என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேன்கனிக்கோட்டை"

    • வாகன ஓட்டிகள் காட்டு யானைக்கு பயந்து இருபுறங்களிலும் வெகுநேரம் காத்திருந்தனர்.
    • சிலர் ஆபத்தையும் மீறி காட்டு யானை நிற்பதை பொருட்படுத்தாமல் தங்களது வாகனங்களில் பயணம் செய்தனர்.

    தளி:

    தேன்கனிக்கோட்டை நகரில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் மரக்கட்டா வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் சாலை ஓரத்தில் காட்டு யானை ஒன்று நீண்ட நேரமாக சுற்றித்திரிந்தது.

    இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சாலை ஓரத்தில் காட்டு யானை நீண்ட நேரம் நின்றதால் அந்த வழியாக பயணம் செய்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல் வாகனங்களுடன் அப்படியே நின்றனர்.

    நீண்ட நேரம் காத்திருந்த வாகன ஓட்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் சிலர் ஆபத்தையும் மீறி காட்டு யானை நிற்பதை பொருட்படுத்தாமல் தங்களது வாகனங்களில் பயணம் செய்தனர். ஏராளமான வாகன ஓட்டிகள் காட்டு யானைக்கு பயந்து இருபுறங்களிலும் வெகுநேரம் காத்திருந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து அந்த காட்டு யானையை வனப்பகுதிக்கு உள்ளே விரட்டினர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து சென்றனர்.

    இந்த ஒற்றை யானை சாலை ஓரங்களில் அவ்வப்போது வந்து நின்று வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்து வருவதாக கூறப்படுகிறது.

    எனவே வாகனங்களை மறிக்கும் இந்த யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பக்தி கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    • அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தண்டரை ஊராட்சிக்குட்பட்ட அடவி சாமிபுரம் கிராமத்தில் மதனகிரி முனீஸ்வர சாமி கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது.

    விழாவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித தீர்த்தம் தெளித்து தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேரில் உற்சவ மூர்த்தியை அமர்த்தி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க பக்தி கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து கோவிலை சுற்றி வலம் வந்து தேரை நிலை நிறுத்தினர்.

    இதில் விழா கமிட்டி தலைவர் சமபங்கிராம ரெட்டி, தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், தண்டரை ஊராட்சி மன்ற தலைவர் நீலம்மா ஜெயராமன், மல்லசந்திரம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேகா முனிராஜ், ஊராட்சி மன்ற துணை தலைவர ஆர்த்தி, தொழில் அதிபர் சுரேஷ் பாபு, வசந்தகுமார், துரைசாமி, டி.எஸ்.பி சாந்தி, இன்ஸ்பெக்டர் தவமணி, ஊராட்சி மன்ற செயலாளர் விஸ்வநாத், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், விழா குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் கர்நாடக மாநில பக்தர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இன்று இரவு நாடகம் மற்றும் வான வேடிக்கைகளுடன் கிராம தேவதைகளின் பல்லக்கு ஊர்வலம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
    • தக்காளி தோட்டத்தில் 2 யானைகள் புகுந்து தோட்டத்தை காலல் மிதித்து நாசம் செய்துள்ளன.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 10 காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன.

    இந்நிலையில் சந்தனப்பள்ளி, தல்சூர் ஆகிய கிராமங்களில் 2 யானைகள் முகாமிட்டு ராகி பயிர்களை நாசம் செய்துள்ளன. விவசாயிகள் பட்டாசு வெடித்து விரட்டியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து அருகில் உள்ள குருபட்டி கிராமத்தில் மூர்த்தி என்பருடைய 3 ஏக்கர் தக்காளி தோட்டத்தில் 2 யானைகள் புகுந்து தோட்டத்தை காலல் மிதித்து நாசம் செய்துள்ளன.

    இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சேதமடைந்த தாக்காளி, ராகி தோட்டங்களை பார்வையிட்டனர். தக்காளி விலை சற்று உயர்ந்துள்ள நிலையில் யானைகள் அட்டகாசத்தால் தக்காளி தோட்டம் நாசமடைந்து உள்ளதால் விவசாயி மூர்த்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வனத்துறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    மேலும், இந்த பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை கர்நாடகா வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காட்டு யானைகளை கிராமப்பகுதிக்குள் புகுந்து விடாதவாறு கும்ளாபுரம் வழியாக வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • யானை தின்னூர், லக்கசந்திரம் வழியாக நொகனூர் வனப்பகுதி சென்றது.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ஜவளகிரி காப்பு காட்டில் இருந்து நேற்று அதிகாலை 8 காட்டு யானைகள் கூட்டமாக வெளியேறி கங்கனப்பள்ளி, கும்ளாபுரம் கிராம வழியாக சுற்றித்திரிந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் காட்டு யானைகளை கிராமப்பகுதிக்குள் புகுந்து விடாதவாறு கும்ளாபுரம் வழியாக வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது வனப்பகுதிக்கு அருகே சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள தைலதோப்புக்குள் காட்டு யானைகள் புகுந்தன. தற்பொழுது 8 காட்டு யானைகளும் தைலதோப்புக்குள் தஞ்சமடைந்துள்ளன.

    வன காவலர்கள் மற்றும் வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து அவைகள் மீண்டும் வெளியேறாதவாறு அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    கும்ளாபுரத்தில் இருந்து ஆனைக்கல் செல்லும் சாலையை கடந்த யானைகள் தேவரபெட்டா வனப்பகுதிக்கு சென்றன. இதற்கிடையே தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள் நேற்று, முன்தினம் இரவு தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை கடந்து தாவரக்கரை வனப்பகுதிக்கு சென்றன.

    அங்கு 25 க்கும் மேற்பட்ட யானைகள் ஒரு குழுவாகவும் கிரி யானை உட்பட 3 யானைகள் மற்றொரு குழுவாகவும் முகாமிட்டுள்ளன.

    தேன்கனிக்கோட்டை அருகே சாப்பரானப்பள்ளி செல்லும் சாலையில் ஆஞ்சநேயர் கோவில் அருகே நுழைந்த கிரி என்கிற ஒற்றை யானை அங்குள்ள விவசாய நிலத்தில் நுழைந்து ராகி, சோளம் தின்றும் மிதித்தும் நாசம் செய்தது.

    விவசாயிகள் பட்டாசுகள் போட்டும், யானை நகராமல் ஒரு மணி நேரத்திற்கு மேல் அங்கே நின்றன. பிறகு அங்கிருந்து சென்ற யானை தின்னூர், லக்கசந்திரம் வழியாக நொகனூர் வனப்பகுதி சென்றது.

    • காட்டு யானையால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருந்தனர்.
    • வனத்துறையினர் பட்டாசு வெடித்து ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டு சுற்றுப்புற கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்த கிரி என்ற ஒற்றை காட்டு யானை விவசாயிகள் மற்றும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்தது.

    காது கேட்காத இந்த ஒற்றை காட்டு யானையை பொதுமக்கள் விவசாயிகள் விரட்டினாலும் அது அசராமல் அப்படியே நிற்கும், இந்த காட்டு யானையால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த கிரி ஒற்றை காட்டு யானை தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து பல்வேறு கிராமங்கள் வழியாக தற்போது கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமம் அருகே வந்துள்ளது. அந்த பகுதியில் சாலையோரம் சுற்றித்திரிந்த இந்த காட்டு யானை குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பட்டாசு வெடித்து ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    காது கேட்காத இந்த கிரி ஒற்றை காட்டு யானையால் போடிச்சிப்பள்ளி, சினிகிரிப்பள்ளி, பென்னிகல் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பொதுமக்கள் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். விவசாயிகள் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • கர்நாடக மாநில வனப்பகுதி நோக்கி யானைகள் கூட்டம் சென்றன.
    • காட்டு யானைகள் உலா வருவதால் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 35 க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை கடந்த சில நாட்களுக்கு முன் ஜவளகிரி வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

    இந்த யானைகளை கர்நாடகாவுக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் கர்நாடக மாநில வனப்பகுதி நோக்கி யானைகள் கூட்டம் சென்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 15 க்கு மேற்பட்ட காட்டு யானைகள் தனியாக முகாமிட்டு விவசாய பயிர்களின் நாசம் செய்து வருகின்றன.

    அதேபோல் ஜவளகிரி வனப்பகுதியிலும் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வருவதால் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    • மத உணர்வை தூண்டும் வகையில் வாசகம் இடம் பெற்றதாக தெரிகிறது.
    • பா.ஜ.க. நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முன்பு திரண்டனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு இந்து முன்னணி மாவட்ட செயலாளரான தேன்கனிக்கோட்டையை சேர்ந்த குருபிரசாத் (எ)கார்த்திக் (வயது29), மற்றும் அரிஷ் (29), சேசாத்திரி (19), வசந்தகுமார் (20), ஜெய குமார் (23), பவன்குமார் (22), சதீஷ் (29), பிரபு (19), ரவிக்குமார் (31), யஷ்வந்த குமார் (28) உள்ளிட்ட 10 பேர் திருப்பரங்குன்றத்தில் வரும் 4-ந்தேதி நடைபெறும் போராட்டம் குறித்து போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.

    அதில் மத உணர்வை தூண்டும் வகையில் வாசகம் இடம் பெற்றதாக தெரிகிறது.

    நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் கணேஷ் குமார், எஸ்.ஐ. நாகராஜ் ஆகியோர் போஸ்டர் ஓட்டிக் கொண்டிருந்த 10 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

    அதை அறிந்த இந்து முன்னணி மாவட்ட தலைவர் கலைகோபி, பா.ஜ.க. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன், முன்னாள் மாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் இந்து முன்னணி, பா.ஜ.க. நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை காவல் நிலையம் முன்பு திரண்டனர்.

    அப்போது தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி ஆனந்தராஜ் அவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். பின்னர் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக தெரிவித்தனர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தேன்கனிக்கோட்டை நீதி மன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்து மேஜிஸ்திரேட் தினேஷ் 10 பேரையும் பிப்ரவரி 13-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தர விட்டார். 

    ×