என் மலர்
சீனா
- ஜெர்மனி அதிபர் பிரெட்ரிச் மெர்ஸ் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ளார்.
- அவர் சீனாவின் யுனிட்ரீ ரொபொடிக்ஸ் தொழில் நிறுவனத்திற்கு சென்றார்
பீஜிங்:
கிரீன்லாந்து விவகாரத்தில் தனக்கு ஆதரவளிக்காத ஐரோப்பிய நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூடுதலாக வரிகள் விதித்தை அடுத்து, பல்வேறு முன்னணி நாடுகள் சீனா உடனான உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கனடா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பிரதமர்களைத் தொடர்ந்து ஜெர்மனி அதிபர் பிரெட்ரிச் மெர்ஸ் சீன தலைநகர் பீஜிங் சென்றுள்ளார்.
முதல் முறையாக சீனா சென்றுள்ள அவர் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்து உரையாடுகிறார். இரு நாடுகளிடையே சில முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.
உலக அளவிலான மிகப்பெரிய அரசியல் பிரச்சனைகளை சீனாவின் ஈடுபாடின்றி முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்றும், உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட நெருக்கடிகள் மற்றும் போர்களைத் தீர்க்க சீனாவின் ஒத்துழைப்பு தேவை என ஜெர்மனி அதிபர் மெர்ஸ் தெரிவித்தார்.
இந்நிலையில், ஜெர்மன் அதிபர் மெர்ஸ் சீனாவின் யுனிட்ரீ ரொபொடிக்ஸ் தொழில் நிறுவனத்திற்கு சென்றார். அப்போது அங்கு மனிதர்களைப் போல வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள் வரிசையாக நின்று நடனமாடி அசத்தின. மேலும் பாக்சிங் மற்றும் குங்பூ சண்டையிட்டுக் காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.
ரோபோ அறிவியல் தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொண்ட ஜெர்மன் அதிபர், அந்த நிறுவனத்தின் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
- சீனாவில் பட்டாசு கடை ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பீஜிங்:
சீனாவில் வசந்த விழா என அழைக்கப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன.
சீன ஜோதிடத்தின்படி இது 'குதிரை ஆண்டு' தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்தக் கொண்டாட்டத்தின்போது தீய சக்திகளை விரட்டப் பட்டாசுகள் வெடிப்பது மரபாகும்.
இந்நிலையில், சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் ஜியாங்யாங் நகரில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட வெடிவிபத்தால் 12 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- Hunter-style lover என்ற டேட்டிங் முறை சீனாவில் டிரெண்டாகி வருகிறது!
- Gen Z தலைமுறையினர் இவ்வாறு அழைக்கின்றனர்.
சீனாவில் Hunter-style lover என்ற டேட்டிங் முறை தற்போது ட்ரெண்டாகி வருகிறது!
அன்பை எளிய முறையில் உணர்வுபூர்வமான பரிசுகள் மற்றும் செயல்கள் மூலம் காட்டுவதை Gen Z தலைமுறையினர் இவ்வாறு அழைக்கின்றனர்.
இந்த டேட்டிங் முறையில், காதலர்கள் கொடுக்கும் பரிசை அதன் பண மதிப்பை விட அதற்காக அவர்கள் முயற்சியின் அளவை வைத்து மதிப்பிடுகிறார்கள்.
- சாலை மெல்ல விரிசல் விட்டு, பின்னர் மிகப்பெரிய பள்ளமாக மாறியது.
- ஷாங்காய் நகரின் மென்மையான வண்டல் மண் முக்கிய காரணம்.
சீனாவின் ஷாங்காய் நகரில் பரபரப்பான சாலை ஒன்று திடீரென உள்வாங்கிய சிசிடிவி வீடியோ வைரலாகி வருகிறது.
எப்போதும் வாகன நெரிசல் மிகுந்த இந்தச் சாலையில் மேற்கொண்டு கட்டுமானப் பணிகள் நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் அங்கிருந்த தொழிலாளர்கள் முன்னிலையிலேயே சாலை மெல்ல விரிசல் விட்டு, பின்னர் மிகப்பெரிய பள்ளமாக மாறியது.
அங்கிருந்த கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் அந்தப் பள்ளத்திற்குள் விழுந்தன. நல்வாய்ப்பாக, இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. அருகிலுள்ள கட்டிடங்களில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
ஷாங்காய் நகரின் மென்மையான வண்டல் மண், நிலத்தடி நீரைத் தொடர்ந்து உரிந்து எடுப்பது மற்றும் அதிகரித்து வரும் நகரக் கட்டுமானம் போன்ற காரணங்களால் இது போன்ற சம்பவங்கள் அங்கு அடிக்கடி நிகழ்கின்றன.
முன்னதாக கடந்த ஆண்டு ஜனவரி 2024-இல் மின்ஹாங் மாவட்டத்தில் கழிவுநீர் குழாய் உடைந்ததால் 10 மீட்டர் அளவிற்குச் சாலை உள்வாங்கியது.
- ஹாங்காங்கைச் சேர்ந்த முன்னாள் பத்திரிகை அதிபர் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
- அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
பீஜிங்:
பிரிட்டன் காலனியாதிக்கத்தில் இருந்து வந்த ஹாங்காங், கடந்த 1997-ஆம் ஆண்டில் சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அப்போது, 'ஒரே நாடு, இரண்டு ஆட்சி முறை' என்ற கொள்கையின்கீழ் ஹாங்காங்கை ஆட்சி செய்ய சீனா ஒப்புக் கொண்டது.
அதன்படி, சீனாவில் வசிக்கும் மக்களுக்கு இல்லாத உரிமைகள் ஹாங்காங்வாசிகளுக்குக் கிடைக்கும் என கூறப்பட்டது. எனினும், ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி அந்தப் பிராந்தியத்தில் நடைபெற்ற போராட்டத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு நசுக்கியது.
சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீன நாடாளுமன்றம் கடந்த 2020-ஆம் ஆண்டு நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஏராளமான ஜனநாயக ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதன் ஒரு பகுதியாக, ஜனநாயகத்துக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு வந்த ஹாங்காங்கின் 'ஆப்பிள் டெய்லி' நாளிதழ் நிறுவனரான ஜிம் லாய் மீது பிராந்திய அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைத்தது. அரசின் நெருக்கடி காரணமாக அந்த நாளிதழ் நிறுத்தப்பட்டது.
ஜிம்மி லாய் வெளிநாட்டு சக்திகளுடன் சதிசெய்து தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினார். சீன அரசை வீழ்த்த அமெரிக்காவுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்தார் என தெரிவிக்கப்பட்டு, அவர் கடந்தாண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
2020 ஆகஸ்ட் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது
ஜிம்மி லாய்க்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகள் கண்டனங்களைத் தெரிவித்தன.
இந்நிலையில், ஹாங்காங்கின் இறையாண்மை மற்றும் சட்ட விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடக் கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
- அந்தத் தளத்தில் நேரலையாகவும் ஒளிபரப்பப்பட்டிருப்பது அவருக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தது.
- ஆயிரக்கணக்கான தம்பதிகள் மற்றும் தனிநபர்கள் தங்களுக்குத் தெரியாமலேயே இந்தக் குற்றச் செயலில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் நபர் ஒருவர் இணையத்தில் ஆபாச வீடியோ தேடும்போது அவர் தனது காதலியுடன் அந்தரங்கமாக இருந்த வீடியோ அந்த தளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அந்த வீடியோ, அந்தத் தளத்தில் நேரலையாகவும் ஒளிபரப்பப்பட்டிருப்பது அவருக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தது.
முன்பு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தபோது அந்த காட்சிகள் அவர்களுக்கு தெரியாமல் ஸ்விச் போர்டில் மறைத்து வைக்கப்பட்ட 'ஸ்பை கேமரா' மூலம் படமாக்கப்பட்டது பின்னர் தெரியவந்தது.
இது குறித்து அவர் காவல் துறையில் புகார் அளித்தார். விசாரணையில், சீனா முழுவதும் பல ஹோட்டல் அறைகளில் இது போன்ற ரகசிய கேமராக்களைப் பொருத்தி, அதன் மூலம் தம்பதிகள் மற்றும் காதலர்களின் அந்தரங்க வீடியோக்கள் படமாக்கப்பட்டு கள்ளச்சந்தையில் ஆபாச இணையதளங்களுக்கு விற்கும் மிகப்பெரிய கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கபட்டது.
மேலும், இந்தக் கேமராக்கள் மூலம் படம் பிடிக்கப்படும் காட்சிகள், கட்டணம் செலுத்திப் பார்க்கும் சந்தாதாரர்களுக்குச் சிறப்புச் செயலிகள் மற்றும் இணையதளங்கள் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன.
ஆயிரக்கணக்கான தம்பதிகள் மற்றும் தனிநபர்கள் தங்களுக்குத் தெரியாமலேயே இந்தக் குற்றச் செயலில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு சீன காவல்துறை விசாரணையில் இறங்கி உள்ளது.
- 2020 இல் சீனா தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- அணுசக்தி சோதனைத் தடை ஒப்பந்தத்தை மீறி, சோதனை நடத்தி உள்ளது.
ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பிறகு இந்தியா - சீனா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.
கடத்த ஆண்டு பிரதமர் மோடி, ஜிஜின்பிங் சந்திப்பின் பின் உறவு சற்று சீரானது. ஆனால் இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதியில், சீனா தங்கள் பக்கம் உள்ள பகுதியில் தொடர்ந்து பல்வேறு கட்டுமானங்களை மேற்கொண்டு வருகிறது. இவை ராணுவ கட்டுமானங்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் கல்வான் தாக்குதலுக்கு சரியாக ஒரு வாரம் கழித்து, ஜூன் 22-23 தேதிகளில் சீனா ரகசியமாக அணு ஆயுத சோதனை நடத்தியதாக அமெரிக்கா தற்போது குற்றம்சாட்டி உள்ளது.
வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் உள்ள லோப் நூர் சோதனைத் தளத்தில் இந்த ரகசிய அணு ஆயுதச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இதன்மூலம் அணுசக்தி சோதனைத் தடை ஒப்பந்தத்தை மீறி, தீவிரமான சோதனையில் ஈடுபட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.
சீனா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், தாங்கள் சர்வதேச விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாகத் தெரிவித்துள்ளது.
- ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் கிங்டாவோ நகரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் பெண்கள், ஆண்கள் பிரிவினர் காலிறுதியில் தோல்வி அடைந்தனர்.
கிங்டாவோ:
6-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் கிங்டாவோ நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 ஆண்கள் அணிகளும், 11 பெண்கள் அணிகளும் தலா 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், பெண்கள் பிரிவு காலிறுதியில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் சீனாவிடம் தோல்வி அடைந்தது.
இதேபோல், ஆண்கள் பிரிவு காலிறுதி போட்டியில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் தோல்வி அடைந்தது.
இதன்மூலம்இந்திய அணி காலிறுதி சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது.
- ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் கிங்டாவோ நகரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் பெண்கள், ஆண்கள் பிரிவினர் 2வது சுற்றில் வென்றனர்.
கிங்டாவோ:
6-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் கிங்டாவோ நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 ஆண்கள் அணிகளும், 11 பெண்கள் அணிகளும் தலா 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.
இதில் பெண்களுக்கான 'ஒய்' பிரிவில் இடம்பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி, தனது தொடக்க லீக் ஆட்–டத்–தில் மியான்மரை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
இந்திய பெண்கள் அணி நேற்று தனது 2-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை வீழ்த்தியது. இதன்மூலம் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இதேபோல், ஆண்களில் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது. நேற்று நடந்த கடைசி லீக் சுற்றில் இந்திய அணி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
- தங்கம் விலை தொடர்ந்து விலை ஏறி வருகிறது.
- ஒரு சிம் கார்டில் 0.001 கிராம் அளவுக்கு தான் தங்கம் இருக்கும்
தங்கம் விலை தொடர்ந்து எகிறி வந்து, கடந்த 29-ந்தேதி ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. இது வரலாறு காணாத உச்சமாக பதிவானது.
அதன் தொடர்ச்சியாக மேலும் விலை அதிகரிக்கக் கூடும் என சொல்லப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கணிசமாக சரிந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2560 உயர்ந்து ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், சீனாவில் பழைய சிம் கார்டுகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுப்பது எப்படி என்று ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சீனாவில் பழைய பொருட்களில் இருந்து உலோகங்களை பிரித்தெடுக்கும் கியாவோ என்ற நபர், தூக்கி வீசப்பட்ட பழைய சிம் கார்டுகள் உட்பட பல மின்னணு கழிவுகளில் இருந்து ரூ.26 லட்சம் மதிப்பிலான 191 கிராம் தங்கத்தை பிரித்தெடுத்துள்ளதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உலகையே மிரள செய்திருக்கிறது. ஒரு சிம் கார்டில் 0.001 கிராம் அளவுக்கு தான் தங்கம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குயிங்டாவ் நகரில் நடைபெறுகிறது.
- பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் பிப்ரவரி 8-ம் தேதி வரை நடக்கிறது.
பீஜிங்:
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குயிங்டாவ் நகரில் நடைபெறுகிறது. பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் பிப்ரவரி 8-ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து காயம் காரணமாக ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
கடந்த 2024ம் ஆண்டு நடந்த ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் பி.வி.சிந்து தலைமையிலான இந்திய அணி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
- மியான்மரில் ஆதிக்கம் செலுத்தி வந்த நான்கு பெரிய குற்றக் குடும்பங்களில் 'மிங்' குடும்பமும் ஒன்று.
- இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களையும் ஐடி வேலை என்று ஆசை காட்டி கடத்திச் சென்று இவர்கள் சித்திரவதை செய்து வந்தனர்.
மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பல சைபர் மோசடி கும்பல்கள் இயங்கி வருகின்றன.
இவர்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இளைஞர்களை வேலைவாய்ப்பு ஆசை காட்டி அழைத்துச் சென்று அவர்களை இதுபோன்ற சைபர் மோசடிகளை செய்ய வற்புறுத்தி வருகின்றனர்.
இவர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு போலி அழைப்புகளை செய்தும் ஆன்லைன் மூலமாகவும் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
அந்த வகையில் மியான்மரை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் பல ஆயிரம் கோடி ரூபாய் சைபர் மோசடிகளில் ஈடுபட்டு வந்தவர்கள் 'மிங்' குடும்பத்தினர்.
மியான்மரின் கோகாங் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த நான்கு பெரிய குற்றக் குடும்பங்களில் 'மிங்' குடும்பமும் ஒன்று.
இவர்கள் ரகசிய இடங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்களைச் சிறைபிடித்து, அவர்களைக் கொண்டு ஆன்லைன் மோசடிகளைச் செய்து வந்தனர்.
இந்தக் கும்பல் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சுமார் ரூ. 3.5 லட்சம் கோடி மோசடி செய்து வந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Romance Scam மூலம் முதலீடு செய்ய வைத்துப் பணத்தைப் பறிப்பது இவர்களது முக்கிய உத்தியாகும்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களையும் ஐடி வேலை என்று ஆசை காட்டி கடத்திச் சென்று இவர்கள் சித்திரவதை செய்து வந்தனர்.
இவர்களிடம் சிறைப்பட்டிருந்தவர்கள் தப்பிக்க முயன்றபோது, 14 சீனக் குடிமக்களை இந்தக் கும்பல் கொடூரமாகக் கொலை செய்தது. இது சீன அரசாங்கத்தைப் பெரும் கோபத்திற்கு உள்ளாக்கியது.
இந்தக் கும்பலின் தலைவர் மிங் ஜுய்சாங் -ஐ கைது செய்ய 2023 நவம்பர் மாதம் சீனா பிடிவாரண்ட் பிறப்பித்தது.
மியான்மர் அதிகாரிகள் இவரைக் கைது செய்ய முயன்றபோது, அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக மியான்மர் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம் இவருடைய மகன் மிங் குவோபிங் மற்றும் பேத்தி மிங் சென்சென் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு சீனா அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில் விசாரணைக்கு பின் சீனாவின் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, நேற்று இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது
எல்லையோரங்களில் நடக்கும் சூதாட்டம், போதைப்பொருள் மாபியா மற்றும் ஆன்லைன் மோசடிகளை முற்றிலும் ஒழிக்கும் வரை தங்களது வேட்டை தொடரும் என்று சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.






