என் மலர்
ராஜஸ்தான்
- பட்டியல் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
- கடந்த சில நாள்களாக கடும் பணிச்சுமையால் மன அழுத்தத்தில் இருந்தார்.
ராஜஸ்தானின் பாரா பகுதியில் அரசு ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் 42 வயதான அனுஜ் கார்க். அவர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக தோல்பூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அந்த வகையில் நேற்று இரவு 1 மணியளவில் வீட்டில் வைத்து வாக்காளர் பட்டியல் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த சில நாள்களாக கடும் பணிச்சுமைக்கு அவர் ஆளாகியிருந்ததாகவும், அதில் ஏற்பட்ட மனஅழுத்தத்தால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகம், மேற்கு வங்கம், உட்பட 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மரணங்கள் தொடர்ந்து வருகின்றன.
- காங்கிரஸ் எதிர்காலத்தில் மற்றொரு பெரிய பிளவை சந்திக்க நேரிடும்- பிரதமர் மோடி.
- பிரதமர் மோடி, தனது சொந்த வீட்டை ஒழுங்கமைக்க வேண்டும்- கெலாட் பதிலடி.
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடி, பாஜக தொண்டர்களை சந்தித்து வெற்றியை அவர்களுடன் கொண்டாடினார். அப்போது அவர்கள் மத்தியில் பேசும்போது, "காங்கிரஸ் எதிர்காலத்தில் மற்றொரு பெரிய பிளவை சந்திக்க நேரிடும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அசோக் கெலாட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கெலாட் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சி பிளவு படும் என பிரதமர் மோடி கனவு கண்டு கொண்டிருக்கிறார். அவருடைய கருத்து முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை. காங்கிரஸ் கட்சி பற்றி கருத்து கூறுவதற்கு முன், பிரதமர் மோடி, தனது சொந்த வீட்டை ஒழுங்கமைக்க வேண்டும். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் கூட, பாஜக கட்சியால் அதன் புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் உள்ளது. இதற்கு பாஜக- ஆர்எஸ்எஸ் இடையிலான மோதல்தான் காரணம்.
காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் நாட்டிற்கு முன் உருவாக்கிய சவால்களை கட்சியின் மூத்த தலைவர்களும் இளம் தலைவர்களும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்களாக உள்ளனர்.
இவ்வாறு கெலாட் தெரிவித்து்ளளார்.
- கைக்குட்டையில் மகனின் திருமண அழைப்பிதழ் அச்சிட முடிவு செய்தனர்.
- சாலையோரம் வீசப்பட்டுள்ள சாமி படங்களை சிலர் மிதித்து செல்வதை கண்டு அதேபோல் தாங்களும் செய்யக்கூடாது என முடிவு செய்தோம்.
ராஜஸ்தான் மாநிலம் போர்கேடா அடுத்த அகூர்தாம் காலனியை சேர்ந்தவர் மகேஷ் ரானேவால். இவரது மனைவி மம்தா. இவர்களது மகனுக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற உள்ளது.
மகனின் திருமண அழைப்பிதழை புதுமையான முறையில் அச்சிட தம்பதியினர் முடிவு செய்தனர். அதன்படி சமூக ஊடகங்களில் திருமண அழைப்பிதழ் தேடிப் பார்த்தனர்.
அதில் கைக்குட்டையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
இதேபோல் கைக்குட்டையில் தனது மகனின் திருமண அழைப்பிதழ் அச்சிட முடிவு செய்தனர்.
உள்ளூர் அச்சக உரிமையாளர் ஒருவர் உதவியுடன் திருமண அழைப்பிதழ்களை அச்சிட்டு உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொடுத்தனர்.
கைக்குட்டையில் திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டு இருந்ததைக் கண்டவர்கள் மகேஷ், மம்தா தம்பதியை வெகுவாக பாராட்டினர்.
காகித அட்டைகளில் சாமி படத்துடன் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்கள் சாலையோரங்களில் வீசி விட்டு செல்கின்றனர்.
சாலையோரம் வீசப்பட்டுள்ள சாமி படங்களை சிலர் மிதித்து செல்வதை கண்டு அதேபோல் தாங்களும் செய்யக்கூடாது என முடிவு செய்தோம்.
நாங்கள் கொடுக்கும் அழைப்பிதழை அனைவரும் பயன்படுத்தும் வகையில் கைக்குட்டையில் அழைப்பிதழ் அடித்து கொடுத்து வருகிறோம் என்றனர்.
- ராஜஸ்தான் அரசின் நிதித்துறையில் இணை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பாரதி தீட்சித் பணிபுரிந்து வருகிறார்.
- கணவர் ஆஷிஷ் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
2014 பேட்ச் ராஜஸ்தான் கேடர் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஷிஷ் மற்றும் பாரதி தீட்சித் இருவரும் அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது ராஜஸ்தான் அரசின் நிதித்துறையில் இணை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பாரதி தீட்சித் பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் ஆஷிஷ் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் திருமணம் செய்து கொண்டதிலிருந்து தான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தனது கணவர் ஆஷிஷ் துன்புறுத்துவதாக பாரதி தீட்சித் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சமீப காலமாக துன்புறுத்தல் அதிகரித்துள்ளது என்றும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பாரதி தனது புகாரில் தெரிவித்துள்ளார். பல குற்றவாளிகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம், ஆஷிஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து தன்னை கடத்திச் சென்று பல மணி நேரம் சிறைபிடித்து வைத்திருந்ததாகவும், விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் தன்னையும் தனது குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.
புகாரை ஏற்று ஜெய்ப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வந்தே பாரத் ரெயில் வரவேற்று பெற்றதால், ஸ்லீப்பர் ரெயில் விட திட்டம்.
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரெயிலின் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய ரெயில்வேத்துறை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பயணிகளின் பயண நேரத்தை குறைப்பதற்காக அதிவேக ரெயிலான வந்தே பாரத்தை அறிமுகம் செய்தது. குறிப்பிட்ட நிறுத்தங்களை கொண்ட இந்த ரெயிலால், பயணிகள் நேரம் மிச்சமானது. முதலில் 8 பெட்டிகளாக இயக்கப்பட்டு, படிப்படியாக பல்வேறு வழித் தடங்களில் 24 பெட்டிகள் வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த ரெயில்களுக்கு பயணிகள் இடையே அமோக வரவேற்பு ஏற்பட்டதால், ஸ்லீப்பர் ரெயிலை விட ரெயில்வேத்துறை முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதற்கட்ட பரிசோதனை நடைபெற்றது.
தற்போது வெர்சன் 2 என அழைக்கப்படும் 16 பெட்டிகள் கொண்ட ரெயிலை, பயணிகளுக்கு இணையாக எடையுடனும், எடை இல்லாமலும் 180 கி.மீ. வேகத்தில் இயக்கி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தபட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா டிவிசனில் மேற்கு மத்திய ரெயில்வேஸ் இந்த சோதனையை செய்துள்ளது. ரோஹல்குர்த்- இந்திராகார்- கோட்டா பிரிவில் 100 கி.மீ. இடைவெளியில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
- ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நீர்ஜா மோடி என்ற பிரபல பள்ளி இயங்கி வருகிறது.
- ஆசிரியரிடம் இதுபற்றி கேட்டபோது , அவர் அலட்சியமாக, "இது ஒரு இருபாலர் பள்ளி, அவர்கள் ஆண்களிடமும் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நீர்ஜா மோடி என்ற பிரபல பள்ளி இயங்கி வருகிறது.
கடந்த நவம்பர் 1 ஆம் தேதி பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் அமய்ரா 9 வயது சிறுமி பள்ளி கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அமய்ரா மாடியில் இருந்து குடித்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அமய்ரா கடந்த 1 வருடமாக சக மாணவர்களால் பாலியல் வக்கிரத்துடன் மோசமான வார்த்தைகளால் வாய்மொழியாக துன்புறுத்தப்பட்டு வந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.
1 வருடதிற்கு முன்பு, "நான் பள்ளி செல்ல மாட்டேன்.. என்னை அனுப்பாதீர்கள்' என தன்னிடம் கூறியதை பதிவு செய்து அந்த ஆடியோவை அமய்ராவின் வகுப்பு ஆசியருக்கு தாயார் ஷிவானி மீனா அனுப்பி உள்ளார்.

மேலும் தனது மகளின் அச்சம் குறித்து பல முறை பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்தும் அது அலட்சியம் செய்யப்பட்டதாக சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.
அமய்ராவின் தந்தை விஜய் மீனா கூறுகையில், பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பின் போது, சில மாணவர்கள் எனது மகளையும் மற்றொரு பையனையும் நோக்கி சைகைகளைச் செய்தனர். இது அமய்ராவை பயமுறுத்தி, தனது பின்னால் ஒளிந்து கொள்ள வைத்தது.
ஆசிரியரிடம் இதுபற்றி கேட்டபோது, அவர் அலட்சியமாக, இது ஒரு இருபாலர் பள்ளி, அவர்கள் ஆண்களிடமும் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பதிலளித்தார்" என தெரிவித்தார்.
தற்கொலை செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அமய்ரா தனது வகுப்பு ஆசிரியரிடம் இரண்டு முறை சென்று பேசுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இருப்பினும், சிபிஎஸ்இ விதிகளின்படி வகுப்பறை சிசிடிவிகளில் ஆடியோ பதிவு கட்டாயமாக இருந்தாலும், இந்த காட்சிகளில் எந்த ஒலியும் இல்லை. இதனால் அவர் ஆசிரியரிடம் என்ன பேசினார் என்பது தெரியவில்லை.
ஆறு மாடி கட்டிடத்திற்கு குறைந்தபட்ச பாதுகாப்பாக கிரில் அல்லது வலைகள் ஏன் நிறுவப்படவில்லை? சிசிடிவி காட்சிகளில் ஏன் ஆடியோ இல்லை? லட்சக்கணக்கில் கட்டணங்களை வசூலிக்கும் நிர்வாகத்திற்கு எந்த பொறுப்பும் இல்லையா?" என்று அமய்ராவின் உறவினர் சாஹில் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பள்ளி நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. பெற்றோரிடமிருந்து வாக்குமூலங்களை எடுத்து அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாக ஜெய்ப்பூர் டிசிபி ராஜர்ஷி ராஜ் வர்மா தெரிவித்துள்ளார்.
- மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
- அடுத்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று ஹர்மன்பிரீத் கவுரின் மெழுகு சிலை திறந்து வைக்கப்படுகிறது.
ஜெய்ப்பூர்:
மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நஹர்கர் கோட்டையில் உள்ள ஷீஸ் மஹாலில் மெழுகு சிலை செய்து வைக்கப்படும் என அந்தக் கண்காட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரும் 2026ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று ஹர்மன்பிரீத் கவுரின் மெழுகு சிலை திறந்து வைக்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, ஆடவர் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு இங்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
- லாட்டரி சீட்டு வாங்குவதற்கான பணத்தை கடனாக கொடுத்து உதவினார்.
- அமித் சேரா பாதிண்டா பகுதியில் உள்ள ஒரு கடையில் லாட்டரி சீட்டு வாங்கிக் கொண்டு சொந்த ஊர் திரும்பினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்புட்லி பகுதியைச் சேர்ந்தவர் அமித் சேரா. இவர் வண்டியில் சென்று காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
ஏழ்மை நிலையில் இருந்த அமித் சேராவுக்கு அதிர்ஷ்டம் பக்கத்திலேயே இருந்தது என்றே சொல்ல வேண்டும். ஆம்! கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பஞ்சாப் சென்றிருந்தார். அங்கு அம்மாநில அரசு சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி லாட்டரியில் ரூ.11 கோடி பம்பர் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்ததை அறிந்தார்.
ஆனால் லாட்டரி சீட்டு வாங்குவதற்கு தேவையான பணம் கையில் இல்லை. எனவே தனது நண்பரான முகேஷ் என்பவரின் உதவியை நாடினார். அவர் லாட்டரி சீட்டு வாங்குவதற்கான பணத்தை கடனாக கொடுத்து உதவினார்.
இதையடுத்து, அமித் சேரா பாதிண்டா பகுதியில் உள்ள ஒரு கடையில் லாட்டரி சீட்டு வாங்கிக் கொண்டு சொந்த ஊர் திரும்பினார். இந்த நிலையில், கடந்த 31-ந் தேதி பம்பர் லாட்டரி பரிசுக்கான குலுக்கல் நடந்தது. இதில் அமித் சேரா வாங்கிய சீட்டுக்கு ரூ.11 கோடி பரிசு விழுந்தது. இதையறிந்து அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், 'இது எனக்கு கடவுன் கொடுத்த எதிர்பாராத ஆசீர்வாதம். இந்த பணத்தை எனது இரண்டு குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்துவேன். அதுமட்டுமின்றி இந்த லாட்டரி சீட்டு வாங்க பணம் கொடுத்து உதவிய எனது நண்பர் முகேசுக்கு ரூ.1 கோடி கொடுப்பேன்' என்று கூறினார்.
- கட்டுப்பாட்டை இழந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு எதிரே வந்த 17 வாகனங்கள் மீது விபத்து ஏற்படுத்தியது.
- லாரி டிரைவரை உடனடியாக கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கோர சாலை விபத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர்.
நேற்று மதியம், ஜெய்ப்பூரில் லோகாமண்டி பகுதியில் உள ஹர்மதா என்ற இடத்தில், வேகமாக வந்த ஒரு காலி சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு எதிரே வந்த 17 வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.
இந்த கோர விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நடந்ததும் உள்ளூர் மக்கள், போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லாரி ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஜெய்ப்பூர் மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர சோனி கூறியுள்ளார்.
விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை உடனடியாக கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானில் நடந்த இரண்டாவது பெரிய விபத்து இதுவாகும். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த மற்றொரு விபத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதியதில் அதில் 15 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- 1,500 கிலோ எடை கொண்ட இந்த எருமை மாட்டின் விலை ரூ.21 கோடியாகும்.
- இதற்கு ஒரு நாள் தீவனத்துக்கே ரூ.1,500 செலவாகிறது
ராஜஸ்தானின் புஷ்கர் நகரில் கலாசார பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ஆண்டுதோறும் புஷ்கர் கண்காட்சி நடைபெறுகிறது.
இதில் ஒட்டகம், குதிரை, எருமை மாடுகள் விற்பனை கண்காட்சியும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் கால்நடை கண்காட்சி அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.
இந்த கண்காட்சியில் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் அன்மோல் என்ற எருமை மாடு ஈர்த்தது. 'அன்மோல்' என்ற இந்த மாடு கருகருவென, வனப்புடன் இருந்தது. 1,500 கிலோ எடை கொண்ட இந்த எருமை மாட்டின் விலை ரூ.21 கோடியாகும்.
இதுகுறித்து அதன் உரிமையாளர் பால்மேந்திரா கில் கூறுகையில், 'இந்த மாட்டை வைத்திருப்பதை பெருமையாக கருதுகிறேன். மன்னரைப்போல பராமரிக்கப்படும் இந்த எருமைக்கு நாள்தோறும் பால், நெய், பருப்பு வகைகளோடு உலர் பழங்கள் உணவாக தருகிறேன். இதற்கு ஒருநாளைக்கு ரூ.1,500 செலவாகிறது' என்று பெருமையாக தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த கண்காட்சியில் வைரலான ரூ.21 கோடி மதிப்பிலான எருமை மாடு திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாபத்தின் பெயரில் விலங்குகளை கொடுமைப்படுத்துவதற்கு இது எடுத்துக்காட்டு என விலங்குகள் நல ஆர்வலர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- ஜெய்ப்பூரில் உள்ள பிரபல பள்ளியில் அமிரா என்ற 9 வயது சிறுமி 6ம் வகுப்பு படித்து வந்தார்.
- சிறுமி தற்கொலை செய்துகொண்டது குறித்த தகவலை பள்ளி நிர்வாகம் மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல பள்ளியில் அமிரா என்ற 9 வயது சிறுமி 6ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், மாணவி அமிரா கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளியின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
போலீசார் விசாரணையில், ஆசிரியர்கள் தொடர்ந்து துன்புறுத்தியதால் சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சிறுமி தற்கொலை செய்துகொண்டது குறித்த தகவலை பள்ளி நிர்வாகம் மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிறுமி பள்ளியின் 4வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று மாலை அனைவரும் வேனில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
- ஆரம்பகட்ட சிகிச்சைக்குப் பிறகு, அவர்கள் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் ஹலொடி பகுதியை சேர்ந்த 20 பேர் வேனில் பிகனீர் மாவட்டம் கோலயத் நகரில் உள்ள இந்து மத வழிபாட்டு தலத்திற்கு சென்றுள்ளனர்.
வழிபாட்டை முடித்துவிட்டு இன்று மாலை அனைவரும் வேனில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது பலோடா மாவட்டத்தில் உள்ள மடோடாவில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதியது.
இந்த கோர விபத்தில் வேனில் பயணித்த 18 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்து குறித்த அறிந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நொறுங்கிய வேனில் சிக்கிய காயமடைந்தவர்களை கிராம மக்களின் உதவியுடன் மீட்டனர். ஆரம்பகட்ட சிகிச்சைக்குப் பிறகு, அவர்கள் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதிவேகமாகச் சென்ற சுற்றுலாப் பேருந்தின் ஓட்டுநர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.






