என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கணவர், குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் மாயம்
- கணவர், குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் மாயமாகினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினி தேவியை தேடி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைக்காரப்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 26). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி நந்தினி தேவி (25). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். சம்பவத்தன்று குடும்ப பிரச்சனை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் பால்பாண்டி வெளியே சென்று விட்டார். இதை யடுத்து அருகே உள்ள தாய் வீட்டிற்குச் சென்ற நந்தினி தேவி குழந்தைகளை அங்கு விட்டு விட்டு வெளியே சென்றார். ஆனால் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் மனைவியை கண்டுபிடித்துத் தருமாறு பால்பாண்டி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினி தேவியை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்