search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "practice"

    • வேதாரண்யத்தில் மகளிர் சுய உதவி குழு பராமரிப்பு பயிற்சி நடந்தது.
    • 15 சுய உதவி குழு ஊக்குநர் மற்றும் பிரதிநிதிகள் பயிற்சி கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வட்டாரத்திற்கு உட்பட்ட 2023- 24 ஆண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவி குழு ஊக்கநர் மற்றும் பிரதிநிதிகளுக்கு ஆளுமை பொறுப்புணர்வு மற்றும் புத்தக பராமரிப்பு பயிற்சி நடைபெற்றது.

    மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீரங்கபாணி பயிற்சி அளித்தார்.

    நிகழ்ச்சியில் வட்டார இயக்க மேலாளர் அம்புரோஸ்மேரி தலைமை வகித்தார் மாவட்ட மகமை அலுவலர் பிரியா முன்னிலை வகித்தார்.

    இதில் 15 சுய உதவி குழு ஊக்குநர் மற்றும் பிரதிநிதிகள் பயிற்சி கலந்து கொண்டனர்.

    வட்டார ஒருங்கிணைப்பாளர் மேனகா நன்றி கூறினார்.

    • பொரும்பூர் அகஸ்தீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.
    • பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து மாணவர்களுக்கு களப்பயிற்சி அளிக்கப்பட்டது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து களப்பயிற்சி அளிக்கப்பட்டது.

    அக்.21-ம் தேதி தொடங்கி நடைபெறும் ஒருவார முகாமின் 2-வது நாளாக பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி குறித்த நேரடி கள பயிற்சி ஐ.சி.ஐ.சி.ஐ. பவுண்டேசன் சார்பாக வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர் தலைமை வகித்தார்.

    நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செந்தில் வரவேற்றார்.

    பயிற்சியில் ஐசிஐசிஐ பவுண்டேசன் சார்பாக சிவானந்தம், இயற்கை விவசாயி கணேசன், வீரசிம்மன் ஆகியோர் கலந்துகொண்டு பாரம்பரிய நெல் ரகங்கள், அதன் மருத்துவ குணங்கள் குறித்தும் இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் செய்முறை குறித்த நேரடி கள பயிற்சியை வழங்கினர்.

    முன்னதாக, இப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் குத்தாலம் லயன்ஸ் சங்கத்துடன் இணைந்து பொரும்பூர் அமிர்தானந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் மற்றும் செல்லியம்மன் கோவில்களில் உழவா ரப்பணி மேற்கொண்டனர்.

    கோவில் வளாகத்திலும் மதிற்சுவரை சுற்றியுள்ள பகுதியிலும் இருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டு கோவில் வாசலில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இதில், குத்தாலம் லயன்ஸ் சங்கத் தலைவர் பார்த்திபன், விஜயசரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மருத்துவ சங்கப் பொருளாளர் டாக்டர். சுந்தரமூர்த்தி, மருத்துவ சங்க தேசிய செயற்குழு உறுப்பினர் டாக்டர். ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • டாக்டர்.பாலமுரளி,டாக்டர்.பிரபலதா மற்றும் மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த டாக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    இந்திய மருத்துவ சங்கம், திருப்பூர் டெக்ஸ் சிட்டி கிளை, திருப்பூர் மாவட்ட காவல்துறை இணைந்து நடத்திய போலீசாருக்கான மருத்துவ முதலுதவி சிகிச்சை பயிற்சி முகாம் பல்லடம் வனாலயத்தில் நடைபெற்றது. இந்திய மருத்துவ சங்கம் டெக்ஸ் சிட்டி கிளை தலைவர் டாக்டர் ஏஜாஸ் அன்சாரி தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்ட் கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்ட் சவுமியா,மருத்துவ சங்கப் பொருளாளர் டாக்டர். சுந்தரமூர்த்தி, மருத்துவ சங்க தேசிய செயற்குழு உறுப்பினர் டாக்டர். ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் கார்த்திகேயன் வரவேற்றார். திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் இந்த பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசுகையில்:- எங்கு விபத்துக்கள் ஏற்பட்டாலும் முதலில் அழைப்பது போலீசாரைத்தான். எனவே போலீசார் முறையான முதலுதவி சிகிச்சையை தெரிந்து வைத்துக் கொண்டால் பல உயிர்களை காப்பாற்ற முடியும். அதற்காகத்தான் இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. விபத்து ஏற்பட்ட இடத்தில் பாதிக்கப்பட்டவர்களை கையாளும் முறை, அவர்களுக்கு அளிக்க வேண்டிய உடனடி முதலுதவி சிகிச்சை ஆகியவற்றை, இது குறித்து பயிற்சி பெற்ற போலீசார் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்தால், பின்னர் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்பு எளிதில் குணம் அடைய வாய்ப்புகள் அதிகம்.

    எனவே போலீசார் முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சியை அறிந்து கொள்வது அவசியமாகிறது. இவ்வாறு அவர் பேசினார்.இந்த பயிற்சி முகாமில் டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை குறித்து செயல்முறை விளக்கத்தை செய்து கான்பித்தனர். விபத்து ஏற்பட்டு கை, கால் முறிவு, மரண தருவாயில் உள்ளவரை காப்பாற்றுவது, பெரிய விபத்துக்களில் இருந்து மீட்பது, தீ விபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது,பின்னர் சிகிச்சை முறை அளிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.பின்னர் முதலுதவி சிகிச்சை பயிற்சி பெற்ற போலீசாருக்கு சான்றிதழ்களை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், டாக்டர்.பாலமுரளி,டாக்டர்.பிரபலதா மற்றும் மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த டாக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

    • கறவை மாடு வளா்ப்பு பயிற்சி நாளை 12-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
    • கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி நாளை 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி நாளை 12-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி நாளை 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இந்தப்பயிற்சியில் பங்கேற்று கறவை மாடு வளா்ப்பு தொடா்பான சந்தேகங்களைத் தெளிவு படுத்திக்கொள்ளலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421- 2248524 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாவட்ட, மத்திய திட்டங்கள் வேளாண் துணை இயக்குனர் புனிதா தலைமை வகித்தார்.
    • 2023 - 24ம் ஆண்டு நஞ்சில்லா வேளாண் விளை பொருட்கள் உற்பத்திக்காக வேளாண்துறையால் ஆர்வம் உள்ள 60 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    உடுமலை:

    ஆனைமலை வட்டார வேளாண் விரிவாக்க மையம் சார்பில், பாரம்பரிய வேளாண் மேம்பாட்டு திட்டம் செயல்படுகிறது. 2023 - 24ம் ஆண்டு நஞ்சில்லா வேளாண் விளை பொருட்கள் உற்பத்திக்காக வேளாண்துறையால் ஆர்வம் உள்ள 60 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த விவசாயிகள் மூன்று ஆண்டு காலத்தில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாக இயற்கை வேளாண் இடுபொருட்களை தங்கள் தோப்பிலேயே தயாரித்து தென்னை மற்றும் பிற பயிர்களுக்கு குறைந்த செலவில் பயன்படுத்துவது குறித்து, ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பயிற்சி நடந்தது.

    மாவட்ட, மத்திய திட்டங்கள் வேளாண் துணை இயக்குனர் புனிதா தலைமை வகித்தார். ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். பெரம்பலுார் மாவட்ட சர்வதேச அங்ககசான்றிதழ் பெற்ற விவசாயி மணிவாசன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

    பயிற்சியில், தோப்பினை சுற்றி உயிர்வேலியாக சவுக்கு, வேம்பு போன்ற மரங்கள் நெருக்கமாக வளர்த்தல், மழைக்காலங்களில் ரசாயன உரங்கள் பயன்படுத்தும் விவசாய நிலங்களில் இருந்து வரும் மழைநீர் மற்றும் பாசன நீரை தனியே மடை அமைத்து வெளியேற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

    மேலும் 20 வகையான பயறு, சிறுதானிய, எண்ணெய் வித்து பலதானியங்கள், விதைப்பு செய்து, 20 -30 நாட்களுக்குள் மடக்கி உழுதல், தென்னை மட்டை போன்ற பண்ணை கழிவுகளை, 3 அடிக்குள் பண்ணையிலேயே மட்க வைத்தல் குறித்து விளக்கப்பட்டது.பஞ்ச காவ்யா, ஜீவாமிர்தம், மீன்கரைசல் ஆகியவற்றை பயிருக்கு தெளிப்பதால், பயிரில் ஏற்படும் வளர்சிதை மாற்ற நன்மைகள், தயாரிக்கும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

    நன்கு மக்கிய மண் புழு உரம், ஒரு ஆண்டு மக்கிய மாட்டு எரு பயன்படுத்துவதை விவசாயிகள் உறுதி செய்ய வேண்டும். முதலாண்டில் இம்முறைகளை திட்டமிட்டு தோப்புகளில் செயல்படுத்தினால், தரம் மற்றும் விளைச்சலில் குறைவு ஏற்படாது.

    இம்முறையை தொடர்ந்து கடைபிடிப்பதால், சர்வதேச ஏற்றுமதியில் ஈடுபடவும், இவ்விவசாய குழுவை சார்ந்த விவசாயிகளின் விளைபொருட்களின் சந்தை விற்பனை விலையை விட பலமடங்கு அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வேளாண் முன்னேற்ற குழுவினருக்கான முன்பருவ பயிற்சி நடைபெற்றது.
    • ஒரு குடும்பத்திற்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.

    மெலட்டூர்:

    அம்மாபேட்டை அடுத்த வடக்குமாங்குடி கிராமத்தில் அம்மாபேட்டை வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை தொழில் நுட்பக்குழு சார்பில் கிராம வேளாண் முன்னேற்ற குழுவினருக்கான முன்பருவ பயிற்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வடக்கு மாங்குடி ஊராட்சி தலைவர் கலைச்செல்வி கனகராஜ் தலைமை தாங்கினார்.

    துணை தலைவர் அப்துல் நாசர் முன்னிலை வகித்தார்.

    அட்மா திட்ட வட்டார தொழில் நுட்பக்குழு மேலாளர் மாதா லெட்சுமி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசுகையில்:-

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வடக்கு மாங்குடி பகுதி விவசாயி களுக்கு ஒரு குடும்பத்திற்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.

    மேலும், நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் இலவச பைப்புகள் மற்றும் 50 சதவீத மானியத்தில் சிங் சல்பேட், கடப்பாரை, மண்வெட்டி, இரும்பு பாண்டு, கைதெளிப்பான், பவர் ஸ்பிரே, ஆயில் இன்ஜின் ஆகியவை வழங்கப்படும்.

    மேலும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் டிராக்டர் உள்பட பல்வேறு வேளாண் உபகரணங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    இதில் உதவி வேளாண் அலுவலர் விஜயகுமார் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் அட்மா திட்ட உதவி மேலாளர் மங்களேஸ்வரி நன்றி கூறினார்.

    • சோலார் மின்வேலி குறித்து விழிப்புணர்வு மற்றும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன
    • வனப்பணியாளர்கள், வேட்டைதடுப்பு காவலர்களுக்கு மழை-குளிரை தாங்கும் மழை கோட்

    குனியமுத்தூர்,

    கோவை வனக்கோட்டம் மதுக்கரை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சரக அலுவலர் சந்தியா தலைமையில் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் கரடிமடை, மங்கலப்பாளையம், பச்சனாம்பதி, வாசவி பார்ம் பகுதி, தீத்திபாளையம், கரடிபாளையம், மத்திப்பாளையம், மோலப்பாளையம், காளியமங்கலம், பெரு மாள்கோவில்பதி, நாதேகவுண்டம்புதூர், நல்லூர்வயல் ஆகிய பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    அப்போது சோலார் மின் வேலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேட்டுப்பாளையத்தை சேர்ந்த குரோவ்ன் சோலார் பவர் பென்சிங் நிர்வாக இயக்குனர் ஜெயந்த் விவசாயிகளுக்கு நேரடி செயல்முறை விளக்கம் அளித்தார்.

    நிகழ்ச்சியில் மதுக்கரை வனச்சரக பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், ஆலந்துறை கிழக்கு மின் பணியாளர்கள், ஆலந்துறை பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் வன அதிகாரிகள் பதிலளித்தனர்.

    தொடர்ந்து வனச்சரக அலுவலர் சந்தியா விவசாயிகளுக்கு இரவு நேரங்களில் பாதுகாப்புக்கு பயன்படும் டார்ச் லைட்டுகளை வழங்கினார். வனப்பணியாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மழை-குளிரை தாங்கும் மழை கோட் வழங்கப்பட்டது.

    • கணினி அறிவியல் துறை பேராசிரியர் நிலவு வரவேற்புரை ஆற்றினார்.
    • கணினி அறிவியல் துறை 2-ம் ஆண்டு மாணவர் ஆகாஷ் நன்றி கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் பைத்தான் பற்றிய பயிற்சி நடைபெற்றது .

    இதனை கல்லூரி முதல்வர் அங்கம்மாள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர் இன்போசிஸ்டம் நிர்வாக இயக்குநர் பழனியப்பன், பயிற்சியாளர்கள் அபிநயா, அகல்யா ஆகியோர் மாணவர்களுக்கு பைத்தான் குறித்து பயிற்சியளித்தனர். கணினி அறிவியல் துறை பேராசிரியர் நிலவு வரவேற்புரை ஆற்றினார்.

    தமிழ் துறை தலைவர் இராஜா வரதராஜா வாழ்த்துரை வழங்கினார். கணினி அறிவியல் துறை தலைவர் முருகானந்தம் பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

    கணினி அறிவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவர் ஆகாஷ் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • வானவில் மன்ற கருத்தாளர்கள் சுமார் 61 பேர் கலந்து கொண்டனர்.
    • இயற்பியல் வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கில் வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான மண்டல அளவிலான ஒருநாள் பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சியில் தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த வானவில் மன்ற கருத்தாளர்கள் 61 பேர் கலந்து கொண்டனர். பயிற்சியை தஞ்சைமாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்க ல்வித்துறை உதவித்திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றினார்.

    தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்துணைத்தலைவர் பேராசிரியர் சுகுமாரன், மாவட்டச்செயலர் முருகன் வாழ்த்துரை வழங்கினர்.

    மாநிலகருத்தாளர்கள் ராஜபாண்டி, சங்கரலிங்கம், அறிவரசன், பாரதிராஜா மற்றும்அருண்குமார் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டு, இழுத்தல் மூலம் விசையின் செயல்பாடு, பலூன் செயல் முறை மூலம் அழுத்தம் தொடர்பான பயிற்சி, கூடைப்பந்து விளையாட்டு மூலம் குழந்தைகளின் கவனத்தை ஒருங்கிணைத்தல் மேலும் இயற்பியல் வேதியியல் உயிரியல் மற்றும் கணிதம் தொடர்பான பயிற்சிகள் வழங்கினர்.

    பயிற்சியில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, மாவட்டங்களை சார்ந்த ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை ஸ்டெம் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் தஞ்சைமாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி த்துறை ஸ்டெம் ஒருங்கி ணைப்பாளர் சவுமியநா ராயணன் நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 3,359 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 17.09.2023 ஆகும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 3,359 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இத்தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 17.09.2023 ஆகும்.

    இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 29-ந் தேதி காலை 10 மணியளவில் தொடங்கப்பட உள்ளது.

    இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.

    தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • வழக்கமாக தீர்த்தம் கொண்டு செல்லும் காளை மாட்டுடன் புதியதாக வளர்க்கப்பட்ட காளை மாட்டினை பயிற்சிக்காக ஓட்டி சென்றனர்.
    • புதிய காளை மாடு பயிற்சி பெற்ற காளை மாடு போல் வெகு எளிதாக படி வழியில் ஏறியது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலுக்கு மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்த கிணற்றில் இருந்து காலை 8 மணி பூஜைக்கு பொதி காளைகள் மூலம் 1,320 படிவழியாக தீர்த்த குடங்கள் கொண்டு செல்வது பல வருடங்களாக தொற்று தொட்டு இருந்து வரும் வழக்கம்.

    இந்த அதிசயம் 100 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. மலை அடிவாரத்தில் உள்ள இடுபன் கோவிலுக்கு பூஜை செய்யும் குருக்கள் வந்து காலை 7.20 மணிக்கு தீர்த்த கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து பொதி காளை மீதுள்ள மூங்கில் கூடையில் வைத்துவிடுவர். மலை கோவிலுக்கு படி வழியாக கோவில் பணியாளர்கள் காளை மாட்டினை ஓட்டி செல்வர்.

    இந்த பணிக்காக தனியாக கோசலையில் 3 பொதிகாளைகள் பாராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இதில் ஒரு மாடு வயது ஆகிவிட்டதால் படி வழியாக திருமஞ்சன தீர்த்த குடம் கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறது. இதற்காக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பக்தர் ஒருவர் முருகனுக்கு தானமாக கொடுத்த பொதி காளை மாடு சிறப்பாக பராமரிக்கபட்டு வந்தது.

    அந்த காளையினை கால்நடை உதவி மருத்துவர் மூலம் கடந்த 3 மாதங்களாக சிறப்பான உணவுகள் கொடுத்து பராமரித்து வந்த பணியாளர்கள் இன்று, வழக்கமாக தீர்த்தம் கொண்டு செல்லும் காளை மாட்டுடன் புதியதாக வளர்க்கப்பட்ட காளை மாட்டினை பயிற்சிக்காக ஓட்டி சென்றனர்.

    வழக்கமாக புதிய மாட்டினை படி வழியாக கொண்டு சென்றால் மிரண்டு கொள்ளும், படியில் ஏறாது. ஆனால் இந்த காளை சிறப்பாக இன்று வந்து சென்றது.

    இனி பயிற்சிக்காக தினமும் காலையில் மாலை, சந்தன பொட்டு, புதிய சலங்கை அணிவித்து பூஜை செய்து தீர்தகுடம் வைக்காமல் அதை பழக்கப்படுத்த பிடித்து செல்வர்.

    புதிய காளை மாடு பயிற்சி பெற்ற காளை மாடு போல் வெகு எளிதாக படி வழியில் ஏறியது. இதை காலை தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் பார்த்து மெய்சிலிர்தனர். காளை சில இடங்களில் மட்டும் இரண்டு இரண்டு படியாக தாண்டி சென்றது. 3 மாதத்தில் நன்கு பயிற்சி பெரும் என மாடு பராமரிக்கும் பணியாளர்கள் தெரிவித்தனர்.

    • பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து முன்னரே கண்டறியும் நுண்ணறிவு பயிற்சி.
    • கலவரங்களை போலீசார் எவ்வாறு எளிதாக கையாள வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் பெருகிவரும் குற்றத்தினை தடுக்க பல்வேறு முயற்சிகள் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    அவற்றின் ஒரு பகுதியாக நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் சென்னை மறுபரிசீலனை சிறப்பு கிளை பயிற்சி பள்ளி உளவுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தன் , நாகை மாவட்ட தனிப்பிரிவின் போலீசார் அனைவருக்கும் சிறப்பு நுண்ணறிவு பயிற்சியளித்தார்.

    மேலும் இச் சிறப்பு பயிற்சியில் தீவிரவாத ஊடுருவலை தடுத்தல், பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து முன்னரே கண்டறியும் நுண்ணறிவு பயிற்சி, கோவில் திருவிழாக்களில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு கையாளுதல் , சாதிக் கலவரங்கள், மற்றும் மதக் கலவரங்கள் போன்ற நிகழ்வுகளை போலீசார் எவ்வாறு எளிதாக கையாள வேண்டும் என்ற சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    ×