என் மலர்
ராஜஸ்தான்
- கார் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
- மக்கள் காரை நெருங்குவதைக் கண்ட இளைஞர்கள், மாணவியை ஓடும் காரிலிருந்து வெளியே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
12 ஆம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டு ஓடும் காரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் ஜனவரி 6ஆம் தேதி காலை அந்த மாணவி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த இரு இளைஞர்கள் அவரை வழிமறித்து வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்து கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட மாணவியை ஓடும் காரிலேயே பல மணி நேரம் அவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கார் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் காரை வழிமறித்துச் சோதனையிட முயன்றனர்.
மக்கள் காரை நெருங்குவதைக் கண்ட இளைஞர்கள், மாணவியை ஓடும் காரிலிருந்து வெளியே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
கிராம மக்கள் அந்த மாணவியை மீட்டு அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தனர்.
குடும்பத்தினர் கடந்த 11 ஆம் தேதி பிகானேர் போலீசில் புகார் அளித்ததன் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய இரு இளைஞர்களைப் பிடிக்கத் தனிப்படைகளை அமைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மொழி மட்டுமே சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.
- மதத்தை நிலைநிறுத்தும். கலாச்சாரத்தை முன்னோக்கி எடுத்துக் செல்லும்.
நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் உலகில் உள்ள மகேஷ்வரி சமூகத்தினர் ஒன்று கூடிய மகேஷ்வரி உலக மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.
இந்த மாநாட்டில் அமித் ஷா பேசியதாவது:-
வீட்டில் நீங்கள் உங்களுடைய குழந்தைகளுடன் தாய்மொழியில் பேசினால், அவர்கள் தானாகவே அவர்களுடைய வரலாறு மற்றும் அவர்களுடைய மாநிலமான ராஜஸ்தானுடன் இணைக்கப்படுவார்கள். மொழி மட்டுமே சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும். மதத்தை நிலைநிறுத்தும். கலாச்சாரத்தை முன்னோக்கி எடுத்துக் செல்லும்.
மற்ற இடங்களில் தேவைப்படும்போது எந்த மொழியையும் பேசலாம். வெளிநாட்டு மொழிகளை கூட பேசிலாம். ஆனால், வீட்டில் குழந்தைகளுடன் தாய் மொழியில்தான் பேச வேண்டும்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடனை மீட்டு கைது செய்தனர்.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளன.
ராஜஸ்தானின் கோட்டாவைச் சேர்ந்த சுபாஷ் குமார் ராவத் என்ற நபர் தனது மனைவியுடன் கோவிலிக்கு சென்று வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் 'Exhaust' வழியாக ஒருவர் சிக்கி கொண்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து பயத்தில் கத்திய ராவத் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடனை மீட்டு கைது செய்தனர். தன்னுடைய கூட்டாளிகள் தன்னை தவிக்க விட்டு தப்பியோடியதாக கைதான திருடன் போலீசாரிடம் தெரிவித்தான்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு பட காட்சியை இபபடம் நியாபக படுத்துவதாக நெட்டிசன்கள் கிண்டல் அடித்தனர்.
- முதலில் ஆடிய மகாராஷ்டிரா அணி 50 ஓவரில் 366 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய மும்பை அணி 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஜெய்ப்பூர்:
விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில் மகாராஷ்டிரா, மும்பை அணிகள் மோதின.
முதலில் ஆடிய மகாராஷ்டிரா அணி 50 ஓவரில் 366 ரன்கள் குவித்தது. குல்கர்னி 114 ரன்னும், பிரித்வி ஷா 71 ரன்னும், ருதுராஜ் 66 ரன்னும் எடுத்தனர். அடுத்து ஆடிய மும்பை அணி 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 128 ரன்கள் வித்தியாசத்தில் மகாராஷ்டிர அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், விஜய் ஹசாரே தொடரில் வேகமாக 100 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் படைத்தார். அவரது இந்த சாதனையை பெருமைப்படுத்தும் வகையில் சி.எஸ்.கே. போஸ்டர் வெளியிட்டுள்ளது.
- பள்ளிகளில் வகுப்பு தொடங்கும் முன் செய்தித்தாள் வாசிக்க மாணவர்களுக்கு 10 நிமிடம் ஒதுக்கவேண்டும்.
- இந்தி மற்றும் ஆங்கில செய்தித்தாள்களை தினமும் வாங்கி வைக்க வேண்டும்.
ஜெய்ப்பூர்:
உத்தர பிரதேசத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை அனைத்திலும் செய்தித்தாள் வாசிப்பை கட்டாயமாக்கி அம்மாநில அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.
பள்ளிகளில் காலை வகுப்பு தொடங்கும் முன் செய்தித்தாள் வாசிப்பதற்காக மாணவர்களுக்கு 10 நிமிடங்கள் ஒதுக்கவேண்டும். அந்த 10 நிமிடங்களில் தேசிய, சர்வதேச மற்றும் விளையாட்டு செய்திகளில் இருந்து முக்கிய செய்திகளை ஒருவருக்கொருவர் வாசித்துக் காட்ட வேண்டும். இதற்காக இந்தி மற்றும் ஆங்கில செய்தித்தாள்களை தினமும் வாங்கி வைக்க வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் அம்மாநில அரசு உத்தரவிட்டது.
மாணவர்களின் பொது அறிவு, சொல்வளம், விமர்சன சிந்தனை, கவனத்திறனை மேம்படுத்தல், சமூக விழிப்புணர்வு ஆகியவற்றை உருவாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், உத்தா பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் தினமும் இனி 10 நிமிடங்கள் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு மாணவர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
- தனது வாகனத்தின் பேட்டரி மைலேஜ் தராதது குறித்து பலமுறை ஷோரூமில் புகார் அளித்துள்ளார்.
- அவர் ஆத்திரத்துடன் கத்துவதும், தீயை அணைக்க முயன்றவர்களிடம் வாக்குவாதம் செய்வதும் பதிவாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், தனது மின்சார ஆட்டோவின் மைலேஜ் மற்றும் பேட்டரி பிரச்சினையால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் ஒருவர் ஷோரூம் வாசலிலேயே அதற்கு தீ வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
மோகன் என்ற அந்த முன்சார ஆட்டோ ஓட்டுநர், தனது வாகனத்தின் பேட்டரி, மைலேஜ் தராதது குறித்து பலமுறை ஷோரூமில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், பலமுறை அலைந்தும் தீர்வு கிடைக்காததால் விரக்தியடைந்த அவர் கடந்த திங்கள்கிழமை, ஜோத்ப்பூரில் உள்ள ஷோரூம் முன் தனது வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
அங்கிருந்தவர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
- சிறுமியின் மூக்கைப் பரிசோதித்த மருத்துவர்கள் உள்ளே ஒரு அட்டை பூச்சி இருப்பதைக் கண்டறிந்தனர்.
ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி 2 மாதங்களுக்கு முன்பு ஆடு மேய்க்க காட்டிற்குச் சென்றாள். அங்கு, தாகம் எடுத்ததால் கால்வாயில் இருந்து தண்ணீர் குடித்தாள்.
அந்த நேரத்தில், அது எப்படியோ ஒரு சிறிய அட்டைப்பூச்சி தண்ணீரில் இருந்து அவள் மூக்கில் நுழைந்துள்ளது. அது அங்கேயே தங்கி ரத்தத்தை உறிஞ்சி தொடர்ந்து வாழ்ந்தது.
2 மாதங்கள் கடந்துவிட்டன. சிறிய அட்டைப்பூச்சி மிகவும் பெரியதாக மாறியது. இதன் காரணமாக, சிறுமிக்கு சுவாசிக்க கடினமாகிவிட்டது. அவளுடைய மூக்கும் வலிக்க ஆரம்பித்தது.
ரத்தமும் வழிந்து கொண்டிருந்தது. பிரச்சினை நாளுக்கு நாள் மோசமாகி வந்ததால், பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியின் மூக்கைப் பரிசோதித்த மருத்துவர்கள் உள்ளே ஒரு அட்டை பூச்சி இருப்பதைக் கண்டறிந்தனர். அவர்கள் மிகவும் சிரமப்பட்டு அதை வெளியே எடுத்தனர். 3 அங்குல நீளம் கொண்டதாக இருந்தது.
அதைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தற்போது, இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
- பெண் மேலாளருக்கு காரில் லிப்ட் தருவதாக அந்த நிறுவனத்தின் பெண் உயர் அதிகாரி கூறினார்.
- தன்னை காரில் அழைத்து சென்றபோது வழியில் சிகரெட் போன்ற ஒரு பொருளை வாங்கி எனக்கு கொடுத்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தனியார் ஐ.டி. நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஜிதேஷ் சிசோடியா தனது பிறந்தநாளையொட்டி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இதில் அந்த நிறுவனத்தின் பெண் மேலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மதுபானம் பரிமாறப்பட்டதாக தெரிகிறது.
இந்த விருந்து நிகழ்ச்சி நள்ளிரவு வரை நடந்தது. அப்போது பெண் மேலாளருக்கு காரில் லிப்ட் தருவதாக அந்த நிறுவனத்தின் பெண் உயர் அதிகாரி கூறினார். இதையடுத்து காரில் பெண் மேலாளர் ஏறினார். காரில் தலைமை செயல் அதிகாரி ஜிதேஷ் சிசோடியா மற்றும் பெண் உயர் அதிகாரியின் கணவர் சரோஹி ஆகியோரும் இருந்தனர்.
அப்போது மயக்க நிலையில் இருந்த பெண் மேலாளரை ஜிதேஷ் சிசோடியா, சரோஹி ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவரை வீட்டில் இறங்கிவிட்டுள்ளனர். மறுநாள் மயக்கம் தெளிந்த பின், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உணர்ந்த பெண் மேலாளர், போலீசில் புகார் செய்தார்.
அதில் தன்னை காரில் அழைத்து சென்றபோது வழியில் சிகரெட் போன்ற ஒரு பொருளை வாங்கி எனக்கு கொடுத்தனர். அதை உட்கொண்ட பிறகு நான் மயக்கமடைந்தேன். பின்னர் என்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று தெரிவித்து உள்ளார். இதையடுத்து ஜிதேஷ் சிசோடியா, சரோஹி மற்றும் உடந்தையாக இருந்த பெண் உயர் அதிகாரி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- பிறந்த நாள் விழா பார்ட்டில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது சம்பவம் நடைபெற்றுள்ளது.
- மயக்க பொருள் கொடுத்து உயர் அதிகாரிகள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் தனியார் ஐ.டி. நிறுவன பெண் மானேஜரை, சக நிறுவன சிஇஓ மற்றும் பெண் அதிகாரியின் கணவர் ஓடும் காரில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் மானேஜராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை பிறந்த நாள் விழா பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
இதே விழாவில் அந்த நிறுவனத்தின் சிஇஓ, பெண் நிர்வாகத் தலைவர் மற்றும் அவரது கணவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பார்ட்டி முடிந்து ஒவ்வொருவராக அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். பெண் மானேஜர் மட்டும் தனியாக இருந்துள்ளார். சிஇஓ, பெண் நிர்வாகத் தலைவர் ஆகியோர் அந்த பெண்ணை தங்கள் காரில் ஏறச் சொல்லியுள்ளனர். அவரும் தன் நிறுவத்தின் உயர் அதிகாரிகள்தானே, என நினைத்து காரில் ஏறியுள்ளார்.
கார் கொஞ்சம் தூரம் சென்ற பின், ஒரு கடை அருகே நின்றுள்ளது. ஒருவர் காரில் இருந்து இறங்கி சிகரெட் போன்ற ஒன்றை வாங்கி வந்துள்ளார். அதை பயன்படுத்துமாறு பெண் மானேஜரிடம் கொடுத்துள்ளனர். அவரும் பயன்படுத்தியுள்ளனர். உடனே மயக்க நிலைக்கு சென்றுள்ளார். அப்போது காரில் இருந்த சிஇஓ, பெண் நிர்வாகத் தலைவரின் கணவர் ஆகியோர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
காலையில் மயக்கம் தெளிந்த பின்னர்தான், தனக்கு நடந்த கொடூரத்தை உணர்ந்துள்ளார் பெண் மானேஜர். உடனடியாக காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.
போலீசார் புகார் அடிப்படையில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண் மானேஜரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அறிக்கை கிடைத்த பின் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
- ராஜஸ்தான், மேற்கு வங்கம், கோவா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளிலும் வரைவு பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
- மேற்குவங்க வரைவு வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நீக்கியுள்ளது.
பீகாரை தொடர்ந்து 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த நவம்பர் 4 முதல் டிசம்பர் 11 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், கோவா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளிலும் வரைவு பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
இதில் ராஜஸ்தானில் வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 42 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி நவீன் மஹாஜன் கூறுகையில், " ராஜஸ்தானில் 5.46 கோடி வாக்காளர்களில் 41.79 லட்சம் வாக்காளர்களிடமிருந்து படிவங்கள் பெறப்படவில்லை. இதனையடுத்து, அந்தப் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளன.
அவர்களில், 8.75 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள், 29.6 லட்சம் பேர் இடம்பெயர்ந்தவர்கள், 3.44 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர்களைப் பதிவு செய்தவர்கள்" என்று தெரிவித்தார்.
அதேவேளை நேற்று வெளியிடப்பட்ட மேற்குவங்க வரைவு வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நீக்கியுள்ளது.
அதில், 24.17 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டனர் என்றும் 19.88 லட்சம் வாக்காளர்கள் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து விட்டனர் என்றும் 12.20 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போகியுள்ளனர் என்றும் 1.38 லட்சம் பேர் போலி வாக்காளர்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- சிலிண்டரில் ஆக்ஸிஜன் தீர்ந்த பிறகு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அவர்களை வேறொரு மருத்துவமனையில் கைவிட்டுச் சென்றார்.
- இந்தச் சம்பவம் குறித்து இதுவரை யாரும் எந்த புகாரும் அளிக்கவில்லை.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று ஆம்புலன்சிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை பஸ்ஸி பகுதி அருகே மூச்சு விடுவதில் சிரமப்பட்ட குழந்தையை, பரத்பூர் மாவட்டத்தின் பயானா மருத்துவமனையில் இருந்து எஸ்.எம்.எஸ். மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டதையடுத்து, குழந்தையை அதன் தந்தையும் மாமாவும் ஒரு தனியார் ஆம்புலன்ஸில் ஜெய்ப்பூருக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
பான்ஸ்கோ என்ற இடத்திற்கு அருகில் வந்தபோது, ஆக்ஸிஜன் சிலிண்டரில் உள்ள வாயு தீர்ந்துவிட்டதை குழந்தையின் தந்தை கவனித்துள்ளார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அவர்களை அருகில் உள்ள பஸ்ஸி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பஸ்ஸி மருத்துவமனையில் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
சிலிண்டரில் ஆக்ஸிஜன் தீர்ந்த பிறகு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தங்களை பஸ்ஸி அரசு மருத்துவமனையில் கைவிட்டுச் சென்றுவிட்டதாக குழந்தையின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
ஆம்புலன்ஸில் எந்த ஒரு செவிலியரும் இல்லை. ஆக்ஸிஜன் சிலிண்டரை குழந்தையின் தந்தைதான் இயக்கிக்கொண்டிருந்தார். சிலிண்டரில் ஆக்ஸிஜன் தீர்ந்ததாலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று பஸ்ஸி காவல் ஆய்வாளர் தர்மேந்திர குமார் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து இதுவரை யாரும் எந்த புகாரும் அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
- பட்டியல் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
- கடந்த சில நாள்களாக கடும் பணிச்சுமையால் மன அழுத்தத்தில் இருந்தார்.
ராஜஸ்தானின் பாரா பகுதியில் அரசு ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் 42 வயதான அனுஜ் கார்க். அவர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக தோல்பூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அந்த வகையில் நேற்று இரவு 1 மணியளவில் வீட்டில் வைத்து வாக்காளர் பட்டியல் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த சில நாள்களாக கடும் பணிச்சுமைக்கு அவர் ஆளாகியிருந்ததாகவும், அதில் ஏற்பட்ட மனஅழுத்தத்தால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகம், மேற்கு வங்கம், உட்பட 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மரணங்கள் தொடர்ந்து வருகின்றன.






