என் மலர்
நீங்கள் தேடியது "திருட்டு"
- துப்பட்டாவால் முகத்தை முழுவதுமாக மூடிய பெண் ஒருவர் நகைக்கடைக்கு வந்துள்ளார்.
- இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலானது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நகைக்கடையில் மிளகாய் போடி தூய் நகையை திருட முயன்ற பெண்ணை கடைக்காரர் 20 முறை அறைந்த சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
நவம்பர் 3 ஆம் தேதி அன்று நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலானது.
துப்பட்டாவால் முகத்தை முழுவதுமாக மூடிய பெண் ஒருவர் நகைக்கடைக்கு வந்துள்ளார். அப்போது திடீரென கையில் மறைத்துவைத்திருந்த மிளகாய் பொடியை கடைக்காரர் மீது தூவி நகையை கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.
மிளகாய் போடி கண்ணில் விழாததால் சுதாரித்துக்கொண்ட கடைக்காரர் அந்த பெண்ணை பலமுறை பலமாக ஆராய்ந்துள்ளார். அதாவது கிட்டத்தட்ட 25 வினாடிகளில் 20 முறை அப்பெண்ணை பளார் பளார் என்று அவர் அறைந்துள்ளார்.
இது தொடர்பாக கடைக்காரர் புகார் கொடுத்த மறுத்த நிலையிலும், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருட முயன்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
- பாப் பாடகர் என்ரிக் இக்லெசியாஸின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
- இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள MMRDA மைதானத்தில் பாப் பாடகர் என்ரிக் இக்லெசியாஸின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த இசை நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களான வித்யா பாலன், மலைக்கா அரோரா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 80 மொபைல் போன்கள் திருடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் ஏழு முதல் தகவல் அறிக்கைகளை (FIR) பதிவு செய்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
- பாண்டி திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
- மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அண்ணாநகரை சேர்ந்தவர் பாண்டி (வயது 60). இவர் திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக கடந்த 21ஆம் தேதி சென்றுள்ளார்.
அப்போது ஏ.டி.எம். அறையில் இருந்த வாலிபர் ஒருவரிடம் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து தரும்படி கேட்டுள்ளார். வாலிபர் கார்டை வாங்கி ரகசிய எண்ணை பெற்றுக் கொண்டு பணத்தை எடுத்துக் கொடுத்து உள்ளார்.
முதியவரும் பணத்தை சரிபார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த வாலிபர் அதேபோன்ற ஏ.டி.எம். கார்டை மாற்றி பாண்டியிடம் கொடுத்து உள்ளார்.
பணத்தை எடுத்த பாண்டி அங்கிருந்து வீட்டிற்கு சென்ற பின் அடுத்தடுத்து வங்கியில் பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வரவே அதிர்ச்சி அடைந்த பாண்டி தனது மகனிடம் கூறி உள்ளார். அவரும் வாங்கி பரிசோதித்த போது பாண்டியன் வங்கி கணக்கிலிருந்து ரூ. 73 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரிய வந்தது.
இதனால்அதிர்ச்சி அடைந்த பாண்டி திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது வங்கி ஏ.டி.எம்.-ல் மூன்று முறையும், நகைக்கடை ஒன்றில் ஒரு முறையும் என மொத்தம் 73 ஆயிரம் எடுத்தது தெரிய வந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்த வாலிபர் சிவகாசியை சேர்ந்த மாரிமுத்து (39) என்பது தெரிய வந்தது. இதையடுத்து மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.
- கிளம்புவதற்கு முன் ரத்த கறைகளை நீக்க வீட்டின் கழிவறை ஷவரில் இருவரும் குளித்து விட்டு சென்றுள்ளனர்.
- அவர்களில் ஒருவன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் அகர்வால் வீட்டில் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளான்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த வியாழக்கிழமை அடுக்குமாடி வீட்டில் நடந்த கொலை கொள்ளை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
சைபராபாத் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் 50 வயதான ரேணு அகர்வால் ஸ்டீல் பிஸ்னஸ் செய்யும் தனது கணவர் மற்றும் 26 வயது மகனுடன் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் ரேணு அகர்வால் தனியாக இருந்தபோது இருவர் அவரை பிரஷர் குக்கரால் தலையில் அடித்து பணம் வைக்கப்பட்டுள்ள லாக்கர் பாஸ்வேர்டை கேட்டு சித்ரவதை செய்தனர்.
பின்னர் கத்தி மற்றும் கத்திரிக்கோலால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு 40 கிராம் தங்கம், 1 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். கிளம்புவதற்கு முன் ரத்த கறைகளை நீக்க வீட்டின் கழிவறை ஷவரில் இருவரும் குளித்து விட்டு சென்றுள்ளனர்.
வேலைக்கு சென்ற மகனும், கணவனும் வந்து பார்த்தபோது ரேணு அகர்வால் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
சம்பவத்தன்று 13 வது மாடியில் இருந்து இருவரும் வெளியேறும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸ் அவர்களை அடையாளம் கண்டு தேடி வந்தது.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் வைத்து குற்றவாளிகளை கைது செய்தனர். இருவரும் ஜார்கண்ட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்களில் ஒருவன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் அகர்வால் வீட்டில் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளான். அதே குடியிருப்பின் அடுத்த தலத்தில் மற்றொரு வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தவனுடன் சேர்ந்து இந்த கொலை கொள்ளை நிகழ்த்தப்பட்டுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவில் திருவிழா நடைபெறும் நேரத்தில் அந்த பகுதியில் விடிய விடிய மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டு இருந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே உள்ள பெருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 30). இவர்களுக்கு 1 குழந்தை உள்ளது. வினோத் மதுரையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கிருஷ்ண வேணியின் உறவினர் வீடு வள்ளியூர் அருகே உள்ள ஊத்தடி கிராமத்தில் உள்ளது. அங்கு அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் கிருஷ்ணவேணி அதனை பார்ப்பதற்காக பெருங்குடியில் இருந்து நேற்று தனது குழந்தையுடன் உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார்.
தொடர்ந்து இரவில் கோவிலுக்கு சென்று கொடை பார்த்துவிட்டு வீட்டின் முதல் மாடியில் குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தார்.
இன்று அதிகாலையில் வீட்டுக்குள் ஏறி குதித்த மர்ம நபர் ஒருவர் கிருஷ்ண வேணியின் கழுத்தில் கிடந்த சுமார் 3 பவுன் தங்க நகையை பறிக்க முயன்றுள்ளார்.
தூங்கி கொண்டிருந்த கிருஷ்ணவேணி அதிர்ச்சியடைந்து தனது சங்கிலியை பிடித்துக்கொள்ள அதில் பாதி செயின் மர்ம நபரின் கையில் சிக்கியது.
உடனே மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். கிருஷ்ணவேணி கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். தொடர்ந்து வீட்டின் முதல் தளத்தில் இருந்த பீரோவில் கிருஷ்ண வேனி சுமார் 12 பவுன் நகை வைத்திருந்துள்ளார். அதையும் மர்ம நபர் திருடிக்கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கிருஷ்ணவேணி வள்ளியூர் போலீசில் தனது 15 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடிச்சென்றது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் திருவிழா நடைபெறும் நேரத்தில் அந்த பகுதியில் விடிய விடிய மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டு இருந்தது. இதன் காரணமாகவும், காற்றுக்காகவும் கிருஷ்ணவேணி வீட்டின் கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்கி உள்ளார். இதனை மர்ம நபர் அறிந்து நகையை பறித்துச்சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே அந்த பகுதியில் உள்ளி சி.சி.டி.வி. காமிராக்களை இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்து துணிகர திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- கொஞ்ச நேரத்தில் அவன் நன்றாக அசந்து தூங்கினான்.
- காளி தேவியே அவனுக்கு தக்க தண்டனை கொடுத்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூமின் சந்தை பகுதியில் காளி கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு வழக்கமான பூஜை முடிந்ததும் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார்.
நள்ளிரவு நேரம் மர்மநபர் ஒருவன் கோவிலின் பின்பக்க கதவை உடைத்து கொண்டு கோவிலுக்குள் புகுந்தான். பின்னர் அங்கிருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கீரிடம் உள்ளிட்டவைகளை திருடினான்.
அப்போது அவனுக்கு தூக்கம் கண்ணை கட்டியது. இதனால் சிறிது நேரம் தூங்கி விட்டு செல்லலாம் என நினைத்து அவன் கோவில் கருவறைக்குள் தரையில் படுத்தான். கொஞ்ச நேரத்தில் அவன் நன்றாக அசந்து தூங்கினான்.
அதிகாலை கோவிலுக்கு வந்த பூசாரி கருவறையில் ஒருவன் தூங்கி கொண்டு இருந்ததையும், அவன் அருகே நகைகள் சிதறி கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி அவர் ஊருக்குள் ஓடோடி சென்று விஷயத்தை சொன்னார். இதையடுத்து ஊர் மக்கள் கோவிலுக்கு திரண்டு வந்தனர். போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அப்போதும் அந்த மர்மநபர் எழுந்திரிக்கவில்லை. போலீசாரும், பொதுமக்களும் அவனை தட்டி எழுப்பினார்கள், இதனால் திடுக்கிட்டு எழுந்த மர்மநபர் தன் முன் போலீசார் நிற்பதை பார்த்து அங்கிருந்து ஓட முயன்றான்.
உடனே போலீசார் அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவனது பெயர் வீர் நாயக் என்பது தெரியவந்தது. கோவிலுக்குள் திருடுவதற்காக நுழைந்ததாக அவன் போலீசாரிடம் தெரிவித்தான். அவன் தூங்கியதால் திருடு போக இருந்த நகைகள் தப்பியது.
காளி தேவியே அவனுக்கு தக்க தண்டனை கொடுத்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.
- இரவு நேரத்தில் ஆட்கள் இல்லாத வீட்டில் விளக்கு எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.
- மதுபோதையில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் பொப்பிலி அடுத்த கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாச ராவ். விவசாயி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது மகன் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.
சீனிவாச ராவ் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிக் கொண்டு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று விவசாய பணிகளை செய்வது வழக்கம். கடந்த 5 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை பூட்டிக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றனர்.
வீடு பூட்டப்பட்டு இருந்ததை அறிந்த பிடரி கிராமத்தை சேர்ந்த திருடன் ஒருவன் சீனிவாச ராவின் வீட்டிற்கு சென்றார். வீட்டில் உள்ள வெள்ளி பொருட்கள் மற்ற பொருட்களை திருடிக் கொண்டு வெளியே செல்வார். திருடப்பட்ட பொருட்களை விற்றுவிட்டு அதில் கிடைக்கும் பணத்தில் மது அருந்துவார்.
பகல் முழுவதும் வெளியே சுற்றி திரியும் திருடன் இரவு நேரங்களில் திருடப்பட்ட அதே வீட்டில் தங்கி இருந்தான். கடந்த 5 நாட்களாக இதே வேலையை செய்து வந்தான். இரவு நேரத்தில் ஆட்கள் இல்லாத வீட்டில் விளக்கு எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.
இதுகுறித்து சீனிவாச ராவின் மகனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சீனிவாச ராவ் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மதுபோதையில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது நீண்ட நாட்களாக பூட்டப்பட்ட வீடுகளை நோட்டமிட்டு பொருட்களை திருடி சென்று மது குடித்துவிட்டு மீண்டும் அதே வீட்டில் தங்குவதை வழக்கமாகக் கொண்டு இருப்பதாக கூறுகிறார். இதனைக் கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
- தூங்கிக் கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பி அவரிடம் விசாரித்தனர்.
- கோவில் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் சின்னையன் கைது செய்யப்பட்டார்.
கோவை:
கோவை அருகே உள்ள கோவைப்புதூரில் பாலவிநாயகர் மற்றும் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.
நேற்றுமுன்தினம் இரவு பூஜை முடிந்த பின்னர் பூசாரி கோவிலை பூட்டி விட்டுச்சென்றார். மறுநாள் காலையில் அவர் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தார். அங்கு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருந்தது.
அதேசமயம் உண்டியல் அருகே ஒரு வாலிபர் போதையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். உடனே பூசாரி, கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் அங்கு ஏராளமானோர் திரண்டனர். தூங்கிக் கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பி அவரிடம் விசாரித்தனர்.
கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட வந்ததாகவும், பணத்தை திருடிவிட்டு போதையில் அங்கேயே தூங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அந்த நபரை பொதுமக்கள் குனியமுத்தூர் போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவரது பெயர் சின்னையன் (வயது 42), புதுவை மாநிலம் காரைக்கால் நெடுங்காடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
அவர் மீது புதுவை மாநிலத்தில் திருட்டு வழக்குகள் உள்ளன. இதனால் அங்கிருந்து வெளியேறி கோவைப்புதூருக்கு வந்து வாடகை வீட்டில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு கோவில் அருகே வந்ததும் பழைய நினைவுகள் வந்து உண்டியலை உடைத்து பணம் திருட முடிவு செய்துள்ளார். உடனே இரும்பு கம்பியை கொண்டு கோவில் கதவை உடைத்துள்ளார். உள்ளே சென்றபின் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.8,250 பணத்தை திருடியிருக்கிறார். அப்போது மழை பெய்துள்ளது. இதனால் மழை நின்றதும் வெளியே செல்லலாம் என நினைத்து உண்டியல் அருகே படுத்துள்ளார். ஆனால் அங்கு அயர்ந்து தூங்கி விட்டதாக சின்னையன் தெரிவித்தார்.
கோவில் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் சின்னையன் கைது செய்யப்பட்டார். அவர் திருடிய உண்டியல் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சின்னையன் ஜெயிலில் அடைக்கப்பட்டார். திருடவந்த இடத்தில் கொள்ளையன் தூங்கியதால் பிடிபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பண மாலையை அரியானாவில் இருந்து வாடகைக்கு எடுத்து உள்ளனர்.
- சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நூதனமான முறையில் ரூ.14.5 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 1-ந்தேதி அன்று நடைபெற்ற திருமணத்தில் மணமகனுக்கு அணிவிப்பதற்காக 500 ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை அணிவிக்கப்பட்டது. இந்த மாலையை அரியானாவில் இருந்து வாடகைக்கு எடுத்து உள்ளனர். இதைதொடர்ந்து திருமணத்திற்கு பிறகு அதனை உரிமையாளரான ஷாத் இருசக்கர வாகனத்தில் அரியானாவிற்கு எடுத்து சென்று கொண்டு இருந்தார்.
இதனை அறிந்த மர்மநபர்கள் காரில் வந்து இருசக்கரவாகனத்தின் மீது மோதினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஷாத்தை தாக்கி துப்பாக்கி காட்டி மிரட்டி மாலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஷாத் அளித்த புகாரின் பேரில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
- ஆடுகளை அடைத்து வைத்திருக்கும் பட்டிகள், கிடைகள் அமைக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு அருகாமையில் அவர்கள் மறைந்திருந்து நோட்டமிட்டனர்.
- தாய், தந்தை இறந்துவிட்ட நிலையில் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
காளையார்கோவில்:
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே அமைந்துள்ளது மதகுபட்டி கிராமம். கடந்த சில மாதங்களாக மதகுபட்டி கிராமத்தில் அடிக்கடி ஆடுகள், கோழிகள் திருடு போவது தொடர்கதையாகி வந்தது. போதிய பாதுகாப்புடன் பட்டிகளில் ஆடுகளை அடைத்து வைத்திருந்தபோதும் இந்த திருட்டை தடுக்க முடியாமல் ஆடு வளர்ப்போர் தவித்து வந்தனர். நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் ஆடுகளை வளர்த்து வருவோருக்கு இந்த தொடர் திருட்டு பெரும் இழப்பை ஏற்படுத்தி வந்தது.
ஆடு திருடும் கும்பலை பிடிப்பதற்காக பாதிக்கப்பட் டவர்கள் இரவு நேரங்களில் கண்விழித்து கண்காணித்து வந்தபோதிலும் வேறு பகுதியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆடுகள் திருடு போய் வந்தன. அதேவேளையில் நள்ளிரவு நேரங்களில் மதகுபட்டி கிராமத்தில் வாகனங்கள் வந்து செல்வதை உறுதி செய்த பொதுமக்கள், ஆடு மற்றும் கோழிகளை திருடுவதில் யாரோ மர்ம நபர்கள் ஈடுபட்டு கைவரிசை காட்டி வருவதாக எண்ணினர். அவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிய பொதுமக்கள் ஆடு, கோழி வளர்ப்போரிடம் இதுகுறித்து பேசி தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் மதகுபட்டி கிராம மக்கள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். குறிப்பாக ஆடுகளை அடைத்து வைத்திருக்கும் பட்டிகள், கிடைகள் அமைக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு அருகாமையில் அவர்கள் மறைந்திருந்து நோட்டமிட்டனர்.
நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அங்குள்ள சுப்பு என்பவரது தோப்பிற்குள் 2 வாலிபர்கள் புகுந்து உள்ளனர். சத்தம் கேட்டு சுதாரித்த அந்த பகுதியில் கண்காணிப்பில் இருந்தவர்கள் கூச்சல் எழுப்பி ஒன்று கூடினர். இதைப்பார்த்த அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளனர். ஆனால் கிராம மக்கள் விடாமல் துரத்தி சென்றதுடன், அவர்களை கல், கம்பு, கட்டை உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களை கொண்டு சரமாரியாக தாக்கினர்.
இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் ஒருகட் டத்தில் ஓட முடியாமல் கீழே விழுந்து மயங்கினர். இதுகுறித்த தகவல் அறிந்த மதகுபட்டி போலீசார் நள்ளிரவில் சம்பவம் நடந்த கிராமத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருவரையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. அதன் விபரம் வருமாறு:-
மதகுபட்டி அருகேயுள்ள கல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன்கள் மணிகண்டன் (வயது 30), விக்னேஷ் என்ற சிவசங்கரன் (25). இதில் மணிகண்டன் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். விக்னேஷ் கல்லம்பட்டி பகுதியில் கூலிவேலை பார்த்து பிழைப்பு நடத்தினார். தாய், தந்தை இறந்துவிட்ட நிலையில் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
கோவையில் வேலை பார்க்கும் மணிகண்டன் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வந்து செல்வார். அப்போது தனது தம்பியுடன் சேர்ந்து அந்த பகுதியில் நடைபெறும் சேவல் சண்டையிலும் பங்கேற்று வந்து உள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து ஆடு, கோழிகளை திருடி விற்பதாக கிராம மக்கள் சந்தேகித்து உள்ளனர். அதேபோல் மதகுபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டுக்காக வளர்த்து வரும் காளைகளையும் சகோதரர்கள் திருடி இருக்கலாம் என்றும் கருதினர்.
இந்தநிலையில்தான் நேற்று நள்ளிரவில் மதகுபட்டிக்கு ஆடு திருட வந்ததாக கருதிய பொதுமக்கள் அவர்களை அடித்துக் கொலை செய்து உள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மதகுபட்டி போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீசார் 188 கிராம் தங்க நகைகள், 550 கிராம் வெள்ளி மற்றும் 1500 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
- மூன்று மனைவிகளும் வெவ்வேறு இடத்தில் வசித்து வருவதாகவும், அவர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மூன்று மனைவிகள் மற்றும் 9 குழந்தைகளை பராமரிப்பதற்காக ஒருவர் தொழில்முறை திருடனாக மாறிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பொலீஸ் நிலையத்தில் ஏராளமான கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீசார் பபாஜான் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 188 கிராம் தங்க நகைகள், 550 கிராம் வெள்ளி மற்றும் 1500 ரூபாய் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பபாஜானை கைது செய்ததன் மூலம் 8 திருட்டு வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், தனக்கு மூன்று மனைவிகள் உள்ளதாகவும், அவர்கள் பெங்களூருவின் புறநகர் பகுதிகளில் வெவ்வேறு இடத்தில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மூன்று மனைவிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும், அவர்கள் மூலம் 9 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரையும் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இவர்களுக்காக தொழில்முறை திருடனாக மாறியதாகவும் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினரை பராமரிக்க தொழில்முறை திருடனாக ஒருவர் மாறியது அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என மொத்தம் சிறுக சிறுக ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து திருடி உள்ளார்.
- போலீசார் விசாரணை நடத்தி கோபால் மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிவகிரி தாண்டம் பாளையம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சடையப்பன் மனைவி பாப்பாள் (70). ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்.
பாப்பாள் வங்கி கணக்கில் அவருக்கு வரும் ஓய்வூதிய பணம் ரூ.1.76 லட்சம் சேமித்து வைத்திருந்தார். இதனை அவருக்குத் தெரிந்த அரச்சலூர் ஜே.ஜே நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோபால் (38) என்பவரிடம் அந்தப் பணத்தை எடுத்து தர சொல்லி உள்ளார்.
கோபாலும் மூதாட்டி ஏ.டி.எம். கார்டில் பணம் எடுத்து தருவது போல் உதவி செய்து நடித்து பாப்பாள் வங்கிக் கணக்கில் உள்ள தொகையை தெரிந்து கொண்டார். இதை அடுத்து பாப்பாளை ஏமாற்றி அவரது ஏ.டி.எம் கார்டினை எடுத்துக்கொண்டு, கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என மொத்தம் சிறுக சிறுக ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து திருடி உள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பாப்பாள் இது குறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கோபால் மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.






