என் மலர்
நீங்கள் தேடியது "elephant"
- மனதை தொடும் வீடியோ பகிரப்பட்ட சில மணி நேரத்திலேயே 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களால் லைக் செய்யப்பட்டது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய கால கட்டத்தில் பாசம், அன்பு என்பது வெறும் சொல்லாகவே உள்ளதாக பெரும்பாலானோர் உணர்கின்றனர். ஒருவர் காட்டும் பாசத்தை புறந்தள்ளும் சம்பவங்களே இன்றைய சமூகத்தில் அதிகமாக நடைபெறுவதாக பலர் வேதனையில் உள்ளனர். ஆறறிவு மனிதர்கள் தான் இப்படி... ஐந்தறிவு உள்ள விலங்குகள் அப்படி இல்லை என்று சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பல வீடியோக்கள் உணர்த்தியுள்ளன. அப்படி தற்போது பகிரப்படும் வீடியோ தான் பார்ப்பவர்களை உணர்ச்சியில் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
27 வினாடிகளே ஓடும் வீடியோவில் யானை ஒன்று மருத்துவமனை வாசலில் நிற்கிறது. பிறகு, அறையின் உயரம் குறைவாக உள்ளதை உணர்ந்த யானையானது மெதுவாக குனிந்து அடிமேல் அடி வைத்து ஊர்ந்து தன்னை வளர்த்த முதியவரிடம் சென்று அதன் தும்பிக்கையை நீட்டி அவர் மீது போர்த்தியிருக்கும் துணியை விலக்குகிறது. அதன்பின் அங்கு இருக்கும் பெண் ஒருவர் யானையின் தும்பிக்கையை தூக்கி முதியவரின் கையோடு இணைக்கிறார்.
இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த மனதை தொடும் வீடியோ பகிரப்பட்ட சில மணி நேரத்திலேயே 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களால் லைக் செய்யப்பட்டது. மேலும் பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஒரு பயனர் 'இது அன்பின் தூய்மையான வடிவம்... விலங்குகள் தங்களைப் பராமரித்தவர்களை ஒருபோதும் மறக்காது' என்றும் மற்றொருவர் "காதலுக்கு எல்லைகள் இல்லை என்பதற்கு இந்த வீடியோ சான்றாகும். இதுதான் மிகவும் அழகான, மனதைத் தொடும் காட்சி" என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
Elephant brought to hospital to say goodbye to his terminally ill caretaker. ?? pic.twitter.com/TKSNS6vy88
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) February 6, 2025
- யானை ஆத்திரம் அடைந்து ஜே.சி.பி. எந்திரத்துடன் மோதுகிறது.
- யானை மிரண்டு ஓடியபோதும் அதை துரத்துகிறார்.
யானையும்- ஜே.சி.பி. எந்திரமும் மோதிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவுகிறது.
மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டம் டாம்டிம் பகுதியில் ஒரு காட்டு யானை உணவு தேடி ஊர்ப்புறத்துக்கு வந்துவிட்டது. இதையடுத்து கிராம மக்கள் யானையை துரத்த ஆரம்பித்தனர். கம்பு- குச்சிகளுடன் கூச்சல் போட்டால் மட்டும் யானையை விரட்ட முடியாது என நினைத்த ஒருவர், ஜே.சி.பி. பொக்லைன் எந்திரம் மூலம் யானையை விரட்ட முயற்சிக்கிறார்.
அப்போது யானை ஆத்திரம் அடைந்து ஜே.சி.பி. எந்திரத்துடன் மோதுகிறது. தன் பலத்தால் ஜே.சி.பி.யை அந்தரத்திற்கு உயர்த்துகிறது. இருந்த போதிலும் ஜே.சி.பி. டிரைவர், எந்திரத்தின் பின்பக்க தோண்டும் பகுதியை தரையில் பதித்து ஜே.சி.பி.யை கவிழ்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டு யானையுடன் சாதுரியமாக மோதுகிறார். யானை மிரண்டு ஓடியபோதும் அதை துரத்துகிறார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, கடும் விவாதத்தை தூண்டியது. 'வனவிலங்கை இப்படி துன்புறுத்துவதா?' என்று பலரும் கண்டன பதிவுகளை வெளியிட்டனர். போலீசார் விசாரணை நடத்தி ஜே.சி.பி. டிரைவரை கைது செய்து உள்ளனர்.
In India they fight Elephants with JCB Diggers pic.twitter.com/G7HxcZCJJo
— Concerned Citizen (@BGatesIsaPyscho) February 5, 2025
- கிராமத்தில் அட்டகாசம் செய்த யானையை ஜேசிபி கொண்டு விரட்ட முயன்றுள்ளனர்.
- ஆத்திரமடைந்த யானை ஜேசிபியை அலேக்காக தூக்கியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நுழைந்து அட்டகாசம் செய்த யானையின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
झापामा हात्तीकाे आतंक#NepalKhabar #Elephant #Jhapa pic.twitter.com/q0tnn3Sk6b
— Nepalkhabar (@nepalkhabar) February 3, 2025
கிராமத்தில் அட்டகாசம் செய்த யானையை ஜேசிபி கொண்டு விரட்ட முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த யானை ஜேசிபியை அலேக்காக தூக்கியுள்ளது. பின்னர் பக்கத்தில் இருந்த கட்டிடத்தை யானை இடிக்க முயன்றது.
இதனால் சிறுது காயமடைந்த யானை அங்கிருந்து விலகி நடந்து சென்றது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
TRAGIC THIS: In search of food but disturbed by human noise, a wild elephant attacked a JCB and a watchtower in Damdim (Dooars) today. In the chaos, the tusker also sustained injuries. pic.twitter.com/ZKlnRixaFN
— The Darjeeling Chronicle (@TheDarjChron) February 1, 2025
- யானை துரத்தி சென்று, கீழே தள்ளி காலால் மிதித்தது.
- வனத்துறை சார்பில் முதலுதவி சிகிச்சைக்காக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஈட்டியார் எஸ்டேட் உள்ளது.
இந்த பகுதியையொட்டி வனப்பகுதி உள்ளதால் அவ்வப்போது வனவிலங்குகள் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிகளவில் ஊருக்குள் புகுந்து வருகிறது.
சம்பவத்தன்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஈட்டியார் எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. குடியிருப்பு பகுதியில் வெகுநேரமாக சுற்றிய காட்டு யானை, அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே சென்றது.
அங்கு ரேஷன் கடையின் கதவை உடைத்து தள்ளியது. இந்த நிலையில் ரேஷன் கடையில் இருந்து சற்று தொலைவில், அன்னலட்சுமி (67) என்ற மூதாட்டியின் வீடு உள்ளது.
இரவு நேரத்தில் ஏதோ சத்தம் கேட்டதால் அன்னலட்சுமி, கதவை திறந்து வெளியில் வந்து பார்த்தார். அப்போது யானை நின்று கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் அங்கிருந்து ஓட முயன்றார்.
ஆனால் யானை அவரை துரத்தி சென்று, கீழே தள்ளி காலால் மிதித்தது. இதில் மூதாட்டி இடுப்பு பகுதியில் பலத்த காயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் அங்கு நின்றருந்த யானையை சத்தம் போட்டு காட்டுக்குள் விரட்டினர். பின்னர், காயம் அடைந்த மூதாட்டி அன்ன லட்சுமியை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக மானாம்பள்ளி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயம் அடைந்த அன்னலட்சுமிக்கு, மானாம்பள்ளி வனத்துறை சார்பில் முதலுதவி சிகிச்சைக்காக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
- வனத்தை விட்டு 8 காட்டு யானைகள் வெளியேறி வெள்ளருக்கம்பாளையம் பால்காரர் தோட்ட பகுதிக்குள் புகுந்தது.
- செந்தில் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் மற்றொரு 2 காட்டு யானைகள் புகுந்தது.
வடவள்ளி:
கோவை போளூவாம்பட்டி வனசரகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் காட்டு யானைகள் உள்ளன.
இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து வருகின்றன.
அவ்வாறு வரும் யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில் நேற்றிரவு வனத்தை விட்டு 8 காட்டு யானைகள் வெளியேறி வெள்ளருக்கம்பாளையம் பால்காரர் தோட்ட பகுதிக்குள் புகுந்தது.
அந்த பகுதியில் சுற்றி திரிந்த யானை, அருகே உள்ள பகுதிகளுக்குள்ளும் புகுந்து சுற்றி திரிந்து வந்தன.
பின்னர் வண்டிகாரனூர் பகுதிக்குள் சென்ற காட்டு யானைகள், அங்குள்ள நந்தகுமார் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு தென்னை மரங்கள் மற்றும் போர்வெல் மோட்டார் பைப்புகளை சேதப்படுத்தி சென்றது.
இதேபோல் பூந்தோட்டம் அருகே செந்தில் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் மற்றொரு 2 காட்டு யானைகள் புகுந்தது.
அங்கு சிறிது நேரம் சுற்றிய காட்டு யானைகள், கோடாங்கி பள்ளம் வழியாக வடக்கு நோக்கி சென்றது.
இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் அந்த பகுதியில் சுற்றிய ஒற்றை காட்டு யானை, வனத்தை நோக்கி சென்றது. அப்போது அந்த பகுதியில் உள்ள ஒருவர், சாலையில் யானை நடந்து வருவதை பார்த்ததும் ஓட்டம் பிடித்தார். யானையும் அவரை துரத்தி சென்றது. அவர் பாதுகாப்பான இடத்திற்குள் சென்று தஞ்சம் அடைந்தார். அதன்பின்னர் யானை அங்கிருந்து சென்று விட்டது.
இந்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கிணற்றுக்குள் விழுந்து கிடந்த யானையை மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
- யானையை மீட்கும் பணியில் 60 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கரிக்கோடு அருகே உள் ஊருங்காட்டேரி பகுதியை சேர்ந்த சன்னி என்பவரின் தோட்டத்தில் இருக்கும் கிணற்றுக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டுயானை ஒன்று தவறி விழுந்துவிட்டது.
அந்த கிணறு 25 அடி ஆழம் என்பதால் யானையால் மேலே வரமுடியவில்லை. இதுகுறித்து மலப்புரம் வனத்ததுறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், கிணற்றுக்குள் விழுந்து கிடந்த யானையை மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
அதே நேரத்தல் அந்த பகுதி மக்கள் வன விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க நடவடக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். இதனால் யானையை மீட்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை வனத்துறையினர் சமரசம் செய்து அனுப்பி விட்டு மீட்பு பணியை தொடர்ந்தனர்.
யானையை மீட்கும் பணியில் 60 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் ஈடுபட்டனர். யானையை கிணற்றுக்கு வெளியே கொண்டு வருதற்காக கிணற்றின் அருகில் மிகப் பெரிய குழி தோண்டப்பட்டது. அதன் வழியாக யானை வெளியே கொண்டு வரப்பட்டது.
சுமார் 20 மணி நேரத்திற்கு பிறகு கிணற்றுக்குள் இருந்து காட்டு யானை மீட்கப்பட்டது. அந்த யானையை வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
- கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த டாப் சிலிப் யானைகள் முகாமுக்கு கொண்டு சென்றனர்.
- புல்லட் ராஜா யானையை சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு சோதனை சாவடி வழியாக இரவோடு இரவாக கொண்டு சென்றனர்.
நெல்லை:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த சேரங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதத்தில் புல்லட் ராஜா என்ற காட்டு யானை அட்டகாசம் செய்து வந்தது. அந்த 1 மாதத்தில் 48-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை புல்லட் யானை சேதப்படுத்தியது.
மேலும் குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களை சாப்பிட்டு விட்டு விளைநிலங்களை சேதப்படுத்தியும் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தனர்.
கேரளா மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் நீலகிரி, பொள்ளாச்சி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
சுமார் 75 பணியாளர்கள் கொண்ட வனக்குழுவினர் மற்றும் கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் யானை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். கடந்த மாதம் 27-ந் தேதி சேரம்பாடி பகுதியில் புல்லட் யானை முகாமிட்டிருப்பதை அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று புல்லட் யானை மீது மயக்க ஊசியை செலுத்தி பிடித்தனர். பின்னர் அதனை கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த டாப் சிலிப் யானைகள் முகாமுக்கு கொண்டு சென்றனர்.
சுமார் 1 மாதம் அங்கு வைத்து யானை பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், அங்கிருந்து பாதுகாப்பான வனப்பகுதிக்கு கொண்டு சென்று யானை விடப்படும் என வனத்துறையினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் நேற்றிரவு முகாமில் இருந்து கனரக லாரியில் ஏற்றப்பட்ட புல்லட் யானை, சாலை மார்க்கமாக நெல்லையை வந்தடைந்தது.
தொடர்ந்து களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா தலைமையிலான வனத்துறையினர் இந்த புல்லட் ராஜா யானையை சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு சோதனை சாவடி வழியாக இரவோடு இரவாக கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மாஞ்சோலை வழியாக கோதையாறு அடர் வனப்பகுதியில் இறக்கிவிட வனத்துறையினர் பத்திரமாக யானையை அழைத்து சென்றனர்.
யானை கொண்டு வரப்பட்டதையொட்டி, களக்காடு முண்டந்துறை புலிகள் அம்பாச முத்திரம்காப்பக துணை இயக்குனர்கள் இளையராஜா, ராமேஸ்வரன் தலைமையிலான வனத்துறையினர் யானை வரும் வழியில் எல்லாம் மின்சாரத்தை துண்டித்து மிகுந்த பாதுகாப்புடன் கொண்டு சென்றனர். மேலும் நெல்லை வனத்துறை, மருத்துவ குழுவினரும் அவர்களுடன் செல்கின்றனர்.
ஏற்கனவே தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் என்ற காட்டு யானையை கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் இங்கு விடப்பட்டது. தற்போது மேலும் ஒரு காட்டு யானையான புல்லட் யானை கோதையாறு பகுதியில் வனத்துறையினர் விட்டதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.
கோதையாறு அடர் வனப்பகுதியானது அகத்தியமலை யானைகள் காப்பகமாக ஏற்கனவே மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால், நேற்று இரவோடு இரவாக புல்லட் யானை அங்கு கொண்டு வரப்பட்டு அடர் வனப்பகுதியில் விடப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
- மதுவை குடித்து விட்டு, காலிபாட்டிலை சாலையோரம் வீசி செல்கிறார்கள்.
- விலங்குகளுக்கு ஆபத்து என வன ஆர்வலர்கள் கவலை.
ஊட்டி:
சுற்றுலா தலமான நீலகிரிக்கு தினந்தோறும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இயற்கை சூழலை பாதுகாக்கும் விதமாக நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீலகிரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை சாலையோரம் வீசி செல்கின்றனர். இன்னும் சில சுற்றுலாப் பயணிகள் தாங்கள் வாங்கி வந்த மதுவை குடித்து விட்டு, காலிபாட்டிலை சாலையோரம் வீசி செல்கிறார்கள்.
முதுமலை, மசினகுடி, மாவநல்லா, குன்னூர், மேட்டுப்பாளையம்,கோத்தகிரி பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் அதிகளவில் கிடக்கிறது.
இதனால் வனவிலங்குகளின் கால்களில் காயங்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் முதுமலை வனப்பகுதியில் வனத்தை விட்டு வெளியே தாயுடன் வந்த குட்டி யானை சாலையோரத்தில் சுற்றி திரிந்தது.
அப்போது குட்டி யானை சாலையோரம் கிடந்த மதுபாட்டிலை தனது துதிக்கையால் எடுத்து வாயிலுக்குள் திணிக்க முயற்சிக்கிறது. இதனை அவ்வழியாக சென்றவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த வன ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சாலையோரம் மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வீசுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கேரளாவில் மனிதர்களை யானைகள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
- வயநாடு மாவட்டத்தில் ஒரு தம்பதி குழந்தையுடன் பைக்கில் சென்றுள்ளனர்.
கேரளாவில் மலை மற்றும் வனப்பகுதிகள் அதிகமாக உள்ளதால் அங்கு யானைகளின் எண்ணிக்கையும் அதிகம். அதனால் கேரள மாநிலத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.
கேரளாவில் யானைகள் அதிகம் உள்ளதால் அடிக்கடி அவை மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
அவ்வகையில் வயநாடு மாவட்டத்தில் உள்ள திருநெல்லி பகுதியில் குழந்தையுடன் பைக்கில் சென்ற ஒரு தம்பதியை காட்டு யானை துரத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் நல்வாய்ப்பாக குழந்தையுடன் பைக்கில் சென்ற அந்த தம்பதி யானையிடம் சிக்காமல் பத்திரமாக தப்பித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
In Thirunelli, Attappara, Wayanad, bikers narrowly escaped a wild elephant attack. The video of the incident has gone viral on social media platforms.#wayanad #Kerala pic.twitter.com/3LxgLCPVTo
— Sreelakshmi Soman (@Sree_soman) January 19, 2025
- காட்டு யானைகள் கூட்டம் விவசாய நிலங்களில் புகுந்தது.
- கிராம மக்கள் பட்டாசுகளை வெடித்தும், மேளம் அடித்தும் யானைகள் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சந்திரகிரி மண்டலம், கந்துலவாரி பள்ளியை சேர்ந்தவர் ராகேஷ் சவுத்ரி. இவர் தெலுங்கு தேசம் கட்சியின் அப்பகுதி இளைஞர் அணி செயலாளராக இருந்து வந்தார்.
மேலும் கந்துல வாரி பள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும் இருந்தார். இவருக்கு வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலையில் நேற்று சின்ன ராமபுரம் மற்றும் கொங்கரவாரிப்பள்ளி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகள் கூட்டம் விவசாய நிலங்களில் புகுந்தது. அப்பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த கரும்பு, வாழை, நெல், தென்னை, மா உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தது.
நேற்று இரவு யானைகள் கூட்டம் விளைநிலங்களில் புகுந்து நாசம் செய்வதாக அப்பகுதி மக்கள் ராகேஷ் சவுத்ரிக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற ராகேஷ் சவுத்ரி விவசாய நிலத்தில் இருந்த யானைகள் கூட்டத்தை விரட்ட முயன்றார். இதில் ஆத்திரமடைந்த யானைகள் கூட்டம் ராகேஷ் சவுதிரியை துரத்தியது.
ராகேஷ் சவுத்ரி யானைகளிடம் இருந்து தப்பிப்பதற்காக அலறி கூச்சலிட்டபடி ஓடினார். ஆனால் ஆக்ரோஷமாக இருந்த யானைகள் கூட்டம் விடாமல் துரத்தி வந்து காலால் மிதித்து கொன்றது.
இதனை கண்ட கிராம மக்கள் பட்டாசுகளை வெடித்தும், மேளம் அடித்தும் யானைகள் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர் ராகேஷ் சவுத்ரி பிணத்தை மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தெலுங்கு தேசம் எம்எல்ஏ புலிவர்த்தி ஞானி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
- குடகு மாவட்டத்தில் உள்ள தித்திமதி அடர்ந்த வனப்பகுதி ஆகும்.
- யானைகள், மான், புலி, கரடி உள்ளிட்டவைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
பெங்களூரு:
'ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்' என்று சொல்வார்கள். அப்படி ஒரு சம்பவம் 5 அறிவு ஜீவனான யானை நிகழ்த்தியுள்ளது. ஆபத்தில் சிக்கிய யானையை உடன் வந்த நண்பனான மற்றொரு யானை காப்பாற்றியுள்ள சம்பவம் அனைவரின் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள தித்திமதி அடர்ந்த வனப்பகுதி ஆகும். இங்கு யானைகள், மான், புலி, கரடி உள்ளிட்டவைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
இந்த நிலையில் 2 காட்டு யானைகள் உணவு தேடி தித்திமதி பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான மர சேகரிப்பு கிடங்கிற்குள் நுழைந்தன. அப்போது அந்த யானைகளில் ஒன்றின் தலை அங்கு பொருத்தப்பட்டிருந்த இரும்பு கேட்டின் இரும்பு கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டது.

தலை சிக்கிக்கொண்ட காட்டு யானையால், தலையை வெளியே எடுக்க முடியாமல் கேட்டை முன்னும் பின்னுமாக தள்ளி முயற்சித்தது. இருப்பினும் அந்த யானையால் தலையை வெளியே எடுக்க முடியவில்லை.
இதனால் வேதனையுடன் யானை பிளிறியது. இதை பார்த்த அதனுடன் வந்த மற்றொரு யானை, கேட்டில் சிக்கிய யானைக்கு உதவி செய்து மாட்டிய தலையை வெளியே எடுக்க உதவியது. தலை சிக்கிய யானைக்கு ஏதோ சைகை செய்த மற்றொரு யானை கேட்டை தன் பலம் கொண்டு தள்ளியது.

அப்போது தலை சிக்கிய யானை லேசாக தலையை சாய்த்து வெளியே எடுத்தது. பின்னர் மீண்டும் அடர்ந்த வனப்பகுதி 2 யானைகளும் புறப்பட்டு சென்றது.
2 யானைகளின் இந்த பரஸ்பர உதவி தித்திமதி பகுதியில் உள்ள பொதுமக்களை மட்டுமின்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- வனப்பகுதியை விட்டு யானை சாலையை கடந்து வேறு பகுதிக்கு செல்வதும் உண்டு.
- வன விலங்குகள் அவ்வப்போது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வதும், சாலையை கடப்பதும் வழக்கம்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் யானை, மான், கரடி, சென்னாய் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவற்றில் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு யானை சாலையை கடந்து வேறு பகுதிக்கு செல்வதும் உண்டு.
இந்த சமயங்களில் சாலையில் சிறிது நேரம் நின்று சாலையோரம் உள்ள மூங்கில் தூரிகளை உடைத்து சுவைத்து விட்டு செல்லும். கடந்த 4 நாட்களாக மேற்கு மலை தாமரைக்கரை பகுதி சாலையில் ஒற்றை காட்டுயானை ஒன்று சாலையிலேயே நடந்து சென்றும், அந்த பகுதியில் உள்ள மூங்கில் தூர்களை சுவைத்தும், சாலையில் யாரும் செல்ல முடியாத அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி பகல் நேரத்தில் சாலையில் உலாவருவதாகவும் அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வரும் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றார்.
மேலும் இந்த ஒற்றை யானையால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நின்றும், வனப்பகுதிக்குள் யானை சென்ற பிறகு சாலையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள், மலைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது குறித்து வனத்துறையினர் வன விலங்குகள் அவ்வப்போது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வதும், சாலையை கடப்பதும் வழக்கம்.
எனவே வாகனத்தில் செல்பவர்கள் வனப்பகுதிகளுக்குள் மிகுந்த எச்சரிக்கையோடு பாதுகாப்போடும் செல்ல வேண்டும். மேலும் அங்கே சாலையைக் கடக்கும் விலங்குகளை படம் பிடிப்பது, அதன் அருகில் செல்வது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும். எனவே மிகுந்த எச்சரிக்கையோடு செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர்.