search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Engineer"

    • மனைவி மற்றும் 2 குழந்தைகளை ஓடும் காரில் இருந்து தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
    • பாஸ்கரை ரோந்து வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு புறப்பட போலீசார் முயன்றனர்.

    சேலம்:

    சேலம் திருவா கவுண்டனூரை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் ஆர்த்தி (28), இவருக்கு கண்ணன் என்பவருடன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு கண்ணன் இறந்து விட்டார்.

    இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான அமெரிக்காவில் வசித்து வரும் 57 வயதான பாஸ்கர் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு காரில் சென்ற போது பாஸ்கர் மனைவி மற்றும் 2 குழந்தைகளை சீலநாயக்கன்பட்டி பகுதியில் சாலையில் ஓடும் காரில் இருந்து தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி, கணவர் பாஸ்கரை இரவு முழுவதும் தேடினார். அப்போது சேலம் முள்ளுவாடி கேட் அருகே பாஸ்கருக்கு சொந்தமான விடுதியில் இருப்பதை அறிந்து அங்கு சென்றார். அங்கு பாஸ்கரிடம், ஆர்த்தி முறையிட அங்கிருந்த போலீசார் ஆர்த்தியை விசாரணைக்கு அழைத்தனர்.

    அப்போது நான் ஏன் விசாரணைக்கு வர வேண்டும் என ஆர்த்தி கேட்டார். மேலும் தன்னை அடித்து கொடுமைபடுத்திய கணவர் மீது நான் தான் புகார் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து பாஸ்கரை ரோந்து வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு புறப்பட போலீசார் முயன்றனர்.


    இதனால் ஆத்திரம் அடைந்த ஆர்த்தி போலீசாரின் வாகனம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது அவர் கூறுகையில், 2 மகன்களையும் பார்த்து கொள்வதாக கூறி பாஸ்கர் என்னை திருமணம் செய்து கொண்டார். ஆனால் தற்போது எனது 2 மகன்களையும் பார்த்து கொள்ள முடியாது என கூறி என்னையும் எனது குழந்தைகளையும் அடித்து துண்புறுத்துகிறார்.

    இதனால் மன வேதனை அடைந்த நான் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க முற்பட்டேன், இதையறிந்த பாஸ்கர் என் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளார்.

    மேலும் 40 வயது என்று கூறி என்னை திருமணம் செய்து கொண்டார். தற்போது தான் 57 வயது என தெரிய வந்துள்ளது. எனது வயது கொண்ட அவரது முதல் மனைவியின் மகள் அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து வருகிறார். தற்போது அமெரிக்காவுக்கு செல்ல தயாராகி விட்ட அவர் தன்னை அடித்து விரட்டி டார்ச்சர் செய்கிறார். என்னை கொடுமைபடுத்தி எனது 2 மகன்களை வெளியேற்றி கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.

    இதற்கிடையே ஆர்த்தியை அப்புறப்படுத்திய போலீசார் அங்கிருந்து போலீஸ் காரில் பாஸ்கருடன் புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று இது தொடர்பாக ஆர்த்தி புகார் அளித்தார்.

    மேலும் போலீசார் விசாரணை நடத்திய போது, சீலநாயக்கன்பட்டி பகுதியில் சென்ற போது காரில் இருந்து பாஸ்கர், ஆர்த்தி மற்றும் அவரது குழந்தைகளை கீழே தள்ளி விட்டதாக புகார் கூறினார். மேலும் அது தொடர்பான வீடியோக்களும் சமூக வலை தளங்களில் வைரலானது.

    இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் பாஸ்கர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே பாஸ்கர் சேலம் டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சம்பவத்தன்று வீட்டில் மது அருந்த சென்ற அங்குராஜ் அதன் பிறகு வெளியே வரவில்லை.
    • ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ராஜகாடு முதல் வீதியை சேர்ந்தவர் அங்குராஜ் (53). கோவையில் பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி திலகவதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் அங்குராஜ் கடந்த சில நாட்கள் முன்புதான் ஈரோடு மாவட்டம் பவானி சாகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்துள்ளது. திலகவதியும், 2 மகள்களும் அவரது அம்மா வீட்டில் வசித்து வந்தனர். அங்குராஜ் மட்டும் ராஜாகாடு பகுதியில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் மது அருந்த சென்ற அங்குராஜ் அதன் பிறகு வெளியே வரவில்லை. இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் அடித்துள்ளது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் திலகதிக்கு தகவல் தெரிவித்தனர். திலகவதி மற்றும் உறவினர்கள் வீட்டின் கதவு உடைத்து உள்ளே சென்றபோது தங்கராஜ் தூக்குபோட்டு அழுகிய நிலையில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணி சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குஷ்பு ஆசிஷ்திரிவேதி ஜன்னலை திறந்து வைத்து மர ரேக் மீது ஏறி ஜன்னலை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கிழக்கு பெங்களூரு கண்ணமங்களா பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ்குமார். இவரது மனைவி குஷ்பு ஆசிஷ்திரிவேதி (32). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவர்கள் தொட்டபன ஹள்ளி என்ற பகுதியில் உள்ள 18 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 5-வது தளத்தில் வசித்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று மாலை 4 மணியளவில் குஷ்பு ஆசிஷ்திரிவேதி மற்றும் அவரது வீட்டு பணியாளர் ஆகியோர் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். குஷ்பு ஆசிஷ்திரிவேதி ஜன்னலை திறந்து வைத்து மர ரேக் மீது ஏறி ஜன்னலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். வீட்டு பணியாளர் வீட்டுக்குள் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது மர ரேக் திடீரென வழுக்கி ஜன்னலை சுத்தம் செய்து கொண்டிருந்த குஷ்பு ஆசிஷ்திரிவேதி 5-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் மற்றும் மாமியார் குஷ்பு ஆசிஷ்திரிவேதியை மீட்டு சீகேஹள்ளியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குஷ்பு ஆசிஷ்திரிவேதி வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் 18 தளங்களில் மொத்தம் 750 குடும்பத்தினர் வசித்து வருவதாகவும், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை என்றும் சமூக ஆர்வலர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

    • இந்திய அணி தோல்வி அடைந்ததை கண்ட ஜோதி குமார் அதிர்ச்சி அடைந்து மயங்கி கீழே விழுந்தார்.
    • சம்பவம் அவரது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த துர்கா சமுத்திரத்தை சேர்ந்தவர் ஜோதி குமார் (வயது 25). சாப்ட்வேர் என்ஜினீயரான ஜோதி குமார் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று இந்தியா ஆஸ்திரேலியா இடையான உலக கோப்பை இறுதி கிரிக்கெட் போட்டியை தனது நண்பர்களுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

    ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது இந்திய அணி தோல்வி அடையும் நிலைக்கு வருவதை கண்டு சோர்ந்து போனார். கடைசியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை கண்ட ஜோதி குமார் அதிர்ச்சி அடைந்து மயங்கி கீழே விழுந்தார். அவரது நண்பர்கள் ஜோதி குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பால் உயிர் இழந்ததாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் அவரது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • காதல் தோல்வியில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
    • வன்னியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிர்த்தான் பகுதியை சேர்ந்தவர் முத்துமாணிக்கம். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 24).

    இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அகாடமியில் சில ஆண்டுகளுக்கு முன்பு என்ஜினீயரிங் படித்தார்.

    அப்போது அவருடன் படித்த ஒரு பெண்ணை சதீஷ்குமார் காதலித்து வந்ததாக தெரிகிறது. படித்த பின்பும் 2 பேரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் சதீஷ்குமார் பெண்ணின் வீட்டுக்கு சென்று காதல் விவ காரத்தை கூறி திரு மணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் பெண் வீட்டார் சில காரணங்களை கூறி திரும ணத்துக்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார் கடந்த சில வாரங்களாக விரக்தியுடன் காணப் பட்டார்.

    காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்ற கவலையோடு இருந்து சதீஷ்குமார் சம்பவத்தன்று வீட்டின் மாடி அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவலறிந்த வன்னியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதல் தோல்வியில் என்ஜினீயர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
    • வீட்டிற்கு வந்ததில் இருந்தே அரவிந்த் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் அரவிந்த் (27).

    தற்கொலை

    இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாததிற்கு முன்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது விபத்து ஏற்பட்டதால் அங்கிருந்து பொத்தனூருக்கு வந்து விட்டார்.

    வீட்டிற்கு வந்ததில் இருந்தே அரவிந்த் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் அரவிந்த் வெகுநேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் அரவிந்த் அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அரவிந்தை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    விசாரணை

    இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக வேலூர் அரசு மருத்துவ மனை யில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவியிடம் வேல்முருகன் அடிக்கடி பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
    • வீட்டில் இருந்த 12 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு பெற்றோர் சந்தேகம் அடைந்தனர்.

    வண்டலூர்:

    மறைமலை நகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்த என்ஜினீயரான வேல்முருகன்(22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் மூலம் பேசி காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் செல்போனில் பிரீபயர் கேம் விளையாடுவது வழக்கம். இந்த விளையாட்டுக்காக பணம் தேவைப்படுகிறது என்று கூறி மாணவியிடம் வேல்முருகன் அடிக்கடி பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மாணவி பெற்றோருக்கு தெரியாமல் வேல்முருகனுடன் பழகி வந்து உள்ளார்.

    இந்நிலையில் வீட்டில் இருந்த 12 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு பெற்றோர் சந்தேகம் அடைந்தனர். மகளிடம் விசாரித்த போது அவர், காதலன் வேல்முருகனுக்கு பணம் தேவைப்பட்டதால் நகையை கூரியர் மூலம் அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளின் செல்போனை ஆய்வு செய்தபோது அதில் மகளின் ஆபாசமான புகைப்படங்கள், வீடியோக்கள் வேல்முருகனுக்கு அனுப்பி இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் திசையன்விளை சென்று மாணவியை ஏமாற்றி நகை-பணம் பறித்த வேல்முருகனை கைது செய்தனர். அவர் இதுபோல் வேறு பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு உள்ளாரா? என்று அவரது செல்போனை கைப்பற்றி மேலும் விசாரித்து வருகிறார்கள்.

    • போலீசார் ராஜேஷின் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
    • போலீசார் ராஜேஷின் மனைவிக்கு பணம் கொடுத்த ஆசிரியரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை வடவள்ளி வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது34). என்ஜினீயர்.

    இவரது மனைவி லக்ஷயா (29). பட்டதாரி. இவர் பிரெஞ்சு மொழியில் பட்டம் பெற்று உள்ளார். இவர்களுக்கு யக்சிதா (10) என்ற மகள் உள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர்களுடன் ராஜேஷின் தாய் பிரேமா (74) என்ப வரும் வசித்து வந்தார். 6 மாதங்களுக்கு முன்பு தான் இவர் குடும்பத்துடன் இங்கு வந்து குடியேறினார்.

    கடந்த 3 நாட்களுக்கும் மேலாக ராஜேசின் வீடு பூட்டப்பட்டு கிடந்தது. நேற்று மாலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ராஜேஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும், லக்ஷயா, யக்சிதா, பிரேமா ஆகியோர் விஷம் குடித்த நிலையிலும் இறந்து கிடந்தனர்.

    போலீசார் ராஜேஷின் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அறையில் என்ஜினீயர் ராஜேஷ் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கைப்பட எழுதிய ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    என்ஜினீயர் ராஜேஷின் மனைவி லக்ஷயாவுக்கு, சின்மயா நகரை சேர்ந்த ஆசிரியரின் நட்பு கிடைத்தது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

    இந்நிலையில் அந்த ஆசிரியரிடம் தனது தேவைக்காக லக்ஷயா பணம் கேட்டுள்ளார். அவர் அடிக்கடி அவருக்கு பணம் கொடுத்துள்ளார். மேலும் தன்னிடம் இருந்த பணம் மட்டுமின்றி தனது நண்பர் ஒருவரிடம் இருந்தும் பணத்தை வாங்கி லக்ஷயாவுக்கு கொடுத்தார். இதுவரை ரூ.31 லட்சம் கொடுத்துள்ளார்.

    இதற்கிடையே ஆசிரியருக்கு பணம் கொடுத்த அவரது நண்பர் பணம் கேட்கவே, 2 பேரும் லக்ஷயாவிடம் சென்று பணத்தை கேட்டுள்ளனர். அவர் சரியான பதில் சொல்லவில்லை என தெரிகிறது. இதையடுத்து 2 பேரும் லக்ஷயாவின் கணவர் ராஜேசை சந்தித்து, உனது மனைவிக்கு நாங்கள் பணம் கொடுத்துள்ளோம். அதற்கான ஆதாரம் என பணம் அனுப்பியதற்கான வங்கி பரிவர்த்தணையை காண்பித்தனர்.

    இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் பணம் கொடுத்தவர்கள், அதனை கேட்டு தொந்தரவு கொடுக்கவே, ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ராஜேஷின் மனைவிக்கு பணம் கொடுத்த ஆசிரியரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆசிரியரின் நண்பரையும் விசாரிப்பதற்காக அவரையும் தேடி வருகின்றனர்.

    • அதிர்ச்சி அடைந்த இளம் பெண் இதுகுறித்து தெற்கு மண்டல சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார்.
    • உடன் பணியாற்றும் பெண் ஊழியர்கள் யாரையேனும் மிரட்டினாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    போரூரில் பிரபல ஐ.டி.நிறுவனம் உள்ளது. இங்கு பணியாற்றும் இளம்பெண் ஒருவரது பெயரில் போலியாக தொடங்கப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் அவர் அனுப்புவது போன்று ஏராளமான ஆபாசமான குறுஞ்செய்திகள் வாலிபர்களுக்கு அனுப்பப்பட்டு இருந்தது.

    மேலும் தோழியின் பிறந்த நாள் அன்று அலுவலகத்தில் எடுக்கபட்ட புகைப்படங்களும் ஆபாசமாக மாற்றி பதிவிடப்பட்டு இருந்தன.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண் இதுகுறித்து தெற்கு மண்டல சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். தென் சென்னை இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி உத்தரவுப்படி தெற்கு மண்டல சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் இளம்பெண் பணி புரியும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் என்ஜினீயர் தமிழ்மாறன் என்பவர் இளம்பெண்ணின் புகைப் படத்தை ஆபாசமாக பதிவிட்டு பேஸ்புக் மெசஞ்சரில் ஆபாசமாக சாட்டிங் செய்து வந்தது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து தமிழ்மாறனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போனை போலீசார் பறிமுதல்செய்து ஆய்வு செய்தபோது 100-க்கும் மேற்பட்ட ஐ.டி.பெண் ஊழியர்களின் ஆபாச படங்கள் குவிந்து கிடந்தது. இதேபோல் தமிழ்மாறன் ஏராளமான பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மாற்றி பேஸ்புக்கில் போலியாக கணக்கு தொடங்கி சாட்டிங் செய்து வந்து உள்ளார். இளம்பெண் சாட்டிங் செய்வது போல் வாலிபர்களை தொடர்பு கொண்டு இரவு முழுவதும் செக்ஸ் சாட்டிங் செய்து ரசித்து இருக்கிறார். இவரது இந்த விபரீத ஆசையால் தற்போது போலீசில் சிக்கி கொண்டார்.

    தமிழ்மாறன் தன்னுடன் பணியாற்றும் பெண் ஊழியர்களை அவர்களுக்கு தெரியாமல் பல கோணங்களில் செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்து இருந்தார். அதனையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    ஆபாச சாட்டிங் செய்து அவரது வலையில் வீழ்ந்தவர்களிடம் பணம் பறித்து உள்ளாரா? உடன் பணியாற்றும் பெண் ஊழியர்கள் யாரையேனும் மிரட்டினாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மயிலானந்துவின் அம்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • ஈரோடு சூரம்பட்டி போலீசில் மயிலானந் சகோதரி ரூபி ஸ்ரீ அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரிநகர் திருவள்ளுவர் 2-வது வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் மயிலானந் (23). இவர் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மயிலானந்துவின் அம்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனால் மயிலானந் மனஉளைச்ச–லுடன் இருந்து வந்தார். அவரும் தற்கொலை செய்து கொள்வதாக அடிக்கடி கூறி வந்ததால் மயிலானந்த்திற்கு அவரது தந்தை மற்றும் சகோதரி ஆறுதல் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மயிலானந் அவரது சகோதரியை போனில் தொடர்பு கொண்டு வீட்டில் தனியாக இருப்பதால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும், அடிக்கடி அம்மா நியாபகம் வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து வைக்கும்படியும் கூறி உள்ளார். அதற்கு அவர் ஐதராபாத்துக்கு சென்றுள்ள தந்தை வீட்டுக்கு திரும்பியதும் பேசிக்கலாம் என்று கூறினார்.

    இந்நிலையில், அன்றைய தினம் மாலையே வீட்டின் படுக்கை அறையில் துப்பட்டாவினால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் மயிலானந்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு மயிலானந் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசில் மயிலானந் சகோதரி ரூபி ஸ்ரீ அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேட்டூர் நகராட்சி பொறி யாளர் மணிமாறன், நக ராட்சி ஆணையாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
    • நேற்று (30-ந் தேதி) அவர் ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சி பொறி யாளர் மணிமாறன், நக ராட்சி ஆணையாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். நேற்று (30-ந் தேதி) அவர் ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    மணிமாறன் நங்கவள்ளி பேரூராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றியபோது, பேரூராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகவும் அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் சிவதாஸ் மீனா நகராட்சி பொறியாளர் மணிமாறனை சஸ்பெண்டு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • இந்த தகவலை மதுரை மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை அனுப்பானடி, தெப்பக்குளம் மின் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை சனிக் கிழமை (17-ந்தேதி) மாதாந் திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்தள்ளது.

    அதன்படி அனுப்பானடி மின் கோட்டத்திற்கு உட் பட்ட ராஜீவ் காந்தி நகர், பகலவன் நகர், தமிழன்தெரு, ஆசிரியர் காலவி, அரவிந்த் கண் மருத்துவமனை, சினிப் பிரியா தியேட்டர். ஆவின் பால் பண்ணை, செண்பகம் மருத்துவமனை சுற்றுப்புறம், ஐராவதநல்லூர், பாபு நகர். கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, சிருபானந்தவாரியார் நகர், சுந்தரராஜரம், கல்லம்பலி. சிந்தாமணி அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர், கங்கா நகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு, எஸ்.எம்.பி. காலனி, முந்திரிதோப்பு மற்றும் சேவகப் பெருமாள் கோவில் பகுதிகளிலும்.

    இதேபோல் தெப்பக் குளம் மின் நிலையத்திற்கு உட்பட்ட தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராம நாதபுரம் ரோடு. தெப்பக் குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி தெப்பம்ரோடு, அனுப் பானடி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர் வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர் நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி. சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எம்.ஆர். ரோடு, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சின்ன கண்மாய், பாலரங்கா புரம், சண்முகா நகர், நவரத் தினபுரம், பிஸ்சர் ரோடு, இந்திராநகர், பழைய குயவர் பாளையம் ரோடு, லட்சுமி புரம் ஒன்று முதல் அறுவரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை, மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஸ்ணபுரம் பகுதி முழுவதும் மேல அனுப்பானடி கிழக்குபகுதி, தமிழன் தெரு, என்.எம்.ஆர்.புரம், ஏ.ஏ. ரோடு, 88 ரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவன்யூ, மற்றும் திருமகள் நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை மதுரை மின்வாரிய செயற்பொறியா ளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    ×