திருப்பூர் மாநகரில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

குழாய் பாதை பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளப்பட உள்ளது. 28.4.2023 மற்றும் 29.4.2023 ஆகிய 2 நாட்கள் இரண்டாவது குடிநீர்திட்டத்தின் மூலம் மாநகருக்கு குடிநீர் வழங்குவது தடைபடும்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி சார்பில் குடிநீர்விநியோகி க்கப்பட்டு வருகிறது. அதன்படி, குடிநீர் விநியோகம்செய்யப்படும் இரண்டாவது குடிநீர் திட்டம் மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் குழாய் பாதை நீர்க்கசிவு சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளப்பட உள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர். இதனால் 28.4.2023 மற்றும் 29.4.2023 ஆகிய 2 நாட்கள் (வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை) இரண்டாவது குடிநீர்திட்டத்தின் மூலம் மாநகருக்கு குடிநீர் வழங்குவது தடைபடும் என தெரிவித்துள்ளனர்.

எனவே திருப்பூர் மாநகராட்சியில் வார்டு 51-56 மற்றும் மண்டலம் 4-க்குட்பட்ட வார்டு 55 மற்றும் 52 ஆகிய பகுதிகளில் 29.4.2023 மற்றும் 30.4.2023 ஆகிய 2 நாட்கள் (சனிக்கிழமை மற்றும்ஞாயிற்றுக்கிழமை) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.மேலும் 1.5.2023 முதல் மேற்கண்ட பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனதிருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com