என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ISRO"

    • நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது.
    • இதில் சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி ஆய்வு கழகமான இஸ்ரோ கடந்த 2019-ம் ஆண்டு நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பியது. இதில் சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அந்த ஆர்பிட்டர் நிலவில் நீர் இருக்கிறதா என்பதை ஆய்வுசெய்து வருகிறது.

    இந்நிலையில், நிலவில் உள்ள நீர், பனிக்கட்டி மற்றும் மண்ணின் ரேடார் படங்களை சந்திரயான்-2 ஆர்பிட்டர் அனுப்பியுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு முதல் நிலவைச் சுற்றி வரும் சந்திரயான்-2 ஆர்பிட்டர் சேகரித்து அனுப்பிய தகவல்களை ஆய்வு செய்ததில் நிலவில் நீர் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இதன்மூலம் நிலவில் நீர் இருக்கும் இடம் பற்றிய வரைபடத்தை இஸ்ரோ தயாரித்திருக்கிறது.

    அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் இந்த வரைபடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதற்காக இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் (டி.எப்.எஸ்.ஏ.ஆர்) என்ற உயர் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் பயன்படுத்தி உள்ளனர்.

    கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 1,400 ரேடார் தரவுத்தொகுப்புகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

    • ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று விண்ணில் ஏவப்பட்டது.
    • செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

    புதுடெல்லி:

    நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ சார்பில் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. கடந்த 2013-ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது.

    அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்03 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோள் சந்திரயான்3 அனுப்பிய ஜிஎஸ்எல்வி மார்க்-03 (எல்விஎம்-3) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை விண்ணில் ஏவப்பட்டது. செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சி.எம்.எஸ்.-03 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நமது விண்வெளித்துறை தொடர்ந்து நம்மை பெருமைப்படுத்துகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள். நமது விண்வெளி விஞ்ஞானிகளால் இயக்கப்படும் விண்வெளித்துறை எவ்வாறு சிறப்பிற்கும் புதுமைக்கும் ஒத்ததாக மாறியுள்ளது என்பது பாராட்டத்தக்கது என பதிவிட்டுள்ளார்.

    • பாதுகாப்பு பணி மற்றும் கடலோர எல்லைகளை கண்காணிக்க எல்.வி.எம்-3 ராக்கெட் இன்று ஏவப்பட்டது.
    • ரூ.1600 கோடியில் தயாரான நவீன செயற்கைக்கோளை நிலை நிறுத்துகிறது.

    நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ சார்பில் இதுவரை 48 செயற்கைக் கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

    அந்த வகையில் கடந்த 2013-ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்-7 (ருக்மணி) செயற்கைக் கோளின் ஆயுள்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடியில் அதிநவீன சி.எம்.எஸ்.-03 (ஜிசாட்-7ஆர்) செயற்கைக் கோளை இஸ்ரோ தற்போது வடிவமைத்துள்ளது.

    இந்த செயற்கைக்கோள் எல்.வி.எம்.3 (ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவன் ஏவுதளத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.26 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

    இதற்கான கவுன்டவுன் நேற்று மாலை தொடங்கியது.

    சி.எம்.எஸ்.-03 செயற் கைக்கோள் 4,410 கிலோ எடை கொண்டது. இதுவரை புவிவட்டப் பாதைக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் இதுவே அதிக எடை கொண்டதாகும். இதில் விரிவுபடுத்தப்பட்ட மல்டி பேண்ட் தொழில்நுட்ப வசதிகள் உள்பட பல்வேறு நவீன அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்திய பாதுகாப்பு துறையின் கண்காணிப்புப் பணிகளுக்காக இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்திய கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதுடன், போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு இடையே தொலைத் தொடர்பு சேவையை மேம்படுத்தவும் இது உதவும்.

    அதற்கு ஏற்ப இந்த செயற்கைகோள் விண்ணில் குறைந்தபட்சம் 170 கி.மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம் 29,970 கி.மீட்டர் தொலைவிலும் புவி வட்டப்பாதையில் குறிப்பிட்ட இடத்தில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்தியா இதுவரை புவி வட்ட சுற்றுப்பாதைக்கு அனுப்பியுள்ள செயற்கைகோள்களில் இந்த செயற்கைகோள்தான் அதிக எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் எல்.வி.எம்.-3 ராக்கெட்டின் 7-வது ஏவுதல் திட்டம் இது. இதற்கு முன்பு சந்திர யான்-3 விண்கலம் இந்த ராக்கெட் மூலமாக வெற்றி கரமாக விண்ணில் செலுத் தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    எல்.வி.எம்.-3 ராக்கெட் அதிநவீன கருவிகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதன்மூலம் பாதுகாப்பு துறைக்கு தேவையான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும். எல்.வி.எம்- ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி உள்ளனர்.

    • இஸ்ரோ அடுத்த 3 ஆண்டுகளுக்குள் செயற்கைக்கோள் ஏவுதல்களை 3 மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
    • ஆயுத மோதல்களில் விண்வெளித் துறையின் பங்கு, ஆபரேஷன் சிந்தூரின்போது கூர்மையாக கவனிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லியில் அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் 52-வது தேசிய மேலாண்மை மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:-

    காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தானுக்குள் துல்லியமாக முப்படைகளின் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டது.

    அப்போது, தேசிய பாதுகாப்பு தேவைகளுக்காக பூமி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை பயன்படுத்தி, 400-க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைத்து செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் மூலம் 24 மணி நேரமும் தரவுகளை வழங்கினர்.

    ஆயுத மோதல்களில் விண்வெளித் துறையின் பங்கு, ஆபரேஷன் சிந்தூரின்போது கூர்மையாக கவனிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் டிரோன்கள் மற்றும் சுற்றித்திரியும் வெடிமருந்துகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 'ஆகாஷ் தீர்' போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளின் திறன்களையும் சோதிக்கப்பட்டன.

    இஸ்ரோ அடுத்த 3 ஆண்டுகளுக்குள் செயற்கைக்கோள் ஏவுதல்களை 3 மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. கூடுதல் செலவுகள் இல்லாமல் மார்க்-3 ராக்கெட் சுமந்து செல்லும் திறன் 4 ஆயிரம் கிலோவில் இருந்து 5 ஆயிரத்து 100 கிலோவாக மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். அதேபோல், அடுத்த தலைமுறை ஏவுதளம், பிரதமரால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய ஏவுதளம் இந்தியாவின் விரிவடைந்து வரும் விண்வெளி லட்சியங்களை நிறைவேற்ற உதவிகரமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.
    • இதில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

    இந்நிலையில், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை இன்று நடந்தது. இதில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்திய விண்வெளி துறையில் இன்று முக்கியமான நாள். 33 கட்டுமானங்களுக்கான பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும். இதற்கான இடத்தை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி என தெரிவித்தார்.

    • ககன்யான் பயணத்திற்கு இந்த சோதனை மிகவும் முக்கியமானது.
    • இந்திய விமானப்படை, DRDO, இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை இந்த சோதனையில் இஸ்ரோவுடன் இணைந்து பங்கேற்றன.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), ககன்யான் பயணத்தை நோக்கி மற்றொரு முக்கிய மைல்கல்லைக் கடந்துள்ளது.

    விண்வெளிப் பயணத்தின் போது விண்வெளி வீரர்களின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமான பாராசூட் அமைப்பின் செயல்திறனை சோதிக்க நடத்தப்பட்ட "ஒருங்கிணைந்த ஏர் டிராப் டெஸ்ட் (IADT-01)" வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    ககன்யான் பயணத்திற்கு இந்த சோதனை மிகவும் முக்கியமானது விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும்போது விண்வெளிவீரர் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், அதைப் பாதுகாப்பாக தரையிறக்கவும் இந்த பாராசூட் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று நடந்த சோதனையில் இந்த பாராசூட் அமைப்பின் செயல்திறன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    இந்திய விமானப்படை, DRDO, இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை இந்த சோதனையில் இஸ்ரோவுடன் இணைந்து பங்கேற்றன. 

    இதன் மூலம் ககன்யான் பணி மூலம் விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பாக விண்வெளிக்கு அனுப்பி பூமிக்குத் திரும்பக் கொண்டுவரும் இலக்கை நோக்கி இஸ்ரோ முன்னேறி வருகிறது.   

     

    • தேசிய விண்வெளி தினம் ஆகஸ்ட் 23-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
    • 2028-ம் ஆண்டுக்குள் முதல் விண்வெளி ஆய்வுமையத்தை நிறுவ இந்தியா திட்டமிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இந்தியாவின் முதல் சுற்றுப்பாதை ஆய்வகமான 'பாரதிய அந்தரிக்ஸ்' நிலையத்தின் மாதிரியை டெல்லி பாரத் மண்டபத்தில் இஸ்ரோ காட்சிக்கு வைத்துள்ளது.

    ஆகஸ்ட் 23-ம் தேதி, தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இந்த ஏற்பாட்டை இஸ்ரோ செய்துள்ளது.

    உலகின் 5 முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் சார்பில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் நிர்வகிக்கப்படுகிறது. அதுதவிர, சீனா சார்பில் ஒரு சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையமும் உள்ளது. இந்தியா சார்பிலும் விண்வெளி ஆய்வு மையம் அமைக்க ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    பாரத் அந்தரிக்ஸ் எனப்படும் ஆய்வு நிலையங்களை விண்வெளியில் நிலைநிறுத்த முயற்சி மேற்கொண்டுள்ள இந்தியா, அவற்றை 10 டன் எடை கொண்டதாகத் தயாரித்து வருகிறது.

    பி.ஏ.எஸ்-01 தொகுதி 10 டன் எடையுள்ளதாக இருக்கும். பூமியிலிருந்து 450 கி.மீ. உயரத்தில் குறைந்த பூமி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படும். இவை இளைய தலைமுறையினர் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்வதற்கான வாய்ப்புகளை ஊக்குவிக்கும்.

    வரும் 2028-ம் ஆண்டுக்குள் முதலாவது விண்வெளி ஆய்வு மையத்தை நிறுவ இந்தியா திட்டமிட்டுள்ளது. 2035ம் ஆண்டிற்குள் குறைந்தபட்சம் 5 ஆய்வு மையங்களை விண்வெளியில் நிலைநிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

    விண்வெளி, உயிர் அறிவியல், மருத்துவம் மற்றும் கோள்களுக்கு இடையேயான ஆய்வு ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களைப் ஆய்வு செய்வதற்கான தளமாக பாரதிய அந்தரிக்ஸ் நிலையம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் இது மனித ஆரோக்கியத்தில் நுண் ஈர்ப்பு விசையின் விளைவுகளை ஆய்வு செய்வதற்கும், விண்வெளியில் நீண்டகால மனித இருப்புக்குத் தேவையான அத்தியாவசிய தொழில்நுட்பங்களை சோதிப்பதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கும் என கூறப்படுகிறது.

    • ‘கிரயோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பத்தில் நாங்கள் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளோம்.
    • ஆதித்யா எல்-1- ஐ பொறுத்தவரை, இந்த ஆண்டு நாங்கள் 13 ‘டெராபிட்’ தரவை வெளியிட்டுள்ளோம்.

    இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:-

    கடந்த 4 மாதங்களில் இஸ்ரோ பல சாதனைகளை செய்துள்ளது. பேரிடர் எச்சரிக்கை துறையில் இஸ்ரோ ஒரு சிறந்த பணியைச் செய்து வருகிறது. ஐ.நா. சபையின் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளில் மொத்தம் 13 இலக்குகள் இஸ்ரோவால் ஆதரிக்கப்படுகின்றன.

    'கிரயோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பத்தில் நாங்கள் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளோம். சோதனைகள் மிகச் சிறப்பாக நடந்து வருகின்றன. உள்நாட்டு மயமாக்கலில் பல நடவடிக்கைகள் சிறப்பாக முன்னேறி வருகின்றன. ஆதித்யா எல்-1- ஐ பொறுத்தவரை, இந்த ஆண்டு நாங்கள் 13 'டெராபிட்' தரவை வெளியிட்டுள்ளோம்,''

    முதல் ஆளில்லா விண்கலமான ககன்யான் 1, இந்த ஆண்டு இறுதிக்குள், ஒருவேளை டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் விண்ணில் ஏவப்படும். அதில், அரை மனித உருவமான வியோமித்ரா (ரோபட்) பறக்கப்போகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பூமியின் மேற்பரப்பில் 10 மீட்டர் வரையிலான மாற்றங்களையும் படம் பிடிக்க முடியும்.
    • பூமியில் நிகழும் மாற்றங்களைப் பற்றிய 3டி திரைப்படம் போன்ற ஒரு பார்வையை விஞ்ஞானிகளுக்கு வழங்கும்.

    பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காகவும், பருவநிலை மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் நாசா கூட்டு முயற்சியில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் நிசார் செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 392 கிலோ எடை கொண்ட நிசார் செயற்கைக்கோள் கடந்த மாதம் 30-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.

    5 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்ட இந்த செயற்கைக்கோளில் எல்-பேண்ட் மற்றும் எஸ்-பேண்ட் ஆகிய இருவேறு வகை 'சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார்' என்ற நவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் விண்ணில் ஏவப்பட்டு 17 நாட்களுக்கு பிறகு செயற்கைக்கோளில் இருந்த 12 மீட்டர் நீளம், 64 கிலோ எடை கொண்ட ஆன்டெனா விரிந்து பணியை தொடங்கி உள்ளது. இதற்கு விஞ்ஞானிகள் 'தங்க மலர்' என்று பெயரிட்டுள்ளனர்.

    இந்த ஆன்டெனா திறந்தபோது, விண்வெளியில் தங்க மலர் பூத்ததுபோல் இதழ்கள் ஒவ்வொன்றாக விரிந்தது. இதிலுள்ள 123 இலகுரக எந்திரக் கட்டமைப்புகள் அதற்கு வலிமையைக் கொடுக்கின்றன. தொடர்ந்து பேரழிவுகளைக் கூர்ந்து கவனிக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    பூமியின் மேற்பரப்பில் 10 மீட்டர் வரையிலான மாற்றங்களையும் படம் பிடிக்க முடியும். பகல் அல்லது இரவு, மழை, மேகம் அல்லது மூடுபனி என எந்த சூழ்நிலையிலும் தொடர்ந்து செயல்படும். இது ஒவ்வொரு 12 நாட்களுக்கும் ஒரு முறை முழு பூமியின் வரைபடத்தையும் தயாரிக்கிறது. இது காலப்போக்கில் பூமியில் நிகழும் மாற்றங்களைப் பற்றிய 3டி திரைப்படம் போன்ற ஒரு பார்வையை விஞ்ஞானிகளுக்கு வழங்கும்.

    இந்த ஆன்டெனாவில் மிகவும் சக்தி வாய்ந்த செயற்கை துளை ரேடார் தொழில்நுட்பம் உள்ளது. சாதாரண சூழ்நிலைகளில், இந்த ஆன்டெனா ஒரு குறிப்பிட்ட வரம்பில் செயல்படுகிறது. இது 19 கிலோமீட்டர் நீளமுள்ள இடத்தில் பணியை தொடங்கியுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    துல்லியமாக கணிக்கலாம்

    இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குனர் சஞ்சய் சர்மா கூறும்போது, 'ஆன்டெனா முழுமையாக விரிவடைந்து ஒரு தங்கப் பூவைப் போல பூத்தபோது, இந்த தருணம் தொழில்நுட்ப ரீதியாக மட்டுமல்ல, உணர்ச்சிகரமாகவும் இருந்தது. பல ஆண்டு கால கடின உழைப்பின் பலனை அந்த தருணத்தில் நாங்கள் பெற்றோம்' என்றார்.

    இதுகுறித்து நாசா திட்ட விஞ்ஞானி ரோசாலி வேகா கூறுகையில், 'நிசார் செயற்கைக்கோள் காலநிலை நெருக்கடி மற்றும் இயற்கை பேரழிவுகளை முன்பைவிட துல்லியமாக கணிக்க உதவும்' என்றார்.

    • நிசார் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
    • நிசார் செயற்கைக்கோளால் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும்.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் நாசாவின் முதல் கூட்டு செயற்கைக்கோளான நாசா - இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (நிசார்), இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

    இதற்கான இறுதிக்கட்டப்பணியான 27½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பகல் 2.10 மணிக்கு தொடங்கியது.

    இந்நிலையில், இஸ்ரோ-நாசா கூட்டு தயாரிப்பான நிசார் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

    நிசார் செயற்கைக்கோள் 2,392 கிலோ எடை கொண்ட, ஒரு தனித்துவமான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். நாசாவின் 'எல்-பாண்ட்' மற்றும் இஸ்ரோவின் 'எஸ்-பாண்ட்' என்ற இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் வகையைச் சேர்ந்தவை ஆகும். இந்த செயற்கைக்கோள் வானிலை, பகல் மற்றும் இரவு தரவுகளை வழங்குவதுடன் பரந்த அளவிலான பயன்பாடுகளை செயல்படுத்தும்.

    நிசார் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும். அதாவது, பனிப்படல இயக்கம் மற்றும் தாவர இயக்கவியல், கடல் பனி வகைப்பாடு, கப்பல் கண்டறிதல், கரையோர கண்காணிப்பு, புயல் தன்மை, மண்ணின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேற்பரப்பு நீர் வளங்களை வரைபடம் செய்யும் திறன் கொண்டதாகும்.

    • ஸ்ரீஹரிகோட்டாவில் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட்டின் மேல்பகுதியில் நிசார் செயற்கைக்கோள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
    • செயற்கைக்கோளை ஏவும் பணியில் இஸ்ரோ-நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் நாசாவின் முதல் கூட்டு செயற்கைக்கோளான நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (நிசார்), இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வருகிற 30-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இது பூமியிலிருந்து 743 கிலோ மீட்டர் சூரிய ஒத்திசைவான சுற்றுப்பாதையில் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட், நிசார் செயற்கைக்கோளை 98.40 சாய்வுடன் செலுத்த உள்ளது.

    2 ஆயிரத்து 392 கிலோ எடையுள்ள நிசார், ஒரு தனித்துவமான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள். நாசாவின் எல்-பேண்ட் மற்றும் இஸ்ரோவின் எஸ்-பேண்ட் என்ற இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் வகையை சேர்ந்தவையாகும்.

    பூமியைக் கண்காணிக்கும் இரட்டை அதிர்வெண் கொண்ட முதல் செயற்கைக்கோள் நிசாராகும். இவை இரண்டும் இஸ்ரோவின் மாற்றியமைக்கப்பட்ட ஐ-3கே என்ற செயற்கைக்கோளில் ஒருங்கிணைக்கப்பட்ட நாசாவின் 12 மீட்டர் விரிக்கக்கூடிய மெஷ் பிரதிபலிப்பான் ஆண்டெனாவைப் பயன்படுத்துகின்றன.

    நிசாரில் முதல் முறையாக 'ஸ்வீப்சார்' என்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 242 கிலோ மீட்டர் பரப்பளவு மற்றும் உயர் இடம்சார்ந்த தெளிவுத்திறனுடன் பூமியைக் கண்காணிக்கும்.

    இந்த செயற்கைக்கோள் முழு உலகத்தையும் ஸ்கேன் செய்து 12 நாள் இடைவெளியில் அனைத்து வானிலை, பகல் மற்றும் இரவு தரவுகளையும் வழங்குவதுடன் பரந்த அளவிலான பயன்பாடுகளை செயல்படுத்தும். நிசார் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும்.

    அதாவது தரை சிதைவு, பனிப்படல இயக்கம் மற்றும் தாவர இயக்கவியல். கடல் பனி வகைப்பாடு, கப்பல் கண்டறிதல், கரையோர கண்காணிப்பு, புயல் தன்மை, மண்ணின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேற்பரப்பு நீர் வளங்களை வரைபடம் செய்தல் மற்றும் கண்காணித்தல், பேரிடர் ஆகியவற்றை கண்டறியும். நிசார் ஏவுதல் என்பது இஸ்ரோ மற்றும் நாசா மற்றும் ஜெ.பி.எல். என்ற தொழில்நுட்ப குழுக்களுக்கு இடையே 10 ஆண்டுகளுக்கு மேலாக வலுவான தொழில்நுட்ப ஒத்துழைப்பின் விளைவாகும். தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட்டின் மேல்பகுதியில் நிசார் செயற்கைக்கோள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த செயற்கைக்கோளை ஏவும் பணியில் இஸ்ரோ-நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட NISAR-ஆல் கண்டறிய முடியும்.
    • ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வருகிற 30ஆம் தேதி செலுத்தப்படுகிறது.

    இஸ்ரோ- நாசா இணைந்து பூமியை ஆய்வு செய்யும் NISAR செயற்கைக்கோளை வருகிற 30ஆம் தேதி வானில் செலுத்துகிறது. முதன்முறையாக இஸ்ரேல் மற்றும் நாசா இணைந்து இந்த செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்துகிறது. இந்த செயற்கைக்கோள் ஒவ்வொரு 12 நாட்களுக்கும் பூமியை ஸ்கேன் செய்து மேம்பட்ட தரவுகளை வழங்கும். இது 2,392 கிலோ எடை கொண்டது.

    பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட NISAR-ஆல் கண்டறிய முடியும். பூமியின் மேற்பகுதியில் ஏற்படும் மாற்றம், பனிப்படல இயக்கம், கடல் பனி வகைப்பாடு, கப்பல் கண்டறிதல், கரையோர கண்காணிப்பு, ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேற்பரப்பு நீர் வளங்களை மேப்பிங் செய்தல் மற்றும் கண்காணித்தல் போன்றவற்றைக்காக இந்த செயற்கைக்கோள் செலுத்தப்படுகிறது.

    ×