என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் விநியோகம்"

    • காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை குடிநீர் விநியோகம் தடைபடும்.
    • முத்திரைப்பாளையம், மேட்டுப்பாளையம், சாணாரப்பேட்டை

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித் துறை சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை முத்திரைப்பாளையம் பகுதியிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை முத்திரைப்பாளையம், மேட்டுப்பாளையம், சாணாரப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • குருநகர், சிவாஜி நகர், பிரியதர்ஷினி

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு இந்திரா நகர் அரசு ஆரம்ப பள்ளி அருகில் பூத்துறை ரோட்டில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (செவ்வாய்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை குருநகர், சிவாஜி நகர், பிரியதர்ஷினி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இந்த தகவலை பொதுப் பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • ராகவேந்திரா நகர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நடேசன் நகர் கிழக்கு, மேற்கு, பாவாணர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப் பணித்துறை சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது

    புதுவை எல்லைப் பிள்ளைச் சாவடியில் உள்ள ராகவேந்திரா நகர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நாளை மறுநாள் (புதன்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணிவரை ராகவேந்திரா நகர், மாரியம்மன் நகர், பூமியான்பேட்டை, கோடிசாமி நகர், நடேசன் நகர் கிழக்கு, மேற்கு, பாவாணர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எஸ்.எஸ் நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் நாளை அப்பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • மதியம் 12 மணி முதல் 2 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித்துறை சுகாதாரகோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை வில்லியனுார் எஸ்.எஸ் நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் நாளை (வியாழக்கிழமை) மதியம் 12 முதல் 2 மணி அப்பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இதுபோல் 10-ந் தேதி ஆரியப்பாளையம், 11-ந் தேதி கூடப்பாக்கம், 13-ந் தேதி கூடப்பாக்கம் பேட், ஆகிய பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அந்த பகுதிகளில் மேற்கண்ட தேதியில் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் 2வது குடிநீா்த் திட்டத்தின்கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • இரண்டாவது குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகரில் 2-வது குடிநீா்த் திட்டத்தின்கீழ் விநியோகிக்கப்படும் குடிநீா் விநியோகம் நாளை 30-ந்தேதி நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் 2வது குடிநீா்த் திட்டத்தின்கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2வது குடிநீா்த் திட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரதான குழாயில் மின்சார வாரியத்தின் மூலம் சனிக்கிழமை மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இரண்டாவது குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

    திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட வாா்டு எண் 1, 13, 14, 3வது மண்டலத்துக்கு உள்பட்ட 44, 45, 50, 51, மற்றும் 4வது மண்டலத்துக்கு உள்பட்ட 52, 55 ஆகிய வாா்டுகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதே வேளையில், வரும் திங்கள்கிழமைமுதல் மேற்கண்ட பகுதிகளில் தங்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தலைமைக் குடிநீா் நீரேற்று நிலையத்தில் மின் உந்துகள் பழுதடைந்துள்ளன.
    • பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    உடுமலை : 

    உடுமலை நகரில் நாளை 21,நாளை மறுநாள் 22 ஆகிய தேதிகளில் 2 நாள்கள் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து உடுமலை நகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,உடுமலை நகராட்சி திருமூா்த்தி நகா் தலைமைக் குடிநீா் நீரேற்று நிலையத்தில் மின் உந்துகள் பழுதடைந்துள்ளன. ஆகையால், புதிய மின் உந்துகள் பொறுத்தப்படுவதாலும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாலும் உடுமலை நகரம் முழுவதும் 21, 22 ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படும். எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • மீதம் உள்ள எண்ணேக்கொள் கூட்டு குடிநீர் திட்ட பணி விரைவில் முடிக்கப்படும் என்றார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளப்பள்ளி ஊராட்சி, கங்கலேரி ஊராட்சி மற்றும் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம் எண்ணேக்கொள் மற்றும் 122 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் முன்னிலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    2022-23ம் நிதியாண்டில் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த எண்ணேக்கொள் மற்றும் 122 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டப்பணிகள், ஊத்தங்கரை பேரூராட்சி மற்றும் 50 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், ஓசூர் ஒன்றியம் தேவேரிப்பள்ளி மற்றும் 23 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள், நாகொண்டப்பள்ளி மற்றும் 27 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள்,

    கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்ைட மற்றும் 28 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், பர்கூர் ஒன்றியம் சிகரலப்பள்ளி மற்றும் 143 கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டப்பணிகள், கிருஷ்ணகிரி ஒன்றியம் வெலகலஹள்ளி மற்றும் 39 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் என மொத்தம் 2022-23ம் நிதியாண்டில் ரூ.122 கோடி மதிப்பில் 7 கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் எடுக்கப்பட்டு, 6 பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மீதம் உள்ள எண்ணேக்கொள் கூட்டு குடிநீர் திட்ட பணி விரைவில் முடிக்கப்படும் என்றார்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) அலுவலர்களுடன் குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வந்தனாகார்க் உதவி பொறியாளர்கள் சாந்தி, கலைபிரியா, ரகோத்சிங், துணை நிலநீர் வல்லுநர்கள் கல்யாணராமன், ராதிகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, வேடியப்பன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது.
    • குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் விநியோகம் பற்றி எடுத்துக் கூறினார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஓவரூர் கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமை வகித்து இன்றியமையாத தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த கேட்டு கொண்டார்.

    முன்னதாக செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.

    இதில் ஊராட்சி துறை சார்பில், பணி மேற்பார்வையாளர் அமுதா கலந்து கொண்டு, குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் விநியோகம் பற்றி எடுத்துக் கூறினார்.

    சுகாதார ஆய்வாளர் பழனியப்பன், நீரினால் பரவும் நோய்கள் பற்றியும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்த வேண்டிய அவசியம் பற்றி எடுத்துக் கூறினார்.

    சுகாதார ஆய்வாளர் பாலசண்முகம், கிராம சுகாதார செவிலியர் கலைமணி ஆகியோர் சுகாதாரத் துறை அன்றாடம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.

    அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு சிறுதான்யம் பயன்படுத்த வேண்டும் என்று தலைப்பிட்டு பேசினார்.

    துணைத் தலைவர் ரமேஷ், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கிராம வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்கள்.

    • ரூ.251 கோடி செலவில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
    • 2 வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே நகர மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகள் உள்ளது. தற்பொழுது மாநகராட்சியுடன் தெங்கம்புதூர், ஆளூர் பேரூராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது.

    நகர மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததையடுத்து புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இதற்காக ரூ.251 கோடி செலவில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்த நிலையில் முக்கடல் அணை நீர்மட்டம் கோடை வெப்பத்தின் காரணமாக நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் சரிந்ததையடுத்து 2 வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே நகர மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக அல்லல்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி தண்ணீர் விநியோகம் செய்ய மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. நாகர்கோவில் நகர பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை சீரமைத்து அதன் மூலமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் மாநகராட்சி மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து தினமும் 50 கன அடி தண்ணீர் வருகிற 25-ந்தேதி முதல் குடிநீருக்காக திறக்கப்படுகிறது.

    இந்த நிலையில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்கும் வகையில் லாரிகளில் ஒவ்வொரு பகுதியாக சென்று தண்ணீர் சப்ளை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி குடிநீர் லாரியில் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வடசேரி சோழராஜா கோவில் தெரு பகுதியில் இன்று லாரிகளில் கொண்டு வந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. அந்த பகுதி மக்கள் காலி குடங்களுடன் காத்திருந்து தண்ணீரை பிடித்து சென்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குடிநீருக்காக தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் மாநகராட்சி சார்பில் லாரியில் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் கோடை காலங்களில் இன்னும் பல கஷ்டங்கள்பட வேண்டி இருக்கும். கேன்களில் தண்ணீர் வாங்க ரூ.25 செலவு செய்ய வேண்டிய நிலையும் உள்ளது என்றனர்.

    • குழாய் பாதை பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளப்பட உள்ளது.
    • 28.4.2023 மற்றும் 29.4.2023 ஆகிய 2 நாட்கள் இரண்டாவது குடிநீர்திட்டத்தின் மூலம் மாநகருக்கு குடிநீர் வழங்குவது தடைபடும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி சார்பில் குடிநீர்விநியோகி க்கப்பட்டு வருகிறது. அதன்படி, குடிநீர் விநியோகம்செய்யப்படும் இரண்டாவது குடிநீர் திட்டம் மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் குழாய் பாதை நீர்க்கசிவு சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளப்பட உள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர். இதனால் 28.4.2023 மற்றும் 29.4.2023 ஆகிய 2 நாட்கள் (வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை) இரண்டாவது குடிநீர்திட்டத்தின் மூலம் மாநகருக்கு குடிநீர் வழங்குவது தடைபடும் என தெரிவித்துள்ளனர்.

    எனவே திருப்பூர் மாநகராட்சியில் வார்டு 51-56 மற்றும் மண்டலம் 4-க்குட்பட்ட வார்டு 55 மற்றும் 52 ஆகிய பகுதிகளில் 29.4.2023 மற்றும் 30.4.2023 ஆகிய 2 நாட்கள் (சனிக்கிழமை மற்றும்ஞாயிற்றுக்கிழமை) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.மேலும் 1.5.2023 முதல் மேற்கண்ட பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனதிருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

    • ஊராட்சி தலைவர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
    • நீரினால் பரவும் நோய்களை தடுக்க குடிநீரில் குளோரின் கலப்பது அத்தியாவசியமாகிறது

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி தலை வர்களுடனான மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப்பெறுப்பேற்ற 2 ஆண்டுகளில் தமிழ் நாட்டுக்குட்பட்ட அனைத்து தரப்பட்ட மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கென பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகளை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் சுத்தமான குடிநீர் விநியோகம், தனிநபர் கழிப்பறை, ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் வாயிலாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து பேசப்பட்டது.

    மேலும் இணையதளம் மூலமாக அனைத்து வீடுகளிலும் வரி வசூல் செய்யும் பொருட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து விவரங்களும் 100 சதவீதம் இலக்கை எட்டப்பட்டதா என்பதை துறை அலுவலர்கள் உறுதிபடுத்திட வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் ஆதாரத்திற்கேற்ப, குடிநீர் விநியோகத்தை முறைபடுத்தி வழங்க வேண்டும்.

    ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் பிற திட்டங்களின் கீழ் நீராதாரங்களை உருவாக்கி வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து ஊராட்சிகளும் இல்லந்தோறும் குடிநீர் என்ற தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக அறிவித்திட நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட வேண்டும்.

    தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீரின் அளவை கண்காணிக்க இவ்வாரியத்தின் மூலம் நீரேற்றம் செய்யப்படும் மேல்நிலை தொட்டிகள் அனைத்திலும் நீரோட்ட கருவி பொருத்தப்பட வேண்டும். பதிவேடுகளில் தினந்தோறும் வழங்கப்படும் நீரின் அளவு பதியப்பட வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீருக்கான கேட்புகளுக்கு இதனை சரிபார்த்து தொகை செலுத்தப்பட வேண்டும்.

    நீரினால் பரவும் நோய்களை தடுக்க குடிநீரில் குளோரின் கலப்பது அத்தியாவசியமாகிறது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குளோரி னேசன் செய்வதை எளிதாக்கும் பொருட்டு அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலும் குளோரின் கலப்பான பொருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீரின் தரத்தினை சரிபார்க்கும் பொருட்டு பயிற்சி அளிக்க ப்பட்ட சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம் ஒப்படைத்து குடிநீரின் தரம் சரிபார்க்கப்பட்ட விவரங்கள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டுமென்பதோடு, கன்னியாகுமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வருகை தந்துள்ள அனைத்து ஊராட்சி மன்றத்தலை வர்களும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் திட்ட இயக்குநர்கள் பாபு (ஊரக வளர்ச்சி முகமை), இலக்குவன் (மகளிர் திட்டம்), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி உட்பட துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் நடவடிக்கை
    • குடிநீர் இணைப்பு வழங்கும் பணியின் மூலமாக சுமார் 720 நபர்களுக்கள் பயனடைய உள்ளனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த சுண்டம்பட்டி கிராமத்தில் குடிநீர் வழங்குவது தொடர்பாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இப்பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்க தொட்டிக்கு கடந்த 15 ஆண்டு காலமாக தண்ணீர் ஏற்றாத நிலையில் இருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து கலெக்டர் தண்ணீர் குழாய்களை இணைத்து பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டது. பணியை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் மற்றும் க.தேவராஜி எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர்.

    அதன் பிறகு பொது மக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

    நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஊராட்சி பாறையூர் கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.8.57 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 94 குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த குடிநீர் இணைப்பு வழங்கும் பணியின் மூலமாக சுமார் 720 நபர்களுக்கள் பயனடைய உள்ளனர்.

    மேலும் பச்சூர் ஊராட்சி சுண்டம்பட்டியில் ரூ.8.97 லட்சம் மதிப்பீட்டில் 94 குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த குடிநீர் இணைப்பு வழங்கும் பணியின் மூலமாக சுமார் 860 நபர்களுக்கள் பயனடைய உள்ளனர்.

    ஆய்வின் போது உதவி இயக்குனர் ஊராட்சிகள் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரகலா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×