என் மலர்
நீங்கள் தேடியது "குடிநீர் தட்டுப்பாடு"
- காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை குடிநீர் விநியோகம் தடைபடும்.
- முத்திரைப்பாளையம், மேட்டுப்பாளையம், சாணாரப்பேட்டை
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித் துறை சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை முத்திரைப்பாளையம் பகுதியிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை முத்திரைப்பாளையம், மேட்டுப்பாளையம், சாணாரப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- குருநகர், சிவாஜி நகர், பிரியதர்ஷினி
புதுச்சேரி:
புதுவை கோரிமேடு இந்திரா நகர் அரசு ஆரம்ப பள்ளி அருகில் பூத்துறை ரோட்டில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (செவ்வாய்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை குருநகர், சிவாஜி நகர், பிரியதர்ஷினி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை பொதுப் பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நெட்டப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித் துறை சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது.
புதுவை, வில்லியனூர் குடிநீர் பிரிவு, நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (புதன்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணிவரை நெட்டப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மடுகரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.
- மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித் துறை சுகாதார கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வில்லியனூர் குடிநீர் பிரிவு மடுகரை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணிமுதல் 2 மணிவரை மடுகரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ராகவேந்திரா நகர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நடேசன் நகர் கிழக்கு, மேற்கு, பாவாணர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.
புதுச்சேரி:
புதுவை பொதுப் பணித்துறை சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது
புதுவை எல்லைப் பிள்ளைச் சாவடியில் உள்ள ராகவேந்திரா நகர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நாளை மறுநாள் (புதன்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணிவரை ராகவேந்திரா நகர், மாரியம்மன் நகர், பூமியான்பேட்டை, கோடிசாமி நகர், நடேசன் நகர் கிழக்கு, மேற்கு, பாவாணர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 76, 77, 85, 89 ஆகிய வார்டுப் பகுதிகளுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
- லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
மதுரை:
மதுரை மாநகராட்சி மேலக்கால் மெயின் ரோடு ராஜா கார்டன் பகுதியில் உள்ள குடிநீர் வால்வு, ஹெச்.எம்.எஸ்.காலனி மேல்நிலைநீர்த்தேக்கத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றும் பணிகள், டி.பி.மெயின் ரோடு பகுதியில் குடிநீர் குழாய்கள் மற்றும் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மற்றும் நாளை மறுநாள் (26, 27) ஆகிய இரண்டு நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது.
வைகை தென்கரை மற்றும் வடகரை பகுதிகளான வார்டு எண். 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70 மற்றும் 76, 77, 85, 89 ஆகிய வார்டுப் பகுதிகளுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறும், மேலும் அத்தியாவசியமான வார்டுப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மதுரை மாநகராட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
- சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகாவில் துளசாபுரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் சாக்கை, துளசாபுரம், மகாராஜபுரம் ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. இங்கு 1200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்குள்ள மக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து துளசாபுரம் சட்ரஸ் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டாக போதிய அளவு குடிநீர் வராததால் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.
குறைவான அளவே குழாய்களில் குடிநீர் வருவதால் பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டு தண்ணீர் பிடிக்க வேண்டியுள்ளது.
அதுவும் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் இங்குள்ள குழாய்களில் இருந்துதான் தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.
இதனால் அவர்களால் பள்ளி, கல்லூரிக்கு சரியான நேரத்துக்கு செல்ல முடியவில்லை.
அவர்கள் வீட்டிற்கும், நீர்த்தேக்க தொட்டி இருக்கும் இடத்திற்கும் 1 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதனால் அவர்கள் அவதியடைகின்றனர். மேலும் வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை.
எனவே தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்கக்கேரியும், வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதற்கும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்தநிலையில் இன்று காலை திடீரென துளசாபுரம் சட்ரஸ் அருகே பொதுமக்கள் காலிக்குடங்களுடன் குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கரியாபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உடனடியாக டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- தண்ணீர் பற்றாக்குறையால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
- போலீசார் மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அடுத்த நாகமரை மேல்காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டிக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வருவதில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். மேலும் குடிநீர் தேவைக்கு அருகில் உள்ள பகுதிக்கு சென்று தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். தண்ணீர் பற்றாக்குறையால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை 50-க்கும் மேற்பட்டோர் நாகமரை சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஏரியூர் போலீஸ் சப்-இன்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
- உழவர்கரை, பசும்பொன் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும்.
புதுச்சேரி:
புதுவை எம்.ஜி.ஆர். நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் நாளை (புதன்கிழமை), நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணி வரையில், மூலக்குளம், டைமண்ட் நகர், மேரி உழவர்கரை, ஜான்குமார் நகர், தட்சணாமூர்த்தி நகர், பாலாஜி நகர், அண்ணா வீதி, ஜெயாநகர், ரெட்டியார்பாளையம்,
புதுநகர், வழுதாவூர் ரோடு, சண்முகாபுரம், சீனிவாசபுரம், ரங்கா நகர், சிவசக்தி நகர், சக்தி நகர், மோதிலால் நகர், குண்டுசாலை, உழவர்கரை, பசும்பொன் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும் என பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு தெரிவித்துள்ளது.
- மக்கள் காலி குடங்களுடன் இன்று காலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர், ஜீவா நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கே குடிநீர் குழாய் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சமீப காலமாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மக்கள் காலி குடங்களுடன் புளியம்பட்டி ரோடு அண்ணா நகர் பஸ் நிறுத்தம் இன்று காலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். உங்கள் பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து களைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- நல்லூர் ஊராட்சி சார்பாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
- போராட்டம் காரணமாக அந்த வழியாக சாலையின் இரு புறம் வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நல்லூர் ஊராட்சி சார்பாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 20 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். ஆனாலும் முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று காலை அந்த பகுதி சேர்ந்தயை 80-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் புளியம்பட்டி-சத்தியமங்கலம் ரோடு பகுதியில் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக அந்த வழியாக சாலையின் இரு புறம் வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் புளியம்பட்டி போலீசார் மற்றும் பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரி இந்திராணி, உங்கள் பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்று பொதுமக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்ட அங்கிருந்து கலந்து சென்றனர்.
சுமார் ஒரு மணி நேரமாக நடந்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- விஸ்வநாதன் நகர் பகுதி மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.
- எம்.ஜி. ரோடு மேற்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படும்.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை குடிநீர் உட்கோட்டம், வடக்கு பிரிவுக்குட்பட்ட விஸ்வநாதன் நகர் பகுதி மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.
இதனையொட்டி வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணி வரை மாணிக்க முதலியார்தோட்டம், தெபேசான்பேட், விஸ்வநாதன் நகர், லூர்து நகர், எம்.ஜி. ரோடு மேற்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






