என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water level"

    • வடகிழக்கு பருவமழையை பொறுத்தே ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து இருக்கும்.
    • தஞ்சை மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 641 ஏரிகளில் இதுவரை 19 ஏரிகள் 100 சதவீதம் நிறைந்துள்ளன.

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக கடந்த ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு உபரி நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக இருந்தது. இதனால் மேட்டூர் அணை 4 முறை நிரம்பியது.

    பொதுவாக மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆற்று பாசனத்தை ஏரிகளுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தான் நீர் வரத்து இருப்பது வழக்கம். குறிப்பாக வடகிழக்கு பருவமழையை பொறுத்தே ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து இருக்கும்.

    ஆனால் தஞ்சை மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழையும் சீராக பெய்து வருகிறது. கடந்த மாதம் 1-ந்தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை சராசரியாக 138.4 மி.மீ. என்கிற இயல்பான அளவை விஞ்சி 177.1 மி.மீ. மழை பெய்துள்ளது. அதாவது இயல்வை விட 28 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.

    இதனால் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாயில் கடந்த மாதத்தில் முழுக் கொள்ளளவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆற்று பாசனத்தை சேர்ந்த ஏரிகளுக்கு தண்ணீர் வந்தது.

    தஞ்சை மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 641 ஏரிகளில் இதுவரை 19 ஏரிகள் 100 சதவீதம் நிறைந்துள்ளன. மேலும் 132 ஏரிகளில் 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரையும், 133 ஏரிகளில் 51 முதல் 75 சதவீதம் வரையும், 211 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதம் வரையும், 122 ஏரிகளில் 25 சதவீதத்துக்குள்ளும் தண்ணீர் உள்ளது. இருந்தாலும் 24 ஏரிகள் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு கிடக்கிறது.

    இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆற்று பாசனம் சார்ந்த 737 ஏரிகளில் சுமார் 56 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. தற்போது சாகுபடிக்கு தண்ணீர் பயன்படுத்தப்படுவதால் ஏரிகளில் நீர்மட்டம் குறைகிறது. சில ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. இருந்தாலும் அடுத்து பெய்யும் மழை மற்றும் காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும் போது ஏரிகளில் நீர்மட்டம் உயரவும், வறண்டு கிடக்கும் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவும் வாய்ப்புள்ளது என்றனர்.

    இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, இந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் வந்துள்ளதால் சாகுபடி பணிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. ஏரிகளில் தண்ணீர் இருப்பதால் சுற்றியுள்ள ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆழமாக இருந்த நிலையில் தற்போது உயர்ந்து 20 அடி ஆழத்துக்கு வந்து விட்டது. இதனால் இந்த ஆண்டு ஏரியை சார்ந்த வயல்களிலும் சாகுபடி பணிகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளன. என்றாலும் காவிரி நீர்வரத்தும், மழையும் சீராக இருந்தால் தான் ஏரிகளில் நீர்மட்டம் குறையாமல், சாகுபடிக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்றனர்.

    • பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதார பயன்பாட்டிற்கு பெரிதும் பயன்படுகிறது.
    • விவசாயிகளின் நலனுக்காக வீராணம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம்ம ன்னார்கோவில் லால்பேட்டை அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு விவசாயிகளுக்கும் மற்றும் சென்னை மக்களுக்கு குடிநீர் காட்டிய பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதார பயன்பாட்டிற்கு பெரிதும் பயன்படுகிறது. தற்போது வடகிழக்கு பருவ மழையை முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையாக காட்டுமன்னார்கோவில் மற்றும் ஏரி அமைந்துள்ள இடத்தை சுற்றியுள்ள பொது மக்களின் நலனுக்காக வீராணம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.

    வீராணம் ஏரி 47.50 இதன் மொத்த கொள்ளளவு ஆகும். தற்போது தினமும் வீராணம் எரியிலிருந்து சென்னை மக்களின் குடிநீருக்காக 64 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் வீராணம் ஏரியிலிருந்து வடவாறு வழியாக 1897 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இது மட்டுமல்லாமல் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் பயன்பா ட்டின் தேவைக்காக சேத்தியா தோப்பு வி. என். எஸ். மதகு வழியாக 431 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தற்போது வீராணம் ஏரி 45.70 கொள்ளளவாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக வீராணம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    • மயிலம் வானுார், விக்கிரவாண்டி, புதுச்சேரி உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களின் தேவையான குடிநீர் ஆதாரமாக உள்ளது.
    • வீடூர் அணையின் மொத்த அளவு 32 அடியாகும் தற்போது நீர் 28.925 அடி உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்தில் வீடூர் அணை கட்டு அமைந்துள்ளது. இதனால் மயிலம் வானுார், விக்கிரவாண்டி, புதுச்சேரி உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களின் தேவையான குடிநீர் ஆதாரமாக உள்ளது. 1959-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரால் வீடூர் அணை திறந்து வைக்கப்பட்டது. வீடூர் அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் தமிழ்நாடு, புதுச்சேரியில் 3200 ஏக்கர் நிலம் பாசனவசதியை பெறுகிறது.

    புதுச்சேரி, வானுார், மயிலம் பகுதியிலுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பயன் பெறுகின்றனர். வீடூர் அணையின் மொத்த அளவு 32 அடியாகும் தற்போது நீர் 28.925 அடி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் மயிலம், விக்கிர வாண்டி ஒன்றியத்திலுள்ள சித்தணி, கணபதிபட்டு, ரெட்டிகுப்பம், எம்.குச்சிபாளையம் கயத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு இந்த ஆற்றுப்படுகையில் இருந்து தண்ணீர் எடுத்து செல்கி்ன்றனர். விவசாயிகள் சம்பா பட்டத்திற்கு நாற்றங்கால் தயரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.

    • அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது
    • பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது

    ஈரோடு,

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் பவானி ஆற்றங்கரை யோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததாலும் அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 968 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2 ஆயிரம் கன அடி, பவானி ஆற்றுக்கு 100 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி என மொத்தம் 2900 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    • நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை தொடர்ந்து உயர்ந்து வந்தது
    • பவானிசாகர் அணையிலிருந்து 2,600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

    ஈரோடு,

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.14 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 882 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,700 கன அடியும், தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 100 கன அடியும் என மொத்தம் பவானிசாகர் அணையிலிருந்து 2,600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.41 அடியாக உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 812 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    மேலும் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தும் வெகுவாக குறைந்து விட்டது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.41 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 812 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு இதுவரை 1,700 கன அடி தண்ணீர் திறந்து விட்ட நிலையில் இன்று முதல் 200 கன அடி வீதம் தண்ணீர் குறைந்து 1,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 900 கன அடி, பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையிலிருந்து 2,500 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    • பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணை யின் நீர்மட்டம் 136.60 அடியாக சரிந்துள்ளது.
    • 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் நீர்ம ட்டம் வேகமாக சரிந்து 50.69 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமை ந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இங்கு இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கு கிறது.

    152 அடி உயரம் கொண்ட அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறு த்தியது. அதன்படி கடந்த பருவமழையின்போதும் 142 அடி வரை தண்ணீர் தேக்க ப்பட்டது. அதன்பின்னர் பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணை யின் நீர்மட்டம் 136.60 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு 239 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 1867 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் நீர்ம ட்டம் வேகமாக சரிந்து 50.69 அடியாக உள்ளது. நேற்று பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இன்று காலை முதல் மீண்டும் பாசனத்திற்கு 900 கனஅடிநீர் மற்றும் குடி நீருக்கு 69 கனஅடிநீர் என மொத்தம் 969 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 52.80 அடியாக உள்ளது. 31 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 118.08 அடியாக உள்ளது. 12 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது
    • பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.42 அடியாக உள்ளது

    ஈரோடு,

    ஈரோடு, மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாகவே அனைத்து வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அணையில் இருந்து இரண்டாம் போக புஞ்சை பாசனத்திற்காக கீழ்ப்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.42 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 892 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்காலுக்கு 1800 கன அடியும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 1100 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடியும் என மொத்தம் 3050 கன அடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வருகிறது.

    • கோடைகாலம் தொடங்கியதில் இருந்து மழைப்பொழிவு இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது.
    • தேனி மாவட்டத்தில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து கடுமையாக சரிந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    கூடலூர்:

    கோடைகாலம் தொடங்கியதில் இருந்து மழைப்பொழிவு இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து கடுமையாக சரிந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து கடுமையாக சரிந்தது. இன்று காலை 11 கன அடி நீர் மட்டுமே வருகிறது. அணையின் நீர்மட்டம் 117.70 அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 53.67 அடியாக உள்ளது. 105 கன அடி நீர் வருகிறது. 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.90 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 55 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 19.68 அடியாக உள்ளது. 42 கன அடி நீர் வருகிறது. 23 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 116.90 அடியாக உள்ளது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 53.94 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.90 அடியாக உள்ளது. 50கன அடிநீர் வருகிறது. 256 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 53.94 அடியாக உள்ளது.

    163 கன அடிநீர் வருகிறது. 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.05 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 41.65 அடியாக உள்ளது.

    10 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை 9.8, போடி 1.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • மணல் குவாரி அமைக்கப்பட்டு மணல் அள்ளப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும்.
    • கிராம சபை கூட்டத்தில் மணல் குவாரி அமைக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே பவனமங்கலம் கிராமத்தில் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க உத்தேசிக்க பட்டு இருந்தது.

    இதற்கு எதிராக விவசாயிகள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் பவனமங்கலம் கிராமத்தில் காவிரி ஆற்றில் மணல் குவாரி அனுமதிக்கப்படவில்லை.

    தற்போது இதுகுறித்து மணல் குவாரியில் ஆய்வு நடத்தி ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரடியாக பவனமங்கலம் கிராமத்தில் காவிரி ஆற்றில் உத்தேசிபட்டிருக்கும் மணல் குவாரி அமைவிடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது நீர்வள ஆதாரத்துறை, கனிமவளத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    பவனமங்கலம் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைவிடம் உள்ள இடத்தை காவிரி ஆற்றில் இறங்கி நடந்து சென்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார்.

    அப்போது பவனமங்கலம் கிராம மக்கள் சார்பில் வழக்கறிஞர் ஜீவகுமார், பாலகணேசன், பொன்னு ராமன் ஆகியோர் கலெக்டரிடம் பவனமங்கலம் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க கூடாது என்று மனு ஒன்றை அளித்தனர்.

    இந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பவனமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு பாசன வசதி அளிக்கும் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டு இங்குள்ள மணல் அள்ளப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, ஊரின் குடிநீர்.

    மற்றும் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். கடந்த 2018 ஆம் ஆண்டு மணல் குவாரி அமைக்க முயற்சி செய்தபோது பவனமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மணல் குவாரி அமைக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    எனவே எங்கள் கிராம மக்களின் நலனுக்காகவும் கிராம சபைமுடிவுகளுக்கும் எதிராக பவனமங்கலம் கிராமத்தில் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைப்பதை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    விவசாயிகளிடமிருந்து மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரி வித்தார்.

    கடந்த 2018ம் ஆண்டு பவனமங்கலம் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைப்பு குறித்த அறிவிப்பு பலகையும், மணல் குவாரிக்காக அடையாளம் இடப்பட்டு நடப்பட்ட சிமெண்ட் கம்பங்களும் காவிரி ஆற்றில் அப்படியே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.
    • பாப்பநாயக்கன்பட்டி, பீமன்பாளையம், ஏழுபுளி, தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில், 3,600 ஏக்கர் நிலம் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகிறது.

    வாழப்பாடி:

    கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.

    இந்த அணையால், பாப்பநாயக்கன்பட்டி, பீமன்பாளையம், ஏழுபுளி, தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில், 3,600 ஏக்கர் நிலம் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகிறது.

    கரியக்கோயில் ஆற்றில் பனைமடல், ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கொட்டவாடி கிராமங்களிலுள்ள தடுப்பணைகள் மற்றும் கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர். அபிநவம், புத்திரகவுண்டன்பாளையம் ஏரிகளில் இருந்து ஏறக்குறைய 3000 ஏக்கர் பழைய ஆயக்கட்டு பாசனம் பெறுகின்றன.

    கடந்தாண்டு இறுாதியில் பெய்த பருவமழையால் அணையில், 49.98 அடி உயரத்தில் 171 மில்லியன கன அடி தண்ணீர் தேங்கியது. நிலத்தடி நீர்மட்டம் உயரவும், குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென, அணைப்பாசன புதிய ஆயக்கட்டு மற்றும் ஆறு மற்றும் ஏரிப் பாசன பழைய ஆயக்கட்டு விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து, கரியக்கோயில் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு அணை வாய்க்கால் பாசனத்திற்காக தொடர்ந்து மார்ச் மாதத்தில் 24 நாட்களுக்கு தலைமை மதகுகள் வழியாக வினாடிக்கு 40 கனஅடி வீதம் கரியக்கோயில் ஆற்றிலும், புதிய ஆயக்கட்டான அணை வாய்க்கால் பாசனத்திற்காக அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் வினாடிக்கு 15 கனஅடி வீதம் 21 நாட்களுக்கு சுழற்சி முறையிலும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் அணையின் நீர்மட்டம் செவ்வாயக்கிழமை நிலவரப்படி 27.52 அடியாக சரிந்து போனது. தற்போது அணையில் 190 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே எஞ்சியுள்ளது. கோடை தொடங்கிய நிலையிலேயே அணையின் நீர்மட்டம் சரிந்து போனதால், எதிர்வரும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் கடும் வறட்சி நிலவும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வறட்சியை சமாளிக்க கோடை மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    ×