சூறாவளி புயல் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வங்காள விரிகுடாவில் நுழையும் என்பதால் அடுத்த 5 நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் 64.5 முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும் என்பதால் இந்த 8 மாவட்டங்களுக்கும் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • 15 மற்றும் 16-ந் தேதிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் வருகிற 18-ந் தேதி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காலத்தில் பலத்த காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இன்று 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (14-ந் தேதி) மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 15 மற்றும் 16-ந் தேதிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நாளை முதல் 16-ந் தேதி வரை கேரள கடற்கரை முழுவதும் மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் இந்த காலத்தில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • மழை காரணமாக பல மாவட்டங்களில் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்னதாக கடந்த மாதமே தொடங்கிவிட்டது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இடையில் ஒரு சில நாட்கள் மட்டும் மழை குறைந்தநிலையில், தற்போது மீண்டும் அங்கு பலத்த மழை பெய்ய தொடங்கியிருக்கிறது. கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, பத்தினம் திட்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை கொட்டுகிறது.

    பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு பொதுமக்களை மீட்டு வருகின்றனர். மழை காரணமாக பல மாவட்டங்களில் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

    மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை தொடர்ந்து வரும் நிலையில் கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் பாலக் காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், ஆலப்புழா, கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    காசர்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்கள், ஆலப்புழா மவட்டத்தில் குட்டநாடு மற்றும் அம்பலப்புழா தாலுகாக்களில் உள்ள தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

    கோழிக்கோடு மற்றும் கணணூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டது. பலத்த மழை காரணமாக கொல்லம் அருகே உள்ள போலயாதோடு பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • பலத்த காற்று மற்றும் மழை நீடித்தபடி இருப்பதால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
    • கனமழைக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதமடைந்திருக்கும் நிலையில், உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

    மேலும் பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வருகிறது. நேற்று 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சூர், மலப்புரம், கசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

    மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்வது மட்டுமின்றி காற்றும் வேகமாக அடிப்பதால் ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் விழுந்து விட்டன. அவை சாலைகள் மற்றும் வாகனங்களின் மீது விழுந்ததால் பல இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கடந்த 2 நாட்களில் மட்டும் காற்றுடன் பெய்த கனமழைக்கு ஏராளமான மின்கம்பங்கள் முறிந்து விழுந்துவிட்டன. மாநிலத்தில் உள்ள 25 வட்டங்களில் 48 மணி நேரத்திற்குள் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் விழுந்துள்ளன. மேலும் 48 மின்சார டிரான்ஸ்பார்மர்களும் சேதமடைந்திருக்கின்றன.

    இதன் காரணமாக மாநிலம் முழுவதும் கடுமையான மின்தடை ஏற்பட்டுள்ளது. மின் தடையால் 18ஆயிரத்து 100 மின்மாற்றி பகுதிகளில் சுமார் 30 லட்சம் மின் நூகர்வோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8.6லட்சம் நூகர்வோர்களுக்கு இன்று காலை வரை மின்சாரம் வழங்கப்படவில்லை.

    பலத்த காற்று மற்றும் மழை நீடித்தபடி இருப்பதால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடும் சிரமத்ததுக்கு மத்தியில் முறிந்துவிழுந்த மின்கம்பங்கள் மற்றும் சேதமடைந்த டிரான்ஸ்பார்மர்களை மாற்றியமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் முறிந்து விழுந்திருப்பதால் ரூ56.7கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கேரள மின்வாரியம் தெரிவித்துள்ளது. சீரமைப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் மின் வினியோகம் விரைவில் சீராகும் என்றும் மின்வாரியம் கூறியி ருக்கிறது.

    கனமழைக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதமடைந்திருக்கும் நிலையில், உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. மின்னல் தாக்கியது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது, மின்சாரம் தாக்கியது உள்ளிட்ட காரணங்களால் நேற்று ஒரே நாளில் மட்டும் 5 பேர் பலியாகியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து கனமழை பெய்து வருகிறது.
    • கனமழை காரணமாக 11 மாவட்டங்களில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இன்றும் பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், கண்ணூர், திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பத்தினம்திட்டா, காசர்கோடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு இன்று "ரெட் அலார்ட்" விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 மாவட்டங்களில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது.

    இந்நிலையில் கேரளாவில் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை (மே 27) அதிதீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மலப்புரம், திருச்சூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 4-ந்தேதி தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
    • கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளிலும் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பொழிவு இருக்கும்.

    ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் தேதியில் தொடங்கும். கடந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

    வழக்கமாக இதற்கான அறிகுறிகள் அனைத்தும் அந்தமான் மற்றும் லட்சத்தீவு பகுதியில் தென்படும். இந்த ஆண்டு இதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாமல் இருந்தது. இதனால் தென்மேற்கு பருவமழை தாமதமாகும் எனக்கூறப்பட்டது.

    இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 4-ந்தேதி தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும், லட்சத்தீவு மற்றும் அந்தமான் தீவுகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த மழை தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா பகுதியிலும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளிலும் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

    தென்மேற்கு வங்க கடல், தென்கிழக்கு வங்க கடல், அந்தமான் மற்றும் நிக்கோ பார் தீவுகள், அந்தமான் கடல் பகுதியிலும் சூறைக்காற்றும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    • மழையின் தீவிரம் சற்று குறைந்தாலும் நேற்று மாநிலத்தின் பல பகுதிகளில் இடைவிடாது மழை பெய்தது.
    • தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு மாநிலத்தில் ஆயிரத்து 100 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்து உள்ளன.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளது. தாமதமாக தொடங்கினாலும் நாளுக்கு நாள் மழையின் தீவிரம் அதிகமாகவே உள்ளது.

    மழையோடு காற்றும் பலமாக வீசி வருவதால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன. இந்த மரங்கள் மின்வயர்களில் விழுந்ததால் மின்கம்பங்களும் சாய்ந்து உள்ளன. இதனால் நகரில் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோழிக்கோடு, கண்ணூர், தலச்சேரி பகுதிளில் தேசிய நெடுஞ்சாலைகளில் இன்று காலை மரங்கள் சாய்ந்தன. அங்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதன்பிறகு அங்கு போக்குவரத்து சீரானது.

    மழையின் தீவிரம் சற்று குறைந்தாலும் நேற்று மாநிலத்தின் பல பகுதிகளில் இடைவிடாது மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இன்று அதிகாலையிலும் கொச்சி, கோழிக்கோடு மற்றும் இடுக்கி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களிலும் நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

    தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு மாநிலத்தில் ஆயிரத்து 100 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்து உள்ளன. மழையின் காரணமாக மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள 227 நிவாரண முகாம்களில் சுமார் 10 ஆயிரத்து 399 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தயார் நிலையில் உள்ள பேரிடர் மேலாண்மை ஆணையத்தினர் மழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மூணாறு-போடிமெட்டு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு உடனடியாக மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், தொடர்ந்து பெய்த மழை மற்றும் இரவு நேரத்தை கருத்தில் கொண்டு பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த பணிகள் இன்று காலை மீண்டும் தொடங்கியது. தொடர்ந்து மாநிலம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • கோட்டயம் மாவட்டம் ஈரட்டுப்பேட்டையில் வாகமன் வீதியில் மண்சரிவு ஏற்பட்டது.
    • கோட்டயம் மாவட்டத்தில் மழையால் பாதிப்பு ஏற்பட்ட இடங்களை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. அந்த மாவட்டங்களுக்கு ஏற்கனவே மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

    பலத்த மழை காரணமாக திருச்சூர் மாவட்டம் வெள்ளணியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு சாலை முழுவதும் பாறாங்கற்கள் மற்றும் சேறு நிறைந்து காணப்பட்டது. மேலும் ஏராளமான பயிர்களும் மழைக்கு சேதமாகியிருக்கின்றன.

    கோட்டயம் மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை பெய்தது. அந்த மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள மலைப் பகுதிகளில் நேற்று பல மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    கோட்டயம் மாவட்டம் ஈரட்டுப்பேட்டையில் வாகமன் வீதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. ஈரட்டுப்பேட்டை-வாகமன் வழித்தடத்தில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளிக்குளம் பகுதியில் சிலரது வீட்டின் காம்பவுண்டு சுவர் மழைக்கு இடிந்து விழுந்தது. சத்தப்புழா பகுதியில் சில வீடுகளில் வெள்ளம் புகுந்தது. ஆனைப்பிலவு பகுதியில் வெள்ளத்தில் கார் ஒன்று சிக்கியது.

    வெள்ளயானியில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மக்கள் வசிக்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் பாறைகள் மற்றும் மண் குவியல் வீதியில் விழுந்ததால் அந்த வழியாக போக்குவரத்து தடைபட்டது.

    கோட்டயம் மாவட்டத்தில் மழையால் பாதிப்பு ஏற்பட்ட இடங்களை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் மலைப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கோட்டயம் மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடித்தது.
    • கடலில் ராட்சத அலைகள் எழும்பக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடித்தது. இதன் காரணமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கேரள பல்கலைக்கழகம் நடத்தவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் நாளை (5-ந்தேதி) வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடலில் ராட்சத அலைகள் எழும்பக்கூடும் என்பதால்கடலில் ராட்சத அலைகள் எழும்பக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து வந்தாலும், வழக்கத்தைவிட இந்த ஆண்டு பருவமழையின் அளவு குறைந்தே இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ×