என் மலர்
நீங்கள் தேடியது "alcohol"
- ஈஸ்ட்ராஜ் வீட்டு அருகில் புதுவையில் இருந்து சாராய பாக்கெட்டுகளை வாங்கிவந்து விற்பனை செய்தது தெரியவந்தது.
- ஈஸ்ட் ராஜாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தார்.
கடலூர்:
பண்ருட்டி கீழ்கவரப்பட்டு மாதா கோவில் தெருவை சேர்ந்த ஈஸ்ட்ராஜ் (வயது 46) என்பவர் தனது வீட்டு அருகில் புதுவையில் இருந்து சாராய பாக்கெட்டுகளை வாங்கிவந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை பண்ருட்டி எஸ்.டி.ஓ.க்ரைம் டீமை சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீ சார் ஈஸ்ட்ராஜை பிடித்து பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து ஈஸ்ட் ராஜாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தார்.
- வாசனைத் திரவியம் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு.
- வாசனை எண்ணெய்கள் இயற்கையான வாசனையை வழங்குகின்றன.
இன்றைய காலகட்டத்தில் வாசனைத் திரவியம் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு. தண்ணீர். எண்ணெய் மற்றும் ஆல்கஹால் என அதில் கலக்கப்படும் மூலப்பொருட்களின் அடிப்படையில் வாசனை திரவியங்களை வகைப்படுத்தலாம்.
இந்த கலவைகளின் செறிவைப் பொறுத்து நறுமணம் உடலில் நீடிக்கும் நேரத்தைக் கணக்கிடலாம். ஒவ்வொரு வாசனை திரவிய வகைகளும், அதில் சேர்க்கப்படுகின்ற 'எசன்ஷியல் ஆயில்' என்று சொல்லப்படும் எண்ணெய்யின் செறிவைப் பொறுத்து மாறுபடும். அதைப்பற்றிய தகவல்கள் இங்கே...
பெர்ஃபியூம்:
இந்த நறுமணக் கலவையில் 20 முதல் 30 சதவீதம் வரை, அத்தியாவசிய எண்ணெய்கள் அல்லது வாசனைச்சாறு கலந்திருக்கும். இது அதிக செறிவு கொண்டது. எண்ணெய்களின் அதிக செறிவு காரணமாக மற்ற எல்லா வகைகளை காட்டிலும் இது விலை உயர்ந்தது. இதன் நறுமணம் 24 மணி நேரம் வரை நீடிக்கும். பெர்பியூமில் குறைந்த அளவு ஆல்கஹால் இருப்பதால் உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தலாம்.
ஈவ் டி பொபியூம்:
15 முதல் 20 சதவீதம் வரை அத்தியாவசிய எண்ணெய்கள் அல்லது வாசனை சாறு கலந்திருக்கும் நறுமணக் கலவை இதுவாகும். இந்த கலவையில் சற்றே அதிக ஆல்கஹால் மற்றும் நீர் கலந்திருக்கும். இது 6 முதல் 8 மணி நேரம் வரை நீடிக்கும். ஆல்கஹால் கலப்பு சற்று அதிகமாக இருந்தாலும், உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு ஏற்ற நறுமணக்கலவை இதுவாகும்.
ஈவ் டி டாய்லெட்:
இந்த வாசனை திரவிய வகையானது 5 முதல் 20 சதவீதம் வரை அத்தியாவசிய எண்ணெய் அல்லது நறுமணச்சாறு கொண்டது. இதன் வாசம் 2 முதல் 4 மணி நேரம் வரை நீடிக்கும். இது உடலையும், கூந்தலையும் நறுமணப்படுத்த பயன்படுகிறது.
ஈவ் டி கொலோன்:
ஆண்களுக்கான வாசனை திரவியமாக கருதப்படும் இதில், 2 முதல் 4 சதவீதம் வரை அத்தியாவசிய எண்ணெய்கள் அல்லது வாசனைச்சாறு நிறைந்திருக்கும். இது 2 மணி நேரம் வரை நீடிக்கும். விலையும் மலிவானது.
ஈவ் பிரைஸ்:
இந்த வகை வாசனை திரவியமானது. 1 முதல் 3 சதவீதம் வரை அத்தியாவசிய எண்ணெய் அல்லது வாசனைச் சாறு கொண்டது. தண்ணீர்தான் இதன் முக்கிய மூலப்பொருள். இது ஒரு மணி நேரம் வரை நீடிக்கும். இதில் குறைந்த அளவு ஆல்கஹால் கலக்கப்படும்.
வாசனை எண்ணெய்கள்:
உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை போக்க உதவுபவையே வாசனை எண்ணெய்கள், ஆல்கஹால் அடிப்படையிலான வாசனை திரவியங்களை விட இவை அதிக சக்தி வாய்ந்த, இயற்கையான வாசனையை வழங்குகின்றன.
- புதுச்சேரியில் இருந்து வந்த 2 சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர் .
- மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
வானூர்:
புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு காரில் அதிக அளவு மது பாட்டில் கடத்தி வருவதாக மத்திய புலனாய்வு நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சின்னகா மணன், சப்-இன்ஸ்பெக்டர் இனயத் பாஷா தலைமையில் கோட்டக்குப்பம் மது விலக்கு சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து வந்த 2 சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர் .
அதில் உயர் ரக புதுச்சேரி மதுபாட்டில்கள் 650 இருந்தது தெரியவந்தது. மேலும் காரில்வந்தவர்களிடம் விசாரணை செய்ததில் புதுச்சேரியில் இருந்து சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து மது பாட்டில்களை கடத்திய கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் சார்லஸ் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த 650 உயர்ரக மது பாட்டில்களையும் சொகுசு காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். கைதான செல்வராஜ் மீது விழுப்புரம் மாவட்டத்தில் போலி மது பாட்டில்கள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- போலீசார் கோ. பவழங்குடி, சந்தனகுப்பம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- வீட்டில் மறைத்து வைத்து மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் கோ. பவழங்குடி, சந்தனகுப்பம் பகுதி யில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியை சேர்ந்த செல்வராசு மனைவி பன்னீர்செல்வி (வயது 55) என்பவர், தனது வீட்டில் மறைத்து வைத்து மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட போலீசார் பன்னீர்செல்வியை கைது செய்து, அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மருதங்காவெளி கால்நடை ஆஸ்பத்திரி அருகே சிலர் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பநாதன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி (வயது 45) என்பவர் அரசு மதுபானங்களை வாங்கி வந்து அனுமதியின்றி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பக்கிரிசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உடையாளூர் தபால் அலுவலகத்தில் தபால் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
- கடந்த 31-ந் தேதி வினோத், வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்தார்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கோவிந்தகுடி கம்மாள தெருவை சேர்ந்தவர் மணி.
இவரது வினோத் (வயது 33).
இவர், உடையாளூர் தபால் அலுவலகத்தில் தபால் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
அவர் பணிபுரிந்த காலத்தில் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தபால் அலுவலக மேலதிகாரிகள் அஞ்சலக கணக்கு மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
அதில் முறைகேடு நடந்தது தெரியவந்தது.
கடந்த 31-ந் தேதி வினோத், வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்தார்.
இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் மணி புகார் கொடுத்தார்.
அதில், எனது மகன் வினோத், அஞ்சலக கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ேமலும் அதிகாரிகள் மூன்று தவணைகளாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை வாங்கி சென்று விட்டனர்.
மேலும் அவர்கள் எனது வீட்டில் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் எடுத்து சென்றுவிட்டனர்.
இது தவிர எனது மகன் உடையாளூரை சேர்ந்த 2 பேரிடம் ரூ.14 லட்சம் வட்டிக்கு வாங்கியுள்ளதாக அவர்களும் வட்டியுடன் பணத்தை தருமாறு கேட்டு மிரட்டுவதாக எனது குடும்பத்தினரிடம் வினோத் தெரிவித்துள்ளார்.
தபால் அதிகாரிகள் எனது மகனை அழைத்து சென்று பணம் கேட்டு மிரட்டி அடித்து துன்புறுத்தி உள்ளனர்.
இதனால் மனமுடைந்த அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்து வி்ட்டார்.
எனவே எனது மகனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் விரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் விரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதே ஊரை சேர்ந்த ஜோசப்(40) ர் தனது வீட்டின் அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- டாஸ்மாக் கடையில் பத்து ரூபாய் கூடுதலாக கேட்பதாக கேள்வி எழுப்பிய நபர் தாக்கப்பட்ட விவகாரம்.
- சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் ராஜா விளக்கம் அளிக்கவும் உத்தரவு.
செங்கல்பட்டில் டாஸ்மாக் கடை ஒன்றில் கூடுதலாக பத்து ரூபாய் கேட்பதாக கூறி மதுப்பிரியர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அப்போது அங்கு வந்த எஸ்.ஐ ராஜா மதுப்பிரியர் மீது தாக்குதல் நடத்தினார். இதன் வீடியோ நேற்று இணையத்தளத்தில் வைரலானது.
இதையடுத்து, டாஸ்மாக் கடையில் பத்து ரூபாய் கூடுதலாக கேட்பதாக கேள்வி எழுப்பிய நபர் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் ராஜா ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காவல் உதவி ஆய்வாளர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் ராஜா விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
- குளத்தூர்,புதுப்பாலப்பட்டு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர்.
- 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 31 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ேபாலீஸ் சப்- இன்ஸ்ரபெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான போலீசார் குளத்தூர், புதுப் பாலப்பட்டு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்போது வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குளத்தூர் கிராமத்தை சேர்ந்த சி.ஏழுமலை(41), ஆர்.ஏழு மலை (42), புதுப்பாலப் பட்டு கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 31 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- 2 மதுபான பாட்டில்கள் ,ரொக்கம் ரூ. 500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- ஆனந்த் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, கணபதிபாளையம் பகுதியில் உள்ள ஒரு கடையில், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 2 மதுபான பாட்டில்கள் ,ரொக்கம் ரூ. 500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் விற்பனை செய்த பாக்கியநாதன், பெரிய ராஜ் ஆகியோரை கைது செய்தனர். இதே போல பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஆனந்த் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் வழியை்த தவிர டெல்லி மெட்ரோவில் மது பாட்டில்கைள எடுத்துச் செல்லவே அனுமதி இல்லை.
- மெட்ரோ பயணிகள் பயணத்தின் போது சரியான ஆவணங்களை பராமரிக்க வேண்டும்.
டெல்லி மெட்ரோவில் நபருக்கு இரண்டு மது பாட்டில்களை எடுத்து செல்ல அனுமதி வழங்கி டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும், டெல்லி மெட்ரோவில் மது குடிப்பது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைன் வழியைத் தவிர டெல்லி மெட்ரோவில் மது பாட்டில்கைள எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையி