search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "satellite"

    புவிவட்டப் பாதையில் இருந்து மற்றொரு புவிவட்டப் பாதைக்கு உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜனவரி 29 ஆம் தேதி தனது 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

    ஜி.எஸ்.எல்.வி.எப்-15 [GSLV-F15] என்று பெயரிடப்பட்ட இந்த 100வது ராக்கெட் அன்றைய தினம் காலை 6.23 மணிக்கு ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ மையத்தில் இருந்து ஏவப்பட்டது.

    என்.வி.எஸ்-02 செயற்கைக்கோள் தரை, கடல், வான்வெளி போக்குவரத்தைக் கண்காணித்து, பேரிடர் காலங்களில் துல்லியமான தகவலைத் தெரிவிக்கும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் ராக்கெட் மூலம் புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோள் செலுத்தப்பட்ட நிலையில் அதன் சுற்றுப்பாதையை உயர்த்தும் பணிகளில் சிக்கல் ஏற்பட்டதாக இஸ்ரோ இன்று காலை தெரிவித்தது.

     

    செயற்கைக்கோளின் சுற்றுப்பாதையை உயர்த்துவதற்கான ஆக்சிடரைசரை ஏற்கும் வால்வுகள் திறக்கப்படாததால், செயற்கைக்கோளை ஒரு புவிவட்டப் பாதையில் இருந்து மற்றொரு புவிவட்டப் பாதைக்கு உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

    இருப்பினும் பூமியைச் சுற்றி உள்ள நீள்வட்ட பாதையான ஜியோசின்க்ரோனஸ் டிரான்ஸ்ஃபர் ஆர்பிட் (GTO) சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் பழுது இல்லாமல் நிலை கொண்டிருந்த நிலையில் அதை நீள்வட்ட சுற்றுப்பாதையிலிருந்து புவிவட்ட சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கான மாற்று உத்திகளை ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்தது. மாற்று வழியை கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால் மிஷன் தோல்வி அடையாளம் என்றும் கூறப்பட்டது.  

    இந்நிலையில் இதுகுறித்து மீண்டும் இஸ்ரோ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதில், ராக்கெட்டின் அனைத்து நிலைகளும் சிறப்பாகச் செயல்பட்டன. புவிவட்ட சுற்றுப்பாதையைத் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அடைய முடியாது என நினைத்தோம்.

    ஆனால், மாற்றுவழியில் மிக துல்லியமாக செயற்கைக்கோள் புவிவட்ட சுற்றுப்பாதையை அடைந்துள்ளது. செயற்கைக்கோளில் உள்ள சூரிய பேனல்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

    அதிலிருந்து அதிகப்படியான மின்சாரம் உற்பத்தியாகிறது. இதன் மூலம் செயற்கைக்கோளுக்கும் இஸ்ரோ மையத்துக்குமான தொடர்பு வெற்றிகரமாக நிறுவப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • அமீரகத்தின் கலீபா செயற்கைக்கோளை விட இந்த செயற்கைக்கோள் மிகவும் சக்திவாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    • விரைவில் விண்ணில் ஏவுவதற்காக கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளி ஏவுதளத்திற்கு அனுப்பப்பட உள்ளது.

    துபாய்:

    துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள எம்.பி.இசட்- சாட் என்ற முகம்மது பின் ஜாயித் செயற்கைக்கோளின் இறுதிகட்ட தொழில்நுட்ப பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளது. இதில் அந்த செயற்கைக்கோளுடன் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய குட்டி செயற்கைக்கோளும் இந்த மாதம் விண்ணில் பாய்கிறது.

    இது குறித்து துபாய் விண்வெளி மையத்தின் பொது இயக்குனர் சலெம் அல் மர்ரி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பெயரில் துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தில் எம்.பி.இசட் சாட் அதாவது முகம்மது பின் ஜாயித் என்ற பெயரில் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் முழுவதுமாக விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களால் மொத்தம் 800 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த எம்.பி.இசட் சாட் பிரதேச அளவில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அதிசக்தி வாய்ந்த செயற்கைக்கோளாகும். அதேபோல உயர்தரத்திலான துல்லிய புகைப்படங்கள் மற்றும் தகவல்களை இந்த செயற்கைக்கோள் சேகரிக்க உள்ளது. குறிப்பாக மாறி வரும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்த கண்காணிப்பு, வேளாண்மை வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இந்த செயற்கைக் கோள் பயன்படுத்தப்படும்.

    அமீரகத்தின் கலீபா செயற்கைக்கோளை விட இந்த செயற்கைக்கோள் மிகவும் சக்திவாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 10 மடங்கு அதிக துல்லியத்தில் புகைப்படங்களை இந்த செயற்கைக்கோள் அனுப்ப உள்ளது. தரவிறக்கமானது மும்மடங்கு வேகமாக இருக்கும்.

    இதில், 7 அமீரக பகுதிகளை குறிக்கும் வகையில் 7 நட்சத்திரங்கள், அரபி வழிவெழுத்தில் எழுதப்பட்ட செயற்கைக்கோளின் பெயர், அமீரக தேசிய கொடி மற்றும் அமீரக பிரதேசத்தை காட்டும் வரைபடம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலமாக இம்மாதத்திற்குள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்ட தொழில்நுட்ப பரிசோதனைகள் தற்போது நிறைவடைந்துள்ளது. விரைவில் விண்ணில் ஏவுவதற்காக கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளி ஏவுதளத்திற்கு அனுப்பப்பட உள்ளது.

    இந்த செயற்கைக்கோளுடன் அமீரகத்தில் உள்ள விண்வெளி மற்றும் உயர் தொழில்நுட்ப கல்லூரிகளின் ஒத்துழைப்பில் ஹெச்.சி.டி சாட் -1 என்ற மினி நானோ செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கல்லூரி மாணவர்கள் அந்த செயற்கைக்கோளில் பொருத்தப்படும் பேலோட் எனப்படும் கருவிகள், உபகரணங்களை முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தில் உருவாக்கி உள்ளனர்.

    இந்த குட்டி செயற்கைக்கோளும் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் எம்.பி.இசட் சாட் உடன் சேர்த்து 2-வது செயற்கைக்கோளாக பால்கன் 9 ராக்கெட்டில் இது அனுப்பப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவப்படும் நிகழ்வை காண https://mbrsc.ae/live/ என்ற இணையதள முகவரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
    • தனியார் நிறுவனங்களின் ராக்கெட்டுகள் மூலமும் செயற்கைக்கோள்கை ஏவும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது.

    வாஷிங்டன்:

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வந்தன.

    அதேவேளை, தனியார் நிறுவனங்களின் ராக்கெட்டுகள் மூலமும் செயற்கைக்கோள்கை ஏவும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது.

    அந்த வகையில், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நிறுவனத்திற்கு சொந்தமான ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ செயற்கைக்கொளை விண்ணில் ஏவியுள்ளது.

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் இஸ்ரோவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் - என்2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

    இஸ்ரோவுக்கும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் இடையே வர்த்தக ரீதியில் செயற்கைக்கோள் ஏவப்படுவது இதுவே முதல்முறையாகும்.

    • செயற்கை கோள் சுமார் 4,700 கிலோ எடை கொண்டது.
    • இஸ்ரோ மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இடையேயான முதல் வணிக ஒத்துழைப்பு.

    வாஷிங்டன்:

    உலக பணக்காரரான எலான்மஸ்க் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமமும் (இஸ்ரோ) இணைந்து விண்வெளிக்கு இந்திய வீரரை அனுப்பும் முயற்சியில் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு (2025) செயல்படுத்தப்படலாம் என தெரிகிறது.

    இந்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட் மூலம் இந்தியாவின் ஜி.சாட் தகவல் தொழில் நுட்ப செயற்கைகோளை விண்ணில் செலுத்த இருக்கிறது.

    அமெரிக்காவின் புளோரிடா கேப் சுனாவரலியில் இருந்து பால்கன் 9 ராக்கெட்டை பயன்படுத்தி இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது.

    ஜி சாட் என் 2 என குறிப்பிடப்பட்ட இந்த செயற்கை கோள் சுமார் 4,700 கிலோ எடை கொண்டது. இந்தியாவின் தகவல் தொடர்பு கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த செயற்கை கோள் செயல்பாட்டுக்கு வந்ததும் நாடு முழுவதும் தனது சேவைகளை வழங்கும்.

    தொலைதூர பகுதிகளுக்கான இணையசேவை இணைப்பு மற்றும் விமானத்தில் உள்ள இணைய சேவை உள்ளிட்ட நாடு முழுவதும் முக்கிய சேவைகளை இந்த செயற்கைகோள் வழங்கும்.

    இது இஸ்ரோ மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இடையேயான முதல் வணிக ஒத்துழைப்பு ஆகும்.

    • ஈரான் மீது இஸ்ரேல் சைபர் தாக்குதல் நடத்தி ரகசியங்களை திருடியது.
    • ஈரான் அணு உலைகள் மற்றும் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுகிறது

    பாலஸ்தீனம் மீது கடந்த 1 வருடமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 42 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள்  உயிரிழந்துள்ளனர். அண்டை நாடான லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது. ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா தலைநகர் பெய்ரூட்டில் வைத்து கொல்லப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை சரமாரியாக ஏவி ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் அணு உலைகள் மற்றும் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் துடித்து வருகிறது. ஆனால் ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. இதற்கிடையே ஈரான் மீது சைபர் தாக்குதல் ஒன்றையும் இஸ்ரேல் நடத்தியது. இதில் தங்கள் அரசின் ரகசிய ஆவணகள் திருடப்பட்டகாக ஈரான் குற்றம்சாட்டியது.

    இந்நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இஸ்ரேலின் முயற்சிகள் குறித்த அமெரிக்க உளவுத்துறையில் 2 ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன. அமெரிக்காவின் நேஷனல் ஜியோஸ்பாஷியல் இன்டலிஜென்ஸ் ஏஜென்சியில் [NGA] இருந்த இந்த ஆவணங்களானது டெலிகிராமில் கசிந்துள்ளது.

     

    இந்த ஆவணங்களில் ஈரான் தாக்குதலுக்கு இஸ்ரேலிய படைகள் பிரத்யேக பயிற்சி எடுத்துவரும் மற்றும் தாக்குதளுக்கு ஒத்திகை பார்க்கும் சாட்டிலைட் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

     

    முதல் ஆவணத்தில் இஸ்ரேல் விமானப் படை ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த எப்படியெல்லாம் தயாராகி வருகிறது என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மற்றொரு வானத்தில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை தயார்ப்படுத்தி வருவது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    • இந்த கிராமத்தில் 70 நிரந்தர கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
    • பயன்படுத்தப்படாத இந்த பகுதிகளில் மக்களைக் குடியேற்ற சீனா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்தியாவின் எல்லைப் பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்து வருவதாக குற்றசாட்டுகள்  இருந்துவரும் நிலையில் தற்போது எல்லையில் பாங்காங் ஏறி அருகே சீன குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள சாட்டிலைட் ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முன்னதாக கிழக்கு லடாக்கில் இந்திய - சீன எல்லைப்பகுதியில் உள்ள பாங்காங் ஏறியின் [Pangong Lake] குறுக்கே பாலம் ஒன்றையும் சீனா கட்டி முடித்தது. இதில் சீன ராணுவ வாகனங்கள் பயணிக்கும் சாட்டிலைட் ஆதாரங்கள் கிடைத்திருந்தன. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த மேக்சார் தொழில்நுட்ப நிறுவனம் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தின்படி பான்காங் ஏரியின் வடக்கே, புதிய கிராமம் ஒன்றையே சீனா உருவாக்கியுள்ளது. 

     

    எல்லையில் இருந்து 36 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் 70 நிரந்தர கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் 6 - 8 ராணுவ வீரர்கள் தங்க முடியும். மேலும் இந்த பகுதியைச் சுற்றிய ராணுவ கட்டமைப்பையும் சீனா வலுப்படுத்தி வருகிறது. இந்த கிராமத்தை விரிவுபடுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. இதற்கு முன் பயன்படுத்தப்படாத இந்த பகுதிகளில் மக்களைக் குடியேற்ற சீனா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    மேலும் அவசியம் ஏற்பட்டால் ராணுவ தளமாகவும் சீனா இதைப் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. பாங்கோங் ஏரி அருகே மொத்தமாக 17 ஹெக்டேர் அளவுக்குச் சீன கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 4,347 மீட்டர் தூரம் சாலை அமைக்கப்பட்டு கருவிகளும் நிறுவப்பட்டுள்ளது. கடந்த 2020 வாக்கில் பாங்காங் ஏரியின் தெற்கு பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றது குறிப்பிடத்தக்கது. 

     

    • துணை ராணுவப் புரட்சிப் படையால் தயாரிக்கப்பட்ட கஹீம் 100 என்ற ராக்கெட் மூலம் இந்த சாட்டிலைட் ஆனது ஏவப்பட்டுள்ளது.
    • பாலஸ்தீன போருக்கு மத்தியில் இந்த தொழில்நுட்பம் மூலம் ஈரானில் இருந்தபடியே இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்த முடியும்

    ஈரான் ஏவிய ராக்கெட் மூலம் புதிய ஆராய்ச்சி சாட்டிலைட் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவப் புரட்சிப் படையால் தயாரிக்கப்பட்ட கஹீம் 100 என்ற ராக்கெட் மூலம் இந்த சாட்டிலைட் ஆனது ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் மூலம் ஈரான் செயற்கைக்கோளைச் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்துவது இது இரண்டாவது முறையாகும்.

    தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ள சம்ரான் -1 [Chamran-1] என்று இந்த சாட்டிலைட் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இரானின் எலக்ட்ரானிக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மூலம் 60 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டு வருங்காலங்களில் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தும் டெக்னலாஜியின் [orbital manoeuvre technology] ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் தொழில்நுட்பத்தைச் சோதனை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

     

    இந்நிலையில் ஈரான் சாட்டிலைட்டை ராக்கெட் மூலம் ஏவ பயன்படுத்திய யுக்தியை போர் ஆயுதங்களான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவ பயன்படுத்தக்கூடும் என்று  அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. பாலஸ்தீன போருக்கு மத்தியில் இந்த தொழில்நுட்பம் மூலம் ஈரானில் இருந்தபடியே இஸ்ரேல் மீது ராக்கெட் மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தமுடியும் என்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. 

    • இஸ்ரோ புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
    • செயற்கைக்கோளை ஏவுவதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் கார்டோ சாட், ஸ்காட்சாட், ரிசர்ட் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள்கள் தொலைத்தொடர்பு பயன்பாட்டுக்காக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வரிசையில் புவிக்கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இ.ஓ.எஸ்.-08 எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ தற்போது வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோளை சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவுவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    நாளை ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை 9.17 மணிக்கு சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட்டை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய செயற்கைக்கோள் ஏவப்படுவதை ஒட்டி இஸ்ரோ குழுவினர் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    இ.ஓ.எஸ்.-08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டாகும். இது தரையில் இருந்து 475 கி.மீ. தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

    இதில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு, குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்- ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு மற்றும் சிக் யுவி டோசிமீட்டர் ஆகிய 3 ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இ.ஓ.ஐ.ஆர். கருவி பேரிடர் மேலாண்மை சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக இரவிலும் துல்லியமான படம் எடுக்க உதவும்.

    இதேபோல் ஜி.என்.எஸ்.எஸ்-ஆர் கருவி மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும். சிக் யுவி டோசி மீட்டர் (SiC UV Dosimeter) விண்ணில் புற ஊதா கதிர்வீச்சு அளவை கண்காணித்து எச்சரிக்கை அளிக்கும். 


    • இஸ்ரோ புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
    • செயற்கைக்கோளை ஏவுவதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் கார்டோ சாட், ஸ்காட்சாட், ரிசர்ட் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள்கள் தொலைத்தொடர்பு பயன்பாட்டுக்காக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வரிசையில் புவிக்கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இ.ஓ.எஸ்.-08 எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ தற்போது வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோளை சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவுவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து வருகிற 15 ஆம் தேதி காலை 9.17 மணிக்கு எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்து இருந்தது. எனினும், இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ராக்கெட் ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

    இ.ஓ.எஸ்.-08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டாகும். இது தரையில் இருந்து 475 கி.மீ. தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

    இதில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு, குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்- ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு மற்றும் சிக் யுவி டோசிமீட்டர் ஆகிய 3 ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இ.ஓ.ஐ.ஆர். கருவி பேரிடர் மேலாண்மை சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக இரவிலும் துல்லியமான படம் எடுக்க உதவும்.

    இதேபோல் ஜி.என்.எஸ்.எஸ்-ஆர் கருவி மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும். சிக் யுவி டோசி மீட்டர் (SiC UV Dosimeter) விண்ணில் புற ஊதா கதிர்வீச்சு அளவை கண்காணித்து எச்சரிக்கை அளிக்கும். 


    • 50 - 100 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க வேண்டிய நேரத்தைக் குறைத்து எளிதாக ராணுவத்துருப்புகள் சென்று வருவதற்கு வழிவகை செய்கிறது.
    • பாலத்தின்மீது வாகனம் கடக்கும் சேட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லடாக்கில் இந்திய - சீன எல்லைப்பகுதியில் உள்ள பாங்காங் நதியின் [Pangong Lake] குறுக்கே 400 மீட்டர் பாலத்தைச் சீனா கட்டி முடித்தது. இந்த பலமானது சீன துருப்புகள் பாங்காங் நதியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளுக்கு எளிதாகச் சென்று வர உதவும் வகையில் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்திய எல்லையில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக அமைத்துள்ளது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

    பாலம் கட்டப்பட்டுள்ள பகுதியானது கடந்த 1958 முதல் சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. ஆனால் அந்த இடத்தின்மீது சீனா உரிமை கொண்டாடுவதற்கு எதிரான நிலைப்பதிலேயே இந்தியா இருந்து வருகிறது. தற்போது கட்டப்பட்டுள்ள இந்த பாலமானது நதியைக் கடக்க 50 - 100 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க வேண்டிய நேரத்தைக் குறைத்து எளிதாக ராணுவத்துருப்புகள் சென்று வருவதற்கு வழிவகை செய்கிறது.

     

    பலமானது கட்டப்பட்டது முதல் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது பாலத்தின்மீது  வாகனங்கள் கடக்கும் சேட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பகுதிகளுக்கு சீனா தங்களின் வரைபடத்தில் புதிய பெயர்களை சூட்டியும், எல்லையில் ராணுவ நடவைடிகைகளை அதிகப்படுத்தியும் வருவது இந்தியாவுக்குச் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

    சமீபத்தில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ [ Wang Yi] மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் சந்திப்பில் எல்லையில் உள்ள படைகளைத் திரும்பப் பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் இப்போது வெளியாகியுள்ள இந்த சாட்டிலைட் புகைப்படங்கள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. 

     

     

    • செயற்கைக்கோள்களை அனுப்புவதில் உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
    • அமெரிக்க நிறுவனங்களுக்கும் சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.

    பீஜிங்:

    விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதில் உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்தநிலையில் விமானம், விண்வெளி உபகரணங்கள், கட்டமைப்பு பாகங்கள், மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய சீனா கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

    இதுகுறித்து சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத பரவல் தடை போன்றவற்றிற்காக இந்த தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. அதேபோல் தைவானுக்கு ஆயுதங்களை விற்ற சில அமெரிக்க நிறுவனங்களுக்கும் சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.

    • பூமியை கடும் சூரிய காந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளது.
    • துருவ ஒளி என்பது இரவு வானத்தில் பிரகாசமான, சுழலும் திரைச்சீலைகள் போல் தோன்றும்

    கலிபோர்னியா:

    சூரியனின் மேற்பரப்பில் இருந்து கிளம்பும் மின்காந்த வெடிப்புகள் மற்றும் சக்திவாய்ந்த ஆற்றல்கள் சூரியப்புயல் என்று அழைக்கப்படுகிறது. சூரியப் புயல், புவி மற்றும் அதன் காந்த மண்டலம் உள்ளடக்கிய முழு சூரிய மண்டலத்தையும் தாக்கும்.

    இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த சூரியப்புயல் பூமியை தாக்கியது.

    ஏற்கனவே இது தொடர்பான எச்சரிக்கையை அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் தெரிவித்து இருந்தது. பூமியை கடும் சூரிய காந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் இதனால் கலிபோர்னியா முதல் தெற்கு அலபாமா வரை அரோரா என்ற துருவ ஒளி ஏற்படும் என்றும் தெரிவித்தது.

    துருவ ஒளி என்பது இரவு வானத்தில் பிரகாசமான, சுழலும் திரைச்சீலைகள் போல் தோன்றும். பச்சை நிறத்தில் இருந்து இளஞ்சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

    அதன்படி வானத்தில் கண்கவர் வான ஒளிக் காட்சிகள் ஏற்பட்டன. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா முதல் இங்கிலாந்து வரை வான ஒளிக் காட்சிகளை பார்க்க முடிந்தது.

    லிவர்பூல், கென்ட், நார்போக் உள்பட இங்கிலாந்து முழுவதும் துருவ ஒளி தெரிந்தது. சூரியப்புயல் தாக்கிய பிறகு அமெரிக்கா, கனடா, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் துருவ ஒளி வானில் தோன்றியது. இதை பார்த்து மக்கள் பரவசமடைந்தனர். சூரியப்புயலின் தாக்கம் நீடிக்கும் என்பதால் செயற்கைக்கோள்கள், மின்கட்டமைப்புகள் பாதிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×