என் மலர்
நீங்கள் தேடியது "மானாமதுரை"
- டாஸ்மாக் கடைக்குள் இருந்த அனைத்து வகையான மது பாட்டில்களும் எரிந்து நாசமானது.
- கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றை ஒட்டி அதன் கரையோர பகுதியில் அரசு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த கடைக்கும் மானாமதுரை மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மது பிரியர்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்கள் சென்றுவிட்டனர்.
இந்தநிலையில் நள்ளிரவில் டாஸ்மாக் கடை தீப்பற்றி எரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பார்த்த போது கடை முழுவதும் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. பின்னர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விபத்து நடந்த பகுதிக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரமாக தீயை அணைக்க போராடினர்.
நேற்று காலையில்தான் சிவகங்கை மாவட்ட குடோனில் இருந்து விற்பனைக்காக பல லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்முதல் செய்யப்பட்டு இருந்தது. திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தில் கடைக்குள் இருந்த ரேக்குகள், அட்டை பெட்டிகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. உடைந்த பாட்டில் சிதறல்கள் பல மீட்டர் தூரம் வரை சென்று விழுந்தன.
கடுமையான போராட்டத்துக்கு பிறகு தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருந்தபோதிலும் டாஸ்மாக் கடைக்குள் இருந்த அனைத்து வகையான மது பாட்டில்களும் எரிந்து நாசமானது. அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.30 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாராவது தீ வைத்துவிட்டு சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.
ஆனால் நள்ளிரவில் அந்த பகுதிக்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றித்திரிந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
பல ஆண்டுகளாக வைகை ஆற்றையொட்டி செயல்பட்ட டாஸ்மாக் கடை தீ விபத்தில் முழுமையாக எரிந்து சேதமாகி இருப்பது மானாமதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 27 நட்சத்திரங்களை தன் மனைவிகளாகக் கொண்டவன் சந்திரன்.
- மதுரையைப் போலவே இங்கும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அமைந்துள்ளது, ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயம். சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று வகையிலும் பெருமை உடையதாக உள்ளது. சந்திரன் வழிபட்டு சிவன் அருள் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. இக்கோவிலில் மூலவராக சோமேஸ்வரர், உற்சவராக சோமநாதர் ஆகியோர் உள்ளனர். அம்பாள் ஆனந்தவல்லி தாயார். புராண காலத்தில் இந்த ஊர் 'சந்திர பட்டணம்' என்று வழங்கப்பட்டு உள்ளது.
27 நட்சத்திரங்களை தன் மனைவிகளாகக் கொண்டவன் சந்திரன். அந்த மனைவிகளில் ரோகிணி, கார்த்திகை ஆகிய இருவர் மீது மட்டும் மிகுதியான அன்பு கொண்டவனாக இருந்தான். இதைக்கண்டு கோபமுற்ற அவனது மற்ற மனைவிகள் இதுபற்றி தம் தந்தையான தட்சனிடம் முறையிட்டனர். இதைக் கேட்டு சினமடைந்த தட்சன், சந்திரனுக்குச் சாபம் கொடுத்தான். இதன் காரணமாக வெப்பு நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், பொலிவிழந்து தேயத் தொடங்கினான். தனக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி வருந்திய சந்திரன், தன் சாபத்துக்கு விமோசனம் என்னவென்று அகத்தியரிடம் கேட்டான். அதற்கு அவர், 'வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாயும் ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள வில்வ வனத்தில் உள்ள லிங்கத்தை கோவில் கட்டி வணங்கினால் இந்தப்பிணி நீங்கும்' என்று கூறினார்.
அதன்படியே சந்திரனும் செய்து தன் பிணியை நீக்கிக்கொண்டான். மேலும் சந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவபெருமான் தன் திருமுடியில் சந்திரனுக்கு இடம் தந்ததாக கோவில் தல வரலாறு தெரிவிக்கிறது. சந்திரன் தன்னுடைய கலைகளால் அபிஷேகம் செய்ததால் இங்குள்ள சுயம்பு லிங்கம் வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறது. இத்தலத்தில் சந்திர பகவான், தம் இரு மனைவியரான ரோகிணி, கார்த்திகை ஆகிய இருவருடன் ஒரே கல்லில் சிற்பமாக தனிச் சன்னிதியில் காட்சியளிப்பது இக்கோவிலின் தனிச் சிறப்பு.
மதுரையில் ஆட்சி செய்த நாயக்க வம்சத்திற்குப் பிறகு, வேற்று மதத்தினர் மதுரையம்பதியைக் கைப்பற்ற முனைந்தனர். அப்போது, சிவகங்கை மன்னர் சசிவர்ணரும், சேது காவலரும் இதை எப்படியாவது முறியடிக்க வேண்டுமென முடிவெடுத்தனர். வீரத்திற்கு இலக்கணம் வகுத்த தளவாய் வெள்ளையன் சேர்வைக்காரன் தலைமையில் சேது சேனையும், விவேகத்தில் சிறந்த தாண்டவராயப் பிள்ளை தலைமையில் சிவகங்கை மறவர் படையும் வீறு கொண்டு எழுந்தன. அவர்கள் ஆலவாய் அண்ணலையும், அங்கயற்கண்ணியையும் தக்க பாதுகாப்புடன் மானாமதுரைக்குக் கொண்டு வந்து சோமநாதர் கோவிலில் பாதுகாப்பாக வைத்ததாக சொல்லப்படுகிறது. மீனாட்சியும், சொக்கநாதரும் இரண்டு ஆண்டுகள் இவ்வாலயத்தில் வீற்றிருந்து பின்னர் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சரித்திரச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

இத்தலத்தில் பல சிறப்பு வாய்ந்த நிகழ்வுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சிவபெருமான் தனது திருவிளையாடலின் போது தமது அடியார் மாணிக்கவாசகருக்காக இத்தலத்தில்தான் நரிகளைப் பரிகளாக மாற்றிட, கயிறு மாற்றிக்கொடுத்தார். ராமர், அகத்தியரின் ஆலோசனைப்படி இங்கு வந்து இறைவனைப் பூஜித்து, அதன் பின்பு சேது பாலம் அமைத்து இலங்கைக்குச் சென்றார். ராமன், ராவணனுடன் போர் புரிந்த போது வானரச் சேனைகளின் பசியை போக்கிய தலம். பலராமர் தனது தீர்த்த யாத்திரையின் போது சூரனைக் கொன்றதால் பாவம் ஏற்பட்டது. அதன்பின் இத்தலத்திற்கு வந்து வில்வ வனத்தில் இருந்த லிங்கத்தினைப் பூஜித்து பாவவிமோசனம் பெற்று பின் துவாரகையை மீட்டார்.
ஐந்து நிலை கோபுரத்துடன் இக்கோவில் அமைந்துள்ளது. இந்த ராஜகோபுரத்தில் இத்தலத்தில் நிகழ்ந்த அற்புதங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது என்பது இக்கோவிலின் சிறப்புகளில் ஒன்றாகும். இக்கோவிலில் சோமநாத சுவாமி, ஆனந்தவல்லி அம்மன் சன்னிதிகளுடன், விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சதாசிவ பிரம்மேந்திரர் உபசன்னிதிகளும் உள்ளன. இங்குக் கோவில் தேர், கோவில் கல்வெட்டு போன்றவை உள்ளன. கோவிலின் தல விருட்சமாக வில்வ மரமும், தல தீர்த்தமாக சந்திர புஷ்கரணியும் உள்ளன. காரண ஆகமப்படி கோவிலில் வழிபாடுகள் நடைபெறுகின்றன.
மதுரையைப் போலவே இங்கும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. மதுரையில் மீனாட்சி சொக்கநாதர் என்றால், இங்கு ஆனந்தவல்லி சோமநாதராகக் காட்சியளிக்கிறார். மதுரையில் கள்ளழகர் என்றால், மானாமதுரையில் காட்சி தருபவர் வீர அழகர். மதுரையம்பதியில் மீனாட்சி சொக்கநாதருக்கு நடக்கும் திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை, அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், திரி எடுத்து சாமியாடுவது, பீச்சாங்குழல் சேவை என அனைத்தும் இப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார மக்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
இக்கோவிலில் காரண ஆகம முறைப்படி நான்கு காலப் பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு சித்திரை திருவிழா, ஆடி திருவிழா, சித்திரை தேரோட்டம், மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று உலக ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா விமரிசையாக நடைபெறும்.
இங்கிருக்கும் சந்திர புஷ்கரணியில் நீராடி இறைவனை மனமுருகி வழிபட்டால் தீராத சரும நோய்கள் குணமாகும் என்று சொல்லப்படுகிறது. இங்கு, ஆடித் தபசு திருநாளில் சுவாமிக்கு அணிவித்த மாலைகளை அணிந்து கொண்டால் திருமணத் தடை நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்வித்தால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
கோவில் தினமும் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் பக்தர் வழிபடுவதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் பிரதான சாலையில் 50 கிலோ மீட்டர் தொலைவில் மானாமதுரை சோமநாதர் ஆலயம் அமைந்துள்ளது.
- மானாமதுரை அருகே பெருங்கற்கால இரும்பு ஆலை எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
- உருக்கு கழிவுகள் அதிகம் காணப்படுகின்றன.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் வலசை கிராமம் காட்டுப்பகுதியில் தென்னக வரலாற்று மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், தருனேஷ்வரன் வரலாற்றுத் துறை பேராசிரியர் தங்கமுத்து ஆகியோர் அங்கு சென்று கள மேற்பரப்பாய்வு செய்தனர். அப்போது இந்தப்பகுதியில் பழங்கால இரும்பு உருக்காலை எச்சங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
இந்தப்பகுதியில் ஏராள மான பெருங்கற்கால இரும்பு உருக்கு கழிவுகளும், சுமார் 4 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட துண்டு குழாய்களும் உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப் பட்டன. இவை இரும்பு உலைகளை எரியூட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட வையாகும்.
ஏராளமான கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், இரும்பு, உருக்கு கழிவுகள் ஆகியவையும் அதிகம் காணப்படுகின்றன. பழங்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் இரும்பு பொருள்களை தயாரிக்கும் தொழிற்கூடத்தை அமைத்திருக்க வேண்டும்.
சுமார் 2,500 ஆண்டுக ளுக்கு முன்பு இங்கு இரும்பு காலத்தில் வாழ்ந்த ஆதிமனி தர்கள் வசித்திருக்கலாம். அவர்கள் இரும்பை உலையில் வைத்து தனியாக பிரித்து, அதன் மூலம் கத்தி, ஈட்டி, கோடாரி, வேல், போன்ற பல பொருள்களை தயாரித்துள்ளதை அறிய முடிகிறது. இந்தப்பகுதியில் இரும்பு உருக்கு கழிவுகள் குவியலாக காணப்படுகிறது, பல துண்டு குழாய்களும் மேற்பரப்பில் கண்டறி யப்பட்டது.
இந்தப்பகுதிகளில் பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு உருக்காலைகள் கண்டு பிடிக்கப்பட்டுள் ளதை பார்க்கும்போது இங்கு காணப்படும் அதிகப் படியான செம்பூரான் கற்களே இதற்கு காரணம் எனலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தி.மு.க. முன்னாள் எம்.பி. தா.கிருஷ்ணனின் 20-ம் ஆண்டு நினைவு நாள் நாளை நடக்கிறது.
- தி.மு.க.வினர் மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
காளையார்கோவில்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா கொம்புக்காரனேந்தலை சேர்ந்தவர் மறைந்த தா.கிருஷ் ணன். முன்னாள் எம்.பி.யான இவர் ஒருங்கிணைந்த ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாள ராகவும், சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் பணியாற்றி னார். இவர் கடந்த 2003-ம் ஆண்டு மே மாதம் 20-ந்தேதி மரணமடைந்தார்.
சிவகங்கை மாவட்டம் கொம்புக்காரனேந்தலில் தா.கிருஷ்ணனின் நினைவிடம் உள்ளது. ஆண்டுதோறும் மாவட்ட தி.மு.க. சார்பில் அவரது நினைவை போற்றும் வகையில் கொம்புக்கார னேந்தலில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
நாளை (20-ந்தேதி) சனிக்கிழமை காலை 10 மணி அளவில் கொம்புக்கார னேந்தலில் உள்ள தா.கிருஷ்ணன் நினைவிடத்தில் சிவகங்கை மாவட்ட செயலா ளரும், அமைச்சருமான கே ஆர்.பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.வினர் மலர் அஞ்சலி செலுத்து கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை தா.கிருஷ்ணன் குடும்பத்தினர், சிவகங்கை மாவட்ட தி.மு.க.வினர் செய்து வருகிறார்கள். நினைவுநாள் நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதிலும் உள்ள தி.மு.க. நிர்வாகி கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேருர் செயலா ளர்கள், சார்பு அணி நிர்வாகி கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்-அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழா தொடங்கியது. 30-ந் தேதி தபசு உற்சவம் நடக்கிறது.
- 11 நாட்கள் திருவிழா நடைபெறும்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆடித் திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடி யேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு கலச நீர், 16 வகையான வாசனை பொருள்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் தர்ப்பைப்புல், மலர் மாலைகள் சாற்றி, சிறப்பு பூஜைகள், தீபாராத னை நடந்தது. பூஜைகளை கோவில் பரம்பரை ஸ்தானிகம் தெய்வசிகாமணி, பட்டர்கள் ராஜேஷ், சரவணன், குமார் நடத்தி வைத்தனர்.
இதில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமி ழரசி, நகர் மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. தொடர்ந்து 11 நாட்கள் திருவிழா நடைபெறும்.
தினமும் அம்மன் சர்வ அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான தபசு உற்சவம் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. தபசு கோலத்தில் எழுந்தருளும் அம்மனுக்கு சோமநாத சுவாமி விருஷா பரூடராக காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும். 31-ந் தேதி சந்தனக்காப்பு உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
- மதுரை அருகே பிராகுடியில் ஆயிரம் ஆண்டு பழமையான பாண்டியர் கால அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது.
- முற்கால பாண்டியர்களின் கலைநயத்தில் உருவானதாக இருக்கலாம்.
மானாமதுரை
மதுரை மாவட்டம் விரகனூர் சுற்றுச்சாலையில் இருந்து கல்லம்பல் செல்லும் வழியில் உள்ள பிராகுடி என்ற ஊரின் வயல் பகுதியில் பழமையான சிலை இருப்பதாக மதுரை தெப்பக்குளம் ஸ்ரீமந் நாயகியார் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவன் சேசனுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அந்த மாணவர் தொல்லியல் கள ஆய்வாளர் மீனாட்சி சுந்தரத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று அவர் அந்த சிலையை ஆய்வு செய்ததில் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த அய்யனார் சிற்பம் என்பது தெரியவந்தது.
இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது:-
இந்த சிற்பம் 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதி மகுடத்துடன் கூடிய விரிந்த ஜடா பாரத்துடன் உள்ளது, இரு காதுகளிலும் பத்ர குண்டலம் அணிந்துள்ளார், கழுத்தில் ஆபரணமும், மார்பில் முப்புரிநூலும், கைகளில் தோள்வளையும், கை வளையல்களுடனும் அய்யனார் சிற்பம் அமைந்துள்ளது. வலது கரத்தில் பூச்சென்டினை பிடித்தபடியும்
இடது கரம் கஜ ஹஸ்தத்தை முன்னோக்கி நீட்டியவாறு மடக்கி நிறுத்திய முழங்கால் மீது இடது கை மணிக்கட்டை வைத்த நிலையில் தண்ட ஹஸ்தமாகவும் சிற்பம் நேர்த்தியாக வடிக்கப் பட்டுள்ளது. இடது காலை பீடத்தின் மீது குத்தவைத்தும் வலது காலை கீழே தொங்க விட்டும் உத்குடிகாசன கோலத்தில் அமர்ந்தபடி அய்யனார் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த
சிற்பத்தின் வடிவ மைப்பை வைத்துப் பார்க்கும்போது இவை முற்கால பாண்டியர்களின் கலைநயத்தில் உருவானதாக இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மானாமதுைரயில் திருகூடல்மலை நவநீதபெருமாளை பக்தர்கள் வரவேற்றனர்.
- இரவு வைகை கரை அய்யனார் கோவிலில் எழுந்தருளினார்.
மானாமதுரை
மதுரை திருப்பரங்குன்றம் திருகூடல்மலை நவநீத பெருமாள் மானாமதுரை வைகை கரை அய்யனார் கோவிலில் எழுந்தருளும் வைபவம் நடந்தது. இதற்கான கடந்த 1-ந்தேதி திருகூடல் மலையில் இருந்து பல்லக்கில் சாமி புறப்பட்டார்.
ஆரப்பாளையம், கோரிப் பாளையம், அண்ணா நகர், வண்டியூர், திருப்புவனம், திருப்பாசேத்தி, முத்த னேந்தல், ராஜகம்பீரம் வழியாக மானாமதுரை வந்தடைந்தார்.மானாமதுரையில் மாரியம்மன் கோவில் தெரு, பழைய தபால் ஆபிஸ் தெரு, சுந்தர புரம் கடைவீதி , பட்டரைதெரு, வேளார் தெரு வழியாக குதிரை வாகனத்தில் புறப்பட்டு இரவு தாயமங்கலம் ரோடு அலங்கார் நகரில் உள்ள வைகை கரை அய்யனார் கோவிலில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா.... என கோஷமிட்டு அவரை வரவேற்றனர்.கோவிலில் சாமியை ஆரத்தி எடுத்து மஞ்சள் பட்டு சாற்றி வரவேற்றனர்.
அதை தொடர்ந்து நவநீத பெருமாள் மற்றும் கோவி லில் உள்ள அய்யனார், சோனையா , மகாசித்தர் கட்டிக்குளம் மாயாண்டி சித்தர் சன்னதிகளில் சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு முழுவதும் காத்திருந்து ஏராளமான பக்தர்கள் நவநீதபெருமாளை தரிசனம் செய்தனர். இன்று காலை சங்கு பிள்ளையார் கோவி லில் இருந்து பல்லக்கில் புறப்பட்ட பெருமாள் 24 -ந்தேதி திருகூடல்மலை சென்ற டைவார்.
- மானாமதுரையில் வைகையாறு சுத்தப்படுத்தும் பணிகளை அமைச்சர் பார்வையிட்டார்.
- நகராட்சி துணை தலைவர் பாலசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதியில் வைகையாற்றை சுத்தப்படுத்தும் பணி நீர்நிலை பாதுகாப்புக்குழு சார்பில் நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி முன்னிலை வகித்தனர்.
கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள், இந்தோ திபெத் எல்லைப் படை வீரர்கள், நீர்நிலை பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், நகராட்சி தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் இணைந்து ஆனந்தவல்லி அம்மன் கோவில் எதிரே வைகையாற்றுக்குள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அங்கு வளர்ந்திருந்த அமலைச்செடிகளை அகற்றினர். மேலும் குப்பைகளையும் அப்புறப் படுத்தினர். அமைச்சர் பெரியகருப்பன் நேரில் வந்து இந்த பணிகளை பார்வையிட்டார். பின்னர் ஆற்றங்கரையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
பின்னர் அவர் கூறுகை யில், சிவகங்கை மாவட்டத் தில் வைகையாறு சுத்தப் படுத்தும் பணி ஏற்கனவே திருப்புவனத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இதே போன்று மாவட்டம் முழு வதுமுள்ள நீர்நிலைகளை தூய்மைப்படுத்தி அதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் இந்த பணியில் தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகத்தை அணுகி தங்கள் பங்க ளிப்பை வழங்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ரங்க நாயகி, ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா அண்ணா துரை, நகராட்சி துணை தலைவர் பாலசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மானாமதுரையில் கழிவுநீர் கால்வாய் தூய்மை பணி தொடக்கப்பட்டது.
- மழை தண்ணீர், கழிவு நீர் தடையின்றி செல்வது கண்காணிக்கப்படும்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கால்வாய்களில் தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்றி சீரமைக்கும் பணிகள் தொடங்கியது. 27-வது வார்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். சுற்றுப்புற தூய்மை குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம், தி.மு.க. நகர செயலாளர் பொன்னுச்சாமி, நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து மாரியப்பன்கென்னடி கூறியதாவது:-
மானாமதுரை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் கால்வாய்களில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளால் மழை நேரங்களில் கால்வாய் வழியாக மழைநீர் செல்ல முடியாத நிலை இருந்து வருவதாக புகார் வந்தது. இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் கால்வாய்களில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளை வெளியேற்ற ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கால்வாய்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றிய பின்னர் கால்வாய்கள் வழியாக மழை தண்ணீர், கழிவு நீர் தடையின்றி செல்வது கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- மானாமதுரையில் மாரத்தான் ஓட்டம் நடந்தது.
- மானாமதுரை அருகேயுள்ள பீசர்பட்டிணம் வரை 5.5 கி.மீ ஓட்ட தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. இங்குள்ள ஹார்ட்புல்னெஸ் தியான மையம் சார்பில் நடத்தப்பட்ட பசுமைப்புரட்சி மாரத்தான் ஓட்டத்தை மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கோட்டாட்சியர் சுகிதா, நகர்மன்றத் தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாரத்தான் ஓட்டத்தில் மாணவ, மாணவிகள், பெரியவர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர். மானாமதுரை அருகேயுள்ள பீசர்பட்டிணம் வரை 5.5 கி.மீ ஓட்ட தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மாரத்தான் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் சுரேந்தர் முதலிடத்தையும், அய்யனார் 2-ம் இடத்தையும், ஹரிஷ் 3-ம் இடத்தையும் பெற்றனர். பெண்கள் பிரிவில் ஹரிணி முதலிடத்தையும், கோபிகா 2-ம் இடத்தையும், வர்ஷா 3-ம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். இவர்களுக்கு சுழற்கேடயங்கள், பதக்கங்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது. மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு சுவைமிகு உணவும், மரகன்றுகளும் வழங்கப்பட்டது.
- இளையான்குடி அருகே வரும்முன் காப்போம் திட்டத்தை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- சிறப்பு மருத்துவர்கள் உட்பட20 மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் , செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் பெரும்பச்சேரியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் சாவித்திரி முருகன் தலைமை வகித்தார்.
ஒன்றியத் தலைவர் முனியாண்டி, ஒன்றியக் குழு உறுப்பினர் முருகன் முன்னிலை வகித்தனர், மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி குத்துவிளக்கேற்றி மருந்துப்பெட்டகம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கி பேசினார்.
இதில் சிவகங்கை மாவட்ட துணை இயக்குநர் ராம்கணேஷ், இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர்- முன்னாள் எம்.எல்.ஏ. சுபமதியரசன், ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் கருணாகரன், மலைமேகு, தமிழரசன், கண்ணன், சுதர்சன், சரவணன், மற்றும் சிறப்பு மருத்துவர்கள் உட்பட20 மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் , செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் ஆரோன், தாமோதரன் ஆகியோர் செய்திருந்தனர்.
- மானாமதுரையில் சிறப்பு ரெயில் நின்று செல்லும் என்ற அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தமிழரசி எம்.எல்.ஏ. தென்னக ரெயில்வேக்கு நன்றி தெரிவித்தார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கடந்த 4-ந்தேதி முதல் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து மானாமதுரை ஜங்ஷன் வழியாக வேளாங்கண்ணி வரை புதிதாக எக்ஸ்பிரஸ் ரெயில் விடப்பட்டது.
இதில் மானாமதுரை நிறுத்தம் இல்லாமல் இருந்தது. இதனால் மானாமதுரை மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி தென்னகரெயில்வே மேலாளர், மத்திய ரெயில்வே அமைச்சகம், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பினார். அதில், எர்ணாகுளம்- வேளாங்கன்னி சிறப்பு ரெயில் மானாமதுரையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதை அடுத்து இந்த வாரம் முதல் புதிய வாரந்திரரெயில் மானா மதுரை ஜங்சனில் நின்று செல்லும் என அறிவிப்பு வெளியானது.
எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம் ,புனலூர்,செங்கோட்டை, விருதுநகர், காரைக்குடி, திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் இந்த சிறப்பு ெரயிலுக்கு மானாமதுரை ரெயில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மிக முக்கிய சந்திப்பு ரெயில் நிலையமான மானாமதுரை ரெயில் நிலையத்தில் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் நிற்காமல் சென்றது.
தற்போது கடந்த 4-ந் தேதி முதல் ஆகஸ்ட் 6-ந் தேதி வரை, 10 சேவைகள் இயங்கும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரெயில் கொல்லம் ,புனலூர், செங்கோட்டை ,கடையநல்லூர், சங்கரன்கோவில், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக செல்லும்.
இந்த ெரயிலுக்கு மானாமதுரையில் ரெயில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழரசி எம்.எல்.ஏ. தென்னக ரெயில்வேக்கு நன்றி தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மானாமதுரை ரெயில் நிலையத்திற்கு ரெயில் நிறுத்தம் வழங்க வேண்டுமென்று தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
எனது கோரிக்கையை ஏற்று மானாமதுரையில் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மானாமதுரை சட்ட மன்ற தொகுதி மக்கள் சார்பில் ரெயில்வே அதிகாரிகளுக்கு நன்றி யையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.






