என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
டாஸ்மாக் கடைகளில் வெளியாட்கள் வேலைபார்ப்பதாக புகார்
- மாவட்ட மேலாளர்கள் அனைவரும் கடைப்பணியாளர்களின் தினசரி வருகை பதிவேட்டினை அவ்வப்பொழுது ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
- மேற்பார்வையாளர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சரக்கு தேவைப்பட்டியல் சமர்ப்பிக்க வரும் போது மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் தங்களது வருகையை தவறாது பதிய வேண்டும்.
சென்னை:
தமிழகத்தில் மதுபான கடைகளை அரசே நடத்தி வருகிறது. இந்த கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர் பலர் வெளியில் சென்று விடுவதாகவும் அவர்களுக்கு பதில் வெளியாட்கள் வேலை செய்து வருவதாகவும் அரசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது.
இதனால் மதுக்கடைகளை நடத்தும் 'டாஸ்மாக்' நிறுவனம் மண்டல மேலாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சமீப காலமாக டாஸ்மாக் கடைப் பணியாளர்கள் தலைமை அலுவலகத்தில் உள்ள அலுவலர்களை சந்திக்க அடிக்கடி தலைமை அலுவலகம் வருவதும், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு சென்று தங்கள் அலுவலகம் வருவதும், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு சென்று தங்கள் சங்கங்களின் சார்பாக பணி மேற்கொள்ளுதல், மண்டல மேலாளர் அலுவலகம் செல்லுதல், கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் கடைப்பணியில் இருப்பதில்லை என்பது தெரியவருகிறது. இதனை தலைமை அலுவலக ஆய்வு குழு மதுபான சில்லரை விற்பனை கடைகளை ஆய்வு செய்த பொழுது பெரும்பாலான கடைப்பணியாளர்கள் கடை பணிகளில் இருப்பது இல்லை என்பதும், வெளிநபர்களை கடை பணிகளில் ஈடுபடுத்துவதும் தெரிய வருகிறது.
எனவே, அனைத்து முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் அனைத்து மாவட்ட மேலாளர்களும் கீழ்கண்ட அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.
அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும் நியமிக்கப்பட்ட கடைப் பணியாளர்கள் (மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள்) அனைவரும் பணி நேரத்தில் பணியில் உள்ளார்களா என்பதை கண்டறிய வேண்டும். மாவட்ட மேலாளர்கள் அனைவரும் கடைப்பணியாளர்களின் தினசரி வருகை பதிவேட்டினை அவ்வப்பொழுது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இது தவிர மேற்பார்வையாளர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சரக்கு தேவைப்பட்டியல் சமர்ப்பிக்க வரும் போது மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் தங்களது வருகையை தவறாது பதிய வேண்டும்.
தலைமை அலுவலகத்தில் உள்ள அலுவலர்களை சந்திக்க வருகை புரியும் கடைப்பணியாளர்கள் அந்தந்த மாவட்ட மேலாளரிடம் அனுமதி ரசீதில் மாவட்ட மேலாளரின் அனுமதி மற்றும் கையொப்பத்துடன் மாவட்ட மேலாளரின் அலுவலக முத்திரை பெற்றே வரவேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மேலாளர்கள் கடைக்கு ஆய்வுக்கு செல்லும் பொழுது அனைத்து கடை பணியாளர்களும் கடைப்பணியில் உள்ளார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். வங்கி பணி மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு செல்லும் பணியாளர்கள் நகர்வு பதிவேடுகளில் கையொப்பமிட்டுள்ளார்களா என்பதை கண்காணித்து அவ்வாறு பதிவேடுகளில் பதியவில்லையெனில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்