என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "#சோதனை"

    • நேற்று 2-வது நாளாக மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள 2 குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • போலி மாத்திரைகள் பற்றிய விவரங்களை புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் டெல்லி, ஆந்திர போலீசார் கேட்டறிந்தனர்.

    புதுச்சேரி:

    டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சன் பார்மசி பெயரில் புதுவையில் போலி மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார் வந்தது. இது தொடர்பாக ஏற்கனவே சீர்காழியை சேர்ந்த ராணா (வயது 45), காரைக்குடியை சேர்ந்தமெய்யப்பன் (46) ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா என்பவர் ரவிக்குமார் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் மருந்து தொழிற்சாலை நடத்தி வருவதும், புதுச்சேரியில் 10-க்கும் மேற்பட்ட குடோன்களில் போலிமாத்திரைகளை பதுக்கி வைத்து இருப்பதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அந்த குடோன்களில் போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதில் அங்கு அட்டைப்பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த போலி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே டெல்லி மற்றும் ஆந்திராவிலும் போலி மாத்திரைகள் புழக்கத்தில் இருந்ததால் அந்த மாநில போலீசார் புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.

    நேற்று 2-வது நாளாக மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள 2 குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ.100 கோடி மதிப்பிலான மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின் போது ஆந்திரா மற்றும் டெல்லி போலீசாரும் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த போலி மாத்திரைகளை பார்வையிட்டனர்.

    தொடர்ந்து போலி மாத்திரைகள் பற்றிய விவரங்களை புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் டெல்லி, ஆந்திர போலீசார் கேட்டறிந்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராணா, மெய்யப்பன் ஆகியோரை கைது செய்து டெல்லி அழைத்துச் சென்று விசாரிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் மேலும் 8 குடோன்களில் போலி மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இன்று அந்த குடோன்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஜிஎஸ்டி முறைகேடுகள் மூலம் வரி ஏய்ப்பு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் சோதனை
    • மூன்று மாதங்களுக்கு முன்பு அமைச்சர் பெரியசாமி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும், திமுக துணைப்பொதுச்செயலாளர்களில் ஒருவருமான ஐ. பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திராவும், அவரது  துவாரகநாதனும் குடும்பத்துடன் திண்டுக்கல் ஆர்.எம். காலனி அருகே உள்ள செவாலியே சிவாஜி நகரில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் இந்திராவின் வீட்டில் திடீரென கோவை ஜிஎஸ்டி  நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். 1 மணிநேரத்திற்கு மேலாக சோதனை நீடித்த நிலையில், திமுக தொண்டர்கள் அவர் வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    வீடு மட்டுமின்றி துவாரகநாதனுக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனத்திலும் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நிறுவனத்தில் ஜிஎஸ்டி முறைகேடுகள் மூலம் வரி ஏய்ப்பு நடந்ததாக கிடைத்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஐ. பெரியசாமியின் இல்லம், அவரது மகன் செந்தில் குமார் வீடு, இந்திரா வீடு மற்றும் 3 வர்த்தக நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது.

    தமிழகத்தில் சமீப காலமாக அரசியல் பிரமுகர்கள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்து மிரட்டல் விடுத்தவர் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், கவர்னர் மாளிகை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. தலைமை அலுவலகம், நடிகர் எஸ்.வி.சேகர் இல்லத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும், தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • மாருதி இன்விக்டோவும் பாதுகாப்பில் வலுவாக பொருத்தப்பட்டுள்ளது.
    • இந்திய சந்தையில் இன்விக்டோ மாடல் மாருதியின் வரிசையில் ஒரு பிரீமியம் MPV ஆக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    பாரத் NCAP சோதனைகளில், மாருதி சுசுகி இன்விக்டோ 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைக் பெற்றுள்ளது. மாருதி இன்விக்டோ ஆல்பா+ 7-சீட்டர் மற்றும் ஜீட்டா+ 8-சீட்டர் வேரியண்ட்களில் சோதிக்கப்பட்ட இன்விக்டோ, விசாலமானதாகவும் வசதியாகவும் இருப்பது மட்டுமல்லாமல், பாதுகாப்பிலும் பெரியதாக இருப்பதைக் காட்டியது.

    இன்விக்டோ மாடல் பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்காக 32 இல் 30.43 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பிற்காக 49 இல் 45 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பான கார் கிளப்பின் ஒரு பகுதியாக அமைந்தது.

    பயணிகள் பாதுகாப்பு மதிப்பீடு: 30.43/32 – கிட்டத்தட்ட குறைபாடற்றது

    முன்பக்க ஆஃப்செட் விபத்து சோதனையில் இன்விக்டோ சிறப்பாக செயல்பட்டது, ஓட்டுநர் மற்றும் பயணி இருவரின் தலை, கழுத்து, முழங்கால்களை பாதுகாத்தது. ஓட்டுநரின் மார்பு "போதுமானதாக" இருந்தது, மீதமுள்ளவை "நல்லதாக" இருந்தன. இருப்பினும், முக்கியமான விஷயம் என்னவென்றால், பாடிஷெல் மற்றும் ஃபுட்வெல் ஆகியவை இன்விக்டோவின் திடமான கட்டமைப்பை பிரதிபலிக்கும் வகையில் நிலையானதாக உள்ளன.

    இன்விக்டோ அனைத்து முக்கிய பகுதிகளிலும் "நல்ல" பாதுகாப்புடன் பக்கவாட்டு சோதனையில் சிறப்பாக செயல்பட்டது. கடினமான பக்கவாட்டு கம்பத்தில் சோதிக்கப்பட்டபோதும், அது சிறப்பாக செயல்பட்டது, பக்கவாட்டு விபத்துகளின் போது MPVகள் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நிரூபிக்கிறது.

    குழந்தை பயணி பாதுகாப்பு மதிப்பீடு: 45/49 – மிகவும் நல்லது

    பின்புறமாக எதிர்கொள்ளும் ISOFIX மவுண்ட்களை தரநிலையாகக் கொண்டு, 18 மாதங்கள் மற்றும் 3 ஆண்டுகள் பின்புறமாக எதிர்கொள்ளும் டம்மிகளுடன் சோதிக்கப்பட்ட நிலையில், இன்விக்டோ டைனமிக் கிராஷ் செயல்திறனில் அதிகபட்ச புள்ளிகளைப் பெற்றது. பக்கவாட்டு மற்றும் முன்பக்க தாக்கங்கள் சரியான மதிப்பெண் பெற்றன.

    மாருதி இன்விக்டோவும் பாதுகாப்பில் வலுவாக பொருத்தப்பட்டுள்ளது. அடிப்படை பாதுகாப்பை வலியுறுத்தும் ஒரு திடமான தொகுப்புடன் முன், பக்க மற்றும் திரைச்சீலைகளைப் பாதுகாக்கும் ஆறு ஏர்பேக்குகள் அனைத்து வகைகளிலும் நிலையானவை. இது பயணி பாதுகாப்பை முழுமையாக்குகிறது.

    அனைத்து டிரிம்களிலும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) கிடைக்கிறது மற்றும் கடினமான ஓட்டுநர் சூழ்நிலைகளில் வாகனம் நிலையாக இருக்க உதவுகிறது.

    இன்விக்டோ ADAS (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்) உடன் வரவில்லை என்றாலும், அதன் உத்தி நடைமுறைக்குரியது. அதன் வகுப்பிற்குள் உள்ள அனைத்து வேரியண்ட்களிலும் அனைத்து அடிப்படை பாதுகாப்பு அத்தியாவசியங்களையும் உள்ளடக்கியுள்ளது.

    இந்திய சந்தையில் இன்விக்டோ மாடல் மாருதியின் வரிசையில் ஒரு பிரீமியம் MPV ஆக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.24.97 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.28.61 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், எம்ஜி ஹெக்டர் பிளஸ் மற்றும் டாடா சஃபாரி ஆகியவற்றுடன் அதன் டாப் எண்ட் மாடல்களுடன் நேரடியாக போட்டியிடுகிறது.

    • ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாடு முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • கேரளாவில் சுமார் 30 இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.

    கேரளாவில் நடிகர்கள் பிரித்விராஜ் , துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாடு முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கேரளாவில் மட்டும் கொச்சி, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.

    பூடான் ராணுவம் பயன்படுத்திய வாகனங்களை ஏலம் எடுத்து இந்தியாவுக்கு கடத்துவதாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்றது.

    இந்நிலையில், இந்த சோதனையில் துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

    • சுமார் 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
    • இதுவரை சந்தேகத்திற்கு இடமான எந்த வாகனங்களையும் சுங்கத்துறையினர் கைப்பற்றவில்லை.

    கேரளாவில் நடிகர்கள் பிரித்விராஜ் , துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சொகுசு கார்களை பூட்டன் வழியாக இந்தியாவிற்குள் கடத்தி கொண்டுவரப்பட்டதாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அனால் இதுவரை சந்தேகத்திற்கு இடமான எந்த வாகனங்களையும் சுங்கத்துறையினர் கைப்பற்றவில்லை.

    கேரளாவில் கொச்சி, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதாக பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து எம்புரான் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பிரித்விராஜுக்கும் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெடிகுண்டு மிரட்டல் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • சோதனையால் அலுவலகப் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை அணில் சுப்பிரமணியன் என்ற பெயரில் இருந்து மின்னஞ்சல் வந்தது. அதில் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் மதியம் 2 மணிக்குள் அது வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் நான்கு தளங்களிலும் ஒவ்வொரு அலுவலக அறையாக சென்று சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. திருச்சிக்கு நாளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தர உள்ள நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது காவல் துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, வெடிகுண்டு மிரட்டல் திருச்சி கலெக்டர் அலுவலக மெயிலுக்கு வந்தாலும், அதில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆகவே மனநிலை பிரச்சனையில் பாதிக்கப்பட்டுள்ள நபர் மிரட்டல் விடுத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    இந்த வெடிகுண்டு சோதனையால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. இந்த சோதனையால் அலுவலகப் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது.

    • IADWS என்பது மூன்று நவீன ஆயுதங்களைக் கொண்ட ஒரு புதிய வான் பாதுகாப்பு அமைப்பாகும்
    • இந்த அமைப்பு வெவ்வேறு உயரங்களிலும் தூரங்களிலும் எதிரிகளின் வான் தாக்குதல்களை இடைமறிக்கும்.

    பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஒடிசா கடற்கரையில் அதன் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் (IADWS) முதல் வெற்றிகரமான சோதனையை நடத்தியது.

    IADWS என்பது மூன்று நவீன ஆயுதங்களைக் கொண்ட ஒரு புதிய வான் பாதுகாப்பு அமைப்பாகும். இந்த அமைப்பு முற்றிலும் உள்நாட்ட்டில் உருவாக்கப்பட்டது.

    இந்த அமைப்பு வெவ்வேறு உயரங்களிலும் தூரங்களிலும் எதிரிகளின் வான் தாக்குதல்களை இடைமறிக்கும். சோதனையின் போது அனைத்து அமைப்புகளும் எந்த சிக்கலும் இல்லாமல் செயல்பட்டன.

    இந்த சோதனை ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் சோதனை தளத்தில் நடந்தது. இதை மூத்த டிஆர்டிஓ விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது தனது எக்ஸ் பக்கத்தில், "IADWS இன் வெற்றிகு DRDO, இந்திய ஆயுதப் படைகள் மற்றும் தொழில்துறையை நான் வாழ்த்துகிறேன்" தெரிவித்தார்.   

    • ககன்யான் பயணத்திற்கு இந்த சோதனை மிகவும் முக்கியமானது.
    • இந்திய விமானப்படை, DRDO, இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை இந்த சோதனையில் இஸ்ரோவுடன் இணைந்து பங்கேற்றன.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), ககன்யான் பயணத்தை நோக்கி மற்றொரு முக்கிய மைல்கல்லைக் கடந்துள்ளது.

    விண்வெளிப் பயணத்தின் போது விண்வெளி வீரர்களின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமான பாராசூட் அமைப்பின் செயல்திறனை சோதிக்க நடத்தப்பட்ட "ஒருங்கிணைந்த ஏர் டிராப் டெஸ்ட் (IADT-01)" வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    ககன்யான் பயணத்திற்கு இந்த சோதனை மிகவும் முக்கியமானது விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும்போது விண்வெளிவீரர் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், அதைப் பாதுகாப்பாக தரையிறக்கவும் இந்த பாராசூட் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று நடந்த சோதனையில் இந்த பாராசூட் அமைப்பின் செயல்திறன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    இந்திய விமானப்படை, DRDO, இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை இந்த சோதனையில் இஸ்ரோவுடன் இணைந்து பங்கேற்றன. 

    இதன் மூலம் ககன்யான் பணி மூலம் விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பாக விண்வெளிக்கு அனுப்பி பூமிக்குத் திரும்பக் கொண்டுவரும் இலக்கை நோக்கி இஸ்ரோ முன்னேறி வருகிறது.   

     

    • வனத்துறை அதிகாரிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
    • இந்த சோதனையில் தங்கக்காசுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் ஜஜ்புர் மாவட்டத்தில் துணை வனக் காப்பாளராக இருக்கும் ராமச்சந்திர நேபாக் என்பவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக அவருக்குச் சொந்தமான 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். பல குழுவினர் இணைந்து நடத்திய இந்தச் சோதனையில் அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை 1.5 கோடி ரூபாய் எண்ணப்பட்ட நிலையில், இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பணம் எண்ணும் பணி நடக்கிறது.

    மேலும் 4 கிலோ தங்க பிஸ்கட்கள் மற்றும் தலா 10 கிராம் கொண்ட 16 தங்கக்காசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஒரு வாரத்தில் வனத்துறையில் அதிக சொத்து சேர்த்ததாக நடக்கும் இரண்டாவது ரெய்டு இதுவாகும்.

    • மதுபாட்டில்கள் திருடு போனது குறித்து எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
    • ஜார்க்கண்டில் எலிகள் போதைப் பொருள் திருடியதாக குற்றம் சாட்டப்படுவது இது முதன்முறையல்ல.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் செப்டம்பர் 1 -ந் தேதி முதல் புதிய மதுபானக் கொள்கை அமலாக உள்ளது. இதுநாள்வரை கடைகள் ஒதுக்கீட்டை அரசு செய்து வந்த நிலையில், அதனை ஆன்லைன் குலுக்கல் முறையில் ஏலம் விட அரசு திட்டமிட்டுள்ளது.

    புதிய விதிமுறைகள் அமலாக உள்ள நிலையில், மதுபான கையிருப்பு குறித்து கலால்துறை அதிகாரி ராம்லீலா ரவாணி தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அதன்படி, தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 802 மதுபான பாட்டில்களின் விற்பனை கணக்கில் வராதது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. இது குறித்து அந்தக் கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் கூறிய பதில்தான் அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மதுபாட்டில்களின் மூடிகளை தின்றுவிட்டு மதுவை எலிகள் குடித்து விட்டதாக கூறினர். இந்த பதிலை கேட்ட அதிகாரிகளுக்கு மயக்கம் வந்துவிட்டது.

    ஊழியர்கள் கூறியது பொய் என்பதை அறிந்த அதிகாரிகள் அந்த ஊழியர்களுக்கு அபராதம் விதித்தனர்.

    இதுகுறித்து கலால்துறை அதிகாரி ராம்லீலா ரவாணி கூறுகையில்:-

    மதுபாட்டில்களை எலிகள் குடித்ததா இல்லையா என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. அரசு உங்களிடம் கொடுத்தது முழு மதுபாட்டில்களை அதேபோல் நீங்களும் எங்களிடம் முழு மது பாட்டில்களையும் ஒப்படையுங்கள் என கூறினார். காலியான அந்த மதுபாட்டில்களுக்கும் சேர்த்து பணத்தை செலுத்துமாறு உத்தரவிட்டார்.

    மது பாட்டில்கள் காலியானதற்கு ஊழியர்கள் கூறிய பொய்யை ஏற்க முடியாத அதிகாரி இதென்ன முட்டாள்தனமான பதில் என ஊழியர்களை கடிந்துகொண்டார்.

    மதுபாட்டில்கள் திருடு போனது குறித்து எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இவையெல்லாம் அரசின் ஊழலை மறைக்கவே அரசு நடத்தும் நாடகம் என பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரதுல் ஷாத்தியோ குற்றம் சாட்டியுள்ளார்.சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, முக்கிய குற்றவாளிகளையும் எலிகளையும் கைது செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    ஜார்க்கண்டில் எலிகள் போதைப் பொருள் திருடியதாக குற்றம் சாட்டப்படுவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்பும் 10 கிலோ பாங்கு மற்றும் 9 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டு விட்டதாக புகார் வந்துள்ளது.

    இந்நிலையில் எலி மதுகுடித்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்ற போது எலிகள் மதுபானத்தை குடித்தன என்ற அபத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அதிகாரிகளை கடிந்து கொண்ட நீதிபதி விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    மதுபானத்தை எலிகள் குடித்து விட்டதாக ஊழியர்கள் கூறிய பதிலால் அதிகாரிகள் தலையை பிய்த்துக் கொள்ளாத நிலையில் உள்ளனர்.

    • பாதிக்கப்பட்ட மாணவிகள் வீடு திரும்பியதும் பெற்றோர்களிடம் கூறி கதறி அழுதனர்.
    • சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது போக்சோ, மானபங்கம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    தானே மாவட்டம் சகாப்பூர் பகுதியில் ஆர்.எஸ். தமானி என்ற தனியார் பள்ளி உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையில் ரத்தக்கறை படிந்து இருந்ததாக கூறப்படுகிறது. கழிவறையை ரத்தக்கறையாக்கிய மாணவியை கண்டறிய பள்ளி ஆசிரியைகள் விசித்திர செயலை அரங்கேற்றினர். அதன்படி மாதவிடாய் இருப்பதாகக் கூறிய மாணவிகளின் இடது கை ரேகையை பதிவு செய்தனர். அதே நேரத்தில் மாதவிடாய் இல்லை எனக்கூறிய மாணவிகளை கழிவறைக்கு அழைத்து சென்று நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தி உள்ளனர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் வீடு திரும்பியதும் பெற்றோர்களிடம் கூறி கதறி அழுதனர். பள்ளியில் அரங்கேறிய இந்த கொடூர சம்பவத்தை கேட்டு கொந்தளித்த பெற்றோர், நேற்று முன்தினம் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் பள்ளியின் முதல்வர், பெண் ஊழியர், ஆசிரியைகள் 4 பேர் உள்பட 8 பேர் மீது போக்சோ, மானபங்கம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் தானே தனியார் பள்ளியில் மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்திய விவகாரத்தில் போலீசார், பள்ளி முதல்வர் மாதுரி கெய்க்வாட் மற்றும் பெண் ஊழியர் நந்தாவை அதிரடியாக கைது செய்தனர். இதேபோல மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளி முதல்வர் உத்தரவின் பேரில் மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு தானே மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.

    இதற்கிடையே இந்த பிரச்சினை நேற்று மகாராஷ்டிரா சட்டசபையிலும் எதிரொலித்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோலே, முற்போக்கான மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்து இருக்கக்கூடாது என கவலை தெரிவித்தார்.

    தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜிதேந்திர அவாத், மாணவிகளுக்கு எதிராக கொடூரம் நடந்த பள்ளியின் முதல்வர் ஒரு பெண் என வேதனை தெரிவித்தார்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜோதி கெய்க்வாட் தனியார் பள்ளி விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

    இதையடுத்து பதிலளித்து பேசிய மந்திரி கிரிஷ் மகாஜன், ''தானே தனியார் பள்ளி விவகாரத்தில் ஏற்கனவே போலீசாா் நடவடிக்கை எடுக்க தொடங்கி விட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்'' என்றார்.

    ×