என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "income tax"
- அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொடக்க உரையாற்றினார்.
- கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப் பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குச் சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை மாநாடு தூத்துக்குடியில் உள்ள மாணிக்கம் மகாலில் நேற்று நடந்தது.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ். முரளிதரன் முன்னிலை வகித்தார். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார்.
அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொடக்க உரையாற்றினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்புரையாற்றி னார்.
மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கி பேசியதாவது:-
கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி யில் கொண்டு வரப் பட்டது.
இது 15 கோடி குடும்பங் களை வறுமைப் பிடியிலிருந்து வெளியே கொண்டு வந்த திட்டம் என்று இந்திய அரசை பாராட்டி ஐ.நா. சபை நற்சான்றிதழ் வழங்கியது. தற்போது கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. எனவே வருகிற 15-ந் தேதி மத்திய அரசைக் கண்டித்து ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இந்தியாவில் இவ்வளவு மாநிலங்கள் இருந்தும் பா.ஜனதா ஆளும் மாநி லங்கள் மற்றும் பா.ஜனதா ஆதரவு மாநிலங்களில் ஏன் வருமான வரித்துறை சோதனை நடைபெற வில்லை. தமிழக மக்கள் மிகவும் அறிவுபூர்வமா னவர்கள்.
அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு ஒருத் தரப்புக்கு எதிராக செயல் படுவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இந்த வருமான வரி சோதனை, அமலாக்கத்துறை சோதனை ஆகியவை அரசியல் உள்நோக்கத்தோடு நடைபெறுகிறது. இந்த சோதனைகளால் இந்தியா கூட்டணி வலிமை குறையாது. தமிழகத்தில் உள்ள தி.மு.க. அமைச்சர்கள் மீதான வருமான வரி சோதனை என்பது அதிகா ரத்தை கையில் வைத்துக் கொண்டு ஒரு கட்சிக்கு எதிராக செயல் படுவதாகவே பார்க்கிறோம். இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
தமிழகத்திற்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த சோதனை கள் நடை பெறுகிறது. இதற்காக நாங்கள் தலைகுனிய மாட்டோம், நிமிர்ந்து நிற்போம்.
மதசார்பின்மை என்ற நேர்கோட்டில் காங்கிரஸ், தி.மு.க, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் என அனைத்து கட்சிகளும் ஒரே நேர்கோட் டில் உள்ளது. பயிற்சி பட்டறை மூலமாக சொல்வது என்னவென்றால் உங்கள் தெருக்களில் ஒரு காங்கிரஸ் கொடியை ஏற்றுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலா ளர் விஸ்வநாதன், விஜய் ஆனந்த் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் ராஜேஷ் குமார், விஸ்வநாதன், ஜே.ஜே.பிரின்ஸ், அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேனாம்பேட்டை வெங்கடரத்தினம் சாலையில் உள்ள மின்வாரிய அதிகாரி காசியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை
- புரசைவாக்கத்தில் வசித்து வரும் மகேந்திர ஜெயின் என்கிற தொழில் அதிபர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் எண்ணூர், வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் அனல்மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அனல்மின் நிலையங்களில் நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலக்கரியை எடுத்துச் செல்ல பெரிய கன்வேயர் பெல்ட்டுகள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இதேபோன்று மேலும் பல உபகரணங்களும் மின் உற்பத்திக்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
இந்த அனல்மின் நிலையங்களுக்கு கன்வேயர் பெல்ட் உள்பட மின் உற்பத்தி பொருட்களை 4 நிறுவனங்கள் தயார் செய்து வழங்கி வருகின்றன. இதில் சென்னையை தலைமையிடமாக கொண்டு ஒரு நிறுவனமும் பொன்னேரியை தலைமையிடமாக கொண்டு ஒரு நிறுவனமும் செயல்பட்டு வருகின்றன. இது தவிர மற்ற 2 நிறுவனங்களும் சென்னையிலேயே செயல்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்கள் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு தேவையான பொருட்களை சப்ளை செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக வருமானவரித் துறையினருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இதையடுத்து இந்த 4 நிறுவனங்களின் செயல்பாடுகளையும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இதில் 4 நிறுவனங்களும் போலியாக ரசீதுகளை உருவாக்கி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் சோதனை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்தனர்.
இதன்படி மேற்கண்ட நிறுவனங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை மற்றும் புறநர் பகுதிகளில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் மின் வாரியத்துக்கு பொருட்களை சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள், வீடு உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் நீலாங்கரை, எண்ணூர், நாவலூர், செங்கல்பட்டு, தி.நகர், எருக்கஞ்சேரி, எம்.ஜி.ஆர். நகர், ஜாபர்கான் பேட்டை, துரைப்பாக்கம், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிறுவனங்களில் சோதனை நடத்துவதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 40-க்கும் மேற்பட்ட வாகனங்களை பதிவு செய்து வைத்திருந்தனர். இன்று அதிகாலையில் கார்களில் அணி வகுத்த வருமான வரித்துறை அதிகாரிகள் பின்னர் தனித்தனியாக பிரிந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின்போது மின்வாரியத்துக்கு கன்வேயர் பெல்ட் மற்றும் கேபிள் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்ததில் எந்த மாதிரியான முறைகேடுகள் நடைபெற்று உள்ளன? என்பது பற்றி இந்த சோதனையின்போது வருமான வரித்துறை அதிகாரிகள் அலசி ஆராய்ந்தனர். இதில் முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சப்ளை செய்யப்பட்ட உபகரணங்கள் மூலமாக போலியான கணக்குகளை காட்டி வரிஏய்ப்பு நடைபெற்றிருப்பதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பான ஆவணங்களும் சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னையை அடுத்த சிறுசேரி, சிப்காட் வளாகத்திலும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பொன்னேரி வெள்ளி வாயல் சாவடியில் செயல்பட்டு வரும் சென்னை ராதா என்ஜினீயரிங் ஒர்க்ஸ் நிறுவனம் மற்றும் சென்னையை மையமாக கொண்டு செயல்படும் பந்தாரி குரூப், இண்டர்வேஸ் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மகேந்திர ஜெயின் என்கிற தொழில் அதிபர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
சென்னை தேனாம்பேட்டை வெங்கடரத்தினம் சாலையில் உள்ள மின்வாரிய அதிகாரி காசியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அனல்மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் கன்வேயர் பெல்ட் உள்பட பொருட்களை வாங்கியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலையத்திற்கு இன்று காலை வருமான வரித்துறையை சேர்ந்த 5 அதிகாரிகள் திடீரென சென்றனர். பின்னர் அவர்கள் அனல் மின்நிலையத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அனல் மின்நிலையத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட மின் உபகரணங்கள் தரமானதா என்றும் அவற்றின் விலை குறித்தும் வருமான வரித்துறையினர் ஆவணங்களை கைப்பற்றியும் விசாரித்து வருகிறார்கள். மேலும் ஒப்பந்தப் பணியாளர்கள் நியமிக்காமல் சம்பளம் ஒதுக்கி முறைகேடு நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அது தொடர்பாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று வடசென்னை மற்றும் தூத்துக்குடி அனல்மின் நிலையங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் முற்றுகையிட்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த அனல்மின் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் பற்றிய விவரங்களை கேட்டு அது தொடர்பான ஆவணங்களை பார்த்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் இருந்து சென்ற 15 அதிகாரிகள் கொண்ட குழுவினர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குள் சென்றனர். முதலில் அவர்கள் அங்கு உள்ள தொழிற்சாலை பகுதிக்கு சென்றனர். அங்குள்ள ஒப்பந்ததாரர் மற்றும் அனல்மின் நிலைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அதில் இருந்து ஒரு குழுவினர் பிரிந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கும் சோதனை நடத்த சென்றனர். இதனால் அனல் மின்நிலையத்தின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த சோதனையின் முடிவில் அங்கு என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன? எந்த மாதிரியான முறை கேடுகள் நடந்துள்ளன என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும்.
- குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வருமான வரித்துறையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
- மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.
சென்னை:
தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையராக சுனில் மாத்தூர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், 1988-ம் ஆண்டு இந்திய வருவாய் பணியில் (ஐ.ஆர்.எஸ்.) சேர்ந்தார். குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வருமான வரித்துறையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறையில் சென்னை புலனாய்வு பிரிவின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்ட இவர், தற்போது பதவி உயர்வு பெற்று முதன்மை தலைமை ஆணையர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு உள்ளார்.
- பட்டியலில் உள்ளவர்களில் விதிமுறைக்கு யார் உட்பட்டவர்கள், யார் இல்லை என ஆய்வு செய்யப்படுகிறது.
- முன்னுதாரணமான இந்த திட்டத்தை பல மாநிலங்களுக்கு பயன்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் குறித்த தகவல் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டால், அதை வைத்து நலத்திட்டங்கள் மற்றும் பல சேவைகளை பெறுவதில், யாருக்கு எந்த சூழல் இருக்கிறது என்று கண்டறிந்து அரசு திட்டங்களை சரிபார்க்கலாம் என பல மாதங்களாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக இந்த துறையுடன் இணைந்து பணிசெய்து இப்போது இந்தியாவிலேயே முதல் மாநிலமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள் சுமார் 35 லட்சம் பேரின் விவரங்கள் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
அந்த தகவல் பல திட்டங்களுக்கு, குறிப்பாக மகளிர் உரிமை திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பயனாக இருக்கும். தகவல் தொழில்நுட்பத் துறையில் டிஎன்இஜிஏ என்ற நிறுவனத்தில்தான் அந்த தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து ஆய்வு அந்த பட்டியலில் உள்ளவர்களின் குடும்ப சூழ்நிலையை கண்டறிந்து, விதிமுறைக்கு யார் உட்பட்டவர்கள், யார் இல்லை, என ஆராய்ச்சி செய்கிறோம். எனவே தமிழ்நாடு வைத்த கோரிக்கையை ஏற்று இந்த முன்மாதிரி திட்டத்தை செய்து கொடுத்ததற்காக என் துறை சார்பாக மத்திய நிதி மந்திரி, நிதித்துறை செயலர் மற்றும் சிபிடிடி தலைவரை சந்தித்து முன்மாதிரியான சேவைக்கு நன்றி கூறினேன்.
அதன் பலன்களை பகிர்ந்துகொள்கிறோம், இந்த முன்னுதாரணமான திட்டத்தை பல மாநிலங்களுக்கு பயன்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும் என கூறினேன். அதற்கு சிறப்பாக செயல்படுத்துவதற்கு வாழ்த்து தெரிவித்ததுடன், தொடர்ந்து என்ன தேவையோ கேளுங்கள், முடிந்த அளவுக்கு செய்துகொடுக்கிறோம் என கூறியிருக்கிறார்கள்.
இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
- வருமான வரி தாக்கலை விரைவாக செய்து முடியுங்கள் என அறிவுறுத்தப்பட்டனர்.
- இதனால் வருமான வரி தாக்கல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய வருமான வரித்துறை இன்று வெளியிட்டு டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது:
2022-23 மதிப்பீட்டு ஆண்டு வருமான வரி தாக்கலுக்கு கடைசி நாள் ஜூலை 31-ந்தேதி ஆகும்.
இன்று மாலை 6.30 மணி வரை சுமார் 6 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்திருந்தனர். இது கடந்த ஆண்டைவிட அதிகமானோர் தாக்கல் செய்துள்ளார்கள்.
இன்று மட்டும் சுமார் 26 லட்சத்துக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.
வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதற்காக வரி செலுத்துவோருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என பதிவிட்டுள்ளது.
- வருமான வரி தாக்கலை விரைவாக செய்து முடியுங்கள் என அறிவுறுத்த விரும்புகிறேன்.
- ஜி.எஸ்.டி. வளர்ச்சி விகிதம் 12 சதவீதமாக உள்ளது.
புதுடெல்லி:
மத்திய வருவாய் செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2022-23 மதிப்பீட்டு ஆண்டு வருமான வரி தாக்கலுக்கு கடைசி நாளான கடந்த ஆண்டு ஜூலை 31-ந்தேதி வரை 5.83 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்திருந்தனர்.
இந்த ஆண்டு அதைவிட அதிகமானோர் தாக்கல் செய்வார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரிக்கும் என நாங்கள் நம்புகிறோம்.
வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதற்காக வரி செலுத்துவோருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
வருமான வரி தாக்கலுக்காக கடைசி வரை காத்திருக்க வேண்டாம் எனவும், காலக்கெடு நீட்டிக்கப்படும் என நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்த விரும்புகிறோம். காலக்கெடு நீட்டிப்புக்கான யோசனை எதுவும் அரசிடம் இல்லை.
எனவே வருமான வரி தாக்கலை விரைவாக செய்து முடியுங்கள் என அறிவுறுத்த விரும்புகிறேன். ஏனெனில் இதற்கான காலக்கெடுவான ஜூலை 31-ந்தேதி வேகமாக வருகிறது.
வரி திரட்டல் இலக்கைப் பொறுத்தவரை, வளர்ச்சி விகிதமான 10.5 சதவீதத்துக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்.
ஜி.எஸ்.டி. வளர்ச்சி விகிதம் 12 சதவீதமாக உள்ளது. எனினும், விகிதக்குறைப்பு காரணமாக உற்பத்தி வரியில் வளர்ச்சி விகிதம் 12 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
2023-24-க்கான மத்திய பட்ஜெட்டின் படி, நடப்பு நிதியாண்டில் மொத்த வரி வருவாய் ரூ.33.61 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தது.
இதில் கார்பரேட் மற்றும் தனிநபர் வருமான வரியை விட, 10.5 சதவீதம் அதிகமாக அதாவது ரூ.18.23 லட்சம் கோடியை திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
அதேநேரம் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் சுங்க வரி வசூல் 11 சதவீதம் அதிகரித்து ரூ.2.10 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.33 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பணத்துக்கு அவா்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.
- வருமான வரித்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
அவினாசி:
திருப்பூா் மாவட்டம் பழங்கரை பிரிவு அருகே அவிநாசி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற பேருந்தில் பயணம் செய்த 2பேர் பழங்கரை பிரிவு அருகே இறங்கினா். இதையடுத்து, போலீசாா் அவா்கள் இருவரும் கொண்டு வந்த கைப்பைகளில் சோதனை நடத்தினா். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 1 கோடி இருந்தது தெரியவந்தது. அப்பணத்துக்கு அவா்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.
விசாரணையில் அவா்கள் வேலூா், சைதாப்பேட்டையை சோ்ந்த ஆரீப் (வயது 47), பொன்னியம்மன் நகரை சோ்ந்த அப்துல் காதா் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.1 கோடியை பறிமுதல் செய்த அவிநாசி போலீசார் அதனை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனா். அந்த பணம் ஹவாலா பணமா? என வருமான வரித்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
- வருமான வரி கணக்குகளைப் பெற்று அவற்றை சரிபார்க்கும் பணி விரைவாக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டில் மார்ச் 31-ந் தேதி 24 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் தாக்கலாகின.
புதுடெல்லி :
வருமான வரித்துறை சார்பில் ஆன்லைனில் நடந்த 'சம்வாத்' அமர்வில், சி.பி.டி.டி. என்று அழைக்கப்படுகிற மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்:-
* வருமான வரி கணக்குகளைப் பெற்று அவற்றை சரிபார்க்கும் பணி விரைவாக்கப்பட்டுள்ளது.
* வருமான வரி கூடுதலாக செலுத்தி இருந்தால் அவற்றை திரும்பச்செலுத்துவதற்கான (ரீபண்ட்) அவகாசம் கடந்த 2021-22-ம் ஆண்டில் 26 நாட்களாக இருந்தது. அது 2022-23-ம் ஆண்டில் 16 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
* வருமான வரி கணக்கு தாக்கல் செய்த நாளிலேயே அது தொடர்பான செயல்முறைகளை செய்து முடிப்பது 100 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-22-ம் ஆண்டில் இது 21 சதவீதமாக இருந்தது. 2022-23 நிதி ஆண்டில் இது 42 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.
* கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதியன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 22 லட்சத்து 94 ஆயிரம் கணக்குகளின் செயல்முறைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
* இந்த ஆண்டில் மார்ச் 31-ந் தேதி 24 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் தாக்கலாகின. ரூ.2,480 கோடி கூடுதல் வரியாக வசூலாகி உள்ளது.
* கடந்த நிதி ஆண்டின் இறுதியில் (மார்ச் 31, 2023) 4 லட்சத்துக்கும் அதிகமான முகமற்ற மதிப்பீடுகள் (ஆன்லைன் வழியான மதிப்பீடுகள்) நிறைவு அடைந்துள்ளது.
* 2021-22 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022-23 நிதி ஆண்டில், முகமற்ற மதிப்பீடுகள் தொடர்பான குறைபாடுகள் 60 சதவீதம் குறைந்துள்ளது.
* முகமற்ற மதிப்பீடுகள் வழியாக 1 லட்சத்துக்கும் அதிகமான மேல்முறையீடுகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- துணை மேயர் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு ஆதரவார்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
- அதிகாரிகள் வாகனம் செல்ல முடியாதபடி, மாட்டுவண்டியை குறுக்கே நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ் நாடு மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதேபோல், கரூர் மாநகராட்சியின் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டிலும் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால் அவர்களை அனுமதிக்கவில்லை.
இதையடுத்து, அதிகாரிகள் நேற்று இரவு மீண்டும் துணை மேயர் வீட்டிற்கு சோதனை நடத்த சென்றனர். ஆனால், வீட்டில் யாரும் இல்லாததை அடுத்து கரூர் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு வருமான வரித்துறையினர் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர்.
துணை மேயர் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு ஆதரவார்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் வாகனம் செல்ல முடியாதபடி, மாட்டுவண்டியை குறுக்கே நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.