என் மலர்

    நீங்கள் தேடியது "works"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொல்காப்பியர் சதுக்கம் பராமரிப்பு இன்றி செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சியளித்தது.
    • சமூக விரோதிகள் செயலால் பொதுமக்கள் இங்கு வர அச்சப்படுகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் கடந்த 1995-ம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு நடந்தது. அதன் நினைவாக தஞ்சாவூர் தொம்பன் குடிசை பகுதியில்

    5 அடுக்கு கோபுரம் அமைப்பாக தமிழ் மொழிக்கு தொன்மையான இலக்கணம் படைத்த "தொல்காப்பியர் நினைவு கோபுரம்" அமைக்கப்பட்டது.

    தஞ்சையிலிருந்து நாகை -பட்டுக்கோட்டை சாலைகள் பிரியும் சந்திப்பில் இந்த இடம் "தொல்காப்பியர் சதுக்கம்" என பெயரிடப்பட்டது.

    இங்கு பூங்காவுடன் அமைக்கப்பட்ட கோபுரம் இப்பகுதியை சுற்றியுள்ள குடியிருப்பு மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் இடமாக விளங்கியது.

    இந்த பூங்காவில் செயற்கை நீரூற்றுகள், சிறுவர்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல், சறுக்கி விளையாடுவதற்கு இடம் என பார்த்து பார்த்து அமைக்கப்பட்து.

    இப்படி தஞ்சாவூர் அடையாளமாக விளங்கிய தொல்காப்பியர் சதுக்கம் நாளடைவில் போதிய பராமரிப்பு இன்றி செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சியளித்தது.

    செயற்கை நீரூற்றுகள் மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து உபகரணங்களும் சேதமடைந்தன.

    பூங்கா வளாகத்திற்குள் சமூக விரோதிகள் சிலர் உள்ளே ஏறி குதித்து மதுவை குடித்து விட்டு பாட்டில்களை அப்படியே போட்டு சென்றனர்.

    இதனால் பூங்காவுக்கு வர பொதுமக்கள் அச்சப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று மதியம் தொல்காப்பியர் சதுக்கம் பூங்காவில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொல்காப்பியர் சதுக்கத்தில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது :-

    தஞ்சாவூர் அடையாளமாக

    தொல்காப்பியர் சதுக்கம் விளங்கியது. சமூக விரோதிகள் செயலால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் இங்கு வர அச்சப்படுகின்றனர்.

    அந்த நிலையை மாற்ற முடிவு செய்துள்ளோம். மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெற்று தொல்காப்பியர் சதுக்கத்தில் விரைவில் பராமரிப்பு , புனரமைப்பு பணிகள் நடைபெறும்.

    இதற்கு முன்னர் இருந்ததை விட கூடுதலாக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

    சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் சரி செய்யப்பட்டு கூடுதலாக உபகரணங்கள் அமைக்கப்படும்.

    சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் பொழுது போக்குவதற்கு ஏற்ற இடமாக மாற்றப்படும்.

    வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும்.

    வளாகம் சுத்தப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படும். முழு பாதுகாப்புடன் தொல்காப்பியர் சதுக்கம் இருக்கும்.

    இதன் மூலம் சமூக விரோதிகள் நடமாட்டம் முற்றிலும் இருக்காது.

    மின்விளக்கு, குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும்.

    ஒட்டு மொத்தத்தில் அனைத்து விதமான வசதிகளும் ஏற்படுத்தி தொல்காப்பியர் பூங்கா பராமரிக்கப்படும் .

    கலெக்டர் ஒப்புதல் உடன் விரைவில் புனரமைப்பு பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரூ.7.66 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் தொடங்கிவைக்கப்பட்டது
    • அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், துங்கபுரம், கருப்பட்டாங்குறிச்சி, அத்தியூர், லெப்பைக்குடிக்காடு கீழப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் க.கற்பகம், தலைமையில் சுமார் ரூ.7.66 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, முடிவுற்ற திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்க்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் பேசும் போது,

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பொற்கால ஆட்சியில் பெரம்பலுார் மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், லெப்பைக்குடிக்காடு பகுதியில் குடிநீர் மேம்பாட்டு திட்டம், மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு நிழற்குடை அமைக்கும் பணி மற்று ம் ஜமாலியா நகரில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணிகள் தொட ங்கிவைக்கப்பட்டுள்ளது. ஜமாலியா நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கைியனை விரைவில் நிறைவேற்றும் வகையில் உரிய நடவடிக்க எடுக்கப்படும். சிறுபான்மையினர் இன மக்களுக்கு பாதுகாப்பு அரணாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதி மென்மேலும் வளர பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 150 மிதவைகள் கொண்டு கட்டமைப்பு பணிகள் முடிக்கப்பட்டது.
    • தெப்ப உற்சவம் நாளை 16-ந் தேதி இரவு நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

    இவ்வாலயத்தில் நடைபெற உள்ள தெப்ப உற்சவத்தை யொட்டி 25 அடி நீளமும் 25 அடி அகலத்துடன் பிரம்மாண்டமான முறையில் 150 மிதவைகள் கொண்டு கட்டமைப்பு பணிகள் முடிக்கப்பட்டது.

    தொடர்ந்து தெப்பம் அலங்கரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தெப்ப உற்சவமானது நாளை (மார்ச்.16) இரவு 7 மணி அளவில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

    இதனையொட்டி நடை பெற்ற வெள்ளோட்டத்தில் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்ட தெப்பத்தின் உறுதித் தன்மை குறித்து பொதுப்பணித்துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், இந்து சமய அறநிலை துறை அலுவலர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர் தெப்பத்தில் பயணித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெங்காய தாமரை செடிகளால் தண்ணீர் போக்கு தடைப்படுகிறது.
    • இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதி நீர்நிலைகளில் வளர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகளை அகற்றும் பணியை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்:-

    மக்களுக்கு முக்கிய தேவையாக இருக்கின்ற நீராதாரங்களை பாதுகாத்து அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை நகராட்சி நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது. ஆறு, குளம், குட்டைகளில் வளர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகளால் தண்ணீர் போக்கு தடைப்படுகிறது, நிலத்தடி நீர் மாசுபடுகிறது. எனவே, இந்த செடிகளை முற்றிலும் அகற்றி அதனை நகராட்சி நுண்ணுர தயாரிப்பு மையம் மூலம் பாலம் சேவை நிறுவனத்தின் மேற்பார்வையில் இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்றார். நிகழ்ச்சியில் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், நகராட்சி அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது ஆய்வு செய்தார்.
    • ரூ.46.57 லட்சம் மதிப்பீட்டில் 1,200 மீட்டர் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தில்லையேந்தல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது, கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதி, முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதி குறித்து ஆய்வு செய்ததுடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆணையர் தாரேஸ் அகமது பொதுமக்களிடம் வீடு, வீடாக சென்று கேட்டறிந்தார்.

    முன்னதாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பார்த்திபனூர் பகுதியில் பயனாளிகளுக்கு நடமாடும் வாகனம் மூலம் சிகிச்சைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் அளிக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் அரியனேந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் மாசு நீர் சுத்திகரிப்பு பணி நடைபெற்று வருவதையும், அரியனேந்தல் ஆதிதிராவிடர் காலனியில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் மகளிர் சுகாதார வளாகம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், இந்திரா நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டில் செங்குத்து உறிஞ்சிக்குழி பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டார்.

    நெல்மடுவலூர் ஊராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார மையத்தின் கட்டுமான பணிகளையும், போகலூர் ஊராட்சி ஒன்றியம், பூவிளத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு கிராம சாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.46.57 லட்சம் மதிப்பீட்டில் 1,200 மீட்டர் தொலைவில் வணங்கானேந்தல் வழியாக பூவிளத்தூர் வரை சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரமசிவன், உதவி இயக்குநர் (தணிக்கை) அருள் சேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரமோகன், ரவி, போகலூர் செயற்பொ றியாளர் சுந்தரேசன், உதவி செயற்பொறியாளர்கள் அழகேசன், கல்யாண சுந்தரம், தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவகங்கை பூங்காவில் நடந்து வரும் பணிகளில் பெரும்பாலானவை முடிந்து விட்டன.
    • குறைந்தபட்சம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சண். ராமநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 112 பணிகள் எடுக்கப்பட்டு அதில் 92 பணிகள் முடிந்துள்ளது. மீதம் 20 பணிகள் நடந்து வருகிறது. 4 மாதத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும். கடன் இல்லா மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி விளங்குகிறது. மற்ற மாநகராட்சிகளுக்கு முன் உதாரணமாக திகழ்கிறது .

    தஞ்சையில் பல்வேறு இடங்களில் சாலை பணிகள் நடந்து வருகின்றன. மேலும் நவீன எந்திரங்கள் மூலம் சாலைகள் சுத்தப்படுத்தப்படுகிறது .

    சிவகங்கை பூங்காவில் நடந்து வரும் பணிகளில் பெரும்பாலானவை முடிந்து விட்டன. இன்னும் 3 மாதத்தில் சிவகங்கை பூங்கா திறக்கப்படும்.

    முதலாம் ஆண்டு நிறைவடைந்து தற்போது 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். வளர்ச்சியை நோக்கி தான் அனைத்து பணிகளும் இருக்கும். ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது .

    10 ஏக்கர் அளவில் சுத்தப்படுத்தப்பட்டு விட்டன. குப்பை கிடங்கு முழுவதுமாக அகற்றப்பட்ட பிறகு 10 ஏக்கரில் அடுக்குமாடி குடியிருப்பும், 10 ஏக்கரில் யாத்ரி நிவாஸ் கட்டப்படும். பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு இந்த யாத்ரி நிவாஸ் பயனுள்ளதாக இருக்கும்.

    நம்ம வார்டு நம்ம மேயர் என்ற திட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டில் 51 வார்டுகளிலும் ஆய்வு செய்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினோம். அவற்றின் அடிப்படையில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற ரூ.1112 கோடி மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அமைச்சர் கே. என். நேருவிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில் மக்களோடு மேயர் என்ற தலைப்பில் மக்களை சந்திக்க உள்ளோம்.

    திருவையாறு பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி பள்ளி அருகே வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு பெரிய அளவில் வாகன பார்க்கிங் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரிய கோவிலை சுற்றி பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் இருக்காது .

    புதிய பஸ் நிலைய புனரமைப்புக்காக ரூ.50 கோடி, மீன் மார்க்கெட் கட்ட ரூ.35 கோடி, சீனிவாசபுரம் - டி.பி.எஸ். நகரை இணைக்கும் வகையில் ரூ.120 கோடியில் பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. 17 மாநகராட்சி பள்ளிகளில் சேதம் அடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டப்படும்.

    தஞ்சை மாநகராட்சியில் குறைந்தபட்சம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது. 30 எம்.எல்.டி தண்ணீர் தான் தேவை. ஆனால் 60 எம்.எல்.டி தண்ணீர் வரப்போகிறது. இதை தவிர விளார், மாரியம்மன் கோவில், நாஞ்சிக்கோட்டை, பிள்ளையார்பட்டி உள்பட 13 ஊராட்சிகள் தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணையப் போகிறது. அப்படி இணையும் போதும் தண்ணீர் பிரச்சனை இருக்காது.

    வருகிற 8-ந்தேதி தஞ்சாவூர் ெரயில்வே நிலையத்தில் ஆய்வு செய்ய உள்ளோம். தஞ்சையில் இன்னும் 6 மாதத்தில் விமான சேவை தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மார்க்கெட் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
    • பழமையான கட்டிடத்தை விதிமுறைகளின்படி இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் முடிவடைந்த பஸ் நிலைய பராமரிப்பு பணிகள் மற்றும் ரூ.2.8 கோடி மதிப்பீட்டில் புதிய மார்க்கெட் கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறுவதை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் நேரடியாக ஆய்வு செய்தார்.

    திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தில் நடந்த பணிகளை பார்வையிட்ட கலெக்டர் பின்னர் மார்க்கெட் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது கலெக்டர் பஸ்நிலையத்திற்குள் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக வைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகள், மற்றும் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும். பஸ் நிலையத்தில் உள்ள பழமையான ஆபத்தை விளைவிக்க கூடிய நிலையில் உள்ள கட்டிடத்தை விதிமுறைகளின்படி இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

    பஸ் நிலைய மேம்பாட்டு திட்டத்தில் நிதி பெற்று பேரூராட்சிக்கு வருமானம் வரத்தக்க வகையில் நிரந்தர கடைகள் கட்டி வாடகைக்கு விட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கனகராஜ், பேரூராட்சி தலைவர் மெய்யழகன், பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன் ஆகியோர் உடனிருந்து பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம்‌ மாவட்டம்‌, கனககிரி ஊராட்சிக்கு உட்பட்ட காகாபாளையம்‌ பகுதியில்‌ சேலம்‌- கோவை தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
    • பாலப்‌பணியானது கடந்த ஆண்டு 2022 மார்ச்சுக்குள்‌ முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால்‌ கிட்டதட்ட காலக்கெடு முடிந்து ஒரு ஆண்டு ஆகியும்‌ பாலப்பணி ஆமை வேகத்தில்‌ நடைபெற்று வருகிறது.

    சேலம் மாவட்டம், கனககிரி ஊராட்சிக்கு உட்பட்ட காகாபாளையம் பகுதியில் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்தும், உயிரிழப்பும் ஏற்பட்டு வந்தது. இது குறித்து பொதுமக்கள் சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டத்திற்கு பின்னர் காகாபாளையம் பகுதியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க மத்திய அரசின் ஒப்பந்த அடிப்படையில் ரூ.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணி நடைபெற்று வருகிறது.

    இந்த உயர்மட்ட மேம்பாலமானது சேலத்தில் இருந்து 16-வது கிலோ மீட்டரில் செல்லியம்பாளையம் - கனககிரி ஏரி வரை 1 கிலோ மீட்டர் தூரம் வரை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலப்பணியானது கடந்த ஆண்டு 2022 மார்ச்சுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கிட்டதட்ட காலக்கெடு முடிந்து ஒரு ஆண்டு ஆகியும் பாலப்பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த பாலம் பணி நடைபெறும் வழியாக ஈரோடு, கோவை , கொச்சின், கேரளா, உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், ஆம்புலன்சில் செல்லும் நோயாளிகள் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்பவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. அது மட்டுமல்லாமல் கனரக வாகனங்கள் இவ்வழியே ஊர்ந்து சென்று வருவதால் இவ்விடத்தில் அடிக்கடி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்தும், உயிரிழப்பும் நடைபெற்று வருகிறது.

    பாலம் கட்டுமான பணி நடைபெறும் அருகாமையில் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இப்பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.மேலும் ஏராளமான பள்ளி கல்லூரி வாகனங்கள் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி காலதாமதமாக செல்கின்றன.சேலத்தில் இருந்து மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்சில் கோவை நோக்கி செல்ல இந்த சாலையை பயன்படுத்து வதால் போக்குவரத்து நெரிசல் காரணமாக மிக காலதாமதம் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.

    இது குறித்து நிர்வாக தரப்பில் கூறியதாவது:

    இந்த பாலவேலை ஒரு ஆண்டு காலதாமதமாக காரணம் மண் அள்ளுவதில் கடும் சிக்கல் எழுந்துள்ளது.ஏனெனில் நாங்கள் முறையாக ஆவணம் பெற்று மண் எடுத்தால் தனிநபர் தன் செல்வாக்கை பயன்ப டுத்தி அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிக்கிறார்.அதிகாரிகள் எங்கள் வாகனங்களை பறிமுதல் செய்துவிடுகின்றனர்.

    இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் மாநில, மத்திய அரசின் டெண்டர் வேலைகளுக்கு தேவையான மண் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    இதனால் பாமரர்கள் முதல் பெரும் ஒப்பந்த நிறுவனங்கள் வரை கடும் சிக்கலில் உள்ளோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை முறைப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுவாக எந்த பணிகள் என்றாலும் குறித்த காலத்தில் நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பதுதான் அரசின் நோக்கமாக உள்ளது. அதற்கான தடைகளை சரிசெய்து மேம்பாலம் பணியை விரைந்து முடிக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு மக்கள் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
    • மார்ச் மாதத்தில் பாலம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் வெட்டாறு பாலம் பழுதடைந்த காரணத்தால், அதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    ஆனால் பணியில் ஏற்பட்ட தொய்வு காரணமாக நாகப்பட்டினம் நாகூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்பட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதனால் வெட்டாறு பாலத்தின் சீரமைப்புப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்நிலையில் வெட்டாறு பாலம் சீரமைப்புப் பணி யினை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது, பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றும், மார்ச் மாதத்தில் பாலம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பேராவூரணி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    பேராவூரணி:

    மின் நிலையத்தில்மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் பேராவூரணி உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் வெளியி ட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    பேராவூரணி துணை மின் நிலையத்தில் நாளை 4-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்விநியோகம் பெறும் பேராவூரணி, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், கட்டயங்காடு, மதன்பட்டவூர், திருச்சிற்றம்பலம், துறவிக்கா டு, செருவாவிடுதி, சித்துக்காடு, வா.கொல்லைக்காடு, ஆவணம், பைங்கால், சித்தாதிக்காடு, படப்பனா ர்வயல், மணக்காடு, ரெட்டவயல், பெருமகளூர் மற்றும் சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் நாட்டாணி க்கோட்டை, குருவிக்கரம்பை, கள்ளம்பட்டி, பள்ளத்தூர், நாடியம், திருவத்தேவன், மல்லிபட்டினம், சேதுபாவா சத்திரம், குப்பத்தேவன், கழனிவாசல், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு, பேராவூரணி சேது ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனவும், மின்தடை தொடர்பான புகார்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மின் விபரங்கள் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo