search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீராணம் ஏரி"

    • வீராணம் ஏரி சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
    • ஏரி நீர் நிறம் மாறியது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பசுமை தீர்ப்பாயம் விளக்கம் கேட்டுள்ளது.

    சேத்தியாத்தோப்பு:

    கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி வீனஸ் மதகில் தொடங்கும் வீராணம் ஏரி, லால்பேட்டை வரை 14 கி.மீ. தூரமும் 5 கி.மீ., பரப்பளவில் 32 பாசன மதகுகளை கொண்டுள்ளது. 1,468 மில்லியன் கனஅடி. (47.50 அடி) கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் தற்போது 1,300 மில்லியன் கனஅடி (46 அடி) தண்ணீர் உள்ளது.

    இந்த ஏரிமூலம் 50 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. தற்போதுவரை சென்னைக்கு 73 கன அடி நீர் அனுப்பப்படுகிறது. கடந்த 17-ந் தேதி மேட்டூரில் இருந்து 2,000 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 26-ந் தேதி கீழணைக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்து சேருகிறது.

    இந்நிலையில் தற்போது ஏரிக்கு வரும் தண்ணீர் பச்சை நிறமாக காணப்படுகிறது. இதனை கண்டு விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து நீர்வளத்துறை அதிகாரிகள் ஏரி நீரை மாதிரி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் ஏரி நீர் நிறம் மாறியது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பசுமை தீர்ப்பாயம் விளக்கம் கேட்டுள்ளது.

    ஏரி நீர் நிறம் மாறியிருப்பதால், விவசாயிகள் கால்நடைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவும், பொதுமக்கள், குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தவும் அச்சப்படுகின்றனர். எனவே, ஏரியின் நீர் பச்சை நிறமாக மாறியதற்கான காரணத்தை ஆராய்ந்து பொதுமக்கள், விவசாயிகளின் அச்சத்தை போக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். 

    • கோடை வெயில் மற்றும் விவசாய பயன்பாடு காரணமாக வீராணம் ஏரி கடந்த சில மாதங்களாக தண்ணீரின்றி வறண்டது.
    • வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி கடலூர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

    இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் தஞ்சை மாவட்டம் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழை நீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் தண்ணீர் வரும்.

    இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 கன அடி ஆகும். ஏரியின் மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    மேலும் வீராண ஏரியின் நீர்மட்டத்திற்கு ஏற்ப இங்கிருந்து சென்னைக்கு குழாய் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    கோடை வெயில் மற்றும் விவசாய பயன்பாடு காரணமாக வீராணம் ஏரி கடந்த சில மாதங்களாக தண்ணீரின்றி வறண்டது.

    இந்த நிலையில் கீழணையில் இருந்து கடந்த 25-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது.

    இன்று காலை வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக உயர்ந்து தனது முழு கொள்ளளவை எட்டியது. அதாவது வீராணம் ஏரியின் மொத்தமாக 1465 கன அடி நீர் தேக்கி வைக்கமுடியும். இதில் 1343.50 கன அடி நீர் தற்போது உள்ளது.

    மேலும், வீராணம் ஏரி நிரம்பியதால் கீழணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது இன்று காலை முதல் நிறுத்தப்பட்டது. மேலும், நேற்று இரவு காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 14 மி.மீ. மழை பதிவாகியது.

    இதனால் ஏரிக்கு வினாடிக்கு 25 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தற்போது காட்டுமன்னார்கோவில் பகுதியில் அறுவடை நடைபெறுவதால் பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை.

    கடந்த ஆண்டு வீராணம் ஏரி 7 முறை நிரம்பிய நிலையில், இந்த ஆண்டு முதல் முறையாக நிரம்பியுள்ளது.

    • கோடை வெயில் மற்றும் விவசாய பயன்பாடு காரணமாக வீராணம் ஏரி தண்ணீரின்றி வறண்டது.
    • வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 62 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி கடலூர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

    இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் தஞ்சை மாவட்டம் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழை நீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் தண்ணீர் வரும்.

    இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 கன அடி ஆகும். ஏரியின் மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    மேலும் வீராண ஏரியின் நீர்மட்டத்திற்கு ஏற்ப இங்கிருந்து சென்னைக்கு குழாய் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோடை வெயில் மற்றும் விவசாய பயன்பாடு காரணமாக வீராணம் ஏரி தண்ணீரின்றி வறண்டது.

    இந்த நிலையில் கீழணையில் இருந்து கடந்த 25-ந்தேதி முதல் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது.

    இன்று காலை வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்தது. ஏரிக்கு வினாடிக்கு 110 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 62 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் 4 நாளில் ஏரி முழு கொள்ளளவை எட்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கடந்தாண்டு போதிய அளவு பருவமழை பெய்யாததால், இந்தாண்டு கோடை தொடங்கும் முன்பே, பிப்ரவரி மாதத்தில் வீராணம் வறண்டது.
    • சென்னைக்கு குடிநீர் அனுப்பவது முன்கூட்டியே நிறுத்தப்பட்டது.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுவதோடு, சென்னை மக்களின் தாகத்தை தீர்த்து வருகிறது.

    கடந்தாண்டு போதிய அளவு பருவமழை பெய்யாததால், இந்தாண்டு கோடை தொடங்கும் முன்பே, பிப்ரவரி மாதத்தில் வீராணம் வறண்டது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்பவது முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, மேட்டூரில், குறைந்த அளவு நீர் இருப்பு இருந்த நிலையிலும், கல்லணைக்கு தண்ணீர் பெறப்பட்டது. அங்கிருந்து கொள்ளிடம், கீழணை, வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 26-ந்தேதி தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அதையடுத்து, கடந்த 29-ந்தேதி காலை முதல் வினாடிக்கு 18 கன அடி குடிநீர் சென்னைக்கு அனுப்பும் பணி தொடங்கியது.

    இந்நிலையில் தொடர்மழை காரணமாக வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. தற்போது ஏரியின் கொள்ளளவான மொத்த 1,465 மில்லியன் கன அடியில், 640 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதையடுத்து, சென்னைக்கு அனுப்பும் குடிநீர் அளவும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 54 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    • இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வீராணம் ஏரி வறண்டு போனது.
    • வீராணம் ஏரியில் உள்ள நீர்வாங்கி நெடுமடத்தில் இருந்து நீர் உறிஞ்சப்பட்டு நெய்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக வீராணம் ஏரி விளங்கி வருகிறது. லால்பேட்டையில் அமைந்துள்ள இந்த ஏரி 14 கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து 5 கிலோ மீட்டர் அகலம் உடையது. வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்ட அளவு 47.50 அடி. அதாவது 1461 மில்லியன் கன அடி தண்ணீரை சேமிக்க முடியும். இந்த ஏரி தனது முழுக்கொள்ளவை எட்டினால், இந்த ஏரி கடல் போல் ரம்மியமாக காட்சியளிக்கும்.

    உலகிலேயே மனிதர்களால் வெட்டப்பட்ட மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரிக்கு, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணை, கீழணை வந்து வடவாறு வழியாக நீர் வருகிறது. இதுதவிர இந்த ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரியலூர், பெரம்பலூர், செந்துறை, ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீரும் கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக வருகிறது.

    வீராணம் ஏரியின் மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 40 ஆயிரத்து 526 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. கோடைகாலத்தில் பெரும்பாலும் இந்த ஏரியில் தண்ணீர் இருக்காது. ஆனால் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக, சென்ற ஆண்டுவரை இந்த ஏரியில் கோடை காலத்திலும் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டது.

    இவ்வாறு சேமிக்கப்படும் ஏரி நீர், ராட்சத பம்புகள் மூலம் நெய்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டு சேமிக்கப்படுகிறது. அங்கு ஏரி நீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர மருவாய், பின்னலூர், வடலூர், சேராக்குப்பம், கரைமேடு போன்ற இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதன் மூலமும் சென்னைக்கு குடிநீர் கொண்டு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வீராணம் ஏரி வறண்டு போனது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கல்லணையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக விநாடிக்கு 1,200 கன அடி திறந்து விடப்பட்டது. இந்த நீர் கீழணைக்கு வந்தடைந்தது. தொடர்ந்து கீழணையில் இருந்து விநாடிக்கு 200 கன அடிநீர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது.

    மேலும், இந்த நீர் ஓரிரு நாட்களில் வீராணம் ஏரிக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், ஒரு வார காலம் கழித்து வந்தடைந்தது. அதன்படி வீராணம் ஏரிக்கு 100 கன அடிநீர் வருகிறது. அவ்வாறு வந்த நீரும் பச்சை நிறத்தில் இருந்தது.

    இந்த நீரானது வீராணம் ஏரியில் உள்ள நீர்வாங்கி நெடுமடத்தில் இருந்து நீர் உறிஞ்சப்பட்டு நெய்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதே போல ஏரியில் அமைக்கப்பட்ட ராட்சத ஆழ்துளை போர்வெல்லில் இருந்தும் நீரை உறிஞ்சி நெய்வேலிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுத்திகரிக்கப்பட்ட நீரானது சென்னைக்கு அனுப்பும் பணி நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. அதன்படி முதல் நாள் விநாடிக்கு 10 கன அடிநீர் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அது படிப்படியாக உயர்த்தப்பட்டு விநாடிக்கு 30 கன அடி நீர் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று விநாடிக்கு 33 கன அடிநீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    விவசாய நிலங்களில் இருந்து வடியும் மழைநீரில், அங்கு பயன்படுத்தப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகளின் படிமங்கள் கலந்து, வீராணம் ஏரி நீரில் கலந்துள்ளதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு அனுப்பும் நீர் பச்சை நிறத்தில் உள்ளது என்ற செய்தி தற்போது பரவி வருகிறது.

    இதுகுறித்து வீராணம் ஏரியில் பணியில் உள்ள சென்னை மெட்ரோ குடிநீர் அதிகாரி கூறுகையில், வீராணம் ஏரி நீர் குடிப்பதற்கு உகந்ததா என்று தினமும் 3-க்கும் மேற்பட்ட முறை சோதனை செய்யப்பட்டு, ரசாயனம் ஏதும் கலக்கப்படவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆகவே இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூறினார்.

    • கடந்த 17-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
    • பூதங்குடி பகுதியில் இருந்து மெட்ரோ அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்து தான் சென்னைக்கு அனுப்பி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்குகிறது வீராணம் ஏரி. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. வெயில் தாக்கம் காரணமாக ஏரி வறண்டதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைப்பதற்காக மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த 17-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த நீர் கல்லணை, கீழணை வழியாக வடவாறு மூலம் வீராணம் ஏரியை வந்தடைந்தது. இதன் மூலம் வறண்டு கிடந்த ஏரியில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இதையடுத்து சென்னைக்கு மீண்டும் குடிநீர் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. அதன்படி கடந்த 29-ந்தேதி முதல் சென்னைக்கு வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் இடமான பூதங்குடி மற்றும் வெய்யலூர் பகுதியில் தண்ணீர் பச்சை நிறத்தில் காட்சி அளித்து வருகிறது. இவை அகலம் குறைந்த பகுதிகள். மற்ற இடங்களில் தண்ணீர் வழக்கம் போல் உள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். கால்நடைகள், பறவைகள் தண்ணீர் குடிப்பதால் ஏதேனும் ஆபத்து நேரிடுமோ என்று பீதி அடைந்தனர்.

    இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பூதங்குடி பகுதியில் இருந்து மெட்ரோ அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்து தான் சென்னைக்கு அனுப்பி வருகின்றனர்.

    தற்போது தண்ணீர் பச்சை நிறத்தில் இருப்பதாக தகவல் பரவியது. இதற்கு காரணம் தண்ணீரில் படர்ந்துள்ள பாசி தான். தண்ணீரில் உள்ள செடி, கொடிகள் எல்லாம் சேர்ந்து தெரியும் போது, அவை பச்சை நிறத்தில் தெரிகிறது. மற்றபடி எவ்வித ரசாயனமும் கலக்கவில்லை. தண்ணீரை மெட்ரோ அதிகாரிகள் மாதிரி எடுத்து ஆய்வு செய்து விட்டார்கள். தண்ணீரில் எதுவும் கலக்கவில்லை. ஆகவே பொதுமக்கள் இதுபற்றி அச்சப்பட தேவையில்லை என்றார்.

    • கல்லணை கீழணை வந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு செல்லும்.
    • மதகுகள் புனரமைக்கும் பணி நிறைவடைய இன்னும் 10 நாட்கள் ஆகும்.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட விவசாயத்துக்கும், பொதுமக்களின் குடிநீருக்கும் முக்கிய நீர் ஆதாரமாக காவிரி ஆறு விளங்கி வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காவிரி ஆற்றின் வழியாக திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வருகிறது. இங்கு வரும் தண்ணீர் உடனுக்குடன் காவிரி அல்லது கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும்.

    அந்த வகையில் கொள்ளிடம் ஆற்றின் வழியாக சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக மேட்டூர் அணையிலிருந்து சமீபத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முக்கொம்பு மேலணைக்கு இன்று காலை 6 மணி நிலவரபடி காவிரியில் வினாடிக்கு 1600 கன அடி நீர் வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டு, கல்லணை கீழணை வந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு செல்லும்.

    முக்கொம்பு காவிரி மேலணை பகுதியில் உள்ள ஷட்டர்கள் புனரமைக்கும் பணிகள் நடப்பதால் வேறு வழி இல்லாமல் காவிரியில் வரும் முழுமையான நீரும் காவிரி ஆற்றிலேயே செல்கிறது. முன்பு 500 கன அடி நீர் வந்தபோது பொதுப்பணித்துறை அதிகாரிகள் 2 மதகுகளை அடைத்து தண்ணீரை கொள்ளிடம் ஆற்றில் இலகுவாக திருப்பி விட்டனர்.

    இப்போது 1600 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் பரந்து விரிந்து அனைத்து மதகுகளையும் தொட்டபடி வருகிறது. இந்த மதகுகள் புனரமைக்கும் பணி நிறைவடைய இன்னும் 10 நாட்கள் ஆகும். அதுவரை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திருப்பி விடுவது தடைபடும் என்ற காரணத்தினால் தற்போது காவிரி ஆற்றில் 2 ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் மணல் கரை அமைக்கும் பணிகள் கடந்த 2 நாட்களாக இரவு பகலாக நடந்து வருகிறது.

    இது தொடர்பாக முக்கொம்பு மேலணை அதிகாரி ஒருவர் கூறும்போது, மணல் ஈரமாக இருக்கும் காரணத்தினால் மணல் கரை அமைக்கும் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் இந்த கரை முழுமையாக அமைக்கப்பட்டு காவிரியில் வரும் தண்ணீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டு கல்லணை வழியாக வீராணம் ஏரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • சென்னையின் குடிநீர் தேவையில் 3-ல் ஒரு பங்கை வீராணம் ஏரி பூர்த்தி செய்து வந்தது.
    • 6 மாத காலத்திற்கு தேவையான குடிநீர் கைவசம் இருப்பதால் சென்னைக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.

    சென்னை:

    சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மட்டுமின்றி வீராணம் ஏரியில் இருந்தும் ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தென்சென்னை பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இதில் வீராணம் ஏரி இப்போது வறண்டு விட்ட நிலையில் நெம்மேலியில் இருந்து வீராணம் குழாய் வழியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதுவும் தற்போது குறைந்துவிட்டது. இதனால் தென்சென்னை பகுதி மக்களுக்கு இப்போது நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தினமும் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையின் குடிநீர் தேவையில் 3-ல் ஒரு பங்கை வீராணம் ஏரி பூர்த்தி செய்து வந்தது. வீராணம் ஏரியில் இருந்து கிட்டத்தட்ட 90 மில்லியன் லிட்டர் தண்ணீரும் அங்குள்ள ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 90 மில்லியன் லிட்டர் என்.எல்.சி. தண்ணீரும் சென்னைக்கு வந்தது.

    ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வீராணம் ஏரி வறண்டதால் நெம்மேலியில் உள்ள கடல் குடிநீர் மூலம் தினமும் 200 எம்.எல்.டி.க்கு மேல் குடிநீர் கிடைத்து வருகிறது. இதன் மூலம் தென் சென்னை பகுதி மக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

    இது மட்டுமின்றி திரிசூலம் கல்குவாரி மாங்காடு சிக்கராயபுரம், எருமையூர் கல்குவாரிகளில் இருந்தும் குடிநீர் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    6 மாத காலத்திற்கு தேவையான குடிநீர் கைவசம் இருப்பதால் சென்னைக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கீழணைக்கு வந்து, அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும்.
    • தினமும் காலை மற்றும் மாலையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை காணமுடிகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரி வீராணம் ஏரி. இந்த ஏரியின் பிரதான கிழக்கு கரையின் நீளம் 16 கிலோ மீட்டர் ஆகும். இந்த ஏரியின் பரப்பளவு 15 சதுர மைல்களாகும். மொத்த நீர்மட்டம் 47.50 அடியாக இருந்தாலும் தரை மட்டம் 31.90 அடியில் இருந்தே நீரை சேமித்து வைக்க முடியும். அதாவது 15.60 அடி மட்டுமே தண்ணீரை தேக்க முடியும். இதன் மூலம் 1.465 டி.எம்.சி. நீரை தேக்கலாம்.

    கிழக்கு கரையில் 28 மதகுகள் மூலமாகவும், மேற்கு கரையில் 6 மதகுகள் மூலமாகவும் 49 ஆயிரத்து 440 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கீழணைக்கு வந்து, அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும்.

    இங்கிருந்து கடந்த 2004-ம் ஆண்டு முதல் சென்னை பெருநகர குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 78 கன அடி வீதம் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது வீராணம் ஏரி தண்ணீரின்றி வறண்டதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. இதை நல்வாய்ப்பாக பயன்படுத்தி 48 லட்சம் கன மீட்டர் அளவுக்கு தூர்வாரினால் கூடுதலாக 509 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.

    எதிர்வரும் மழைக்கு முன்பாக வீராணம் ஏரியை தூர்வாரி, கரையை பலப்படுத்த வேண்டும் எனவும், ஏரியில் படிந்துள்ள வண்டல் மண்ணை அள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதே சமயம் வீராணம் ஏரி வறண்டு காணப்படுவதால் சிறுவர்கள் அதை விளையாட்டு மைதானமாக மாற்றி விட்டனர்.

    அங்கு தினமும் காலை மற்றும் மாலையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை காணமுடிகிறது. இது கடும் வறட்சியால் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரியின் பரிதாப நிலையை காட்டுகிறது.

    • கடல்போல் காட்சி அளித்த வீராணம் ஏரி, தற்போது வறண்டு காட்சி அளிக்கிறது.
    • வாலாஜா ஏரியின் முழு கொள்ளளவு 5.5 அடியாகும்.

    சென்னை:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். 16 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த ஏரியின் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய தாலுகாகளில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.

    மேலும் சென்னை மக்களின் தாகத்தை தீர்ப்பதிலும் வீராணம் ஏரிக்கு முக்கிய பங்கு உள்ளது. அதாவது வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படும்.

    ஆனால் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததாலும், காவிரியில் இருந்து தண்ணீர் வராததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் மளமளவென குறைந்தது. இதனால் கடந்த மாதம் பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    கடல்போல் காட்சி அளித்த வீராணம் ஏரி, தற்போது வறண்டு காட்சி அளிக்கிறது. இதனால் கடந்த 2 வாரத்துக்கு முன்பு சென்னைக்கு குடிநீர் அனுப்புவதும் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது கோடைகாலம் தொடங்கி இருப்பதால் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியாத காலங்களில் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவன சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை அனுப்புவது வழக்கம். அதன்படி என்.எல்.சி. சுரங்க நீரை வடலூா் அருகே உள்ள வாலாஜா ஏரியில் தேக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    வாலாஜா ஏரியின் முழு கொள்ளளவு 5.5 அடியாகும். தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் 50 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியில் இருந்து பரவனாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு தனி கால்வாய் வெட்டி அதில் இருந்து ராட்சத மோட்டார் மூலம் வீராணம் குழாய் வழியாக வினாடிக்கு 15 கன அடி தண்ணீர் சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். வீராணம் ஏரி கைவிட்டபோதிலும் சென்னை மக்களின் தாகத்தை என்.எல்.சி. சுரங்க நீர் தீர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வந்ததால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.
    • சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. 47.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்டத்தில் சுமார் 44 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    மேலும் நீர்மட்டத்திற்கு ஏற்ப ஏரியில் இருந்து சென்னை மக்களின் தேவைக்காக குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இருப்பினும் வீராணம் ஏரியில் 39 அடிக்கு கீழ் நீர்மட்டம் குறைந்தால், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கமுடியாது. அதேபோல் சென்னைக்கும் குடிநீர் அனுப்பமுடியாது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் கீழணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் வறண்டு கிடந்த வீராணம் ஏரி நிரம்பியது. இதையடுத்து கடந்த மாதம் பாசனத்துக்காக ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    மேலும் சென்னைக்கும் குடிநீர் அனுப்பப்பட்டு வந்ததால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதேபோல் சென்னைக்கு அனுப்பும் குடிநீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று வீராணம் ஏரியின் நீர்மட்டம் 38.50 அடியாக குறைந்ததால், சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி முற்றுலும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

    நீர் மட்டம் குறைந்ததால் வீராணம் ஏரி தற்போது விளையாட்டு மைதானம் போல் காட்சி அளிக்கிறது. ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் மட்டும் தண்ணீர் தேங்கி தற்போது வீராணம் ஏரி குட்டைபோன்று காட்சி அளிக்கிறது.

    • வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடியாகும்.
    • தற்போது நீர்மட்டம் 2 மில்லியன் கனஅடியாக குறைந்துள்ளதாக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை மக்கள் குடிநீருக்காக புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. கூடுதல் குடிநீர் கிடைக்க வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வீராணம் ஏரி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.

    வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடியாகும். மேட்டுர் அணை திறக்கப்பட்டு, அதன்மூலம் வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வந்தடைந்தபோது ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது. சுமார் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்களுக்கு வீராணம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது.

    மேலும் சென்னைக்கு தினந்தோறும் 76 கனஅடி நீர் குடிநீருக்காக அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் தற்போது ஏரியின் கொள்ளளவு 2 மில்லியன் கனஅடி நீராக குறைந்துள்ளது. நேற்று சென்னைக்கு அனுப்பப்பட்ட நீர் 3 அடியாக குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில்தான் இன்று முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. விவசாயி நிலங்களுக்கு திறந்து விடப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது.

    வடலூர் வாலாஜா ஏரியில் இருந்து நீர் எடுக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாலாஜா ஏரியின் நீர் ஆதாரம் என்எல்சி சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×