என் மலர்
ராஜஸ்தான்
- குழந்தைக்கு 26 விரல்கள் இருப்பது அரிதானது.
- குழந்தையின் ஒவ்வொரு கையிலும் 7 விரல்கள் மற்றும் ஒவ்வொரு காலிலும் 6 விரல்கள் என மொத்தம் 26 விரல்கள் இருந்தது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியை சேர்ந்தவர் கோபால் பட்டாச்சாரியா.
இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையில் தலைமை காவலராக உள்ளார். இவரது மனைவி சர்ஜூ தேவி (வயது 25) 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரை அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தையின் ஒவ்வொரு கையிலும் 7 விரல்கள் மற்றும் ஒவ்வொரு காலிலும் 6 விரல்கள் என மொத்தம் 26 விரல்கள் இருந்தது.
இதனால் அந்த குழந்தை தேவியின் அவதாரமாக கருதி அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தைக்கு 26 விரல்கள் இருப்பது அரிதானது.
இதுகுறித்து அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் சோனி கூறுகையில், குழந்தைக்கு 26 விரல்கள் இருப்பது எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் இது ஒரு மரபணு கோளாறு ஆகும். அதே நேரம் குழந்தையின் தாயாரும் நல் ஆரோக்கியமாக இருக்கிறார் என்றார்.
குழந்தையின் தாயாரான சர்ஜூ தேவியின் சகோதரர் கூறுகையில், என் சகோதரிக்கு 26 விரல்கள் கொண்ட குழந்தை பிறந்துள்ளது. அதை தோளகர் தேவியின் அவதாரமாக கருதுகிறோம். இதனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.
- வீதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- இளம்பெண்ணை முத்தமிட்டு கொண்டு வாகனம் ஓட்டிய காட்சிகள் பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நாட்டின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு போக்குவரத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் வீதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தானில் ஜெய்பூரில் ஒரு இளம்ஜோடி ஓடும் பைக்கில் முத்தமழை பொழிந்த சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. அதில் ஒரு வாலிபர் பைக் ஓட்டுகிறார். அவர் சாலையை பார்க்காமல் தனக்கு பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண்ணை முத்தமிட்டு கொண்டு வாகனம் ஓட்டிய காட்சிகள் பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அந்த ஜோடி ஹெல்மெட்டும் அணிந்திருக்கவில்லை. இந்த வீடியோ வைரலானதை அடுத்து போக்குவரத்து போலீசார் அந்த பைக்கின் எண் மூலம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாலத்தில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது கனரக வாகனம் மோதல்
- 11 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்ற வாகன விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் மதுராவில் இருந்து உத்தர பிரதேசம் மாநிலத்திற்கு ஏராளமானோர் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்து ராஜஸ்தான் மாநிலம் பாரத்புர் மாவட்டத்தில் உள்ள லகான்புர் பகுதியில உள்ள அந்த்ரா பாலத்தில் நின்று கொண்டிருந்தது.
அப்போது கனரக வாகனம் (டிரெய்லர்) பேருந்தின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. இதில் ஆறு பெண்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்தனர். 15 பேர் காயத்துடன் உயிர் தப்பினர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் குஜராத் மாநிலம் பவ் நகரின் திஹோரில் இருந்து வந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
#WATCH | Bihar | Around 50 school children complained of stomach ache and vomiting allegedly after consuming mid-day meal at a primary school in Dumra Block of Sitamarhi district on 12th September. The children were referred to Sadar Hospital. Doctor says that all the children… pic.twitter.com/woCXGS9LP4
— ANI (@ANI) September 13, 2023
- பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் இரு பகுதிகளாக உள்ளது
- கார்கில் பாதையை திறந்து விடுங்கள் என கோஷமிட்டனர்
இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த பதவி வகித்தவர், நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஜெனரல். விஜய் குமார் சிங் (72).
ஜெனரல். வி.கே. சிங், தனது பதவிக்காலம் முடிந்த பிறகு, ஆளும் பா.ஜ.க. அரசால் அமைச்சராக பதவியில் அமர்த்தப்பட்டவர். இவர் தற்போது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. சார்பாக நடந்து வரும் பரிவர்த்தன் சங்கல்ப யாத்திரையில் கலந்து கொண்டு பல மத்திய அமைச்சர்களும் உரையாற்றி வருகின்றனர். இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக அம்மாநில டவுஸா மாவட்டத்தின் தலைநகர் டவுஸாவில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜெனரல். வி.கே. சிங் கலந்து கொண்டார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையேயான உறவு குறித்து கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
1947 முதல் பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் (PoK) பகுதியில் மொத்தம் சுமார் 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட இப்பிராந்தியத்தில் 97 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். இது, ஆஸாத் காஷ்மீர் மற்றும் கில்கிட்-பல்டிஸ்தான் என இரு பகுதிகளாக உள்ளது. சில நாட்களுக்கு முன் கில்கிட்-பல்டிஸ்தான் பகுதியில் ஸ்கர்டு (Skardu) டவுனில் பாகிஸ்தானின் புது சட்டங்களுக்கெதிராக ஒரு பேரணி நடைபெற்றது. அது பாகிஸ்தான் அரசுக்கெதிரான பேரணியாக மாறி, இந்தியாவின் கார்கில் பகுதிக்கு செல்லும் பாதை திறந்து விடப்பட வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட ஷியா பிரிவினர் கோஷமிட்டனர்.
"பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் (PoK) பகுதி, தானாக இந்தியாவுடன் இணைந்து விடும். சிறிது காலம் காத்திருங்கள்" என இச்சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வி.கே.சிங் தெரிவித்தார்.
இவரது கருத்தை மகாராஷ்டிர மாநிலத்தின் சிவ சேனா (உத்தவ் பிரிவு) கட்சியின் சஞ்சய் ராவத் வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சனாதனம் ஒழிக்கப்பட வேண்டியது என்றார் உதயநிதி
- கஜேந்திர சிங் ஷெகாவத் மத்திய கேபினெட் அமைச்சராக உள்ளார்
சில தினங்களுக்கு முன், தமிழக அமைச்சரவையின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, ஒரு விழாவில் பேசும் போது, "சனாதனம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல, ஒழிக்கப்பட வேண்டியது" என கருத்து தெரிவித்தார். இக்கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் இந்தியாவெங்கும் பலர் கருத்துக்கள் கூறி வருகின்றனர்.
உதயநிதியின் கருத்து பெரும் சர்ச்சையை நாடு முழுவதும் உண்டாக்கியிருக்கிறது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர், கஜேந்திர சிங் ஷெகாவத் (55). மத்திய 'ஜல் சக்தி' மந்திரியாக இருக்கும் இவர், கேபினெட் அமைச்சராக பதவி வகிப்பவர்.
நேற்று ஷெகாவத், பா.ஜ.க. சார்பாக ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் நடைபெற்ற பரிவர்த்தன் யாத்திரையில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அதில் அவர் கூறியதாவது:-
உயிரை தியாகம் செய்து நமது முன்னோர்கள் கட்டி காத்து வந்த சனாதன தர்மத்தை சிலர் அழிக்க நினைக்கின்றனர். அவர்களை இனியும் சகித்து கொள்ள முடியாது. சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் இவ்வாறு பேசினால் உங்கள் நாக்கை பிடுங்கி விடுவோம். எங்களை கீழ்த்தரமாக, அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும். சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது.
இவ்வாறு கஜேந்திர சிங் தெரிவித்தார்.
உதயநிதியின் சனாதனம் தர்மம் குறித்த கருத்து விவகாரம் தற்போது சற்று ஓய்ந்த நிலையில், பா.ஜ.க.வின் கேபினெட் அந்தஸ்திலுள்ள அமைச்சர் இவ்வாறு கடுமையாக கருத்தை தெரிவித்துள்ளார்.
- தேர்தல் வாக்குகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
- அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தான் மோடி ஆட்சி செய்வார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பரிவர்தன் யாத்திரையில் மத்திய மந்திரி அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி, அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, மீண்டும் அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயற்சித்து வருகிறது.
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தின் துங்கர்பூரில் நடைபெற்ற யாத்திரை துவக்க விழாவில் பேசிய மத்திய மந்திரி அமித் ஷா, தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
"தி.முக. தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் மகன் உள்ளிட்டோர் சனாதன தர்மம் அகற்றப்பட வேண்டும் என்று கூறி வருகின்றார்கள். அவர்கள் வாக்கிற்காக சனாதன தர்மம் குறித்து பேசி வருகிறார்கள். அவர்கள் சனாதன தர்மத்தை கலங்கப்படுத்தி உள்ளனர்."
"இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியில் கெட்டவர்கள் இணைந்துள்ளனர். அவர்கள் தேர்தல் வாக்குகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அவர்கள் சனாதன தர்மம் குறித்து எவ்வளவு அதிகமாக பேசினாலும், அவை குறைந்த அளவு தாக்கத்தைக் கூட ஏற்படுத்தாது."
"மோடி மீண்டும் வெற்றி பெற்றால் சனாதனம் ஆட்சிக்கு வந்துவிடும் என்று அவர்கள் கூறுகின்றார்கள். சனாதனம் மக்களின் மனங்களில் ஆட்சி செய்கிறது. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தான் மோடி ஆட்சி செய்வார்," என்று அமித் ஷா தெரிவித்து உள்ளார்.
முன்னதாக பேசிய அமைச்சர் உதியநிதி ஸ்டாலின், " சனாதன தர்மம் ஒற்றுமை மற்றும் சமூக நீதிக்கு எதிரானது. சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும்," என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
- நிர்வாண ஊர்வலத்தை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
- வீடியோக்களை யாரும் சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரதாப்கர்:
ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் கானா மீனா. இவருக்கும் பழங்குடியின பெண்ணுக்கும் இடையே கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த கணவர் மனைவியை கண்டித்தார். ஆனால் அதை அவர் கேட்கவில்லை. தொடர்ந்து அந்த வாலிபருடன் பழகி வந்தார். இதனால் கானா மீனா ஆத்திரம் அடைந்தார்.
சம்பவத்தன்று அவர் மனைவியை அடித்து உதைத்தார். பின்னர் வீட்டுக்கு வெளியே மனைவியை இழுத்து வந்து அவரது ஆடையை களைந்தார். அந்த பெண் எவ்வளவோ கெஞ்சியும் அவர் விடவில்லை. வலுக்கட்டாயமாக மனைவியை நிர்வாணமாக்கினார். உறவினர்களும் இதற்கு உடந்தையாக இருந்தனர். நிர்வாணமாக்கப்பட்ட பெண்ணை அவர்கள் கிராமத்துக்குள் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
அந்த பெண் யாராவது காப்பாற்றுங்கள் என கதறினார். ஆனாலும் இதனை வேடிக்கை பார்த்தார்களே ஒழிய அவருக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை.
இந்த நிர்வாண ஊர்வலத்தை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது பற்றி அறிந்ததும் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இச்சம்பவத்தில் கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் 7 பேரை தேடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்களை யாரும் சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஒரு நாகரீக சமூகத்தில் இது போன்ற குற்றங்களுக்கு இடம் கிடையாது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- மாலை 3.15 மணிக்கு பயிற்சி மையத்தில் ஒரு தேர்வை எழுதிய பிறகு அவர் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.
- 2 மாணவர்கள் தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை.
கோட்டா:
மகாராஷ்டிர மாநிலம் லட்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அவீஷ்கர் சாம்பாஜி கஸ்லே. இவர் கடந்த 3 ஆண்டுகளாக நீட் இளநிலை மருத்துவ நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.
இவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் தங்கி நீட் பயிற்சி பெற்று வந்தார். தனது தாய்வழி தாத்தா, பாட்டியுடன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் அவீஷ்கர் பயிற்சி மையத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாலை 3.15 மணிக்கு பயிற்சி மையத்தில் ஒரு தேர்வை எழுதிய பிறகு அவர் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். பயிற்சி மைய ஊழியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மாணவரின் உயிர் பிரிந்தது.
அவீஷ்கர் தற்கொலை செய்து கொண்ட 4 மணி நேரத்தில் மற்றொரு நீட் பயிற்சி மாணவரான ஆதர்ஷ் ராஜ் என்பவரும் தற்கொலை செய்து கொண்டார்.
பீகாரை சேர்ந்த அவர் வாடகை வீட்டில் வசித்து வந்தார். வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரும் பயிற்சி மையத்தில் நேற்று மதியம் தேர்வு எழுதிவிட்டு திரும்பினார். இரவு 7 மணியளவில் தற்கொலை செய்து கொண்டார். இவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டும் செல்லும் வழியிலேயே இறந்தார்.
2 மாணவர்கள் தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை.
கோட்டாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். கோட்டா நகரில் உள்ள பல்வேறு பயிற்சி மையங்களும் 3 லட்சம் மாணவர்கள் நீட், ஐ.ஐ.டி. மற்றும் ஜே.இ.இ. உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகிறார்கள்.
- விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- பயிற்சி மையங்கள் காசு பார்க்கும் இயந்திரமாக இருக்கக்கூடாது என்று மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சஹிதா கான் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரில் ஏராளமான பயிற்சி மையங்கள் உள்ளன. இங்கு, தேசிய அளவிலான தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதிகள், பேயிங் கெஸ்டுகளில் தங்கி ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
அதேசமயம், விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, கடந்த ஆண்டு மட்டும் 15 மாணவர்கள் தூக்குப்போட்டு உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் இரண்டு மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துக் கொண்டனர். இந்த சம்பவம் மேலும் பரபரபப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கோட்டாவில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலை சம்பவம் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். மேலும், மாணவர்களின் பெற்றோர் மற்றும் பயிற்சி மையங்களையும் அவர் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், " மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க குழு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த குழு 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும் கூறப்பட்டுள்ளது. ஐஐடி, நீட் தேர்வுகளுக்கு தயாராவதற்காக ஏற்கனவே பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் 9ம் மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை பயிற்சி மையங்களை சேர்த்துவிட்டு மிகுந்த சுமையை ஏற்படுத்துகின்றனர். இது முழுக்க முழுக்க பெற்றோர் செய்யும் தவறு.
இளம் பருவத்தினர் தற்கொலை செய்துக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு உயிரிழப்பும் பெற்றோர்களுக்கு பெரிய இழப்புதான்" என்றார்.
மேலும், பயிற்சி மையங்கள் காசு பார்க்கும் இயந்திரமாக இருக்கக்கூடாது என்று மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சஹிதா கான் தெரிவித்துள்ளார்.
- போலீசார் காருக்குள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
- போலீசார் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆல்வார்:
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் ராம்புரா கிராமத்தில் 3 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் அவர்கள் சென்ற காரை வழிமறித்தது.
பின்னர் அந்த கும்பல் காரில் பயணம் செய்த 3 பேரையும் உருட்டுகட்டையால் சரமாரியாக தாக்கியது. இந்த கொடூர தாக்குதலில் சிக்கிய 3 பேரும் வலியால் அலறி துடித்தனர். இருந்த போதிலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள். இது பற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து சென்றனர்.சம்பவம் நடந்த இடம் வனப்பகுதி என்பதால் வனத்துறை அதிகாரிகளும் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
உடனே போலீசார் காருக்குள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு வாசிம் என்பவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். மற்ற 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதற்காக அவர்கள் தாக்கப்பட்டார்கள் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.