என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர்"

    • 2 மாதங்களுக்கு முன்பு என் மனைவி கர்ப்பம் தரித்தார்
    • முதலில் என் அமணிவியிடம் வேலையை விடுமாறு கூறினேன்.

    கர்ப்பிணி மனைவியை கவனித்துக்கொள்ள பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது ரூ.1.2 கோடி (வருடத்திற்கு) ஊதிய வேலையை ராஜினாமா செய்துள்ள சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    இளைஞர் ஒருவர் Reddit இல் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "நான் WHF (WORK FROM HOME) முறையில் ஆண்டுக்கு ரூ.1.2 கோடி ஊதியம் பெற்று வருகிறேன். 2 மாதங்களுக்கு முன்பு என் மனைவி கர்ப்பம் தரித்தார். இதையடுத்து முதலில் அவளை வேலையை விட சொன்னேன். ஆனால் மனைவி தொடர்ந்து வேலை செய்ய விரும்பியதால் மனைவியை கவனித்துக்கொள்ள நான் வேலையை விட்டுவிட்டேன். வீட்டிலிருந்து மனைவியை கவனித்துக்கொள்ள போகிறேன். உங்கள் குடும்பத்தினருக்கு தேவைப்படும் போது நீங்கள் அவர்களுடன் இருப்பதை தவிர வேறு எதுவும் முக்கியமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த பதிவு இணையத்தில் வைரலாக அந்த இளைஞரை பாராட்டி பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    • வதோதரா மாவட்டத்தில் 40 வயதான பெண்ணுக்கு 2024 பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது.
    • செயற்கை முறையில் கருத்தரிக்க முயற்சி செய்யலாம் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளார்.

    குஜராத் மாநிலத்தில் மாமனாரே மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வதோதரா மாவட்டத்தில் 40 வயதான பெண்ணுக்கு 2024 பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. அப்பெண்ணுக்கு 40 வயது ஆகியுள்ளதால் கருவுறுதல் பிரச்சனை இருக்கலாம் என்பதற்காக அந்த தம்பதி மருத்துவரை அணுகியுள்ளனர்.

    அப்போது மருத்துவர்கள் அவரது கணவரின் விந்தணு எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதால் இயற்கையான முறையில் கருத்தரிக்க முடியாது என்றும் செயற்கை முறையில் கருத்தரிக்க முயற்சி செய்யலாம் என்று அறிவுரை கூறியுள்ளார்.

    அப்பெண்ணுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க விருப்பம் இல்லாததால் குழந்தையை தத்தெடுக்க விரும்பியுள்ளார். ஆனால் அதற்கு பெண்ணின் குடும்பம் சம்மதிக்கவில்லை.

    இந்நிலையில் 2024 ஜூலை மாதம் அப்பெண்ணை அவரது மாமனார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அவரது கணவரிடம் கூற, அவரோ எனக்கு குழந்தை வேண்டும், ஆதலால் இதை பற்றி நீ வெளியில் சொல்ல கூடாது. இதனை மீறினால் உன்னுடைய நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மனைவியை கணவன் மிரட்டியுள்ளார்.

    இதனையடுத்து மருமகளை பலமுறை மாமனார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஆனாலும் அப்பெண் கர்ப்பம் தரிக்கவில்லை.

    இதனால் 2024 டிசம்பர் மாதம் கணவரின் தங்கையினுடைய கணவர் குழந்தைக்காக அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். பல மாதங்கள் தொடர்ந்து அவர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததன் விளைவான இந்தாண்டு ஜுன் மாதம் அப்பெண் கருத்தரித்தார். ஆனால் சில வாரங்களில் அப்பெண்ணின் கரு கலைந்தது.

    இதனையடுத்து அப்பெண் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அமெரிக்காவைச் சேர்ந்த செலாப் - ஜஸ்டின் ரூஸ்லர் இணை முதல் பரிசை வென்றுள்ளனர்.
    • வெற்றி பெறுபவருக்கு அவரின் மனைவியின் எடைக்கு நிகரான பீர் பரிசாக அளிக்கப்படும்.

    மனைவிகளை கணவர்கள் சுமந்து செல்லும் வித்தியாசமான போட்டி பின்லாந்தில் நடைபெற்றுள்ளது.

    இப்போட்டியில் மனைவியை சுமந்தபடி மணல் மற்றும் நீரால் அமைக்கப்பட்ட தடைகளை தாண்டி கணவர் முன்னேறி சென்று வெற்றி பெறவேண்டும். வெற்றி பெறுபவருக்கு அவரின் மனைவியின் எடைக்கு நிகரான பீர் பரிசாக அளிக்கப்படும்.

    200 பேர் கலந்து கொண்ட இப்போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த செலாப் - ஜஸ்டின் ரூஸ்லர் இணை முதல் பரிசை வென்றுள்ளனர். 

    • கணவருடன் மறுவீட்டிற்காக தாய் வீட்டிற்கு வந்த லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை
    • கணவரின் குடும்பம் கூடுதல் நகை கேட்டு தொல்லை கொடுத்ததாக லோகேஸ்வரி குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமான 4 நாட்களில் லோகேஸ்வரி (24) என்ற புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முஸ்லீம் நகரைச் சேர்ந்த இளம்பெண் லோகேஸ்வரி கடந்த 27-ந்தேதி பன்னீர் (37) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கணவருடன் மறுவீட்டிற்காக தனது தாய் வீட்டிற்கு நேற்று வந்த லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இதையடுத்து லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 3 நாட்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.

    இருசக்கர வாகனம், ஏசி, கூடுதல் நகை கேட்டு தொல்லை கொடுத்ததாக லோகேஸ்வரி குடும்பத்தினர் பன்னீர், அவரது தாய், தந்தை மீது குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில், கணவர் பன்னீர் (37), மாமியார் பூங்கோதை (60) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மாமனார் மற்றும் நாத்தனாரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணம் ஆன 78 நாட்களில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து பொன்னேரியில் லோகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • விவாகரத்து வழங்கிய நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனைவி மேல்முறையீடு செய்திருந்தார்.
    • திருமணத்திற்குப் பிறகு மனைவி தனது நண்பர்களுடன் கண்ணியமற்ற முறையில் உரையாடலில் ஈடுபட கூடாது.

    திருமணத்திற்குப் பிறகு கணவனோ மனைவியோ தங்களது 'எதிர்பாலின' நண்பர்களுடன் 'ஆபாசமான' முறையில் உரையாட கூடாது என்றும், எந்தக் கணவரும் தனது மனைவியிடமிருந்து இதுபோன்ற செயல்களை பொறுத்துக்கொள்ள மாட்டார் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    விவாகரத்து வழங்கிய கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனைவி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் விவேக் ருசியா மற்றும் கஜேந்திர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    மனைவி தனது ஆண் நண்பர்களுடன் அவளது பாலியல் வாழ்க்கை குறித்து ஆபாசமான முறையில் வாட்சப்பில் சாட் செய்ததை நீதிமன்றத்தில் கவனத்தில் கொண்டு பலவேறு கருத்துக்களை தெரிவித்தது.

    அதாவது, "திருமணத்திற்குப் பிறகு கணவரோ, மனைவியோ தங்களது நண்பர்களுடன் கண்ணியமற்ற முறையில் ஆபாசமான உரையாடலில் ஈடுபட கூடாது. தனது மனைவி மொபைல் மூலம் இத்தகைய மோசமாக பேசுவதை எந்த கணவரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்.

    திருமணத்திற்குப் பிறகு கணவன்-மனைவி இருவரும் நண்பர்களுடன் மொபைல் மற்றும் பிற வழிகளில் உரையாடலாம். ஆனால் அந்த உரையாடல் கண்ணியமானதாக இருக்க வேண்டும்.

    கணவரின் எதிர்ப்பு தெரிவித்தும் மனைவி தனது ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து மோசமாக உரையாடுவது நிச்சயமாக கணவருக்கு மனரீதியிலான கொடுமையை ஏற்படுத்தும்" என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

    இறுதியில், கணவருக்கு விவாகரத்து வழங்கிய குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொண்டு மனைவியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

    போலீசார் தேடுவதை அறிந்து தலைமறைவு

    கன்னியாகுமரி:

    பளுகல் அருகே கருமானூர் பகுதியை சேர்ந்த வர் ராஜிவ் (வயது 37). கூலிவேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி ஷைனி. இவர்களுக்கு 10 வயதில் ஒருமகள் உள்ளார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி கணவரை பிரிந்து கேரளா வில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    கடந்த 6 மாத காலமாக அங்கேயே தங்கி உள்ளார். நேற்று ஷைனி தனது உறவினரான கிறிஸ்டி என்பவரது இருசக்கர வாகனத்தில் கணவர் வீட்டில் நடக்கும் சுய உதவி குழுவில் பணம் வாங்குவதற்காக வந்துள்ளார்.

    இதை அறிந்த ஷைனியின் கணவர் ராஜிவ் அங்கு சென்றார். ஷைனியை தன்னுடன் சேர்ந்து வாழ மறுக்கும் நீ இங்கு எதற்கு வந்தாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஷைனியின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஷைனி வலி தாங்காமுடியாமல் அலறியுள்ளார். மேலும் படுகாயமடைந்த ஷைனியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாறசாலை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவ னந்த புரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இது குறித்து ஷைனியின் உறவினர் கிறிஸ்டி பளுகல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அந்த புகாரின் அடிப்படையில் பளுகல் போலீசார் ராஜிவ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தீவிர மாக தேடி வருகின்றனர். கணவரே மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
    • திருமணமான 2½ மாதத்தில் மனைவியை கணவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி 2-வது தெருவைச் சேர்ந்தவர் அஜித்ராம் பிரதீப் (வயது 33). இவர் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    அஜித்ராம் பிரதீப்புக்கும் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த சுவிதா கண்ணன் (28) என்பவருக்கும் கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன் பிறகு அவர்கள் என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வந்த னர்.

    இந்த நிலையில் அஜித் ராம் பிரதீப்புக்கு கடன் பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. எனவே அவர் மனைவியிடம் பணம் கேட்டு உள்ளார். இது தொடர்பாக அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

    சம்பவத்தன்று சுவிதா கண்ணனிடம் மீண்டும் பணம் கேட்டு அஜித்ராம் பிரதீப் தகராறு செய்து உள்ளார். அப்போது அவர் மனைவியை தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து சுவிதா கண்ணன் தனது தந்தைக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து சுவிதா கண்ணனை மீட்டு, சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசில் சுவிதா கண்ணன் புகார் செய்தார். அதில் உனது தந்தை வீட்டு பத்திரத்தை மாற்றி தர வேண்டும். இல்லாவிட்டால் கொலை செய்து விடுவேன் என கணவர்மிரட்டியதாகவும் தன்னை தாக்கியதாகவும் குறிப்பிட்டு உள்ளார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் அஜித்ராம் பிரதீப் மீது, பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    திருமணமான 2½ மாதத்தில் மனைவியை கணவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 8 பேர் கொண்ட கும்பல் கைவரிசை
    • இந்த கொள்ளை சம்பவத்தில் வெளியூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    நாகர்கோவில்:

    தோவாளை தெக்கூரைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி வசந்தா (வயது 60).

    கணவன்-மனைவி இருவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் திருமண வீட்டிற்கு சென்றனர். பின்னர் இருவரும் இரவு 10 மணி அளவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடம் கிறிஸ்தவ நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8 வாலிபர்கள் திடீ ரென முத்துவின் மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்தனர்.

    இதையடுத்து முத்து மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்றார். ஆனால் மர்மநபர்கள் முத்துவின் மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்று வசந்தாவின் கழுத்தில் கிடந்த செயினை பறித்தனர். உடனே வசந்தா கழுத்தில் கிடந்த செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். செயினை பறித்த கொள்ளையர்கள் வசந்தாவை காலால் மிதித்து கீழே தள்ளினார்கள்.

    அப்போது வசந்தாவின் கையில் ஒரு செயினும் மற்றொரு செயின் சிறிதளவு சிக்கியது. கொள்ளையர் கையில் 4 பவுன் சிக்கியது. இதையடுத்து கொள்ளை யர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். படுகாயம் அடைந்த வசந்தாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் ஆரல்வாய் மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.வசந்தா, முத்துவிடம் விசா ரணை நடத்திய போலீ சார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று இரவு முழுவதும் வாகன சோதனை நடத்தப் பட்டது. ஆனால் கொள்ளை யர்கள் யாரும் சிக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். 8 பேர் கொண்ட கும்பல் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

    இந்த கொள்ளை சம்பவத்தில் வெளியூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு
    • கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு சுபியா தீக்குளித்தார்.

    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் அருகே மயிலாடியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி சுபியா (25). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு சுபியா தீக்குளித்தார்.

    இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தினர். சுபியா நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் வேல்முருகன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக அஞ்சு கிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து போலீசார் வேல்முருகனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வேல்முருகன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வேல்முருகனுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

    • கடந்த ஒன்றரை ஆண்டு முன் திருமணம் செய்து கொண்டனர்.
    • மனைவியிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் வெளியே சென்று விட்டார்.

    திருப்பூர் :

    தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(30). இவர் திருப்பூர், சிறுபூலுவபட்டி பகுதியில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவருடன் உறவினர் பெண் சுபா, (27) என்பவர் வேலை செய்தார். இருவரும் பழகி வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த ஒன்றரை ஆண்டு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில், சில நாட்கள் முன், தமிழ்ச்செல்வன் மனைவியிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் வெளியே சென்று விட்டார். இரண்டு நாட்களாக தேடிப் பார்த்த சுபா கணவனை காணாமல் மனம் உடைந்து காணப்பட்டார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக 15 வேலம்பாளையம் புருஷன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் தமிழ்ச்செல்வன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் வாட்ஸ் அப் மூலம் பழக்கம் ஏற்பட்டது
    • உஷா பிள்ளையின் மகள் தாயாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். சுவிட்ச் ஆப் ஆகி விட்டது

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள பரசேரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் நாகம்பிள்ளை (வயது 57). களியங்காட்டில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி உஷாபிள்ளை (50). இவருக்கும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவ ருக்கும் வாட்ஸ் அப் மூலம் பழக்கம் ஏற்பட்டது.அந்த நபர் உஷா பிள்ளைக்கு லண்டனில் நல்ல வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியதாக தெரிகிறது.

    இதனை நம்பிய உஷாபிள்ளை யாரிடமும் சொல்லாமல் நேற்று முன்தினம் லண்டன் செல்ல விமான நிலையம் சென்றுள்ளார். அதன்பின்பு அவரை காணவில்லை.

    இதனால் பதறி போன உஷா பிள்ளையின் கணவர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தார். அப்போது நேற்று காலை 9.30 மணி அளவில் செல்போனில் உஷாபிள்ளை கணவரை தொடர்பு கொண்டார்.

    அப்போது அவர் டெல்லி விமான நிலையத்தில் இருப்பதாக கூறி உள்ளார். அதன் பின்னர் உஷாபிள்ளை மகளின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் ஒரு பெண் பேசியுள்ளார்.

    அந்த பெண், டெல்லி ஏர்போர்ட்டில் இருந்து பேசுகிறோம். உங்கள் தாயார் நாங்கள் கூறியது போல் ரூ.1 லட்சம் பணம் கொண்டு வரவில்லை. அவர்கள் பணம் கட்ட வில்லை என்றால் அவர்களை வேறு நாட்டிற்கு அனுப்பி வைத்து விடுவோம் என கூறியுள்ளார்.

    உடனே உஷா பிள்ளையின் மகள் தாயாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி விட்டது. இதுகுறித்து நாகம் பிள்ளை கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவர், குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினி தேவியை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைக்காரப்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 26). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி நந்தினி தேவி (25). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். சம்பவத்தன்று குடும்ப பிரச்சனை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் பால்பாண்டி வெளியே சென்று விட்டார். இதை யடுத்து அருகே உள்ள தாய் வீட்டிற்குச் சென்ற நந்தினி தேவி குழந்தைகளை அங்கு விட்டு விட்டு வெளியே சென்றார். ஆனால் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் மனைவியை கண்டுபிடித்துத் தருமாறு பால்பாண்டி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினி தேவியை தேடி வருகின்றனர்.

    ×