search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணவர், குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் மாயம்
    X

    கணவர், குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் மாயம்

    • கணவர், குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினி தேவியை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைக்காரப்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 26). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி நந்தினி தேவி (25). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். சம்பவத்தன்று குடும்ப பிரச்சனை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் பால்பாண்டி வெளியே சென்று விட்டார். இதை யடுத்து அருகே உள்ள தாய் வீட்டிற்குச் சென்ற நந்தினி தேவி குழந்தைகளை அங்கு விட்டு விட்டு வெளியே சென்றார். ஆனால் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் மனைவியை கண்டுபிடித்துத் தருமாறு பால்பாண்டி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினி தேவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×