search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "robot"

    • சில வேட்பாளர்கள் மார்க்கெட்டுகளில் பூ மற்றும் காய்கறி, பழங்கள், இறைச்சி விற்பனை செய்தும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
    • ரோபோவை கோவையைச் சேர்ந்த சிவபிரித்தம் என்பவர் ஏஐ டெக்னாலாஜியுடன் வடிவமைத்துள்ளார்.

    தருமபுரி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பல்வேறு வகைகளில் நூதன பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் வாக்காளர்களை கவரும் வகையில் டீ போடுவது, புரோட்டா மற்றும் தோசை சுட்டு தருவது, ஆட்டோ ஓட்டுவது, விவசாய நிலங்களில் டிராக்டர் ஓட்டி வாக்கு சேகரிப்பது என்று விதவிதமான முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    சில வேட்பாளர்கள் மார்க்கெட்டுகளில் பூ மற்றும் காய்கறி, பழங்கள், இறைச்சி விற்பனை செய்தும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் தற்போது ரோபோக்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தருமபுரி டவுன் பஸ் நிலையத்தில் ஒரு ரோபோ அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு அம்மு என்று பெயர் சூட்டியுள்ளனர்.

    இந்த ரோபோவை கோவையைச் சேர்ந்த சிவபிரித்தம் என்பவர் ஏஐ டெக்னாலாஜியுடன் வடிவமைத்துள்ளார்.

    இந்த ரோபோவுக்கு அருகில் யாராவது சென்றால் அந்த ரோபோவின் கையில் உள்ள 'லேப்டாப்பில்' எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது உருவப்படங்களுடன் அ.தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை காட்சிப்படுத்துவதுடன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்குகிறது. மேலும், மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா, தே.மு.தி.க. நிறுவனரும், மறைந்த நடிகருமான விஜயகாந்த் ஆகியோர் பழைய பிரசார ஆடியோக்களையும் ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பது போலவும், குறிப்பிட்ட தூரம் மட்டும் நகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அசோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு அந்த ரோபோ பிரசாரமும் செய்கிறது.

    இதனை ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். குறிப்பாக மாணவ, மாணவிகள் அந்த ரோபோவிடம் சென்று 'செல்பி' எடுத்து செல்கின்றனர். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளும் ஆர்வத்துடன் அதன் அருகில் சென்று துண்டு பிரசுரங்களை எடுத்து செல்கின்றனர்.

    • பெண் தொகுப்பாளருக்கு தொல்லை கொடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    • ரோபோவின் செயலை உணர்ந்த பெண் தொகுப்பாளர் ரோபோவை நோக்கி கையை உயர்த்துகிறார்.

    ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கருவிகள் பல துறைகளிலும் புகுந்துவிட்டது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பல முன்னேற்றங்கள் உள்ளது. அதே நேரத்தில் இந்த தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

    இந்நிலையில் சவுதி அரேபியாவில் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட ஆண் ரோபோ, நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பெண் தொகுப்பாளருக்கு தொல்லை கொடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நிகழ்ச்சியின் போது பெண் தொகுப்பாளர் ரோபோ குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்.

    அப்போது அந்த ரோபோ பெண்ணை நோக்கி கையை நீட்டி தகாத முறையில் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறது. ரோபோவின் செயலை உணர்ந்த பெண் தொகுப்பாளர் ரோபோவை நோக்கி கையை உயர்த்துகிறார். அதன்பிறகு ரோபோ அந்த செயலை நிறுத்துவது போன்று காட்சிகள் வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் ரோபோவின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

    • உணவு வழங்கிய பின்பு அதற்குரிய இடத்தி்ல் தானாக வந்து நின்றுவிடும்.
    • கேமரா மற்றும் சென்சார் மூலம் குறிப்பிட்ட டேபிளுக்கு சென்று ரோபோ உணவு வழங்கும்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம், அவிநாசி - திருப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சொகுசு உணவகத்தில் உணவு விநியோகிக்கும் பணியில் முதன்முறையாக ரோபோ பயன்படுத்தப்படுகிறது. இது குழந்தைகள், பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சப்ளையர்கள் ஆர்டர் எடுத்து சமையல்காரர்களிடம் வழங்கி விடுகின்றனர்.

    உணவு தயாரானதும் ரோபோவில் உணவு வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அலமாரியில் அந்த உணவு வைக்கப்படுகிறது. பின்னர் உணவு ஆர்டர் செய்த வாடிக்கையாளரின் டேபிளுக்கு செல்லும் வகையில் ஒவ்வொரு டேபிளுக்கான எண் ரோபோவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஆர்டர் செய்த வாடிக்கையாளர்கள் அமர்ந்திருக்கும் டேபிள் எண்ணை அழுத்தியதும் அங்கு ரோபோ உணவுகளை எடுத்து செல்கிறது.

    பின்னர் ஆர்டர் செய்த உணவை ரோபோவின் அலமாரியில் இருந்து அங்கு இருக்கும் சப்ளையர் அல்லது வாடிக்கையாளர்களே உணவுகளை எடுத்து கொள்ளலாம். உணவு வழங்கிய பின்பு அதற்குரிய இடத்தி்ல் தானாக வந்து நின்றுவிடும்.

    ரோபோ சப்ளை குறித்து உணவகத்தின் மேற்பார்வையாளர் ஒருவர் கூறுகையில்,

    சமையலறையில் இருந்து வாடிக்கையாளர்கள் இருக்கும் இடம் வரை உணவு எடுத்து செல்ல ரோபோ பயன்படுத்த படுகிறது. இதற்காக ரோபோவில் அதற்கு உண்டான ப்ரோக்ராம் சார்ட் மற்றும் எண்கள் கண்டறியும் சேவை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மற்றும் சென்சார் மூலம் குறிப்பிட்ட டேபிளுக்கு சென்று ரோபோ உணவு வழங்கும். தொடர்ந்து அடுத்த டேபிளுக்கு சென்று விடும். மேலும் பிறந்தநாள், திருமணநாள் போன்ற விசேஷங்கள் சமயத்தில், சம்பந்தப்பட்டவர்கள் எதிர்பாராத வகையில் ரோபோ வாயிலாக கேக்கை அனுப்பி வைத்து அவர்கள் ஆச்சரியப்படும் வகையில் ஹேப்பி பர்த்டே என்று பாடும் வகையில் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் குறைந்த நேரத்தில் அதிகளவில் உணவு சப்ளை செய்யப்படுகிறது. இந்த ரோபோவை காண்பதற்காகவே உணவகத்தை தேடி வாடிக்கையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக அளவில் வருவதாகவும், குழந்தைகள் இந்த ரோபோவை கண்டு அதிக அளவில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.

    • அரசு பள்ளி மாணவிகள் ரோபோ உருவாக்கினர்
    • இவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.

    பொன்னமராவதி

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடல் டிங்கரிங் லேப் பணிமனை மூலம் 7-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக கடந்த மூன்று நாட்களாக அட்டை பெட்டி, காகிதம், பழைய பொருட்களை கொண்டு ரோபோட்டுகள் உருவாக்கப்பட்டன. குப்பை சுத்தம் செய்யும் இயந்திரம், சுமை தூக்கும் ரோபோ, மலர் கொத்து வழங்குதல், விபத்துகளை தடுக்கும் வகையிலான கண்டறியும் கருவி போன்றவைகளை உருவாக்கி மாணவிகள் சாதனை படைத்தனர். இவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.



    • பாஜகவின் துண்டு பிரசுரங்களை மக்களிடம் சென்று ரோபோ வழங்குகிறது.
    • பா.ஜ.க.வின் நூதன பிரச்சாரத்தை ஆர்வத்துடன் பார்க்கும் வாக்காளர்கள்.

    காந்திநகர்:

    நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குஜராத் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 1-ந் தேதி மற்றும் 5ந் தேதி என 2 கட்டங்களாக நடைபெறுகிறது. டிசம்பர் 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் மக்களை கவர அரசியல் கட்சியினர் பல்வேறு நூதன முறை பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் பா.ஜ.க.வின் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் ஹர்ஷத் பட்டேல் தேர்தல் பிரச்சாரத்திற்காக ரோபோவை தயாரித்துள்ளார். இதையடுத்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிரச்சாரத்திற்காக இந்த ரோபோவை பா.ஜ.க. எம்.எல்.ஏ. பங்கஜ் தேசாய் களம் இறக்கி உள்ளார். 


    பாஜகவின் சாதனைகள் மற்றும் பாஜக வேட்பாளர்கள் குறித்து மக்களிடத்தில் இந்த ரோபோ அறிமுகம் செய்கிறது. மேலும் கட்சி பொதுக் கூட்டங்களிலும் பாஜகவின் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை ரோபோ வழங்குகிறது.

    மேலும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பும் வகையில் இதில் ஸ்பீக்கர்களும் பொருத்தப்பட்டுள்ளன. பா.ஜ.க.வின் இந்த நூதன பிரச்சாரத்தை அந்த தொகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். பல தொகுதிகளில் வீடு வீடாக சென்று பாஜகவுக்காக பிரச்சாரம் செய்ய இது போன்ற மேலும் பல ரோபோக்களை களமிறக்க உள்ளதாகவும் ஹர்ஷத் பட்டேல் தெரிவித்துள்ளார்.

    • பூச்சிக்கொல்லி இல்லா கொசு ஒழிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.
    • போட்டியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    சுவாமிமலை:

    கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாளினை முன்னிட்டு எல்.கே.ஜி. வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளின் அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் அறிவியல் கண்காட்சி போட்டி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கும்பகோணம் மாஸ் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சரவணன் கலந்து கொண்டு மாணவ -மாணவிகளின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டு வாழ்த்தினை தெரிவித்தார்.

    இதையடுத்து அறிவியல் கண்காட்சி போட்டி நடைபெற்றது. இக்கண்காட்சியில் 1000 -க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்று தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.

    இக்கண்காட்சியில் நடக்கும் இயந்திர ரோபோ மனிதன், தீயணைப்பு கருவி, நிலநடுக்க எச்சரிக்கை கருவி, கழிவு நீரோடைகளில் பூச்சிக்கொல்லி இல்லா கொசு ஒழிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.மேலும் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் போட்டியில் பங்கேற்ற தற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இந்த அறிவியல் கண்காட்சி போட்டியை பள்ளி தாளாளர் கார்த்தி கேயன் ஏற்பாடு செய்து இருந்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் சிறப்புரை யாற்றினார். பள்ளி முதல்வர் அம்பிகாபதி வரவேற்றார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் 2 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
    • புதிதாக நிறுவப்பட்டு உள்ள இந்த ரோபோக்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

    கோவை:

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடான ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

    தினசரி 20-க்கு மேற்பட்ட விமானங்களில் ஏராளமான பயணிகள் பயணித்து வருகின்றனர். கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவ தனி உதவி மையம் உள்ளது. அந்த உதவி மையத்தை செல்போன் மூலம் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான தகவல்களை பயணிகள் பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் தானியங்கி ரோபோக்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அதிநவீன ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டது. இதன் மூலம் பயணிகளுக்கு தேவையான தகவல்களை எவ்வித உதவியும் இன்றி தானாக வழங்க முடியும்.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் 2 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இன்று மாலை 3 மணி முதல் ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. ஒரு ரோபோ விமான புறப்பாடு முனையத்திலும், மற்றொரு ரோபா விமான வருகை முனையத்திலும் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த ரோபோக்கள் யாருடைய உதவியும் இல்லாமல் தானாக நகரும் தன்மை கொண்டது.

    ரோபோ விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை வரவேற்று, அவர்களுக்கு தேவையான தகவல்களை அளிக்கும். இதற்காக அந்த ரோபோக்களில் செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்டு உள்ளது. பயணிகள் உதவி மையத்தை தொடர்பு கொள்ள விரும்பினால், ரோபோ உடனடியாக உதவி மையத்தை தொடர்பு கொண்டு தகவல்களை அளிக்கும்.

    இந்த ரோபோக்கள் பயணிகள் விமானத்திற்கு செல்ல வேண்டிய வழி, பாஸ்போர்ட் சரிபார்ப்பு இடம் உள்ளிட்ட இடங்களுக்கான வழிகளை பயணிகளுக்கு தெரிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதிதாக நிறுவப்பட்டு உள்ள இந்த ரோபோக்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

    சுவீடனில் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் எச்ஆர் பணிக்காக ரோபோ ஒன்று, பெண் போன்ற முக அமைப்பில், நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. #TengaiInterviewRobo
    ஸ்டாக்ஹோம்:

    உலகில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி அன்றாடம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் உள்ள நிறுவனங்களில் மக்களை கவர புதிய யுக்திகள் கையாளப்படுகின்றன.

    அந்த வகையில் சுவீடனில் பிரபல கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணிக்கு ஆட்கள் எடுக்கும் ரோபோவை உருவாக்கி உள்ளது. இது மிகவும் நுட்பமான கணினி மொழிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும்.

    இது குறித்து ரோபோ வடிவமைப்பாளர்கள் மற்றும் பயன்பாட்டாளர்கள் கூறியிருப்பதாவது:

    சுவீடனில் உள்ள படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்கள் 73 சதவீதம் பேர், பாலினம், வயது மற்றும் தோற்றம் போன்றவற்றால் பணி கிடைப்பதில்லை என தெரிவித்திருந்தனர். இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களில் இன்டர்வியூ நடத்தி வேலைக்கு ஆட்கள் எடுக்கும் ‘எச்ஆர்’ பணிக்காக  ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ பெண்ணின் முக அமைப்பு கொண்டதாகும். இதற்கு தங்காய் என பெயரிடப்பட்டுள்ளது.



    மனிதர்களை போல் அல்லாமல், மிகுந்த நடுநிலை தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவுடன் மைக்ரோ போன் கொண்டு எளிதாக உரையாடவும், அதன் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் இயலும். இந்த ரோபோ தற்போது சுவிடிஷ் மட்டுமே பேசக்கூடியதாகும். சுவீடனில் உள்ள மிகப்பெரிய கார்பரேட் நிறுவனத்தின் எச் ஆர் அமைப்பினர், கடந்த ஆண்டு அக்டோபரில் இதனை சோதனை செய்தது.

    தங்காய் எப்படி மனிதர்களை விட சிறந்த முறையில் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் என்றால், மனிதர்களாகிய நம்மில் பலர் ஒருவரை பார்த்ததும் தவறாக எண்ணும் வழக்கம் உள்ளது.  இதனால் பல திறமை வாய்ந்த இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழக்கின்றனர். இதனை தவிர்க்கவே இந்த ரோபோ உபயோகப்படுத்தப்படுமாம்.

    இந்நிலையில் இந்த ரோபோ மற்ற நாடுகளுக்கு உதவி புரிய இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டிலோ தயார் செய்து விடப்படும். தற்போது இந்த ரோபோ ஆங்கிலத்தில் பேச பயிற்சி எடுத்து வருகின்றது.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #TengaiInterviewRobo
    தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நம் அன்றாட பணிகளை செய்யும் பொறுப்பை ரோபோட்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. அவ்வாறு நம் வீட்டை சுத்தம் செய்யும் சிறிய ரோபோட் தான் ஐ ரோபோ 900. #Robots



    நவீன உலகில் மனிதனின் வேலைப் பளுவைக் குறைப்பதில் எந்திர மனிதனின் (ரோபோக்களின்) பங்கு அதிகமாகி வருகிறது. கடினமான பணிகளுக்கு மட்டுமின்றி இப்போது வீடுகளில் பயன்படுத்தக்கூடிய ரோபோக்களும் வந்துவிட்டன.

    அந்த வரிசையில் வந்திருக்கும் வீடுகளை சுத்தப்படுத்தும் அதிநவீன ரோபோ ‘ஐ ரோபோட் 900’ சீரிஸ். அனைத்து வகையான தரைத்தளங்களையும், தரை விரிப்புகளையும் இது சுத்தப்படுத்தும். தரையில் சிதறிக்கிடக்கும் மிக மெல்லிய செல்லப் பிராணிகளின் முடிகளைக்கூட இது சுத்தம் செய்யும்.

    இதில் அதிக அழுக்கு உள்ள பகுதிகளை உணரும் ‘சென்சார்’ உள்ளது. இதனால் அழுக்கு அதிகம் உள்ள பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டு சுத்தப்படுத்தும். அதேபோல குப்பைகளை உறிஞ்சும் பகுதியில் நூல், உரோமங்கள் எந்திரத்திற்குள் சிக்காத வகையிலான நுட்பமும் இதில் உள்ளது. இதனால் உறிஞ்சும் பகுதி அடைத்துக் கொள்ளும் பிரச்சினையும் இதில் ஏற்படாது. அறையின் முழு அளவையும் உணர்ந்து இது அனைத்து இடங்களுக்கும் நகர்ந்து சென்று சுத்தப்படுத்தும்.

    இந்த ரோபோவை நீங்கள் எங்கிருந்தபடியும் இயக்க முடியும். ஒரு வேளை கோடை விடுமுறைக்கு வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்புகிறீர்கள். நீங்கள் வருவதற்கு முன்பு வீட்டை சுத்தப்படுத்த விரும்பினால், பயணத்தின்போதே இந்த ரோபோவுக்கு கட்டளையிட்டால் அது வீட்டை சுத்தப்படுத்திவிடும். 

    வட்ட வடிவில் இருப்பதால் இது அனைத்து பகுதிகளுக்கும் எளிதில் செல்ல முடியும். இதை பத்திரமாக வைக்க அதிக இடம் தேவையில்லை. கட்டிலுக்குக் கீழ் பகுதியிலேயே இதை வைத்துவிடலாம். ஐ ரோபோட் 900 சீரிஸ் அமேசான் வலைத்தளத்தில்  விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஐ ரோபோட் 900 விலை ரூ. 64,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், இது சலுகை விலையில் ரூ.43,239 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
    ×