என் மலர்
நீங்கள் தேடியது "tasmac shops"
- ஒன்று பழுதடைந்தாலோ அல்லது சிக்னல் கிடைக்கவில்லை என்றாலோ மற்றொறு மிஷினை பயன்படுத்தி பணம் பெறலாம்.
- டாஸ்க்மாக் கடைகளில் இனி மது பாட்டிகளை ஸ்கேன் செய்தால் அந்த பாட்டிலின் நிர்ணயிக்கப்பட்ட விலை மட்டும் தான் வரும்.
சென்னை:
தமிழகத்தில் அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் 4,778 சில்லறை விற்பனை கடைகள் மூலம் மது விற்பனை செய்யப்படுகிறது. இங்கு மது வகைகளுக்கு ஏற்ப, ஒரு பாட்டில்களுக்கு கூடுதலாக குறைந்தது ரூ.10 முதல் ரூ.50 வரை வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
கூடுதல் பணம் வசூலிப்பது தொடர்பாக கேட்கும்போது மதுப்பிரியர்களுக்கும், டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. அப்போது அவர்கள் பேசுவதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிடப்படுகின்றன. இதனால் அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடி ஏற்படுகிறது.
எனவே தமிழக அரசின் உத்தரவின் பேரில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன், அனைத்து கடைகளிலும் மது பாட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு தான் விற்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தொடர்ச்சியாக வந்த புகார்களின் அடிப்படையில் ஏராளமான ஊழியர்களையும் அவர், இடைநீக்கம் செய்தார். ஆனாலும் இந்த பிரச்சினை தீரவில்லை. தொடர்ந்து மது பாட்டிலுக்கு கூடுதல் தொகை தான் வசூலிக்கபட்டது.
எனவே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க டாஸ்மாக் நிர்வாகம், டிஜிட்டல் பண பறிமாற்ற முறையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமல்படுத்தியது. ஒவ்வொரு கடையாக கொண்டு வரப்பட்ட இந்த முறை தற்போது அனைத்து கடைகளிலும் நடைமுறைக்கு வந்துவிட்டது. ஒவ்வொரு கடைகளிலும் 2 'ஸ்வைப்பிங்' மிஷின்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஒன்று பழுதடைந்தாலோ அல்லது சிக்னல் கிடைக்கவில்லை என்றாலோ மற்றொறு மிஷினை பயன்படுத்தி பணம் பெறலாம்.
இதனால் ஏ.டி.எம். கார்டு, யு.பி.ஐ. பறிமாற்றம் மூலம் 2 சதவீதம் அளவுக்கு பணம் வசூலிக்கப்பட்டது. இப்போது 20 சதவீதத்தை தாண்டி டிஜிட்டல் பறிமாற்றம் நடக்கிறது.
இருந்தாலும்....? ஒரு பாட்டிலுக்கு கூடுதல் தொகை வாங்குவது மட்டும் நிற்கவில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு முடிவு செய்தது.
இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம் புதிய நடைமுறையை அமல்படுத்த உள்ளது. அதாவது சூப்பர் மாக்கெட்டுகளில் வாங்கிய பொருளை ஸ்கேன் செய்தால் அந்த பொருளின் விலை மட்டும் தான் 'ஸ்வைப்பிங்' மிஷினில் வரும். அந்த தொகையை மட்டும் தான் டிஜிட்டல் முறையில் செலுத்த முடியும்.
அதேபோல டாஸ்க்மாக் கடைகளில் இனி மது பாட்டிகளை ஸ்கேன் செய்தால் அந்த பாட்டிலின் நிர்ணயிக்கப்பட்ட விலை மட்டும் தான் வரும். அந்த தொகையை மட்டும் தான் நாம் கார்டு மூலமாகவோ, யு.பி.ஐ. மூலமாகவோ செலுத்த முடியும். கூடுதல் தொகையை செலுத்த முடியாது.
இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம், 'ஸ்வைப்பிங்' பணம் செலுத்தும் எந்திரத்தை வழங்கியுள்ள வங்கிகளிடம் ஆலோசனை நடத்தியது. சென்னையில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வங்கி பிரதிநிதிகள், இன்னும் 10 தினங்களுக்குள், அதற்கான ஏற்பாட்டை செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர்.
இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் மதுபாட்டிலுக்கு கூடுதல் தொகை வசூலிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- கடந்த மார்ச் மாத தொடக்கத்திலிருந்தே பீர் வகைகளின் விற்பனை சற்று அதிகரித்து இருந்தது.
- கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்கியதுமே மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் மற்ற மதுபான வகைகளை வாங்கி பருகுவதை குறைத்துவிட்டு 'பீர்' வகைகளை அதிக அளவில் வாங்கி குடிக்கின்றனர். அதிலும் குளிரூட்டப்பட்ட 'பீர்' வகைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் கோடை காலத்தில் 'பீர்' விற்பனை பலமடங்கு அதிகரித்துள்ளது.
அதன்படி கடந்த மார்ச் மாத தொடக்கத்திலிருந்தே பீர் வகைகளின் விற்பனை சற்று அதிகரித்து இருந்தது. மார்ச் மாத இறுதியில் 'பீர்' விற்பனை 40 சதவீதம் அதிகரித்தது.
வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் இளநீர், தர்ப்பூசணி, நுங்கு மற்றும் குளிர்பானங்களை தேடிச்சென்றனர். ஆனால் மதுப்பிரியர்களோ 'பீர்' வகைகளை அதிக அளவில் வாங்கி குடிக்க தொடங்கியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் 180 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 3 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை நடக்கின்றது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.
வழக்கமான விற்பனையில் இருந்து பீர் வகைகள் விற்பனை 60 சதவீதம் கூடியுள்ளதாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
- கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உண்ணா நோன்பு இருந்து தேவாலயங்களில் பிரார்த்தனை செய்வது வாடிக்கை.
- கிறிஸ்தவ பெருமக்கள் இப்புனித நாளில், மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவை மரணத்தையும் நினைவு கூர்ந்து உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களால் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் துக்க நாளாகும்.
இயேசுபிரான் அனுபவித்த கஷ்டங்களையும், சிலுவையில் தன்னையே தியாகம் செய்ததை நினைவு கூர்ந்து கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உண்ணா நோன்பு இருந்து தேவாலயங்களில் பிரார்த்தனை செய்வது வாடிக்கை.
கிறிஸ்தவ பெருமக்கள் இப்புனித நாளில், மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களது கோரிக்கையை ஏற்று வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி அன்று, மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு இந்த அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சென்னை மண்டலத்துக்குட்பட்ட 6 டாஸ்மாக் மாவட்டங்களிலும் டாஸ்மாக் பார்கள் மூடிகிடப்பதால் ஒவ்வொரு மாதமும் அரசுக்கு ரூ.11 கோடி நிதி இழப்பு ஏற்படுகிறது.
- பார் உரிமையாளர்கள் கட்டிடங்களுக்கு வாடகை கட்ட முடியாமல் தவித்து வருகிறோம்.
சென்னை:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் டாஸ்மாக் பார்கள் கடந்த 2 மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. இதனால் மதுக்கடைகளுக்கு செல்லும் குடிமகன்கள் பார்களில் அமர்ந்து மது அருந்த முடியாத சூழல் இருந்து வருகிறது.
இதனால் ரோட்டோரங்களில் அமர்ந்தே சென்னை குடிமகன்கள் மது குடித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின்படி பார்களுக்கான உரிமத்தை வழங்கக்கோரி டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இது தொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கட்டிட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நல சங்கத்தின் தலைவர் அன்பரசன் மற்றும் நிர்வாகிகள் தலைமை செயலாளர், டாஸ்மாக் மேலாண் இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளனர்.
இது தொடர்பாக பார் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய சங்க தலைவர் அன்பரசன் கூறியதாவது:-
சென்னை மண்டலத்துக்குட்பட்ட 6 டாஸ்மாக் மாவட்டங்களிலும் டாஸ்மாக் பார்கள் மூடிகிடப்பதால் ஒவ்வொரு மாதமும் அரசுக்கு ரூ.11 கோடி நிதி இழப்பு ஏற்படுகிறது. பார் உரிமையாளர்கள் கட்டிடங்களுக்கு வாடகை கட்ட முடியாமல் தவித்து வருகிறோம்.
இந்த மாத இறுதிக்குள் பார்களுக்கான உரிமத்தை வழங்காவிட்டால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 900 மதுக்கடைகளையும் பூட்டி போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மாவட்ட மேலாளர்கள் அனைவரும் கடைப்பணியாளர்களின் தினசரி வருகை பதிவேட்டினை அவ்வப்பொழுது ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
- மேற்பார்வையாளர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சரக்கு தேவைப்பட்டியல் சமர்ப்பிக்க வரும் போது மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் தங்களது வருகையை தவறாது பதிய வேண்டும்.
சென்னை:
தமிழகத்தில் மதுபான கடைகளை அரசே நடத்தி வருகிறது. இந்த கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர் பலர் வெளியில் சென்று விடுவதாகவும் அவர்களுக்கு பதில் வெளியாட்கள் வேலை செய்து வருவதாகவும் அரசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது.
இதனால் மதுக்கடைகளை நடத்தும் 'டாஸ்மாக்' நிறுவனம் மண்டல மேலாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சமீப காலமாக டாஸ்மாக் கடைப் பணியாளர்கள் தலைமை அலுவலகத்தில் உள்ள அலுவலர்களை சந்திக்க அடிக்கடி தலைமை அலுவலகம் வருவதும், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு சென்று தங்கள் அலுவலகம் வருவதும், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு சென்று தங்கள் சங்கங்களின் சார்பாக பணி மேற்கொள்ளுதல், மண்டல மேலாளர் அலுவலகம் செல்லுதல், கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் கடைப்பணியில் இருப்பதில்லை என்பது தெரியவருகிறது. இதனை தலைமை அலுவலக ஆய்வு குழு மதுபான சில்லரை விற்பனை கடைகளை ஆய்வு செய்த பொழுது பெரும்பாலான கடைப்பணியாளர்கள் கடை பணிகளில் இருப்பது இல்லை என்பதும், வெளிநபர்களை கடை பணிகளில் ஈடுபடுத்துவதும் தெரிய வருகிறது.
எனவே, அனைத்து முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் அனைத்து மாவட்ட மேலாளர்களும் கீழ்கண்ட அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.
அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும் நியமிக்கப்பட்ட கடைப் பணியாளர்கள் (மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள்) அனைவரும் பணி நேரத்தில் பணியில் உள்ளார்களா என்பதை கண்டறிய வேண்டும். மாவட்ட மேலாளர்கள் அனைவரும் கடைப்பணியாளர்களின் தினசரி வருகை பதிவேட்டினை அவ்வப்பொழுது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இது தவிர மேற்பார்வையாளர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சரக்கு தேவைப்பட்டியல் சமர்ப்பிக்க வரும் போது மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் தங்களது வருகையை தவறாது பதிய வேண்டும்.
தலைமை அலுவலகத்தில் உள்ள அலுவலர்களை சந்திக்க வருகை புரியும் கடைப்பணியாளர்கள் அந்தந்த மாவட்ட மேலாளரிடம் அனுமதி ரசீதில் மாவட்ட மேலாளரின் அனுமதி மற்றும் கையொப்பத்துடன் மாவட்ட மேலாளரின் அலுவலக முத்திரை பெற்றே வரவேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மேலாளர்கள் கடைக்கு ஆய்வுக்கு செல்லும் பொழுது அனைத்து கடை பணியாளர்களும் கடைப்பணியில் உள்ளார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். வங்கி பணி மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு செல்லும் பணியாளர்கள் நகர்வு பதிவேடுகளில் கையொப்பமிட்டுள்ளார்களா என்பதை கண்காணித்து அவ்வாறு பதிவேடுகளில் பதியவில்லையெனில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தினமும் டாஸ்மாக் கடைகளில் சராசரியாக ரூ.130 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி வருகிறது.
- நாளை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இன்று வழக்கத்தைவிட அதிக கூட்டமும் காணப்பட்டதால் மது விற்பனையும் அதிக அளவில் நடைபெற்றது.
சென்னை:
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் வாரத்தில் அனைத்து நாட்களும் செயல்படுகின்றன. குடியரசு தினம், சுதந்திர தினம், மே தினம் உள்பட ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே விடுமுறை விடப்படுகிறது.
நாளை (26-ந்தேதி) குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கிளப்புகளிலும் நாளை மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை சரக்கு கிடைக்காது என்பதால் குடிமகன்கள் பெரும் திண்டாட்டத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால் இன்றே மதுபாட்டில்களை வாங்கி வைக்கும் பணியில் குடிமகன்கள் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளிலும் இன்று குடிமகன்களின் கூட்டம் அலை மோதியது. எல்லோருமே நாளைக்கும் இருப்பு வைக்கும் வகையில் பாட்டில் பாட்டிலாக வாங்கிச் சென்றனர்.
இன்று கடை திறந்தவுடனேயே பெரும் அளவில் படையெடுத்து வந்து மது பாட்டில்களை வாங்கினார்கள்.
தினமும் டாஸ்மாக் கடைகளில் சராசரியாக ரூ.130 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி வருகிறது. நாளை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இன்று வழக்கத்தைவிட அதிக கூட்டமும் காணப்பட்டதால் மது விற்பனையும் அதிக அளவில் நடைபெற்றது.
- தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரியை ஒப்பிடும்போது இந்த ஆண்டு விற்பனை பாதியாக குறைந்துள்ளது.
- சிவகங்கை மாவட்டத்தில் 10 சதவீதம் விற்பனை சரிந்துள்ளது.
சென்னை:
டாஸ்மாக் மதுக்கடைகளில் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை காலங்களில் ரூ.1000 கோடிக்கு மேல் மது விற்பனை நடந்தது. தினமும் ரூ.180 கோடிக்கு மதுவிற்பனை நடைபெறுவது வழக்கம். மதுபார்கள் முழுமையான அளவில் செயல்படாத நிலையிலும் மதுவிற்பனை குறையவில்லை.
ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் தமிழகம் முழுவதும் மது விற்பனை குறைந்து உள்ளது. எல்லா மாவட்டங்களிலும் மதுவிற்பனை சற்று குறைந்துள்ளது. சென்னையில் 3 சதவீதம் மது விற்பனை குறைந்து இருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரியை ஒப்பிடும்போது இந்த ஆண்டு விற்பனை பாதியாக குறைந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 10 சதவீதம் விற்பனை சரிந்துள்ளது. இதேபோல பெரும்பாலான மாவட்டங்களில் மது விற்பனை குறைந்துள்ளதால் அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர்.
மாவட்ட மேலாளர்கள் கடை பணியாளர்களிடம் விற்பனை குறைவுக்கான காரணம் குறித்து விளக்கம் கேட்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் போலி மது விற்பனை நடைபெறுவதால் டாஸ்மாக் விற்பனை சரிவுக்கு காரணம் என்று ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் மது விற்பனை குறைவுக்கான காரணம் என்ன? என்பது பற்றி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
- சித்திரை திருவிழாவின் போது டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை விட வேண்டும்.
- பா.ஜ.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா. சுசீந்திரன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரையின் உலக புகழ்வாய்ந்த சித்திரை திருவிழாவில் மே 5-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. இதில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அப்போது சில போதை ஆசாமிகள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் பாலியல் சீண்டல், நகை பறிப்பு, வழிப்பறி போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.
இதையொட்டி வருகிற 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 5நாட்களுக்கு மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட வேண்டும். மதுரை மாவட்ட டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு உடந்தையாக இருக்கும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்திரை திருவிழாவில் கடந்த ஆண்டு போல உயிர்பலி ஏற்படாத வகையில் பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விவசாய அணி மாநில துணைத் தலைவர் முத்துராமன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, துணைத்தலைவர் குமார், பொருளாளர் ராஜ்குமார், ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன், மகளிரணி தலைவி மீனா, சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் முத்துகுமார் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் செயல்படுத்தும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என அறிவித்தார்.
- திருப்பூர் மாநகரப் பகுதியில் 110 மற்றும் புறநகர் மாவட்ட பகுதியில் 140 என மொத்தம் 250 மதுக்கடைகள் உள்ளன.
திருப்பூர் :
சட்டசபை கூட்டத் தொடரில் துறைவாரியான மானிய கோரிக்கைகள் குறித்த விவாதம் நடந்தது.இதில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் செயல்படுத்தும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என அறிவித்தார்.
அவ்வகையில் இந்த அறிவிப்பின்படி திருப்பூர் மாவட்டத்தில் மூடப்படவுள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகரப் பகுதியில் 110 மற்றும் புறநகர் மாவட்ட பகுதியில் 140 என மொத்தம் 250 மதுக்கடைகள் உள்ளன.இவற்றில் விற்பனை குறைவான கடைகள், அருகருகே உள்ள கடைகள், கோவில், பள்ளி, பஸ் நிறுத்தம் போன்றவற்றுக்கு அருகே பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கடைகள்,பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு உள்ள கடைகள் ஆகியன கண்டறியப்பட்டு அந்த கடைகள் மூடப்படும் எனத் தெரிகிறது.
இது குறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சுப்ரமணியம் கூறியதாவது:- அமைச்சர் அறிவித்தபடி செயல்படும் கடைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும். முழுமையான வழிகாட்டு அறிவுரைகள் குறித்த எழுத்துப்பூர்வமான உத்தரவு இன்னும் வரவில்லை. அந்த உத்தரவு வந்தவுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மூட வேண்டிய கடைகள் இருப்பின் அது குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் மாவட்டத்தில் இந்த ஆய்வுகளின் அடிப்படையில் 2 அல்லது 3 கடைகள் வரை மூட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. திருப்பூரை பொறுத்தவரை மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகளவில் குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
- டாஸ்மாக் கடைகள் 1-ந் தேதி அடைக்கப்படுகிறது.
- விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மே தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்களும், உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மற்றும் உரிமம் பெற்று இயங்கி வரும் மதுபான விற்பனைக் கூடங்கள் ஆகியவற்றில் மதுபான விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யும் வகையில் வருகிற 1-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று முழுமையாக மூடி வைக்க ஆணையிடப்படுகிறது. மேற்கண்ட நாளில் விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கடைகளை மூடலாம் என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.
- 500 கடைகளை கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி முதல் மூடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் 5329 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.44 ஆயிரம் கோடி வரை அரசுக்கு வருமானம் கிடைத்து வருகிறது.
இந்த வருமானம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகளை ஒரு இடத்தில் மூடினாலும் இன்னொரு இடத்தில் திறந்து விடுவதாக மக்கள் குறை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் சட்டசபையில் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கடைகளை மூடலாம் என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள கோவில்கள் அருகில் இருக்கும் கடைகளை மூடுவது, 500 மீட்டர் சுற்றளவில் 2 கடைகள் இருந்தால் அதில் ஒரு கடையை மூடுவது என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி 500 கடைகளை கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி முதல் மூடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- டாஸ்மாக் கடைகளிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க டாஸ்மாக் ஊழியர்கள் மறுத்து வருகிறார்கள்.
- சமீப காலமாகவே டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகமாக வருவது இல்லை என்று டாஸ்மாக் கடை ஊழியர் கூறியுள்ளார்.
சென்னை:
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் அனைத்து வணிக நிறுவனங்களுமே அந்த நோட்டை வாங்குவதற்கு மறுத்துவிடுகின்றன.
அந்த வகையில் டாஸ்மாக் கடைகளிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க டாஸ்மாக் ஊழியர்கள் மறுத்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவர் கூறும்போது, 'சமீப காலமாகவே டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகமாக வருவது இல்லை.
இருப்பினும் தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் மது பிரியர்கள் யாராவது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொண்டுவந்து கொடுத்தால் அதனை வாங்குவது இல்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.






