search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 900 டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்
    X

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 900 டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்

    • சென்னை மண்டலத்துக்குட்பட்ட 6 டாஸ்மாக் மாவட்டங்களிலும் டாஸ்மாக் பார்கள் மூடிகிடப்பதால் ஒவ்வொரு மாதமும் அரசுக்கு ரூ.11 கோடி நிதி இழப்பு ஏற்படுகிறது.
    • பார் உரிமையாளர்கள் கட்டிடங்களுக்கு வாடகை கட்ட முடியாமல் தவித்து வருகிறோம்.

    சென்னை:

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் டாஸ்மாக் பார்கள் கடந்த 2 மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. இதனால் மதுக்கடைகளுக்கு செல்லும் குடிமகன்கள் பார்களில் அமர்ந்து மது அருந்த முடியாத சூழல் இருந்து வருகிறது.

    இதனால் ரோட்டோரங்களில் அமர்ந்தே சென்னை குடிமகன்கள் மது குடித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின்படி பார்களுக்கான உரிமத்தை வழங்கக்கோரி டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கட்டிட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நல சங்கத்தின் தலைவர் அன்பரசன் மற்றும் நிர்வாகிகள் தலைமை செயலாளர், டாஸ்மாக் மேலாண் இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளனர்.

    இது தொடர்பாக பார் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய சங்க தலைவர் அன்பரசன் கூறியதாவது:-

    சென்னை மண்டலத்துக்குட்பட்ட 6 டாஸ்மாக் மாவட்டங்களிலும் டாஸ்மாக் பார்கள் மூடிகிடப்பதால் ஒவ்வொரு மாதமும் அரசுக்கு ரூ.11 கோடி நிதி இழப்பு ஏற்படுகிறது. பார் உரிமையாளர்கள் கட்டிடங்களுக்கு வாடகை கட்ட முடியாமல் தவித்து வருகிறோம்.

    இந்த மாத இறுதிக்குள் பார்களுக்கான உரிமத்தை வழங்காவிட்டால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 900 மதுக்கடைகளையும் பூட்டி போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×