என் மலர்tooltip icon

    இந்தியா

    சர்தார் டீசல் திருட்டு கும்பல்: முன்னாள் HPCL ஊழியரின் மாஸ்டர் மைண்ட் வேலை - பிடிபட்டது எப்படி?
    X

    'சர்தார்' டீசல் திருட்டு கும்பல்: முன்னாள் HPCL ஊழியரின் மாஸ்டர் மைண்ட் வேலை - பிடிபட்டது எப்படி?

    • ராஜேஷ் உரங் சம்பவ இடத்தில் இருந்து டீசல் லைன் வால்வை மூடிவிட்டு சுவர் மீது குதித்து தப்பிக்க முயன்றார்.
    • விரைவாக பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட, ஷ்ரவன் ஒரு கும்பலை உருவாக்கி, குழாய்களில் இருந்து டீசலைத் திருட தொடங்கி உள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் குழாய் வழியை உடைத்து டீசல் திருடிய வழக்கில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.

    HPCL நிறுவனத்தின் இணைப்பில் கசிவு இருப்பதாக கடந்த ஒரு வாரமாக போலீசாருக்கு தொடர்ந்து தகவல் வந்துள்ளது. ரோந்துப் பணியின்போது மட்டுமே கசிவு ஏற்பட்ட இடத்தை உறுதிப்படுத்த முடியும் என்பதால் அஜ்மீர் மற்றும் ஜெய்ப்பூர் மற்றும் பிற மாவட்டங்களில் போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

    பக்ரு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு பூட்டிய வீட்டைக் கவனித்தனர். இரவில் வீட்டில் சிலர் நடமாட்டம் இருந்தது போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்தது.

    சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் உரிமையாளரை அழைத்து, வீட்டின் பூட்டை உடைத்து சோதனை நடத்தினர்.

    அப்போது, டீசல் கசிவு லைன் வால்வை இயக்கும் ராஜேஷ் உரங் சம்பவ இடத்தில் இருந்து டீசல் லைன் வால்வை மூடிவிட்டு சுவர் மீது குதித்து தப்பிக்க முயன்றார்.

    ராஜேஷை பிடித்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அசாம் மாநிலம் திப்ருகாரை சேர்ந்தவர் என்றும், ஷ்ரவன் கும்பலின் தொடர்பு குறித்த தகவல்கள் தெரியவந்தன.

    சம்பவ இடத்திலிருந்து ஒரு லாரி மீட்கப்பட்டதாக பக்ரு போலீசார் தெரிவித்தனர். அதில் ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி பொருத்தப்பட்டிருந்தது. 10,000 லிட்டர் தண்ணீர் தொட்டியில் டீசல் நிரப்பி இரவில் விற்பனை செய்ய செல்வார்கள். லாரியின் மேல் இரண்டு மேற்பரப்புகளிலும் தண்ணீர் பாட்டில்கள் கொண்ட அட்டைப்பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக டி.சி.பி அமித் குமார் தெரிவித்தார்.

    தலைமறைவான டீசல் திருட்டு கும்பலின் மூளையாக செயல்பட்ட ஷ்ரவன் சர்தார், 2005 முதல் 2007 வரை HPCL நிறுவனத்தின் டீசல் பாதையை பராமரிக்கும் தொழிலாளியாக பணியாற்றினார்.

    HPCL நிறுவனத்தின் குழாய்கள் கட்ச் (குஜராத்) முந்த்ராவிலிருந்து சிரோஹி, பாலி, அஜ்மீர், ஜெய்ப்பூர், ஆல்வார் மற்றும் பிற பகுதிகள் வழியாக இயக்கப்படுகின்றன. அந்த நேரத்தில், அஜ்மீர் மாவட்ட எல்லைக்குள் உள்ள குழாயில் கசிவு பிரச்சனை இருந்தது. பொறியாளர்களால் கூட இந்த பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. ஷ்ரவன் இந்த பிரச்சனையை தீர்த்துள்ளார். இதன் பிறகு, அவரது சக ஊழியர்கள் அவரை 'சர்தார்' என்று அழைக்கத் தொடங்கி உள்ளனர். அப்போது தனது வேலையின்போது, ஷ்ரவன் தனது சக ஊழியர்களிடமிருந்து குழாய் பழுதுபார்க்கும் வேலையைக் கற்றுக்கொண்டார். இதற்கு முன்பு, ஷ்ரவன் டெல்லியில் ஒரு பிளம்பராகப் பணியாற்றினார்.

    2005 முதல் 2007 வரை, ஷ்ரவன் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளியாக பணியாற்றி உள்ளார். இதன் பிறகு, விரைவாக பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட, ஷ்ரவன் ஒரு கும்பலை உருவாக்கி, குழாய்களில் இருந்து டீசலைத் திருட தொடங்கி உள்ளார்.

    ராஜஸ்தான் மற்றும் அரியானாவில் உள்ள HPCL மற்றும் IOCL நிறுவன இணைப்புகளில் கசிவுகளை உருவாக்கி, ஷ்ரவனின் கும்பல் இதுவரை பல கோடி ரூபாய் மதிப்புள்ள டீசலைத் திருடி உள்ளது தெரிய வந்துள்ளது.

    இந்த வேலையில் ஷ்ரவன் தனது நண்பர்களை மட்டுமல்ல, குடும்ப உறுப்பினர்களையும் ஈடுபடுத்தி உள்ளார். ஜெய்ப்பூரில் நடந்த பக்ரு சம்பவத்தில் அவரது மைத்துனர் தர்மேந்திர வர்மா என்ற ரிங்கு சிங்கும் ஈடுபட்டுள்ளார்.

    Next Story
    ×