search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Center"

    • புதுவை பல்கலைக்கழகத்தில் நிலைத்தன்மை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மையம் தொடங்கப்பட்டுள்ளது.
    • தலைவர் மதிமரன் நடராஜன், மையத்தின் நோக்கம் குறித்து விளக்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழகத்தில் நிலைத்தன்மை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் புதுவை பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை தலைவர் சுப்பிரமணியம் ராஜூ வரவேற்றார். கல்வி புதுமைகள், கிராமப்புற மறுசீரமைப்பு இயக்குனர் தரணிக்கரசு தொடக்க உரையாற்றினார். மையத்தின் தலைவர் மதிமரன் நடராஜன், மையத்தின் நோக்கம் குறித்து விளக்கினார்.

    துணைவேந்தர் குர்மீத்சிங் தலைமை வகித்து மையத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். பதிவாளர் ராஜ்நீஷ்பூதானி, சுற்றுச்சூழல் துறை தலைவர் ராமமூர்த்தி சிறப்புரை யாற்றினர். பெங்களூருவில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரக தலைமை நிர்வாக அதிகாரி ஜோனாஸ்பு ருன்ஸ்வி தனது கருத்துக்களை பகிர்ந்தார்.

    அரசியல், சர்வதேச ஆய்வுகள் துறை இணை பேராசிரியர் நந்தகிஷோர் நன்றி கூறினார்.

    • 22 பெண் சுகாதார தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
    • மக்களை தேடி மருத்துவ உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தமிழகத்தில் முதல் முறையாக மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்திற்காக உதவி மையத்தை மேயர் சண். ராமநாதன் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் மாநகர்நல அலுவலர் டாக்டர். சுபாஷ்காந்தி, மண்டல குழு தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் கவுன்சி லர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புநர் மற்றும் 22 பெண் சுகாதார தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் தொற்றா நோய் பிரிவு செவிலியர்கள், ஆய்வக நுட்புணர்கள் மற்றும் 22 பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாநகராட்சியின் இந்த மக்களை தேடி மருத்துவ உதவி மையத்தை 78458 49867 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • தமிழக அமைச்சர்கள் ராமச்சந்திரன் (சுற்றுலா), சி.வி.கணேசன் (தொழிலாளர் நலத்துறை) ஆகியோர் தொடங்கி வைத்தனர்
    • தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 11 இடங்களில் ரூ.95.06 கோடி மதிப்பில் புதிய அரசு தொழில்பயிற்சி நிலையங்கள் தொடங்கி வரலாற்று சாதனை படைத்ததாக அமைச்சர் பெருமிதம்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் அரசு ஐ.டி.ஐ நிறுவனம் இயங்கி வருகிறது. அங்கு தற்போது ரூ.34.65 கோடி மதிப்பில் 4.0 தொழில்நுட்பமையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது.

    இதில் தமிழக அமைச்சர்கள் ராமச்சந்திரன் (சுற்றுலா), சி.வி.கணேசன் (தொழிலாளர் நலத்துறை) ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டு புதிய மையத்தை குத்துவிள க்கேற்றி தொடங்கி வைத்த னர்.நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலா ளர் குமார்ஜெயந்த், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தொழிலாளர் நலன் மற்றும் திறன்மே ம்பாட்டுத்தறை அமைச்சர் சி.வி.கணேசன் நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது:-

    குன்னூர் அரசினர் தொழில்பயிற்சி மையத்தில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.34.65 கோடி மதிப்பில் 4.0 தொழில்நுட்ப மையம் திறக்கப்பட்டு உள்ளது.

    உலகளவில் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப புதிதாக உருவாகும் வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் டாடா நிறுவனத்தின் சமூக பங்களிப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

    குன்னுார் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பாண்டு 90 சதவீதம் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. அதனை தற்போது 100 சதவீதமாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    வெளிநாட்டில் உள்ள மாணவர்கள் பயிலும் சி.என்.சி மற்றும் ரோபோட்டிக்ஸ் போன்ற நவீன தொழில்நுட்ப கல்வியை தமிழக மாணவர்களும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    குன்னூர் தொழில்பயிற்சி மையத்தில் படித்தவர்களில் 83 சதவீதம் மாணவர்கள் பல்வேறு இடங்களில் பணியில் சேர்ந்து உள்ளனர். உயர்கல்வி முடித்தவர்கள் கூட வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொழில்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

    தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 11 இடங்களில் ரூ.95.06 கோடி மதிப்பில் புதிய அரசு தொழி ல்பயிற்சி நிலையங்கள் தெடங்கப்ப ட்டு உள்ளன. இது வரலாற்று சாதனை ஆகும்.

    அரசு தொழி ல்பயிற்சி நிலையத்தில் பயிற்சியை முடிக்கும் மாணவர்கள், உள்நாடு-வெளிநாடு களில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பணியம ர்த்தப்படுவர். எனவே மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் விடாமுயற்சியுடன், என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு படிக்க வேண்டும்.

    முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. மேலும் இங்கு படிக்கும் மாணவர்கள் சக நண்பர்களும் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து படிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.

    • இந்த மையமானது வட்டார அளவிலான கூட்டமைப்பு மூலம் செயல்படுத்தப்படுகிறது.
    • பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பிரத்தியேகமான அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் ,பட்டுக்கோட்டை ஆகிய இரண்டு வட்டாரங்களில் பாலின வள மையம் ,வானவில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மையமானது வட்டார அளவிலான கூட்டமைப்பு மூலம் செயல்படுத்தப்படுகிறது. குடும்ப வன்முறை மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பிரத்தியேகமான அமைப்பாக உருவாக்கப்பட்டு ள்ளது.

    இந்த மையம் தஞ்சாவூர் வட்டாரத்தில் வட்டார சேவை மையத்திலும், பட்டுக்கோட்டை வட்டா ரத்தில் ஆலடிக்கு முலை கிராம மையத்திலும் செயல்பட்டு வருகிறது.

    இந்தப் பாலின சேவை மையத்தி னை பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தொடர்புடைய வட்டார இயக்க மேலாளர்களை தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தஞ்சாவூர் வட்டார பாலின சேவை மையத்தை 8754990178 என்ற எண்ணிலும், பட்டுக்கோட்டை வட்டார சேவை மையத்தை 6369849825 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குமாரபாளையத்தில் பூஜ்ய கழிவுநீர் சுத்திகரிப்பு முறை இயக்க ஆலோசனை கூட்டம் மாவட்ட மாசுக்கட்டுபாட்டுத் துறை அலுவலர் மணி வண்ணன் தலைமையில் நடைபெற்றது.
    • இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் உமா பங்கேற்று பேசினார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பூஜ்ய கழிவுநீர் சுத்திகரிப்பு முறை இயக்க ஆலோசனை கூட்டம் மாவட்ட மாசுக்கட்டுபாட்டுத் துறை அலுவலர் மணி வண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் உமா பங்கேற்று பேசினார்.

    கூட்டத்தில் பறக்கும் படை சுற்றுச்சூழல் பொறி யாளர் வனஜா, பள்ளி பாளையம், குமாரபாளை யம், நாமக்கல் நகராட்சி ஆணையர்கள் தாமரை, ராஜேந்திரன்(பொ) சென்னுகிருஷ்ணன், மாசுக்கட்டுபாட்டு வாரிய உதவி பொறியாளர்கள் சந்தான கிருஷ்ணன், குண சேகரன், உதயன் சாயப் பட்டறை சங்க நிர்வாகிகள் அசோகன், பிரபாகரன் உள்ளிட்ட உட்பட அரசுத் துறை அலுவலர்கள், சாய மற்றும் சலவை தொழிற் சாலை உரிமையாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    பின்னர் கலெக்டர் உமா நிருபர்களிடம் கூறியதாவது:-

    சாயப்பட்டறை கழிவுகள் காவிரி ஆற்றில் கலப்பதாக புகார்கள் வரபெற்றன. இதன் அடிப்படையில் பல்வேறு சாயப்பட்டறை களில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. சாயப்பட்டறை மற்றும் சலவைத் தொழில் நலிவடையாமலும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம், பொதுமக்களின் சுகாதாரம் பாதிப்படையாமல் இருக்க பூஜ்ய கழிவு நீர் சுத்திகரிப்பு முறை இயக்கத்தினை நல்ல முறையில் நடைமுறைப்படுத்துவது அவசியமாகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே பூஜ்ய கழிவு நீர் சுத்திகரிப்பு முறையினை தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் 122 சலவை மற்றும் சாயப்பட்டறைகள் உள்ளன. மேலும் இந்த தொழிலை பாதுகாத்திட தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் நடந்தாய் வாழி காவேரி என்ற திட்டத்தின் கீழ் 303 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கையினை தயார் செய்து தமிழ்நாடு அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பரிசீலினை செய்து நிதி ஒப்பளிப்பிற்கு மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

    நிதி ஒப்புதல் செய்யப்பட்டவுடன் தேர்வு செய்யப்பட்டுள்ள பல்லக்கா பாளையம், எலந்தகுட்டை மற்றும் சவுதாபுரம் ஆகிய இடங்களில் பொது சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த பொது சுத்திகரிப்பு மையம் அமைப்பதன் மூலம் சலவை மற்றும் சாயப்பட்டறை கழிவு நீரற்ற சுத்திகரிப்பு முறை உறுதி செய்யப்படும். அதன் அடிப்படையில் பொது சுத்திகரிப்பு மையம் அமைக்கவுள்ள இடத்தினை நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மத்திய, மாநில அரசின் நிதி ஒதுக்கீடு பெறுவதற்காக அனைத்து பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் பொது சுத்திகரிப்பு மையம் அமைத்து சலவை மற்றும் சாயப்பட்டறைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்காக காவேரி புரம், வாஞ்சிநகரை சேர்ந்த காமாட்சி என்பவருக்கு போலியான வருமான சான்றிதழ் தயாரித்து வழங்கி உள்ளார்.
    • இ-சேவை மைய கணினி ஹார்டு டிஸ்க்குகளை வருவாய்த்துறையினர் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ராம மூர்த்தி நகரை சேர்ந்தவர் கோபால். இவருடைய மகன் மோகன்ராஜ் (வயது 33). இவர் மேட்டூர் காமத் பூங்கா எதிரே இ- சேவை மையம் நடத்தி வருகிறார்.

    வருவாய்த்துறையினர் ஆய்வு

    இவர் கொளத்தூரில் உள்ள பள்ளி ஒன்றில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்காக காவேரி புரம், வாஞ்சிநகரை சேர்ந்த காமாட்சி என்பவருக்கு போலியான வருமான சான்றிதழ் தயாரித்து வழங்கி உள்ளார்.

    மாணவர் சேர்க்கை ஆய்வின்போது இந்த போலி சான்றிதழ் கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் காமாட்சியின் குழந்தை, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் பள்ளியில் சேர்க்க முடியாமல் போனது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட காமாட்சி மேட்டூர் தாசில்தாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், மோகன்ராஜ் நடத்தி வந்த அழகி இ-சேவை மைய கணினி ஹார்டு டிஸ்க்குகளை வருவாய்த்துறையினர் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் விருதா சம்பட்டி, சின்னண்ணன் மகன் வேலாயுதம் என்ப வருக்கு வாரிசு சான்றிதழ், கமலேஷ் என்பவருக்கு ஓ.பி.சி. சான்றிதழ்களை அசல் சான்றிதழ் போலவே மோகன்ராஜ் தயாரித்து கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    4 பிரிவுகளில் வழக்கு

    இந்த மோசடி தொடர்பாக நவப்பட்டி குரூப் கிராம நிர்வாக அலு வலர் திருநாவுக்கரசு மேட்டூர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட இ-சேவை மைய உரிமையாளர் மோகன்ராஜ் மீது மோசடி, ேபாலியாக அரசு ஆவணம் தயாரித்தல், பொதுமக்களை ஏமாற்றி பணம் பெறுதல், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    தனிப்படை அமைப்பு

    இதை அறிந்த மோகன் ராஜ் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க மேட்டூர் போலீசார் சார்பில் தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது. ெதாடர்ந்து தனிப்படை போலீசார், தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • 5 ஆயிரத்து 440 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்திருந்தனர்.
    • மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு இன்று ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சை தாமரைப் பன்னாட்டு பள்ளி, தஞ்சை பிளாசம் பப்ளிக் பள்ளி, வல்லம் சாஸ்திரா பல்கலைக்கழகம், கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளி, கும்பகோணம் மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி, கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி, பட்டுக்கோட்டை பிரில்லியண்ட் பள்ளி ஆகிய 7 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

    5440 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்திருந்தனர்.

    மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

    முன்னதாக தேர்வு மையத்திற்கு காலையில் வந்த மாணவ- மாணவிகள் கடும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
    • அங்கன்வாடி மையங்களுக்கான மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தவமணி தலைமை வகித்தார்.

    மாவட்ட செயலாளர் பிரேமா முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் பொறுப்பா ளர்கள் சித்தரா, மாலதி, திரிபுரசுந்தரி மற்றும் சிஐடியு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

    குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ 26 ஆயிரமும், ஓய்வூதியமாக ரூ 9 ஆயிரமும் வழங்கிட வேண்டும்.

    மருத்துவ காப்பீடு தொகை மருத்துவ செலவுகளுக்கு ஏற்ப முழுமையாக வழங்கிட வேண்டும்.

    அங்கன்வாடி மைய பராமரிப்புக்காக வழங்கப்படும் ரூ 3 ஆயிரம் தொகையினை பணியாளர்க ளுக்கு நேரடியாக வழங்கிட வேண்டும். சிலிண்டர் மற்றும் உணவு செலவுகளுக்கான தொகையை முன்பணமாக வழங்கிட வேண்டும்.

    சிலிண்டருக்கு வழங்கப்படும் தொகை பில்லில் உள்ளவாறு முழுமையாக வழங்கிட வேண்டும்.

    அங்கன்வாடி மையங்களுக்கான மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்.

    காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.

    கோடை வெயிலின் தாக்கம் கருதி அங்கன்வாடிகளுக்கு உடனடியாக விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை காலத்தில் உலர் உணவு பொருட்களாக வழங்க வேண்டும்.

    10 ஆண்டுகள் பணி முடித்த தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும். மகப்பேறு விடுப்பு காலத்தை ஒரு வருடமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும்.

    பணியிட மாறுதல் அளித்திட வேண்டும்.

    இவைகள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் கலெக்டர் அலுவலகம் முன்பாக தொடர் காத்திருப்பு போரட்டத்திலும் ஈடுபட போவதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    • நீதிமன்றங்களில்‌ நிலுவையில்‌ இருக்கும்‌ வழக்குகள்‌ சமரச மையம்‌ மூலம்‌ தீர்த்துக்‌ கொள்ள முடியும்‌.
    • சமரச முறையிலும்‌ தீர்வு காணுமாறு மாவட்ட சமரச மைய முதன்மை மாவட்ட நீதிபதி கேட்டு கொண்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சமரச மையத்தில் வருகிற 16-ந்தேதி சமரச நாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஏற்கெ னவே நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் சமரச மையம் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.

    இதில் தனி நபர் தகராறு, பண வசூல் தகராறு, குடும்ப தகராறு, சொத்து தகராறு, காசோலை தகராறு, மின்சார வாரியம், தொழிலா ளர் நலம், உரிமையியல் மற்றும் இதர வழக்குகளுக்கு தீர்வு காணலாம்.

    சமரச மையம் மூலம் முடித்துக்கொள்ளும் வழக்கிற்கு மேல் முறையீடு கிடையாது. இந்த வழக்கு களை சமரச மையத்தில் பேச்சு வார்த்தைகள் மூலம் சமரச முறையில் தீர்வு காண்பதால், யார் வென்ற வர்? யார் தோற்றவர்? என்ற பாகுபாடு இன்றியும் உறவு முறைகள் தொடர்ந்து நீடிக்கவும், சமரச மையம் வழிவகை செய்கிறது.

    இதற்கு மேலாக சமரச மையம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமை யாக திருப்பிக்கொ டுக்கப்ப டும். எனவே பொதுமக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தங்களது வழக்கு களை சமரச மையத்திற்கு அனுப்பி சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணுமாறு மாவட்ட சமரச மைய முதன்மை மாவட்ட நீதிபதி கேட்டு கொண்டுள்ளார்.

    • இந்த ஆண்டு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்.
    • தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து வருகிற 31-ந் தேதி வரை இணையவழியாக விண்ணப்பிக்க இந்திய விமானப்படை விளம்பர அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அக்னி வீரர்களுக்கான இணையவழித் தேர்வு மே மாதம் 20-ந் தேதி நடைபெற உள்ளது.

    2002-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் மற்றும் 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ந் தேதி அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    தேர்வானது எழுத்துத்தேர்வு, உடல்தகுதித்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை என 3 முறைகளை கொண்டது.

    இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் இந்திய விமானப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றலாம்.

    அக்னிவீரர் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்.

    இந்த பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணி முடிந்தபிறகு 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த தேர்வு குறித்த வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிஅளவில் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் நேரில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தெரிவித்துள்ளது.

    கனவு ஏற்காடு திட்டம் சேர்வராயன் கோவில் திடலில் வானியல் தொலைநோக்கு மையம் கலெக்டர் கார்மேகம் தகவல்.
    ஏற்காடு:

    சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 45-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி நிறைவு விழா மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-

    ஏற்காடு மலைப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு நல்ல வருமானமும், வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என்ற உன்னத நோக்கத்துடன் கோடைவிழா மற்றும் மலர்க்காட்சி 8 நாட்கள் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த கோடை விழா மற்றும் மலர்க்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள ரோஜா பூங்கா, அரசு தாவரவியல் பூங்காக்கள், மரபியல் பூங்கா, அண்ணா பூங்கா, ஏரிப்பூங்காக்கள்  உள்ளிட்ட இடங்களை சுமார் 1 லட்சத்து 33 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து பார்வையிட்டுள்ளனர்.
     
     ஏற்காட்டினை சர்வதேச தரத்தில் முன்னேற்றுவதற்காக "நம்முடைய கனவு ஏற்காடு திட்டம்" என்ற ஒரு உன்னதமான திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் ஏற்காட்டின் மிக உயரிய இடமான சேர்வராயன் கோவிலில் வானியல் தொலைநோக்கி மூலம் வானத்தை கண்டுகழிக்கும் வகையிலும், அரசு அலுவலர்கள், காவலர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு புத்துணர்வு பயிற்சிக்காக ஒரு பயிற்சி திடல் அமைத்தல் மற்றும் மினி திரையரங்கம் அமைத்தல் உள்ளிட்டவைகள் கனவு ஏற்காடு திட்டத்தில் உள்ளது. 

    குறிப்பாக, ஏற்காடு மக்களின் அத்தியாவசியத் தேவைகளான கல்வி, குடிநீர், நியாய விலைக் கடைகள் மூலம் கிடைக்கப்பெறும் பொருட்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஏற்காட்டில் முகாம்கள் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    இதனைத் தொடர்ந்து, புகைப்படப்போட்டி, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டி, கால்பந்து போட்டி, கபாடிப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், கொழு கொழு குழந்தைப்போட்டிகள், சமையல் போட்டிகள் உள்ளிட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் சார்பில் வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம், காய்கறி வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் நினைவுப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை  கலெக்டர் கார்மேகம்  வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வம், வருவாய் கோட்டாட்சியர்கள் விஷ்ணுவர்த்தினி (சேலம்),  சரண்யா (ஆத்தூர்), தோட்டக்கலைத் துறையின் துணை இயக்குநர் (பொ)  கணேசன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) (ஆத்தூர்) டாக்டர் ஜெமினி, மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜனார்த்தனன், ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர்  முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    சேலம் பட்டர்பிளை மேம்பாலம் அருகே சென்டர் மீடியனில் மோதி லாரி விபத்துக்குள்ளானது.
    சேலம்:
     ஈரோடு மாவட்டம் பெருந்துறையில்  இருந்து நேற்றிரவு ஒரு லாரி இரும்பு
    லோடு ஏற்றி கொண்டு  விழுப்புரம்  மாவட்டம் உளுந்தூர் பேட்டைக்கு புறப்பட்டது. 

     இந்த லாரி  நள்ளிரவில் சேலம் பட்டர்பிளை மேம்பால பகுதியில் வந்து கொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் வி.புதூரை  சேர்ந்த  நாகராஜ் என்பவர்   ஒட்டி வந்தார். அப்போ து  திடீரென லாரி டிரைவரின்  கட்டுப்பாட்டை இழந்து  தாறு மாறாக ஓடியது. 

    பின்னர் சாலையில் நடுவில் உள்ள  சென்டர்  மீடியனில் மோதிய படி   நின்றது.   தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார்   சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர்  லாரியை மீட்டனர்.  
    ×