என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmer"

    • யானைகள் உணவு தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் கூட்டமாக சுற்றி வருகின்றன.
    • கடந்த சில நாட்களாகவே ஆசனூர் மலை கிராமம் பகுதியில் ஒற்றை யானை உலா வந்து கொண்டிருக்கிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது ஆசனூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக ஆசனூர் அருகே யானைகள் உணவு தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் கூட்டமாக சுற்றி வருகின்றன.

    இந்நிலையில் பழைய ஆசனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜ கண்ணா என்பவரது விவசாய தோட்டத்தில் நேற்று இரவு புகுந்த ஒற்றை யானை தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை சேதப்படுத்தியது. அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை முட்டி தள்ளிவிட்டு சென்றது. மேலும் அங்கிருந்த தண்ணீர் தொட்டியை பார்த்ததும் தண்ணீர் குடித்து சென்றது. பின்னர் பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வைத்து அந்த ஒற்றை யானையை மீண்டும் வனபகுதிக்குள் விரட்டினர் இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. யானை நடமாட்டாம் காரணமாக ஆசனூர் மலை கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து மலை கிராம மக்கள் கூறியாவது:-

    கடந்த சில நாட்களாகவே ஆசனூர் மலை கிராமம் பகுதியில் ஒற்றை யானை உலா வந்து கொண்டிருக்கிறது. திடீரென விவசாய தோட்டத்திற்குள் புகுந்து விவசாய பொருட்களை சேதங்கள் ஏற்படுத்தி வருகின்றன. பொதுமக்கள் ஒன்றிணைந்து பட்டாசுகளை வெடிக்க வைத்து விரட்டி வருகிறோம். இருந்தாலும் பயிர்கள் தொடர்ந்து சேதம் அடைந்து வருவதால் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். மனித உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் அந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
    • ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கடலூர், மே. 29-

    வீராணம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியின் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டு மன்னார் கோவில், புவனகிரி வட்ட பகுதிகளில் உள்ள 44 ஆயிரத்து 857 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறுகிறது.

    மேலும் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. கீழணையில் இருந்த வடவாறு வழியாக மேட்டூர் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு இந்த ஏரி நிரப்ப்படும்.

    மேலும் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்தாலும் ஏரிக்கு நீர் வரத்து இருக்கும். கோடை வெயில் மற்றும் ஏரிக்கு நீர் வரத்து இல்லாததால் ஏரியின் நீர் மட்டம் 43.10 அடியாக சரிந்தது.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கீழணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீரை வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனால் ஏரியின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 46.65 அடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படும் 9 அடி நீர் மட்டம் உள்ள கீழணையில் தற்போது 3.6 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

    • காட்டு யானை நடமாட்டத்தை கண்ட அப்பகுதி விவசாயிகள் உடனடியாக ஜீரஹள்ளி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
    • யானை ஒன்று விவசாய தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச் சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.

    இதனால் இரவு நேரங்களில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே நேற்று இரவு தாளவாடி அருகே மல்லன்குழி கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று விவசாய தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்தது.

    காட்டு யானை நடமாட்டத்தை கண்ட அப்பகுதி விவசாயிகள் உடனடியாக ஜீரஹள்ளி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் ஒன்று திரண்டு சத்தம் போட்டு, பட்டாசுகள் வெடித்து ஒரு மணி நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    தினமும் இரவு நேரத்தில் காட்டு யானைகள் விவசாய தோட்டங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதால் காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விவசாய நிலத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் சுற்றி திரிந்தது.
    • சித்தைய்யா நிலத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது. இதனைக் கண்ட அவர் யானையை விரட்ட முயற்சி செய்தார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டம், தசர குடேமை சேர்ந்தவர் சித்தைய்யா (வயது 45). இவருக்கு வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலம் உள்ளது. சித்தைய்யா விவசாய நிலத்துக்கு சென்றார்.

    இவரது விவசாய நிலத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் சுற்றி திரிந்தது.

    சித்தையா விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு இருந்தபோது கூட்டத்தில் இருந்து யானை ஒன்று பிரிந்து வந்தது. சித்தைய்யா நிலத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது. இதனைக் கண்ட அவர் யானையை விரட்ட முயற்சி செய்தார்.

    இதில் ஆத்திரமடைந்த யானை சித்தய்யாவை துரத்தியது. யானை விரட்டுவதை அறிந்த அவர் அதனிடமிருந்து தப்பித்து ஓடினார். விடாமல் துரத்திய யானை சித்தைய்யாவை தூக்கி போட்டு காலால் மிதித்து கொன்றது. வனத்துறையினர் அவருடைய உடலை மீட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் அறிவித்தார்.

    • லாரி எதிர்பாராத விதமாக அண்ணாதுரை மீது மோதியது.
    • பிேரத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 63) விவசாயி.

    சம்பவத்தன்று இவர் தான் வளர்த்து வரும் மாட்டை மேய்ச்சலுக்கு விடுவதற்காக வீட்டிலிருந்து ஓட்டி சென்றார்.

    சிறிய தூரம் சென்றபோது மாடு திடீரென மிரண்டு ஓட தொடங்கியது.

    இதையடுத்து மாட்டை பிடிப்பதற்காக அண்ணா துரை பின் தொடர்ந்து ஓடினார்.

    அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக அண்ணாதுரை மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அண்ணாதுரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்ணீர் திறக்க இயலாது என அரசு அறிவித்திருப்பது ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
    • விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.

    ஆனால் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறக்க இயலாது என அரசு அறிவித்திருப்பது ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆண்டு காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர், இந்த ஆண்டு தரவேண்டிய தண்ணீரை உடனடியாக தர உத்தரவிட்டும் தற்போது வரை கர்நாடக அரசு வழங்காதது கண்டிக்கத்தக்கது. உடனடியாக மத்திய அரசு தண்ணீர் பெற்று தர வேண்டும்.

    மேலும் மேகதாதுவில் அணை கட்டுவதிலேயே கர்நாடக அரசு குறியாக உள்ளது. உடனடியாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 17-ந் தேதி டெல்டா மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆழ்துளை மூலம் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கான இடுபொருள், உரம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் .

    தமிழக அரசு குறுவை சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் அனைவருக்கும் குறுவை தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும். சாகுபடி செய்யக்கூடிய முழு பரப்பளவிற்கும் திட்டம் சென்றடையும் வகையில் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பல்வேறு பகுதிகளிலும் நாற்று நடப்பட் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின.
    • வாய்கால்களை முறையாக தூர்வார வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரக்கூடிய கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர், அம்மாபேட்டை, வெட்டிக் காடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நாற்று நடப்பட் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின.

    மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்களும் மிகவும் பாதிக்கப்பட்டது. மாவட்டத்தின் கடைமடை பகுதியான அம்மாபேட்டை, விழுதியூர், உக்கடை, புத்தூர், கோவிந்தநல்லூர் ஆகிய பகுதிகளில் நடப்பட்டிருந்த சுமார் 50 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின.

    வயல்களில் தண்ணீர் தேங்கியதற்கும், மழைநீர் வடியாததற்கும் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாராததே காரணம் எனக்கூறி விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

    உடனடியாக வாய்கால்களை முறையாக தூர்வார வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இல்லாவிடில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    • பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கின.
    • ஆச்சனூர், பாபநாசம் பகுதிகளில் வாழை பயிரிட்ட வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

    தஞ்சாவூர்:

    வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக அடைமழை பெய்தது.

    தொடர் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவையாறு அருகே கோணக்கடுங்காலாறு உடைப்பு ஏற்பட்டு 1000 ஏக்கருக்கு மேல் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மற்றும் வாழைகள் நீரில் மூழ்கின. இதேப்போல் அம்மாப்பேட்டை, புத்தூர், அய்யம்பேட்டை, கணபதி அக்ரஹாரம், நரசிங்கபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கின.

    திருவையாறு, வளப்பக்குடி, ஆச்சனூர், பாபநாசம் பகுதிகளில் வாழை பயிரிட்ட வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நீரை தொடர்ந்து தோட்டத்தில் நின்றால் வேர் அழுகல் நோய் தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் வாலை இலை அறுவடை செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வாழை இலைகள் அறுக்க முடியாமல் மரத்திலேயே கிழிந்து வீணாகி வருவதாக விவசாயி மதியழகன் வேதனை தெரிவித்தார்.

    இதேப்போல் மழையால் நிலக்கடலை, உளுந்து, செங்கரும்பு போன்ற பல பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

    பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்துறை, தோட்டக்கலை துறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மொத்தம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 375 ஏக்கரில் நெல், கடலை, உளுந்து, வாழைப்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இன்று காலையில் இருந்து மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை இன்றி காணப்பட்டது. இதனால் வீடுகளை சூழ்ந்துள்ள தண்ணீர் வடிந்து வருகிறது. மேலும் விளைநிலங்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது.
    • பாதிப்பு பயிர்களை கணக்கீடு செய்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அறுவடை தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு தொடர்ந்து கனமழை பெய்தது. இதனுடன் கடும் பனிப்பொழிவும் நீடித்தது.

    இரவு முழுவதும் பெய்த தொடர் மழையால் மாவட்டத்தில் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கனக்கான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்துள்ளது .

    தஞ்சாவூர் வண்ணாரப்பேட்டை, 8 ம் நம்பர் கரம்பை, பூதலூர், ஆலக்குடி, கல்வராயன்பேட்டை , சித்திரக்குடி, சீராளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அறுவடை செய்ய வேண்டிய சம்பா பயிர்கள் அதிகளவில் சாய்ந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் சாய்ந்துள்ளது. இன்னும் தொடர்ந்து மழை நீடித்தால் வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் மகசூலும் குறையும். ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் செலவு செய்தும் 25 மூட்டை கூட நெல் கிடைக்காது. எனவே பாதிப்பு பயிர்களை கணக்கீடு செய்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

    ×