என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt school"

    • சத்துணவு பொறுப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    • இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பள்ளி முதல்வருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் அரசின் மதிய உணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் உணவுகள் பரிமாறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சுகாதாரமற்ற முறையில் வழங்கப்பட்ட அந்த உணவுகளை மாணவர்கள் உண்ணும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளது.

    இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, ஷியோபூர் மாவட்ட ஆட்சியர், உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில் சம்பவம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சத்துணவு பொறுப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பள்ளி முதல்வருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 



    • மாணவிகள் செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொண்டால் கல்வியில் முழு கவனம் செலுத்த முடியும்.
    • நீங்களும் நன்கு படித்தால் பல உயரிய பதவிக்கு வரலாம். முயற்சி செய்யுங்கள்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் சென்னியப்பன். கார் டிரைவர். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களது மகள் வான்மதி. இவர் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தார்.

    அவர் படித்த காலத்தில் நடந்த பள்ளி விழாவில் அப்போதைய கலெக்டராக இருந்த உதயசந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவில் பங்கேற்றார்.

    அப்போது அவருக்கு கொடுக்கப்பட்ட மரியாதையை பார்த்து தானும் கலெக்டராக வேண்டும் என உறுதி கொண்டு வான்மதி படிக்கத் தொடங்கினார். அவரது விடாமுயற்சியால் நன்கு படித்து அவர் நினைத்தது போன்று கலெக்டராக தேர்ச்சி பெற்றார். தற்போது மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மாவட்டத்தில் கலெக்டராக வான்மதி பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் சொந்த ஊரான சத்தியமங்கலத்திற்கு வான்மதி வந்தார். இதையடுத்து அவர் தான் படித்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்தார்.

    அவருக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வான்மதி மாணவிகளிடம் பேசும்போது,

    தான் ஒரு கலெக்டரை பார்த்து கலெக்டராக வேண்டும் என லட்சியத்துடன் படித்து கலெக்டர் ஆனதாக கூறினார். மாணவிகள் செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொண்டால் கல்வியில் முழு கவனம் செலுத்த முடியும். நீங்களும் நன்கு படித்தால் பல உயரிய பதவிக்கு வரலாம். முயற்சி செய்யுங்கள் என மாணவிகளிடம் பேசினார்.

    • 15 பேரையும் சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தினர்.
    • நீதி குழும நடுவர்கள் விசாரணை நடத்தி 15 சிறார்களுக்கும் அறிவுரை வழங்கியதோடு சில நிபந்தனையும் விதித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள வன்னிகோனேந்தலில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் மிட்டாய் வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளான்.

    அப்போது அந்த பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் சேர்ந்து 9-ம் வகுப்பு மாணவனிடம் மிட்டாயை பிடுங்கிக் கொண்டதோடு, அவனை அவதூறாக பேசியுள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் தன்னுடன் படிக்கும் சக மாணவர்களை அழைத்துக் கொண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் இரு தரப்பினராக மாணவர்கள் பிரிந்து சண்டையிட்டு கொண்டனர்.

    அங்கிருந்த ஆசிரியர்கள் அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தும் மாணவர்கள் சமாதானமாகவில்லை. உடனடியாக தேவர்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து சுமார் 15 மாணவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் 15 பேரையும் சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தினர்.

    நீதி குழும நடுவர்கள் விசாரணை நடத்தி 15 சிறார்களுக்கும் அறிவுரை வழங்கியதோடு சில நிபந்தனையும் விதித்தனர். அந்த வகையில் காலாண்டு தேர்வு முடிந்தவுடன் அந்த வினாத்தாளில் உள்ள ஒரு மதிப்பெண் கேள்வி பதில்களை எழுதிக் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என்றும், ஒழுக்கமான முறையில் தலைமுடியை வெட்டி விட்டு வர வேண்டும் எனவும் உத்தரவிட்டு அவர்களை விடுவித்தனர்.

    • மாணவர்கள் கோஷ்டியாக பிரந்து மோதிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.
    • பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீசார் நடவடிக்கை.

    நெல்லை அரசு பள்ளியில் மாணவர்களிடையே கோஷ்டி மோதம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இருதரப்பையும் சேர்ந்த 13 மாணவர்களை கூர்நோக்கு இல்லத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

    அரசு பள்ளியில் 2 நாட்களுக்கு முன்பு மாணவர்கள் கோஷ்டியாக பிரந்து மோதிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.

    இதுதொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, இருதரப்பையும் சேர்ந்த 13 மாணவர்களை கூர்நோக்கு இல்லத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

    • தற்போது அரசு மருத்துவமனையில் சிறுமியும், குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்.
    • பள்ளி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட சமூக நலத்துறை துணை இயக்குநருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் ஷாஹாபூர் தாலுகாவில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி சம்பவத்தன்று மதியம் 2.30 மணியளவில் பள்ளியின் கழிப்பறையில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த சம்பவம் பள்ளி மற்றும் விடுதி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக தாயும், சேயும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது, ஷாஹாபூர் அரசு மருத்துவமனையில் சிறுமியும், குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்.

    இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி நிர்மலா, ஷாஹாபூர் போலீஸ் நலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாணவியிடம் விசாரித்தபோது தனது கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பது குறித்த திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதை அதிகாரிகள் ரகசியமாக வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே பள்ளி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட சமூக நலத்துறை துணை இயக்குநருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து பள்ளியின் முதல்வர் பாசம்மா, விடுதி வார்டன், அறிவியல் ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோரை கர்நாடக மாநில கல்வி நிறுவன நிர்வாக இயக்குநர் காந்தராஜு, இடைநீக்கம் செய்தார்.

    இது குறித்து போலீஸ் துணை ஆணையர் ஹர்ஷல் போயர் கூறுகையில், பள்ளி நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்க தவறிவிட்டது. இந்த வழக்கு குழந்தை திருமணம் உட்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

    கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் சஷிதர் கோசம்பே கூறுகையில், பள்ளி ஊழியர்கள் மாணவி குழந்தை பெற்ற சம்பவத்தை ரகசியமாக வைத்திருந்ததாகவும், அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்ய தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

    • அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளின் பாதுகாப்பைக் கைகழுவுவது தான் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமா?
    • தக்க விசாரணை நடத்தி கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நீதி பெற்றுத் தரவேண்டும்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் குடித்துவிட்டு வருவதோடு, தவறான முறையில் சீண்டி பாலியல் ரீதியாக அத்துமீறுவதாக மாணவிகள் குற்றஞ்சாட்டி காணொளி வெளியிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

    பள்ளியில் புகார் அளித்தால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததோடு, செய்முறைத் தேர்வு மதிப்பெண்ணையும் குறைத்துவிடுவர் என்று மாணவிகள் காணொளியில் பேசுவது அரசுப் பள்ளிகளில் பாலியல் புகார்கள் எப்படி கையாளப்படுகின்றன என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

    வேலியே பயிரை மேய்ந்தது போல அரசுப் பள்ளி ஆசிரியர்களே மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவம் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருவது ஏன்? மாணவிகள் தைரியமாக புகார் அளிக்கக் கூட திராவிட மாடல் ஆட்சியில் இடமில்லையா?

    ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் கல்வி தரமாக இருக்காது என்ற தவறான எண்ணம் பொதுப்புத்தியில் இருக்கையில், தற்போது மாணவிகளுக்கு பாதுகாப்பும் இருக்காது என்று கருத்து உருவாகிவிடாதா? அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளின் பாதுகாப்பைக் கைகழுவுவது தான் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமா?

    'அப்பா' என்ற பட்டத்தை உரிமை கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பாரா? மேலும், தக்க விசாரணை நடத்தி கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நீதி பெற்றுத் தரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.



    • கிராமத்தில் உள்ள பள்ளியில் 5 வகுப்புகளுக்கும் சேர்ந்து 4 மாணவர்கள் படித்து வந்தனர்.
    • ஒரே ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் பாடம் நடத்தி வருகிறார்.

    ஆந்திர மாநிலம் மடிகேரா பொம்மன பள்ளியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 170 மாணவ, மாணவிகள் படித்தனர். கிராமத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வேலை தேடி ஐதராபாத்திற்கு புலம் பெயர்ந்து சென்றனர்.

    இதனால் கிராமத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்தது. மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் தனியார் பள்ளி மோகத்தால் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்து வருகின்றனர். இதனால் கிராமத்தில் உள்ள பள்ளியில் 5 வகுப்புகளுக்கும் சேர்ந்து 4 மாணவர்கள் படித்து வந்தனர்.

    ஒரு சில காரணங்களால் 3 மாணவர்கள் பள்ளிக்கு வருவதே இல்லை. இந்த பள்ளியில் தற்போது ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். ஒரே ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் பாடம் நடத்தி வருகிறார்.

    • மாணவன் தனது வீட்டிற்கு சென்று புத்தகப்பைக்குள் அரிவாளை எடுத்து வைத்துக்கொண்டான்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களை அழைத்து விசாரித்துள்ளனர்.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள வெள்ளாளங்குளம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் பிளஸ்-2 படிக்கும் மாணவன் ஒருவன் சம்பவத்தன்று சக மாணவனை விளையாட்டாக தலையில் தட்டியுள்ளான். இதைப்பார்த்து அந்த மாணவன் கோபம் அடைந்து திட்டியுள்ளான்.

    அதன் பின்னர் சக மாணவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி உள்ளனர். ஆனாலும் தன்னை தலையில் தட்டிய மாணவர் மீது தொடர்ந்து ஆத்திரத்தில் இருந்த அந்த மாணவன் தனது வீட்டிற்கு சென்று புத்தகப்பைக்குள் அரிவாளை எடுத்து வைத்துக்கொண்டான்.

    பின்னர் மறுநாள் பள்ளிக்கு வந்தபோது, தனது தலையில் தட்டிய சக மாணவனை அவன் கொண்டு வந்திருந்த அரிவாளை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன் தனது ஆசிரியரிடம் தகவலை தெரிவித்துள்ளான்.

    இதுகுறித்து உடனடியாக சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களை அழைத்து விசாரித்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து அரிவாள் வைத்திருந்த மாணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவர்கள் சென்று வர இலவச வாகன வசதி மற்றும் அரசின் அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது.
    • ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கை குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    ஊட்டி:

    தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பெற்றோர்கள் ஆங்கில புலமைக்காக தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க விரும்புகிறார்கள்.

    இதனால் பெரும்பாலான அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைந்து விட்டது.

    குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் குக்கிராமங்களில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகள் மூடப்பட்டு விட்டன.

    மாணவர்கள் வருகை குறைந்து வரும் நிலையில், பள்ளிகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கி வருகின்றனர்.

    இதுபற்றிய விவரம் வருமாறு:- நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கீழுர் என்ற பகுதி உள்ளது. இங்கு கோக்கலாடா அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் இந்த பள்ளி சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.

    இதையடுத்து ஊர் பொது மக்கள் மற்றும் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் முயற்சியால் பள்ளி 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

    இங்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 42 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை தொடர்ந்து அதிகரிக்க ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.

    மாணவர்களின் கல்வி நலனில் மட்டும் அக்கறை செலுத்தினால் போதாது என நினைத்த ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் தற்போது பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் வரை செலுத்துவதாக உறுதி அளித்து துண்டு பிரசுரங்களை வழங்கி, மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்ந்தால் பள்ளி நிர்வாகம் சார்பில் அந்த மாணவரின் வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட உள்ளது.

    மேலும் 5-ம் வகுப்பு வரை எந்த வகுப்பில் சேர்ந்தாலும், ரூ.5 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.

    6-ம் வகுப்பிற்கு ரூ.5 ஆயிரம், 7-ம் வகுப்பிற்கு ரூ.4 ஆயிரம், 8-ம் வகுப்பு சேர்ந்தால் ரூ.3 ஆயிரமும், 9-ம் வகுப்பில் சேர்வோருக்கு ரூ.2 ஆயிரமும் டெபாசிட் செய்யப்பட உள்ளது.

    இதே பள்ளியில் பயிலும் இந்த மாணவர்கள் 10-ம் வகுப்பு முடித்து செல்லும் போது அந்த டெபாசிட் முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர 1 செட் சீருடை, டிரக் சூட்-1 செட், ஸ்கூல் பேக், காலணி, நோட்டு புத்தகங்கள், மாணவர்கள் சென்று வர இலவச வாகன வசதி மற்றும் அரசின் அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது.

    தற்போது பள்ளி திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க இந்த பள்ளிகளை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார், ஆசிரியைகள் மோனிஷா, வள்ளி உள்ளிட்ட ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கை குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரக்கூடிய சூழ்நிலையில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக இதுபோன்று ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள், பள்ளியில் சேரும் மாணவர்களின் வங்கி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து, மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க எடுத்து வரும் முயற்சிக்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

    • பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் என 2 பேர் பணிபுரிந்த நிலையில் கடந்த மாதம் தலைமை ஆசிரியர் ஓய்வு பெற்றார்.
    • பேச்சுத் துணைக்கு, விளையாடுவதற்கு கூட யாரும் இல்லாததால் குழந்தை பள்ளிக்கு செல்வதற்கு பயப்படுகிறாள்.

    தொண்டி:

    திருவாடானை யூனியனில் 112 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகள் இன்று கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கப்படுகிறது. இந்நிலையில் தொண்டி அருகே தளிர் மருங்கூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஒரே ஒரு மாணவிக்காக மட்டுமே பள்ளி திறக்கப்பட உள்ளது.

    இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெறாத நிலையில் கடந்த ஆண்டு 5-ம் வகுப்பில் ஒரு மாணவன், 2-ம் வகுப்பில் ஒரு மாணவி என இருவர் மட்டுமே படித்தனர்.

    இந்த ஆண்டு இப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்த மாணவன் இங்கிருந்து 6-ம் வகுப்புக்கு வேறு பள்ளிக்கு செல்கிறான். இதனால் 2-ம் வகுப்பில் இருந்து 3-ம் வகுப்புக்கு செல்லும் ஒரே ஒரு மாணவி மட்டும் தற்போது படித்து வருகிறாள்.

    இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் என 2 பேர் பணிபுரிந்த நிலையில் கடந்த மாதம் தலைமை ஆசிரியர் ஓய்வு பெற்றார். இதனால் தற்போது ஒரு உதவி ஆசிரியர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார். தற்போது வரை இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை ஏதும் நடைபெறாத நிலையில் இன்று ஒரே ஒரு மாணவிக்காக மட்டுமே அரசு பள்ளி திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், தளிர்மருங்கூர் அரசு பள்ளியில் மாணவர்கள் இல்லாவிட்டால் பள்ளியை மூடி விடுவார்கள் என்று தெரிந்ததால் தனியார் பள்ளியில் படித்து வந்த என் குழந்தையை இந்த பள்ளியில் சேர்த்தேன். இப்போது என் மகள் ஒருவர் மட்டுமே படிக்க உள்ளார். பேச்சுத் துணைக்கு, விளையாடுவதற்கு கூட யாரும் இல்லாததால் குழந்தை பள்ளிக்கு செல்வதற்கு பயப்படுகிறாள். இப்பள்ளியில் குழந்தைகள் இல்லாத நிலையில் இப்பள்ளி மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே அரசு பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்களை அழைத்து பேசி மாணவர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.

    • இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகளும் உத்தரவிட்டனர்.
    • சிகிச்சை முடிந்ததும் ஆசிரியர் மோகனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

    சென்னை:

    சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மதுரவாயலை சேர்ந்த 13 வயது மாணவி ஒருவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மோகன் மாணவியை தவறான கண்ணோட்டத்திலேயே பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவி வகுப்பறையில் தனியாக இருந்த போது ஆசிரியர் மோகன் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். இது பற்றி மாணவி பயந்து போய் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார்.

    ஆனால் அறிவியல் ஆசிரியர் மோகன் மாணவியிடம் காம லீலையில் ஈடுபட்டது பற்றி பள்ளியில் பணியாற்றி வரும் வேறு ஒரு ஆசிரியருக்கு தெரிய வந்தது. அவர் இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் பள்ளிக்கல்வித்துறையில் புகார் அளித்தார்.

    இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகளும் உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து மாணவியின் பெற்றோருக்கும் தங்கள் மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தகவல் தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் தாயார் விருகம் பாக்கம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஆசிரியர் மோகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையின் போது ஆசிரியர் மோகன் திடீரென மறைத்து வைத்திருந்த 25 தூக்க மாத்திரைகளை எடுத்து விழுங்கினார். இதில் மயக்கம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு ஆசிரியர் மோகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்ததும் ஆசிரியர் மோகனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கல்வி துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் விருகம்பாக்கம் அரசு பள்ளியில் படித்து வந்த சக மாணவிகள் மற்றும் பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் கிடக்கின்றன.
    • பொதுமக்கள் அமரும் இடத்தில் உள்ள மேற்கூரையின் இரும்பு கம்பிகள் சிதிலமடைந்து கிடக்கிறது.

    கே.பி.அக்ரஹாரா:

    பெங்களூரு கே.பி.அக்ரஹாரா மாகடி ரோட்டில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தை பள்ளி மாணவ-மாணவிகள் மட்டுமின்றி கே.பி.அக்ரஹாரா, மாகடி ரோட்டை சேர்ந்த இளைஞர்களும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மைதானத்தில் தினமும் ஏராளமானோர் விளையாடி வருகிறார்கள். இங்கு பொதுமக்கள் அமருவதற்காக இருக்கைகளும் அமைக்கப்பட்டிருக்கிறது.

    இந்த நிலையில் தற்போது அந்த மைதானம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. அங்குள்ள இருக்கைகள் சேதமடைந்து கிடப்பதுடன், செம்மண் நிறத்தில் காட்சி அளிக்கிறது. மேலும் ஆங்காங்கே குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.

    மேலும் பொதுமக்கள் அமரும் இடத்தில் உள்ள மேற்கூரையின் இரும்பு கம்பிகள் சிதிலமடைந்து கிடக்கிறது. சில கம்பிகள் சரியான பிடிப்பு இல்லாமல் உள்ளன. இதற்கிடையில் இரவு நேரத்தில் சிலர் விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து மதுபானம் குடிப்பதுடன், கஞ்சா புகைக்கின்றனர். இதனால் கல்வி நிலையம், விஷமிகளின் கூடாரமாக மாறிவிட்டது. அங்கு கிடக்கும் மதுபான பாக்கெட்டுகள், சிகரெட்டுகளை பார்த்து மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லக்கூடும்.

    எனவே மாநகராட்சி அதிகாரிகள் விளையாட்டு மைதானத்துக்குள் கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றுவதுடன், இருக்கையையும் சீரமைத்து கொடுக்க வேண்டும். அதேபோல மைதானத்தில் அமர்ந்து மது குடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    ×