search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "states"

    • விநாயகா் சதுா்த்தி விழா தமிழகத்தின் பல இடங்களில் சுமூகமான முறையில் சிறப்பாக நடைபெற்றது.
    • ஒத்துழைப்பு அளித்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.

    திருப்பூர்  :

    இந்து முன்னணி அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரை அடுத்த கொடுவாயில் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

    கூட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் அண்மையில் நடைபெற்ற இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார யாத்திரை மாபெரும் வெற்றியடைந்துள்ளது. விநாயகா் சதுா்த்தி விழா தமிழகத்தின் பல இடங்களில் சுமூகமான முறையில் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு அளித்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.

    அதேவேளையில், சென்னையில் கடந்த ஜூலை 31 ந்தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து கலை இலக்கிய முன்னணி மாநிலப் பொறுப்பாளா் கனல் கண்ணன் பேசியது ஜனநாயக ரீதியான அவரது கருத்தாகும். ஆனால், திராவிடர் கழகத்தின்ர கொடுத்த புகாரின் பேரில் தமிழக அரசு தனிப்படை அடைத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தது கருத்து சுதந்திரத்தை ஒடுக்கி இந்துக்களின் குரல்வளையை நசுக்கும் செயலாகும். ஆகவே, கருத்துரிமையை நசுக்கி ஒருதலைப்பட்சமாக செயல்படும் தமிழக அரசுக்கு கண்டணம் தெரிவித்துக் கொள்வது.இந்து தெய்வங்களை சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்திய உயர் கல்வி ஆணையம் வேண்டாம் என்றும், பல்கலைக்கழக மானியக் குழுவே (யு.ஜி.சி.) தொடர வேண்டும் என்றும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
    சென்னை:

    யு.ஜி.சி. என்ற பல்கலைக்கழக மானியக் குழு மூலம் மாநிலங்களுக்கு பல்வேறு உதவிகள் கிடைத்து வருகிறது. யு.ஜி.சி.க்குப் பதிலாக இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்கான வரைவு சட்ட மசோதாவை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில் வெளியிட்டு, கல்வியாளர்கள், பொதுமக்களின் கருத்தை மத்திய அரசு கேட்டுள்ளது. இதற்கான காலஅவகாசத்தை ஜூலை 20-ந் தேதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

    இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கலை, அறிவியல் கல்விக்கான உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இதுபோன்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டுவருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

    இந்த நிலையில், இந்த வரைவு சட்டமசோதாவைப் பற்றியும், அதில் தமிழக அரசு எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றியும் தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    இந்த வரைவு சட்டத்தை ஏற்கக்கூடாது என்று இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது:-

    கடந்த 1956-ம் ஆண்டு முதல் யு.ஜி.சி. சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பு தேவையற்றது.

    கல்வி சார்ந்த பணிகளை மட்டும் இந்த அமைப்பு கவனிக்கும் என்பதும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் அதிகாரம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் இருக்கும் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

    யு.ஜி.சி.தான் தொடரவேண்டும் என்பது தமிழக அரசின் கருத்து. இந்தக் கருத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உடனே அனுப்பி வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இடைக்கால டி.ஜி.பி.க்களை மாநில அரசுகள் நியமிக்கக் கூடாது. புதிய டி.ஜி.பி.யாக நியமிக்க தகுதியானவர்களின் பெயர்களை மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #ActingDGP
    புதுடெல்லி:

    மாநில அரசுகள் தங்களுக்கு வேண்டியவர்களையும், தங்களது அரசியல் கண்ணோட்டத்துக்கு ஏற்ப செயல்படுபவர்களையுமே போலீஸ் டி.ஜி.பி.க்களாக நியமிப்பதாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஓய்வுபெறும் நிலையில் உள்ளவர்களை டி.ஜி.பி.யாக நியமித்து விட்டு, பிறகு பணிநீட்டிப்பு வழங்குவதாகவும் புகார் நிலவி வருகிறது. இதை எதிர்த்து, ஓய்வுபெற்ற டி.ஜி.பி.க்கள் பிரகாஷ் சிங், என்.கே.சிங் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். அம்மனுக்கள் மீது கடந்த 2006-ம் ஆண்டு, சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்புமிக்க உத்தரவுகளை பிறப்பித்தது.

    அவற்றில், டி.ஜி.பி., போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகளின் நியமனம் தகுதி அடிப்படையிலும், வெளிப்படையாகவும், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பதவியில் இருக்கும்வகையிலும் அமைய வேண்டும் என்ற உத்தரவும் அடங்கும்.

    போலீஸ் மீது மாநில அரசுகள் செல்வாக்கு செலுத்துவதை தடுக்க மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும், போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்க போலீஸ் புகார் ஆணையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளையும் பிறப்பித்தது.

    ஆனால், இந்த உத்தரவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்று கூறி, பா.ஜனதா பிரமுகர் அஸ்வினி குமார் உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தனது மனுவை அவசர மனுவாக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    இதுபோல், 2006-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி, மத்திய அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது.

    நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், எந்த போலீஸ் அதிகாரியையும் இடைக்கால டி.ஜி.பி.யாக நியமிக்கக் கூடாது.

    டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் ஆகிய பதவிகளில் நியமிக்க தகுதியான அதிகாரிகளின் பெயர்களை மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு (யு.பி.எஸ்.சி.) அனுப்பி வைக்க வேண்டும். பணியில் உள்ள டி.ஜி.பி. ஓய்வுபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே இதை செய்ய வேண்டும்.

    அப்பெயர்களில், மிகவும் தகுதிவாய்ந்த 3 பேர் கொண்ட பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் இறுதி செய்யும். அந்த 3 பேரில் ஒருவரை மாநில, யூனியன் பிரதேச அரசுகளே தேர்வு செய்து, டி.ஜி.பி.யாக நியமித்துக் கொள்ளலாம். அப்படி நியமிக்கப்படுபவருக்கு, குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது பதவிக்காலம் மிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    ஆகவே, போலீஸ் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக, மாநில அரசுகள் ஏதேனும் சட்டமோ, விதிமுறைகளோ வகுத்திருந்தால், அந்த சட்டமும், விதிமுறைகளும் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.

    இருப்பினும், இந்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி மாநில அரசுகள் எங்களை அணுகலாம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.  #SupremeCourt #ActingDGP #Tamilnews 
    பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் வன்முறையில் ஈடுபடுவோரை மாநில அரசுகளே கண்காணிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. #CowVigilantism #SC
    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் தாக்குதல் சம்பவம் அரங்கேறியது.  இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை தடுத்த நிறுத்த அரசுகளுக்கு உத்தரவிடுமாறு மகாத்மா காந்தியின் கொள்ளு பேரனான பத்திரிக்கையாளர் தூஷார் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை தடுக்க மாவட்டம் தோறும் உயரதிகாரிகளை சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து கண்காணிக்குமாறு உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை ராஜஸ்தான், அரியானா மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநில அரசுகள் பின்பற்றவில்லை.

    இந்நிலையில், மாநில அரசுகள் கண்காணிக்கவில்லை என தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம் கன்வில்கார் மற்றும் டி.ஒய் சந்திரசூட் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது.

    இந்த வழக்கு விசாரணையில், பசு பாதுகாப்பு என்ற பெயரில் யாரும் சட்டத்தை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும், இந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையை கண்காணிப்பது ஒவ்வொரு மாநிலத்தின் பொறுப்பாகும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இதையடுத்து, பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை தடுக்க வழிமுறையை உருவாக்க கோரிய வழக்குகளின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.

    இதற்கிடையே முந்தைய உத்தரவை பின்பற்றாத ராஜஸ்தான், அரியானா மற்றும் உத்தரபிரதேச மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முன்னெடுக்க கோரிய வழக்கில் அம்மாநிலங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #CowVigilantism #SC
    காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, ஆணையத்துக்கான உறுப்பினர்களை நியமிக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய நீர்வளத்துறை கடிதம் எழுதியுள்ளது. #CauveryManagementAuthority
    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, மத்திய அரசு செயல் திட்டத்தை தாக்கல் செய்தது. மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது.

    இதனை உடனே அரசிதழில் வெளியிட வேண்டும், பருவமழை தொடங்குவதற்குள் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிப்பு நேற்று மாலை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

    காவிரி ஆணையம் அமைக்கும் உத்தரவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கையெழுத்திட்டுள்ளார். மேலும், ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீர்வளத்துறை செயலாளர் யூ.பி.சிங் செயல்படுவார் என்றும் ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமனம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான உறுப்பினர்களை நியமிக்குமாறு மத்திய நீர்வளத்துறை தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. நீர்வளத்துறை சார்ந்த நிர்வாக செயலர் அந்தஸ்தில் ஒருவரையும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவிற்கு தலைமை பொறியாளர் அந்தஸ்தில் ஒருவரையும் உறுப்பினராக நியமிக்குமாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதேபோல, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளும் உறுப்பினர்களை நியமிக்குமாறு, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. #CauveryManagementAuthority
    விளம்பர மதிப்பு அடிப்படையில் பெட்ரோல், டீசலுக்கு மாநில அரசுகள் வரி விதிப்பதால், அவர்கள் வரியை கூடுதல் அளவு குறைக்க வேண்டும் என நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார். #NITIAayog #PetrolDiesel
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 11-வது நாளாக நேற்று உயர்ந்தது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து, ரூ.80.11-ல் இருந்து ரூ. 80.42 ஆனது.

    டீசல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ.72.14-ல் இருந்து ரூ.72.35-க்கு விற்பனை ஆனது.

    நாளும் விலை உயர்ந்து, சாமானிய மக்களும், வாகன ஓட்டிகளும் அல்லாடுகிறபோதும், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் இதுவரை முன் வரவில்லை.இந்த நிலையில் நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியின்போது, “வரியைக் குறைக்கும் தகுதி இருக்கிறது. ஆனால் வரி குறைப்பு நடவடிக்கையை மாநில அரசுகளும், மத்திய அரசும் சேர்ந்து செய்ய வேண்டும். விளம்பர மதிப்பு அடிப்படையில் பெட்ரோல், டீசலுக்கு மாநில அரசுகள் வரி விதிப்பதால், அவர்கள் வரியை கூடுதல் அளவு குறைக்க வேண்டும்” என்று கூறினார்.

    மாநில அரசுகள் 10-15 சதவீத அளவுக்கு வரியை குறைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். #NITIAayog #PetrolDiesel
    ×