என் மலர்
ராஜஸ்தான்
- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் எல்சிஎச் பிரசாந்த்.
- ராணுவ ஹெலிகாப்டரான பிரசாந்தில் ஜனாதிபதி முர்மு பயணம் செய்தார்.
ஜெய்ப்பூர்:
ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள விமானப் படைத்தளத்தில், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்தில் பயணம் மேற்கொண்டார். குரூப் கேப்டன் நயான் சாந்திலால் பஹுவா உடன் முர்மு ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார்.
ஜனாதிபதி முர்மு போர் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையைப் பெற்றார்.
இதையடுத்து, இந்தப் பயணம் குறித்து பார்வையாளர் புத்தகத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுதிய குறிப்பில், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்தில் பறந்து சென்றது சிறந்த அனுபவத்தை அளித்தது. இந்தப் பயணம் நாட்டின் பாதுகாப்புத் திறன் மீது ஒரு புதிய பெருமையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பயணத்தை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த இந்திய விமானப்படை மற்றும் ஜெய்சால்மர் விமானப் படைத்தளத்தின் குழுவுக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ரபேல் போர் விமானத்தில் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தனிப்பட்ட உதவி என்பதால் யாருக்கு வழங்க வேண்டும் என்பதைத் தானே தீர்மானிப்பேன்
- மதத்தின் அடிப்படையில் கொடுத்த உதவியை திரும்பப் பெறுவது மனிதாபிமானமற்ற செயல்
ராஜஸ்தானில் பிரதமர் மோடி பிப்.28 அன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் இச்சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ளுமாறு பொதுமக்களை அழைக்க ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் உள்ள கரேடா என்ற கிராமத்திற்கு சென்றுள்ளார் பாஜக முன்னாள் எம்.பி. சுக்பீர் சிங் ஜானபுரியா.
பிரதமர் மோடியின் வருகை குறித்து மக்களிடம் பரப்புரை செய்து கொண்டிருந்தபோது, அங்குவந்த பெண்களுக்கு போர்வைகள் வழங்கியுள்ளார். அப்போது ஒரு பெண்ணின் பெயரை கேட்டுள்ளார். அவர் தனது பெயரை சொன்னவுடன் அவர் முஸ்லீம் என தெரியவர அவருக்கு கொடுத்தப் போர்வையை திரும்பப் பெற்றுள்ளார். மேலும் அங்கிருந்த முஸ்லீம் பெண்களுக்கு கொடுத்த அனைத்துப் போர்வைகளும் திரும்ப பெறப்பட்டுள்ளது.
அதற்கு "பிரதமர் நரேந்திர மோடியைத் திட்டுபவர்களுக்கு போர்வை வாங்க உரிமையில்லை" என்றும் "நீங்கள் வருத்தப்பட்டாலும் எனக்குக் கவலையில்லை" என்றும் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ஒரு அரசுத் திட்டம் அல்ல என்றும், தனது சொந்தப் பணத்தில் செய்யப்படும் தனிப்பட்ட உதவி என்பதால் யாருக்கு வழங்க வேண்டும் என்பதைத் தானே தீர்மானிப்பேன் என்றும் கூறியுள்ளார். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
பல பெண்கள் மணிக்கணக்காக காத்திருந்தும் வெறுங்கையுடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஏழை மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு போர்வைகளை வழங்கிய பிறகு அவர்களின் பெயரைக் கேட்டு, பின்னர் அவர்களின் மதத்தின் அடிப்படையில் அவற்றை திரும்பப் பெறுவது மனிதாபிமானமற்ற செயல் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- ராகுல் காந்திக்கு விடுக்கப்பட்ட இந்த மிரட்டல் ஒரு திட்டமிடப்பட்ட சதியின் ஒரு பகுதி
- மத்திய உள்துறை அமைச்சருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையா?
ராகுல் காந்தி மற்றும் 25 காங்கிரஸ் எம்.பி.க்களை வீடு புகுந்து சுட்டுக் கொல்வேன் என்று வீடியோ வெளியிட்டு மிரட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்ணி சேனா என்ற வலதுசாரி அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ராஜ் சிங் என்ற அந்த நபர் ராஜஸ்தானின் கோட்டா நகரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
வீடியோவில் பேசிய ராஜ் சிங், " மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை அவதூறாகப் பேசியதால் காங்கிரஸ் எம்.பிக்கள் 25 பேர் மீதும் அவர்களுக்கு உத்தரவுகளை வழங்கிய ராகுல் காந்தி மீதும் பாஜக மற்றும் கர்ணி சேனா தொண்டர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மீண்டும் இது போன்ற சம்பவம் நடந்தால், உங்கள் வீட்டிற்குள் புகுந்து உங்களைச் சுட்டுக் கொல்வோம்" என்று மிரட்டியிருந்தார்.
இந்த மிரட்டலைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைக் கடுமையாகச் சாடியுள்ளது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, "பாஜக-ஆர்.எஸ்.எஸ் வலையமைப்பு என்பது ஒரு 'கோட்சே தொழிற்சாலை'. ராகுல் காந்திக்கு விடுக்கப்பட்ட இந்த மிரட்டல் ஒரு திட்டமிடப்பட்ட சதியின் ஒரு பகுதி" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேத் "நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பொதுவெளியில் கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது.
இது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையா?
ஒரு குண்டர் பகிரங்கமாகத் துப்பாக்கியால் சுடுவேன் என்று மிரட்டியும் அரசு ஏன் மௌனமாக இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- இளமைப் பருவத்தில் மகனைப் பெற்றெடுப்பவர் எப்போதும் பயனுள்ளவராக இருப்பார்.
- ஒரு மகள் பிறந்தாள். அதனால்தான் நீங்கள் இன்று எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கிறீர்கள்
ராஜஸ்தான் சட்டமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின் போது பாஜக எம்எல்ஏ பகதூர் சிங் கோலி, பாஜகவின் பட்ஜெட்டை ஆண்குழந்தை என்றும், காங்கிரஸின் பட்ஜெட்டை பெண்குழந்தை என்றும் ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவையில் பேசிய அவர்,
"எங்களது முதல் பட்ஜெட் வந்தது, ஒட்டுமொத்த ராஜஸ்தானும் அதனைப் பாராட்டியது. இரண்டாவது பட்ஜெட்டும் வரவேற்கப்பட்டது. மூன்றாவது பட்ஜெட்டும் வரவேற்கப்பட்டது.
எங்கள் அரசு முதல் பட்ஜெட்டில் ஒரு மகனைப் பெற்றெடுத்தது, இரண்டாவது பட்ஜெட்டில் ஒரு மகனைப் பெற்றெடுத்தது, மூன்றாவது பட்ஜெட்டிலும் ஒரு மகனைப் பெற்றெடுத்தது. இளமைப் பருவத்தில் மகனைப் பெற்றெடுப்பவர் எப்போதும் பயனுள்ளவராக இருப்பார்.
அசோக் கெலாட் முதலமைச்சராக இருந்தபோது, அவர் தனது கடைசி பட்ஜெட்டில் அறிவிப்புகளை வெளியிட்டார், அதனால்தான் அது ஒரு மகனைப் பெறவில்லை; ஒரு மகள் பிறந்தாள். அதனால்தான் நீங்கள் இன்று எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கிறீர்கள்," என்று கோலி கூறினார்.
பெண் குழந்தையை ஒரு தோல்வியாகவும் அல்லது பலவீனமாகவும் சித்தரிக்கும் இவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த பேச்சு பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பேசியுள்ள ராஜஸ்தான் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஸ்வர்ணிம் சதுர்வேதி,
"தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர், அதுவும் சட்டமன்றத்திலேயே இப்படிப் பேசுவதை கற்பனை செய்து பாருங்கள். இது அவர்களின் குறுகிய மனப்பான்மையையும், சிந்தனைப் போக்கையும் காட்டுகிறது. காங்கிரஸை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டார்கள். இது பாலினத்திற்கு எதிரான அவர்களின் பாரபட்சமான மனநிலையைக் காட்டுகிறது, இது ஒரு பாலியல் ரீதியான (sexist) கருத்தைத் தவிர வேறில்லை. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
- ரசாயனத் திரவத்தை அவர்கள் அருந்தியதாகக் கூறப்படுகிறது.
- குடித்த சிறிது நேரத்திலேயே 4 பேரின் உடல்நிலை மோசமடைந்தது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஆலோலி கிராமத்தில் திருமண விழா நடைபெற்றது. அந்த விழாவில் பாத்திரம் சுத்தம் செய்யும் ஒப்பந்த வேலையை ரத்தன், சுஷிலா தேவி, ஜம்னி தேவி மற்றும் பதாமி தேவி ஆகிய 4 பேரும் செய்தனர்.
வேலை முடிந்ததும் அங்கிருந்த பாத்திரம் கழுவும் திரவத்தை மது என நினைத்து, அவர்கள் தங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
நேற்று இரவு அந்த ரசாயனத் திரவத்தை அவர்கள் அருந்தியதாகக் கூறப்படுகிறது. குடித்த சிறிது நேரத்திலேயே 4 பேரின் உடல்நிலையும் மிக மோசமடைந்தது. இதில் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பதாமி தேவி என்ற பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இத்துயர சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில் ரசாயனத் திரவத்தை மது என நினைத்து குடித்ததே மரணத்திற்கு காரணம் என தெரிய வந்தது.
- அவர் விழித்துக்கொண்டு சத்தம் போடக்கூடும் என்று திருடர்கள் அஞ்சினர்.
- பெண் ஒருவர் கொல்லப்பட்டு அவரது கால்களை வெட்டி, வெள்ளி கால் கொலுசுகள் திருடப்பட்ட நிலையில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
ராஜஸ்தானில் 90 வயது மூதாட்டியைப் படுக்கையோடு தூக்கிச் சென்று மர்ம நபர்கள் வெள்ளி நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தில் உள்ள தனது வீட்டின் வராந்தாவில் கட்டிலில் 90 வயதான அந்த மூதாட்டி நேற்று உறங்கிக் கொண்டிருந்தார்.
கடந்த புதன்கிழமை நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள், மூதாட்டி அணிந்திருந்த கனமான வெள்ளி நகைகளைக் கழற்ற முயன்றனர்.
ஆனால், அவர் விழித்துக்கொண்டு சத்தம் போடக்கூடும் என்று அஞ்சிய திருடர்கள், அவரை அவர் படுத்திருந்த கட்டிலோடு அப்படியே தூக்கிக்கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு வயல்வெளிக்குச் சென்றனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சென்றதும், மூதாட்டி அணிந்திருந்த வெள்ளி மற்றும் பிற நகை நகைகளை திருடர்கள் பிடுங்கிச் சென்றனர்.
மறுநாள் காலையில், மூதாட்டி கைகள் கட்டப்பட்ட நிலையில் வயல்வெளியில் கட்டிலுடன் மிகுந்த அச்சத்தில் இருந்த மூதாட்டியை கண்ட கிராம மக்கள் அவரை மீட்டனர்.
இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து திருடர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
முன்னதாக ராஜஸ்தானின் சாவாய் மாதோபூர் நகரில் பெண் ஒருவர் கொல்லப்பட்டு அவரது கால்களை வெட்டி, வெள்ளி கால் கொலுசுகள் திருடப்பட்ட நிலையில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
- பாலஸ்தீனம் விடுதலை பெறவேண்டும் என்ற போஸ்டர்களை பிரிட்டிஷ் தம்பதி ஒட்டியுள்ளனர்.
- பிரிட்டிஷ் தம்பதியின் விசாவை ரத்து செய்தனர்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய பிரிட்டிஷ் தம்பதியை இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இங்கிலாந்தில் இருந்து லூயிஸ் கேப்ரியல் மற்றும் அவரது காதலி அனுஷி எம்மா கிறிஸ்டின் ஆகியோர் சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்துள்ளனர்.
ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் மாவட்டத்தில் பாலஸ்தீனம் விடுதலை பெறவேண்டும்,இஸ்ரேலை புறக்கணியுங்கள் (FREE PALESTINE, BOYCOTT ISRAEL) என்ற போஸ்டர்களை பிரிட்டிஷ் தம்பதி ஒட்டியுள்ளனர்.
இதனை கன்டுபிடித்த உளவுத்துறை, பிரிட்டிஷ் தம்பதியின் விசாவை ரத்து செய்து இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளனர்.
- தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் ஜாமீனைத் தானாகவே மறுக்க முடியாது.
- திருப்திப்படுத்துவது நீதிமன்றத்தின் வேலை அல்ல.
ராஜஸ்தானில் நடந்து வரும் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கலந்துகொண்டு கலந்துரையாடலில் பங்கேற்றார்.
டெல்லியில் சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறிய வழக்கில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையின்றிச் சிறையில் இருக்கும் உமர் காலித் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சந்திரசூட், அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள 'வாழும் உரிமை' என்பது விரைவான விசாரணையைப் பெறுவதையும் உள்ளடக்கியது.
நீண்ட கால விசாரணையின்றி ஒருவரைச் சிறையில் வைப்பது என்பது தண்டனைக்குச் சமமானது.
ஒரு வழக்கில் விசாரணை விரைவாக நடைபெற வாய்ப்பில்லை என்றால், ஜாமீன் வழங்குவதுதான் விதியாக இருக்க வேண்டும், ஜாமீனை மறுப்பது விதிவிலக்காக மட்டுமே இருக்க வேண்டும்.
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் ஜாமீனைத் தானாகவே மறுக்க முடியாது. அந்த வழக்கில் உண்மையில் தேசிய பாதுகாப்பு அடங்கியுள்ளதா என்பதையும், நீண்ட காலத் தடுப்புக்காவல் அவசியம்தானா என்பதையும் நீதிமன்றங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவர் மீண்டும் அதே குற்றத்தைச் செய்ய வாய்ப்பிருப்பது, நாட்டை விட்டுத் தப்பிச் செல்வது அல்லது ஆதாரங்களைச் சிதைப்பது ஆகிய மூன்று காரணங்கள் இருந்தால் மட்டுமே ஜாமீனை மறுக்கலாம். இவை இல்லை என்றால், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும்.
திருப்திப்படுத்துவது நீதிமன்றத்தின் வேலை அல்ல, அரசியலமைப்புச் சட்டத்தின் சமநிலையைப் பாதுகாப்பதே நீதிமன்றத்தின் கடமை.
UAPA போன்ற கடுமையான சட்டங்கள் ஜாமீன் பெறுவதைக் கட்டுப்படுத்தினாலும், அவை அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீற முடியாது" என்று தெரிவித்தார்.
உமர் காலித்
2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கலவர வழக்கில் JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உட்பட 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமின் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமின் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது.
இந்த மாத தொடக்கத்தில் அவர்களுக்கு மீண்டும் ஜாமீன் மறுத்த உயர்நீதிமன்றம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவருக்கு வழங்கப்படும் விசாரணைக்கு முந்தைய சிறை காலத்தை தண்டனையாக கருத முடியாது என தெரிவித்தது.
அதாவது, விசாரணையே இல்லாமல், குற்றம் நிரூபிக்கப்டாமல் கடந்த 5 ஆண்டுகளாக உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் சிறையில் வைக்கப்பட்டிருப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதே அதற்கு அர்த்தம்.
- கார் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
- மக்கள் காரை நெருங்குவதைக் கண்ட இளைஞர்கள், மாணவியை ஓடும் காரிலிருந்து வெளியே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
12 ஆம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டு ஓடும் காரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் ஜனவரி 6ஆம் தேதி காலை அந்த மாணவி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த இரு இளைஞர்கள் அவரை வழிமறித்து வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்து கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட மாணவியை ஓடும் காரிலேயே பல மணி நேரம் அவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கார் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் காரை வழிமறித்துச் சோதனையிட முயன்றனர்.
மக்கள் காரை நெருங்குவதைக் கண்ட இளைஞர்கள், மாணவியை ஓடும் காரிலிருந்து வெளியே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
கிராம மக்கள் அந்த மாணவியை மீட்டு அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தனர்.
குடும்பத்தினர் கடந்த 11 ஆம் தேதி பிகானேர் போலீசில் புகார் அளித்ததன் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய இரு இளைஞர்களைப் பிடிக்கத் தனிப்படைகளை அமைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மொழி மட்டுமே சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.
- மதத்தை நிலைநிறுத்தும். கலாச்சாரத்தை முன்னோக்கி எடுத்துக் செல்லும்.
நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் உலகில் உள்ள மகேஷ்வரி சமூகத்தினர் ஒன்று கூடிய மகேஷ்வரி உலக மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.
இந்த மாநாட்டில் அமித் ஷா பேசியதாவது:-
வீட்டில் நீங்கள் உங்களுடைய குழந்தைகளுடன் தாய்மொழியில் பேசினால், அவர்கள் தானாகவே அவர்களுடைய வரலாறு மற்றும் அவர்களுடைய மாநிலமான ராஜஸ்தானுடன் இணைக்கப்படுவார்கள். மொழி மட்டுமே சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும். மதத்தை நிலைநிறுத்தும். கலாச்சாரத்தை முன்னோக்கி எடுத்துக் செல்லும்.
மற்ற இடங்களில் தேவைப்படும்போது எந்த மொழியையும் பேசலாம். வெளிநாட்டு மொழிகளை கூட பேசிலாம். ஆனால், வீட்டில் குழந்தைகளுடன் தாய் மொழியில்தான் பேச வேண்டும்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடனை மீட்டு கைது செய்தனர்.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளன.
ராஜஸ்தானின் கோட்டாவைச் சேர்ந்த சுபாஷ் குமார் ராவத் என்ற நபர் தனது மனைவியுடன் கோவிலிக்கு சென்று வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் 'Exhaust' வழியாக ஒருவர் சிக்கி கொண்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து பயத்தில் கத்திய ராவத் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடனை மீட்டு கைது செய்தனர். தன்னுடைய கூட்டாளிகள் தன்னை தவிக்க விட்டு தப்பியோடியதாக கைதான திருடன் போலீசாரிடம் தெரிவித்தான்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு பட காட்சியை இபபடம் நியாபக படுத்துவதாக நெட்டிசன்கள் கிண்டல் அடித்தனர்.
- முதலில் ஆடிய மகாராஷ்டிரா அணி 50 ஓவரில் 366 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய மும்பை அணி 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஜெய்ப்பூர்:
விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில் மகாராஷ்டிரா, மும்பை அணிகள் மோதின.
முதலில் ஆடிய மகாராஷ்டிரா அணி 50 ஓவரில் 366 ரன்கள் குவித்தது. குல்கர்னி 114 ரன்னும், பிரித்வி ஷா 71 ரன்னும், ருதுராஜ் 66 ரன்னும் எடுத்தனர். அடுத்து ஆடிய மும்பை அணி 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 128 ரன்கள் வித்தியாசத்தில் மகாராஷ்டிர அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், விஜய் ஹசாரே தொடரில் வேகமாக 100 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் படைத்தார். அவரது இந்த சாதனையை பெருமைப்படுத்தும் வகையில் சி.எஸ்.கே. போஸ்டர் வெளியிட்டுள்ளது.






