என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தர பிரதேசம்"

    • இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றிப்போய் கைக்கலப்பாகி உள்ளது.
    • ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில், 15 பேர் காயமடைந்தனர்.

    உத்தர பிரதேசம் மாநிலம் பிஜுனூரில் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

    அப்போது, திருமண நிகழ்வில் பரிமாறப்பட்ட சிக்கன் துண்டுகள் சிறியதாக இருந்ததாக மணமகன் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    குறிப்பாக, மணமகன் வீட்டாருக்கு பொறித்த சிக்கன் சிறிய துண்டுகளாகவும், மணமகள் வீட்டாருக்கு பெரியதாகவும், அதிகமாகவும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் கோபமடைந்த மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றிப்போய் கைகலப்பாகி உள்ளது.

    சிக்கன் பிரச்னையில் திருமண வீடுடே கலவர வீடாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில், 15 பேர் காயமடைந்தனர்.

    சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருதரப்பினரையும் சமாதானம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.

    • நல்ல சம்பளம் கிடைக்கும் என சவுதி அரேபியா சென்றுள்ளார்.
    • உரிமையாளர் கொன்று விடுவதாக மிரட்டுவதாக வீடியோவில் பதிவு.

    இந்தியாவைச் சேர்ந்த பல இளைஞர்கள் அதிக சம்பளம் கிடைக்கும் என சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு செல்கிறார்கள். ஆனால், அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக கடுமையான வேலை வழங்கப்படுகிறது. போதுமான சம்பளம் வழங்கப்படுவதில்லை. கபீல் என அழைக்கப்படும் அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் உரிமையாளர்கள் டிராவல் ஆவணங்களை பறிமுதல் செய்து கொண்டு மிரட்டுவது உண்டு.

    இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் இதுபோன்று சிக்கி தவித்தது உண்டு. இந்திய தூதரகம் மூலம் அவர் மீட்கப்பட்டு இந்தியா வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் ஒட்டகம் மேய்த்தவாறு, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர்கள், உதவி கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ வைரல் ஆகியுள்ளது.

    அந்த வீடியோவில், என்னுடைய கிராமம் அலகாபாத்தில் உள்ளது. நான் சவுதி அரேபியாவுக்கு வந்தேன். என்னுடைய பாஸ்போர்ட் கபீலிடம் உள்ளது. என்னுடைய சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என அவரிடம் கூறினேன். அதற்கு அவர் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்" எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோ குறித்து சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதில் கூறியிருப்பதாவது:-

    தூதரகம் இந்த இளைஞர்கள் இருக்கும் இடத்தை கண்டறிய முயற்சி மேற்கொண்டது. அவர் இருக்கும் மாகாணம் அல்லது இடம் அல்லது உரிமையாளர் விரம், தொடர்பு கொள்ளும் எண் குறித்து அதில் தெரிவிக்கவில்லை. இதனால் மேற்கொண்டு நடவடிக்க எடுக்க முடியவில்லை.

    இந்த இளைஞகன் போஜ்பூரி மொழியில் பேசுகிறார். பிரயக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்தவர் என்கிறார். நம்பத்தகுந்த வகையிலான அந்த இளைஞனின் குடும்பத்தின் விவரம் தெரியவந்தால், தொடர்பு கொள்ளும் வகையில் தங்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளது.

    • மனைவி பிரிந்த நிலையில் ஆண் நண்பரின் தனியாக வசித்து வந்துள்ளார்.
    • தந்தையை பார்க்க வந்த சிறுமியை, நண்பர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் தனது மகளை சீரழித்த, ஓரினச்சேரிக்கை பார்ட்னரின் ஆணுறுப்பை துண்டித்த நபர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் 32 வயது நபர். இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். மனைவி பிரிந்ததால், ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார். அவருடன், 32 வயதான ராம்பாபு யாதவ் என்பரை அந்த அறையில் சேர்த்துக் கொண்டார்.

    இவருக்கும் இடையிலான நட்பு, பின்னர் ஓரினசேர்க்கையாளராக இணைந்து வாழும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இருவரும் சிறிய அறையில் வாழ்ந்து வந்த நிலையில், ஒருநாள் அந்த நபரின் 6 வயது மகள் தந்தையை பார்ப்பதற்காக, அந்த அறைக்கு சென்றுள்ளார். அப்போது ராம்பாபு யாதவ், தனது பார்ட்னரின் மகள் என்று கூட பார்க்காமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    இந்த விசயம் அந்த சிறுமியின் நண்பருக்கு ஒரு சில தினங்கள் கழித்து தெரியவந்துள்ளது. அடைக்கலம் கொடுத்து பார்ட்னராக்கிய நிலையில், தனது மகளையே சூறையாடிவிட்டானே என அந்த சிறுமியின் தந்தை கடுங்கோபம் அடைந்தார்.

    இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அத்துடன் ராம்பாபு யாதவுடன் சண்டையில் ஈடுபட்டார். அப்போது திடீரென சிறுமியின் தந்தை, கத்தியை எடுத்து நண்பரின் ஆணுறுப்பை அறுத்து துண்டாக்கினார். இதனால் ராம்பாபு யாதவ் ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.

    உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த சிறுமியின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

    ராம்பாபு யாதவ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அந்த சிறுமியை மெடிக்கல் உதவி மற்றும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், தாய்வழி பாட்டி வீட்டிற்கு தங்கவைக்கப்பட்டுள்ளார்.

    • கணவனின் தம்பி, தங்கையுடன் பழகி வந்துள்ளார்.
    • வீட்டில் எதிர்ப்பு கிளம்ப, விலகி சென்றதால் கொழுந்தன் மீது, அண்ணிக்கு ஆத்திரம்.

    தங்கையிடம் நன்றாக பழகி, பின்னர் கழற்றி விட்டு மற்றொரு பெண்ணுடன் பழக ஆர்வம் காட்டியதால், ஆத்திரம் அடைந்த அண்ணி கொழுந்தனின் பிறப்புறுப்பை அறுத்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மவு ஐமாவில் உள்ள மல்கான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் அசாரே. இவரது மகன் உதய். இவர் மஞ்சு என்பவரை திருமணம் செய்து உள்ளார்.

    உதயின் இளைய சகோதரர் உமேஷ். இவருக்கு 20 வயது ஆகிறது. இவர் மஞ்சுவின் இளைய சகோதரியுடன் பழகி உள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதில் இருவரும் உறுதியாக இருந்துள்ளனர்.

    எனினும் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக அசாரே குடும்பத்தினர் அண்ணனுக்கு திருமணம் முடித்த அதே வீட்டில் திருமணம் முடிக்க விருப்பம் இல்லை என்பதால் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியாக உமேஷ் மஞ்சுவின் தங்கையின் தொடர்பில் இருந்து வெளியேற முயன்றார். மேலும் ஒரு மற்றொரு பெண்ணுடன் நெருங்கி பழகுவதில் ஆர்வம் காட்டியுள்ளார்.

    இதனால் மஞ்சுவின் சகோதரி மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளார். யாரிடமும் பேசாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனால் அவருக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

    தன் தங்கையின் இந்த நிலைக்கு கொழுந்தன்தான் காரணம். இதனால் பழி வாங்க வேண்டும் என மஞ்சுவுக்கு கடுமையான கோபம் ஏறியது.

    ஒருநாள் வீட்டில் எல்லோரும் தூங்கும் வரை காத்திருந்தார் மஞ்சு. எல்லோரும் தூங்தியதை உறுதிப்படுத்திய பின்னர், கொழுந்தன் உமேஷ் படுத்திருந்த அறைக்கு சென்றுள்ளார். அங்கு சமையல் அறையில் உள்ள கூர்மையான கத்தியுடன் சென்ற அவர், கொழுந்தனை கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார்.

    பின்னர் மர்ம உறுப்பை கடுமையாக தாக்கி, அறுத்துள்ளார். இதனால் உமேஷ் வலியால் துடிதுடித்து ஐயோ என கத்தினார். உடனே மஞ்சு அந்த இடத்தில் இருந்து வெளியேறி தப்பிவிட்டார்.

    குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உமேஷ் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்பதை பார்த்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரை மருத்துவர்கள் காப்பாற்றினார். ஆனால் காயங்கள் முழுமையாக குணமடைய 6 முதல் 7 மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மர்ம மனிதர்கள் யாரோ தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போதுதான் கொழுந்தனை தாக்கியது அண்ணி என்பது தெரியவந்தது.

    இதற்கிடையே போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்பதை அறிந்த மஞ்சு தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

    • ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையானதால் கடன்மேல் கடன் வாங்கியுள்ளார்.
    • கடன் கழுத்தை நெரித்ததால், அம்மாவின் நகைகளை திருடும்போதும் மாட்டியதால் கொலை.

    உத்தர பிரதேச மாநலத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 20 வயது வாலிபர், லோன் ஆப் மூலம் கடன்மேன் கடன் வாங்கியதால் நெருக்கடிக்கு உள்ளாகி தாயின் நகையை திருடியபோது மாட்டிக்கொண்டதால், தாயையே அடித்துக் கொலை செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    உ.பி.யில் உள்ள பதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த காலி என்ற பகுதியில் வசித்து வரும் வாலிபர் நிகில் யாதவ் என்ற கொலு. இவர் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார். Aviator என்ற ஆன்லைனில் பணம் கட்டி விளையாடியுள்ளார். பணத்தை இழக்க இழக்க கடன் வழங்கம் ஆன்லைன் செயலிகளில் (M Pokket, Flash Wallet, RAM Fincorp) கடன் பெற்றுள்ளார். அந்த செயலில் வட்டி மற்றும் மறைமுக கட்டணம் என அதிகமாக தொகை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

    பணம் செலுத்த வழியில்லாததால் தாயின் நகையை திருடி, அதை விற்று பணத்தை செலுத்த முயற்சி செய்துள்ளார். நகையை திருடும்போது, தாய் கையும் களவுமாக பிடித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளார்.

    பின்னர், இந்த கொலை கொள்ளை சம்பவத்தால் நடைபெற்றது என நாடகம் ஆடுவதற்காக, வீட்டில் உள்ள பொருட்களை அங்கும் இங்குமா தூக்கி வீசியுள்ளார். பின்னர் தனது தந்தைக்கு போன் செய்து, மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளை அடித்தனர். அப்போது என்னை தாக்கிவிட்டு, அம்மாவை கொலை செய்து விட்டு ஓடிவிட்டனர் எனக் கூறியுள்ளார்.

    தந்தை இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் நிகில் யாதவிடம் தொடர் விசாரணை நடத்தும்போது, உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் மீது கொலை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    • உத்தர பிரதேசத்தில் யானை ஒன்றை ஒரு கும்பல் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • யானை திருடு போனது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    ராஞ்சி:

    சாதாரணமாக ஒரு பொருளைத் திருடுபவர்கள் மறைத்து வைக்கக்கூடிய அளவிலேயே சிறிய பொருட்களை மட்டுமே திருடுவார்கள். ஆனால் தற்போது ஒட்டகம், பஸ் போன்ற உருவத்தில் பெரியவற்றையும் திருடிச் செல்கிறார்கள் பலே திருடர்கள்.

    இதற்கிடையே, உத்தர பிரதேசத்தில் மிகப் பெரிய யானையையே ஒரு கும்பல் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:

    உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரை சேர்ந்தவர் நரேந்திர குமார் சுக்லா. இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து ஜெயமதி என்ற பெண் யானையை ரூ.40 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். அங்குள்ள பலாமு மாவட்டத்தின் சுகூரில் யானையுடன் அவர் தங்கி இருந்தார்.

    இந்நிலையில், அந்த யானை மாயமானது. இதுதொடர்பாக மேதினி நகர் போலீசில் நரேந்திர குமார் சுக்லா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, யானையை தேடி வந்தனர்.

    பீகார் மாநிலம் சப்ராவில் ஒரு கும்பல் பெண் யானை ஒன்றை ரூ.27 லட்சத்துக்கு விற்றதாக ஜார்க்கண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்த போலீசார் அங்கிருந்த யானையை மீட்டனர். அதே நேரம் யானையை திருடி விற்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • போதை மறுவாழ் மையத்தில் குறைந்த அளவு உணவு வழங்கப்பட்டதால் கடுங்கோபம் அடைந்துள்ளார்.
    • கொஞ்சம் காய்கறி, சப்பாத்தி, பிஸ்கட் போன்றவைகளை மட்டுமே வழங்கியுள்ளனர்.

    உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹாபூர் என்ற இடத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் 35 வயதான சச்சின் என்பரை உறவினர் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    இவருக்கு குறைந்த அளவு உணவே வழங்கப்பட்டதாக தெரிகிறது. ஒருநாள் முழுவதும் குறைந்த அளவு காய்கறிகள், சில சப்பாத்திகள் மட்டுமே வழங்கியுள்ளனர். மேலும், வீட்டில் இருந்து உறவினர்கள் உணவு கொண்டு வந்தால், கண்ணில் காட்டமாட்டார்களாம். சில நேரங்களில் ஒரேயோரு பிஸ்கட் மட்டுமே வழங்குவார்களாம்.

    இதனால் கோபம் அடைந்த சச்சின் ஸ்பூன், டூத் பிரஷ், பேனா போன்றவற்றை கழிவறைக்கு எடுத்துச் சென்று, அங்குவைத்து இரண்டு மூன்ற தூண்டுகளாக உடைத்து சாப்பிட்டுள்ளார். சில நேரம் உள்ளே செல்லவில்லை என்றால், தண்ணீர் குடித்து விழுங்குவாராம்.

    இதனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு வயிறு வலியால் துடித்துள்ளா். அவரை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை நடத்தும்போது, வயிற்றுக்குள் ஸ்டீல் ஸ்பூன், டூத்பிரஷ் போன்றவை இருந்தது தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

    • குடிபோதைக்கு அடிமையான தந்தை இரு மகள்களையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
    • மனைவி புகார் கொடுக்க போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

    குடிபோதைக்கு அடிமையான தந்தை, தனது 13 வயது மற்றும் 15 வயது மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் காலிலாபாத் கோட்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் கணவன், மனைவி மற்றும் இரண்டு மகள்கள் கொண்ட குடும்பம் வசித்து வருகிறது. இந்த குடும்பத்தின் கணவன் குடிப்பழக்கத்திற்க அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. தினந்தோறும் குடிபோதையில்தான் வீட்டிற்கு வருவார்.

    நேற்று முன்தினம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மாடியில 2ஆவது மகள் (வயது 13) தூங்கிக் கொண்டிருந்தார். போதையில் மகள் என்று கூட பார்க்காமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தனது தந்தையே வாழ்க்கையை சீரழித்து விட்டாரே, இதை எப்படி வெளியில் சொல்வது என பயந்து, மறைத்துள்ளார்.

    ஆனால், அதை சாதகமாக்கிக் கொண்ட கொடூர தந்தை, அடுத்த நாள் (நேற்று) குடிபோதையில் வந்து மூத்த மகளை (வயது) பாலியல் வன்கொடுமை செய்துள்ளா். இது அவரது மனைவிக்கு தெரியவர, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் போலீசார் அந்த கொடூர தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

    • பள்ளிக்கு சென்ற போது கான்ஸ்டபிள் கடத்தி சென்றுள்ளார்.
    • நீண்ட நேரம் வீட்டிற்கு திரும்பாததால், குடும்பத்தினர் தேடும்போது கான்ஸ்டபிள் பிடிபட்டார்.

    பாதுகாப்பு வழங்கக் கூடிய போலீஸ் கான்ஸ்பிடபிள், 11ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

    நவப்கஞ்ச் என்ற இடத்தில் வசித்து வரும் 11ஆம் வகுப்பு மாணவி வழக்கம்போல் நேற்று பள்ளிக்குச் சென்றுள்ளார். பள்ளிக்கு செல்லும் வழியில் போலீஸ் கான்ஸ்டபிள் வினய் சவுகான் என்பவர், அந்த மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    பள்ளிக்கு சென்ற பெண் நீண்ட நேரம் வீட்டிற்கு திரும்பாததால், உறவினர்கள் மாணவியை தேட ஆரம்பித்துள்ளனர். அப்போதுதான் மாணவியின் தந்தை, கான்ஸ்டபிள் காரில் தனது மகளை பார்த்துள்ளார். உடனடியான மகளை மீட்டு, கான்ஸ்டபிளை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைந்துள்ளார்.

    கான்ஸ்டபிள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கணவர் உயிரிழந்த நிலையில் இரண்டு மைத்துனர்களுடன் குடும்பம் நடத்திய மனைவி.
    • நிலத்தை விற்க மாமியார் எதிர்ப்பு தெரிவித்ததால் கொலை செய்து, நகை கொள்ளையடிப்பு.

    உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் 54 வயது பெண் கொலை செய்யப்பட்டு, தங்க நகைகள் கொள்ளைடிக்கப்பட்ட வழக்கு விசாரணையில் மருமகளின் குட்டு அம்பலமாகியுள்ளது.

    ஜான்சியில் உள்ள கும்ஹாரியா கிராமத்தில் சுஷிலா தேவி என்ற பெண் வசித்து வந்தார். இவர் கணவரை இழந்தவர். இவர் கடந்த ஜூன் 24ஆம் தேதி வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அத்துடன் வீட்டில் உள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

    இதனால் போலீசார் கொள்ளையை தடுக்க முயன்றபோது, சுஷிலா தேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில்தான் அனில் வர்மா என்பவர் நகையை விற்பனை செய்ய முயற்சித்தபோது போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது போலீசார் மீது அனில் வர்மா துப்பாக்கிச்சூடு நடத்தினார். போலீசாருக்கு பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தி அவரை பிடித்தனர்.

    இதற்கிடையே சுஷிலா தேவியின் மருமகன் பூஜா அதே வீட்டில் வசித்து வந்தார். அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதிர்ச்சிகரமான பல தகவல் வெளியானது.

    சுஷிலா தேவியின் மூத்த மகனின் மனைவிதான் பூஜா. கணவன் இறந்த பிறகு, கணவரின் தம்பி கல்யாண் சிங் உடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். கல்யாண் சிங்கும் மரணமடைந்துள்ளார். அதனைத்தொடர்ந்து, உறவின்முறை மாமனார் மற்றும் மற்றொரு மைத்துனர் சந்தோஷ் ஆகியோர் பூஜாவை பூர்வீக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

    அங்கு வந்த பூஜா, மைத்துனரான சந்தோஷ் உடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். சந்தோஷ் ஏற்கனவே திருமணம் ஆனவர். சந்தோஷ் உடனான தொடர்பால் பூஜாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு சந்தோஷின் சட்டப்பூர்வ மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். 9 மாதங்களாக அவர் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

    சுஷிலா தேவியின் மூன்று மகன்களுக்கும் மனைவியானதால், வீட்டுத் தலைவி அந்தஸ்தை பிடித்துள்ளார். அத்துடன் கணவர் குடும்பத்தின் விவசாய நிலத்தை விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார். கணவர் குடும்பத்தினருக்கு சுமார் 6.5 ஏக்கர் நிலம் உள்ளது. அவருக்கு இதில் பாதி நிலம் என்பதை வலியுறுத்தி அதை விற்பனை செய்து விட்டு குவாலியருக்கு செல்ல முடிவு செய்துள்ளார். சந்தோஷ் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் சுஷிலா தேவி ஒப்புக்கொள்ளவில்லை. எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து மாமியார் சுஷிலா தேவியை கொலை செய்ய பூஜா முடிவு செய்துள்ளார். அதன்படி திட்டம் தீட்டியுள்ளார். தனது சகோதரி மற்றும் சகோதரியின் காதலன் (அனில் வர்மா) ஆகியோர் உதவியுடன் சுஷிலா தேவியை கொலை செய்து, நகை கொள்ளை அடிக்கப்பட்டதாக நாடகமாடியுள்ளனர்.

    போலீசாரின் விசாரணையில் குற்றத்தை பூஜா ஒப்புக்கொண்டுள்ளார். பூஜாவும், அவரது சகோதரியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட அனில் வர்மா மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    பூஜா கொலையில் ஈடுபட்டடு உறுதி செய்யப்பட்டுள்ளதால் கணவன் மற்றும் கணவரின் தம்பி மரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.

    • 17 வயது மகனுக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுன் தொடர்ந்து போனில் பேச்சு.
    • பின்னர் இருவரும் நெருக்கமாக்கி, திருமணம் செய்து கொண்டனர்.

    உத்தர பிரதேசத்தில் 17 வயது மகனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை, தந்தை திருமணம் செய்து கொண்ட சம்பவத்தால், அந்த பையனின் தாயார் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஷாகீல் (வயது 55). இவருக்கு 6 குழந்தைகள் உள்ளன. 3 பேரக்குழந்தைகள் உள்ளன.

    இவருடைய 17 வயது மகனுக்கு, 22 வயது பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு நிச்சயமும் செய்யப்பட்டிருக்கிறது. மகனுக்கு 17 வயதுதான் ஆகிறது. மேலும் பண நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதனால் திருமணத்தை தள்ளிப் போடலாம் என அந்த பையனின் தாயர் உள்ளிட்ட குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

    ஆனால் ஷாகீல், தனது 17 வயது மகனுக்கும், 22 வயது பெண்ணிற்கும் திருமணம் செய்து வைப்பதில் பிடிவாதமாக இருந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக ஷாகீல் வருங்கால மருமகளிடம் போனில் பேசியுள்ளார். இந்த போன் பேச்சு அதிக நேரம் நீண்டு கொண்டே சென்றுள்ளது. இருவருக்கம் இடையில் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    போனில் நீண்ட பேசுவதால் நிச்சயம் செய்யப்பட்ட மகனுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால் தந்தையின் போனை பார்க்கும்போது, வருங்கால மருமகளுக்கு சந்தேகிக்கும் வகையில் மெசேஜ் அனுப்பியதை கண்டுபிடித்துள்ளார்.

    இது தொடர்பாக குடும்பத்தினர் ஷாகீலிடம் கேட்கும்போது, மகன் திருமணம் குறித்து பேசியதாக சமாளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வேலைக்காக டெல்லி செல்வதாக கூறி, வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். பின்னர் ஒரு சில தினங்கள் கழித்து தனது மனைவிக்கு போன் செய்து, நம்முடைய மகனுக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதைக்கேட்ட ஷாகீல் மனைவி கடும் அதிர்ச்சி அடைந்ததுள்ளார். மருமகளாக எங்கள் வீட்டிற்கு வர வேண்டியவள், தன்னுடைய வாழ்க்கையில் பங்கு போட்டுவிட்டாளே, என வேதனை அடைந்துள்ளார்.

    இது தொடர்பாக போலீசில் புகார் ஏதும் செய்யப்படவில்லை. இதனால் போலீசார் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. சொந்தகாரர்கள் மூலம் இந்த மெதுவாக வெளியில் கசிந்துள்ளது. மகனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை, அவனது தந்தை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • நல்ல வேளை நான் இன்னொரு ராஜா ரகுவன்ஷியாக மாறுவதிலிருந்து தப்பித்தேன்.
    • இப்போது நாங்கள் மூவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

    மேகாலயாவில் தேன்நிலவு கொண்டாட சென்ற ராஜா ரகுவன்ஷி என்ற வாலிபர், தனது மனைவியின் காதலன் மற்றும் அவரது கூலிப்படையினரால் கொடூரமான முறையில் தாக்கி கொல்லப்பட்ட அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்தில் வாலிபர் ஒருவர் தேன்நிலவு கொலையிலிருந்து தப்பியதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தர பிரதேசம் மாநிலம் படாவுன் மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில். சுனிலுக்கும் குஷ்பூ என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 17ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்னர் தனது மாமியார் வீட்டுக்குச் சென்ற மணமகள் குஷ்பூ, அங்கு 9 நாட்கள் அங்கு தங்கி இருந்துவிட்டு மீண்டும் கணவருடன் தனது தாய் வீட்டுக்கு திரும்பினார். தனது தாய் வீட்டிற்கு வந்த குஷ்பூ, தனது காதலனுடன் ஓட்டும் பிடித்துள்ளார்.

    சுனில் அளித்த புகாரின் பேரில் காணாமல் போன குஷ்பூவை போலீசார் தேடிவந்த வேளையில், கடந்த திங்கட்கிழமை வேறொரு வாலிபருடன் திடீரென்று காவல் நிலையத்துக்கு வந்த குஷ்பூ, "என்னுடைய கணவருடன் வாழ எனக்கு பிடிக்கவில்லை. நான் ஏற்கனவே காதலித்து வந்த இவருடன்தான் இனிமேல் வாழப் போகிறேன்" என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

    இதற்கு சுனில் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், ஆச்சர்யம் அளிக்கும் வகையில் மனைவி அவரின் காதலுடன் செல்ல சம்மதம் தெரிவித்துள்ளார்.

    காதலடன் அனுப்பி வைத்ததற்கான காரணத்தை சுனில் விவரித்துள்ளார்.

    அவர் வீட்டில் இருந்து சென்ற பிறகு இமையமலை அடிவார நகரமான நைனிடாலுக்கு ஹினிமூன் செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் அவருடைய காதலனுடன் செல்ல விரும்புகிறார். இதனால் நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

    நல்ல வேளை நான் இன்னொரு ராஜா ரகுவன்ஷியாக மாறுவதிலிருந்து தப்பித்தேன். இப்போது நாங்கள் மூவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். என் வாழ்க்கை அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது என சுனில் தெரிவித்துள்ளார்.

    ×