search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிப்பறி"

    • 2 பேர் அமீரை வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • அமீர் கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    சேதராப்பட்டு:

    புதுவை அடுத்த தமிழக பகுதியான சின்ன கோட்டகுப்பத்தைச் சேர்ந்தவர் சையது அமீர். இவர் சம்பவத்தன்று சின்ன கோட்டை குப்பம் கறிக்கடை சந்தில் நடந்து சென்றார்.

    அப்போது எதிரே வந்த 2 பேர் அமீரை வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் அமீரிடமிருந்த பணத்தை பறித்துச்சென்ற அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து அமீர் கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராபின்சன் வழக்கு பதிவு செய்து அமீரிடம் பணம் பறித்தவர்களை அடையாளம் காண அந்தப் பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டார்.

    அதில் அமீரிடம் பணம் பறித்தவர்கள் சின்னக்கோட்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த விஜி என்கிற பிக்க்ஷா (வயது 22), ஆறுமுகம் (26) என்பது தெரிய வந்தது. ரவுடிகளான விஜி என்கிற பிக்க்ஷா மீது சின்னக்கோட்டகுப்பம் பகுதியில் 2021-ம் ஆண்டு நடந்த செல்வகுமார் கொலை வழக்கு, ஆறுமுகம் மீது அவரது அண்ணனையே கொலை செய்த வழக்கும் உள்ளது. இருவரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டிவனம் கிளை சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் தர்மராஜை கைது செய்தனர்.
    • கொண்டலாம்பட்டி போலீசார் கடந்த ஜூலை மாதம் வீடு புகுந்து திருடிய வழக்கில் தேடி வந்தனர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் தர்மன் என்கிற தர்மராஜ் (27). இவரை வழிப்பறி வழக்கில் அன்னதானப்பட்டி போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை போலீசார் தர்மராஜை கைது செய்தனர். இதே போல் அமானி கொண்டலாம்பட்டி பழனியப்பன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் என்கிற காட்டுக்கார சரவணன் (40).

    இவரையும் கொண்டலாம்பட்டி போலீசார் கடந்த ஜூலை மாதம் வீடு புகுந்து திருடிய வழக்கில் தேடி வந்தனர். இன்று அதிகாலை சரவணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமநாதபுரம் அருகே இரவு நேரங்களில் சில கும்பல் வாகன ஓட்டிகளை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது.
    • போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள பனைக்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் பிரதான சாலையாக நதிப் பாலம்-பனைக்குளம் சாலை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகனங்களை வழிப்பறி கொள்ளையர்கள் மறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளை தாக்கி பொருட்களை கொள்ளை யடித்துச் செல்லும் சம்பவம் அடிக்கடி நடப்பதாக பொது மக்கள் புகார் தெரி விக்கின்றனர்.

    கடந்த காலங்களில் இந்த சாலையில் கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பயணிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. போலீசாரிடம் புகார் அளித்தும் தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நதிப்பாலம்-பனைக்குளம் சாலையில் புறக்காவல் நிலையம் அமைத்து தர வேண்டும் என அந்தப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரு கின்றனர்.

    மேலும் இந்த சாலையில் இரவு நேரங்களில் போலீ சார் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர். போலீசார் தொடர்ந்து ரோந்து சென்றால் மட்டுமே வழிப்பறி சம்பவங்களை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து பனைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    பனைக்குளம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் ராமநாத புரம் நகர் பகுதியில் வேலை பார்த்து வருகின்றனர். இந்ந நிலையில் வேலைக்குச் செல்பவர்கள் இரவு நேரத்தில் ஊர் திரும்ப வேண்டியுள்ளது. அப்படி வரும் தொழிலாளர்கள், பயணிகளை குறி வைத்து இருசக்கர வாகனங்கள், கார்களை வழிமறித்து வாகன ஓட்டிகள், பயணிகளை தாக்கி வழிப்பறிகளில் ஈடுபடுகின்றனர்.

    இது தொடர்பாக ஏராளமான புகார்கள் தேவிபட்டினம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இருப்பினும் அந்த குற்றவாளிகள் யார்? என கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது.

    இந்த நிலையில் புறக்காவல் நிலையம் அமைத்து தொடர் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட வேண்டும். அப்போது தான் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஒருவர் கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    காவேரிப்பாக்கம்:

    உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரிஸ்வான் பாய் (வயது 33). இவர் பைக்கில் பனப்பாக்கம் அருகே உள்ள நங்கமங்கலம் கிராமத்தில் டி.வி.க்களை வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக ஒரேபைக்கில் வந்த 3 வாலிபர்கள் ரிஸ்வானை கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த 2 எல்.இ.டி டிவிக்களை பறித்துக்கொண்டு

    தப்பினர்.இதுகுறித்த காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ரிஸ்வான் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகாந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் மாமுண்டூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வரங்கம் மகன் சுஜித்(23) என்பவர் தனது 2 நன்பர்களுடன் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. பின்னர் சுஜித்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் தலைமறைவான பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த இருவரை தேடி வருகின்றனர்.

    • ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்
    • சென்னை மடிப்பாக்கத்தில் தங்கி கட்டிட பணி செய்தனர்

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் (வயது 34). இவரது உறவினர் சுமதி (32). இருவரும் சென்னை மடிப்பாக்கத்தில் தங்கி கட்டிட பணி செய்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் விக்கிரவாண்டி தனியார் கல்லுாரி அருகே வந்த போது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த மர்ம ஆசாமி சுமதி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயினை அறுத்துக் கொண்டு தப்பிவிட்டார். இது பற்றி விக்கிரவாண்டி போலீசில் சுமதி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து மற்றும் போலீசார் வழக்கு பதிந்து முகமூடி கொள்ளையனை தேடி வருகின்றனர்.

    • பெரியார் பஸ் நிலையம் அருகே ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வாளை காட்டி கண்ணனை மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்துச்சென்றனர்.

    மதுரை

    மதுரை திடீர்நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது45), ஆட்டோ டிரைவர். பெரியார் பஸ் நிலையம் அருகே இவர் நின்றிருந்தபோது சிறுவன் உள்பட 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் வாளை காட்டி கண்ணனை மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்துச்சென்றனர். இதுகுறித்து திடீர் நகர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி பணத்தை பறித்துச்சென்ற திடீர் நகர் சதீஷ்குமார் (21), குடிசை மாற்று வாரிய குடியிருப்புசேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (21) ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகர் பத்ரு ஹரி (20), 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • வழிப்பறியில் ஈடுபட ஆயுதங்களுடன் பதுங்கிய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • திவாகரன், மாரிமுத்து, விஜய், சோலைசாமி, சக்தி முகேஷ், கார்த்திக் ராஜா என தெரிய வந்தது.

    மதுரை

    திருப்பரங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராணி மற்றும் போலீசார் சம்பவத்தன்று ரோந்து சென்றனர். அப்போது வெயில் உகந்த அம்மன் கோவில் பின்புறம் பதுங்கியிருந்த ஒரு கும்பல் போலீசாரை கண்டதும் தப்ப முயன்றது.

    உடனே போலீசார் விரட்டி சென்று 6 பேரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனையிட்ட போது கத்தி, அரிவாள், மிளகாய்பொடி உள்ளிட்டவை வைத்தி ருந்தது தெரியவந்தது.

    அதிர்ச்சியடைந்த போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் ருப்பரங்குன்றத்தை சேர்ந்த முருகன் மகன் திவாகரன், பரத் என்ற மாரிமுத்து, விஜய் (28), அருப்புக் கோட்டையைச் சேர்ந்த சோலைசாமி (19), பந்தல்குடி நிறைகுளத்தான் மகன் சக்தி முகேஷ் (21), கார்த்திக் ராஜா (25) என தெரிய வந்தது.

    6 பேரையும் போலீசார் கைது செய்தனர். தனியாக செல்லும் நபர்களை மிரட்டி இந்த கும்பல் பணம் பறிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

    அதேபோல் விளாச்சேரி சுடுகாட்டு பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி யிருந்த சிவபிரியன், மதன், கார்த்திக், பாலாஜி, பாண்டீஸ்வரன் ஆகிய 5 பேரை திருநகர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வமாணிக்கம் தலைமை யிலான போலீசார் கைது செய்தனர்.

    • கப்பலூர் நான்கு வழிச்சாலையில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலை தடுக்க ரோந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
    • டிரைவர் இல்லாத லாரிகளில் பேட்டரி உள்ளிட்ட பொருட்களை திருடி செல்வது அதிகரித்துள்ளது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் சிப்காட் தொழிற்சாலை உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட ஆலைகள் செயல்பட்டு வருகின்றனர். வெளி மாநில மற்றும் வெளியூர்களில் இருந்து நாள்தோறும் லாரிகள் மூலம் சரக்குகள் வந்த வண்ணம் இருக்கும்.

    சரக்குகளை கொண்டு வரும் லாரி டிரைவர்கள் வாகனத்தை கப்பலூர் நான்கு வழிச்சாலை ஓரத்தில் நிறுத்தி ஓய்வு எடுப்பது வழக்கம். இரவு நேரங்களில் இந்த பகுதிகளில் ஆள் நடமாட்டம் குறைந்து இருக்கும்.

    இதை பயன்படுத்தி மோட்டார் சைக்கிள்களில் வரும் வழிப்பறி கும்பல்கள் லாரி டிரைவர்களை மிரட்டி பணம் பறிப்பது தொடர் கதையாக நடந்து வருகிறது. டிரைவர் இல்லாத லாரிகளில் பேட்டரி உள்ளிட்ட பொருட்களை திருடி செல்வது அதிகரித்துள்ளது.

    இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் டிரைவர்கள் வாகனங்களை நிறுத்த அச்சமடைந் துள்ளனர். நெடுஞ்சாலை களில் குற்றங்களை தடுக்கவும், விபத்தின் போது துரிதமாக செயல்ப டவும் ரோந்து போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கப்பலூர் நான்கு வழிச்சாலை பகுதியில் போலீசாரின் மெத்தனம் காரணமாக சமூக விரோத கும்பல்கள் லாரி டிரைவர், தனியாக செல்லும் நபர்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூடுதல் கவனம் செலுத்தி நான்கு வழிச்சாலைகளில் கைவரிசை காட்டும் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்தது.

    லாரி டிரைவர் உள்பட 2 பேரிடம் பணம் பறிப்பு

    நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது21). லாரி டிரைவரான இவர் சென்னையில் இருந்து நெல்லைக்கு லாரியை ஓட்டி வந்தார். மதுரை மாவட்டம் கப்பலூர் அருகே உள்ள கருவேலம்பட்டி பிரிவு பகுதிக்கு சென்ற போது அங்கு 2 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி இருந்தது. இதை பார்த்த ராஜேஷ் உடனே லாரியை நிறுத்தி காயமடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இரவு நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் இல்லை. அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ராஜேசை மிரட்டி செல்போன், ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதே போல் கவாஸ்கர் என்பவரிடம் வழிப்பறி கும்பல் பணத்தை பறித்துக் கொண்டு சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடலூர் அடுத்த பெரிய காரைக்காடு பகுதியில் சாலை ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார்.
    • இந்நிலையில் கடலூர் முதுநகர் மணிகூண்டு அருகே போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரை சேர்ந்தவர் அரிதாஸ் (வயது 41). இவர் கடலூர் அடுத்த பெரிய காரைக்காடு பகுதியில் சாலை ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் அரிதாசிடம் கத்தியை காட்டி மிரட்டினர். இதில் அரிதாஸ் வைத்திருந்த ரூ.600 பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துகொண்டு, அரிதாசினை தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.

    இந்நிலையில் கடலூர் முதுநகர் மணிகூண்டு அருகே போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை சோதனை செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் லாரி டிரைவர் அரிதாசை தாக்கி பணம் பறித்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து புதுவை மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இந்த வழிப்பறியில் தொடர்புடைய மேலும் 3 வாலிபர்களை கடலூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • தனிப்படை அமைத்து குற்றவாளிளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த னர்.
    • இதையடுத்து 2 மோட்டார் சைக்கிளையும் சின்னசேலம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் தொடர்ந்து திருட்டு மற்றும் வழிபறி சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட நபர்கள் சின்னசேலம் போலீ சாரிடம் புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சின்ன சேலம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த்ராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த னர். இந்நிலையில் கனியாமூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது 2 மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். மோட்டார் சைக்கி ளை நிறுத்திய போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினர். சந்தேக மடைந்த போலீசார், 3 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் திருச்சி மாவட்டம் திருவெரும்பூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் குணசீலன் (வயது 28), மாரிமுத்து மகன் கண்ணன் (40), பொன்னுரங்கன் மகன் செந்தில் (39) என்பதும், 3 பேரும் சேர்ந்து திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது. அதன்படி, சின்னசேலத் தில் உள்ள வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்தவரிடம் கொள்ளையடித்தது, மூங்கில் பாடியில் உள்ள செறுப்பு கடையில் பணம் திருடியது, நைனார்பாளை யத்தில் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் வழிப்பறி செய்தது போன்ற சம்பவங்களில் 3 பேரும் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 2 மோட்டார் சைக்கிளையும் சின்னசேலம் போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்களை கைது செய்த போலீசாரை சின்னசேலம் பகுதி மக்கள் வாழ்த்தி வருகின்றனர்.

    திருமாந்துறையில் பட்டப்பகலில் துணிகரம்ரோட்டில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம் ரூ.35 ஆயிரம் வழிப்பறி

    அகரம்சிகூர், 

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் , திருமாந்துறை கிராமம், சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி பத்மபிரியா (35). இவர்களது மகள் அஸ்வந்திகாஸ்ரீ(10).

    பத்மபிரியா திருமாந்து றையில் உள்ள வங்கியில் நகை அடகு வைத்து கடன் பெற்றுள்ளார். இதற்கான வட்டியை கட்டுவதற்காக தனது வீட்டில் இருந்து ரூ.35 ஆயிரம் பணத்தை ஒரு பையில் எடுத்துக்கொண்டு, தனது மகளுடன் வங்கிக்கு சென்றுள்ளார்.

    வங்கியில் வட்டி கட்டுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து விட்டு, பணம் கட்டுவதற்காக காத்திருந்து உள்ளார். அப்போதுஅவரின் மகள் அஸ்வந்திகாஸ்ரீ ஸ்நாக்ஸ் வாங்கி கொடுக்க கேட்டு ள்ளார். இதற்காக அருகில் உள்ள சூப்பர் மார்க்கெ ட்டுக்கு தனது மகளை அழைத்து சென்றுள்ளார்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள், பத்மபிரியா கையில் வைத்திருந்த பண ப்பையை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் சென்று உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பத்ம பிரியா சத்தமிட்டுள்ளார். ஆனால் அதற்குள் அந்த இளைஞர்கள் வேகமாக சென்று மறைந்து விட்டனர். இது குறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் பத்ம பிரியா புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் மங்கள மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அப்ப குதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது பணத்தை பறித்து சென்ற 2 இளைஞர்க ளின் உருவம் அதில் தெளி வாக பதிவாகி இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் அந்த இரு வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • மர்மநபர்கள் அடுத்தடுத்து 2 பேரிடம் நகை, பணம், செல்போனை பறித்ததை பார்த்த அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் சத்தம் போட்டனர்.
    • போலீசார் ரோந்து பணியே மேற்கொள்ளாத நிலையில் பொது மக்களே சுற்றிவளைத்து பிடித்ததால் 2 பேர் சிக்கியுள்ளனர்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகில் உள்ள சென்னம நாயக்க ன்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார்(32). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு நகைகடை அதிபரிடம் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். நேற்றிரவு பணியை முடித்துவிட்டு இரவு 11 மணிக்குமேல் தன்வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

    கரூர் பைபாஸ் சாலையில் அஞ்சலிரவுண்டானா அருகே வந்தபோது தனது பைக்கை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரை கத்தி முனையில் தாக்கி பணம் மற்றும் செல்போனை கேட்டு மிரட்டினர்.

    மேலும் அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கசங்கிலி, செல்போன் ஆகியவற்றையும் பறித்துக்கொண்டனர். அதன்பிறகு சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவரையும் மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்தனர். அடுத்தடுத்து 2 பேரிடம் நகை, பணம், செல்போனை பறித்ததை பார்த்த அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் சத்தம் போட்டனர்.

    இதேபோல் பூதிப்புரத்தை சேர்ந்த கிராம மக்கள் ஓடிவந்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை விரட்டிச்சென்றனர். அதில் ஒருவர் தப்பிஓட மற்ற 2 பேரையும் பிடித்து கொண்டனர். அவர்கள் பாலதிருப்பதியை சேர்ந்த சதீஸ்(18), நவீன்(19) என தெரியவந்தது. அவர்களுக்கு தர்மஅடி கொடுத்து தாடிக்கொம்பு போலீ சாருக்கு தகவல் தெரிவித்த னர்.

    போலீசார் அவர்களை விசாரணைக்காக அழைத்து ச்சென்றனர். இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வருபவர்களை யும், தனியாக நடந்து செல்பவர்களையும் குறிவைத்து வழிப்பறியில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. போலீசார் ரோந்து பணியே மேற்கொ ள்ளாத நிலையில் பொது மக்களே சுற்றிவளைத்து பிடித்ததால் 2 பேர் சிக்கியுள்ளனர்.

    இதேபோல மேலும் பல வழிப்பறிகும்பல் நகரின்பல்வேறு பகுதிகளில் சுற்றி வருகின்றனர். பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் இதுபோன்ற வழிப்பறி கொள்ளை யர்களை போலீசார் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×