என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    எல்லைப்பிள்ளைச் சாவடி பகுதிகளில் 15-ந் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்
    X

    எல்லைப்பிள்ளைச் சாவடி பகுதிகளில் 15-ந் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்

    • ராகவேந்திரா நகர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நடேசன் நகர் கிழக்கு, மேற்கு, பாவாணர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப் பணித்துறை சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது

    புதுவை எல்லைப் பிள்ளைச் சாவடியில் உள்ள ராகவேந்திரா நகர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நாளை மறுநாள் (புதன்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணிவரை ராகவேந்திரா நகர், மாரியம்மன் நகர், பூமியான்பேட்டை, கோடிசாமி நகர், நடேசன் நகர் கிழக்கு, மேற்கு, பாவாணர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×