என் மலர்
புதுச்சேரி

முத்திரைப்பாளையத்தில் குடிநீர் விநியோகம் நாளை நிறுத்தம்
- காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை குடிநீர் விநியோகம் தடைபடும்.
- முத்திரைப்பாளையம், மேட்டுப்பாளையம், சாணாரப்பேட்டை
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித் துறை சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை முத்திரைப்பாளையம் பகுதியிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை முத்திரைப்பாளையம், மேட்டுப்பாளையம், சாணாரப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story






