தேங்காய் நார் கயிறு ஆலையை இயக்க கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
கொடுமுடி அருகே இச்சிபாளையம் கிராமத்தில் உள்ள தேங்காய் நார் கயிறு ஆலையை இயக்க கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் 9 விதை குவியல்களுக்கு தடை
ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநர் க.ஜெயராமன் விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னிமலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.55 லட்சம் வசூல்
சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதில் நிரந்தர உண்டியல் எட்டு உண்டியல் திறந்தனர். இதில் ரூ.55 லட்சத்து 23 ஆயிரத்து 313 ரொக்கம் இருந்தது.
பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்கு
அம்மாபேட்டை அருகே இரு கிராமங்களுக்கு செல்லும் சாலையை அடைத்து பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னிமலை மாரியம்மன் கோவில் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
சென்னிமலை மாரியம்மன் கோவில் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பண்ணாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச பிரசாதம்
இன்று முதல் பண்ணாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் பணி தொடங்கியது.
முககவசம் அணியாமல் வருபவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கும் பணி தொடங்கியது
ஈரோடு மாவட்டத்தில் முககவசம் அணியாமல் வருபவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கும் பணி தொடங்கியது.
திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை பார்வையிட்ட கல்லூரி மாணவிகள்
உலக புவி தினத்தையொட்டி கோபிசெட்டிபாளையம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி அறிவியல் பிரிவு மாணவிகள் நேரில் பார்வையிட்டனர்.
சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி பலி
சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கைத்துப்பாக்கியை தவற விட்ட பொன்மாணிக்கவேல்
சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு வந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொன்மாணிக்கவேல் தவற விட்ட கைத்துப்பாக்கியை ஊழியர்கள் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.
தாளவாடி வனப்பகுதியில் யானை தாக்கி தொழிலாளி பலி
தாளவாடி வனப்பகுதியில் உறவினர்களுடன் புல் அறுக்க சென்ற தொழிலாளி யானை தாக்கி பலியான சம்பவம் குறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பள்ளிக்கூட கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்த சம்பவம்- 2 பேர் பணி இடைநீக்கம்
பள்ளிக்கூட கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியை உள்பட 2 பேரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்தார்.
போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதி அருகே போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்-.
உலக புவி தினத்தையொட்டி 135 பள்ளிகளில் 35 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா
ஈரோடு மாவட்டத்தில் உலக புவி தினத்தையொட்டி 135 பள்ளிகளில் 35 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை கலெக்டர் கிருஷ்ணனுன்னி தொடங்கி வைத்தார்
அனுமதியின்றி மது விற்ற 53 பேர் ஒரே நாளில் கைது
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் அனுமதியின்றி மது விற்ற 53 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓய்வு பெற்ற மின் ஊழியர் 10 விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை
பெருந்துறை அருகே ஓய்வு பெற்ற மின் ஊழியர் 10 விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூடப்பட்ட தனியார் நிறுவனம் மீண்டும் திறந்ததால் பரபரப்பு
கொடுமுடி அருகே மூடப்பட்ட தனியார் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்
ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் 28 - ந் தேதி நடக்கிறது.
ஈரோட்டில் தொடர்ந்து பதிவாகும் 100 டிகிரி வெயில்
ஈரோட்டில் தொடர்ந்து 100 டிகிரி வெயில் கொழுத்தி வருவதால் மக்கள் நீர் நிலைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
பிளஸ்-2 பொதுத்தேர்வினை 24,909 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை 24,909 மாணவ&மாணவிகள் எழுதுகின்றனர் என கலெக்டர் தெரிவித்துள்ளார்-.


