search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "works"

    • கடந்த 6 ஆண்டுகளாக மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது.
    • எந்தப் பணிகளும் மேற்கொள்ளாமல் கர்நாடகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசிய அம்மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட்,''காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்குடன், வனத்துறையிடமிருந்து எடுக்கப்படும் நிலத்திற்கு மாற்றாக வேறு நிலம் வழங்குவதற்கும், அணைக்கான நிலம் கையகப்படுத்தல் மற்றும் திட்டமிடல் பணிகளை விரைவுபடுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என்று தெரிவித்திருக்கிறார்.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடக அரசு கடந்த 50 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் போதிலும், கடந்த 6 ஆண்டுகளாக மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மத்திய அரசு அளித்த அனுமதி தான் கர்நாடகத்தின் இந்த அத்துமீறல்கள் அனைத்துக்கும் அடிப்படை ஆகும். இந்த அனுமதியைப் பயன்படுத்தி தான் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம் தயாரித்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் தாக்கல் செய்து, அதற்கு ஒப்புதல் கேட்டுக் கொண்டிருக்கிறது.

    தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, விரிவான திட்ட அறிக்கை குறித்து விவா திக்கவும், அதனடிப்படையில் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கவும் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

    அவ்வாறு இருக்கும் போது மேகதாது அணை கட்டுவதற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்வது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானது ஆகும்.

    மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என கர்நாடகம் கூறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கும் எதிரானது.

    மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதி தவறு; அதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறித்தான் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. வரைவு திட்ட அறிக்கைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுவிட்டால், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை செல்லாததாகி விடும். அதனால், மேகதாது அணை குறித்த எந்த பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ள முடியாது.

    இதை தெரிந்து கொண்டும் அணைக்கான பணிகளை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது. இந்த சிக்கலில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, மேகதாது அணை குறித்த பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடகத்தை எச்சரிக்க வேண்டும்; எந்தப் பணிகளும் மேற்கொள்ளாமல் கர்நாடகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வடகிழக்கு பருவமழையால் விளக்கு தயாரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
    • வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தாணிகோட்டகம் செட்டி புலம், செம்போடை ,பிராந்தியங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கார்த்திகை தீபத் திருவிழா ஒட்டி அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கார்த்திகை தீபத் திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான மண் பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் ஆனால் வடகிழக்கு பருவ மழையால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன இதுவரை தயாரித்து உள்ள அகல்விளக்குகள்வீட்டின் உள்ளே காயவைத்து வருகின்றனர்.

    வரும் நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கும் நிலையில் விளக்குகள் தயாரிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது மண்பாண்ட தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது

    எனவே தமிழ்நாடு அரசு மண்பாண்ட தொழிலாளர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

    • அந்த பகுதி கவுன்சிலரும், நகர தி.மு.க செயலாளருமான ராமசாமி முயற்சிக்கு வெற்றி
    • பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் பணிகள் நடந்து வருகிறது

    அருவங்காடு,

    குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட மவுண்ட் பிளசன்ட் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள கூட்டுறவு பண்டகசாலைக்கு சொந்த கட்டிடம் இல்லை. இதுகுறித்து பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதுகுறித்து அந்த பகுதி கவுன்சிலரும், நகர தி.மு.க செயலாளருமான ராமசாமி, நீலகிரி எம்பி ராசாவிடம் வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து மவுண்ட்பிளசன்ட் பகுதியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் கூட்டுறவு பண்டகசாலை கட்டும் பணி நடந்து வருகிறது. இதனை அந்த பகுதி கவுன்சிலர் ராமசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • கடந்த கஜா புயலின் போது கல்லூரி கட்டிடத்தின் முன்பக்க சுவர் மற்றும் கண்ணாடிகள் பாதிக்கப்பட்டது.
    • இதனை அப்பகுதி மக்கள் வெகுவாய் பாராட்டி வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அடுத்த தண்டலை ச்சேரியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த கஜா புயலின் போது கல்லூரி கட்டிடத்தின் முன்பக்க சுவர் மற்றும் கண்ணாடிகள் பாதிக்கப்பட்டது.

    மேலும், சில ஆண்டுகளாக அந்த சுவர் சரிசெய்ய ப்படாமல் இருந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அதனை அடுத்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயின் பரிந்துரையின் பேரில் உடனடியாக காவேரி படுகை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலம் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை அப்பகுதி மக்கள் வெகுவாய் பாராட்டி வருகின்றனர்.

    • நகரமன்ற உறுப்பினரின் தொடர் முயற்சிக்கு வெற்றி
    • அக்கீம்பாபு, நாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் மேரிஸ்ஹில் பகுதியில் இருந்து ஜெ.எஸ்.எஸ் வரையிலான சாலையில் மழைநீர் கால்வாய் தோண்டப்பட்டும் கல்வெட்டு போடாமல் இருந்தது. எனவே அந்த பகுதியில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டது.இந்த நிலையில் அப்பகுதி நகரமன்ற உறுப்பினரின் தொடர் முயற்சியால், அங்கு ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய கல்வெட்டு அமைக்கும் பணி துவங்கியது.

    இந்த பணிகளை நகரமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க பாசறை மாவட்டசெயலாளருமான அக்கீம்பாபு மற்றும் நகரமன்ற உறுப்பினர் நாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

    • நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் வழங்கப்பட உள்ளது.
    • தற்போது வரை 52 சதவீதம் அளவிற்கு பணிகள் முடிவடைந்துள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், திருவையாறு (பகுதி), தஞ்சாவூர் (பகுதி) ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 214 ஊரகக் குடியிருப்புகளுக்கு 2 லட்சத்து 25 ஆயிரத்து 453 பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.248.67 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுவதற்கான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

    இந்த நிலையில் தஞ்சை ரெட்டிபாளையம் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் பணிகள் நடந்து வருவதை இன்று துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் நீர்த்தேக்க தொட்டியில் ஏறி நின்று பணிகள் நடந்து வருவதை பார்வையிட்டார் . அவரிடம் நடந்து வரும் பணிகள் குறித்து குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஜெயக்குமார், உதவி நிர்வாக பொறியாளர் ஜீவசங்கர் ஆகியோர் விளக்கி கூறினர்.

    அப்போது துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. இந்த பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    பின்னர் இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பூதலூர் ஒன்றியம் திருச்சென்னம்பூண்டி ஊராட்சி அருகில் கொள்ளிடம் ஆற்றில் புதிய நீர் சேகரிப்பு கிணறு ஒன்றும் மற்றும் தோகூர் ஊராட்சி அருகில் காவிரி ஆற்றில் புதிய நீர் உறிஞ்ச கிணறு ஒன்றும் அமைக்கப்பட்டு அதிலிருந்து மின் மோட்டார் மூலம் 16.78 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு அகரப்பேட்டை ,கடம்பக்குடி, சித்திரக்குடி ஆகிய கிராமங்களில் புதிதாக கட்டப்பட உள்ள முறையை 2.05, 2.70 மற்றும் 4.60 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் பகிர்மான நிலையங்கள், நந்தவனப்பட்டி கிராமத்தில் பயன்பாட்டில் உள்ள 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் பகிர்மான நிலையம் மூலம் 190.715 கி.மீ. நிலத்திற்கு நீர் உந்து குழாய்கள் பதிக்கப்பட்டு 72 தரைமட்ட நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட உள்ளது.

    தரைமட்ட நீர் தேக்க தொட்டியில் இருந்து 255.91 கி.மீ. நீளம் குழாய்கள் பதித்து ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 305 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மற்றும் புதிதாக கட்டப்பட உள்ள 23 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் பொதுமக்களுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் வழங்கப்பட உள்ளது.

    இந்தத் திட்டமானது அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

    தற்போது வரை 52 சதவீதம் அளவிற்கு பணிகள் முடிவடைந்துள்ளன.

    இந்த திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்த கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்

    ஆய்வின் போது தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி (தெற்கு), முரசொலி (வடக்கு), உலகநாதன் (மேற்கு ), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ராகவேந்திரா நகர்கிளை செயலாளர் புண்ணியமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

    • மொத்தம் ரூ.1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை அரவக்குறிச்சிஎம்.எல்.ஏ. மொஞ்சனூர் பி.ஆர். இளங்கோ தொடங்கி வைத்தார்.
    • துணைத்தலைவர்கள், மேற் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கரூர்

    க.பரமத்தி ஒன்றிய பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் தென்னிலை மேற்கு ஊராட்சி சின்ன வாங்கலாம்பாளையம் முதல் சின்னதோட்டம்புதூர் வரை ரூ.46 லட்சத்திலும், கோடந்தூர் ஊராட்சி கோடந்தூரில் இருந்து சின்ன குமாரவலசு வரை ரூ.46 லட்சத்திலும், ஆனந்தகுட்டை முதல் வடகரை வரை ரூ. 39 லட்சத்து 61 ஆயிரத்தில் தார் சாலைகள், துக்காச்சி ஊராட்சியில் ரூ.25 லட்சத்தில் சமுதாய கூடம், மொஞ்சனூர் ஊராட்சி வைரமடையில், ரூ.16 லட்சத்தில் பவர் பிளாக் அமைக்கும் பணிகளுக்கு பூஜை நடைபெற்றது. மொத்தம் ரூ.1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை அரவக்குறிச்சிஎம்.எல்.ஏ. மொஞ்சனூர் பி.ஆர். இளங்கோ தொடங்கி வைத்தார்.

    இதில் மாவட்ட கவுன்சிலர் நெடுங்கூர் கார்த்தி, வட் டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி (ஊராட்சிகள்), தென்னிலை மேற்கு ஊராட்சி மன்றத்த லைவர் சொர்ணலதா கார்த்திகேயன், கோடந்தூர் ஊராட்சி பிளாக் மன்றத்த லைவர் உமாமகேஸ்வரி, துணைத்தலைவர்கள், மேற் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இவர்கள் இருவரும் மாநகராட்சி பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்து வந்தனர்.
    • இதில் பலத்த காயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    கடலூர்:

    சென்னை திருவெற்றியூர் விம்கோ நகரை சேர்ந்தவர் விவேகானந்தன். தி.மு.க பிரமுகர். இவரது மகன் காமராஜ் (வயது 35) இவர்கள் இருவரும் மாநகராட்சி பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்து வந்தனர். கடந்த மாதம் 26-ந் தேதி காமராஜ் தனது அலுவகத்தில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் காமராஜை சரமாரி வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை எண்ணூரை சேர்ந்த அரவிந்தன்(25), இளந்தமிழன்(23), தினேஷ்(31), மனோ என்கிற மணவாளன்(29),காந்தி(23), திருவள்ளுர் மாவட்டம் கவுண்டர்பாளையம் ஜமாலுதின்(31) ஆகியோர் இன்று கடலூர் ஜே.எம். எண்.3 நீதிபதி ரகோத்தம்மன் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க எண்ணூர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • ஊராட்சி தலைவர் எம்.கலையரசி முத்து, துணை தலைவர் மஞ்சை மோகன் குழுவினர் மும்முரம்
    • அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பொதுமக்கள் வாழ்த்து

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவின்பேரில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.ஸ்ரீதரன், தே.நந்தகுமார் அறிவுரைப்படி, ஊராட்சி தலைவர் எம்.கலையரசி முத்து, துணை தலைவர் மஞ்சை மோகன், ஊராட்சி செயலர் கார்த்திக் ஆகியோர் தலைமையில் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலகொலா ஊராட்சியில் தற்போது மக்கள் நலத்திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அதிலும் குறிப்பாக 2022 மற்றும் 2023-ம் நிதியாண்டில் 15-வது நிதிகுழுமானிய திட்டம் மூலம் ரூ.98.87 லட்சம் மதிப்பிலும், ஜெ.ஜெ.எம்.திட்டம் மூலம் ரூ.404.29 லட்சம் மதிப்பிலும், ஊராட்சி நிதி திட்டம் மூலம் ரூ.49.94 லட்சம் மதிப்பிலும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் ரூ.78.50 லட்சம் மதிப்பிலும் பல்வேறு மக்கள்நலத்திட்டபணிகள் நடைபெற்று வருகின்றன.

    பாலகொலா ஊராட்சியில் ஒரே ஆண்டில் சுமார் 6.30 கோடி லட்சம் மதிப்பில் மக்கள் நலப்பணிகள் செய்து சாதனை படைத்து உள்ளனர். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    • ஊராட்சி துணைத்தலைவர் மஞ்சை.வி. மோகன் ஆய்வு
    • பணிகளை தரமாகவும், குறித்த நேரத்தில் முடிக்கவும் அறிவுறுத்தல்

    ஊட்டி,

    பாலகொலா ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இதன்ஒருபகுதியாக மைனலைமட்டம் பஜார் பகுதியில் ரூ.4.80 லட்சம் மதிப்பில் புதிய கழிவுநீர் கால்வாய்ப்பணிகள் நடக்கிறது.

    இதனை பாலகொலா ஊராட்சி துணைத்தலைவர் மஞ்சை.வி. மோகன் நேரடியாக ஆய்வு செய்து பணிகளை தரமாகவும், குறித்த நேரத்தில் முடிக்கும்படியும் அறிவுறுத்தினார். அப்போது மைனலைமட்டம் வார்டு உறுப்பினர் சுப்பிரமணி, ஊராட்சி செயலாளர் கார்த்திக், ஒப்பந்ததாரர் ராஜன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • ரூ.6.04 கோடியில் உயா்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கியது.
    • 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதம் 15-ந் தேதி முடிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் அருகே வல்லம் - கள்ளப்பெரம்பூா் சாலையில் முதலைமு த்துவாரி கால்வாய் குறுக்கே நடைபெறும் பால கட்டுமானப் பணிகளை கலெக்டர் தீபக்ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது :-

    முதலைமுத்துவாரி கால்வாய் குறுக்கே 43.6 மீட்டா் நீளத்திலும், 10.5 மீட்டா் அகலத்திலும் ரூ. 6.04 கோடியில் உயா்மட்ட பாலம் கட்டும் பணி 2020, நவம்பா் 9 ஆம் தேதி தொடங்கியது.

    அடித்தளப் பணிகள், மேல்தளங்கள், தாங்கு சுவா் அமைக்கும் பணிகள் முடிவுற்று, தற்போது பாலத்தின் தளம், அணுகுசாலைப் பணிகள் நடைபெறுகின்றன. கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் நிறைவடை ந்துள்ளன. இக்கட்டுமான பணி நவம்பா் 15 ஆம் தேதி முழுமையாக முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். பின்னா், அவர் திருமலை சமுத்திரம் ஊராட்சியில் மகளிா் சுயஉதவிக் குழுவினா் ரெக்சின் பைகள் தயா ரிப்பதைப் பாா்வையிட்டு, அவா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா். இதையடுத்து, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் செயல்படுகிற நூலகத்தை பாா்வையிட்டு, வருகைப் பதிவேடு, புத்தகங்களின் இருப்பு விவரத்தையும் ஆய்வு செய்தாா்.

    அப்போது நெடுஞ்சா லைத் துறைக் கோட்டப் பொறியாளா் செந்தில்கு மாா், உதவி கோட்டப் பொறியாளா்கள் செந்தி ல்குமாா், கீதா, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் உமாமகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்கொடி , ராஜா, பெர்சியா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • முதல் தளத்தில் 7 கடைகளும், 6 தங்கும் அறைகளும், கழிப்பறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    • இனிமேல் ஆம்னி பஸ்கள் இந்த நிலையத்திலிருந்து தான் இயக்கப்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை சாலையோரத்தில் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டு இயக்கப்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 10.41 கோடி மதிப்பில் ஆம்னி பஸ் நிலையம் கட்டப்பட்டது.

    சுமார் 5,400 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்நிலையத்தில் 25 பஸ்கள் நிறுத்துவதற்கு ஏற்ப நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தரைதளத்தில் 9 கடைகள், ஆம்னி பேருந்துகளின் 18 அலுவலகங்கள், ஆண், பெண் கழிப்பறைகள், பொருள்கள் வைப்பறை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. முதல் தளத்தில் 7 கடைகளும், 6 தங்கும் அறைகளும், கழிப்பறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையத்தைத் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை 27 ஆம் தேதி திறந்து வைத்தார். அதன் பின்னரும் பணிகள் நடைபெற்று வந்ததால், மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், ஆம்னி பஸ் நிலையத்தை நேற்று மாலை பயன்பாட்டுக்கு மேயர் சண். ராமநாதன் கொண்டு வந்தார். இதையடுத்து அங்கிருந்து பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

    அப்போது மேயர் சண் ராமநாதன் கூறுகையில், இனிமேல் ஆம்னி பஸ்கள் இந்நிலையத்திலிருந்து தான் இயக்கப்பட வேண்டும். இதை மீறினால் போக்குவரத்து துறை, காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சேகர் ,புண்ணியமூர்த்தி மற்றும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×