என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ISRO"

    • ஆக்சியம்-4 திட்டம், விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
    • தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 4 முறை ஒத்தி வைக்கப்பட்டது.

    அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது.

    இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு செல்கிறார். அவருடன் 3 விண்வெளி வீரர்கள் செல்ல உள்ளனர்.

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் அவர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 4 முறை ஒத்தி வைக்கப்பட்டது. கடைசியாக 11-ம் தேதி ராக்கெட் ஏவப்பட இருந்த நிலையில் திரவ ஆக்சிஜன் கசிவு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டதும், புதிய தேதி அறிவிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரர்கள் வரும் 19-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொள்வார்கள் என்று இஸ்ரோ அறிவித்தது. .

    இந்நிலையில், சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள், நாளை சர்வதேச விண்வெளி மையத்திற்கு மேற்கொள்ள இருந்த பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பயணம் வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 

    • பல்வேறு கட்ட சோதனைகளுக்காக நிசார் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் தேதி தள்ளிக்கொண்டே போனது.
    • 2 ஆயிரத்து 800 கிலோ எடை கொண்ட நிசார் செயற்கைக்கோள் 3 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்டுள்ளது

    பூமியை கண்காணித்து தகவல்களை சேகரிப்பதற்காக 'நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார்' (நிசார்) என்ற செயற்கைக்கோளை அமெரிக்காவின் நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைக்கோள் நாசா மற்றும் இஸ்ரோவின் கூட்டு முயற்சியாகும்.

    அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கடந்த 2015-ம் ஆண்டு இந்தியா வந்தபோது இந்தியாவும், அமெரிக்காவும் இத்திட்டத்தை மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்டன.

    இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வடிவமைக்கப்பட்டு, பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. விண்ணில் ஏவும்போது எதிர்பார்த்ததைவிட அதிக வெப்பம் அடைவதற்கான அபாயத்தை குறைக்க பிரதிபலிப்பு பூச்சு பயன்படுத்த கலிபோர்னியாவில் உள்ள உற்பத்தியாளரிடம் செயற்கைக்கோள் திருப்பி அனுப்பப்பட்டது. அங்கு மீண்டும் சரி செய்யப்பட்டு இந்தியா அனுப்பப்பட்டது.

    பல்வேறு கட்ட சோதனைகளுக்காக நிசார் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் தேதி தள்ளிக்கொண்டே போனது. பின்னர், கடந்த மாதம் பெங்களூருவில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திற்கு நிசார் செயற்கைக்கோள் முழு சோதனையை முடித்து கொண்டுவரப்பட்டு உள்ளது.

    இது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-2 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு அடுத்த மாதம் 14-ந் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 747 கிலோ மீட்டர் சூரிய ஒத்திசைவான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

    2 ஆயிரத்து 800 கிலோ எடை கொண்ட நிசார் செயற்கைக்கோள் 3 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்டுள்ளது. அத்துடன், 6 ஆயிரத்து 500 வாட்ஸ் சக்தி திறன் உள்ளது. இந்த செயற்கைக்கோள் தயாரிக்க சுமார் ரூ.1,805 கோடி செலவிட்டுள்ளது.

    இந்த செயற்கைக்கோள் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாக கண்காணிக்க உதவுகிறது. குறிப்பாக, பனிப்பாறைகள், காடுகள் மற்றும் விவசாய நிலங்கள் போன்றவற்றை ஆய்வு செய்யும்.

    அத்துடன், நிலநடுக்கம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு போன்ற பேரிடர்களை கண்காணிக்கவும், அவற்றின் தாக்கத்தைக் குறைக்கவும் உதவும். அத்துடன் காடுகள் மற்றும் சதுப்பு நிலங்கள் போன்ற இயற்கை வளங்களை நிலையாக நிர்வகிக்க உதவி செய்கிறது. தொலைதூர உணர்தலுக்காகவும், பூமியில் இயற்கை செயல்முறைகளை கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள் உதவும்.

    இதன் இடதுபுறம் நோக்கிய கருவிகள் அண்டார்டிக் பகுதியிலுள்ள 'கிரையோஸ்பியர்' என்று அழைக்கப்படும் பனிப்பாறைகள், பனிமலைகள், பனிமூடிய பகுதிகள், உறைந்த நீர் மற்றும் பனிப்புயல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்யும். மேம்பட்ட ரேடார் இமேஜிங்கைப் பயன்படுத்தி பூமியின் நிலம் மற்றும் பனி நிறைகளின் உயரத்தை ஒரு மாதத்திற்கு 4 முதல் 6 முறை 5 முதல் 10 மீட்டர் தெளிவுத்திறனில் வரைபடமாக்கும் திறன் கொண்டது என்று இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் கூறினர்.

    • ஆக்சியம்-4 திட்டம், விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
    • தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 4 முறை ஒத்தி வைக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது.

    இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு செல்கிறார். அவருடன் 3 விண்வெளி வீரர்கள் செல்ல உள்ளனர்.

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் அவர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 4 முறை ஒத்தி வைக்கப்பட்டது. கடைசியாக 11-ம் தேதி ராக்கெட் ஏவப்பட இருந்த நிலையில் திரவ ஆக்சிஜன் கசிவு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டதும், புதிய தேதி அறிவிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரர்கள் வரும் 19-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொள்வார்கள் என மத்திய மந்திரி ஜிதேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.

    பால்கன்-9 ராக்கெட்டில் ஏற்பட்ட திரவ ஆக்சிஜன் கசிவை ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனம் வெற்றிகரமாக விஞ்ஞானிகள் சரிசெய்ததாக இஸ்ரோ உறுதிப்படுத்தியது. இதனால் சுபான்ஷு சுக்லா பயணம் மேற்கொள்ளும் விண்கலம் வரும் 19-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    • ஆக்சியம்-4 திட்டம், விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
    • நேற்றே விண்வெளிக்குப் புறப்பட இருந்த நிலையில், மோசமான வானிலையால் பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

    அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து திட்டமிடப்பட்டிருந்த ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஆக்சியம்-4 மனித விண்வெளிப் பயணம், ஃபால்கன் 9 ராக்கெட்டில் ஏற்பட்ட திரவ ஆக்சிஜன் கசிவால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    நேற்றே விண்வெளிக்குப் புறப்பட இருந்த நிலையில், மோசமான வானிலையால் பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மீண்டும் இன்று மாலை 5.30 மணிக்குப் புறப்படுவதாக இருந்தது, தற்போது மீண்டும் இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விண்வெளி பயணத்திற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நான்காவது தனியார் மனித விண்வெளிப் பயணத்தில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி என மொத்தம் நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தனர்.

    கடந்த 1984 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோயுஸ் விண்வெளிப் பயணத்தில் இணைந்த ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு, 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுபான்ஷூ சுக்லா பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நாசா மற்றும் இஸ்ரோவின் கூட்டு முயற்சியான இந்த ஆக்சியம்-4 திட்டம், விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

    • மொத்தம் நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தனர்.
    • 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் ஆவார்.

    அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து திட்டமிடப்பட்டிருந்த ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஆக்சியம்-4 மனித விண்வெளிப் பயணம், மோசமான வானிலை காரணமாக நாளை (ஜூன் 11 ஆம் தேதிக்கு) ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இந்த நான்காவது தனியார் மனித விண்வெளிப் பயணத்தில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி என மொத்தம் நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தனர்.

    கடந்த 1984 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோயுஸ் விண்வெளிப் பயணத்தில் இணைந்த ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு, 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுபான்ஷூ சுக்லா பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நாசா மற்றும் இஸ்ரோவின் கூட்டு முயற்சியான இந்த ஆக்சியம்-4 திட்டம், விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

    • மோசமான நிதி நிலைமை காரணமாக, தொழில்நுட்ப படிப்புக்கு பதிலாக பி.ஏ. படித்தார்.
    • ஸ்ரீஹரிகோட்டாவில் திறன் தேர்வுக்கு அழைக்கப்பட்டார்.

    மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தில் உள்ள நந்தன் நகரைச் சேர்ந்த பானி பூரி (கோல்கப்பா) விற்பனையாளரான ராம்தாஸ், தற்போது இஸ்ரோவில் தொழில்நுட்ப வல்லுநர் பிரிவில் பணிபுரிகிறார்.

    அவரது தந்தை டோங்கர்கான் ஜில்லா பரிஷத் பள்ளியில் பியூனாகப் பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றார். அவரது தாயார் ஒரு இல்லத்தரசி. மோசமான நிதி நிலைமை காரணமாக, தொழில்நுட்ப படிப்புக்கு பதிலாக பி.ஏ. படித்தார். அதன் பிறகு அவரால் படிக்க முடியவில்லை. நிதி நெருக்கடி காரணமாக, பகலில் பானிபூரி விற்றும், இரவில் படிப்பதன் மூலமும் ராம்தாஸ் தனது இலக்கை நோக்கி முன்னேறினார்.

    டிரோராவில் உள்ள தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் (ஐடிஐ) சேர்ந்து பம்ப் ஆபரேட்டர்-கம்-மெக்கானிக் படிப்பை முடித்தார். அங்கு நீர் சுத்திகரிப்பு மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக்கொண்டார்.

    2023 ஆம் ஆண்டில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பயிற்சி பயிற்சிப் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டது. அதற்கு விண்ணப்பித்து, 2024 ஆம் ஆண்டு நாக்பூரில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், ஆகஸ்ட் 29, 2024 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் திறன் தேர்வுக்கு அழைக்கப்பட்டார். திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, அவர் இஸ்ரோவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    மே 19, 2025 தேதியிட்ட சேர்க்கை கடிதத்தின் அவரை தேடி வந்தது. இதன்மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி மையத்தில் பம்ப் ஆபரேட்டர்-கம்-மெக்கானிக்காக ராமதாஸ் தற்போது சேர்ந்துள்ளார்.

    • சந்திரயான்-5 திட்டத்திற்காக ஜப்பான் விண்வெளித்துறையுடன் இஸ்ரோவும் இணைந்து செயல்படுகிறது.
    • முந்தைய சந்திரயான் திட்டத்தில் ரோவரின் எடை 25 கிலோவாக இருந்தது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), நிலம் மற்றும் கடல் ஆகிய இரண்டிலும் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு கூடுதல் கவனம் செலுத்துகிறது. தற்போது இஸ்ரோவிடம் குறைந்தது 56 செயற்கைக்கோள்கள் உள்ளன. அவற்றில் போதுமான எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகின்றன.

    தொலைதொடர்பு சேவை, பேரிடர் எச்சரிக்கை, வானிலை முன்னறிவிப்பு, வள மேலாண்மை, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், நீர் பாதுகாப்பு மற்றும் அனைத்து மக்களின் பாதுகாப்பு போன்ற பல துறைகள் மூலம் சாதாரண மக்களின் நலனுக்காக மேம்பட்ட விண்வெளி தொழில்நுட்பத்தை கொண்டு வருவதே இஸ்ரோவின் திட்டங்களாகும்.

    நமது நாட்டில் சுமார் 11 ஆயிரத்து 500 கி.மீ. நீளமுள்ள கடற்கரை உள்ளது. அந்தப் பகுதியிலும், எல்லைப்பகுதிகளிலும் விழிப்புடன் இருக்க வேண்டியது இருக்கிறது. எனவே, நாட்டின் பாதுகாப்புக்காக தேவையானதையும், சாத்தியமானதும் செய்யப்படுகிறது. அத்துடன், மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு இஸ்ரோவுக்கு உள்ளது.

    இந்தியாவின் விண்வெளி ஆய்வின் ஒரு பகுதியாக, சந்திரயான்-4 திட்டம் மூலம் நிலவு மேற்பரப்பு மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர். இதன் மூலம் நிலவு புவியியல் பற்றிய பல தகவல்களை நாம் அறிய முடியும். அத்துடன், எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு இந்த ஆராய்ச்சி உதவும்.

    சந்திரயான்-5 திட்டத்திற்காக ஜப்பான் விண்வெளித்துறையுடன் இஸ்ரோவும் இணைந்து செயல்படுகிறது. ஏற்கனவே விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் பணிகளை விட தற்போது இது விரிவாக இருக்கும். சந்திரயான்-3-ன் எடை 5 ஆயிரம் கிலோவாக இருந்தது. ஆனால் சந்திரயான் 5-க்கான மொத்த ஏவுதள எடை 6 ஆயிரத்து 400 கிலோவாக உயர்ந்துள்ளது.

    முந்தைய சந்திரயான் திட்டத்தில் ரோவரின் எடை 25 கிலோவாக இருந்தது. ஆனால், தற்போது சந்திரயான்-5-ல் ரோவரின் எடை 350 கிலோ எடையுள்ளதாக இருக்கும். ஆயுட்காலம் 14 நாட்களில் இருந்து 100 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நிலவின் மேற்பரப்பை விரிவாக ஆராய முடியும். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதிலும் இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் ஆள் இல்லாத ராக்கெட் நடப்பாண்டு இறுதியில் விண்ணில் ஏவி சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, வருகிற 2027-ம் ஆண்டின் முதல் காலாண்டில் மேலும் 2 பணியாளர்கள் கொண்ட பணிகள் விண்வெளி பயணிகளை ஏற்றிச்செல்லும். இதுதவிர, நாசாவுடன் இணைந்து 2 பணிகள் இருக்கும். தொடர்ந்து 2027-ம் ஆண்டு இந்தியாவின் விண்வெளி பயணத்திற்கு ஒரு முக்கியமான ஆண்டாக இருக்கும். ஏனெனில் 2027-ம் ஆண்டில் சந்திரயான்-4 மற்றும் மனிதனை விண்ணுக்கு ஏவப்படும் ககன்யான் திட்டமும் செயல்படுத்த நாடு தயாராகி வருகிறது' என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.

    • இஸ்ரோ விஞ்ஞானிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.
    • தமிழ்நாட்டின் வேர்கள் நட்சத்திரங்களை எட்டுவதைக் காண்பதில் பெருமை என்றார்.

    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் உள்ளிட்ட மூத்த விஞ்ஞானிகளைச் சந்தித்தார்.

    இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணனுடன் ஒரு முக்கிய சந்திப்பை மேற்கொண்டேன்.

    தமிழ்நாடு அரசுப் பள்ளியிலிருந்து சென்று இந்திய விண்வெளி நிறுவனத்தின் உயர் பொறுப்புக்கு வந்துள்ள வி.நாராயணனின் பயணமானது நிறையவே பேசக்கூடியது

    பொதுக் கல்வியால் எட்டக்கூடிய உயரங்களை அவர் உள்ளடக்கி உள்ளார். தமிழ்நாட்டின் வேர்கள் நட்சத்திரங்களை எட்டுவதைக் காண்பதில் பெருமை என பதிவிட்டுள்ளார்.

    • இஸ்ரோவின் 101-வது ராக்கெட் இன்று ஏவப்பட்டது.
    • 3-வது அடுக்கு பிரியும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து ஆய்வு செய்யப்படும்.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

    விண்ணில் ஏவப்பட்ட 101-வது ராக்கெட்டிலிருந்து 2 அடுக்கு மட்டுமே வெற்றிகரமாக பிரிந்தது. முதல் 2 அடுக்கு மட்டுமே வெற்றிகரமாக பிரிந்த நிலையில் 3-வது அடுக்கு பிரியும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

    இதையடுத்து பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது.

    இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறுகையில்,

    இஸ்ரோவின் 101-வது ராக்கெட் இன்று ஏவப்பட்டது.

    2-வது அடுக்கு பிரியும் வரை பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்டின் செயல்பாடு சரியாகத்தான் இருந்தது. 3-வது அடுக்கு பிரியும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை.

    3-வது அடுக்கு பிரியும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து ஆய்வு செய்யப்படும். பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது குறித்து ஆய்வுக்கு பிறகு விரிவான அறிக்கை அளிக்கப்படும்.

    தவறுக்கான காரணத்தை ஆய்வு செய்து மீண்டு வருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
    • பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்துள்ளது என இஸ்ரோ தெரிவித்தது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

    பூமி கண்காணிப்புக்காக 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டு ஆகும்.

    இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்துள்ளது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

    இரு அடுக்குகள் வெற்றிகரமாகப் பிரிந்தது. 3வது அடுக்கு பிரிந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

    • பூமி கண்காணிப்புக்காக இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டது.
    • இதன் ஆயுட்காலம் 5 ஆண்டு மட்டுமே ஆகும் என இஸ்ரோ தெரிவித்தது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட்டுக்கு தேவையான திட மற்றும் திரவ எரிபொருள் நிரப்பப்பட்டு உள்ளது.

    பூமி கண்காணிப்புக்காக 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டு ஆகும்.

    இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது என்றும், ராக்கெட் மற்றும் செயற்கைக் கோள் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இது இஸ்ரோவின் 101-வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கான தேர்வான வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா.
    • வருகிற 29-ந்தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் பெல்கான் ராக்கெட் மூலம் விண்வெளி செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ, அமெரிக்க விண்வெளி கழகமான நாசா ஆகியவை இணைந்து ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப திட்டமிட்டு இருந்தது.

    இந்த திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா தேர்வு செய்யப்பட்டார். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கான தேர்வான வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா, அனுபவ பயிற்சி நோக்கங்களுக்காக ஆக்ஸியம் திட்டம் மூலம் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அவருடன் மேலும் 3 விண்வெளி வீரர்கள் செல்ல உள்ளனர்.

    வருகிற 29-ந்தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் பெல்கான் ராக்கெட் மூலம் விண்வெளி செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் ஏவப்பட இருந்த நிலையில், தற்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் மீண்டும் வருகிற ஜூன் 8-ந்தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×