search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "income tax"

    • சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் பாஜக தங்களை குறிவைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன
    • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

    "சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் பத்திரம், இந்து - முஸ்லீம், கோயில் - மசூதி ஆகியவை இல்லையென்றால் பாஜக 100 இடங்களை கூட தாண்டாது" என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் பாஜக தங்களை குறிவைப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றன.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதா என தீவிர விசாரணை நடத்தினர்.
    • நகை கடைகளில் சோதனை நடந்ததால் மற்ற கடைக்காரர்கள் உடனே கடைகளை மூடி விட்டு சென்றனர்.

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் ஏராளமான நகைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இதில் செஞ்சி சாலையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார் நகை கடையும், வந்தவாசி சாலையில் பிரபலமான நகைக்கடையும் உள்ளன.

    இந்த கடைகளில் நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் மற்றும் வருமான வரித்துறை ஆணையாளர் சுப்பிரமணி தலைமையில் 20 பேர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை செய்தனர்.

    அப்போது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காகpe நகைகள் ஏதாவது மொத்தமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளதா? நகை கடையில் வருமான வரி முறையாக கட்டப்பட்டுள்ளதா? வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதா என தீவிர விசாரணை நடத்தினர்.

    நேற்று இரவு 7 மணி அளவில் தொடங்கிய சோதனை இரவு வரை தொடர்ந்து நீடித்தது. நகரின் முக்கிய நகை கடைகளில் திடீர் சோதனை நடந்ததால் மற்ற கடைக்காரர்கள் உடனே கடைகளை மூடி விட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கட்சி 3500 கோடி ரூபாய் வருமான வரி கட்ட வேண்டும் என நோட்டீஸ்.
    • தேர்தல் களத்தில் சமநிலையை பாதிக்கும் என காங்கிரஸ் கடும் விமர்சனம் செய்தது.

    வருமான வரி தாக்குதலில் தவறு செய்ததாக காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை அபராதம், வட்டி என சுமார் 3500 கோடி ரூபாய் கட்ட வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது. மேலும் வரி தீர்ப்பாயம் காங்கிரஸ் கட்சியின் சில வங்கி கணக்குகளை முடக்கியது.

    இதனால் தேர்தல் நேரத்தின்போது தங்களால் பணம் எடுக்க சிரமமாக உள்ளது என காங்கிரஸ் தெரிவித்தது. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. டெல்லி உயர்நீதிமன்றம் எந்த தடையும் பிறப்பிக்கவில்லை.

    இதனால் உச்சநீதிமன்றத்தை நாடியது. அப்போது இது வரி தீவிரவாதம். மக்களவை தேர்தலின்போது பணத்தை எடுக்க முடியாத வகையில் முடக்குவதற்கான முயற்சி என குற்றம்சாட்டியது. இது தேர்தலில் சமநிலையை பாதிக்கும் எனவும் தெரிவித்தது.

    இந்த வழக்கு பிவி நாகரத்னா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது மத்திய சொலிட்டர் ஜெனரல், தேர்தல் முடியும் வரை கட்டாய நடவடிக்கை எடுக்காது எனத் தெரிவித்தார்.

    2024-ல் 20 சதவீதம் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது. 135 கோடி ரூபாய் மீட்கப்பட்டது. 1,700 கோடி ரூபாய் கட்டுவது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். அதன்பின் 1,700 கோடி ரூபாய் கட்ட வலியுறுத்தப்படும். ஒட்டுமொத்த விசயங்களும் தேர்தலுக்கு பின் சரி செய்யப்படும். அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம்" என்றார்.

    மத்திய அரசு வரி கட்டுவதற்கு ஏதேனும் இடைக்கால தடைவிதிக்கிறதா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு, "அப்படி ஏதும் இல்லை. தேர்தல் வரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்பதை மட்டும் தெரிவிக்கிறோம்" என்றார்.

    • காங்கிரஸ் கட்சி இதனை "வரி தீவிரவாதம்" என்று குறிப்பிட்டது.
    • தைரியம் வராத அளவுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜனநாயகத்தை அழிக்க நினைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து இருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு 1800 கோடி ரூபாய் வருமான வரி செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதை அடுத்து, ராகுல் காந்தி இவ்வாறு கருத்து தெரிவித்து இருக்கிறார்.

    வருமான வரி நோட்டீஸ் தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி இதனை "வரி தீவிரவாதம்" என்று குறிப்பிட்டது. வருமான வரித்துறை சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீசில் காங்கிரஸ் கட்சி 2017-18 மற்றும் 2020-21 ஆண்டுகளில் செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் கட்ட தவறியதற்கான வட்டி உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பான எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி கருத்து பதிவிட்டுள்ளார்.

    அதில், "ஆட்சி மாறும்போது ஜனநாயகத்தை சீர்குலைப்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இதோடு, மீண்டும் ஒருமுறை இதுபோன்ற செயல்களை செய்ய தைரியம் வராத அளவுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது எனது உத்தரவாதம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • வருமான வரித்துறை சட்டவிரோதமாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 65 கோடி பணத்தை எடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.
    • பிப்ரவரி 16-ல் காங்கிரஸின் முக்கிய வங்கிக் கணக்குகளிலிருந்த ₹ 210 கோடி ரூபாய் பணம் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது

    வருமான வரித்துறை சட்டவிரோதமாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 65 கோடி பணத்தை எடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நேரத்தில் இத்தகைய செயல் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    பல்வேறு வங்கிகளில் உள்ள காங்கிரஸ் கட்சியின் கணக்குகளிலிருந்து வருமான வரித்துறை ஜனநாயக விரோதமாக ₹ 65 கோடியை எடுத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மாக்கன் கூறியுள்ளார்.

    பிப்ரவரி 16-ல் காங்கிரஸின் முக்கிய வங்கிக் கணக்குகளிலிருந்த ₹ 210 கோடி ரூபாய் பணம், வருமான வரித்துறையால் முடக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • 100 கோடிக்கு மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • வங்கி லாக்கர் மற்றும் வெளியிடப்படாத சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .

    தெலுங்கானா மாநில ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் சிவ பாலகிருஷ்ணா. இவர் வருமானத்திற்கு அதிகமாக பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் ஊழல் தடுப்பு பிரிவினர் சிவ பாலகிருஷ்ணாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 20 இடங்களில் நேற்று காலை 5 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் சிவ பாலகிருஷ்ணா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து 100 கோடிக்கு மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அவருடைய வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுகட்டாக பணம், தங்க கட்டிகள் நகைகள், 60 உயர் ரக கைக்கடிகாரங்கள், சொத்து ஆவணங்கள், 14 செல்போன்கள், 10 லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

    அவரது வீடுகளில் இருந்து ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகளை அதிகாரிகள் எண்ணும் வீடியோ காட்சி சமூக வலைதளகளில் பரவி வருகிறது.

    தங்க நகைகள், செல்போன்களை குவித்து வைத்து வீடியோவாகவும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

    சிவபாலகிருஷ்ணா மீது கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தனது பதவியை பயன்படுத்தி பெரும் அளவில் சொத்துக்களை குவித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

    தொடர்ந்து அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனை நாளை வரை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்கி லாக்கர் மற்றும் வெளியிடப்படாத சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .

    ஒரு அதிகாரியின் வீட்டில் கட்டு கட்டாக பணம் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொடக்க உரையாற்றினார்.
    • கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப் பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குச் சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை மாநாடு தூத்துக்குடியில் உள்ள மாணிக்கம் மகாலில் நேற்று நடந்தது.

    தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ். முரளிதரன் முன்னிலை வகித்தார். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார்.

    அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொடக்க உரையாற்றினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்புரையாற்றி னார்.

    மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கி பேசியதாவது:-

    கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி யில் கொண்டு வரப் பட்டது.

    இது 15 கோடி குடும்பங் களை வறுமைப் பிடியிலிருந்து வெளியே கொண்டு வந்த திட்டம் என்று இந்திய அரசை பாராட்டி ஐ.நா. சபை நற்சான்றிதழ் வழங்கியது. தற்போது கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. எனவே வருகிற 15-ந் தேதி மத்திய அரசைக் கண்டித்து ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இந்தியாவில் இவ்வளவு மாநிலங்கள் இருந்தும் பா.ஜனதா ஆளும் மாநி லங்கள் மற்றும் பா.ஜனதா ஆதரவு மாநிலங்களில் ஏன் வருமான வரித்துறை சோதனை நடைபெற வில்லை. தமிழக மக்கள் மிகவும் அறிவுபூர்வமா னவர்கள்.

    அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு ஒருத் தரப்புக்கு எதிராக செயல் படுவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    இந்த வருமான வரி சோதனை, அமலாக்கத்துறை சோதனை ஆகியவை அரசியல் உள்நோக்கத்தோடு நடைபெறுகிறது. இந்த சோதனைகளால் இந்தியா கூட்டணி வலிமை குறையாது. தமிழகத்தில் உள்ள தி.மு.க. அமைச்சர்கள் மீதான வருமான வரி சோதனை என்பது அதிகா ரத்தை கையில் வைத்துக் கொண்டு ஒரு கட்சிக்கு எதிராக செயல் படுவதாகவே பார்க்கிறோம். இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    தமிழகத்திற்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த சோதனை கள் நடை பெறுகிறது. இதற்காக நாங்கள் தலைகுனிய மாட்டோம், நிமிர்ந்து நிற்போம்.

    மதசார்பின்மை என்ற நேர்கோட்டில் காங்கிரஸ், தி.மு.க, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் என அனைத்து கட்சிகளும் ஒரே நேர்கோட் டில் உள்ளது. பயிற்சி பட்டறை மூலமாக சொல்வது என்னவென்றால் உங்கள் தெருக்களில் ஒரு காங்கிரஸ் கொடியை ஏற்றுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலா ளர் விஸ்வநாதன், விஜய் ஆனந்த் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் ராஜேஷ் குமார், விஸ்வநாதன், ஜே.ஜே.பிரின்ஸ், அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேனாம்பேட்டை வெங்கடரத்தினம் சாலையில் உள்ள மின்வாரிய அதிகாரி காசியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை
    • புரசைவாக்கத்தில் வசித்து வரும் மகேந்திர ஜெயின் என்கிற தொழில் அதிபர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் எண்ணூர், வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் அனல்மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அனல்மின் நிலையங்களில் நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலக்கரியை எடுத்துச் செல்ல பெரிய கன்வேயர் பெல்ட்டுகள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இதேபோன்று மேலும் பல உபகரணங்களும் மின் உற்பத்திக்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த அனல்மின் நிலையங்களுக்கு கன்வேயர் பெல்ட் உள்பட மின் உற்பத்தி பொருட்களை 4 நிறுவனங்கள் தயார் செய்து வழங்கி வருகின்றன. இதில் சென்னையை தலைமையிடமாக கொண்டு ஒரு நிறுவனமும் பொன்னேரியை தலைமையிடமாக கொண்டு ஒரு நிறுவனமும் செயல்பட்டு வருகின்றன. இது தவிர மற்ற 2 நிறுவனங்களும் சென்னையிலேயே செயல்பட்டு வருகின்றன.

    இந்த நிறுவனங்கள் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு தேவையான பொருட்களை சப்ளை செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக வருமானவரித் துறையினருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

    இதையடுத்து இந்த 4 நிறுவனங்களின் செயல்பாடுகளையும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இதில் 4 நிறுவனங்களும் போலியாக ரசீதுகளை உருவாக்கி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் சோதனை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்தனர்.

    இதன்படி மேற்கண்ட நிறுவனங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை மற்றும் புறநர் பகுதிகளில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் மின் வாரியத்துக்கு பொருட்களை சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள், வீடு உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் நீலாங்கரை, எண்ணூர், நாவலூர், செங்கல்பட்டு, தி.நகர், எருக்கஞ்சேரி, எம்.ஜி.ஆர். நகர், ஜாபர்கான் பேட்டை, துரைப்பாக்கம், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிறுவனங்களில் சோதனை நடத்துவதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 40-க்கும் மேற்பட்ட வாகனங்களை பதிவு செய்து வைத்திருந்தனர். இன்று அதிகாலையில் கார்களில் அணி வகுத்த வருமான வரித்துறை அதிகாரிகள் பின்னர் தனித்தனியாக பிரிந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    சோதனையின்போது மின்வாரியத்துக்கு கன்வேயர் பெல்ட் மற்றும் கேபிள் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்ததில் எந்த மாதிரியான முறைகேடுகள் நடைபெற்று உள்ளன? என்பது பற்றி இந்த சோதனையின்போது வருமான வரித்துறை அதிகாரிகள் அலசி ஆராய்ந்தனர். இதில் முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சப்ளை செய்யப்பட்ட உபகரணங்கள் மூலமாக போலியான கணக்குகளை காட்டி வரிஏய்ப்பு நடைபெற்றிருப்பதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பான ஆவணங்களும் சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    சென்னையை அடுத்த சிறுசேரி, சிப்காட் வளாகத்திலும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி வெள்ளி வாயல் சாவடியில் செயல்பட்டு வரும் சென்னை ராதா என்ஜினீயரிங் ஒர்க்ஸ் நிறுவனம் மற்றும் சென்னையை மையமாக கொண்டு செயல்படும் பந்தாரி குரூப், இண்டர்வேஸ் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மகேந்திர ஜெயின் என்கிற தொழில் அதிபர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

    சென்னை தேனாம்பேட்டை வெங்கடரத்தினம் சாலையில் உள்ள மின்வாரிய அதிகாரி காசியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அனல்மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் கன்வேயர் பெல்ட் உள்பட பொருட்களை வாங்கியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலையத்திற்கு இன்று காலை வருமான வரித்துறையை சேர்ந்த 5 அதிகாரிகள் திடீரென சென்றனர். பின்னர் அவர்கள் அனல் மின்நிலையத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

    அனல் மின்நிலையத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட மின் உபகரணங்கள் தரமானதா என்றும் அவற்றின் விலை குறித்தும் வருமான வரித்துறையினர் ஆவணங்களை கைப்பற்றியும் விசாரித்து வருகிறார்கள். மேலும் ஒப்பந்தப் பணியாளர்கள் நியமிக்காமல் சம்பளம் ஒதுக்கி முறைகேடு நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அது தொடர்பாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று வடசென்னை மற்றும் தூத்துக்குடி அனல்மின் நிலையங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் முற்றுகையிட்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த அனல்மின் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் பற்றிய விவரங்களை கேட்டு அது தொடர்பான ஆவணங்களை பார்த்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் இருந்து சென்ற 15 அதிகாரிகள் கொண்ட குழுவினர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குள் சென்றனர். முதலில் அவர்கள் அங்கு உள்ள தொழிற்சாலை பகுதிக்கு சென்றனர். அங்குள்ள ஒப்பந்ததாரர் மற்றும் அனல்மின் நிலைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அதில் இருந்து ஒரு குழுவினர் பிரிந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கும் சோதனை நடத்த சென்றனர். இதனால் அனல் மின்நிலையத்தின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    இந்த சோதனையின் முடிவில் அங்கு என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன? எந்த மாதிரியான முறை கேடுகள் நடந்துள்ளன என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும்.

    • குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வருமான வரித்துறையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
    • மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையராக சுனில் மாத்தூர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இவர், 1988-ம் ஆண்டு இந்திய வருவாய் பணியில் (ஐ.ஆர்.எஸ்.) சேர்ந்தார். குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வருமான வரித்துறையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

    மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

    கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறையில் சென்னை புலனாய்வு பிரிவின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்ட இவர், தற்போது பதவி உயர்வு பெற்று முதன்மை தலைமை ஆணையர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு உள்ளார்.

    • பட்டியலில் உள்ளவர்களில் விதிமுறைக்கு யார் உட்பட்டவர்கள், யார் இல்லை என ஆய்வு செய்யப்படுகிறது.
    • முன்னுதாரணமான இந்த திட்டத்தை பல மாநிலங்களுக்கு பயன்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் தமிழக  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருமான வரி தாக்கல் செய்பவர்கள் குறித்த தகவல் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டால், அதை வைத்து நலத்திட்டங்கள் மற்றும் பல சேவைகளை பெறுவதில், யாருக்கு எந்த சூழல் இருக்கிறது என்று கண்டறிந்து அரசு திட்டங்களை சரிபார்க்கலாம் என பல மாதங்களாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக இந்த துறையுடன் இணைந்து பணிசெய்து இப்போது இந்தியாவிலேயே முதல் மாநிலமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள் சுமார் 35 லட்சம் பேரின் விவரங்கள் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

    அந்த தகவல் பல திட்டங்களுக்கு, குறிப்பாக மகளிர் உரிமை திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பயனாக இருக்கும். தகவல் தொழில்நுட்பத் துறையில் டிஎன்இஜிஏ என்ற நிறுவனத்தில்தான் அந்த தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து ஆய்வு அந்த பட்டியலில் உள்ளவர்களின் குடும்ப சூழ்நிலையை கண்டறிந்து, விதிமுறைக்கு யார் உட்பட்டவர்கள், யார் இல்லை, என ஆராய்ச்சி செய்கிறோம். எனவே தமிழ்நாடு வைத்த கோரிக்கையை ஏற்று இந்த முன்மாதிரி திட்டத்தை செய்து கொடுத்ததற்காக என் துறை சார்பாக மத்திய நிதி மந்திரி, நிதித்துறை செயலர் மற்றும் சிபிடிடி தலைவரை சந்தித்து முன்மாதிரியான சேவைக்கு நன்றி கூறினேன்.

    அதன் பலன்களை பகிர்ந்துகொள்கிறோம், இந்த முன்னுதாரணமான திட்டத்தை பல மாநிலங்களுக்கு பயன்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும் என கூறினேன். அதற்கு சிறப்பாக செயல்படுத்துவதற்கு வாழ்த்து தெரிவித்ததுடன், தொடர்ந்து என்ன தேவையோ கேளுங்கள், முடிந்த அளவுக்கு செய்துகொடுக்கிறோம் என கூறியிருக்கிறார்கள்.

    இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

    • வருமான வரி தாக்கலை விரைவாக செய்து முடியுங்கள் என அறிவுறுத்தப்பட்டனர்.
    • இதனால் வருமான வரி தாக்கல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய வருமான வரித்துறை இன்று வெளியிட்டு டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது:

    2022-23 மதிப்பீட்டு ஆண்டு வருமான வரி தாக்கலுக்கு கடைசி நாள் ஜூலை 31-ந்தேதி ஆகும்.

    இன்று மாலை 6.30 மணி வரை சுமார் 6 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்திருந்தனர். இது கடந்த ஆண்டைவிட அதிகமானோர் தாக்கல் செய்துள்ளார்கள்.

    இன்று மட்டும் சுமார் 26 லட்சத்துக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.

    வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதற்காக வரி செலுத்துவோருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என பதிவிட்டுள்ளது.

    • வருமான வரி தாக்கலை விரைவாக செய்து முடியுங்கள் என அறிவுறுத்த விரும்புகிறேன்.
    • ஜி.எஸ்.டி. வளர்ச்சி விகிதம் 12 சதவீதமாக உள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய வருவாய் செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2022-23 மதிப்பீட்டு ஆண்டு வருமான வரி தாக்கலுக்கு கடைசி நாளான கடந்த ஆண்டு ஜூலை 31-ந்தேதி வரை 5.83 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த ஆண்டு அதைவிட அதிகமானோர் தாக்கல் செய்வார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரிக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

    வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதற்காக வரி செலுத்துவோருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

    வருமான வரி தாக்கலுக்காக கடைசி வரை காத்திருக்க வேண்டாம் எனவும், காலக்கெடு நீட்டிக்கப்படும் என நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்த விரும்புகிறோம். காலக்கெடு நீட்டிப்புக்கான யோசனை எதுவும் அரசிடம் இல்லை.

    எனவே வருமான வரி தாக்கலை விரைவாக செய்து முடியுங்கள் என அறிவுறுத்த விரும்புகிறேன். ஏனெனில் இதற்கான காலக்கெடுவான ஜூலை 31-ந்தேதி வேகமாக வருகிறது.

    வரி திரட்டல் இலக்கைப் பொறுத்தவரை, வளர்ச்சி விகிதமான 10.5 சதவீதத்துக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்.

    ஜி.எஸ்.டி. வளர்ச்சி விகிதம் 12 சதவீதமாக உள்ளது. எனினும், விகிதக்குறைப்பு காரணமாக உற்பத்தி வரியில் வளர்ச்சி விகிதம் 12 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

    2023-24-க்கான மத்திய பட்ஜெட்டின் படி, நடப்பு நிதியாண்டில் மொத்த வரி வருவாய் ரூ.33.61 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தது.

    இதில் கார்பரேட் மற்றும் தனிநபர் வருமான வரியை விட, 10.5 சதவீதம் அதிகமாக அதாவது ரூ.18.23 லட்சம் கோடியை திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

    அதேநேரம் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் சுங்க வரி வசூல் 11 சதவீதம் அதிகரித்து ரூ.2.10 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.33 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×