என் மலர்
நீங்கள் தேடியது "Robot"
- விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினினீயரிங் கல்லூரியில் கண்காட்சி நடந்தது.
- ரோபோ அளித்த காபி மிகவும் ருசியாக இருப்பதாக தெரிவித்தனர்.
காபி, டீக்கடைகளில் தற்போது குளிர்காலத்தையொட்டி கூட்டம் அலைமோதுகிறது. ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமான வகையில் லைட், ஸ்ட்ராங் டீ, காபி வேண்டுமென கேட்கின்றனர். ஆனாலும் அவர்கள் விரும்பியது போல சில நேரங்களில் டீ காபி கிடைப்பதில்லை.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது காபி தயாரிக்க ரோபோ வந்து விட்டது.
விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினினீயரிங் கல்லூரியில் கண்காட்சி நடந்தது.
அதில் ரோபோடிக் கபே அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு ரோபோ மூலம் காபி தயார் செய்யப்பட்டு வழங்கினர். அங்கிருந்த ஒரு ரோபோ 40 வினாடிகளில் 4 வகையான டீ, காபிகளை தயார் செய்து கொடுத்து அசத்தியது. ரோபோ அளித்த காபி மிகவும் ருசியாக இருப்பதாக தெரிவித்தனர்.
கடைகளில் இனி மாஸ்டர்கள் தேவையில்லை. இந்த ரோபோ எங்கள் விருப்பப்படி 4 வகையான காபியைத் தயாரித்து வழங்கும் என்று ஏற்பாட்டாளர்கள் விளக்கினர்.
விமான நிலையங்கள், ஐடி, பூங்காக்கள், மால்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் வெறும் 100 சதுர அடி பரப்பளவில் இந்த ரோபோ ஸ்டால்களை அமைக்கலாம். 40 வினாடிகளில் விரும்பிய காபியைத் தயாரித்து வழங்குவதற்காக இது ஒரு ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டது.
ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் இதுகுறித்து விளக்க ஆவலுடன் காத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
- ரோபோவுக்கு திண்டி என பெயர் வைத்துள்ளேன்.
- இது வணிக பதிவு அல்ல, இது எனது புதிய கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு:
உலக அளவில் பெங்களூரு தொழில்நுட்ப நிறுவனங்களின் புகலிடமாக உள்ளது. இதனால் தொழில்நுட்ப பூங்கா என்று அழைக்கப்படும் பெங்களூருவில் ரோபோ பயன்பாடும் அதிகரித்து வருகிறது. ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் இல்லத்தரசிகள் வீடுகளை கூட்டி பெருக்கவும், தண்ணீர் வைத்து கழுவி எடுக்கவும் ரோபோக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
நிலைமை இப்படி இருக்க இல்லத்தரசிகளின் சமையல் வேலையை எளிதாக்க இப்போது ரோபோ வந்துள்ளது. அதாவது தோசை சுடும் ரோபோவை பெங்களூருவை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.
இதுபற்றி அந்த என்ஜினீயர் ரெடிட் என்ற இணையதள பக்கத்தில் தோசை சுடும் ரோபோவை பகிர்ந்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
நான் கடந்த சில மாதங்களாக பெங்களூருவில் தனிப்பட்ட முறையில் ஒரு ரோபோவை வடிவமைத்துள்ளேன். இந்த ரோபோ தானாகவே அடுப்பில் தோசை கல் வைத்தால் போதும் தானாகவே மாவை ஊற்றி தோசையை சுட்டெடுக்கும். எனது குடும்ப உறுப்பினர்கள் தோசை சுட சிரமப்படுவதை பார்த்து நான் இந்த தோசை சுடும் ரோபோவை வடிவமைத்தேன்.
இந்த ரோபோவுக்கு திண்டி என பெயர் வைத்துள்ளேன். (திண்டி என்றால் தமிழில் சிற்றுண்டி என்று பொருள்). இதுதொடர்பாக உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். இது வணிக பதிவு அல்ல, இது எனது புதிய கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதன் விலை பற்றி அவர் எதுவும் அறிவிக்கவில்லை.
இந்த பதிவை பார்த்த பல இணையதள வாசிகள் அந்த என்ஜினீயரின் கண்டுபிடிப்புக்காக அவரை பாராட்டி வருகிறார்கள். ஒருவர், இந்த தோசை ஒரு இங்கிலாந்து கிரிக்கெட் ஸ்டேடியம் போல் தெரிகிறது என்று கருத்து பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், இந்த ரோபோவை உருவாக்க நீங்கள் நிறைய கடினமாக உழைத்திருக்க வேண்டும் என எனக்கு தெரிகிறது. இதைவிட இன்னும் சிறப்பான ரோபோவை உருவாக்க வேண்டும். அதற்கு எனது வாழ்த்துகள் என கூறியுள்ளார். இன்னொருவரின் பதிவில், இது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. இந்த திட்டத்தில் நீங்கள் எடுத்த முயற்சியை நான் புரிந்துக்கொள்கிறேன் என்று கருத்து கூறியுள்ளார்.
குழந்தைகளுக்கு தாய்மார்கள் தோசை சுட்டு ஊட்டும்போது இது அம்மா சுட்ட தோசை... இது அப்பா சுட்ட தோசை என கூறி தோசை ஊட்டுவது வழக்கம். இனிமேல் இது அம்மா... அப்பா... சுட்ட தோசை என கூற முடியாது. இது ரோபோ சுட்ட தோசை என கூறும் நிலை வந்துவிட்டது என்றால் மிகையல்ல.
- சாலையை கடந்த ரோபோ, சட்டென்று நின்று திரும்பி, நடைபாதையில் நடக்க ஆரம்பிக்கிறது.
- வீடியோ வலைத்தளவாசிகளை வெகுவாக கவர்ந்தது.
சாலையை கடக்கும் மனித வடிவ ரோபோ பற்றிய வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக வலம் வருகிறது. துபாயின் 'எமிரேட்ஸ் டவர்' அருகே உள்ள ஒரு சாலையில் கார் ஒன்று வேகமாக செல்கிறது. அப்போது காரின் குறுக்கே ரோபோ ஒன்று மிதமான வேகத்தில் ஓடியபடி சாலையைக் கடக்கிறது. இதை காருக்குள் இருந்த ஒருவர் ஆச்சரியமாக பார்த்து படம் பிடிக்கிறார்.
சாலையை கடந்த ரோபோ, சட்டென்று நின்று திரும்பி, நடைபாதையில் நடக்க ஆரம்பிக்கிறது. ரோபோவின் பின்னால் அதன் எஜமானர் நடந்து செல்கிறார். அவர் கையில் ரிமோட் கண்ட்ரோல் வைத்து ரோபோவை இயக்குவது தெரிகிறது. அதற்கேற்ப ரோபோ மனிதனைவிட சற்று வேகமான நடையில் பரபரப்பாக ஓடுவதுபோலவே நடந்து செல்கிறது. இந்த வீடியோ வலைத்தளவாசிகளை வெகுவாக கவர்ந்தது.
ரோபோக்கள் இன்னும் அதிகமாக மனிதர்களுடன் வலம் வரும் காலம் நெருங்கிவிட்டதாக பலரும் கருத்து பதிவிட்டு பாராட்டினார்கள்.
- வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
- வீடியோவை பார்ப்பவர்களுக்கு, தொழில்நுட்பத்தின் அபாயங்கள் தொடர்பான கவலை எழுகிறது.
உலகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் சில நன்மைகளும், சில தீமைகளும் நடைபெறத்தான் செய்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் கொடி கட்டி பறக்கும் சீனா, ரோபோவைக்கொண்டு பல ஆச்சரியமான கண்டுபிடிப்புகளை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'எந்திரன்' படத்தில் ரோபோவை உருவாக்குபவருக்கு அந்த ரோபோவால் ஏற்படும் பிரச்சனை தான் கதை.
அதைப்போலத்தான் சீனாவிலும் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஒரு தொழிற்சாலையில் மனித உருவ ரோபோட்டை உருவாக்கும் பணியில் இருவர் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ரோபோ செயலிழந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்களை தாக்குகிறது. இதனால் அச்சமடைந்தவர்கள் அங்கிருந்து சிறிது தூரம் ஓடி செல்கின்றனர். பின்பு, திரும்பி வந்து ரோபோவை பழைய நிலைமைக்கு கொண்டுவருகின்றனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு, தொழில்நுட்பத்தின் அபாயங்கள் தொடர்பான கவலை எழுகிறது. மேலும் பேசுபொருளாகி உள்ளது.
- மாணவர்கள் ஏ.ஐ. ரோபோட்டிடம் பல்வேறு கேள்விகள் கேட்டனர்.
- மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
ராமேசுவரம்:
உலகம் முழுவதும் தற்போது செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ. தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கக்கூடிய மார்க்ரேட் என்று பெயரிடப்பட்ட ஏ.ஐ. ரோபோடிக் ஆசிரியர் ராமேசுவரத்தில் செயல்படும் கிரைஸ்ட் தி கிங் சீனியர் செகண்டரி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் கற்பித்தல் பணிக்காக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, நகரசபை சேர்மன் நாசர் கான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் பில்லி கிரகாம் அனைவரையும் வரவேற்றார்.
இது குறித்து பள்ளி முதல்வர் ஷாலினி பில்லி கிரஹாம் கூறியதாவது.:- மனித உருவத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ஏ.ஐ. ஆசிரியை பள்ளி மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது. மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிப்பதற்காகவே பள்ளியில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த ரோபோடிக் ஆசிரியை தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
நிகழ்ச்சியில் தாசில்தார்கள் முரளிதரன், அப்துல் ஜபார், டி.ஆர்.ஓ. நேர்முக உதவியாளர் சாமிநாதன், கடற்படை கமாண்டர் தினேஷ்குமார், மீனவ பிரதிநிதி சேசுராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் ஏ.ஐ. ரோபோட்டிடம் பல்வேறு கேள்விகள் கேட்டனர். அதற்கு ரோபோட்டிக் ஆசிரியை பதில் அளித்தது. இதனை மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
- பாஜகவின் துண்டு பிரசுரங்களை மக்களிடம் சென்று ரோபோ வழங்குகிறது.
- பா.ஜ.க.வின் நூதன பிரச்சாரத்தை ஆர்வத்துடன் பார்க்கும் வாக்காளர்கள்.
காந்திநகர்:
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குஜராத் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 1-ந் தேதி மற்றும் 5ந் தேதி என 2 கட்டங்களாக நடைபெறுகிறது. டிசம்பர் 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் மக்களை கவர அரசியல் கட்சியினர் பல்வேறு நூதன முறை பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.க.வின் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் ஹர்ஷத் பட்டேல் தேர்தல் பிரச்சாரத்திற்காக ரோபோவை தயாரித்துள்ளார். இதையடுத்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிரச்சாரத்திற்காக இந்த ரோபோவை பா.ஜ.க. எம்.எல்.ஏ. பங்கஜ் தேசாய் களம் இறக்கி உள்ளார்.

பாஜகவின் சாதனைகள் மற்றும் பாஜக வேட்பாளர்கள் குறித்து மக்களிடத்தில் இந்த ரோபோ அறிமுகம் செய்கிறது. மேலும் கட்சி பொதுக் கூட்டங்களிலும் பாஜகவின் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை ரோபோ வழங்குகிறது.
மேலும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பும் வகையில் இதில் ஸ்பீக்கர்களும் பொருத்தப்பட்டுள்ளன. பா.ஜ.க.வின் இந்த நூதன பிரச்சாரத்தை அந்த தொகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். பல தொகுதிகளில் வீடு வீடாக சென்று பாஜகவுக்காக பிரச்சாரம் செய்ய இது போன்ற மேலும் பல ரோபோக்களை களமிறக்க உள்ளதாகவும் ஹர்ஷத் பட்டேல் தெரிவித்துள்ளார்.
- அரசு பள்ளி மாணவிகள் ரோபோ உருவாக்கினர்
- இவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.
பொன்னமராவதி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடல் டிங்கரிங் லேப் பணிமனை மூலம் 7-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக கடந்த மூன்று நாட்களாக அட்டை பெட்டி, காகிதம், பழைய பொருட்களை கொண்டு ரோபோட்டுகள் உருவாக்கப்பட்டன. குப்பை சுத்தம் செய்யும் இயந்திரம், சுமை தூக்கும் ரோபோ, மலர் கொத்து வழங்குதல், விபத்துகளை தடுக்கும் வகையிலான கண்டறியும் கருவி போன்றவைகளை உருவாக்கி மாணவிகள் சாதனை படைத்தனர். இவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.
- உணவு வழங்கிய பின்பு அதற்குரிய இடத்தி்ல் தானாக வந்து நின்றுவிடும்.
- கேமரா மற்றும் சென்சார் மூலம் குறிப்பிட்ட டேபிளுக்கு சென்று ரோபோ உணவு வழங்கும்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம், அவிநாசி - திருப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சொகுசு உணவகத்தில் உணவு விநியோகிக்கும் பணியில் முதன்முறையாக ரோபோ பயன்படுத்தப்படுகிறது. இது குழந்தைகள், பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சப்ளையர்கள் ஆர்டர் எடுத்து சமையல்காரர்களிடம் வழங்கி விடுகின்றனர்.
உணவு தயாரானதும் ரோபோவில் உணவு வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அலமாரியில் அந்த உணவு வைக்கப்படுகிறது. பின்னர் உணவு ஆர்டர் செய்த வாடிக்கையாளரின் டேபிளுக்கு செல்லும் வகையில் ஒவ்வொரு டேபிளுக்கான எண் ரோபோவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஆர்டர் செய்த வாடிக்கையாளர்கள் அமர்ந்திருக்கும் டேபிள் எண்ணை அழுத்தியதும் அங்கு ரோபோ உணவுகளை எடுத்து செல்கிறது.
பின்னர் ஆர்டர் செய்த உணவை ரோபோவின் அலமாரியில் இருந்து அங்கு இருக்கும் சப்ளையர் அல்லது வாடிக்கையாளர்களே உணவுகளை எடுத்து கொள்ளலாம். உணவு வழங்கிய பின்பு அதற்குரிய இடத்தி்ல் தானாக வந்து நின்றுவிடும்.
ரோபோ சப்ளை குறித்து உணவகத்தின் மேற்பார்வையாளர் ஒருவர் கூறுகையில்,
சமையலறையில் இருந்து வாடிக்கையாளர்கள் இருக்கும் இடம் வரை உணவு எடுத்து செல்ல ரோபோ பயன்படுத்த படுகிறது. இதற்காக ரோபோவில் அதற்கு உண்டான ப்ரோக்ராம் சார்ட் மற்றும் எண்கள் கண்டறியும் சேவை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மற்றும் சென்சார் மூலம் குறிப்பிட்ட டேபிளுக்கு சென்று ரோபோ உணவு வழங்கும். தொடர்ந்து அடுத்த டேபிளுக்கு சென்று விடும். மேலும் பிறந்தநாள், திருமணநாள் போன்ற விசேஷங்கள் சமயத்தில், சம்பந்தப்பட்டவர்கள் எதிர்பாராத வகையில் ரோபோ வாயிலாக கேக்கை அனுப்பி வைத்து அவர்கள் ஆச்சரியப்படும் வகையில் ஹேப்பி பர்த்டே என்று பாடும் வகையில் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் குறைந்த நேரத்தில் அதிகளவில் உணவு சப்ளை செய்யப்படுகிறது. இந்த ரோபோவை காண்பதற்காகவே உணவகத்தை தேடி வாடிக்கையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக அளவில் வருவதாகவும், குழந்தைகள் இந்த ரோபோவை கண்டு அதிக அளவில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.
- பெண் தொகுப்பாளருக்கு தொல்லை கொடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- ரோபோவின் செயலை உணர்ந்த பெண் தொகுப்பாளர் ரோபோவை நோக்கி கையை உயர்த்துகிறார்.
ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கருவிகள் பல துறைகளிலும் புகுந்துவிட்டது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பல முன்னேற்றங்கள் உள்ளது. அதே நேரத்தில் இந்த தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட ஆண் ரோபோ, நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பெண் தொகுப்பாளருக்கு தொல்லை கொடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நிகழ்ச்சியின் போது பெண் தொகுப்பாளர் ரோபோ குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்.
அப்போது அந்த ரோபோ பெண்ணை நோக்கி கையை நீட்டி தகாத முறையில் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறது. ரோபோவின் செயலை உணர்ந்த பெண் தொகுப்பாளர் ரோபோவை நோக்கி கையை உயர்த்துகிறார். அதன்பிறகு ரோபோ அந்த செயலை நிறுத்துவது போன்று காட்சிகள் வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் ரோபோவின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- சில வேட்பாளர்கள் மார்க்கெட்டுகளில் பூ மற்றும் காய்கறி, பழங்கள், இறைச்சி விற்பனை செய்தும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
- ரோபோவை கோவையைச் சேர்ந்த சிவபிரித்தம் என்பவர் ஏஐ டெக்னாலாஜியுடன் வடிவமைத்துள்ளார்.
தருமபுரி:
பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பல்வேறு வகைகளில் நூதன பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் வாக்காளர்களை கவரும் வகையில் டீ போடுவது, புரோட்டா மற்றும் தோசை சுட்டு தருவது, ஆட்டோ ஓட்டுவது, விவசாய நிலங்களில் டிராக்டர் ஓட்டி வாக்கு சேகரிப்பது என்று விதவிதமான முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
சில வேட்பாளர்கள் மார்க்கெட்டுகளில் பூ மற்றும் காய்கறி, பழங்கள், இறைச்சி விற்பனை செய்தும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ரோபோக்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி டவுன் பஸ் நிலையத்தில் ஒரு ரோபோ அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு அம்மு என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த ரோபோவை கோவையைச் சேர்ந்த சிவபிரித்தம் என்பவர் ஏஐ டெக்னாலாஜியுடன் வடிவமைத்துள்ளார்.
இந்த ரோபோவுக்கு அருகில் யாராவது சென்றால் அந்த ரோபோவின் கையில் உள்ள 'லேப்டாப்பில்' எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது உருவப்படங்களுடன் அ.தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை காட்சிப்படுத்துவதுடன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்குகிறது. மேலும், மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா, தே.மு.தி.க. நிறுவனரும், மறைந்த நடிகருமான விஜயகாந்த் ஆகியோர் பழைய பிரசார ஆடியோக்களையும் ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பது போலவும், குறிப்பிட்ட தூரம் மட்டும் நகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அசோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு அந்த ரோபோ பிரசாரமும் செய்கிறது.
இதனை ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். குறிப்பாக மாணவ, மாணவிகள் அந்த ரோபோவிடம் சென்று 'செல்பி' எடுத்து செல்கின்றனர். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளும் ஆர்வத்துடன் அதன் அருகில் சென்று துண்டு பிரசுரங்களை எடுத்து செல்கின்றனர்.
- ரூபிக்ஸ் கியூபின் நிறங்களை ஒன்று சேர்ப்பது எப்போதும் தலைவலியான விஷயமாகவே இருந்து வருகிறது.
- கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டு ஸ்லோ மோஷனில் பார்க்கும்பொழுதே ரூபிக்ஸ் நிறங்களை ரோபோ ஒன்று சேர்ப்பதை பார்க்க முடிகிறது.
ரூபிக்ஸ் கியூபின் நிறங்களை ஒன்று சேர்ப்பது எப்போதும் தலைவலியான விஷயமாகவே இருந்து வருகிறது. ஆனாலும் இந்த விளையாட்டின் மீது அனைவருக்கும் வசீகரமான ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. எவ்வளவு சீக்கிரம் ரூபிக்ஸ் கியூப் நிறங்களை ஒன்று சேர்க்கமுடியும் என்று உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளைக்காமல் முயற்சி செய்த வண்ணம் இருக்கின்றனர்.

அந்த முயற்சியில் பல உலக சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளது.10 வினாடிகளுக்குள் ரூபிக்ஸ் கியூப் நிறங்களை ஒன்று சேர்த்தவர்களும் இருக்கின்றனர்.அந்த வகையில் கடந்த மே 21 ஆம் தேதி ரோபோ ஒன்று ௧ நொடிக்கும் குறைவான நேரத்தில் ரூபிக்ஸ் கியூபின் நிறங்களை ஒன்று சேர்த்து இதுவரை மனிதர்கள் படைத்த உலக சாதனையை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
டோக்கியோவில் உள்ள மிட்சுபிஷி எலெக்ட்ரிக் கார்ப்பரேஷனின் கீழ் இயங்கும் மின்சாதன உபகரணங்களை உற்பத்தி செய்யும் பொறியியல் மையத்தில் வடிவமைக்கப்பட்ட ரோபோ, 3x3x3 ரூபிக்ஸ் கியூபாவின் நிறங்களை வெறும் 0.305 வினாடிகளில் ஒன்று சேர்த்துள்ளது.
இது மனிதக் கண்களால் பார்க்க முடிவதை விட வேகமானது ஆகும். கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டு ஸ்லோ மோஷனில் பார்க்கும்பொழுதே ரோபோ,ரூபிக்ஸ் நிறங்களை ஒன்று சேர்ப்பதை பார்க்க முடிகிறது. கின்னஸ் அமைப்பு வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.
முன்னதாக 3x3x3 ரூபிக்ஸ் கியூபின் நிறங்களை 4.48 வினாடிகளில் சீனாவைச் சேர்ந்த யிஹெங் வாங் ஒன்று சேர்த்ததே ரூபிக்ஸ் நிறங்களை ஒன்று சேர்க்கும் அதிக பட்ச வேகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

- இஸ்தான்புல் நகரில் வைத்து நாம் விவாதிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
- . ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு தனது முதல் எக்ஸ் கணக்கை தொடங்கியுள்ள யூசுப் வெளியிட்ட இரண்டாவது பதிவு இது
துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி நடந்த போட்டியில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்தை வென்றது. இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைத் துருக்கி ஜோடி யூசுப் டிகேக் - செவ்வல் இலைதா தர்ஹான் வென்றனர்.
ஒரு கையை பாக்கெட்டில் விட்டுக்கொண்டு, ஒற்றைக் கையில் எந்த விதமான சிறப்பு சாதனங்களையும் பயன்படுத்தாமல் வெறும் கண் கண்ணாடியுடன் சர்வ சாதாரணமாக 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்ற விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. சமூக வலைத்தளங்களை யூசுப் பற்றிய விவாதமே ஆக்கிரமித்துள்ளது.
இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் யூசுப், எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்கிடம் ஒரு கேள்வியை முன்வைத்துள்ளார். அதாவது, எதிர்காலத்தில் வரவுள்ள ரோபோட்கள், ஒரு கையை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்ல வாய்ப்பிருக்கிறதா? இதைப்பற்றி கண்டங்களை ஒன்றிணைக்கும் கலாச்சார தலைநகரமான துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வைத்து நாம் விவாதிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாகவே யூசுபின் ஒலிம்பிக் ஸ்டைலை வியந்து பாராட்டிய எலான் மஸ்க் தற்போது அவரது பதிவுக்கு உடனே பதில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,எ திர்கால ரோபோட்கள் பலகையின் மையத்தைக் குறிவைத்தே சுடும் திறன் கொண்டிருக்கும். நான் இஸ்தான்புல் வரும் நாளை எதிர்நோக்கி இருக்கிறேன், உலகின் சிறந்த நகரங்களில் ஒன்று அது என்று பதிலளித்துள்ளார்.
Robots will hit the center of the bullseye every time
— Elon Musk (@elonmusk) August 4, 2024
இவர்களின் உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு தனது முதல் எக்ஸ் கணக்கை தொடங்கியுள்ள யூசுப் வெளியிட்ட இரண்டாவது பதிவு இது என்பது குறிப்பிடத்தக்கது.






