என் மலர்

    நீங்கள் தேடியது "theft"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முருகலெட்சுமி தனது வீட்டில் கூண்டு அமைத்து புறாக்கள் வளர்த்து வருகிறார்.
    • நேற்று அதிகாலை மர்ம நபர் யாரோ 12 புறாக்களையும் திருடிச்சென்றுள்ளார்.

    நெல்லை:

    சிவகிரி அருகே உள்ள தேவிப்பட்டினத்தை அடுத்த ராமசாமியாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துச்செல்வன். இவரது மனைவி முருகலெட்சுமி. இவர் தனது வீட்டில் கூண்டு அமைத்து புறாக்கள் வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் அதில் அடைக்கப்பட்டிருந்த 12 புறாக்கள் நேற்று அதிகாலை மாயமானது. அதனை மர்ம நபர் யாரோ திருடிச்சென்றுவிட்டனர். இதுதொடர்பாக முருகலெட்சுமி சிவகிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அதே கிராமத்தில் வசிக்கும் கணேசன் மகன் மகேஷ்குமார்(வயது 19) என்பவர் புறாக்களை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மின்வாரிய ஊழியர் அருள்குமார், மற்றும் மாரியப்பன் ஆகியோர் வீடுகளில் ஒரே நாளில் நகை, பணம் கொள்ளை போனது.
    • கொள்ளையர்களை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூட்டி கிடந்த மின்வாரிய ஊழியர் அருள்குமார், மற்றும் மாரியப்பன் ஆகியோர் வீடுகளில் ஒரே நாளில் நகை, பணம் கொள்ளை போனது.

    இதுகுறித்து பாலு செட்டிசத்திரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் கொள்ளையர்கள் 2 பேரும் தப்பி செல்வது பதிவாகி உள்ளது. இதனை வைத்து கொள்ளையர்களை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொழில் அதிபர் காரில் ரூ. 3.75 லட்சம் திருடப்பட்டது.
    • திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    திருநகர் சொக்கநாதர் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது46).இவர் சிலைமான் பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    இவர் காரில் மதுரைக்கு வந்தார். அதில் தொழிற்சா லைக்கு தேவை யான உபகரணங்களை வாங்கு வதற்காக ரூ 3 லட்சத்து 75 ஆயிரத்தை வைத்திருந்தார்.

    விரகனூர்-திருப்புவனம் செல்லும் வழியில் காரை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது காரில் இருந்தபணம் திருடு போனது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின்பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

    மதுரை கண்ணனேந்தல் ஜி.ஆர்.நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் மதிமாறன் (46). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார்.

    அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர் பீரோவில் இருந்த ¾ பவுன் நகை மற்றும் ரூ.99 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கரூரில் இருசக்கர வாகனம் திருட்டு
    • போலீசார் விசாரணையில் வாலிபர் கைது செய்யப்பட்டார்

    கரூர், 

    கரூர், பள்ளப்பாளையத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 42) இவர் கடந்த, 15-ந்தேதி கரட்டுப்பாளையம் கன்னிமார் கோவில் அருகே, தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, கரூர் ராயனூரை சேர்ந்த பிரசாந்த் (21) வெங்கமேட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முத்தாரம்மன் கோவிலின் செயலாளராக ஜெயபாரத் என்பவர் இருந்து வருகிறார்.
    • திருட்டு குறித்து ஜெயபாரத் பழவூர் போலீசில் புகார் அளித்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த பழவூர் அருகே உள்ள ஆவரைகுளத்தில் புகழ்பெற்ற முத்தாரம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலின் செயலாளராக அதே ஊரில் பண்ணைவிளை தெருவை சேர்ந்த ஜெயபாரத்(வயது 49) என்பவர் இருந்து வருகிறார்.

    பூட்டு உடைப்பு

    கடந்த 25-ந்தேதி இவர் வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிச்சென்றார். மீண்டும் நேற்று சென்று பார்த்தபோது கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கருவறையில் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 5 பவுன் தங்கநகை திருட்டு போயிருந்தது.

    இதுகுறித்து ஜெயபாரத் பழவூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தாரம்மன் கோவிலில் நகையை திருடிச்சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மணியாச்சியை சேர்ந்த ரமேஷ் என்பவர் காற்றாலையில் சூப்பர்வைசராக இருந்து வருகிறார்.
    • திருட்டு குறித்து ரமேஷ் கங்கைகொண்டான் போலீசில் புகார் அளித்தார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே மேட்டுப்பிராஞ்சேரி-வெண்கலப்பொட்டல் சாலையில் தனியார் காற்றாலை செயல்பட்டு வருகிறது. இந்த காற்றாலையில் சூப்பர்வைசராக கயத்தாறு அருகே மணியாச்சியை சேர்ந்த ரமேஷ்(வயது 28) என்பவர் இருந்து வருகிறார்.

    இவர் கடந்த 25-ந்தேதி காற்றாலையில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த சுமார் 33 கிலோ காப்பர் வயர்கள் திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக அவர் கங்கைகொண்டான் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தியதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து கிராமத்தை சேர்ந்த கார்த்தி(33) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீடு புகுந்து பெண்ணிடம் நகை திருடப்பட்டது.
    • இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள வலங்காங்குளம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(40). அரசு பஸ் மெக்கானிக். இவரது மனைவி வனிதா(35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு வீட்டை பூட்டாமல் வனிதா கீழ் பகுதியிலும், கனகராஜ் மாடியிலும் தூங்கியுள்ளனர். அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் வனிதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்துள்ளனர்.

    அப்போது வனிதா கூச்சலிட்டதை கேட்டு கனகராஜூம், அக்கம் பக்கத்தினரும் வந்தனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு மர்மநபர் காலை 4.45 மணியளவில் கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வரும் காட்சி கேமிராவில் பதிவாகி இருந்தது.
    • அக்கம் பக்கத்தில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த அந்த ஆசாமி கோவில் கதவை திறந்து உள்ளே புகுந்தார்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மீனாட்சிபுரத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரி வழக்கம்போல் காலையில் நடைதிறந்து பூஜைகள் செய்ய வந்தார். அப்போது கருவறையில் அம்மனின் கழுத்தில் இருந்த தங்க நகை மற்றும் பூஜை தட்டில் இருந்த பணம் ஆகியவை திருடு போயிருந்தது. இதைப்பார்த்த பூசாரி அதிர்ச்சியடைந்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தார்.

    அதில் ஒரு மர்மநபர் காலை 4.45 மணியளவில் கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வரும் காட்சி பதிவாகி இருந்தது. பின்னர் அக்கம் பக்கத்தில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த அந்த ஆசாமி கோவில் கதவை திறந்து உள்ளே புகுந்தார். பயபக்தியுடன் சாமி கும்பிட்டு விட்டு அம்மனின் கழுத்தில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிக்கொண்டு தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டார்.

    இந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நிதி நிறுவனத்தில் ரூ.1¾ லட்சம்-பொருட்கள் திருட்டப்பட்டது.
    • கம்ப்யூட்டர் மானிட்டர் உள்ளிட்ட பொருட்களும் மாயமாகி இருந்தன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி பகுதியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் 4 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு இரு சக்கர வாக னங்களுக்கு கடன் அளித்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் இரவு கடைக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த முன்பணம் ரூ.1 லட்சம் மற்றும் வசூல் செய்த சீட்டு பணம் ரூ.75 ஆயிரம் ஆகியவற்றை அலுவ லகத்துக்குள் வைத்து பூட்டி விட்டு பாக்கியராஜ் வீட்டுக்கு சென்றார்.

    நேற்று காலை மீண்டும் அலுவலகத்தை திறப்ப தற்காக வந்தார். அப்போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அலுவலகத்தில் வைத்து சென்ற ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் பணம் திருடுபோய் இருந்தது. மேலும் கம்ப்யூட்டர் மானிட்டர் உள்ளிட்ட பொருட்களும் மாயமாகி இருந்தன. மர்ம நபர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து அலுவலகத்தில் புகுந்து பணம் மற்றும் பொருட்களை எடுத்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து மல்லி போலீஸ் நிலையத்தில் பாக்கியராஜ் புகார் செய் தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரே நாளில் பல இடங்களில் நடந்த கொள்ளை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நொய்யல் பகுதிகளில் தொடர் திருட்டு நடந்து வருகிறது
    • போலீசார் வாகன சோதனை நடத்தி திருட்டு குற்றங்களை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் நொய்யல், குறுக்குச்சாலை, புன்னம் சத்திரம், குட்டக்கடை, காகிதபுரம், வேலாயுதம்பாளையம், புகழூர், தவுட்டுப்பாளையம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, மண்மங்கலம், மேட்டுப்பாளையம் இந்தநிலையில் இப்பகுதியில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வாலிபர்கள், வெளி மாவட்டங்களில் இரு சக்கர வாகனங்களை திருடிக் கொண்டு வாகனங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.அப்போது பூட்டி இருக்கும் வீடுகள், தனியாக பெண்கள் இருக்கும் வீடுகள், தனியாக வாகனம் நிறுத்தப்படும் இடங்கள், வீடுகளில் தனி நபர்கள் இருப்பது, வெளியூர்களுக்கு சென்றவர் களின் வீடுகள் போன்றவற்றை கண்காணித்து அப்பகுதியில் யாரும் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து திருடி செல்கின்றனர்.

    அதேபோல் தனியாக நின்று கொண்டிருக்கும் பெண்களிடமும், நடந்து செல்லும் பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளையும் பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று விடுகின்றனர். இதனால் தொடர்ந்து நகை மற்றும் பணத்தை பறிகொடுத்தவர்கள் பரிதாபத்தில் இருக்கின்றனர். இதன் காரணமாக போலீசார் தனித்தனி குழுக்களாக பிரிந்து முக்கிய பகுதிகளில் நின்று அந்த வழியாக வெளி மாவட்ட பதிவு எண்கள் கொண்ட வாகனத்தில் வரும் நபர்களை தடுத்து நிறுத்தி தீவிர விசாரணை நடத்த வேண்டும்.

    தொடர்ந்து இதுபோன்று வாகன சோதனை நடத்தினால் திருட்டு குற்றத்தை தடுக்க முடியும். எனவே போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன சோதனை நடத்த வேண்டும். இதனால் திருட்டு குற்றங்களை தடுக்க முடியும். எனவே போலீசார் வாகன சோதனை நடத்தி திருட்டு குற்றங்களை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளம் அர