search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர்"

    • மீரட் நகரில் வசிக்கும் அஞ்சலி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
    • அஞ்சலி கொலை தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    உத்தரபிரதேசத்தில் கூலிக்காக கொலை செய்யும் காண்டிராக்ட் கில்லர் ஒருவர் தான் செய்த கொலைக்கு கொடுப்பதாக கூறப்பட்ட பணம் தனக்கு கிடைக்கவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    2023 ஆம் ஆண்டு ஜூன் 7 அன்று, மீரட் நகரில் உள்ள உமேஷ் விஹார் காலனியில் வசிக்கும் அஞ்சலி என்பவர் பால் பண்ணையிலிருந்து வீடு திரும்பியபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

    கொலை செய்யப்பட்ட அஞ்சலி தனது முன்னாள் கணவர் நிதின் குப்தாவின் பெயரில் இருந்த வீட்டில் வசித்து வந்தார். அவரது மாமியார் அந்த வீட்டை யஷ்பால் மற்றும் சுரேஷ் பாட்டியாவுக்கு விற்றுள்ளார். ஆனால் அஞ்சலி அந்த வீட்டை காலி செய்யமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துள்ளார்.

    இதனையடுத்து, யஷ்பால் மற்றும் சுரேஷ் ஆகியோர் நீரஜ் ஷர்மா என்பவரிடம் அஞ்சலியை கொலை செய்தால் 2 லட்ச ரூபாய் பணம் தருவதாக பேரம் பேசியுள்ளனர்.

    பின்னர் இந்த கொலை தொடர்பாக யஷ்பால், சுரேஷ், நீரஜ் ஷர்மா மற்றும் அஞ்சலியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த 2 பேர் என மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதனையடுத்து இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட அப்பெண்ணின் முன்னாள் கணவர் மற்றும் மாமியாரை போலீசார் விடுவித்தனர்.

    இந்நிலையில், ஒரு வருடத்திற்கு பிறகு ஜாமினில் வெளியே வந்த நீரஜ் ஷர்மா, இந்த கொலையில் அஞ்சலியின் முன்னாள் கணவர் மற்றும் அவரது மாமியாருக்கு தொடர்பு உள்ளது என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக போலீசாரிடம் பேசிய நீரஜ், "அஞ்சலியை கொலை செய்தால் ரூ.20 லட்சம் பணம் தருவதாக கூறிய அவர்கள் 1 லட்ச ரூபாயை முன்பணமாக கொடுத்தனர். கொலை செய்த பின்பு போலீசில் பிடிபட்டதால் மீதமுள்ள 19 லட்ச ரூபாயை என்னால் வாங்க முடியவில்லை. தற்போது ஜாமினில் வெளியே வந்த பின்பு மீதமுள்ள பணத்தை தரும்படி அவர்களிடம் கேட்டபோது அந்த பணத்தை தரமுடியாது என்று அவர்கள் மறுத்துவிட்டனர். ஆகவே அஞ்சலியின் மாமியார் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றுகூறி அவர்கள் இருவருக்கும் இடையிலான செல்போன் அழைப்புகளை இதற்கான ஆதாரங்களாக அவர் வழங்கியுள்ளார்.

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவராஜ் (40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • மருத்துவமனைக்கு ஷோ - காஸ் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    மத்தியபிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள லால்பூர் கிராமத்தில் தரம் சிங் மராவி என்பவரின் குடும்பத்தினருக்கும் இன்னொரு தரப்பினருக்கும் நீண்ட காலமாக நிலத்தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதன் காரணமாக அக்டோபர் 31 அன்று 25 பேர் கொண்ட மர்ம நபர்கள் தரம் சிங் மராவி (65) மற்றும் அவரது 2 மகன்களையும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் தரம் சிங்கும் அவரது மகன் ரகுராஜும் (40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவராஜ் (40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில், 5 மாத கர்ப்பிணியான சிவராஜின் மனைவி, மருத்துவமனை படுக்கையில் உயிரிழந்த சிவராஜின் ரத்த கறையை துடைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வீடியோ வைரலானதை அடுத்து மருத்துவமனைக்கு ஷோ - காஸ் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் குறித்து பேசிய மருத்துவர் சந்திரசேகர், "ஆதாரங்களை சேகரிக்கும் முயற்சியில் ரோஷனி இரத்தத்தில் நனைந்த துணிகளை சேகரித்தார் எனவும் படுக்கையை சுத்தம் செய்யும்படி நாங்கள் அவரிடம் அறிவுறுத்தவில்லை என்று தெரிவித்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • மாநகராட்சியில் பணிபுரியும் திவ்யஜோதி சில ஒப்புதல் கையெழுத்து போடுவதற்கே லட்சக்கணக்கில் பணம் பெற்று வந்துள்ளார்
    • கணவர் வெளியிட்டுள்ள வீடியோவின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஐதராபாத்தில் மாநகராட்சியில் துணை செயற்பொறியாளராக பணியாற்றி வரும் தனது மனைவி திவ்ய ஜோதி, தினமும் லஞ்சம் வாங்குவதாக கணவர் ஸ்வர்ண ஸ்ரீபத் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

    மாநகராட்சியில் பணிபுரியும் திவ்யஜோதி சில ஒப்புதல் கையெழுத்து போடுவதற்கே லட்சக்கணக்கில் பணம் பெற்று வந்துள்ளார் என்றும் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கட்டு கட்டாக வாங்கிய லஞ்சப் பணத்தினை தனது மனைவி வீட்டின் பூஜை அறை, படுக்கை அறைகளில் பதுக்கி வைத்துள்ளதாகவும் கூறி கணவர் ஸ்வர்ண ஸ்ரீபத் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    இந்த வீடியோவின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தியன் திரைப்பட பாணியில் லஞ்சம் வாங்கிய மனைவியை கணவரே காட்டி கொடுத்த சம்பவம் ஐதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • காயமடைந்த பெண்ணின் கணவர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது காவல்துறையின் அநியாயமான நடவடிக்கை.
    • இந்தக் குற்றச்சாட்டைச் செய்த காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் குண்டும் குழியுமாக இருந்த சாலையில் ஏற்பட்ட விபத்தால் பெண் ஒருவர் கோமா நிலைக்கு சேர்த்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அப்பெண்ணின் கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கணவர் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் பெரிய பள்ளத்தில் இறங்கி ஏறிய போது கணவரின் பின்பு அமர்ந்து வந்த மனைவி கீழே விழுந்துள்ளார். அதனால் அப்பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மத்தியப் பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நீலாப் சுக்லா, "காயமடைந்த பெண்ணின் கணவர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது காவல்துறையின் அநியாயமான நடவடிக்கையாகும். இந்தக் குற்றச்சாட்டைச் செய்த காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் குறித்து காவல் துணை ஆணையர் அபினய் விஸ்வகர்மா, "இந்த சாலையை பராமரிக்க எந்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு கடிதம் எழுதியுள்ளோம், அவர்களின் பதிலுக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    • மனைவி தன்னை விட்டு வெகு தூரம் சென்று விட்டதை உணர்ந்த சிவராஜ் மனைவியின் சமாதியில் நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்தார்.
    • தினமும் தனது மகள்களுடன் மனைவியின் சமாதிக்கு சென்று வணங்கி வருகிறார்.

    தெலுங்கானா:

    தெலுங்கானா மாநிலம் அனுமகொண்டா மாவட்டம் கனபர்த்தியை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மனைவி மானசா. தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். சிவராஜ் தனது மனைவி மானசா மீது அளவு கடந்த பாசம் வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் மானசா திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். உடல் ரீதியாக தனது மனைவி தன்னை விட்டு வெகு தூரம் சென்று விட்டதை உணர்ந்த சிவராஜ் மனைவியின் சமாதியில் நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்தார்.

    அதன்படி மானசாவின் சமாதியில் தன்னை பதிக்கும் வகையில் காதல் சின்னமான 8 அடி உயரத்தில் இதய வடிவிலான நினைவு சின்னத்தை அமைத்துள்ளார்.

    தினமும் தனது மகள்களுடன் மனைவியின் சமாதிக்கு சென்று வணங்கி வருகிறார்.

    ஷாஜகான் தனது மனைவி மீதான அன்பின் காரணமாக தாஜ்மஹால் கட்டினார். நான் மனைவியின் நினைவு என்றும் நிலைத்திருக்க காதல் நினைவுச்சின்னம் அமைத்துள்ளேன் என தெரிவித்தார்.

    • புதிதாக சேலை வாங்கி தரச்சொல்லி கணவனிடம் மனைவி கேட்டுள்ளார்.
    • கணவன் மற்றும் மனைவிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு சேலை வாங்கி தராத கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    2022 ஆம் ஆண்டு முதல் திருமணமான இந்த ஜோடி, சிறு சிறு விஷயங்களுக்கு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். புதிதாக சேலை வாங்கி தரச்சொல்லி கணவனிடம் மனைவி வற்புறுத்தியுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து, கணவர் தனக்கு சேலை வாங்கிதரவில்லை என்றும், என்னை உடல் ரீதியாகவும் தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.

    இதனையடுத்து, கணவன் மற்றும் மனைவிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அதில் மனைவிக்கு புடவை வாங்கி கொடுக்க வேண்டும் என்று கணவனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

    பின்னர் கணவன் புடவை வாங்கி கொடுத்த பின்னர் மனைவி சமாதானம் ஆனதால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

    • 34 வயது நபருக்கு கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது.
    • திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகியும் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை.

    32 வயது என நினைத்து திருமணம் செய்த தனது மனைவியின் வயது 40 என தெரிய வந்ததும் 34 வயதான அவரது கணவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

    குஜராத் மாநிலம் சர்கேஜ் பகுதியைச் சேர்ந்த 34 வயது நபருக்கு கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. அப்போது அவரது மனைவியின் வயது 32 என பெண் வீட்டார் கூறியுள்ளனர். அந்த பெண் 1991 ஆம் ஆண்டு மே மாதம் பிறந்ததாக அவரது பாஸ்போர்ட்டை பெண் வீட்டார் காட்டியுள்ளனர்.

    இந்நிலையில் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றுள்ளனர்.

    அப்போது இயற்கையான முறையில் அப்பெண்ணால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் அப்பெண்ணிற்கு குறைந்தது 40 - 42 வயது இருக்கும் என்றும் மருத்துவ அறிக்கைகள் வெளியானது.

    இதனை பார்த்ததும் அதிர்ச்சியான கணவர் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலியான ஆவணம் கொடுத்து மோசடி செய்து திருமணம் செய்ததாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    இதனையடுத்து அவரது மனைவி, மாமனார் மற்றும் உறவினர்கள் என 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • அடிக்கடி தனது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து கணவர் பார்ட்டி கொடுப்பார்
    • 5 வருட திருமண வாழ்க்கையில் பலமுறை இதுபோன்று நடந்துவந்துள்ளது.

    மும்பையில் வசிக்கும் 35 வயது திருமணமான பெண் ஒருவர் தனது கணவர் அவரது நண்பர்களின் முன் தன்னை  ஆடைகளை அவிழ்க்க கட்டயப்படுத்தியதாக புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் திரைப்பட VFX கலைஞராக பணியாற்றுவரும் அந்த பெண்  சர்வதேச ஏர்லைன் பைலட்டாக பணியாற்றிவரும் தனது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

    அடிக்கடி தனது  நண்பர்களை வீட்டுக்கு அழைத்து பார்ட்டி கொடுக்கும் கணவர் TRUTH OR DARE விளையாடி, தனது மனைவியை அவர்களின் முன் ஆடைகளை அவிழ்க்கும்படி நிர்பந்தம் செய்து வந்துள்ளார். அதற்கு மனைவி மறுத்ததால் அவரை பல்வேறு சமயங்களில் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளன. தங்களின் 5 வருடதிருமண வாழ்க்கையில் பலமுறை கணவர் இடகுபோன்று தன்னை  நண்பர்கள்  முன்னிலையிலும் தனியாக இருக்கும்போதும் அடித்து துன்புறுத்தினார் என்று அப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக  எப்ஐஆர் பதிந்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    • குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இடித்து பெண் ஒருவர் 100 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
    • அவர்களை யாரும் எதுவும் செய்யப்போவதில்லை. நாங்கள் தான் கஷ்டத்தை அனுபவிக்க போகிறோம்' என்று பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

    பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் வெளிப்படையாகவே இந்த வித்தியாசத்தை அன்றாடம் நம்மால பார்க்கவும் உணரவும் முடிகிறது. அந்த வகையில் சாலைகளில் பணக்காரர்கள் மற்றும் பெரும் புள்ளிகளின் சொகுசு கார்கள் இடித்து சாமானிய மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன.

    தற்போது மும்பையில் முக்கிய புள்ளி ஒருவரின் மகன் குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இடித்து பெண் ஒருவர் 100 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் 24 வயதுடைய அந்த இளைஞர் மிஹிர் ஷாம் என்பதும் மகாராஷ்டிர முதலவர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.

    தற்போது மிஹிர் தப்பித்த நிலையில் அவரின் தந்தை ராஜேஷ் ஷாவைவும் குடும்ப டிரைவரையும் போலீசார் கஸ்டடியில் எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் புதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் மிஹிர் ஷாமை முக்கிய குற்றவாளியாக குறிப்பிட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை மும்பையின் உரோலி பகுதியில் உள்ள கோலிவாடா பகுதியில் தனது தம்பதி சென்ற இருசக்கரவாகனத்தின்மீது மிஹிர் ஷாம் ஓட்டிவந்த பிஎம்டபில்யூ சொகுசு கார் பின்னால் இருந்து மோதியதில் தூக்கிவீசப்பட்டு கார் பானட்டில் சிக்கி பெண் 100 மீட்டருக்கு இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார்.

    பெண்ணின் கணவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது விபத்து குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், 'கார் மோதியதில் நான் ஸ்கூட்டரில் இருந்து இடது புறமாக விழுந்துவிட்டேன். எனது மனைவி காரின் முன்புறம் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. நான் இப்போது என்ன செய்வேன். இவர்களெல்லாம் [விபத்து ஏற்படுத்திய இளைஞர் மற்றும் அவரது தந்தை] பெரிய ஆட்கள். அவர்களை யாரும் எதுவும் செய்யப்போவதில்லை. நாங்கள் தான் கஷ்டத்தை அனுபவிக்க போகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விபத்து துரதிஷ்டவசமானது, சட்டம் தன் கடமையைச் செய்யும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தப்பியோடிய மிஹிரை தேடும் பணியில் போலீஸ் இறங்கியுள்ளது. 

     

    • விசாரணையின் போது மிச்செல் கூறிய காரணம் போலீஸாரை வியப்பில் ஆழ்த்தியது.
    • வழக்கு பதிவு செய்து மிச்செல்லை விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்காவில் உள்ள லெபனாவை சேர்ந்த 47 வயதான மிச்செல் என்பவரின் கணவர் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக மனைவி மீது போலீசில் புகாரளித்ததுள்ளார்.

    மிச்செல் தனது கணவர் குடிக்க வைத்திருந்த சோடாவில் பூச்சிக்கொல்லி மருத்தை கலந்து குடிக்க வைத்துள்ளார். மிச்செல் கணவர் அந்த சோடாவை குடிக்க ஆரம்பித்தார். வித்தியாசமான சுவையை அலட்சியப்படுத்திவிட்டு சோடாவைக் குடித்துக்கொண்டே இருந்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவர் தொண்டை புண், குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து சிசிடிவி கேமிரா பதிவுகளை சோதனை செய்த போது மிச்செல் அவர் குடிக்க வைத்திருந்த சோடாவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலப்பது போல் காட்சிகள் பதிவாகி இருந்ததை பார்த்து அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மிச்செல் கைது செய்யப்பட்டார்.

    சிசிடிவி கேமிரா பதிவை சோதனை செய்த போலீசார் விசாரணையை தீவிரபடுத்தினர்.

    விசாரணையின் போது மிச்செல் கூறிய காரணம் போலீஸாரை வியப்பில் ஆழ்த்தியது.

    மிச்செல் தனது கணவருக்கும் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். தான் பிறந்தநாளுக்கு பார்ட்டி கொடுத்ததை குறித்து தனது கணவர் பாராட்டவில்லை ஆகவே கொலை செய்ய முடிவு எடுத்தேன் என்று கூறியுள்ளார்.

    அதையடுத்து வழக்கு பதிவு செய்து மிச்செல்லை விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தடுக்க வந்த பெண்ணின் சகோதரரையும் கணவர் வீட்டார் தாக்கியுள்ளனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணை அவரது தாயின் வீட்டாரிடம் ஒப்படைத்தனர்.

    உத்தரப் பிதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள ஜெய்த்ரா என்கிற பகுதியில் தாயும், உடன் பிறந்த சகோதரியும் மனைவியை தரையில் தள்ளி அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவதை தடுக்காமல் செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த வீடியோ காட்சியில், பெண்ணை தரையில் தள்ளிய கணவரின் சகோதரி அவரின் வயிற்றில் உதைக்கிறார். இதனால் அந்த பெண் வலியில் துடித்து கத்த ஆரம்பிக்கிறார். மருமகளை அடிக்கும் மகளை மாமனார் பலமுறை தடுக்க முயற்சிக்கிறார்.

    அப்போது கட்டிலில் அமர்ந்திருந்த மாமியார் எழுந்து வந்து மருமகளின் கன்னத்தில் அறைகிறார். பிறகு, நாத்தனார் மீண்டும் பெண்ணை தாக்கி அவளது இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு, அறையில் இருந்து வெளியே இழுத்து வந்தார்.

    பின்னர், பெண்ணை வெளியே தள்ளி மாமியார் மற்றும் நாத்தனார் அறையை பூட்டியுள்ளனர். அப்போது தரையில் கிடந்த பெண் தனது மாமனாரிடம் தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சுகிறார்.

    அவளைக் கொல்லுங்கள், முழு பலத்துடன் கொல்லுங்கள் என்று அவரது கணவர் தொடர்ந்து வீடியோ எடுத்து வந்துள்ளார். இந்த வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தடுக்க வந்த பெண்ணின் சகோதரரையும் கணவர் வீட்டார் தாக்கியுள்ளனர்.

    இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து பெண்ணின் சகோதரர் ஜெய்த்ரா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதில், சகோதரியை அவரது கணவர் கேசவ் குப்தா அவரது மாமியார், மாமனார் மற்றும் நாத்தனாருடன் சேர்ந்து 5 லட்சம் ரூபாய் கேட்டு துன்புறுத்துவதாக குறிப்பிட்டார்.

    அதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணை அவரது தாயின் வீட்டாரிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலிகஞ்ச் காவல் நிலைய பொறுப்பாளர் அமித் குமார் தெரிவித்தார்.

    • அதே நேரம் இருவரும் விவாகரத்து செய்யாமலேயே கடந்த ஓரு ஆண்டாக தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.
    • பெண்ணுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் கசன்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த இளம் டாக்டர் தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அவர்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் அடிக்கடி இருவரும் சண்டை போட்ட நிலையில், இருவரும் பிரிந்தனர். அதே நேரம் இருவரும் விவாகரத்து செய்யாமலேயே கடந்த ஓரு ஆண்டாக தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் அந்த பெண்ணுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அந்த பெண் தனது 2 ஆண் நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று உள்ளார். அங்கு அறை எடுத்து தங்கிய அவர் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதையறிந்த அந்த பெண்ணின் கணவரான டாக்டர் நேராக அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு ஓட்டல் ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி, தனது மனைவி தங்கி இருந்த அறையின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார்.

    அப்போது மனைவி இரண்டு ஆண்களுடன் நெருக்கமாக இருப்பதை கண்ட அவர் ஆவேசம் அடைந்து மனைவியை கடுமையாக அடித்து உதைத்து தாக்கி உள்ளார். இதைப்பார்த்த அந்த பெண், ஆண் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் டாக்டர் மற்றும் பெண் டாக்டர், அவரது ஆண் நண்பர்கள் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பெண் டாக்டருடன் நெருக்கமாக இருந்தது காஜியாபாத் மற்றும் புலந்த் சாகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    இதற்கிடையே பெண் டாக்டரை அவரது கணவர் சரமாரியாக தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ×