என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிறுத்தம்"
- 3.5 சதவீத கொழுப்புச் சத்துள்ள ஊதா நிற பால் பாக்கெட்டை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
- திடீரென நிறுத்துவதன் மூலம் அதனை பருகிவந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வழிவகை செய்யும்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
குறைந்து வரும் பால் கொள்முதல், ஊழல், முறைகேடு என பல புகார்களில் சிக்கித் தவிக்கும் ஆவின் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை போக்க, 4.5 சதவீத கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனையை நிறுத்திவிட்டு, 3.5 சதவீத கொழுப்புச் சத்துள்ள ஊதா நிற பால் பாக்கெட்டை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பது போல குறைத்துவிட்டு, பால்பொருட்களின் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியிருக்கும் தி.மு.க. அரசு, பொதுமக்களின் நீண்டகால பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளை திடீரென நிறுத்துவதன் மூலம் அதனை பருகிவந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வழிவகை செய்யும்.
எனவே, நஷ்டத்தில் இயங்கும் ஆவின் நிர்வாகத்தின் வருவாயை பெருக்க மாற்று ஏற்பாடுகளை செய்வதோடு, பொது மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆரஞ்சு, நீலம், பச்சை, ஊதா ஆகிய நான்கு விதமான பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகம் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அரியலூர், தேளூர், உடையார்பாளையம், செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- காலை 9 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்
அரியலூர், தேளூர், உடையார்பாளையம், செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதனால் அரியலூர் ஒரு சில பகுதிகள், கயர்லாபாத், ராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளுர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி,
கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கொளப்பாடி, மங்களம், குறுமஞ்சாவடி. வி.கைகாட்டி, ரெட்டிப்பாளையம், தேளுர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியர்பாளையம், மைல்லாண்டகோட்டை. உடையார்பாளையம், பரணம், இரும்புலிக்குறிச்சி,
குமிழியம், ஜெ.தத்தனூர், நாச்சியார்பேட்டை, மணகெதி, சோழன்குறிச்சி, இடையார். ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மரூதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- வி.பி.தெரு பகுதியில் பொதுமக்கள் நடமாட இயலாததால் நடவடிக்கை
- ஆட்டோ ஸ்டாண்ட் எதிரே மாற்றப்பட்டு உள்ளது அந்த பகுதியில் ஓரளவு வாகன நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டது.
அருவங்காடு,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து வருவதால், மார்கெட் நுழைவு வாயிலில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் வி.பி.தெரு பகுதியில் பொதுமக்கள் நடமாட இயலவில்லை. மேலும் அந்த பகுதியில் சரக்குவாகன நிறுத்தம் செயல்பட்டு வந்தது.
இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி வி.பி.தெரு பகுதியில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே சரக்குவாகன நிறுத்தும் இடம் தற்போது குன்னூர் மெயின் ஆட்டோ ஸ்டாண்ட் எதிரே மாற்றப்பட்டு உள்ளது இதனால் அந்த பகுதியில் ஓரளவு வாகன நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கான நிகழ்ச்சியில் சரக்குவாகன நிறுத்தத்தை மாற்றியமைக்க முயற்சிகளை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் பிக்கப் டிரைவர்கள் நன்றி தெரிவித்தனர்.
- வலையப்பேட்டை வழியாக செல்லும் குடிநீர் பிரதான குழாயில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளது.
- தேவையான குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- நாமக்கல் மாவட்டத்தில் மின் நிறுத்த அறிவிப்பு மின்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற 8- ந் தேதி
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்ய உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் மின் நிறுத்த அறிவிப்பு மின்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற 8- ந் தேதி மெட்டல்லா, ஆனங்கூர், சமயசங்கிலி, 12- ந் தேதி நல்லூர், சோழசிராமணி, ஜேடர்பாளையம், மல்லசமுத்திரம், 14 -ந் தேதி நாமகிரிப்பேட்டை, இளநகர், இமல்லி, கொமரபாளையம், பள்ளிபாளையம், வெப்படை, உப்புபாளையம், 16- ந் தேதி சேந்தமங்கலம், பரமத்திவேலூர், முசிறி, 19- ந் தேதி வளையப்பட்டி, திருச்செங்கோடு, உஞ்சனை, 20- ந் தேதி ராசிபுரம், எஸ்.வாழவந்தி, நாமக்கல், 21 - ந் தேதி காளப்பநாயக்கன்பட்டி, எருமப்பட்டி, கபிலர்மலை, பருத்திபள்ளி, வில்லிபாளையம், 26- ந் தேதி கெட்டிமேடு, பள்ளக்காபாளையம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்ய உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மயிலாடுதுறையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்டது.
- இந்த ரெயில் அனைத்து ரெயில் நிறுத்தங்களிலும் நின்று செல்லும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை -திருச்சி, திருச்சி - கரூர், கரூர்-சேலம் ஆகிய 3 ரெயில்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே ரெயில் சேவையாக மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
இதனிடையே இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து 6.20 மணிக்கு புறப்பட்ட இந்த ரயிலை ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி வரவே ற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரெயில் இன்ஜின் முன்புறம் மாலை அணி வித்தும் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
மேலும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரயிலில் பயணம் மேற்கொண்டார்.
முன்னதாக ரயில் ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து காலை 6.20 மணிக்குப் புறப்பட்டு கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு காலை 9.30 மணிக்கு சென்றடைகிறது.
பின்னர் கரூர், நாமக்கல் வழியாக பிற்பகல் 1.45 மணிக்கு சேலம் சென்றடைகிறது.
இதே போன்று மறு மார்க்கமாக சேலத்தில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு 6.05 மணிக்கு வந்தடைகிறது.
பின்னர் இரவு 9.40 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேரும். இந்த ரயில் அனைத்து ரயில் நிறுத்தங்களிலும் நின்று செல்வது குறிப்பி டத்தக்கதாகும்.
சேலத்தில் இருந்து கரூர் வரை இயக்கப்பட்ட ரெயில் இனிமேல் மயிலாடுதுறை வரை இயக்கப்பட இருப்பது ரயில் பயணிகள் மற்றும் வணிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வில்லிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (25-ந் தேதி) வெள்ளிக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால்
- ஆகிய ஊர்களுக்கும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வில்லிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (25-ந் தேதி) வெள்ளிக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வில்லி பாளை யம், ஜங்கமநாயக்கன்பட்டி, சின்னம நாயக்கன்பட்டி , சுங்ககாரம்பட்டி, நல்லாகவுண்டம்பாளை யம், பெரியாக்கவுண்டம் பாளையம்,தம்ம காளிபாளையம், பில்லூர், கூடச்சேரி, அர்த்தநாரி பாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவி பாளையம், கீழக்கரை, கஜேந்திர நகர், சுண்டக்காம்பாளையம் ஆகிய ஊர்களுக்கும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது என பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
- ஓமலூர் கோட்டத்திற்கு உட்பட்ட தொப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (25-ந்தேதி) நடைபெற உள்ளது.
- பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை ஓமலூர் மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஓமலூர் கோட்டத்திற்கு உட்பட்ட தொப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (25-ந்தேதி) நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொப்பூர், செக்காரப்பட்டி, கம்மம்பட்டி, வெள்ளார், எருமப்பட்டி, குண்டுக்கல், ஜோடுகுளி, தளவாய்பட்டி, எலத்தூர், சென்னா ரெட்டியூர், கொண்ரெட்டியூர், மூக்கனூர், தீவட்டிப்பட்டி, சோழியானூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை ஓமலூர் மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- சேலம் மின்னாம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (19-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
- இந்த தகவலை மின் செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலம் மின்னாம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கூட்டாத்துபட்டி விளாம்பட்டி,ஏரிபுதூர், நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, எஸ்.என். மங்கலம், ஏ.என்.மங்கலம், ஜலகண்டாபுரம், அனுப்பூர்,பூசாரிப்பட்டி, பாலப்பட்டி, தேங்கல்பாளையம், குள்ளம்பட்டி, காட்டூர், வலசையூர்,குப்பனூர், தாதனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, வெள்ளியம்பட்டி, கத்திரிப்பட்டி, பூவனூர் ஆகிய பகுதிகளில் நாளை (19-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின் செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.
- 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
- கடந்த ஒரு மாதமாக நிலவி வரும் தக்காளி தட்டுப்பாட்டை தொடர்ந்து அதன் விலை உயர்ந்து கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் உழவர் சந்தைக்கு கோனூர், திண்டமங்கலம், கீழ்சாத்தம்பூர், கீரம்பூர், கோணங்கிப்பட்டி, காவக்காரப்பட்டி, பொட்டிரெட்டிபட்டி, எருமப்பட்டி, மோகனூர், நாமக்கல், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், கொல்லிமலை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
கிலோ ரூ.130
உழவர் சந்தையில் தற்போது அதிகபட்ச விலையாக சின்னவெங்காயம் கிலோ ரூ.80, இஞ்சி ரூ.280, கத்தரிக்காய் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக நிலவி வரும் தக்காளி தட்டுப்பாட்டை தொடர்ந்து அதன் விலை உயர்ந்து கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது. இதையடுத்து நாமக்கல் தோட்டக்கலைத் துறையினர் விவசாயிகளிடம் இருந்து தக்காளியை நேரிடையாக வாங்கி நாமக்கல் உழவர் சந்தையில் விற்று வந்தனர்.
இதனால் வெளிச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.130 வரை விற்ற நிலையிலும், உழவர் சந்தையில் ரூ.90-க்கு விற்கப்பட்டன.
விற்பனை நிறுத்தம்
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி விற்பனை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தக்காளி வாங்க உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றன. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், தக்காளி விலை தொடர்நது உயர்ந்து வந்ததால், விவசாயிகளிடம் நேரடியாக வாங்கி உழவர் சந்தையில் விற்கப்பட்டது. தற்போது தட்டுபாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தக்காளி கிடைக்கவில்லை. இதனால் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே நாமக்கல் உழவர் சந்தையில் மீண்டும் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.