search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கறம்பக்குடி அருகே அரசு பள்ளி கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்தது
    • விடுமுறை தினத்தில் நடந்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

    கறம்பக்குடி, கறம்பக்குடி அருகே

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 850- க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 12 வகுப்பறை களை கொண்ட 2 மாடி கட்டிடம் உள்ளது. தரமற்ற நிலையில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் கடந்த சில ஆண்டுக ளாகவே பழுத டைந்து ஆங்காங்கே வெ டிப்புகளுடன் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து இருந்தது. இருப்பினும் மாணவர்கள் அந்த கட்டிடத்தில் தொ டர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமு றை முடிந்து மாணவர்கள் நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றனர். அப்போது 9 மற்றும் 10-ம் வகுப்பு அறை கட்டிடத்தில் மேற்கூரை பெயர்ந்து சிமெண்ட் பூச்சுகள் வகுப்ப றைக்குள் சிதறி கிடந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் இது குறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர் . இதை யடுத்து மாணவர்கள் வேறு வகுப்பறையில் அமர வைக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை விடு முறை தினத்தில் சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்ப ட்டது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் விடுமுறை தினத்தில் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் பெய ர்ந்து விழுந்ததால் அசம்பா விதங்கள் இன்றி மாணவர்கள் உயிர் பிழைத்த னர்.ஆனால் இந்த கட்டிடம் எப்போது வேண்டு மானாலும் இடிந்து விழலாம் இதேபோன்று கடந்த ஆண்டும் நவம்பர் மாத காலத்தில் பருவமழையின் போது இந்த பள்ளி கட்டிடம் மேல் கூரை இடிந்தது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை யும் இல்லை. மிகுந்த அச்சத்துடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வருகி றோம். எனவே ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு உடனே புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும் மற்றும் மாணவர்க ளும் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பள்ளியில் சுற்றுவட்டா ரத்தை சேர்ந்த 646 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்
    • இரணியல் போலீஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள இந்த பள்ளி இருக்கும் இடம் எப்போதும் பரபரப்பாகவே காணப்ப டும்

    நாகர்கோவில் : திங்கள்நகரில் இருந்து இரணியல் செல்லும் சாலையில் இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டா ரத்தை சேர்ந்த 646 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இரணியல் போலீஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள இந்த பள்ளி இருக்கும் இடம் எப்போதும் பரபரப்பாகவே காணப்ப டும். காலாண்டு தேர்வு மற்றும் தொடர் மழை விடுமுறை காரணமாக சில நாட்களுக்கு பின்பு நேற்று முன்தினம் மீண்டும் பள்ளி திறந்தது. வழக்கம்போல மாலை பள்ளியை மூடிவிட்டு பணியாளர்கள் சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை அலுவலக ஊழி யர்கள் பள்ளியை திறக்க வந்தனர். அப்போது உடற்கல்வி ஆசிரியை லில்லிபாய் தலைமை ஆசிரியர் அறை கதவு பூட்டு உடைந்த நிலையில் அருகில் ஒரு கடப்பாரை கம்பியும் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பைல்கள், ஆவணங்கள் சிதறிய நிலையில் கிடந்தது. மேலும் பள்ளி அறை சாவி கொத்தையும் மர்ம நபர்கள் மேசையில் எடுத்து வைத்திருந்தனர். இதுகுறித்து லில்லிபாய் தலைமை ஆசிரியை சாந்தி, உதவி தலைமை ஆசிரியை எமிலியா ஜெசி ஆகியோ ருக்கு தகவல் தெரிவித்தார். தலைமை ஆசிரியை விடுப்பில் இருப்பதால் இதுகுறித்து எமிலியா ஜெசி இரணியல் போலீஸ் நிலை யத்திற்கு புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இரணியல் இன்ஸ் பெக்டர் செந்தில் வேல் குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர்.

    திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் சுமன் நேரில் சென்று ஆசிரியர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். போலீஸ் விசாரணையில் பள்ளியில் இருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் பதிவாகும் டிவிஆரை மர்ம நபர்கள் திருடிச் சென்றி ருந்தது தெரிய வந்தது.

    பீரோவில் பணம் உள்ளிட்ட எதுவும் இல்லாத தால் மர்ம நபர்கள் ஏமாற்றத் துடன் சென்றுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரசு பள்ளியின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
    • அமைச்சர் மனோ தங்கராஜ் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார்

     

    நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு கண்டன்விளை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    அதிக கல்வியறிவு பெற்ற மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் விளங்கி வருகிறது. ஆனால் போட்டி தேர்வுகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்து வருகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவ, மாணவிகளும் அதிகளவில் போட்டி தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தற்போது போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    குமரி மாவட்டத்தில் இருந்து ஏற்கனவே இந்த பயிற்சி வகுப்புகள் மூலம் பயிற்சி பெற்ற 12 பேர் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று இன்று அதிகாரிகளாக உயர்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். விடாமுயற்சியுடன் நாம் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

    அரசியலில் மட்டுமல்ல வாழ்விலும் வெற்றிபெற விடாமுயற்சி தேவை. எம்.எல்.ஏ.வாக நான் தேர்வாக 35 ஆண்டுகள் வரை உழைக்க வேண்டி இருந்தது. உங்கள் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். உங்கள் ஜாதியோ, மதமோ அதை முடிவு செய்ய முடியாது. நீங்கள் மட்டும் தான் உங்கள் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும். உங்கள் உழைப்பு தான் வாழ்வில் உங்களை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதை நிர்ணயம் செய்யும்.

    எனவே மாணவ-மாணவிகள் விடாமுயற்சியுடன் செயல்பட்டு தனக்கான இலக்கை அடைய வேண்டும். அதிகளவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தக்கூடிய போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று உயர்ந்த பகுதிகளில் அமர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெரிபா ஜி இமானுவேல் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    குறும்பனையில் ரூ.30 கோடி செலவில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி மூலமாக திறந்து வைத்தார். குறும்பனையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ்,ராஜேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கருமாத்தூரில் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
    • ஆசிரியர் சகாயராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் கருமாத்தூர் புனித கிளாரட் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி துணை தலைவர் முத்துராமன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சூசை மாணிக்கம் வரவேற்றார்.

    விழாவில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை அய்யப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் முத்துராமன் வழங்கினர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஜான் கென்னடி நன்றி கூறினார். ஆசிரியர் சகாயராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • பொது மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    மார்த்தாண்டம்:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, பாலப்பள்ளம் பேரூராட்சியில் உள்ள மத்திக்கோடு எல்.எம். அரசு தொடக்க பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டி டங்கள் அமைக்க வேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர், அப்பகுதி பொது மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து அந்த பள்ளி யில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைப்பதற்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட் டத்தில் இருந்து ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் நிறைவுப் பெற்றதையடுத்து வகுப்பறை கட்டிடங்களை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கிள்ளி யூர் கிழக்கு வட்டார காங் கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், பாலப்பள்ளம் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெபர்சன், வார்டு உறுப்பினர்கள் ஹெலன் மேரி, மேரி பிரிதா, பாலப்பள்ளம் பேரூராட்சி இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் லதீஷ், மற்றும் சூசை மிக்கேல், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், ஊர் பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தியாகி இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபத்திற்கு அரசு அறிவிப்புக்கு முன்னாள் கவுன்சிலர் பொன்னையாபுரம் மனோகரன் வரவேற்பளித்தார்.
    • ரூ.3 கோடி செலவில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல மைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-வது நினைவு தினம் நேற்று பர மக்குடியில் அனுசரிக்கப்பட் டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் பி.பி.எப்.டி. அமைப்பின் நிறுவன தலை வரும், முன்னாள் கவுன்சில ருமான பொன்னையாபுரம் மனோகரன் தனது ஆதரவா ளர்களுடன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தியாகி இமானுவேல் சேகரனாருக்கு ரூ.3 கோடி செலவில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல மைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்துள்ளார். அவ ருக்கு எங்கள் அமைப் பின் சார்பில் நெஞ்சார்ந்த நன் றியை தெரிவித்துக் கொள் கிறோம்.இந்த அறிவிப்பு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. சுதந்திரப் போராட்டத்தை போல் இது நீண்ட போராட் டமாக இருந்தது. இதற்கு முழு முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் எங்கள் அமைப்பின் சார்பில் நன் றியை தெரிவித்துக் கொள் கிறோம் என்றார்.

    நினைவஞ்சலி நிகழ்ச்சி யில் அண்டக்குடி முருகே சன், காயாம்பு பாண்டியன், காளிதாஸ் பாண்டியன், சீதக்காதி, மோகன், முருகன், மகாலிங்கம், விஜயகாந்த், சுரேஷ், கதிர், முரளி, தனுஷ் பிரபாகரன், மதி இளமாறன், ராமநாத பிரபு, சரோன் இளமாறன் உள்ளிட்ட பி.பி.எப்.டி. அமைப்பின் நிர் வாகிகள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி னர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மற்றொரு விபத்தில் விவசாயி சாவு
    • தனியார் மெடிக்கல் நிறுவனத்தில் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.

    இரணியல்:

    நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை கீழத் தெருவை சேர்ந்தவர் ஆபத்துகாத்தபிள்ளை (வயது 52). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் நிறுவனத்தில் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவருடன் நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த முருகன் (65) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் வேலை விஷயமாக நேற்று தக்கலை பகுதிக்கு வந்து விட்டு இரவு நாகர்கோவில் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். மொபட்டை முருகன் ஓட்டினார். ஆபத்து காத்தபிள்ளை பின்னால் அமர்ந்திருந்தார்.

    மொபட் வில்லுக்குறி பாலம் தாண்டி அங்குள்ள பெட்ரோல் பங்க் எதிரே சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பின்னால் வேகமாக வந்த அரசு பஸ் மொபட்டை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின்பக்கம் மொபட்டில் உரசியது. இதில் மொபட்டில் சென்ற இருவரும் கீழே விழுந்தனர். பின்னால் அமர்ந்திருந்த ஆபத்து காத்தபிள்ளை ரோட்டில் விழுந்தார். அப்போது பஸ்சின் பின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கிய ஆபத்துகாத்த பிள்ளை சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து முருகன், இரணியல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் கொல்லங்கோடு ஆறுகோடு பகுதியை சேர்ந்த சிந்து குமார் (52) என்பவர் மீது இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    இரணியல் அருகே உள்ள மாங்குழி பகுதியை சேர்ந்த வர் வின்சென்ட் (65), விவ சாயி. இவர் நேற்று சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டு மதியம் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். திங்கள் நகர் ரவுண்டானா தாண்டி ராதாகிருஷ்ணன் கோவில் ஜங்ஷன் அருகே வரும்போது பின்னால் வேகமாக வந்த மினி பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த சம்பவத்தில் தூக்கி வீசப்பட்ட வின்சென்ட் படுகாயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியி லேயே வின்சென்ட் பரிதாப மாக இறந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் தேவ சகாயம், இரணியல் போலீ சில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய மினி பஸ் டிரைவர் கொக்கோடு வலியவிளை வைகுண்ட குமார் (29) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் கலந்தாய்வு நடைபெற உள்ளது
    • 11 -ந் தேதி நடைபெறுகிறது.

    அரியலூர்:

    அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வியாண்டின் முதுகலை மற்றும் முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 11 -ந் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து அக்கல்லூரி முதல்வர் ஜோ.டோமினிக் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், எம்.காம் எம்.எஸ்சி., கணிதம் இயற்பியல் வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவியர் தங்களுடைய மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், வகுப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை நகல், அசல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும்.

    மேற்கண்ட பாடங்களில் சேரும் மாணவர்களுக்கு 13-ந் தேதி முதல் முதல் வகுப்புகள் நடைபெறும்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் வட்டார அளவிலான தடகள போட்டி நடைபெற்றது.
    • இதில் குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 174 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டம் வென்றனர்.

    குமாரபாளையம்;

    திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் வட்டார அளவிலான தடகள போட்டி நடைபெற்றது. இதில் குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 174 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டம் வென்றனர். 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் மவுனிகா என்ற மாணவி 600 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலிடம், 400 மீட்டரில் இரண்டாமிடம், 200 மீட்டரில் முதலிடம் வந்து, 13 புள்ளிகள் பெற்று தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றார். சாதனை படைத்த மாணவியரை தலைமை ஆசிரியை கலைச்செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் எஸ்.எம்.சி. நிர்வாகிகள் வாழ்த்தி பாராட்டினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசு தலைமை மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன
    • அப்துல் சமது எம்.எல்.ஏ, வழங்கினார்

    திருச்சி.

    த.மு.மு.க. 29 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்டம் சார்பில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு இரண்டு சக்கர நாற்காலிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் சுமார் 80,000 ஆயிரம் ரூபாய் மதிப்புள் ள பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவரும் கவுன்சிலருமான அ.பைஸ் அகமது தலைமையில் நடைபெற்றது மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும், மமக பொது செயலாளர் அப்துல் சமது, மாநில பொருளாளர் என்ஜினீயர் ஷபியுல்லாஹ் கான் ஆகியோர் அரசு தலைமை மருத்துவமனை முதல்வர் டாக்டர் நேருவிடம் பொருட்களை ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராகிம்ஷா, மமக செயலாளர் இப்ராகிம், பொருளாளர் ஹீமாயூன், அப்துல் சமது, அசாருதீன் , அப்துல் ரஹ்மான் சபீர், நசிர், ரபீக், அணி நிர்வாகிகள் ஜுபைர் ரஜாக், பக்ருதீன். இசாக், மோத்தி, சதாம் , சார்லஸ், பகுதி நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள். மற்றும் மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.