search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மானாமதுரையில் சிறப்பு ெரயில் நின்று செல்லும்
    X

    தமிழரசி எம்.எல்.ஏ. 

    மானாமதுரையில் சிறப்பு ெரயில் நின்று செல்லும்

    • மானாமதுரையில் சிறப்பு ரெயில் நின்று செல்லும் என்ற அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • தமிழரசி எம்.எல்.ஏ. தென்னக ரெயில்வேக்கு நன்றி தெரிவித்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கடந்த 4-ந்தேதி முதல் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து மானாமதுரை ஜங்ஷன் வழியாக வேளாங்கண்ணி வரை புதிதாக எக்ஸ்பிரஸ் ரெயில் விடப்பட்டது.

    இதில் மானாமதுரை நிறுத்தம் இல்லாமல் இருந்தது. இதனால் மானாமதுரை மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி தென்னகரெயில்வே மேலாளர், மத்திய ரெயில்வே அமைச்சகம், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பினார். அதில், எர்ணாகுளம்- வேளாங்கன்னி சிறப்பு ரெயில் மானாமதுரையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    இதை அடுத்து இந்த வாரம் முதல் புதிய வாரந்திரரெயில் மானா மதுரை ஜங்சனில் நின்று செல்லும் என அறிவிப்பு வெளியானது.

    எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம் ,புனலூர்,செங்கோட்டை, விருதுநகர், காரைக்குடி, திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் இந்த சிறப்பு ெரயிலுக்கு மானாமதுரை ரெயில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மிக முக்கிய சந்திப்பு ரெயில் நிலையமான மானாமதுரை ரெயில் நிலையத்தில் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் நிற்காமல் சென்றது.

    தற்போது கடந்த 4-ந் தேதி முதல் ஆகஸ்ட் 6-ந் தேதி வரை, 10 சேவைகள் இயங்கும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரெயில் கொல்லம் ,புனலூர், செங்கோட்டை ,கடையநல்லூர், சங்கரன்கோவில், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக செல்லும்.

    இந்த ெரயிலுக்கு மானாமதுரையில் ரெயில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழரசி எம்.எல்.ஏ. தென்னக ரெயில்வேக்கு நன்றி தெரிவித்தார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மானாமதுரை ரெயில் நிலையத்திற்கு ரெயில் நிறுத்தம் வழங்க வேண்டுமென்று தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

    எனது கோரிக்கையை ஏற்று மானாமதுரையில் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மானாமதுரை சட்ட மன்ற தொகுதி மக்கள் சார்பில் ரெயில்வே அதிகாரிகளுக்கு நன்றி யையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×