என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் கடை"

    • பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும்.
    • நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளி கிடங்குகளாக உள்ளது.

    திருவிடைமருதூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள அம்மன்குடி பகுதியில் மழை நீரில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி இன்று காலை நேரில் வந்து பார்வையிட்டார்.

    நாற்று நடப்பட்ட கொஞ்ச நாட்களில் மழை நீரில் நாற்றுகள் மூழ்கி அழுகி வீணாகி விட்டதை விவசாயிகள் அவரிடம் காண்பித்து வேதனை தெரிவித்தனர். பின்னர் நிருபர்களுக்கு சவுமியா அன்புமணி பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப இன்னும் அதிகளவில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக வடிகால்களை சீரமைத்து விவசாயிகளை பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தூர்வாரும்பணி நடைபெற்று விட்டதாக கூறுகிறது.

    ஆனால் எந்த பணிகளும் செய்யப்படவில்லை. அதனால்தான் தண்ணீர் வயல்களில் தேங்குகிறது.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிப்பது போல் முதலில் நமக்கெல்லாம் சோறு போடும் விவசாயிகளுக்கு அரசு நிவாரணத்தை அறிவிக்க வேண்டும்.

    தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொடுப்பதில்லை. எனவே தான் நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளி கிடங்குகளாக உள்ளது. மழையில் நனைந்து மக்கிப்போயும் முளைத்தும் நெல்கள் வீணாகிறது.

    எனவே அரசு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத்தை அறிவிக்க வேண்டும் என்றார்.

    அப்போது அவருடன் உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி உள்பட பலர் இருந்தனர்.

    • தற்போது ​​டாஸ்மாக் கடைகளில் 10-க்கும் மேற்பட்ட பீர் வகைகள் விற்கப்படுகின்றன.
    • தற்போது தினமும் சராசரியாக டாஸ்மாக் கடைகளில் ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடி வரை விற்பனை நடைபெறுகிறது.

    தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் அதற்கு முந்தைய 2 நாட்களும் விடுமுறை தினங்கள் ஆகும். இதையொட்டி டாஸ்மாக் கடைகளில் இந்த ஆண்டு தீபாவளியையொட்டி அதிக அளவில் மது விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி தீபாவளி பண்டிகை கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான மதுபானங்களை கையிருப்பில் வைக்க டாஸ்மாக் நிர்வாகம் அதன் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து டாஸ்மாக் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறைகள் வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்களிலும் மதுபானங்கள் தேவை சீராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதால் முக்கியமான இடங்களில் கூடுதல் மதுபானங்களை இருப்பு வைக்க திட்டமிட்டுள்ளோம். முக்கியமாக பீர் வகைகள் அதிக அளவில் இருப்பு வைக்கப்படும்.

    தற்போது டாஸ்மாக் கடைகளில் 10-க்கும் மேற்பட்ட பீர் வகைகள் விற்கப்படுகின்றன. அவற்றில் 5 முதல் 7 வகையான பீர்கள் வேகமாக விற்பனையாகின்றன. அந்த 7 வகை பானங்களும் கையிருப்பில் இருப்பதை கண்காணிக்க மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தற்போது தினமும் சராசரியாக டாஸ்மாக் கடைகளில் ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடி வரை விற்பனை நடைபெறுகிறது. வார இறுதி நாட்களில் விற்பனை பொதுவாக 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கும். பண்டிகை காலங்களில், வழக்கமாக 15 சதவீதம் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

    கடந்த 2023-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது 3 நாட்களில் ரூ.460 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடந்தது. கடந்த 2024-ம் ஆண்டு 2 நாட்களில் ரூ.438 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்ட வாய்ப்புள்ளது.

    டாஸ்மாக்கின் தினசரி வருவாயில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் கிட்டத்தட்ட 40 சதவீதம் பங்களிக்கின்றன. விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களில் விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • காவலாளி கொடுத்த தகவலின் பேரில் கடை விற்பனையாளர்கள், சூப்பர்வைசர் விரைந்து வந்தனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை திருச்சி சாலையில் அரசு மதுபான கடை உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மது பிரியர்கள் அதிகளவில் வந்து மது அருந்துவார்கள்.

    இதனால் இக்கடையில் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். மேலும் திருச்சி சாலையில் அமைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் லாரி டிரைவர்கள் இக்கடை அருகில் தங்கள் வாகனங்களை நிறுத்தி மது பாட்டில்களை வாங்கி செல்வார்கள்.

    இங்கு 2 விற்பனையாளர்களும், ஒரு சூப்பர்வைசர்களும் பணியில் உள்ளனர். இவர்கள் இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றனர்.

    கடைக்கு காவலர் பணியில் அப்பதியை சேர்ந்தவர் ஈடுபட்டிருந்தார்.

    இந்தநிலையில் நேற்று மிலாடி நபியை முன்னிட்டு கடை திறக்காமல் இருந்தது. நள்ளிரவில் மர்ம நபர்கள் கடைக்கு வந்துள்ளனர். அவர்களை காவலாளி கேள்வி கேட்டுள்ளார். அதற்கு மர்ம நபர்கள் சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் எனமிரட்டி கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பல ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை அள்ளிச் சென்றனர்.

    இது குறித்து காவலாளி கொடுத்த தகவலின் பேரில் கடை விற்பனையாளர்கள், சூப்பர்வைசர் விரைந்து வந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புதுக்கோட்டையில் இருந்து மோப்ப நாய் தீரன் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை போன மதுபான கடையில் இருந்து திருச்சி சாலை வரை ஓடிச் சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. இது குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு மதுபான கடையில் கொள்ளை அடித்த மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • பெண்கள், ஆண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு , வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் எஸ்.ஆர் நகர் வடக்கு பகுதியில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் தொல்லை அதிகரிப்பதுடன் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் இன்று ஏராளமான பெண்கள், ஆண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கடை அமைந்துள்ள வளாகத்தின் உள்ளே செல்ல முயன்றதால் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு , வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து நொய்யல் புது சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரிடம் கையெடுத்து கும்பிட்டு தங்களுக்கு இந்த கடை வேண்டாம் என மன்றாடி கேட்டுக்கொண்டனர்.

    பொதுமக்கள் கூறுகையில், தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் பகுதியில் டாஸ்மாக் கடை வைக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் திருப்பூர் எஸ்.ஆர். நகர் பகுதியில் சிலர் கடையை வைத்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பொது மக்களின் எதிர்ப்பை மீறி செயல்பட்டு வருகிறார்கள். புதிதாக வரும் மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • சாலையில் நடந்து கொண்டு பாம்பை காட்டி பொதுமக்களிடம் அட்ராசிட்டி செய்தார்.
    • சாலையில் இருந்த இளைஞர்கள், பொதுமக்கள் பாம்புடன் இருந்த அந்த நபரை செல்போனில் படம் பிடித்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி நகரப்பகுதி நான்கு வழி சாலை அருகில் செயல்படும் அரசு மதுபான கடைக்கு இளைஞர் ஒருவர் கழுத்தில் பாம்பு ஒன்றை சுத்தி கொண்டு மது வாங்க வந்தார்.

    அப்பொழுது மதுக்கடைக்கு வந்த மது பிரியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். கடையின் விற்பனையாளர்கள் செய்வதறியாமல், மது வாங்க வந்த இளைஞரை எச்சரித்து, மது (பீர்) கொடுத்து அனுப்பி விட்டனர்.

    மது வாங்கி கொண்டு சென்ற அந்த வாலிபர், பீர் பாட்டிலை திறந்து, பாம்பின் வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து அந்த வாலிபர் மது போதையில் நான்கு ரோட்டில், சாலையில் நடந்து கொண்டு பாம்பை காட்டி பொதுமக்களிடம் அட்ராசிட்டி செய்தார்.

    சாலையில் இருந்த இளைஞர்கள், பொதுமக்கள் பாம்புடன் இருந்த அந்த நபரை செல்போனில் படம் பிடித்தனர். அவர்களுக்கு அந்த இளைஞர் பல கோணங்களில் பாம்பை பிடித்து கொண்டு பாம்புக்கு முத்தம் கொடுத்தும், பாம்பு மற்றும், பீர் பாட்டிலை சாலை மைய தடுப்பு சுவரின் மீது வைத்தும், வித்தைக்காட்டி கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து அங்கு வந்த காவலர்கள் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினர்.

    • டாஸ்மாக் கடைக்குள் இருந்த அனைத்து வகையான மது பாட்டில்களும் எரிந்து நாசமானது.
    • கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றை ஒட்டி அதன் கரையோர பகுதியில் அரசு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த கடைக்கும் மானாமதுரை மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மது பிரியர்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்கள் சென்றுவிட்டனர்.

    இந்தநிலையில் நள்ளிரவில் டாஸ்மாக் கடை தீப்பற்றி எரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பார்த்த போது கடை முழுவதும் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. பின்னர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விபத்து நடந்த பகுதிக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரமாக தீயை அணைக்க போராடினர்.

    நேற்று காலையில்தான் சிவகங்கை மாவட்ட குடோனில் இருந்து விற்பனைக்காக பல லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்முதல் செய்யப்பட்டு இருந்தது. திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தில் கடைக்குள் இருந்த ரேக்குகள், அட்டை பெட்டிகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. உடைந்த பாட்டில் சிதறல்கள் பல மீட்டர் தூரம் வரை சென்று விழுந்தன.

    கடுமையான போராட்டத்துக்கு பிறகு தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருந்தபோதிலும் டாஸ்மாக் கடைக்குள் இருந்த அனைத்து வகையான மது பாட்டில்களும் எரிந்து நாசமானது. அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.30 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    சம்பவம் தொடர்பாக மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாராவது தீ வைத்துவிட்டு சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.

    ஆனால் நள்ளிரவில் அந்த பகுதிக்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றித்திரிந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

    பல ஆண்டுகளாக வைகை ஆற்றையொட்டி செயல்பட்ட டாஸ்மாக் கடை தீ விபத்தில் முழுமையாக எரிந்து சேதமாகி இருப்பது மானாமதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 24-ந்தேதி சென்னை மத்திய மேற்கு மாவட்ட த.வெ.க சார்பில் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
    • த.வெ.க.வினர் சுமார் 300 பேரை போலீசார் கைது செய்து அமைந்தகரையில் உள்ள அய்யாவு திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

    அண்ணா நகர்:

    அமைந்தகரை செனாய் நகரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் பின்புறம் டாஸ்மாக் மது பான கடை செயல்பட்டு வருகிறது.

    கடைக்கு எதிர்ப்புறம் ரேஷன் கடை, அரசு மருத்துவமனை, சுமார் 2000 பள்ளி மாணவிகள் படித்து வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நூலகம் அமைந்துள்ளது.

    இதன் அருகே அமைந்து உள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு வரும் குடிமகன்கள் தினந்தோறும் சாலையில் இருந்தபடி மதுபானங்களை குடித்து கும்மாளமிட்டு வருகின்றனர்.

    இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி இந்த மது கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி கடந்த 24-ந்தேதி சென்னை மத்திய மேற்கு மாவட்ட த.வெ.க சார்பில் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

    மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் செனாய் நகர் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி மாவட்ட செயலாளர் ஏ.எஸ்.பழனி தலைமையில் த.வெ.க.வினர் இன்று போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட த.வெ.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து வலுக்கட்டாயமாக த.வெ.க.வினர் சுமார் 300 பேரை போலீசார் கைது செய்து அமைந்தகரையில் உள்ள அய்யாவு திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    போராட்டம் பற்றி மாவட்ட செயலாளர் பழனி கூறியதாவது:-

    பொது மக்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருக்கும் அரசு மதுபான கடையை மூட வேண்டும் என முறைப்படி மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் கொடுத்து இருந்தோம். எங்கள் மனுவிற்கு நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று போராட்டம் நடத்தப்போவதாக போலீசாரிடமும் உரிய அனுமதியை பெற்று இருந்தோம். ஆனால் திடீரென போராட்டம் நடத்துவதற்கு எங்களை போலீசார் அனுமதிக்காமல் கைது செய்து உள்ளனர். வேண்டுமென்றே த.வெ.க.வினரை மக்கள் பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்துகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நகரச்செயலாளர் வக்கீல் கிருஷ்ணராஜ்தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
    • கௌதம்,பிரபு, இள சுந்தர்,கவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி பஸ் நிலையம் மற்றும் ெரயில் நிலையம் செல்லும் வழியில் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிசெல்லும்மாணவ,மாணவியர்களுக்கு இடையூறாக இருந்து வரும் அரசு மதுபான கடையை (டாஸ்மாக்) அகற்றக்கோரி நகரச்செயலாளர் வக்கீல் கிருஷ்ணராஜ்தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

    இதில் நகர இணை செயலாளர் ராஜி,இளையராஜா,புஷ்பராஜ்,ராஜவேல்,பென்னி,கௌதம்,பிரபு, இள சுந்தர்,கவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்புஅழை ப்பாளர்களாக பிரகாஷ்,கலியபெருமாள், அருள்செல்வன் இளஞ்சி றுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பா ளர்வெங்கடசாமி, விவசாய அணி மாநில துணைச் செயலாளர்தமிழ்மாறன் நகர பொருளாளர் பக லவன், வாசன்,சந்தானம்,சவுந்தர், சுப்பு ராய லு,ரமேஷ் ,பிரகாஷ் பாலூர்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பல்வேறு புகார் சென்றனர்.
    • சுமார் 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுமார்4 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மேம்பாலம் கீழ்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அதிக விலையில் மதுபானங்கள் விற்கப்படுவதாகவும்,போலி மதுபானங்கள்,மற்றும் புதுவை மதுபானங்கள் விற்கப்படுவதாகவும்,விற்பனையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், போன்ற பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பல்வேறு புகார் சென்றனர். இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து மாவட்ட மேலாளர் சத்தியன் தலைமையிலானசுமார் 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுமார்4 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.இதனால் திண்டிவனத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மாவட்ட மேலாளர்கள் அனைவரும் கடைப்பணியாளர்களின் தினசரி வருகை பதிவேட்டினை அவ்வப்பொழுது ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
    • மேற்பார்வையாளர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சரக்கு தேவைப்பட்டியல் சமர்ப்பிக்க வரும் போது மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் தங்களது வருகையை தவறாது பதிய வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் மதுபான கடைகளை அரசே நடத்தி வருகிறது. இந்த கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர் பலர் வெளியில் சென்று விடுவதாகவும் அவர்களுக்கு பதில் வெளியாட்கள் வேலை செய்து வருவதாகவும் அரசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது.

    இதனால் மதுக்கடைகளை நடத்தும் 'டாஸ்மாக்' நிறுவனம் மண்டல மேலாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சமீப காலமாக டாஸ்மாக் கடைப் பணியாளர்கள் தலைமை அலுவலகத்தில் உள்ள அலுவலர்களை சந்திக்க அடிக்கடி தலைமை அலுவலகம் வருவதும், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு சென்று தங்கள் அலுவலகம் வருவதும், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு சென்று தங்கள் சங்கங்களின் சார்பாக பணி மேற்கொள்ளுதல், மண்டல மேலாளர் அலுவலகம் செல்லுதல், கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் கடைப்பணியில் இருப்பதில்லை என்பது தெரியவருகிறது. இதனை தலைமை அலுவலக ஆய்வு குழு மதுபான சில்லரை விற்பனை கடைகளை ஆய்வு செய்த பொழுது பெரும்பாலான கடைப்பணியாளர்கள் கடை பணிகளில் இருப்பது இல்லை என்பதும், வெளிநபர்களை கடை பணிகளில் ஈடுபடுத்துவதும் தெரிய வருகிறது.

    எனவே, அனைத்து முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் அனைத்து மாவட்ட மேலாளர்களும் கீழ்கண்ட அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.

    அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும் நியமிக்கப்பட்ட கடைப் பணியாளர்கள் (மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள்) அனைவரும் பணி நேரத்தில் பணியில் உள்ளார்களா என்பதை கண்டறிய வேண்டும். மாவட்ட மேலாளர்கள் அனைவரும் கடைப்பணியாளர்களின் தினசரி வருகை பதிவேட்டினை அவ்வப்பொழுது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இது தவிர மேற்பார்வையாளர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சரக்கு தேவைப்பட்டியல் சமர்ப்பிக்க வரும் போது மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் தங்களது வருகையை தவறாது பதிய வேண்டும்.

    தலைமை அலுவலகத்தில் உள்ள அலுவலர்களை சந்திக்க வருகை புரியும் கடைப்பணியாளர்கள் அந்தந்த மாவட்ட மேலாளரிடம் அனுமதி ரசீதில் மாவட்ட மேலாளரின் அனுமதி மற்றும் கையொப்பத்துடன் மாவட்ட மேலாளரின் அலுவலக முத்திரை பெற்றே வரவேண்டும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மேலாளர்கள் கடைக்கு ஆய்வுக்கு செல்லும் பொழுது அனைத்து கடை பணியாளர்களும் கடைப்பணியில் உள்ளார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். வங்கி பணி மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு செல்லும் பணியாளர்கள் நகர்வு பதிவேடுகளில் கையொப்பமிட்டுள்ளார்களா என்பதை கண்காணித்து அவ்வாறு பதிவேடுகளில் பதியவில்லையெனில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டாஸ்மாக் கடை அருகில் உள்ள பாரில் அதிகாலை முதல் மதுபாட்டில் பதுக்கி விற்பனை நடப்பதாக வடபழனி இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபுவுக்கு தகவல் கிடைத்தது.
    • ரூ.20ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    போரூர்:

    வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவில் டாஸ்மாக் கடை அருகில் உள்ள பாரில் அதிகாலை முதல் மதுபாட்டில் பதுக்கி விற்பனை நடப்பதாக வடபழனி இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபுவுக்கு தகவல் கிடைத்தது.

    இது தொடர்பாக மது விற்பனையில் ஈடுபட்ட பார் ஊழியர்களான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மதியரசன், செல்வம், பெரம்பலூரை சேர்ந்த ராஜா, காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரகாஷ், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுனில், பிரகாஷ் ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.20ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • நாள் ஒன்றுக்கு ரூ.80 கோடி முதல் ரூ.90 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகிறது.
    • ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தீபாவளி பண்டிகையின்போது டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரிக்கும்.

    சேலம்:

    தமிழக முழுவதும் 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.80 கோடி முதல் ரூ.90 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தீபாவளி பண்டிகையின்போது டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரிக்கும். அதற்கு ஏற்ப டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக சரக்குகள் விற்பனைக்கு குவிக்கப்படும்.

    வருகிற ஞாயிற்றுக்கி–ழமை ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. ஆங்கில புத்தாண்டு முதல் நாளில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விற்பனை அதிகரிக்கும். இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் 220 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை மதுபானங்கள் விற்பனை நடைபெறும். வரும் ஞாயிற்றுக்கிழமை ஆங்கில புத்தாண்டு ஒட்டி மதுபானங்கள் விற்பனை அதிகரிக்கும் என்பதால் கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 30 சதவீதம் மதுபானங்கள் குவிக்கப்பட்டு வருகிறது.

    ஆங்கில புத்தாண்டை தொடர்ந்து பொங்கல் பண்டிகை வருகிறது .பொங்கல் பண்டிகையின் போது 3 நாட்கள் மதுபானங்கள் விற்பனை களைகட்டும். இதையொட்டி–யும் அதிக அளவில் டாஸ்மாக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு வருகிறது.

    ×