என் மலர்
நீங்கள் தேடியது "அரசு"
- அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர்.
- வதந்தியை பரப்பாதீர்கள்.
சென்னை:
கொளத்தூர் தொகுதியில் 84-ம் வாக்குச்சாவடியில் வீட்டு எண் 11-ல் 30 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ரபியுல்லா என்ற ஒரே பெயரில் 3 வாக்காளர்கள் இருக்கின்றனர் என பா.ஜ.க. எம்.பி. பேசியதை தமிழக பா.ஜ.க. சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தது.
இதற்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் படத்துடன் விளக்கம் அளித்து இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொளத்தூர் தொகுதி ஆண்டாள் அவென்யூவில் உள்ள 11-ம் எண் என்பது தனி வீடல்ல, அது அடுக்குமாடி குடியிருப்பு பகுதி. வாக்குச்சாவடி எண் 84 விவரங்களின்படி, வரிசை எண் 40 முதல் 75 வரையில் உள்ள வாக்காளர்கள் 11 எண் கொண்ட ஏ.எஸ்.வீனஸ் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இதில் ரபியுல்லா என்பவரின் பெயர் வரிசை எண் 50-லும், 52-ல் கணவர் என்கிற இடத்திலும் இடம்பெற்றுள்ளது. மேலும் வரிசை எண் 348, 352 ஆகியவற்றில் தந்தை என்ற இடத்தில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் காணொளியில் குறிப்பிட்டது போல ரபியுல்லா என்ற பெயரில் 3 வாக்காளர்கள் இல்லை. வாக்குச்சாவடி எண் 157-ல் (வேறு பகுதி) ரபியுல்லா பெயர் தந்தை, கணவர் என்ற இடங்களில் வருகிறது. 11 எண் கொண்ட குடியிருப்பில் முஸ்லிம்கள் மட்டும் வசிப்பது போன்ற தவறான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். அங்கு அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். வதந்தியை பரப்பாதீர்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கலெக்டர் அரவிந்த் பேச்சு
- மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்தது
நாகர்கோவில்:
குழித்துறை நகராட்சிக்கு ட்பட்ட பம்மம் பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி இன்று நடைபெற்றது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்ததாவது:-
தமிழக அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்களான, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், நரிக்குரவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனம ழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க ப்பட்டதை நேரில் பார்வையிட்டது.
இன்னுயிர் காப்போம்,– நம்மைக் காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டம்,
காணி பழங்குடியினர்க ளுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது, மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலையங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது,
முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம், புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம், மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின்போது காலமானவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது, காலை உணவுத்திட்டம்,
புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் சார்பாக அமைக்க ப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு அனைத்துத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1929 நவ ம்பர் மாதம் 25-ந் தேதி, சேலம் மாவட்ட கமிட்டி வாயிலாக அரசு மருந்தகம் என்ற பெயரில் மருத்துவமனை அமைக்கப்பட்டது.
- இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படுமா என எதிர்பார்த்து காத்திருக்கும் கிராம மக்கள்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பேரூராட்சி சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2 கி.மீ., துாரத்தில், புத்திர கவுண்டன்பாளையம் கல்வராயன்மலை கருமந்துறை சாலையில் அமைந்துள்ளது.
அக்ரஹாரம், அபிநவம், கணேசாபுரம், வடக்குக்காடு, காரைக்களம், கல்லேரிப்பட்டி, படையாச்சூர், கல்யாணகிரி, எம்.சி.ராஜா நகர், புத்திரகவுண்டன்பாளையம், வைத்தியகவுண்டன்புதுார் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு ஏத்தாப்பூர் முக்கிய மையமாக விளங்கிறது.
இப்பகுதிமக்களின் நலன்கருதி, பழமையான ஏத்தாப்பூர் சாம்பவ மூர்த்தீஸ்வரர் கோயிலுக்கு எதிரே வசிஷ்டநதி கரை யோரத்தில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1929 நவ ம்பர் மாதம் 25-ந் தேதி, சேலம் மாவட்ட கமிட்டி வாயிலாக அரசு மருந்தகம் என்ற பெயரில் மருத்துவமனை அமைக்கப்பட்டது. மாவட்ட கமிட்டித் தலைவரான அப்போதைய எம்.எல்.சி ராவ்பகதுார் எல்லப் பச் செட்டியார் இந்த மருந்தகத்தை திறந்து வைத்துள்ளார். 1958 அக்டோபர் 7-ந் தேதி, அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர், பிரசவ விடுதி கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்.
இதனையடுத்து இந்த அரசு மருந்தகம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அறுவை சிகிச்சை அரங்கு, உள் நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், பிரேத பரிசோதனை க்கூடம் உள்ளிட்ட வசதிகளும், 50 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் இயங்கி வந்தது. இதற்குபிறகு பணிபுரிந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் கவனமின்மையால், இந்த அரசு மருத்துவமனை, 25 ஆண்டுக்கு முன் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் குறைக்கப்பட்டது.
தற்போது, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை, மாலை வேளைகளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் மருத்துவர்கள், செவிலியர், மருத்துவப்பணியாளர்கள் இல்லாததால், சிகிச்சை பெறுவதற்கு வழியும் வசதிகளும் இல்லை.
இதனால், ஏத்தாப்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவசர முதலுதவி சிகிச்சை பெறுவதற்கு கூட, ஆத்துார், சேலம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது. இதுமட்டுமின்றி பழைய கட்டடங்கள் வழுவிழந்து காணப்படுகிறது.
எனவே, 93 ஆண்டுக்கு முன் தொடங்கப்பட் ஏத்தாப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நுாற்றாண்டு விழா காண்பதற்குள், விசாலமான புதிய கட்டடம் அமைத்து, நவீன அறுவை சிகிச்சை அரங்கம், உள்நோயாளிகள் படுக்கைப்பிரிவு, ஸ்கேனிங், எக்ஸ்ரே,ஆய்வகம் மற்றும் மருத்துவர், பணியாளர்கள் குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.
கூடுதல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமித்து, 24 மணிநேரமும் செயல்படும் வகையில் மேம்படுத்தவும், சேலம் மாவட்ட நிர்வாகமும், பொது சுகாதாரத்துறை அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
- வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடல்
- கலெக்டர் அரவிந்த் பேச்சு
நாகர்கோவில்:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள உதவி மேலாளர்களுக்கு குமரி மாவட்டத்தில் வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மூலமாக 5 நாள் பயிற்சி நடந்தது.
இதில் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்குவது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயல்பாடுகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வங்கிகளுக்கு இடையேயான தொடர்பு, சிறு, குறு தொழில்நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் வழங் கப்படும் கடன் உதவிகள், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் உதவிகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் அவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலை யங்கள் செயல்பாடுகள், மீன்வர் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையினர் செயல்பாடுகள், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்து றையின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது.
பயிற்சி நிறைவை யொட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் கலந்துரையாடல் நடந்தது. இதில் கலந்து கொண்ட கலெக்டர் அரவிந்த் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அவர் பேசும் போது, 'அனைவரும் கிராமப்புறங்களில் பெற்ற பயிற்சிகள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்கள் விரைவாக பொதுமக்களை சென்றடையும் வகையில் பணியாற்ற வேண்டும்' என்று அறிவுறுத்தினார்.
இதில் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் குமரி மாவட்ட முதன்மை மண்டல் மேலாளர் பா.சத்திய நாராயணன் கலந்து கொண்டு அதிகாரி களுக்கு வாடிக்கையாளர் சேவையின் முக்கியத்துவம் குறித்தும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களை கிராமப்புறங் களில் பணிபுரியும்போது விவசாயிகளுக்கு எடுத்து ரைப்பதற்கும் அறிவுரை கூறினார்.
இதில் குமரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கே.எல். பிரவீன்குமார், ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் ஆன்றோ ஜவஹர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் வங்கி அதிகாரி ஹட்சின் இம்மானுவேல் நன்றி கூறினார்.
- பக்கத்தில் அமர்ந்திருப்ப வர்களிடம், இந்த ஸ்டாப் வந்ததும் கொஞ்சம் சொல்லுங்கள் அல்லது கண்டக்டரிடம் முன்கூட்டியே சொல்லி விடுகின்றனர்.
- அப்படி இருந்தும் அவர்கள் மனதில் தோன்றுவது எப்போது நாம் இறங்கும் இடம் வரும்? அல்லது கடந்து விட்டோமா? என்ற பதட்டம் வேறு வரும்.
மாநகர, நகராட்சியில் டவுன் பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
உள்ளூர் வாசிகள் தங்களின் இருப்பிடத்திற்கு செல்ல டவுன் பஸ்களில் பயணம் செய்யும்போது அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் சுதாரித்துக் கொண்டு யாரையும் எதிர்பார்க்காமல் இறங்கி விடுவார்கள். ஆனால் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு டவுன் பஸ்களில் பயணம் செய்தால், அவர்கள் இறங்க வேண்டிய இடம் எங்கு இருக்கிறது? என தெரியாமல் தடுமாறுவார்கள்.
பக்கத்தில் அமர்ந்திருப்ப வர்களிடம், இந்த ஸ்டாப் வந்ததும் கொஞ்சம் சொல்லுங்கள் அல்லது கண்டக்டரிடம் முன்கூட்டியே சொல்லி விடுகின்றனர். அப்படி இருந்தும் அவர்கள் மனதில் தோன்றுவது எப்போது நாம் இறங்கும் இடம் வரும்? அல்லது கடந்து விட்டோமா? என்ற பதட்டம் வேறு வரும்.
கண்டக்டரை பார்த்து கேட்கனுமா? அவர் வேறு முன்னாடியே நின்னுக்கிட்டு இருக்காரு. இறங்க வேண்டிய நாம் முன்னால் அமர்ந்திருந்தால் கண்டக்டர் பின்னாடி இருப்பார். இந்த படபடப்பு தினந்தோறும் வெளியூரில் இருந்து நகரத்திற்கு வரும் பயணிகளின் மனதில் அன்றாடம் இருக்கத்தான் செய்கிறது.
பஸ்சில் தூக்கம்
மேலும் ஒரு சில டவுன் பஸ்களில் கண்டக்டர் பேருந்து நிற்கும் இடத்தின் பெயரை சொல்வார். ஆனால் அது அவருக்கே கேட்காது. காரணம் பஸ் ஒலிபெருக்கியில் ஒலிக்கும் பாடல்கள் தான்.
ஒரு சிலர் பஸ்சில் ஏறியதும் தூங்கி விடுகிறார்கள். சிலர் பயணத்தின்போது கவனக்குறைவாக இருக்கி றார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் இருக்க வேண்டி மெட்ரோ ரெயில்களில் பயணிகளின் நலன் கருதி அடுத்து வரும் நிறுத்தம் குறித்து அறிவிக்கப்படுகிறது. மின்சார ரெயில்கள், பயணிகள் ரெயில்களில் டிஸ்பிளேயில் காண்பிக்கப்ப டுகிறது.
ஜி.பி.எஸ்.கருவி
இந்த நடைமுறையை பின்பற்றி தமிழகத்தில் உள்ள நகர பஸ்களிலும் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகர போக்குவரத்து கழகம், சேலம், நெல்லை, மதுரை கோட்ட நகர பஸ்களில் முதல் கட்டமாக 100 பஸ்களில் ஸ்பீக்கர் பொறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
தற்போது இது விரிவுப்ப டுத்தப்பட்டு, மேலும் பல டவுன் பஸ்களில் ஸ்பீக்கர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக டவுன் பஸ்களில் ஜி.பி.எஸ் கருவியுடன் கூடிய ஸ்பீக்கர் டிரைவரின் அருகிலும், நடுப்பகுதி, பின் படிக்கட்டின் எதிரில் என 3 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது.
பஸ்சை இயக்கியவுடன் பஸ் புறப்படும் இடத்தில் இருந்து சேரும் இடம் வரை நிறுத்துமிடம் குறித்து ஒலி பெருக்கியில் தெரிவிக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நிறுத்தம் நெருங்கும் முன்பாக பஸ் நிறுத்தம் குறித்து அறிவிக்கிறது. குறிப்பாக நாம் இறங்க வேண்டிய இடம் வருவதற்கு முன்பாகவே அடுத்து வருவது அண்ணா பூங்கா என்று, ஒவ்வொரு இடம் வருவதற்கு முன்பாக ஒலி பெருக்கி மூலம் தெரிவிக்கிறது.
15 பஸ்களில்...
சேலம் மாநகரில் சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஜங்சன், ஏற்காடு அடிவாரம் வரை இயங்கும் சுமார் 15 பஸ்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல பஸ்களில் ஸ்பீக்கர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த புதிய வசதி பயணிகள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
- தொலைபேசி எண் 0452-2528311 அல்லது Email : drc8311mdurai@gmail.com போன்றவை மூலமும் தொடர்பு கொள்ளலாம்.
- குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆவணக்காப்ப கத்தின் கிளை அலுவலகம் மதுரையில் இயங்கி வருகிறது. இங்கு அரசு துறைகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் பாது காக்கப்பட்டு வருகின்றன. மேலும், தொன்மையான மிகவும் பழமை வாய்ந்த கலை, பண்பாடு, நாகரீ கத்தை அடையாளமாகக் கொண்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஆவணங்களை தனிநபர், தனியார் நிறு வனங்கள். மடங்கள், சர்ச், மசூதி ஆகியோரிடம் பெற்று பாதுகாத்து வருகிறது.
தற்போது இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை தமிழக அரசு வழிகாட்டுதலின்படி இச்சமுதாயத்திற்கும், வருங்கால சந்ததியினருக்கும் பயனளிக்கும் வகையில் Computer / Internet Scanning / Digitization முறையில் பதிவு செய்து அதன் விவரங்களை அனைத்து ஊடகங்க ளுக்கும், புதுடெல்லி தேசிய ஆவணக்காப்பகத்திற்கும் தெரியப்படுத்த உள்ளது.
எனவே பொதுமக்கள், சமூகஆர்வலர்கள், தனியார் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள வர லாற்று ஆவணங்களை மாவட்ட கலெக்டர் அல்லது ஆராய்ச்சி அலுவலர், மாவட்ட ஆவணக்காப்பகம், எண். 9 பழைய இராமநாத புர மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், காந்தி நகர், மதுரை-20 என்ற முகவரிக்கு வழங்க வேண்டும். மேலும் தொலைபேசி எண் 0452-2528311 அல்லது Email : drc8311mdurai@gmail.com போன்றவை மூலமும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2 பேர் படுகாயம் அடைந்தனர்
- களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை
கன்னியாகுமரி:
களியக்காவிளை அருகே ஆர்சி தெரு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் (வயது 48). அவருடைய நண்பர் அதே பகுதியை சார்ந்த பாஸ்கர்.
இவர்கள் 2 பேரும் மார்த்தாண்டம் மார்க்கெட் டில் சுமை தூக்கும் தொழி லாளிகளாக வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் அதிகாலையிலே வேலைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று அதிகாலை நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
இரு சக்கர வாகனம் திருத்துவபுரம் பகுதியில் வந்தபோது எதிரே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துக் கொண்டிருந்தது.பேருந்து திருத்துவபுரம் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நண்பர்கள் இருவரும் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இதில் 2 பேரும் சாலை யில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் படுகா யமடைந்த 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து களியக்கா விளை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்கள் 2 பேரும் விபத்தில் சிக்கி படுகாய மடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வலியுறுத்தப்பட்டது
- பொதுமக்கள் பயன்பெறும் வகையில்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுத் தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன். தலைமை வகித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 43 வகையான திட்டங்கள் குறித்தும், இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, நடைபெறும் பணிகள், முடிவுற்ற பணிகள், பயனாளிகளின் விபரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து, ஆய்வு செய்து, அரியலூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்களால் பொதுமக்கள் பயன்பெறுவதுடன், அனைத்துத் திட்டங்களும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வகையில் அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கூட்டத்துக்கு கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.கண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சந்திரசேகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஈஸ்வரன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் எஸ்.முருகண்ணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ம.தீபாசங்கரி, மாவட்ட வழங்கல் அலுவலர் மு.ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் பனியன் ஏற்றுமதி நிறுவ–னம்
- ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
திருப்பூர், நவ.21-
திருப்பூரில் பின்னலாடை தொழில் பிரதானமாக நடந்து வருகிறது. நூல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக கடந்த சில மாதங்களாக பனியன் தொழில் மந்தநிலையில் காணப்படுகிறது. இந்தநிலையில் வெளிமாநில அரசு, தங்கள் மாநிலங்களில் பனியன் தொழில் தொடங்க திருப்பூர் பனியன் தொழில் துறையினருக்கு அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழு–வி–னர் திருப்–பூர் வந்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்தனர். ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், இணை செயலாளர் சின்னசாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாக செயலாளர் சக்திவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
மத்திய பிரதேச மாநில அரசின் வெளியுறவுத்துறை கூடுதல் செயலாளர் மணிஷ் சிங் தலையில் அதிகாரிகள் வந்தனர். ஏற்கனவே திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவர், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் அமைத்–துள்ளார். இதைத்தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தில் புதிதாக தொழில் தொடங்க வருபவர்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்து எடுத்துக்கூறினார்கள்.
கூடுதல் தொழிலாளர்கள், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உதவி, மின்கட்டண சலுகை, தொழில் முதலீட்டுக்கடன் சலுகை, ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 400 கிலோ மீட்டர் தூரத்தில் துறைமுகவசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சலுகைகள் குறித்து விளக்கி கூறினார்கள். தங்கள் மாநிலத்துக்கு வந்து பனியன் ஏற்றுமதி நிறுவனங்–களை தொடங்–கி–னால் சலுகை அளிப்பதாகவும், முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அழைப்பு விடுத்தனர்.
- சிறப்பு வகுப்புகள் மூலம் கூடுதல் கவனம் செலுத்தி, 100 சதவீத தேர்ச்சிக்கு வகை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- குறைந்தபட்ச கற்றல் கையேடு, வினா வங்கி ஆகியவற்றை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக வெளியிட வேண்டும்.
திருப்பூர் :
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முழு பாடத்திட்டத்தில் இருந்து அரையாண்டு தேர்வுக்கான வினாக்கள் கேட்கப்படும். பொது வினாத்தாள் பாணியில் இத்தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு இன்னும் 3வாரங்களே உள்ள நிலையில் பாடங்களை முடிக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாம் பருவ தேர்வு முடிவுகளை ஆய்வுக்கு உட்படுத்த, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்வியை தழுவியிருந்தால், உடனடியாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியை தழுவியோருக்கு பாடங்களை பகுதி பகுதியாக பிரித்து, சிறு சிறு தேர்வுகள் நடத்த வேண்டும். சிறப்பு வகுப்புகள் மூலம் கூடுதல் கவனம் செலுத்தி, 100 சதவீத தேர்ச்சிக்கு வகை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், அரையாண்டு தேர்வு நெருங்கியுள்ள நிலையில் பாடத்திட்ட அழுத்தம் காரணமாக கல்வியில் பின்தங்கிய மாணவர்கள், படிக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். புளூ பிரின்ட் வெளியிடாததால் முக்கிய பகுதிகளை மட்டும் படிக்க வைக்க முடிவதில்லை. குறைந்தபட்ச கற்றல் கையேடு, வினா வங்கி ஆகியவற்றை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
- பஸ் இயக்க விரைவு போக்குவரத்து கழகம் தயாராக உள்ளது.
- சபரிமலைக்கு எஸ்.இ.டி.சி., பஸ்கள் இயக்குவதில்லை.
திருப்பூர் :
சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் சென்னை, புதுச்சேரி, திருச்சி, மதுரை, பழனியில் இருந்து பம்பை, குமுளிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
தற்போது வரை ஈரோடு, கோவை, திருப்பூரில் இருந்து சபரிமலைக்கு எஸ்.இ.டி.சி., பஸ்கள் இயக்குவதில்லை. மாறாக கேரள மாநில விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இங்கு வந்து செல்கின்றன.
இது குறித்து விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், தங்கள் இருப்பிடத்தில் இருந்து சபரிமலைக்கு குழுவாக சென்று திரும்ப பக்தர்கள் விரும்பினால், பஸ் இயக்க விரைவு போக்குவரத்து கழகம் தயாராக உள்ளது. வழக்கமாக கி.மீ., க்கு பெறப்படும் கட்டணங்களே பெறப்படும். பஸ்களை முன்பதிவு செய்ய, 94450 14435 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.
- அலுவலகங்கள் வெறிச்சோடியது
- கோரிக்கைகள் நிறை வேற்றப்படாவிட்டால் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு
நாகர்கோவில்:
ஊரக வளர்ச்சித்துறை யில் ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்கள் உட்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்றும், நாளையும் சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்த னர். அதன்படி இன்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக ஊராட்சித்துறை அலுவலர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலகப் பணிகள் அனைத்தும் முற்றிலுமாக முடங்கியது. இதே போல் அகஸ்தீஸ்வரம், கல்குளம், தோவாளை உட்பட ஒன்பது ஒன்றிய அலுவலகங்களிலும் ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை.
கோரிக்கைகள் நிறை வேற்றப்படாவிட்டால் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் காலை முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரி வித்துள்ளனர்.






