என் மலர்
நீங்கள் தேடியது "இளம்பெண்"
- பெண் தனியாக இருப்பதை அறிந்த சுக்ராம் பிரஜாபதி, கதவை உள்பக்கமாகப் பூட்டியுள்ளார்.
- உயிரிழந்த சுக்ராமின் மனைவியின் புகாரின் பேரில், காவல்துறையினர் இளம்பெண் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்யமுயன்ற நபரை இளம்பெண் ஒருவர் கோடரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் மாநிலம் பண்டா மாவட்டத்தில் தந்தையை இழந்த 18 வயது இளம்பெண் தனது தாயுடன் வசித்து வந்தார்.
ஜனவரி 1 ஆம் தேதி தாய் வேலைக்கு சென்ற நிலையில் அப்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
மதியம் 3.30 மணியளவில் பக்கத்துக்கு வீட்டுக்காரரான சுக்ராம் பிரஜாபதி (50),பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
இளம்பெண் தனியாக இருப்பதை அறிந்த அவர், கதவை உள்பக்கமாகப் பூட்டிவிட்டு அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
அப்பெண் தன்னை தற்காத்துக்கொள்ள அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால் சுக்ராம் அப்பெண்ணை தடுத்துள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த கோடாரியை எடுத்த இளம்பெண், தற்காப்பிற்காக அவரை வெட்டியுள்ளார். இதில் சுக்ராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலை செய்த பிறகு, அப்பெண் ரத்தம் படிந்த கோடாரியுடன் நேராக அருகிலிருந்த காவல் நிலையத்திற்குச் சென்று நடந்ததைச் சொல்லி சரணடைந்தார்.
உயிரிழந்த சுக்ராமின் மனைவியின் புகாரின் பேரில், காவல்துறையினர் இளம்பெண் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் தற்காப்பிற்காகவே இந்தச் செயலைச் செய்திருப்பது தெரியவந்துள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்காப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் அவரை விடுவிக்கத் தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
- புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அந்தப்பெண் தனது வீட்டுக்கு வருமாறு காதலனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
- சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர்.
மும்பை சாந்தாகுரூஸ் கிழக்கு, கலினா பகுதியில் உள்ள ஜம்லிபாடா எனும் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட 42 வயது நபரும், 25 வயது பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அந்தப்பெண் நீண்ட நாட்களாக திருமணம் செய்துகொள்ளுமாறு காதலனை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த நபர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அந்தப்பெண் தனது வீட்டுக்கு வருமாறு காதலனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனை ஏற்று காதலனும் சென்றுள்ளார். இருவரும் வீட்டில் இருந்தபோது, மீண்டும் திருமண பேச்சு எழுந்துள்ளது. அப்போதும் அவர் மறுக்கவே, ஆத்திரமடைந்த அந்தப்பெண் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து காதலனின் மர்ம உறுப்பை துண்டித்துள்ளார்.
படுகாயமடைந்த அந்த நபர், வலியால் துடித்த நிலையிலும் அந்த பெண்ணிடமிருந்து தப்பித்து, உடனடியாக தனது சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவரது சகோதரர் விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக வி.என்.தேசாய் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர். மேலும், அவர் மீது பாரதிய நியாய சன்கிதா சட்டப்பிரிவுகளின் கீழ், ஆபத்தான ஆயுதங்களை கொண்டு காயம் விளைவித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அவளுடைய எதிர்காலத்திற்கான என் பெற்றோரின் கனவுகளுக்கான இறுதிச்சடங்கு
- ஒரு இளம் பெண் தனது வாழ்க்கைத் துணையைத் தானாகவே தேர்ந்தெடுப்பது உண்மையிலேயே குற்றமா?
மத்தியப் பிரதேசத்தில் 23 வயது பெண் ஒருவர் தனது சொந்த விருப்பப்படி திருமணம் செய்துகொண்டதால், அவரது உருவப்பொம்மையை வைத்து குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்து, அதனை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் உறவுகள், மரபுகள் மற்றும் சமூக சிந்தனை குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் விதிஷா நகரைச் சேர்ந்த சவிதா குஷ்வாஹா என்ற பெண் வீட்டிலிருந்து திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் குடும்பத்தினர் அவரை ஊர்முழுவதும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால், போலீசிடம் புகாரளித்துள்ளனர். பல நாட்கள் தேடிய பிறகு, போலீசார் சவிதாவைக் கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு குடும்பத்தினரும் வரவழைக்கப்பட்டனர்.
போலீசார் சவிதாவை குடும்பத்தினருடன் செல்ல கூறியுள்ளனர். ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த சவிதா, அவர்களுடன் செல்ல விருப்பமில்லை எனவும், தான் ஒருவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொண்டு அவருடன் வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், துக்கத்திலும், கோபத்திலும் எடுத்த ஒரு முடிவு இப்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
சவிதாவின் குடும்பத்தினர் அவரைப்போன்றே ஒரு உருவப்பொம்மையை வடிவமைத்து, அதற்கு இறுதி சடங்குகள் செய்து, அதனை சவப்பெட்டியில் வைத்து மேள, தாளத்துடன் இறுதி ஊர்வலம் நடத்தினர். தொடர்ந்து இடுகாட்டிற்கு எடுத்துச்சென்று எரித்த குடும்பத்தினர் தங்கள் மகள் இறந்துவிட்டதாக ஊர்முழுவதும் அறிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் பார்த்த பலரும் ஒரு இளம் பெண் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது உண்மையிலேயே குற்றமா? குடும்பம் மற்றும் சமூகத்தின் விதிமுறைகள் ஒருவரின் சொந்த வாழ்க்கையை விட முக்கியமானதாக மாறுகிறதா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
மறுபக்கம் இதுதொடர்பாக பேசியுள்ள சவிதாவின் சகோதரர், "எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை இது சகோதரியின் இழப்பு மட்டுமல்ல. பல வருட வளர்ப்பு, நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளின் சிதைவு. சவிதா வீட்டில் பாசமாக வளர்க்கப்பட்டார். அவளுடைய ஒவ்வொரு தேவையும், விருப்பமும் பூர்த்தி செய்யப்பட்டது. ஆனாலும், அவள் வீட்டை விட்டு வெளியேறியது குடும்பத்தை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது சவிதாவின் இறுதிச்சடங்கு அல்ல. அவளுடைய எதிர்காலத்திற்கான என் பெற்றோரின் கனவுகளுக்கான இறுதிச்சடங்கு" என தெரிவித்தார்.
- வருகிற ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந்தேதிகளில் திருமணம் நடைபெறுகிறது.
- உடுப்பியில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இன்றைய தொழில்நுட்ப உலகில் உணவு முதல் அனைத்து பொருட்களும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் நிலை உருவாகி விட்டது. இந்த நிலையில் வாலிபரும், இளம்பெண்ணும் ஆன்லைனில் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளனர். இது உலகம் டிஜிட்டல் மயமாகி வருவதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது.
பெங்களுரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் மாகடி தாலுகாவில் உள்ள சக்ரபாவி கிராமத்தை சேர்ந்தவர் சுகாஷ். இவர் கனடா நாட்டில் வேலை செய்து வருகிறார். அதுபோல் உடுப்பயை சேர்ந்தவர் மேக்னா. இவர்கள் இருவருக்கும் பெற்றோர் திருமணம் பேசி முடிவு செய்துள்ளனர். வருகிற ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந்தேதிகளில் திருமணம் நடைபெறுகிறது.
அதற்கு முன்பாக நேற்று இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடத்த இருவரின் பெற்றோரும் முடிவு செய்தனர். ஆனால் சுகாசுக்கு விடுமுறை கிடைக்கவில்லை. இதையடுத்து இரு குடும்பத்தினரும் ஆன்லைனில் திருமண நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி உடுப்பியில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் மேடையில் மணமகள் மேக்னா அமர்ந்திருந்தார். அவருடன் அவரது குடும்பத்தினரும், சுகாசின் பெற்றோரும், உறவினர்களும் அமர்ந்து இருந்தனர். ஆனால் மணமகன் சுகாஷ் கனடாவில் இருந்தபடி ஆன்லைனில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்காக திருமண மண்டபத்தில் பிரமாண்ட எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த திரையில் சுகாஷ் தோன்றினார். அதையடுத்து சுகாஷ்- மேக்னாவுக்கு பிராமண சம்பிரதாய முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்தியா நேரத்திற்கும், கனடா நேரத்திற்கும் 12 மணி நேரம் வித்தியாசம் உள்ளது. உடுப்பியில் பகல் 12 மணிக்கு நடந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கனடாவில் நள்ளிரவு நேரத்தில் சுகாஷ் ஆன்லைனில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிங்கி சர்மா கடவுள் கிருஷ்ணரின் தீவிர பக்தை ஆவார்.
- பிருந்தாவனத்தின் கிருஷ்ணர் சிலையிடமிருந்து தங்க மோதிரத்தை பிரசாதமாக பெற்றார்.
லக்னோ:
அது ஒரு தனியார் அலுவலகம். அங்கு பணிபுரியும் சுப்ரமணிக்கு மறுநாள் திருமணம். அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்ப்பவர்கள் அனைவருக்கு பத்திரிகை வைத்து, கண்டிப்பாக திருமணம், வரவேற்பு ஆகியவற்றுக்கு வரும்படி அழைப்ப்பு விடுத்திருந்தான்.
திருமணத்துக்கு முந்தைய தினம். அலுவலகத்தில் மாலை நேரம் இடைவேளை. டீக்கடையில் நின்று சூடாக வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் மகேஷ். அப்போது எதிரில் கந்தன் வருவதைக் கண்டான்.
வாடா கந்தா, சாயந்தரம் சுப்ரமணி ரிசப்ஷன் எப்படி போறே? என கேட்டான். அனைவருடன் தான் செல்ல வேண்டும் என பதிலளித்தான் கந்தன்.
கல்யாணத்தை பண்ணி பார், வீட்டை கட்டிப் பார்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்கன்னு பேச்சை தொடர்ந்தான் மகேஷ்.
ஆமாண்டா, எவ்வளவு செலவு? எதையும் சுருக்க முடியாதுடா. கண்டிப்பா செய்தே ஆகணும். இல்லைன்ன ஒருத்தர் மாத்தி ஒருத்தர் குறை சொல்ல ஆரம்பிச்சுடறாங்க என்றான் கந்தன்.
ஆமாடா, இப்படியும் திருமணங்கள் நடக்குற வேளையில், சில விநோதமான திருமணங்களும் நடக்குது பார் அதுதான் ஆச்சரியம். போன வாரம் கூட உத்தர பிரதேசத்தில் அப்படி ஒரு வித்தியாசமான திருமணம் நடந்துச்சு என்றான் மகேஷ்.
அப்படி என்னடா விநோதம் என கேட்டான் கந்தன்.
உ.பி.யில் நடந்த விநோதமான திருமணம் குறித்து மகேஷ் கூறியதன் சுருக்கம் இதுதான்:
இந்தியா என்பது பல்வேறு கலாசாரங்களும் மொழிகளும் ஒன்றிணைந்த ஒரு நாடு. அதனால்தான் இங்கு மாநில வாரியாக உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பேசும் மொழி என அனைத்திலும் வேறுபாடு இருக்கிறது.
இந்திய கலாசாரத்தில் திருமண விழா என்பது மிக முக்கிய விஷயமாக உள்ளது. திருமணத்தில் மாறுதல்கள் இருந்தாலும் இந்தியா முழுவதும் திருமணம் குறித்த முக்கியத்துவம் மாறுவதில்லை. வடமாநிலங்களில் உள்ள சில கிராமங்களில் விநோத திருமணங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் கிருஷ்ணர்மீது கொண்ட அதீத பக்தியால் உறவினர்கள் முன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து திருமணம் செய்துகொண்டார் பிங்கி என்ற இளம்பெண்.

உ.பி.யின் படோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிங்கி சர்மா (28). இவருக்கு திருமணம் செய்துவைக்க பொருத்தமான மாப்பிள்ளையை தேடி வந்துள்ளனர் அவரது பெற்றோர். பிங்கி சர்மா கடவுள் கிருஷ்ணரின் தீவிர பக்தை ஆவார்.
பட்டப்படிப்பை முடித்துள்ள பிங்கி சர்மா 3 மாதத்துக்கு முன் பிருந்தாவனத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்குச் சென்றார். அப்போது கிருஷ்ணர் சிலையிடமிருந்து தங்க மோதிரத்தைப் பிரசாதமாக பெற்றார்.
காய்ச்சல் வந்தபோது கிருஷ்ணருக்கு பூஜை செய்தேன். காய்ச்சல் குணமானது எனக்கூறிய அவர், இந்த சம்பவங்கள் கிருஷ்ணர் சொன்ன அறிகுறிகள் என உறுதியாக தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, தனது வாழ்க்கையில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்தன எனக்கூறிய பிங்கி, இதனால் கிருஷ்ணரையே திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என பெற்றோரிடம் தெரிவித்ததார்.
பிங்கியின் இந்த முடிவு பெற்றோருக்கு அதிர்ச்சி அளித்தது. அவரது குடும்பத்தினர் முதலில் சம்மதம் தெரிவிக்க மறுத்தனர். ஆனால் பிங்கி தனது முடிவில் உறுதியாக இருந்ததால், சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து, டிசம்பர் 6-ம் தேதி பாரம்பரிய சடங்குகளுடன் கிருஷ்ணருக்கும் பிங்கிக்கும் திருமணம் நடைபெற்றது.
வழக்கமான திருமண நிகழ்ச்சி போன்றே கிருஷ்ணர் சிலைக்கும், பிங்கி சர்மாவுக்கும் அவரது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்தது.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது.
இந்தியாவில் நாகரிகங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சில கிராமங்களில் இதுபோன்ற விநோத திருமணம் நடப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது எனக்கூறி முடித்தான் மகேஷ்.
ஆமாண்டா, கேட்ட எனக்கே இவ்வளவு ஆச்சரியமா இருக்குது என்றால் அதில் கலந்து கொண்டவர்கள் எப்படி இருந்திருப்பாங்க என சொன்ன கந்தன், சரி, வா சுப்ரமணி ரிசப்ஷனுக்கு போய்ட்டு வரலாம் என கிளம்பினான்.
- இந்த 2 வினாடி வீடியோ இணையத்தில் வைரலாகி 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
- இளம் பெண், ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும்போது கேமராவைப் பார்க்கிறாள்.
இளம்பெண் ஒருவரின் 2 வினாடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், வெள்ளை நிற உடையணிந்து, வெள்ளி நகைகள் மற்றும் அச்சிடப்பட்ட பந்தனா அணிந்த இளம் பெண், ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும்போது கேமராவைப் பார்க்கிறாள்.
இந்த 2 வினாடி வீடியோ இணையத்தில் வைரலாகி 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதன்மூலம் ரூ. 5 லட்சம் வருவாயை அப்பெண் ஈட்டியது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
- நிர்வாண படங்களை குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
- போலீசார் வழக்குப்பதிந்து கவுரி, அன்சிகா, முகம்மது அபிப் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் "ஹனி டிராப்" மோசடி அதிகளவில் நடந்துவருகிறது. இதில் வாலிபர்கள் மட்டுமின்றி வயதானவர்கள், வியாபாரிகள் உள்ளிட்டவர்களும் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.
அவமானம் கருதி பலர் பணத்தை இழந்த விவகாரத்தை வெளியே கூறுவதில்லை. இதனால் "ஹனி டிராப்" மோசடியில ஈடுபடும் கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டியபடி இருக்கிறது. இந்தநிலையில் வாலிபர் ஒருவர் "ஹனி டிராப்" மோசடியில் சிக்கி ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இழந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
அவர் கூறிய புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், 2 பெண்கள் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கு, மாவேலிக்கரையை சேர்ந்த கவுரி நந்தா என்ற 20 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி வாலிபருடன், இளம்பெண் நட்பாக பழகி வந்துள்ளார்.
இதையடுத்து அந்த வாலிபரை ஆசைவார்த்தை கூறி கோழிக்கோடு குந்த மங்கலம் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அதன்பேரில் அந்த வாலிபரும் இளம் பெண்ணின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது அந்த வாலிபரை அந்த இளம்பெண் நிர்வாண படங்கள் எடுத்துள்ளார்.
பின்பு அந்த படங்களை காண்பித்து இளம்பெண் கவுரி நந்தா, மேலும் அவருடன் இருந்த திருரங்கடி பனஞ்சேரியை சேர்ந்த அன்சிகா(28), மற்றும் அவரது கணவர் முகமது அபிப் ஆகியோர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
நிர்வாண படங்களை குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதையடுத்து அந்தவாலிபர் தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் கவுரி உள்ளிட்ட 3 பேரும் அந்த வாலிபரை தொடர்ந்து மிரட்டி ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பறித்துள்ளனர்.
இதனால் அவர்களின் மீது அந்த வாலிபர், போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கவுரி, அன்சிகா, முகம்மது அபிப் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
- வீட்டுக்கு வந்ததும் நீதுவுக்கு வாந்தி-மயக்கம் என பல உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
- நீதுவின் உடலில் ரத்தஓட்டம் சீராக இல்லாமல் போனதால் இடது காலில் 5 விரல்கள் மற்றும் வலது கையில் 3 விரல்களை துண்டிக்கும் நிலை ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் முத்தத்தரா ஸ்ரீவராகம் பகுதியை சேர்ந்த இளம்பெண் நீது (வயது31). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் அவர் தனது வயிற்று பகுதியில் இருந்த கொழுப்புகளை நீக்குவதற்காக திருவனந்தபுரம் கஜக்கூட்டம் பகுதியில் உள்ள தனியார் அழகுசாதன மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதற்காக அந்த மருத்துவமனையில் நீதுவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.
அறுவை சிகிச்சை முடிந்து மறுநாள் வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் நீதுவுக்கு வாந்தி-மயக்கம் என பல உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரத்த அழுத்தமும் மிகவும் குறைந்தது. இதையடுத்து நீதுவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மருத்துவமனையை, அவரது கணவர் பத்மஜித் தொடர்பு கொண்டு பேசினார்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மருத்துவர்கள் இல்லை. ஆகவே மறுநாள் வருமாறு மருத்துவமனை தரப்பில் கூறியிருக்கின்றனர். ஆனால் நீதுவின் உடல்நிலை மிகவும் மோசமாகியபடியே இருந்தது. இதனால் நீதுவை அவரது கணவர் வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நீதுவின் உடலில் ரத்தஓட்டம் சீராக இல்லாமல் போனதால் இடது காலில் 5 விரல்கள் மற்றும் வலது கையில் 3 விரல்களை துண்டிக்கும் நிலை ஏற்பட்டது.
அவற்றை அகற்றாவிடில் நீதுவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால், அவரது கையில் 3 விரல்களும், காலில் 5 விரல்களும் வெட்டி அகற்றப்பட்டன. கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சை தவறாக செய்ததன் காரணமாகவே தனது மனைவி 9 விரல்களை இழந்துவிட்டதாக நீதுவின் கணவர் பத்மஜித் குற்றம்சாட்டினார்.
மேலும் அதுகுறித்து நீதுவுக்கு கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சை செய்த தனியார் அழகுசாதன மருத்துவமனையின் மீது போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், அந்த மருத்துவமனையின் உரிமையாளரான டாக்டர் பிபிலாஷ் மீது வழக்கு பதிந்தனர். மேலும் அவரது மருத்துமனை உடனடியாக மூடப்பட்டது.
கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளம்பெண் 9 விரல்களை இழந்த சம்பவம் திருவனந்தபரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- என் முதுகில் தட்ட மர்ம நபர் 3-வது முறையாகவும் யூடர்ன் எடுத்து என்னை பின் தொடர்ந்து வருவதை பார்த்தேன்.
- எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த பகுதியில் நான் பொதுமக்களிடம் உதவி கேட்டேன்.
பெங்களூரு:
பெங்களூருவை சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த மாதம் 30-ந் தேதி இரவு நடந்து சென்றபோது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் அத்துமீறியுள்ளார். இதையடுத்து அந்த நபரிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் கடுமையாக போராடினார். அப்போது சாலையில் நடந்து சென்ற மக்கள், வாகனத்தில் சென்றவர்களிடம் உதவி கேட்டும் யாரும் அந்த இளம்பெண்ணுக்கு உதவி செய்ய முன் வரவில்லை. இதையடுத்து அவர் போலீசில் புகார் செய்து உள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து ஒரு தனியார் டி.வி.யில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அது பற்றிய விவரம் வருமாறு,
பெங்களூருவில் போக்குவரத்து நிறைந்த ஐ.டி. பூங்கா பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள ஈகோவேர்டில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் திடீரென எனது முதுகில் தட்டினார். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. யாரோ ஒருவர் பொறுப்பற்ற முறையில் சென்றதால் தன்மீது அவரது கை மோதியிருக்கும் என்று கருதினேன். ஆனாலும் மீண்டும் அதேபோல் என் முதுகில் தட்டினார். இதையடுத்து யாரோ ஒருவர் வேண்டும் என்றே இதுபோல் செய்கிறார் என்று தெரியவந்தது. இதையடுத்து நான் உதவி கேட்டு கத்தினேன். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை.
என் முதுகில் தட்ட மர்ம நபர் 3-வது முறையாகவும் யூடர்ன் எடுத்து என்னை பின் தொடர்ந்து வருவதை பார்த்தேன். இதையடுத்து நான் உதவிக்காக மீண்டும் கத்தினேன். அப்போது நிறைய பேர் அங்கு இருந்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த பகுதியில் நான் பொதுமக்களிடம் உதவி கேட்டேன். மேலும் அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர்களை நிறுத்தி உதவி கேட்டேன். ஆனால் எனக்கு உதவ யாரும் முன்வரவில்லை. இந்த சம்பவத்திற்கு பின்பு நான் அவசர அவசரமாக ஈகோவேர்டில் உள்ள பாதுகாப்பு அறைக்கு சென்றேன். அங்கு எனக்கு உதவி கிடைத்தது.
பின்னர் மறுநாள் போலீசில் புகார் செய்தேன். இதையடுத்து போலீசார் அந்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு பிறகு தான் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், இதுபோன்ற சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது எனக்கு தெரியும். இவ்வளவு கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு காவலர்கள் கொண்ட பகுதியில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது என்பது மிகவும் ஆச்சரியமான விசயமாக கருதுகிறேன் என்றார். இந்த சம்பவம் தற்போது பெங்களூருல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
மேற்கு வங்காள மாநிலம் கூச் பெகர் பகுதியை சேர்ந்த சுமார் 20 வயது இளம்பெண் ஒருவர் கேரளாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி மங்களூருவில் உள்ள நிறுவனங்களில் வேலை தேடுவதற்காக தனது நண்பர்களுடன் அந்த இளம்பெண் வந்தார். அப்போது அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் இளம்பெண்ணின் செல்போன் சேதம் அடைந்தது. இதையடுத்து அவர் செல்போனை பழுது பார்க்க ஒரு ஆட்டோவில் ஏறி சென்றார்.
அப்போது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. பின்னர் இரவு ரெயில் நிலையத்தில் தன்னை இறக்கி விடும்படியும், சொந்த ஊருக்கு செல்ல இருப்பதாகவும் இளம்பெண் ஆட்டோ டிரைவரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஆட்டோ டிரைவர் இளம்பெண்ணை ரெயில் நிலையத்துக்கு அழைத்து செல்லாமல் உல்லால் அருகே முன்னூர் பகுதியில் உள்ள நேத்ராவதி ஆற்றங்கரைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து இளம்பெண்ணை அவர் வலுக்கட்டாயமாக மதுவை குடிக்க வைத்ததாக தெரிகிறது.
இதனால் அவர் சுயநினைவை இழந்துள்ளார். பின்னர் ஆட்டோ டிரைவர், தனது நண்பர்கள் 2 பேரை அங்கு வரவழைத்துள்ளார். அங்கு வைத்து 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த நிலையில் அதிகாலை 1.30 மணி அளவில் அவருக்கு சுயநினைவு திரும்பியது. அப்போது தான் தன்னை ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கூட்டு பலாத்காரம் செய்தது அவருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவர் உள்ளூர் மக்கள் மற்றும் ஒய்சாலா போலீசார் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து அந்த பெண், உல்லால் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
மேலும் இளம்பெண் ஆட்டோ டிரைவருக்கு கூகுள் பே மூலம் பணம் செலுத்தியிருந்தார். அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முல்கியை சேர்ந்த பிரபுராஜ் (வயது 38) என்பது தெரியவந்தது. மேலும் அவர் தான் இளம்பெண்ணை கடத்தி சென்றதும், தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
பின்னர் போலீசார் ஆட்டோ டிரைவர் பிரபுராஜ், அவரது நண்பர்களான கும்பாலாவை சேர்ந்த மிதுன் (30), மணீஷ் (30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் குடும்பத்தினர் அவரை ராகுலுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
- திருமணத்திற்கு பிறகும் ராகுலின் மனைவி அவரது காதலனுடன் பேசி, பழகி வந்துள்ளார்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் பகுதியை சேர்ந்தவர் கோல்டன் பாண்டே என்ற ராகுல் (வயது25). இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 17 வயதான மைனர் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஆனால் அந்த பெண் யுவராஜ் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் குடும்பத்தினர் அவரை ராகுலுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகும் ராகுலின் மனைவி அவரது காதலனுடன் பேசி, பழகி வந்துள்ளார். அப்போது ராகுலை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டி உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 13-ந்தேதி ராகுல் தனது மனைவியுடன் ஷாப்பிங் சென்றுள்ளார். இருவரும் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். இந்தூர்-இச்சாப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள கல்லூரி அருகே சென்ற போது ராகுலின் மனைவி தனது செருப்பு கழன்று கீழே விழுந்து விட்டது. எனவே மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
உடனே ராகுல் மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது அங்கு மறைந்திருந்த யுவராஜின் நண்பர்கள் 2 பேர் பீர்பாட்டிலால் ராகுலை சரமாரியாக தாக்கினர். மேலும் உடைந்த பாட்டிலால் ராகுலின் உடலில் சுமார் 36 முறை குத்திக்கொலை செய்தனர்.
பின்னர் ராகுலின் மனைவி தனது கள்ளக்காதலன் யுவராஜ்க்கு வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். அப்போது கொலை செய்யப்பட்ட ராகுலின் உடலை காட்டியுள்ளார். பின்னர் ராகுலின் உடலை காட்டுப்பகுதியில் வீசி விட்டு 3 பேரும் தலைமறைவாகி உள்ளனர்.
இந்நிலையில் வெளியே சென்ற ராகுல் மற்றும் அவரது மனைவியையும் காணவில்லை என அவர்களது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது ராகுல் உடல் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ராகுலை அவரது மனைவி தனது கள்ளக்காதலனின் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்யதது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த ராகுலின் மனைவி, அவரது கள்ளக்காதலன் யுவராஜின் நண்பர்களான லலித் பாட்டீல் மற்றும் ஒரு சிறுவன் என மொத்தம் 4 பேரை கைது செய்தனர்.
- பைக் மோதி இளம்பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
- போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்தவர்களை விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
புதூர் ராமலட்சுமி நகரை சேர்ந்த பாண்டி மகள் காதம்பிரியா (24). சம்பவத்தன்று காலை இவர் தல்லாகுளம் கோகலே ரோட்டில் நடந்து சென்றார். வணிக வளாகம் அருகே, வேகமாக வந்த பைக் மோதியது.
இதில் காதம்பிரியா படுகாயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மதுரை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த தேனி மாவட்டம், சிப்பலாக்கோட்டை, அம்பிகை கோவில் தெருவை சேர்ந்த மணிவண்ணன் (34) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊமச்சிகுளம், புது நத்தம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேர்ந்த ராஜாராம் மனைவி தனம் (80). இவர் வெளியூருக்கு செல்வதற்காக, குடிநீர் வடிகால் வாரிய காலனி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.
வேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி தனத்தை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்த மதுரை இளம்பூர் இளங்கோ முருகன் ராம்பாபு (22) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






