search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிற்சி"

    • தமிழ்நாடு பா.ஜனதா சார்பிலும் தனியாக அடையாள அட்டை வழங்கி உறுப்பினர்களை சேர்த்துள்ளார்கள்.
    • டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.

    தமிழகத்தில் பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை நாளையுடன் நிறைவடைகிறது. ஒரு கோடி பேரை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து பணியை தொடங்கினார்கள்.

    ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் உறுப்பினராக சேரலாம். வீடு தேடி வரும் நிர்வாகிகள் முன்னிலையில் மிஸ்டு கால் கொடுத்தும் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள முடியும்.

    மிஸ்டுகால் கொடுத்ததும் டெல்லி தலைமையில் இருந்து ஒரு அடையாள எண் வழங்கப்படும். அதன்படி உறுப்பினராக சேருபவரின் பெயர், முகவரி, தொழில், வாக்காளர் அடையாள அட்டை எண், தொகுதி, பூத் எண், எந்த வகுப்பை சேர்ந்தவர் என்ற பல விபரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இதில் எந்த விபரம் விடுபட்டாலும் கம்ப்யூட்டரில் பதிவாகாது.

    இப்படிப்பட்ட சிரமங்கள் இருப்பதால் உறுப்பினர் சேர்க்கை மந்தமாகவே நடக்கிறது. இதுவரை 30 லட்சம் பேர் சேர்ந்துள்ளார்கள்.

    இந்த உறுப்பினர் சேர்க்கையின் போது தமிழ்நாடு பா.ஜனதா சார்பிலும் தனியாக அடையாள அட்டை வழங்கி உறுப்பினர்களை சேர்த்துள்ளார்கள். இப்போது ஆன்லைன் உறுப்பினர்கள் எண்ணிக்கையையும், தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கை விபரத்தையும் ஒப்பிட்டு சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது.

    இதற்கிடையில் உறுப்பினர் சேர்க்கைக்கு கால அவகாசத்தை நீட்டித்து தரும்படி தமிழக பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.

    அடுத்த கட்டமாக உள்கட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அடுத்த மாதம் (நவம்பர்) முதல் வாரத்தில் கட்சி தேர்தல் தொடங்குகிறது. முதற்கட்டமாக கிளை, மண்டல தலைவர்கள், நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுகிறது.

    தேர்தல் பொறுப்பாளராக மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி, இணை பொறுப்பாளர்களாக மீனாட்சி, கதலி, ஜி.கே.செல்வகுமார் ஆகியோரை டெல்லி மேலிடம் நியமித்து உள்ளது.

    இவர்கள் 4 பேரும் டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்றனர். மேலிட வழி கர்டுதல்படி கட்சி தேர்தல் பணிகள் விரைவில் தொடங்கும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • கியர் மற்றும் கியர் இல்லாத இரு சக்கர வாகன பயிற்சி வகுப்புகளுக்கும் ஒரே விகிதத்தில் கட்டணம்.
    • தனியார் பயிற்சி பள்ளிகளுடன் ஒப்பிடும்போது 40 சதவீதம் வரை தள்ளுபடி.

    தனியார் பயிற்சி பள்ளிகளை காட்டிலும் நியாயமான கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (கேஎஸ்ஆர்டிசி) மாநில அளவிலான திட்டமான ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.

    விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் கேபி கணேஷ்குமார், கஜக்கூட்டம் எம்எல்ஏ கடகம்பள்ளி சுரேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கேஎஸ்ஆர்டிசியின் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் குறைந்த கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சிகளை வழங்குகிறது. இலகுரக மோட்டார் வாகனம் (எல்எம்வி) மற்றும் கனரக மோட்டார் வாகனம் (எச்எம்வி) உரிமம் பெற ஆர்வமுள்ளவர்கள் தலா ரூ.9,000க்கும், இருசக்கர வாகனப் பயிற்சி ரூ.3,500க்கும் பயிற்சி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கியர் மற்றும் கியர் இல்லாத இரு சக்கர வாகன பயிற்சி வகுப்புகளுக்கும் ஒரே விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    கார் மற்றும் இருசக்கர வாகனப் பயிற்சி ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய காம்போ கட்டணமாக ரூ.11,000க்கு பயிற்சி பெறும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த முயற்சி தனியார் பயிற்சி பள்ளிகளுடன் ஒப்பிடும்போது 40 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குகிறது.

    கனரக மோட்டார் வாகனம் பயிற்சிக்கு பொதுவாக ரூ. 15,000, இலகுரக மோட்டார் வாகனம் ஓட்டுவதற்கு ரூ. 12,000 முதல் ரூ. 14,000 வரை, தனியார் ஓட்டுநர் பள்ளிகளில் இருசக்கர வாகனப் பயிற்சிக்கு ரூ.6,000 செலவாகும்.

    இதற்கிடையில், டிரைவிங் ஸ்கூல் துறையில் கே.எஸ்.ஆர்.டி.சி.யின் நுழைவு ஓட்டுநர் தேர்வு சீர்திருத்தங்கள் குறித்து ஓட்டுநர் பள்ளி உரிமையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே விவாதத்தைத் தூண்டியுள்ளது.

    மாநிலம் முழுவதும் ஓட்டுநர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் இந்தப் பள்ளிகள் மூலம் தரப்படுத்தப்பட்ட பயிற்சி நடைமுறைகளை உறுதி செய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • கேண்டியாக் பார்க் மைதானத்தில் போதுமான வசதிகள் இல்லை.
    • இதனால் இந்திய வீரர்கள் பயிற்சிகள் செய்வதில் சிரமம் ஏற்பட்டது.

    நியூயார்க்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.

    இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.

    டி20 உலகக் கோப்பை தொடருக்காக நியூயார்க், டல்லாஸ், புளோரிடா உள்ளிட்ட பகுதிகளில் கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. பயிற்சி செய்வதற்காகவும் சில மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை தற்காலிக ஏற்பாடுகளாக மட்டுமே உள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    இதற்கிடையே, இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவில் 4 நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பயிற்சி செய்வதில் சிரமம் ஏற்படுவதாக இந்திய அணி வீரர்கள் குற்றம் சாட்டினர்.

    கேண்டியாக் பார்க் பகுதியில் பயிற்சி மேற்கொள்ளும் பகுதிக்கும், இந்திய அணி விளையாட உள்ள மைதானத்திற்கும் இடையில் நீண்ட தூரம் இருக்கிறது.

    பயிற்சிக்கு ஏற்றவாறு மைதானங்களில் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. எல்லாமே தற்காலிக ஏற்பாடுதான். பிட்சில் இருந்து அனைத்துமே தற்காலிகமானது என இந்தியா சார்பில் கூறப்பட்டுள்ளது.

    • கிராமங்களில் காளைகளை தயார்படுத்தும் பணியிலும், காளைகளை அடக்குவதற்காக வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
    • கடந்த முறை நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு ஆன்லைனில் பதிவு செய்வதை நிறுத்த வேண்டும்.

    திண்டுக்கல்:

    பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தயார்படுத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு விழா பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

    பொங்கல் பண்டிகையில் தொடங்கி அதன்பிறகு தொடர்ச்சியாக பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இதற்காக கிராமங்களில் காளைகளை தயார்படுத்தும் பணியிலும், காளைகளை அடக்குவதற்காக வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலை அடிவாரத்தை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து அதனை பராமரித்து வருகிறார். கடந்த 40 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வரும் இவர் தற்போது மரக்காளை, வீறிக்கொம்பு காளை, செவலக்காளை என 3 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்.


    இந்த காளைகளின் உடல் வலிமைக்காக தவிடு, உளுந்தம்குருணை, பருத்திவிதை, புண்ணாக்கு, பேரிச்சம்பழம் போன்ற ஊட்டச்சத்து உணவுகளை தினந்தோறும் வழங்கி வருகிறார். இதுதவிர காளைகளுக்கு நடைபயிற்சி, நீச்சல்பயிற்சி, ஓட்டப்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் தனது ஜல்லிக்கட்டு காளைகளுக்காகவே தோட்டத்தில் பிரத்யேகமாக பெரியஅளவில் நீச்சல் குளத்தை கட்டி வைத்துள்ளார்.

    அந்த காளைகளுக்கு மாடுபிடிவீரர்களை வைத்து சிறந்த முறையில் பயிற்சியும் அளித்து வருகிறார். தினந்தோறும் ஜல்லிக்கட்டு காளையுடன் மாடுபிடி வீரர்கள் அடக்க முற்படுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காளையின் உரிமையாளர் முருகன் தெரிவிக்கையில், இந்த 3 காளைகளையும் எனது குழந்தைகள் போல்தான். எனது குழந்தைகள் தினந்தோறும் சாப்பிட்டார்களா, நல்ல முறையில் விளையாடுகிறார்களா என்பதை கண்காணிப்பதை போல இந்த காளைகளையும் கவனித்து வருகிறேன்.

    ஜல்லிக்கட்டு போட்டியின் போது திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு ஊர்களுக்கும் சென்று எனது காளைகள் பரிசுகளை பெற்று வந்துள்ளன. எந்தவித பிரதிபலனும் இல்லாமல் நான் வளர்க்கும் காளைகளை ஜல்லிக்கட்டில் துள்ளிவிளையாடும்போது அந்த மகிழ்ச்சியே எனக்கு போதுமானது. தற்போது ஜல்லிக்கட்டு போட்டிக்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த முறை நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு ஆன்லைனில் பதிவு செய்வதை நிறுத்த வேண்டும். அப்போதுதான் அனைத்து மாடுகளும் போட்டியில் பங்கேற்க முடியும்.

    மாடுகள் போட்டியில் கலந்து கொள்ள டோக்கன்முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதேபோல ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கும் முன் காளைகளின் உரிமையாளர்களின் கருத்துகளையும் கேட்டறியவேண்டும் என்றார். 

    • தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் டாக்டர் மணி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் B.Ed மற்றும் TNTET Paper – II தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2023 ஆகும்.

    இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் வழிகாட்டுதல், சேலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.

    சேலம் மாவட்டத்தைச் சார்ந்த பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள் ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • அரியலூரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மூச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டது
    • மாணவ மாணவியர் மூச்சுப் பயிற்சியில் பங்கேற்றனர்

    அரியலூர்,

    அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு நினைவாற்றலை அதிகரிக்க, மூச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டது.கீழப்பழுவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய யோகா பயிற்சியாளர் ஜெய்சங்கர், கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மூச்சுப் பயிற்சியினை செய்து காண்பித்தார்.நிகழ்ச்சியில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிகில் ராஜ் கலந்து கொண்டார். ஆசிரியர்கள் தனலட்சுமி, செந்தில்குமரன், செவ்வேள், தங்கபாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன் மற்றும் மாணவ மாணவியர் மூச்சுப் பயிற்சியில் பங்கேற்றனர்.

    • அரியலூர் மாவட்ட மைய நுலகத்தில் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது
    • திருச்சி மத்திய மண்டல அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி துணை ஆட்சியர் என்.சக்திவேல் பேசினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில், மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் கலந்து கொண்ட திருச்சி மத்திய மண்டல அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி துணை ஆட்சியர் என்.சக்திவேல் , போட்டித் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். இந்நிகழ்ச்சியில் ஓய்வுப் பெற்ற முதுகலை உயிரியல் ஆசிரியை மா.தமிழரசி, சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை, வாசகர் வட்டத் தலைவர் கு.மங்கையர்கரசி, மாவட்ட நுலக அலுவலர் ரா.ஆண்டாள், முதன்மை நூலகர் ஜான்பாட்சா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி
    • அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அழைப்பு

    அரியலூர்,

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள பட்டதாரி ஆசி ரியர்களுக்கான ப ணி க்காலியிடங்களுக்கு கட்ட ணமில்லா பயிற்சி வகுப்பு கள் நவம்பர் 17-ந் தேதி முதல் நடைபெற்று வரு கிறது.

    மத்திய மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வாலிபர்களுக்கு அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் கட்டண மில்லா பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலை வாய்ப்பற்ற வாலிபர்களுக்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் உருவாக்கப்ப ட்டுள்ளது.

    இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் லில் , பல்வேறு போட்டித் தேர்வுக ளுக்கான மென்பாடக்கு றிப்புகள், மாதிரிவி னாத்தா ள்கள், காணொ ளிகள் உள்ளது.

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவி க்கப்பட்டுள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிக்காலியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற்று வருகிறது.

    இப்பணிக் காலியி டங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்களுடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆதார் அ ட்டை நகல் மற்றும் சுய விவரக்குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டல் மையத்தி னை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொ ள்ளப்படுகிறார்கள்.

    இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் வாலிபர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. அரிய லூர் மாவட்டத்தினை சார்ந்த போட்டித் தேர்வி னை எதிர் கொள்ளும் வாலிபர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்து ள்ளார்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புகளூர் தீயணைப்பு துறையினர் ஒத்திகை பயிற்சி

    வேலாயுதம்பாளையம் , 

    கரூர் மாவட்டம் புகளூர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் தீபாவளி பண்டி கையை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி புகளூர் செம்பட பாளையத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் நடைபெற்றது.

    பயிற்சியில் தீய ணைப்புத்துறை நிலைய அலுவலர் சரவணன் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்தும் விபத்தில் சிக்கிக் கொண்டவர்க ளை காப்பாற்று வது குறித்தும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தி னர்.அப்போது சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள் முன்னிலை யில் வெடிக்க வேண்டும். பட்டாசு மற்றும் புஸ்வா னங்கள் வெடிக்கும் போது காலணி அணிய வேண்டும். பட்டா சுகளை மைதா னங்கள் மற்றும் சமதளத்தில் வைத்து வெடிக்க வேண்டும். பட்டாசு மற்றும் புஸ்வா னங்கள் வெடிக்கும் போது அருகில் தண்ணீர் வாளி வைத்தி ருக்க வேண்டும். பட்டாசு வெடித்தவுடன் நன்றாக சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும்.

    அதேபோல் விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் எப்படி அவர்க ளை மீட்க வேண்டும் என்பது குறித்தும் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. மேலும் பல்வேறு ஆலோ சனைகளை தெரிவித்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்ப டுத்தினர். அதேபோல் பட்டாசு வெடிப்பது குறித்த ஒத்திகை பயிற்சி நடை பெற்றது.

    • பயிற்சியில் விவசாயிகளுக்கு விதைப்பு முதல் அறுவடை வரை ஆறு செயல் முறை விளக்க பயிற்சிகள் வழங்கப்படும்.
    • முன்னோடி விவசாயி ராமதாஸ் கலந்து கொண்டு ஜீவாமிர்தம் தயாரிப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

    அரவேணு.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டாரம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி அரக்கம்பை கிராமத்தில் நடைப்பெற்றது.

    பண்ணைப்பள்ளி பயிற்சியில் விவசாயிகளுக்கு விதைப்பு முதல் அறுவடை வரை ஆறு செயல் முறை விளக்க பயிற்சிகள் வழங்கப்படும். இப்பண்ணை பள்ளியில் கோத்தகிரி வட்டார துணை தோட்டக்கலை அலுவலர் ரமேஷ் கலந்து கொண்டு தோட்டக்கலை துறை மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார்.

    வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி சிந்தியா கலந்து கொண்டு காய்கறி சாகுபடி யில் அங்கக இடுபொ ருட்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். முன்னோடி விவசாயி ராமதாஸ் கலந்து கொண்டு ஜீவாமிர்தம் தயாரிப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

    • வேதாரண்யத்தில் மகளிர் சுய உதவி குழு பராமரிப்பு பயிற்சி நடந்தது.
    • 15 சுய உதவி குழு ஊக்குநர் மற்றும் பிரதிநிதிகள் பயிற்சி கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வட்டாரத்திற்கு உட்பட்ட 2023- 24 ஆண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவி குழு ஊக்கநர் மற்றும் பிரதிநிதிகளுக்கு ஆளுமை பொறுப்புணர்வு மற்றும் புத்தக பராமரிப்பு பயிற்சி நடைபெற்றது.

    மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீரங்கபாணி பயிற்சி அளித்தார்.

    நிகழ்ச்சியில் வட்டார இயக்க மேலாளர் அம்புரோஸ்மேரி தலைமை வகித்தார் மாவட்ட மகமை அலுவலர் பிரியா முன்னிலை வகித்தார்.

    இதில் 15 சுய உதவி குழு ஊக்குநர் மற்றும் பிரதிநிதிகள் பயிற்சி கலந்து கொண்டனர்.

    வட்டார ஒருங்கிணைப்பாளர் மேனகா நன்றி கூறினார்.

    • புதுக்கோட்டையில் நடப்போம் நலம் பெறுவோம் சுகாதார நடைபயிற்சி
    • அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

    புதுக்கோட்டை,

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் - 8 கி.மீ. சுகாதார நடைபயிற்சியினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் புதுக்கோட்டை கருணாநிதி மாவட்ட விளையாட்ட ரங்கிலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்திற்கான 8 கி.மீ. தூரம் கொண்ட பாதை மாவட்ட விளையாட்டு அரங்கத்திலிருந்து தொடங்கி விளையாட்டு மைதானத்தை ஒரு சுற்று வந்து மாலையீடு சென்று திரும்பவும் அதே வழியாக பால்பண்ணை ரவுண்டானம் சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 8 கி.மீ நடைபயிற்சியினை நிறைவு செய்தனர்.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மாலையீடு மற்றும் விளையாட்டு அரங்கில் 2 மருத்துவக்குழுக்களும், நடைபயிற்சி மேற்கொள்ளும் வழியில் 4 இடங்களில் குடிநீர் வசதியும் நடைபயிற்சி நிறைவடைந்தவுடன் பங்கேற்றவர்களுக்கு மூலிகை சூப் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

    மேலும் பிரதிமாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடப்போம் நலம் பெறுவோம் 8 கி.மீ. திட்டம் சுகாதாரத்துறை, அனைத்துதுறைகள், நடைபயிற்சி மேற்கொள்வோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களும் ஒருங்கிணைந்து இத்திட்டத்தில் பங்கேற்று திட்டத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றி அனைவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒன்றாக இணைவோம் என்று அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) ராம்கணேஷ் (புதுக்கோட்டை), நமச்சிவாயம் (அறந்தாங்கி), மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், நகராட்சி ஆணையாளர் ஷியாமளா,தாசில்தார் கவியரசன் மற்றும் சாத்தையா, நைனாமுகமது, பாலு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

    ×