என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா கனமழை"

    • பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • மழை காரணமாக பல மாவட்டங்களில் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்னதாக கடந்த மாதமே தொடங்கிவிட்டது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இடையில் ஒரு சில நாட்கள் மட்டும் மழை குறைந்தநிலையில், தற்போது மீண்டும் அங்கு பலத்த மழை பெய்ய தொடங்கியிருக்கிறது. கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, பத்தினம் திட்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை கொட்டுகிறது.

    பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு பொதுமக்களை மீட்டு வருகின்றனர். மழை காரணமாக பல மாவட்டங்களில் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

    மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை தொடர்ந்து வரும் நிலையில் கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் பாலக் காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், ஆலப்புழா, கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    காசர்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்கள், ஆலப்புழா மவட்டத்தில் குட்டநாடு மற்றும் அம்பலப்புழா தாலுகாக்களில் உள்ள தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

    கோழிக்கோடு மற்றும் கணணூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டது. பலத்த மழை காரணமாக கொல்லம் அருகே உள்ள போலயாதோடு பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், வயநாடு, கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட 6 மடங்கு மழை பொழிந்து உள்ளது.
    • கொச்சியில் கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் ஒருவர் பலியானார்.

    திருவனந்தபுரம்:

    ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் மே மாதம் இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்குபருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட 8 நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டது.

    இதையடுத்து மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், வயநாடு, கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட 6 மடங்கு மழை பொழிந்து உள்ளது.

    மழையுடன் சூறைக்காற்றும் வீசுவதால் மரங்கள் முறிந்து விழுந்து ஏராளமான வீடுகள் சேதம் அடைந்து உள்ளன.

    அதேபோல் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் ஆயிரக்கணக்கில் சேதம் அடைந்து உள்ளன. இதனால் கேரள மின்சார வாரியத்திற்கு ரூ.50 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.

    கேரளாவில் கடந்த 8 நாட்களில் சூறைக்காற்று மற்றும் மழைக்கு 32 பேர் பலியாகி உள்ளனர். நேற்று ஆலப்புழை மாவட்டம் ஹரிப்பாட்டில் குளத்தில் மூழ்கி வாலிபர் ஸ்டீவ் (வயது 24), கண்ணூரில் ஆற்றில் மூழ்கி நளினி (52), காயங்குளத்தில் குளத்தில் மூழ்கி பத்மகுமார் (57) ஆகியோர் இறந்தனர்.

    மேலும் கொச்சியில் கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் ஒருவர் பலியானார். இவ்வாறு நேற்று ஒரே நாளில் மழைக்கு 4 பேர் பலியாகி உள்ளனர்.

    இந்தநிலையில் கேரளாவில் இனி வரும் நாட்களில் மழை குறைய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

    கேரளாவில் பெய்து வரும் மழையின் பாதிப்பு தமிழ்நாடு, கர்நாடகத்திலும் எதிரொலிக்கிறது. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    • கேரள மாநில மின்சார வாரியத்தின் கீழ் உள்ள அணைகளின நீர்மட்டம் கடந்த 6 நாட்களில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • வருகிற 3-ந்தேதி வரை வெவ்வேறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்னதாக இந்த மாதமே தொடங்கிவிட்டது. இதை யடுத்து மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

    வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு, கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பருவமழை தொடங்கியதில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதன் காரணமாக பல இடங்களில் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்துவிட்டன.

    மாநிலம் முழுவதும் இயல்பை விட அதிக ளவு மழை பெய்து இருக்கிறது. வழக்கமாக எதிர்பார்க்கப்படும் மழையளவு 69.6 மில்லிமீட்டர் மழையாகும். ஆனால் கடந்த ஒரு வாரத்தில் 395.5மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்குவதற்காக 50-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு 1,900பேர் தங்கியிருக்கின்றனர்.

    கனமழை காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கேரள மாநில மின்சார வாரியத்தின் கீழ் உள்ள அணைகளின நீர்மட்டம் கடந்த 6 நாட்களில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. மாநிலத்தில் உள்ள 16 முக்கிய அணைகளின் மொத்த நீர் இருப்பு 40 சதவீதமாக இருக்கிறது. அனைத்து அணைகளின் நீர் இருப்பும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிறிய அளவிலான 12 அணைகளில் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் நாளை வரை தீவிரத்தன்மை கொண்ட மழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இன்றும் பல மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், வருகிற 3-ந்தேதி வரை வெவ்வேறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் நிலச்சரிவும், ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கேரள மாநிலத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது. முக்கியமாக தமிழகத்தில் இருந்தும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்றுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இருந்து ஒரு குழு கேரளா சென்றிருக்கும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்றுள்ளனர்.

    அவர்கள் மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களுடன் கொல்லம் மற்றும் இடுக்கி மாவட்டத்தில் முகாமிட்டு தயார் நிலையில் இருக்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமீப கால ஆண்டுகளில் மாநிலத்தில் பெய்ததை போன்று மிக வலுவான மழையாக இருக்கும் என்றும், ஜூன் மாதத்தில் இயல்பை விட அதிக மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொச்சி, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளிலும், பிரதான சாலைகளிலும் மழைநீர் தேங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்வதால் அங்கு கோடை வெப்பம் தணிந்து குளர்ச்சியான தட்பவெப்பநிலை நிலவி வருகிறது. மாநிலத்தில் கோடைமழை வெளுத்துவாங்கி வரும் நிலையில், வருகிற 31-ந் தேதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    கேரளாவில் ஒருசில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தினம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, திருச்சூர், கொல்லம் ஆகிய மாவட்டங்களில் நாளை(29-ந்தேதி) மற்றும் நாளை மறுதினம் ஆகிய 2 நாட்களும், இடுக்கியில் 31-ந்தேதியும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்நிலையில் வருகிற 31-ந்தேதி முதல் கேரள மாநிலத்தில் அதிகனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப கால ஆண்டுகளில் மாநிலத்தில் பெய்ததை போன்று மிக வலுவான மழையாக இருக்கும் என்றும், ஜூன் மாதத்தில் இயல்பை விட அதிக மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதன் காரணமாக அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

    • கனமழைக்கு மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கின.
    • மழைக்கு மாநிலம் முழுவதும் 8 பேர் பலியாகி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது. இது கனமழையாக மாறி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கொட்டித் தீர்த்து வருகிறது.

    நேற்று காலை ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக எர்ணாகுளத்தில் சுமார 1½ மணி நேரத்திற்கு விடாமல் மழை பெய்தது. இதன் காரணமாக நகர் முழுவதும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    வெள்ளமாகச் சென்ற வீடுகள், வயல்வெளிகளுக்குள்ளும் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. பயிர்கள் சேதம் அடைந்தன. இதற்கிடையில் கோட்டயம் மாவட்டத்தில் தாழநாடு மூன்நிலவு அருகே உள்ள சோவ்வூர் மற்றும் மேலுகாவு கிழக்க மட்டம் ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதில் மேலுகாவு தாலுகாவில் வீடுகள் சேதம் அடைந்தன. ஈரட்டுப்பேட்டை-வாகமன் சாலையில் கல்லம்பாக்கம் என்ற இடத்தில் ஏற்பட்ட மண் சரிவால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து பெய்த கனமழைக்கு மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கின.

    கொச்சி துறைமுகம் பகுதியில் கேரள அரசு பஸ் மீது மரம் விழுந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணி காயம் அடைந்தார். இதேபோல், திருவனந்தபுரம் காட்டன் ஹில் பள்ளியில் நின்ற ஒரு பஸ்சின் மீதும் மரம் விழந்தது. மழைக்கு மாநிலம் முழுவதும் 8 பேர் பலியாகி உள்ளனர்.

    திருவனந்தபுரம் முதலப்பொழி கடலில் அஞ்சுதெங்கு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஆபிரகாம் ராபர்ட் (வயது 60) மீன் பிடித்தபோது படகு கவிழ்ந்தது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதேபோல் கிள்ளியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட முக்கோலத்தை சேர்ந்த அசோகன் என்பவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தென்மேற்கு பருவமழையும் வெள்ளிக்கிழமை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    மழையின் தாக்கம் மாநிலத்தில் அதிகமாக இருப்பதால், சுற்றுலா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டயம் மீனச்சிலை ஆறு, திருவனந்தபுரம் கிள்ளியாறு போன்றவற்றில் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    எனவே கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும், கனமழையால் நிலச்சரிவு, மண்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    • கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
    • பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கேரளா மாநிலத்தில் வருகிற 22 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒருவர் மாயமாகி உள்ளார்.

    மழை பாதிப்பு காரணமாக 224 பேர் மீட்கப்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கனமழையால் 97 வீடுகள் சேதமுற்றும், ஒரு வீடு முழுமையாக இடிந்து விழுந்தது. இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    தொடர் கனமழை காரணமாக ஆலப்புழா, இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கண்ணூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

    • கேரளாவில் பெய்துவரும் கனமழையால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் 2 வாரங்களுக்கு லேசான மழை பெய்து வந்தது. அதன் பிறகு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

    மாநிலத்தின் மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரளாவில் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது.

    இதற்கிடையே, கேரளாவின் தென் மாவட்டங்களில் வரும் புதன்கிழமை வரை கனமழை பெய்யும். அதன்பின், வட மாவட்டங்களில் மழை தீவிரமடையும். 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 2 மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது வானிலை மையம்.

    மேலும், மாநில அரசு சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காணாமல் போய் உள்ளார். கனமழை காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    • கேரளாவில் புதன்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ வேகம் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    தென்-மத்திய வங்கக்கடலில் உருவாகி உள்ள சூறாவளி சுழற்சி காரணமாக நாட்டின் தென் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    குறிப்பாக கேரளாவில் புதன்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ வேகம் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பத்தனம்திட்டா, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

    ஆற்றங்கரைகள், கடலோரப் பகுதிகள், மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படக்கூடிய இடங்களில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

    சில நாட்களில் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை ஐய்யப்பன் கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்திலும் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளதால் அங்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வடகிழக்கு பருவமழை காரணமாக மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்தது.

    இந்த நிலையில் அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தம் உருவாகி உள்ளது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

    இதன்காரணமாக கேரளாவின் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் இன்று முதல் 25-ந்தேதி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபோல மலையோர மாவட்டங்களிலும் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    நாளையும், நாளை மறுநாளும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த மாவட்டங்களுக்கும் அரசு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சபரிமலை கோவில்


    சபரிமலை ஐய்யப்பன் கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்திலும் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளதால் அங்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

    மண்டல பூஜை தொடங்கிய முதல் நாளிலேயே பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். இப்போது மீண்டும் அங்கு பலத்த மழை பெய்யும் என்று கூறப்பட்டிருப்பதால் சபரிமலை செல்லும் பக்தர்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே ரெயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. அப்பகுதியில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து கொல்லம்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்- திருவனந்தபுரம், திருவனந்தபுரம்- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மேலும் சில ரெயில்கள் பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது போல் கேரளாவில் இருந்து ஆந்திராவுக்குச் செல்லும் சில ரெயில்களும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.


    கேரளாவில் கனமழை காரணமாக 26 ஆண்டுகளுக்கு பின் கடந்த மாதம் திறக்கப்பட்ட இடுக்கி அணையில் நீர் வரத்து குறைந்ததை அடுத்து நீர் திறக்கப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. #IdukkiDam
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மிகப்பெரிய சேதங்களை சந்தித்த கேரளாவில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. 

    2403 அடி உயரமான இடுக்கி அணைக்கு அதிகளவு நீர் வந்ததன் காரணமாக 26 ஆண்டுகளுக்கு பின் கடந்த மாதம் 9-ம் தேதி அணை திறக்கப்பட்டது.

    தற்போது, மழை இல்லாததால் நீர் வரத்தும் குறைந்தது. அணையில் 2391 அடி தண்ணீர் இப்போது உள்ளது. இதன் காரணமாக நீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. 
    முல்லைப்பெரியாறு அணைய சர்வதேச நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #MullaiPeriyarDam
    புதுடெல்லி:

    கடந்த மாதம் கேரளாவில் கனமழை பெய்ததை தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தேசிய பேரிடர் மேலாண்மை குழு அணையின் நீர் மட்டத்தை குறைப்பது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    மேலும், அணை பலவீனமாக இருப்பதாக மீண்டும் கூறியுள்ள கேரள அரசு, நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இவ்வழக்கில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தது. அதில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திடீரென அதிக அளவில் தண்ணீரை தமிழகம் திறந்துவிட்டதும் வெள்ள சேதம் ஏற்பட்டதற்கு ஒரு காரணம் என்று கூறியிருந்தது. இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்தது.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 139.99 அடியாக பராமரிக்கலாம் என துணைக்குழு பரிந்துரைத்ததன் அடிப்படையில் நீர் மட்டத்தை குறைக்க வேண்டும் எனவும், அணையின் நீர்மட்டத்தை மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையிலான துணைக்குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    இன்று மீண்டும் மனு விசாரிக்கப்பட்ட நிலையில், மனுவில் சர்வதேச நிபுணர் குழுவை கொண்டு அணையை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். அணையின் நீர்மட்டத்தை மீண்டும் 142 அடியாக உயர்த்துவது குறித்து தேசிய பேரிடர் அணைகள் பாதுகாப்பு துணைக்குழு முடிவெடுக்கும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
    சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை சாத்தியமற்றது என தேவசம் போர்டு தலைவர் கூறியுள்ளார். #Sabarimala
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக பம்பா உள்ளிட்ட பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சேதத்தைக் கணக்கில்  எடுத்துக்கொண்டு, நவம்பர் மாதம் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தைக்  கட்டுப்படுத்தவும், ஆன்லைன் பதிவு கட்டாயமாக்கவும் கேரள காவல்துறை மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது.

    நாளொன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்கள் மட்டும் சபரிமலை கோயிலுக்கு அனுமதிக்கக் கோரியும், காவல் துறையின் தகவல் தொழில்நுட்ப பிரிவு  அறிமுகப்படுத்தி இருக்கும் "விர்ச்சுவல் கியூ" மூலமாகப் பக்தர்களின் பதிவைக்  கணக்கிடவும்  காவல்துறை வலியுறுத்தியது.

    இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திருவாங்கூர் தேவஸ்தானத்தின் தலைவர் பத்மகுமார், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சபரிமலையில், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உண்டாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

    ஆன்லைன் தரிசன பதிவு முறை குறித்து பல்வேறு புகார்கள் வருவதால், அந்த முறை நீக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கமான முறையிலேயே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 

    திருப்பதியை போல சபரிமலையிலும் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மகரவிளக்கு சமயங்களில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் தரிசனத்துக்கு வருகின்றனர். இதனை, 40 ஆயிரமாக எப்படி குறைக்க முடியும் என பத்மகுமார் கூறினார். 

    வெள்ளத்தால் சேதமடைந்துள்ள பம்பை - திருவேணி பாலத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். 
    ×